Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

நல்ல விடயம் .

சிரிப்பு சிரிப்பாய் வருகுது மதுரை விமான நிலையம் வளர்ச்சியா ?  அரும்பிலே கருக்கி விட்டார்கள் மலையாளிகள் .

எனக்கு தெரியாது பெருமாள்   வன்னியர் தான் எழுதினார்......மதுரை விமான நிலையத்திற்கு...துபாய்   அனுதாபி.......போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமானம் உண்டு என்று     நான் இந்தியாவுக்கு இதுவரை போகவில்லை.     எனவே… இதுபற்றி போதிய அறிவு இல்லை     நேரம் இருந்தால் மலையாளிகள் என்ன செய்தார்கள் என்பதையும் எழுதுங்கள் வாசித்து பார்ப்போம்    

  • Replies 240
  • Views 16.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

 

ஓணாண்டி நாங்கள் அங்கே போய் வாழப் போவதில்லை என்பது ஏதோ உண்மை தான்.

ஆனால் அந்த மண்ணில் வாழும் மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்று வாய்க்கு வந்தபடி கதைக்காமல் இருந்தால் நல்லது.

உண்மை தான்...அடிக்கடி குட்டி போடுறது..குட்டி போடுறது......என்கிறார்.....வாழ்க்கையில் பெரும்பகுதி   குட்டி போடுவது தான்     அப்படியிருக்க.....குட்டி போடுவது பற்றி அடிக்கடி கவலைப்படுகிறார்...ஏன்? இவரால் குட்டி போட முடியவில்லையா?        🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

எனக்கு தெரியாது பெருமாள்   வன்னியர் தான் எழுதினார்......மதுரை விமான நிலையத்திற்கு...துபாய்   அனுதாபி.......போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமானம் உண்டு என்று     நான் இந்தியாவுக்கு இதுவரை போகவில்லை.     எனவே… இதுபற்றி போதிய அறிவு இல்லை     நேரம் இருந்தால் மலையாளிகள் என்ன செய்தார்கள் என்பதையும் எழுதுங்கள் வாசித்து பார்ப்போம்    

அனுதாபியா?

சாமி, ஊரு பேரையே மாத்திப்போட்டியளே? 🤭 நான் செப்பியது சிங்கப்பூர் ஐயா, வடிவா பாருங்கோ. 

இந்தியாவுக்கு வரவில்லை போகட்டும், ஏன் தமிழ்நாட்டுக்கு இதுவரை வரவில்லை..? 🤔

இப்படி இருந்தால் நாங்கள் எப்படி ஈழம் வருவதாம்? 

சொல்லுங்க, கோப்பால்..! 😜

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ராசவன்னியன் said:

அனுதாபியா?

சாமி, ஊரு பேரையே மாத்திப்போட்டியளே? 🤭 நான் செப்பியது சிங்கப்பூர் ஐயா, வடிவா பாருங்கோ. 

இந்தியாவுக்கு வரவில்லை போகட்டும், ஏன் தமிழ்நாட்டுக்கு இதுவரை வரவில்லை..? 🤔

இப்படி இருந்தால் நாங்கள் எப்படி ஈழம் வருவதாம்? 

சொல்லுங்க, கோப்பால்..! 😜

பார்த்தேன்  ....சிங்கப்பூர் தான் சரி     அனுதாபி.  என்பது பிழை      மன்னியுங்கள் 🙏 பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் தமிழ்நாடு கோயில் குளம் பார்க்க விரும்பி வந்தவர். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்....வளர்ந்த பிள்ளைகள் மூன்று அதில் ஒரு பெண் அவர் பிரித்தானியாவில் திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்தார்.  மகன்கள் இருவரும் இங்கே திருமணம் செய்து வாழ்க்கை நடத்தினார்கள்.      வந்த இடத்தில் சென்னையில் பாஸ்போர்ட் பணம்   மக்கள் கூட்டத்தில் யாரோ எடுத்து விட்டார்கள்   இவருக்கு 30.....40...நிமிடங்களின் பின்பே தெரியும்       உடனும். மகன்களுக்கு தெரியப்படுத்தி    செலவுக்கு பணத்தை பெற்றுக் கொண்டார்   புதிய பாஸ்போர்ட்  விசா பெற்று ஜேர்மன் வர ஆறு மாதங்கள் சென்றது.......இதனால் பிள்ளைகள் வளர்த்து திருமணம் செய்த பின்  போவோம்’ என விட்டு விட்டேன்    இப்போது மகள்.  திருமணம் செய்து விட்டார்     மகனுக்கு இரண்டு வருங்களில் செய்வோம்’’    பிறகு     வருவோம்    பயம்    வேறு ஒன்றுமில்லை      நீங்கள் ஈழம் போக.  என்ன தடைகள்.  உண்டு?. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

பார்த்தேன்  ....சிங்கப்பூர் தான் சரி     அனுதாபி.  என்பது பிழை      மன்னியுங்கள் 🙏 பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் தமிழ்நாடு கோயில் குளம் பார்க்க விரும்பி வந்தவர். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்....வளர்ந்த பிள்ளைகள் மூன்று அதில் ஒரு பெண் அவர் பிரித்தானியாவில் திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்தார்.  மகன்கள் இருவரும் இங்கே திருமணம் செய்து வாழ்க்கை நடத்தினார்கள்.      வந்த இடத்தில் சென்னையில் பாஸ்போர்ட் பணம்   மக்கள் கூட்டத்தில் யாரோ எடுத்து விட்டார்கள்   இவருக்கு 30.....40...நிமிடங்களின் பின்பே தெரியும்       உடனும். மகன்களுக்கு தெரியப்படுத்தி    செலவுக்கு பணத்தை பெற்றுக் கொண்டார்   புதிய பாஸ்போர்ட்  விசா பெற்று ஜேர்மன் வர ஆறு மாதங்கள் சென்றது.......இதனால் பிள்ளைகள் வளர்த்து திருமணம் செய்த பின்  போவோம்’ என விட்டு விட்டேன்    இப்போது மகள்.  திருமணம் செய்து விட்டார்     மகனுக்கு இரண்டு வருங்களில் செய்வோம்’’    பிறகு     வருவோம்    பயம்    வேறு ஒன்றுமில்லை      நீங்கள் ஈழம் போக.  என்ன தடைகள்.  உண்டு?. 🤣

நன்றி கந்தையா. (ஏறக்குறைய ஒரே வயதுதான். அதனால் விளித்தேன், ஓகே?). சென்னைக்கு வந்தால் மிக விழிப்புடன் இடங்களுக்கு செல்ல வேண்டுமென தங்கள் உறவினருக்கு யாரும் சொல்லவில்லையா? சென்னை மட்டுமல்ல, பெரிய நகரங்கள் அனைத்திலும் அவதானமாக இருக்க வேண்டும், அறிமுகம் இல்லாத யாரையும் எளிதில் நம்பி  விடாதீர்கள். தெரியாத இடங்களில்  வீதியில் தனியாக செல்லக்கூடாது. 

எனக்கு ஈழம் செல்ல ஆசைதான். அச்சுவேலி செல்லலாமென பாஞ் அழைத்தார். அப்பொழுது அலுவலக வேலைப்பளு, அவருடன் செல்ல இயலவில்லை. வருடத்திற்கு 26 நாட்கள் தான் எனக்கு விடுமுறை, அதில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை என உறவினர் வீடுகள், வீட்டு வேலைகள் என பல காத்திருக்கும், நாட்களை ஒதுக்கி செல்லவேண்டும். ஒரு உந்துதல் காலத்தில் வரும், நிச்சயம் சென்று வருவேன்.

ஈழத்தில் சில இடங்களை அவசியம்  பார்க்க விருப்பமுண்டு. காலம் கனியும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ராசவன்னியன் said:

நன்றி கந்தையா. (ஏறக்குறைய ஒரே வயதுதான். அதனால் விளித்தேன், ஓகே?). சென்னைக்கு வந்தால் மிக விழிப்புடன் இடங்களுக்கு செல்ல வேண்டுமென தங்கள் உறவினருக்கு யாரும் சொல்லவில்லையா? சென்னை மட்டுமல்ல, பெரிய நகரங்கள் அனைத்திலும் அவதானமாக இருக்க வேண்டும், அறிமுகம் இல்லாத யாரையும் எளிதில் நம்பி  விடாதீர்கள். தெரியாத இடங்களில்  வீதியில் தனியாக செல்லக்கூடாது. 

எனக்கு ஈழம் செல்ல ஆசைதான். அச்சுவேலி செல்லலாமென பாஞ் அழைத்தார். அப்பொழுது அலுவலக வேலைப்பளு, அவருடன் செல்ல இயலவில்லை. வருடத்திற்கு 26 நாட்கள் தான் எனக்கு விடுமுறை, அதில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை என உறவினர் வீடுகள், வீட்டு வேலைகள் என பல காத்திருக்கும், நாட்களை ஒதுக்கி செல்லவேண்டும். ஒரு உந்துதல் காலத்தில் வரும், நிச்சயம் சென்று வருவேன்.

ஈழத்தில் சில இடங்களை அவசியம்  பார்க்க விருப்பமுண்டு. காலம் கனியும்.

வரும்போது சொல்லுங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கி எனது வாகனத்திலேயே உங்களை இலங்கை முழுவதும் கூட்டி சென்று காட்டுகிறேன்.. பிளைற் பிடிச்சு வாங்க இலங்கை செலவு எல்லாம் என் பொறுப்பு..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

வரும்போது சொல்லுங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கி எனது வாகனத்திலேயே உங்களை இலங்கை முழுவதும் கூட்டி சென்று காட்டுகிறேன்.. பிளைற் பிடிச்சு வாங்க இலங்கை செலவு எல்லாம் என் பொறுப்பு..

வரவேற்புக்கும், அழைப்பிற்கும், கரிசனைக்கும் மிக்க நன்றி திரு.பாலபத்ர ஓணாண்டி. 🤝
காலச்சூழல் அமையும்போது அவசியம் தங்களை தொடர்பு கொள்கிறேன். அடுத்த வருட விடுமுறைக்கு திட்டமிடுவேன். பார்ப்போமே?

மீண்டும் நன்றி..!🙏

(நல்ல ஒரு பாவனை பெயரை வைத்துக்கொள்ளக்கூடாதா..? 😉)

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

அடுத்த வருட விடுமுறைக்கு திட்டமிடுவேன். பார்ப்போமே?

வன்னியர் அடுத்த வருடத்துக்கு இன்னமும் 20 நாட்களே உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kandiah57 said:

புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து  தமிழ் ஈழ விமான Air என்று தொடங்குவோமா.?

 

யாராவது தமிழ் பில்லியனர் தொடங்கலாம். எல்லோரும் சேர்ந்து என்பது எல்லாம் நடைமுறை சாத்தியம் அற்றது. விமானத்துறை நட்டத்தில் செல்வது. சொந்த செலவில் சூனியம் வைக்க யார் முன்வருவார்கள்?

சூரரை போற்று என்று ஒரு படம் வந்தது முன்பு சூரியா நடித்தது.  அதில் பல பிரச்சனைகள் காண்பிக்கப்படுகின்றன. 

ஒரு சில தமிழர்கள் ஏற்கனவே சொந்தமாக சிறிய விமான போக்குவரத்து நிறுவனங்கள் வைத்து உள்ளார்கள். 

Edited by நியாயத்தை கதைப்போம்

1 hour ago, ராசவன்னியன் said:

 சென்னைக்கு வந்தால் மிக விழிப்புடன் இடங்களுக்கு செல்ல வேண்டுமென தங்கள் உறவினருக்கு யாரும் சொல்லவில்லையா? சென்னை மட்டுமல்ல, பெரிய நகரங்கள் அனைத்திலும் அவதானமாக இருக்க வேண்டும், அறிமுகம் இல்லாத யாரையும் எளிதில் நம்பி  விடாதீர்கள். தெரியாத இடங்களில்  வீதியில் தனியாக செல்லக்கூடாது. 

 

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

சேம் பீலிங்.. உண்மையை சொன்னால் ஊரை விட சென்னைதான் எனக்கு மிகவும் மனசுக்கு பிடித்த இடம்… ஊரில் கூட சிங்கள ஆமி பொலிசை காணும்போது ஏதோ அன்னியன் போல பீலிங் வரும்.. ஆனால் சென்னையில் போலீஸ்கூட தமிழ் என்பதால் நாடில்லாத சொந்தமாக எங்களுக்கு எண்டு ஒரு பொலிஸ்துறைகூட இல்லாத எனக்கு ஏதோ என் சொந்த நாட்டில் இருப்பதுபோல உணருவேன் சென்னையில் இருக்கும்போதெல்லாம்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் சென்னையில் அரசுப்பணியில் 80 களில் இருந்தேன். பலரும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளதால் வந்த புதிதில் அவதானமாகவே இருந்தேன். அலுவலக வேலை முடிய சிலநேரம் நேரமாகிவிடும், அப்பொழுது 'பைக்'கில் வீடு திரும்பும்போது சுரங்கப்பாதையை அண்மித்த பகுதிகளில் வழிப்பறியை, இன்ன பிற செயல்களை கண்டிருக்கிறேன். பின்னிரவில் 10 மணிக்கு மேல் தனியாக தெருவில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

14 minutes ago, ராசவன்னியன் said:

நான் சென்னையில் அரசுப்பணியில் 80 களில் இருந்தேன். பலரும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளதால் வந்த புதிதில் அவதானமாகவே இருந்தேன். அலுவலக வேலை முடிய சிலநேரம் நேரமாகிவிடும், அப்பொழுது 'பைக்'கில் வீடு திரும்பும்போது சுரங்கப்பாதையை அண்மித்த பகுதிகளில் வழிப்பறியை, இன்ன பிற செயல்களை கண்டிருக்கிறேன். பின்னிரவில் 10 மணிக்கு மேல் தனியாக தெருவில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

சென்னையில் மட்டுமல்ல உலகின் அநேகமான நகரங்களில் இரவு 10 மணிக்கு மேல் தனியாகவோ அல்லது ஒரு குடும்பம் மட்டுமோ செல்வது ஆபத்தானதாகவே உள்ளது. இங்கு ரொரண்டோவில் அதன் முக்கிய இடமான Downtown  இல் இரவு 10 மணிக்கு மேல் தனியாகச் சென்றால் கத்திக் குத்து கூட வாங்க வேண்டி இருக்கும். பணத்தை கொள்ளை அடித்து மொட்டை அடித்து விடுவார்கள். கொழும்பில் சில இடங்களில் 9 மணிக்கு மேல் செல்ல முடியாது. இப்பொழுது யாழ்பாணத்தில் மோசமான போதைப் பொருள் பாவனையால் நிலமை படு மோசம்.

எனக்கு தெரிந்து என் வாழ் நாளில் எந்த விதமான பயமும் இன்றி ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் நடு இரவிலும் பயணம் செய்யக் கூடிய ஒரு பகுதி ஒன்று இருந்தது.  அது புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டு இருந்த பகுதிகள். அது ஒரு போதும் எந்த நாட்டிலும் இனி வராது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

இந்தியாவில் ஏன் தமிழ்நாட்டில் பிடித்த இடம் என்றால்  தான் யாழ்பாணத்தை பார்க்க விரும்புவர்கள் கன்னியாகுமாரி திருவானன்ந்தபுரம் சாலையில் அமைந்துள்ள இந்த இடத்தை பார்த்தாலே காணும் கப்பி போட்டு கிணறுகளில் இருந்து நீர் அள்ளுவது யாழை போலவே .பல விடயங்கள் தமிழும் யாழை நெருங்கின ஒத்த ஒலிப்புகள் கேட்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வரும்போது சொல்லுங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கி எனது வாகனத்திலேயே உங்களை இலங்கை முழுவதும் கூட்டி சென்று காட்டுகிறேன்.. பிளைற் பிடிச்சு வாங்க இலங்கை செலவு எல்லாம் என் பொறுப்பு..

ஓணாண்டியார் என்னப்பா, கண்டுகொள்ளுறியள் இல்ல. 🤗

எ/ல் பெட்டயள் மாதிரி.. தெரியாத மாதிரி இருக்கிறியள்... 😍

கதைச்சு கனகாலம்... ஊரோடையே இப்ப?  🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2022 at 09:37, goshan_che said:

இதை கொஞ்சம் ஆர்வமாக மார்கெட்டிங் செய்தால் நிச்சயம் போதிய சனம் போய் வரும் என நினைக்கிறேன்

அண்மையில் கனடா போயிருந்தேன். சாப்பாடுக்கு பின்னர், விமானத்தில் தேனீர், காப்பி யுடன் ஒரு பெட்டியில், நீளமான மரக்கறி பஜ்ஜி.... அது சுவையா, இல்லையா என்பது வேறு. அந்த பாக்கிங் ஐடியா ஏன் நம் தமிழ் வியாபாரிகளிடம் வரவில்லை. எமது மட்டன் ரோல், சிக்கன் ரோல் எல்லாம், எப்படி அருமையாக மார்க்கெட்டிங் செய்யலாமே என்று தோன்றியது.

கனடா,லண்டன் ஒரு வித்தியாசமே இல்லை. 

scaborough கணபதி கடையில் மோதகம் பேமஸ் என்று நண்பருடன் சென்றால், லண்டன் போலவே.... 'தம்பி சொல்லுங்கோ'.... எத்தின? இரண்டு என்றால், பிரவுன் பாக்.... 5 மேலே என்றால் றெஜிபோர்ம் கொண்டைனர்.

எம்மவர், யாழ்ப்பாண வியாபார மன நிலையில் இருந்து வெளியே வந்து, வாழும் சூழலுக்கு உரிய வகையில் புதிய சிந்தனைகளை புகுத்தினால் அன்றி, தமிழர் சந்தையினை விடுத்து மேலே போக முடியாது என்று தோன்றியது. 

இல்லாவிடில், நாய்க்கு நக்கு தண்ணி கதைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

அண்மையில் கனடா போயிருந்தேன். சாப்பாடுக்கு பின்னர், விமானத்தில் தேனீர், காப்பி யுடன் ஒரு பெட்டியில், நீளமான மரக்கறி பஜ்ஜி.... அது சுவையா, இல்லையா என்பது வேறு. அந்த பாக்கிங் ஐடியா ஏன் நம் தமிழ் வியாபாரிகளிடம் வரவில்லை. எமது மட்டன் ரோல், சிக்கன் ரோல் எல்லாம், எப்படி அருமையாக மார்க்கெட்டிங் செய்யலாமே என்று தோன்றியது.

கனடா,லண்டன் ஒரு வித்தியாசமே இல்லை. 

scaborough கணபதி கடையில் மோதகம் பேமஸ் என்று நண்பருடன் சென்றால், லண்டன் போலவே.... 'தம்பி சொல்லுங்கோ'.... எத்தின? இரண்டு என்றால், பிரவுன் பாக்.... 5 மேலே என்றால் றெஜிபோர்ம் கொண்டைனர்.

எம்மவர், யாழ்ப்பாண வியாபார மன நிலையில் இருந்து வெளியே வந்து, வாழும் சூழலுக்கு உரிய வகையில் புதிய சிந்தனைகளை புகுத்தினால் அன்றி, தமிழர் சந்தையினை விடுத்து மேலே போக முடியாது என்று தோன்றியது. 

இல்லாவிடில், நாய்க்கு நக்கு தண்ணி கதைதான்.

👍👍 மிக துல்லியமாக அவதானித்துள்ளீர்கள் நாதமுனி.  வணிகத்துறையில் சிறப்பாக முன்னேற அதன் நுணுக்கங்களைக் கற்று வணிகத்தை Professional ஆக செய்யவும்,  மாறிவரும்  உலக வர்ததக சூழ்நிலையை அவதானித்து அதற்கேற்ப நுண்திறனுடன்  உலக வர்த்தகர்களுடன் போட்டி போடக் கூடிய வளங்கள் இருந்தும் அதை இவர்கள் பயன்படுத்துவதில்லை. விற்கும் பொருட்களை நவீனமயப்படுத்தி தமது சந்தை வாய்ப்புகளை விரிவாக்கம் செய்யாமல் தமிழர்களுக்குள் வியாபாரம் செய்து தொழிலதிபர் என்ற பெயருடன் உள்ளூர் தமிழர் விழாக்களில் பொன்னாடை போர்த்துவதே  பெருமை  என்று பழமை பேண் சிந்தனை ( நீங்கள் கூறிய யாழ்பாண மனநிலை)  இவர்களின் பாரிய பலவீனம்.  புலம் பெயர்ந்த நாடுகளில் சிறந்த தொழில் வழங்குனர்களாக உருவெடுப்பது தமிழ் வர்ததகர்களின் பலத்தை அதிகரிக்க வைக்கும். அதுவே தமிழ் மக்களின் பலம் ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

புல்லரிக்குதுபா…. சேம் பீலிங்கு…..

பெசண்ட்நகர் எலியட்ஸ் பீச் ❤️

1 hour ago, Nathamuni said:

ஓணாண்டியார் என்னப்பா, கண்டுகொள்ளுறியள் இல்ல. 🤗

எ/ல் பெட்டயள் மாதிரி.. தெரியாத மாதிரி இருக்கிறியள்... 😍

கதைச்சு கனகாலம்... ஊரோடையே இப்ப?  🤔

முந்தி குணா கவியழகன் பதில் போடமாட்டார் எண்டு டென்சன் ஆகின பார்ட்டி @பாலபத்ர ஓணாண்டி இப்ப கூப்பிட்டு கதைச்சாலும் கதைக்கிறார் இல்லை. 

இலண்டன் சம்பந்தமான எல்லாத்தையும் தலை முழுகீட்டார் போல☹️.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

 

முந்தி குணா கவியழகன் பதில் போடமாட்டார் எண்டு டென்சன் ஆகின பார்ட்டி @பாலபத்ர ஓணாண்டி இப்ப கூப்பிட்டு கதைச்சாலும் கதைக்கிறார் இல்லை. 

இலண்டன் சம்பந்தமான எல்லாத்தையும் தலை முழுகீட்டார் போல☹️.

துஸ்டரை கண்டால்ல் தூர விலகு.... கதை போல..... விலத்திறார்... 😁

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

புல்லரிக்குதுபா…. சேம் பீலிங்கு…..

பெசண்ட்நகர் எலியட்ஸ் பீச் ❤️

முந்தி குணா கவியழகன் பதில் போடமாட்டார் எண்டு டென்சன் ஆகின பார்ட்டி @பாலபத்ர ஓணாண்டி இப்ப கூப்பிட்டு கதைச்சாலும் கதைக்கிறார் இல்லை. 

இலண்டன் சம்பந்தமான எல்லாத்தையும் தலை முழுகீட்டார் போல☹️.

 

11 minutes ago, Nathamuni said:

துஸ்டரை கண்டால்ல் தூர விலகு.... கதை போல..... விலத்திறார்... 😁

யோவ் என்னய்யா ரெண்டுபேரும் அநியாயத்துக்கு பழிபோடுறீங்க… நாலுமாசமா நீங்க ரெண்டுபேரும்தான் யாழ்பக்கம் எட்டிபாக்கல்ல.. நான் இந்தகிழமை கொஞ்சம் பிஸியா திரியிறதால எழுதேல்ல நேரம் கிடைக்கேக்க அம்புட்டதுக்கு வேகமா ஏதாவது எழுதிட்டு போறது.. வாறகிழமை வந்து இருக்கு…

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

யோவ் என்னய்யா ரெண்டுபேரும் அநியாயத்துக்கு பழிபோடுறீங்க… நாலுமாசமா நீங்க ரெண்டுபேரும்தான் யாழ்பக்கம் எட்டிபாக்கல்ல.. நான் இந்தகிழமை கொஞ்சம் பிஸியா திரியிறதால எழுதேல்ல நேரம் கிடைக்கேக்க அம்புட்டதுக்கு வேகமா ஏதாவது எழுதிட்டு போறது.. வாறகிழமை வந்து இருக்கு…

இந்தா….இழுத்து எடுத்துட்டம்ல 🤣❤️

சந்தோசம் தல. சாவகாசமா ஊர் அப்டேட் ஒண்டு போடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அண்மையில் கனடா போயிருந்தேன். சாப்பாடுக்கு பின்னர், விமானத்தில் தேனீர், காப்பி யுடன் ஒரு பெட்டியில், நீளமான மரக்கறி பஜ்ஜி.... அது சுவையா, இல்லையா என்பது வேறு. அந்த பாக்கிங் ஐடியா ஏன் நம் தமிழ் வியாபாரிகளிடம் வரவில்லை. எமது மட்டன் ரோல், சிக்கன் ரோல் எல்லாம், எப்படி அருமையாக மார்க்கெட்டிங் செய்யலாமே என்று தோன்றியது.

கனடா,லண்டன் ஒரு வித்தியாசமே இல்லை. 

scaborough கணபதி கடையில் மோதகம் பேமஸ் என்று நண்பருடன் சென்றால், லண்டன் போலவே.... 'தம்பி சொல்லுங்கோ'.... எத்தின? இரண்டு என்றால், பிரவுன் பாக்.... 5 மேலே என்றால் றெஜிபோர்ம் கொண்டைனர்.

எம்மவர், யாழ்ப்பாண வியாபார மன நிலையில் இருந்து வெளியே வந்து, வாழும் சூழலுக்கு உரிய வகையில் புதிய சிந்தனைகளை புகுத்தினால் அன்றி, தமிழர் சந்தையினை விடுத்து மேலே போக முடியாது என்று தோன்றியது. 

இல்லாவிடில், நாய்க்கு நக்கு தண்ணி கதைதான்.

நீங்க இப்படியே நிண்டு அழுவுங்க https://www.hopperslondon.com/ போய் பாருங்க மருந்துக்கும் ஒரு ஸ்ரீலங்கன் கிடையாது தென் இந்தியன் கிடையாது ஆனால் அப்பம் முதல் தோசை முதல் கொத்து வரை சுவையாக வித்து பணம் அள்ளுகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2022 at 09:57, குமாரசாமி said:

தங்களைத்தாங்களே  ஒழுக்க சீலர்களாகவும் நாட்டு பற்றாளர்களாகவும் காட்டிக்கொள்பவர்கள்  உங்கள் கருத்தை வாசிப்பார்கள் என நினைக்கின்றேன். 😁

நன்றி.🙏🏼

விடுங்கோ சாமியார்! நாட்டை விட்டு ஓடும்போது ஒரு காரணம், மீண்டும் ஓய்வெடுக்க நாட்டுக்கு திரும்பும்போது வேறொரு காரணம். அதுக்குள்ள மற்றவர்களை வசதியாய் வம்புக்கு இழுத்து  தங்கள் காரணத்தை போத்து மூடுவது. இதென்ன புதுசா எங்களுக்கு?

சம்பிக்க ரணவக்க "தமிழரை புறந்தள்ளியமையால் படுகுழியில் நாடு வீழ்ந்துள்ளது." உதயன் கம்மன்பில "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை 1950ல்இருந்து கடன் வாங்கியே வாழ்ந்தோம்." மைத்திரி "நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது." மஹிந்தா "நாட்டில் பிரச்சனையை தீர்க்க நான் தயாராகவே உள்ளேன் ஆனால் எனக்கு வாக்களித்த மக்கள் அதற்காக எனக்கு வாக்களிக்கவில்லை, நான் பிரச்சனையை தீர்க்க முயற்சித்தால்  நாட்டில் வன்முறை ஏற்பட்டு இனங்களுக்கிடையில் (இல்லாத) நல்லிணக்கம் கெட்டுவிடுமாம்." என்று பகிடி விடுகிறார்.   தன் பங்குக்கு நேற்று முழைச்ச நாமல் உதிர்த்தது "தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க ராஜபக்சக்கள் தயாராக இருந்தனர், கூட்டமைப்பினரே பின்னடித்தனர், சுயலாப அரசியலே அவர்களின் இலக்கு."  இவர்கள் யாரும் சாதாரண குடிமக்கள் கிடையாது, அரசியல் கதிரையில் இருந்து சுகம் அனுபவித்தவர்கள், நாடு அழிவதற்கு காரணம் தெரிந்தும் அழித்தவர்கள். இன்று இவர்கள் பேசும் வேதாந்தம் தீர்வு என்று வரும்போது எப்படி கையாள்வார்கள் என்று கடந்தது போக இன்னும் சிலநாளில் வெளிவரும். இதை துரும்புசீட்டாக வைத்தே அடுத்தமுறை தேர்தலில் பக்சக்கள் வெல்லலாம், தமிழரின் உரிமைகளை மறுப்பதற்காக ரணிலே அவர்களை ஊக்குவிக்கலாம். இழிச்ச வாயன் தமிழன், அவன்மேல் எல்லா பழியையும் போட்டு அமைதியாகி விடுவோம். கொழும்பில் இருந்து துரத்தியடித்தான், வந்து எம்பாட்டில் இருந்த எம்மை தேடி வந்து அழித்து விட்டு இப்போ நாட்டை கட்டியெழுப்ப அவன்தான் வரவேணும். அதற்காக அப்பப்போ ஏற்றும் நாடகம்! பேச்சுவார்த்தை, காலத்தை இழுத்தடித்து, உடன்படிக்கையை கிழித்தெறிந்து, அடித்துக்கலைப்பு அதற்கே வெளிநாட்டுதலையீடு வேண்டாமாம்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

நீங்க இப்படியே நிண்டு அழுவுங்க https://www.hopperslondon.com/ போய் பாருங்க மருந்துக்கும் ஒரு ஸ்ரீலங்கன் கிடையாது தென் இந்தியன் கிடையாது ஆனால் அப்பம் முதல் தோசை முதல் கொத்து வரை சுவையாக வித்து பணம் அள்ளுகிறார்கள் .

கிழக்கு இலண்டணில் ஒரு போஸ்ஜ் ஏரியாவில (Buckers Hill) தமிழர் முதலாளி.....  யாருக்கும் தெரியாது. மனேஜர் உட்பட அணைவருமே வெள்ளைகள். வாடிக்கையாளரும் வெள்ளைகள். இலங்கை உணவு. விலை அதிகம். ரசிச்சு உண்பார்கள்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.