Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன்

எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன்

எழிலன் சரணடைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தாலோ அல்லது கைது செய்திருந்தாலோ அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரான எழிலனை நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனவே எழிலனுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டியது இராணுவத்தின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே நீதிமன்றில் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இராணுவம் அந்த கடமையில் இருந்து விலக முடியாது என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1316620

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரான எழிலனை நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில்

 

2 minutes ago, தமிழ் சிறி said:

எழிலனுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டியது இராணுவத்தின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதை கேட்பதற்கு நம்ம தலைவருக்கு இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறது. அதுதான் நீதிமன்றம் உத்தரவு போட்டாயிற்றே இவர் எதுக்கு வீணாக மூக்கை நுழைக்கிறார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

 

இதை கேட்பதற்கு நம்ம தலைவருக்கு இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறது. அதுதான் நீதிமன்றம் உத்தரவு போட்டாயிற்றே இவர் எதுக்கு வீணாக மூக்கை நுழைக்கிறார்?

ஜனாதிபதி  தேர்தல், உள்ளுராட்சி தேர்தல்கள் வர இருக்கின்றது.
அதுதான்.. இப்போ தமிழ்மக்கள் மீது பாசம் வந்துள்ளது.
அப்படி என்றால்தான்,  ஜனாதிபதி  தேர்தலில்... ரணிலுக்கு வாக்குப் போடச் சொல்லி 
தமிழ் மக்களிடம் கேட்கலாம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே, படுத்திருந்தவர் எழுந்திருந்து எச்சரிக்கிறார், இடித்துரைக்கிறார், கண்டிக்கிறார், என்னமா பாசம் பொங்கி வழியுது. ஆனால் அவரது பாசத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் (நம்பும்) யாரும் இல்லை. தேர்தல் வந்தால் ஐயாவுக்கு வீரமும் வரும், கூடவே மக்கள் மீது பாசமும் வரும். இவர்களுக்குள் ஒரு உடன்பாடு உண்டு; அதாவது தேர்தல் காலங்களில் வடக்கு அரசியல்வாதிகள் தெற்கு அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவதும், தெற்கு அரசியல் வாதிகள் வடக்கு அரசியல்வாதிகளை திட்டுவதும் பின்னர் மக்களை முட்டாளாகியதை விருந்து கொண்டாடி மகிழ்வதும். இது அரசியல் கலாச்சாரம்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி  தேர்தல், உள்ளுராட்சி தேர்தல்கள் வர இருக்கின்றது.
அதுதான்.. இப்போ தமிழ்மக்கள் மீது பாசம் வந்துள்ளது.
அப்படி என்றால்தான்,  ஜனாதிபதி  தேர்தலில்... ரணிலுக்கு வாக்குப் போடச் சொல்லி 
தமிழ் மக்களிடம் கேட்கலாம். 🙂

 

31 minutes ago, satan said:

அதுதானே, படுத்திருந்தவர் எழுந்திருந்து எச்சரிக்கிறார், இடித்துரைக்கிறார், கண்டிக்கிறார், என்னமா பாசம் பொங்கி வழியுது. ஆனால் அவரது பாசத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் (நம்பும்) யாரும் இல்லை. தேர்தல் வந்தால் ஐயாவுக்கு வீரமும் வரும், கூடவே மக்கள் மீது பாசமும் வரும். இவர்களுக்குள் ஒரு உடன்பாடு உண்டு; அதாவது தேர்தல் காலங்களில் வடக்கு அரசியல்வாதிகள் தெற்கு அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவதும், தெற்கு அரசியல் வாதிகள் வடக்கு அரசியல்வாதிகளை திட்டுவதும் பின்னர் மக்களை முட்டாளாகியதை விருந்து கொண்டாடி மகிழ்வதும். இது அரசியல் கலாச்சாரம்.

வழியற்ற  சிங்களத் தலைமைகளுக்கும் தமிழரது வாக்குத் தேவை. தமிழ்த் தiமைகளுக்கு சுகபோக அனுபவிப்புக்குத் தமிழரது வாக்குத் தேவை. அதனால் இப்போது பேச்சுத்தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு வாக்கு போட்ட மக்கள் கேக்க நாதியில்லாமல் தெருவில அலைகிறார்கள், இவர்களோ அவர்கள் தலையில் மிளகாய் அரைத்து மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். சிங்கள மக்களுடன் வாழ்வது தனது அதிஷ்டம் என்றவர் ஏன் இப்போது தமிழ் மக்களுக்கு தீர்வு வேண்டுமென்று ஆசைப்படுகிறார்? சிங்களவரோடு வாழ்வதற்கும் தமிழ் மக்களின் வாக்கே தேவை என்பதை உணர்ந்திருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே அவர் மனைவி கூட்டமைப்பில் இருந்தும் கேட்டார்.. வெளிய போயும் கேட்கிறார். அப்ப எல்லாம் அந்தப் பெண்மணிக்கு குரல்கொடுக்காத சம்பந்தர்.. இப்ப மட்டும். தனது கணவனை தேடும் அந்தப் பெண்மணியின் மன உறுதியில் கொஞ்சம் கூட சம்பந்தனுக்கு கிடையாது. இவர் எல்லாம் கட்சிக்கு தலைவர். இவர் தான் சார்ந்த இனத்துக்கு விடிவு வாங்கித் தருவார் என்று இன்னும் நம்புவினம் என்றால்.. அவர்களை விட முட்டாள்கள் யாருமில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி : சம்பந்தர் ஐயா நல்லவரா கெட்டவரா?🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன்

இவர் தானே கொஞ்சநாளைக்கு முதல் சரணடைந்த எல்லாரையும்  கொலை செய்து விட்டீர்கள் என்று சொன்னவர்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

இதைத்தானே அவர் மனைவி கூட்டமைப்பில் இருந்தும் கேட்டார்.. வெளிய போயும் கேட்கிறார். அப்ப எல்லாம் அந்தப் பெண்மணிக்கு குரல்கொடுக்காத சம்பந்தர்.. இப்ப மட்டும். தனது கணவனை தேடும் அந்தப் பெண்மணியின் மன உறுதியில் கொஞ்சம் கூட சம்பந்தனுக்கு கிடையாது. இவர் எல்லாம் கட்சிக்கு தலைவர். இவர் தான் சார்ந்த இனத்துக்கு விடிவு வாங்கித் தருவார் என்று இன்னும் நம்புவினம் என்றால்.. அவர்களை விட முட்டாள்கள் யாருமில்லை. 

 

நான்  நினைக்கிறேன்

சம்பந்தர்  மீண்டும்  வெல்ல ஆனந்தியை  மீண்டும் சேர்க்கப்பார்க்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

 

நான்  நினைக்கிறேன்

சம்பந்தர்  மீண்டும்  வெல்ல ஆனந்தியை  மீண்டும் சேர்க்கப்பார்க்கிறார்?

இருக்கலாம் அண்ணா! முன்னாள் போராளிகளுக்கான அமைப்பின் தொடக்க நிகழ்வில் மாவை ஐயாவும் கலந்துகொண்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

நான்  நினைக்கிறேன்

சம்பந்தர்  மீண்டும்  வெல்ல ஆனந்தியை  மீண்டும் சேர்க்கப்பார்க்கிறார்?

கற்பூரம் ஐய்யா உங்க மூளை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

நான்  நினைக்கிறேன்

சம்பந்தர்  மீண்டும்  வெல்ல ஆனந்தியை  மீண்டும் சேர்க்கப்பார்க்கிறார்?

விசுகு சுமந்திரனுக்கு கோபத்தை உண்டாக்காதீர்கள்.

நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்து என்னவெல்லாம் பேசுறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

விசுகு சுமந்திரனுக்கு கோபத்தை உண்டாக்காதீர்கள்.

நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்து என்னவெல்லாம் பேசுறாங்க.

அந்த மூன்சூறு தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று கவுத்து கொட்டி போய் இருக்கு .😄 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த சம்சும் விடும் மண்டை கலண்ட அறிக்கைகளை தமிழ் ஊடகங்கள் காவுவதை நிறுத்தனும் அல்லது நகைசுவை பகுதி என்று திறந்து அங்கு போடணும் .

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

கற்பூரம் ஐய்யா உங்க மூளை.

கொஞ்ச நாள் சேர்ந்திருந்த அனுபவம் தான்?😂

27 minutes ago, ஈழப்பிரியன் said:

விசுகு சுமந்திரனுக்கு கோபத்தை உண்டாக்காதீர்கள்.

நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்து என்னவெல்லாம் பேசுறாங்க.

சுமந்திரன் சுத்துமாத்தின் தங்கம்

அவருக்கு தெரியும் இதுக்கு சம்பந்தர்  வழிஞ்சால் தான் கொஞ்சமாவது நகரும் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

அந்த மூன்சூறு தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று கவுத்து கொட்டி போய் இருக்கு .😄 

பெருமாள் 2009.ன் பின் எப்படி சுமந்திரன் உள்வாங்கப்பட்டார் என்று இன்றுவரை ஒரு தெளிவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

நான்  நினைக்கிறேன்

சம்பந்தர்  மீண்டும்  வெல்ல ஆனந்தியை  மீண்டும் சேர்க்கப்பார்க்கிறார்?

 அதுதானே! இத்தனைபேர் இருக்க எழிலனை மட்டும் ஏன் இப்போ அவசரமாகத் தேடுகிறார்? இப்போதான் பின்புத்தி வேலை செய்யுதோ தலைவருக்கு? உதுமட்டும் போதாது, அனந்தியுடன் உத்தியோக பூர்வமாக பேசி, நடந்ததுக்கு மன்னிப்பு கோரவேண்டும். சுமந்திரன் என்கிற கோடரிக்காம்பு இருக்கிறவரை அது நடவாது. தான் என்கிற அகந்தை ஒழிய வேண்டும் கூட்டமைப்புக்குள் இருந்து அதுவரை இது தேறாது. வேண்டுமென்றால் தலையில வைத்து கூத்தாடுவினம், வேண்டாமென்றால் போட்டு மிதிப்பினம். உதாரணம் விக்கினேஸ்வரன் ஐயா, அனந்தி, ரவிராஜின் மனைவி. தட்டோடை  வீடுதேடி போய் பொட்டு வைத்து அழைப்பினம், காரியம் முடிந்தவுடன் அவர்கள் பெயர்க்கு சேறடிப்பு. இது த. தே. கூட்டமைப்பின் சாதுரியம், ராஜ தந்திரம் என்று எது வேண்டுமானாலும் சொல்லி தட்டிக்கொள்ளட்டும். அதுவே மக்களை அவர்களிடம் இருந்து விலகிச்செல்லவும், எதிரிகள் வாக்கை தட்டிச்செல்லவும் காரணம் என்பதை அவர்கள் விளங்கிக்கொள்வதாயில்லை. தங்களை தாங்களே பாராட்டிக்கொள்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.