Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் – அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்கள் பணிகளை பாராட்டுகிறேன்

ஆனால் எவருடனும் ஒப்பிடாதீர்கள்

அப்படி ஒப்பீடு என்று வரும்போது நாம் கூனி குறுக வேண்டி வரும். கிணற்று தவளை ஆகி விடுவோம். 

ஒரு முறை மட்டும் அவர் கொடுத்த தொகை அளவு நான் அறிந்தவரை யாழ் கள உறவுகளிடம் எவரிடமும் மொத்த சொத்துக்களே இல்லை.

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நன்றி 

உயிரைக் கொடுத்து போராடியவர்கள் இருக்கும் போது எனது பங்களிப்பு தூசுக்குச் சமானம் என்பதை நன்கறிவேன். 

  • Replies 136
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

1) இவர் சிக்கவைக்கப்பட முக்கிய காரணம், இக்க தொடர்பு. எனினும் அதனை அவர் எங்குமே குறிப்பிடவில்லை.

2) நாய் வித்த காசு குழைக்காது. ஆகவே அந்த பணத்தினால் எம்மவர்கள் பலன் அடைந்தால் நன்று.

1) insider trading காரணமாக இவர் கைது செய்யப்படவில்ல. ஆனால் insider trading ஐக் காரணம் காட்டி இவர் கைது செய்யப்பட்டார். ஏனேன்றால் இவர் TRO வுக்கு உதவினார்

2) உ+ம்; கள்ள மட்டை போட்டு வந்த  காசானாலும்(அந்தக் காசு கிறடிற் கொம்பனிக் காசுதானே) அந்தக் காசால் எம்மக்கள் பயனடைந்தால் நன்று. 

ராஜ் ராசரத்தினம் தமிழருக்கு உதவுகிறார் என்பதுவரை okay தான்.

ஆனால் அவர் மீது வலிந்து வலிந்து வெள்ளையடிக்கவேண்டிய தேவை இங்கே ஏன்  வருகிறது? 

 

கருவாடு வித்த காசு மணக்குமா என்ன? 

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

1) insider trading காரணமாக இவர் கைது செய்யப்படவில்ல. ஆனால் insider trading ஐக் காரணம் காட்டி இவர் கைது செய்யப்பட்டார். ஏனேன்றால் இவர் TRO வுக்கு உதவினார்

2) உ+ம்; கள்ள மட்டை போட்டு வந்த  காசானாலும்(அந்தக் காசு கிறடிற் கொம்பனிக் காசுதானே) அந்தக் காசால் எம்மக்கள் பயனடைந்தால் நன்று. 

ராஜ் ராசரத்தினம் தமிழருக்கு உதவுகிறார் என்பதுவரை okay தான்.

ஆனால் அவர் மீது வலிந்து வலிந்து வெள்ளையடிக்கவேண்டிய தேவை இங்கே ஏன்  வருகிறது? 

 

கருவாடு வித்த காசு மணக்குமா என்ன? 

😏

கப்பிரான், அவர் அமெரிக்க சட்டப்படி குற்றம் இழைத்தார். அதற்கான தண்டனையை அனுபவித்து விட்டார். இப்போது அவர் மூலம் தாயகத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு நன்மை கிடைக்க வேண்டும்்என்று அனைவரும் எதிர்பார்ப்பது தவறில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

கப்பிரான், அவர் அமெரிக்க சட்டப்படி குற்றம் இழைத்தார். அதற்கான தண்டனையை அனுபவித்து விட்டார். இப்போது அவர் மூலம் தாயகத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு நன்மை கிடைக்க வேண்டும்்என்று அனைவரும் எதிர்பார்ப்பது தவறில்லையே.

அதில் தவறில்லை. அவர் தனது சொந்தப்பணத்தில் கூட உதவியச் செய்திருக்கலாம்.. அது அவரின் விருப்பம். பாராட்டலாம். 

ஆனால்  அவரின் (த்ண்டனைக்குட்டபடுத்தப்பட்ட) செயலை  ஏன் வலிந்து வலிந்து வெள்ளையடிக்கிறார்கள் ? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அதில் தவறில்லை. அவர் தனது சொந்தப்பணத்தில் கூட உதவியைச்வ்ச்ர்ய்திருக்கலாம். அது அவரின் விருப்பம். பாராட்டலாம். 

ஆனால்  அவரின் (த்ண்டனைக்குட்டபடுத்தப்பட்ட) செயலை  ஏன் வலிந்து வலிந்து வெள்ளையடிக்கிறார்கள் ? 

அவர் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட குற்றம் என்ன என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். 

சீதை ஏன் தீக்குளித்தார் என்பதில் இன்னமும் பலருக்கு குழப்பம் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

The Sound Of The Rain 

Need No Translation 

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் இரு வெவ்வேறு வழக்குகளை இணைத்து historical fiction எழுதுகிறார் என நினைக்கிறேன். ராஜரட்ணமும் எழுதவில்லை, சட்ட ரீதியாக இயங்கிய புனர்வாழ்வுக் கழகத்திற்கு நிதி வழங்கியதாக அமெரிக்க நீதித் திணைக்களமும் குற்றப் பத்திரிகை வழங்கவில்லை. கற்பனைக்கு இடைவெளி கிடைத்து விட்டது.

ராஜரட்ணம் 14 நிதி மோசடி சார்பான குற்றங்களுக்காக ஜூரிகளால் குற்றம் காணப்பட்டார். இதை எதிர்த்து மேன்முறையீடு செய்து தோற்றார். எல்லா விபரங்களும் கீழே அமெரிக்க நீதித் திணைக்கள வெளியீடுகளில் சுருக்கமாகத் தரப்பட்டிருக்கின்றன. அரைப் புனைவுகள் வாசிக்க விரும்பாதோர் கீழே சென்று வாசித்தறியுங்கள்.👇

https://www.justice.gov/archive/usao/nys/pressreleases/June12/guptarajatverdict.html

மேலே "சிவபெருமான்" என நாதம் குறிப்பிடும் FBI informant தொடர்பு பட்ட வழக்கு 2006 இல் கனேடிய, அமெரிக்க தமிழர்கள் சிலரைச் சிக்க வைத்தது. கீழே இருக்கும் செய்திக் குறிப்பின் படி C1 என்பவர் தான் "சிவபெருமான்" போல.

https://www.justice.gov/archive/usao/nye/pr/2006/2006Aug21.html

2006 இல் ஒரு பிரபல வழக்கில் பயன்படுத்திய "சிவபெருமானை" மீண்டும் 2007 இல் ராஜரட்ணத்தை உளவறிய அனுப்பியிருப்பார்களா என்பது சந்தேகமே! ராஜரட்ணம் கேசில் ஈழத்தமிழர்கள் யாரும் பயன்படுத்தப் படவில்லை என்பதே நான் நியூயோர்க் நண்பர்கள் மூலம் அறிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

1. A little learning is a dangerous thing. 
 - Alexander Pope -

( அரைகுறை அறிவு அதிக ஆபத்தானது)

2. நீ பெரிது, நான் பெரிது என வாழாமல் நாடு பெரிது என வாழுங்கள்

- தலைவர்-

3. பத்து பிள்ளை பெத்தவளுக்கு, நேத்து கட்டினவள் முக்கி காட்டினாளாம்

- தமிழ் பழமொழி -

 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

1. A little learning is a dangerous thing. 
 - Alexander Pope -

( அரைகுறை அறிவு அதிக ஆபத்தானது)

நன்றி உடான்ஸ் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஓணாண்டியார்,

நீங்கள் நினைப்பது போல அல்ல இங்கே விடயம்.

insider dealing என்றால்..... நான் ஒரு கொம்பனி கணக்கர். கணக்கு தயாரிக்கும் எனக்கு தெரிகிறது, இந்த முறை கொழுத்த லாபம் அல்லது பெரு நஷ்டம் என்று. நான் பங்குசந்தையில் முதலிடும் உங்களுக்கு ரகசியமாக தகவல்களை தந்து விடுகிறேன் என்றால், தகவலுக்கு அமைய, கம்பெனி கணக்குகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முன்னம் நீங்கள் இருப்பதை வித்து அல்லது, வாங்கி பணம் பார்க்கிறீர்கள். மாட்டினால் எனக்கும், உங்களுக்கும் சிக்கல் தான்.

நீங்கள் பேராசை இல்லாமல் பணம் பார்க்கும் வரை எல்லாம் ஒகே. பேராசை வந்தால், இவர் எப்படி ஊகித்தார், இவர் எப்படி, ரிஸ்க் எடுத்து அதிக பங்குகளை விக்கிறார் அல்லது வாங்குகிறார், என்று உங்களை கண்காணிக்கும் போது, உங்கள் தொடர்புகளை அறிவர்.

ஆனால், நவீன உலகில், நீங்களும் நானும், பிடிபடும் அளவுக்கு தொடர்புற போவததில்லை அல்லவா.

உங்களை பிடித்து விசாரித்தாலும், நான் பெரிய வித்தகன், இந்த கம்பெனியின் சரித்திரமே ஆராய்ந்து தான் முடிவுகள் எடுத்தேன். போனமாதம் கம்பெனில இது நடந்தது, இந்தமாதம் இது நடந்தது, அதனால் பங்கு இறங்கும். ஏறும் என்று கணித்தேன் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது அவர்களால்.

உதாரணமாக, உங்கள் மனைவியின், கணக்காளர் நண்பி, எதேசையாக, கோஸ்டாவில் கோப்பி குடிக்கும் போது, இந்த முறை நல்ல போனஸ் வரும், கொம்பனிக்கு கொழுத்த லாபம் கிடைத்திருக்கிறது என்று வாயால் சொல்ல, அதனை மனைவி உங்களிடம் சொல்ல நீங்கள் பங்கினை வாங்கி பணம் பண்ணினால், அதனை insider dealing என்று நிரூபிக்க முடியாது. ஆனால் அந்த நண்பி, உங்கள் மனைவிக்கு சொன்னதை, யாராவது பதிவு செய்தால், அது ஓரளவுக்கு insider dealing கை உறுதி செய்யலாம். ஆனாலும், உங்கள் மீது அதை வைத்து குத்தம் சொல்ல முடியாது. 

ஏனெனில் அவர் சொல்லவந்தது தனது போனஸ், அதுக்கு என்ன காரணம் என்ன என்று மட்டுமே. அந்த தகவலை நீங்கள் பயன்படுத்தினீர்கள். ஆக அடிப்படை நோக்கம் insider dealing அல்ல.

ஆக, சட்டத்தில் இருந்தாலும், நீதிமன்றில் உறுதிப்படுத்தக் கூடிய சான்று பெறுவது மிக கடினம்.

இவை (insider dealings ) வெள்ளைகள், பங்குசந்தையில் நசுக்கிடாமல் செய்யும் வேலைகள். கண்டும் காணாத மாதிரி இருக்கும், அமெரிக்க அதிகாரிகள், நம்மவர், அதுவும் அவர்கள் பார்வையில் வெள்ளை தோல் இல்லாத கறுப்பர் வெற்றியை பொறுக்க முடியாமல், அதுவும், புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்க பிரிட்டனில் இருந்து அமெரிக்கா வருமாறு டாக்டர் உள்ளிட்ட சிலரை அழைத்து மாட்டி விட்ட, சிவபெருமான் என்று புனை பெயர் கொண்ட எமது ஈழத்தமிழரை, வைத்தே, wire tapping செய்து மாட்ட வைத்தார்கள்.

சிவபெருமான் இவரை மாட்டவைத்ததன் காரணம், இவர் தமிழர் புனர் வாழ்வு அமைப்புக்கு (TRO) பணம் கொடுத்தவர் என்று, FBI  கண்டுகொண்டதால் தான். 

நான் மேலே சொன்ன, பேராசையும் ஒரு காரணமாக இருக்கும். மேலும், அதீத வெற்றி காரணமாக, இவர் பாதுகாப்பான தொடபுறலை மறந்து, டெலிபோன் ஊடாக பேசி, அதனை  wire tapping (தொலைபேசி ஒட்டுக்கேட்டல் ) சிக்கிக் கொண்டார்.

அதுவும், இவருடன் பேசிய இந்தியர், இவரை மாட்டி விடும் வகையில் பேசி சிக்க வைத்தார். அவர் FBI காக (approver) வேலை செய்தார். அவரை சிக்க வைக்கும், ஆதாரம் இவரிடம் இருந்தாலும் (இவர் அவர் முன்னாள் தந்த தகவல்களை பதிவு செய்துள்ளார் போலும்). சிறு பிள்ளைகளின் தந்தையான அந்த இந்தியரின் தூரோகத்தினை மன்னித்து, சிறை சென்றேன் என்கிறார் இவர். நான் அப்படி வளர்க்கப்படவில்லை என்கிறார்.

இதில் கொசுறு தகவல், இவரை சிக்க வைத்த சிவபெருமான், , இலங்கையில் மூன்றாவதாக ஒரு பெர்கர் இன பெண்ணை கலியாணம் செய்து கொழும்பில் வாழ்கிறார்.

ஆக, இவர் சிக்கவைக்கப்பட முக்கிய காரணம், இயக்க தொடர்பு. எனினும் அதனை அவர் எங்குமே குறிப்பிடவில்லை.

இவர் சிறை சென்றாலும் கூட, இவரது பணம், insider dealing சட்டப்படி பறிமுதல் ஆகாது. நாய் வித்த காசு குழைக்காது. ஆகவே அந்த பணத்தினால் எம்மவர்கள் பலன் அடைந்தால் நன்று.

***

சிங்களவர் செய்தது பாலியல் குற்றம். இவரது குற்றம் White-Collar Crime.

From FBI site: White-Collar Crime
These crimes are not violent, but they are not victimless. White-collar crimes can destroy a company, wipe out a person's life savings, cost investors billions of dollars, and erode the public's trust in institutions.

வெள்ளை காலர் குற்றம்
இந்தக் குற்றங்கள் வன்முறையானவை அல்ல, ஆனால் அவை பாதிக்கப்படுபவர்களை உருவாக்காதவை அல்ல. ஒயிட் காலர் குற்றங்கள் ஒரு நிறுவனத்தை அழிக்கலாம், ஒரு நபரின் வாழ்நாள் சேமிப்பை அழிக்கலாம், முதலீட்டாளர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் அழிக்கலாம் மற்றும் நிறுவனங்களின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கலாம்.

நாதம் இங்கு நான் சொல்ல வந்தது என்ன குற்றம் செய்தார் வெள்ளை கலர் குற்றம் செய்தாரா கறுப்புகலர் குற்றம் செய்தாரா என்பதை அல்ல.. யார் குற்றம் செய்தார்கள் என்று பார்த்து ஆளுக்கு ஏற்ப குற்றவாளி என்று எழுதுவதை அல்லது குற்றவாளிக்கு வெள்ளை அடிப்பதான யாழில் எழுதும் பலரின் மனநிலையை..: இதே வெளைகலர் குற்றத்தை ஒரு சாதாரண ஏழைத்தமிழன் செய்திருந்தால் எவ்வளவு ஏச்சு விழுந்திருக்கும் இங்கு..

உங்க கருத்துப்படி பார்த்தால் கள்ள மட்டை அடிப்பது பாங்கை சுத்துவது கூட வைட்கலர் குற்றம்தான்.. அதற்கு யாழில் இங்கு ராஜரட்ணத்துக்கு எழுதிய யாராவது பாராட்டி எழுதி இருக்கிறார்களா..?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாதம் இங்கு நான் சொல்ல வந்தது என்ன குற்றம் செய்தார் வெள்ளை கலர் குற்றம் செய்தாரா கறுப்புகலர் குற்றம் செய்தாரா என்பதை அல்ல.. யார் குற்றம் செய்தார்கள் என்று பார்த்து ஆளுக்கு ஏற்ப குற்றவாளி என்று எழுதுவதை அல்லது குற்றவாளிக்கு வெள்ளை அடிப்பதான யாழில் எழுதும் பலரின் மனநிலையை..: இதே வெளைகலர் குற்றத்தை ஒரு சாதாரண ஏழைத்தமிழன் செய்திருந்தால் எவ்வளவு ஏச்சு விழுந்திருக்கும் இங்கு..

உங்க கருத்துப்படி பார்த்தால் கள்ள மட்டை அடிப்பது பாங்கை சுத்துவது கூட வைட்கலர் குற்றம்தான்.. அதற்கு யாழில் இங்கு ராஜரட்ணத்துக்கு எழுதிய யாராவது பாராட்டி எழுதி இருக்கிறார்களா..?

உண்மை. இங்கே மட்டுமல்ல, வட அமெரிக்காவின் ஒரு பெரிய தமிழ்ச்சங்கம் கூட ராஜரட்ணம் அவர்களை மிகவும் வெள்ளையடிக்கும் சில கட்டுரைகளை மீள்பிரசுரம் செய்திருக்கிறார்கள். "என்னைய்யா இது? இப்படி காசு தந்தால் புனிதம் செய்வோம் என்பது போல நடக்கிறீர்களே?" என்று ஒரு செயற்குழு உறுப்பினரான நண்பரைக் கேட்டேன். புன்னகைக்கிறார் மௌனமாக.

என் கவலை, இளம் தமிழ் சமுதாயத்திற்கு தவறான முன்னுதாரணங்களை வழங்கி  விடுவோமோ என்பது தான். எங்கள் பல இளையோர் நிதித்துறை, காப்புறுதித் துறை ஆகிய துறைகளில் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாதம் இங்கு நான் சொல்ல வந்தது என்ன குற்றம் செய்தார் வெள்ளை கலர் குற்றம் செய்தாரா கறுப்புகலர் குற்றம் செய்தாரா என்பதை அல்ல.. யார் குற்றம் செய்தார்கள் என்று பார்த்து ஆளுக்கு ஏற்ப குற்றவாளி என்று எழுதுவதை அல்லது குற்றவாளிக்கு வெள்ளை அடிப்பதான யாழில் எழுதும் பலரின் மனநிலையை..: இதே வெளைகலர் குற்றத்தை ஒரு சாதாரண ஏழைத்தமிழன் செய்திருந்தால் எவ்வளவு ஏச்சு விழுந்திருக்கும் இங்கு..

உங்க கருத்துப்படி பார்த்தால் கள்ள மட்டை அடிப்பது பாங்கை சுத்துவது கூட வைட்கலர் குற்றம்தான்.. அதற்கு யாழில் இங்கு ராஜரட்ணத்துக்கு எழுதிய யாராவது பாராட்டி எழுதி இருக்கிறார்களா..?

ம்.ம்ம்

காத்தான்குடி வங்கி, திருநெல்வேலி வங்கி எல்லாம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதே. விடுதலை போராட்டத்துக்கு பணம் தேவை என்பதால்... 🤔

ஆகவே நான் சொல்லவருவது, தவறாகினும், போராட்டத்துக்கு உதவியதால், எதிர்ப்பில்லை.

கள்ள மட்டை அடித்து, பத்து கடை திறந்து, பந்தா காட்டினால் திட்டாமல் என்ன செய்வார்கள்?

உதாரணமாக, ஊரில் ஒருவர், பெரிய வீடு கட்டி, தாய், தகப்பனுக்கு சிலையும் வைத்து, பந்தா காட்டினார். அவரின் தொழில், பணம் சம்பாதித்த வழி எல்லாம், அதே வீடியோ கீழ் எழுதி விட்டார்கள்.

லைக்கா குறித்தும் எழுத ஆரம்பித்தார்கள். இவ்வளவு பணத்தினை தென் இந்திய சினிமாவில் கொட்டுகிறார் என்றார்கள். இப்போது அவரும் ஊரில் சில வேலைகளை செய்கிறார்.

ஆக, சொல்ல வருவது என்னெவென்றால், ஏழை தமிழனோ, பணக்கார தமிழனோ, உழைப்பதில், முன்னர் கோவிலுக்கு கொடுத்தது போல, இப்போது முடிந்தளவு ஊருக்கு செய்யுங்கள். எங்கள் திட்டு, அல்லது பாராட்டு உங்களுக்கு தேவை இல்லை. சுஜநலம் தம்பட்டம் இல்லாமல் இருந்தால் போதும். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

விசுகர் கேட்டதற்கு அவருக்கு ஒரு குத்து(பதில் )

சாத்தான் கேட்டதற்கு அவருக்கு ஒரு குத்து. 

 எப்போ பாத்தாலும் குத்துவதிலேயே குறியாக இருக்கிறீர்களே அது ஏன்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ம்.ம்ம்

காத்தான்குடி வங்கி, திருநெல்வேலி வங்கி எல்லாம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதே. விடுதலை போராட்டத்துக்கு பணம் தேவை என்பதால்... 🤔

ஆகவே நான் சொல்லவருவது, தவறாகினும், போராட்டத்துக்கு உதவியதால், எதிர்ப்பில்லை.

கள்ள மட்டை அடித்து, பத்து கடை திறந்து, பந்தா காட்டினால் திட்டாமல் என்ன செய்வார்கள்?

உதாரணமாக, ஊரில் ஒருவர், பெரிய வீடு கட்டி, தாய், தகப்பனுக்கு சிலையும் வைத்து, பந்தா காட்டினார். அவரின் தொழில், பணம் சம்பாதித்த வழி எல்லாம், அதே வீடியோ கீழ் எழுதி விட்டார்கள்.

லைக்கா குறித்தும் எழுத ஆரம்பித்தார்கள். இவ்வளவு பணத்தினை தென் இந்திய சினிமாவில் கொட்டுகிறார் என்றார்கள். இப்போது அவரும் ஊரில் சில வேலைகளை செய்கிறார்.

ஆக, சொல்ல வருவது என்னெவென்றால், ஏழை தமிழனோ, பணக்கார தமிழனோ, உழைப்பதில், முன்னர் கோவிலுக்கு கொடுத்தது போல, இப்போது முடிந்தளவு ஊருக்கு செய்யுங்கள். எங்கள் திட்டு, அல்லது பாராட்டு உங்களுக்கு தேவை இல்லை. சுஜநலம் தம்பட்டம் இல்லாமல் இருந்தால் போதும். 

ஆக நீ திருடுரத திருடு.. திரூடிட்டு பந்தா காட்டாத.. கம்முன்னு இரு.. ஊருக்கு கொஞ்சத்தை குடு.. திருட்டு நோர்மலைஸ் அண்ட் ஜெனரலைஸ் ஆக்கப்படும்.. 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆக நீ திருடுரத திருடு.. திரூடிட்டு பந்தா காட்டாத.. கம்முன்னு இரு.. ஊருக்கு கொஞ்சத்தை குடு.. திருட்டு நோர்மலைஸ் அண்ட் ஜெனரலைஸ் ஆக்கப்படும்.. 

ஓம், நீங்க மன்னரை துதி பாடி வாங்கிய வெகுமதியில், நமக்கும் ஒரு சிறு பங்கு வெட்டினால், நான் ஏன் மண்டபத்தில் தாரோ எழுதிக் கொடுத்ததை கொண்டுபோய் பரிசு வாங்கிக் கொண்டு வந்து விட்டு பந்தா காட்டுகிறார் என்று சொல்லப்போறன். 🤑

***

பகிடி இருக்கட்டும்.

உந்த ராஜிவ் காந்தி ஏழு பேர் தண்டிக்கப்படார்கள் என்பதால்  அவர்கள் மீதான நீதி விசாரணை நியாயமானது என்று ஏற்றுக் கொண்டு விட்டோமா?

அந்த கோணத்தில் பாருங்கள். அவர் தனது வழக்கு விசாரணை மிக அநீதியானது என்று காரணங்களை அடுக்கி, அமெரிக்க நீதி துறை, அடிப்படையே மாறுதலுக்கு உள்ளாக வேண்டும் என்று புத்தகம் எழுதி, அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது மட்டுமல்லாமல், பெரிய டிவி நிறுவனங்கள், அதை முக்கியமாக கருதி பேட்டி எடுத்து போட்டன.

புத்தகம் தமிழிலும் வர இருக்கிறது.

சும்மா, ஆலமரத்து பஞ்சாயத்து போல, சொம்பை வைத்துக்கொண்டு அவர் சிறை சென்று வந்தவர், அதனால் பிழை, பிழை தான் எண்டு சொல்ல முடியாது.  😁😜

இவரது வழக்கு, பிரித்தானிய அல்லது ஐரோப்பிய நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் என்று விபரத்தையும் சொல்லி, இது நமது சிறு அறிவுக்கு மேலான விசயம் எண்டதையும் சொல்லி, மேலே ரதி அக்கா சொன்ன அமெரிக்க நீதி குறித்த குறிப்பையும் வாசிக்குமாறு கேட்டு, O. J. Simpson கொலை வழக்கு அமரிக்காவின் கறை படிந்த நீதித்துறை குறித்து, உலகளாவிய ரீதியில் வெளிச்சம் போட்டு காட்டியது என்பதையும் குறிப்பிட்டு முடிக்கிறேன். நன்றி.  

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

ஓம், நீங்க மன்னரை துதி பாடி வாங்கிய வெகுமதியில், நமக்கும் ஒரு சிறு பங்கு வெட்டினால், நான் ஏன் மண்டபத்தில் தாரோ எழுதிக் கொடுத்ததை கொண்டுபோய் பரிசு வாங்கிக் கொண்டு வந்து விட்டு பந்தா காட்டுகிறார் என்று சொல்லப்போறன். 🤑

***

பகிடி இருக்கட்டும்.

உந்த ராஜிவ் காந்தி ஏழு பேர் தண்டிக்கப்படார்கள் என்பதால்  அவர்கள் மீதான நீதி விசாரணை நியாயமானது என்று ஏற்றுக் கொண்டு விட்டோமா?

அந்த கோணத்தில் பாருங்கள். அவர் தனது வழக்கு விசாரணை மிக அநீதியானது என்று காரணங்களை அடுக்கி, அமெரிக்க நீதி துறை, அடிப்படையே மாறுதலுக்கு உள்ளாக வேண்டும் என்று புத்தகம் எழுதி, அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது மட்டுமல்லாமல், பெரிய டிவி நிறுவனங்கள், அதை முக்கியமாக கருதி பேட்டி எடுத்து போட்டன.

புத்தகம் தமிழிலும் வர இருக்கிறது.

சும்மா, ஆலமரத்து பஞ்சாயத்து போல, சொம்பை வைத்துக்கொண்டு அவர் சிறை சென்று வந்தவர், அதனால் பிழை, பிழை தான் எண்டு சொல்ல முடியாது.  😁😜

இவரது வழக்கு, பிரித்தானிய அல்லது ஐரோப்பிய நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் என்று விபரத்தையும் சொல்லி, இது நமது சிறு அறிவுக்கு மேலான விசயம் எண்டதையும் சொல்லி, மேலே ரதி அக்கா சொன்ன அமெரிக்க நீதி குறித்த குறிப்பையும் வாசிக்குமாறு கேட்டு முடிக்கிறேன். நன்றி.  

 

எவராவது தாயகத்துக்கு உதவ வேண்டும் என்றால் அவர்கள் 100% தூய்மையாக இருக்கணும்.  அவ்வாறு ஒருவரும் இவ்வுலகில் இல்லை இருக்கவும் முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இருக்கும் வரைக்கும்தான் தமிழ்தேசியவாதிகள் vs மாற்றுக்கருத்தினர் என்ற வகையில் யாழ் இணையமும், ஈழத்தில் ஈழ அரசியலும் இருந்தது.. விடுதலைப்புலிகள் இல்லாது போனபின்னர் மாற்றுகருத்தினரும் இல்லாது போயினர்.. ஏனெனில் அவர்களுக்கான தேவை இல்லாது போனது.. அவர்கள் அரசியலுக்கான தேவை இல்லாது போனபோது அவர்கள் மெல்ல மெல்ல வேறு வேலைகள் பார்க்க போய்விட்டனர்… இப்பொழுது தமிழ் தேசியவாதிகள் நாம்தான் இரு பிரிவாக இருக்கிறோம்.. இதே நிலைமதான் தமிழீழம் கிடைத்திருந்தாலும் நிகழ்ந்திருக்கும்.. அதாவது ஒன்று வலது சாரி தமிழ் தேசியவாதிகள்..( யாழ் இணையத்தில் உதாரணத்துக்கு - விசுகு,நாதம்,குசா,தமிழ்சிறி.. எக்சர்ரா எக்சர்ரா.. பெயர் வராதவர்கள் கோவிக்க வேண்டாம்.. எல்லாரையும் எழுத நேரமும் இடமும் போதாது) இவர்கள்தான் தமிழ்தேசிய வாதிகளில் பெரும் எண்ணிக்கையில் இருப்பவர்கள்.. இவர்கள் சாதி வெறியர் மதவெறியர் ஊர்வெறியர் திருடர் யாராய் இருந்தாலும் தமிழ் தேசியத்தின் பால் ஈடுபாடு கொண்டு உழைத்தால் ஆதரிப்பார்கள்..  எல்லா பிற்போக்குதனங்களையும் தமிழ்தேசியத்திற்கு நன்மை எனில் ஆதரிப்பார்கள்.. 

 

இன்னொருவர் இடதுசாரி தமிழ்தேசியவாதிகள்.. இவர்கள் சிறுபான்மையினர்..(யாழ் இணையத்தில் உதாரணமாக- நிழலி கிருபன் கோசான் யஸ்றின் றதி எக்சர்ரா எக்சர்ரா..பெயர் வராதவர்கள் கோவிக்க வேண்டாம்.. எல்லாரையும் எழுத நேரமும் இடமும் போதா…. நானும் இதில் வருவேன்) இவர்கள் தமிழ்தேசியம் பிற்போக்குதனங்கள் இல்லாது முற்போக்குதனங்களால் இருக்கவேண்டும் என்பவர்கள்..

ஒரு வேளை ஈழம் கிடைத்திருந்தால் இந்த இரண்டு கட்சி அரசியல்தான் அந்த நாட்டில் இருந்திருக்கும்..

இண்டைக்கும் இயக்க காசை அடித்தவர்கள் தலைவர் வரட்டும் கணக்கு காட்டுரன் எண்டுவிட்டு சமூகத்தில் துணிவாக சுற்ற காரணம் தமிழ்தேசியத்தின் பேரால் எல்லாவற்றையும் நோர்மலைஸ் பண்ணக்கூடிய வலதுசாரித்தமிழ்தேசியவாதிகளே தமிழ்தேசியத்தில் பெரும்பான்மையானவர்கள் அவர்களின் சப்போர்ட் எப்பவும் தமக்கு இருக்கும் எண்ட துணிச்சலே.. தமிழ்தேசியத்தின் போர்வையை போர்த்திக்கொண்டு உலாவும் எல்லா பாலியல் குற்றவாளிகள் திருடர்கள் ஏமாற்று பேர்வளிகளின் துணிவும் அதே..

இடதுசாரி தமிழ்தேசியவாதிகளை துரோகிகள் என்ற பெயரில் வலதுசாரிகள் முத்திரைகுத்தினாலும் தமிழ்தேசியத்தை விட்டு ஒதுங்கி போகாமல் தொடர்ந்து அதனுள் நின்று இவற்றுக்கு எதிராக சளைக்காமல் குரல் கொடுக்கவேண்டும்.. முக்கியமாக ஈழத்தில் இருக்கும் இடதுசாரி தமிழ்தேசியவாதிகள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இன்னொருவர் இடதுசாரி தமிழ்தேசியவாதிகள்.. இவர்கள் சிறுபான்மையினர்..(யாழ் இணையத்தில் உதாரணமாக- நிழலி கிருபன் கோசான் யஸ்றின் றதி எக்சர்ரா எக்சர்ரா..பெயர் வராதவர்கள் கோவிக்க வேண்டாம்.. எல்லாரையும் எழுத நேரமும் இடமும் போதா….

நானும் இதில் வருவேன்

எப்படி?

வலது சாரி, இடது சாரி என்ன வரைவிலக்கணம் என்றும், எப்படி என்னை முதலாமதிலும், உங்களை இரண்டாமதிலும் இணைத்தீர்கள் என்று சொல்ல இயலுமா? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

விடுதலைப்புலிகள் இருக்கும் வரைக்கும்தான் தமிழ்தேசியவாதிகள் vs மாற்றுக்கருத்தினர் என்ற வகையில் யாழ் இணையமும், ஈழத்தில் ஈழ அரசியலும் இருந்தது.. விடுதலைப்புலிகள் இல்லாது போனபின்னர் மாற்றுகருத்தினரும் இல்லாது போயினர்.. ஏனெனில் அவர்களுக்கான தேவை இல்லாது போனது.. அவர்கள் அரசியலுக்கான தேவை இல்லாது போனபோது அவர்கள் மெல்ல மெல்ல வேறு வேலைகள் பார்க்க போய்விட்டனர்… இப்பொழுது தமிழ் தேசியவாதிகள் நாம்தான் இரு பிரிவாக இருக்கிறோம்.. இதே நிலைமதான் தமிழீழம் கிடைத்திருந்தாலும் நிகழ்ந்திருக்கும்.. அதாவது ஒன்று வலது சாரி தமிழ் தேசியவாதிகள்..( யாழ் இணையத்தில் உதாரணத்துக்கு - விசுகு,நாதம்,குசா,தமிழ்சிறி.. எக்சர்ரா எக்சர்ரா.. பெயர் வராதவர்கள் கோவிக்க வேண்டாம்.. எல்லாரையும் எழுத நேரமும் இடமும் போதாது) இவர்கள்தான் தமிழ்தேசிய வாதிகளில் பெரும் எண்ணிக்கையில் இருப்பவர்கள்.. இவர்கள் சாதி வெறியர் மதவெறியர் ஊர்வெறியர் திருடர் யாராய் இருந்தாலும் தமிழ் தேசியத்தின் பால் ஈடுபாடு கொண்டு உழைத்தால் ஆதரிப்பார்கள்..  எல்லா பிற்போக்குதனங்களையும் தமிழ்தேசியத்திற்கு நன்மை எனில் ஆதரிப்பார்கள்.. 

 

இன்னொருவர் இடதுசாரி தமிழ்தேசியவாதிகள்.. இவர்கள் சிறுபான்மையினர்..(யாழ் இணையத்தில் உதாரணமாக- நிழலி கிருபன் கோசான் யஸ்றின் றதி எக்சர்ரா எக்சர்ரா..பெயர் வராதவர்கள் கோவிக்க வேண்டாம்.. எல்லாரையும் எழுத நேரமும் இடமும் போதா…. நானும் இதில் வருவேன்) இவர்கள் தமிழ்தேசியம் பிற்போக்குதனங்கள் இல்லாது முற்போக்குதனங்களால் இருக்கவேண்டும் என்பவர்கள்..

ஒரு வேளை ஈழம் கிடைத்திருந்தால் இந்த இரண்டு கட்சி அரசியல்தான் அந்த நாட்டில் இருந்திருக்கும்..

இண்டைக்கும் இயக்க காசை அடித்தவர்கள் தலைவர் வரட்டும் கணக்கு காட்டுரன் எண்டுவிட்டு சமூகத்தில் துணிவாக சுற்ற காரணம் தமிழ்தேசியத்தின் பேரால் எல்லாவற்றையும் நோர்மலைஸ் பண்ணக்கூடிய வலதுசாரித்தமிழ்தேசியவாதிகளே தமிழ்தேசியத்தில் பெரும்பான்மையானவர்கள் அவர்களின் சப்போர்ட் எப்பவும் தமக்கு இருக்கும் எண்ட துணிச்சலே.. தமிழ்தேசியத்தின் போர்வையை போர்த்திக்கொண்டு உலாவும் எல்லா பாலியல் குற்றவாளிகள் திருடர்கள் ஏமாற்று பேர்வளிகளின் துணிவும் அதே..

மிகத்தவறான கருத்து 

தவறென்றால் பெற்றவனையே போடு என்ற வழியில் நிற்பவர்கள் நாம். 

உங்களைப் போல் எல்லாவற்றையும் ஒரே சாக்கில் போடும் போக்கே இன்றைய சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் களையப்படாமல் இருக்க காரணம். நல்லவர்கள் அனைத்துப்பேரையும் கள்ள லிஸ்டில் போட்டு விட்டு பேசாமடந்தைகளாக இருந்தது நீங்களே. இப்பொழுது அழுதென்ன பயன்??

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு மினக்கெட்டு எழுதியும், ஓணாண்டியார் விளங்கிக் கொண்டது, இந்த பகிடியை தான் நினைவு படுத்துது 

Insider Dealing, White Collar Jobs  (NOT white colour - திண்ணையில்) போன்ற விடயங்கள் நமக்கு தெரியாவிடில் அது குறித்து முடிந்த வரை அறிந்து கொள்வது முக்கியமானது. அதைவிடுத்து, சும்மா தெரிந்த விசயத்தை வைத்துக் கொண்டு அலம்பறை பண்ணுவது அபத்தமானது, சிறுபிள்ளைத்தனமானது.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஓம், நீங்க மன்னரை துதி பாடி வாங்கிய வெகுமதியில், நமக்கும் ஒரு சிறு பங்கு வெட்டினால், நான் ஏன் மண்டபத்தில் தாரோ எழுதிக் கொடுத்ததை கொண்டுபோய் பரிசு வாங்கிக் கொண்டு வந்து விட்டு பந்தா காட்டுகிறார் என்று சொல்லப்போறன். 🤑

***

பகிடி இருக்கட்டும்.

உந்த ராஜிவ் காந்தி ஏழு பேர் தண்டிக்கப்படார்கள் என்பதால்  அவர்கள் மீதான நீதி விசாரணை நியாயமானது என்று ஏற்றுக் கொண்டு விட்டோமா?

அந்த கோணத்தில் பாருங்கள். அவர் தனது வழக்கு விசாரணை மிக அநீதியானது என்று காரணங்களை அடுக்கி, அமெரிக்க நீதி துறை, அடிப்படையே மாறுதலுக்கு உள்ளாக வேண்டும் என்று புத்தகம் எழுதி, அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது மட்டுமல்லாமல், பெரிய டிவி நிறுவனங்கள், அதை முக்கியமாக கருதி பேட்டி எடுத்து போட்டன.

புத்தகம் தமிழிலும் வர இருக்கிறது.

சும்மா, ஆலமரத்து பஞ்சாயத்து போல, சொம்பை வைத்துக்கொண்டு அவர் சிறை சென்று வந்தவர், அதனால் பிழை, பிழை தான் எண்டு சொல்ல முடியாது.  😁😜

இவரது வழக்கு, பிரித்தானிய அல்லது ஐரோப்பிய நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் என்று விபரத்தையும் சொல்லி, இது நமது சிறு அறிவுக்கு மேலான விசயம் எண்டதையும் சொல்லி, மேலே ரதி அக்கா சொன்ன அமெரிக்க நீதி குறித்த குறிப்பையும் வாசிக்குமாறு கேட்டு, O. J. Simpson கொலை வழக்கு அமரிக்காவின் கறை படிந்த நீதித்துறை குறித்து, உலகளாவிய ரீதியில் வெளிச்சம் போட்டு காட்டியது என்பதையும் குறிப்பிட்டு முடிக்கிறேன். நன்றி.  

பொருந்தாத உதாரணங்களை மேற்கோள் காட்டுவதென்பது நாதமுனியின் ட்ரேட் மார்க் ஆகப் போய் விட்டதா இப்ப?😂

பற்றரி எதற்கென்று தெரியாமலே வாங்கிக் கொடுத்தவனுக்கும் மரண தண்டனை தந்த ஏழு பேரின் தீர்ப்பும், 14 தடவைகள் ஒட்டுக் கேட்ட ஆதாரங்களால் ஜூரிகளின் ஏகோபித்த தீர்ப்பும் ஒன்றல்ல நாதம்! ஒ.ஜே யின் வழக்கில் அவரைக் குற்றவாளியாக நிரூபிக்க அவசியமான சாட்சியங்கள் இருக்கவில்லை என்பதால் அது அமெரிக்க நீதித் துறையின் பலத்தைத் தான் காட்டியது, பலவீனத்தை அல்ல!

ராஜரட்ணம் அவர்களின் வழக்கில் ஒரு தனித்துவம் எனவென்றால், அது வரை ஒட்டுக்  கேட்ட (wire-tap) சாட்சியத்தை பிரதான சான்றாக சமஷ்டி நீதிமன்றங்களில் யாரும் சமர்ப்பித்து தண்டனையை வாங்கிக் கொடுத்திருக்கவில்லை. எனவே, நீதிபதி அந்த சான்றை அனுமதிக்க மாட்டார் என்ற தனது சட்டக் குழுவின் ஆலோசனையைக் கேட்டுத் தான் ராஜரட்ணம் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார். நீதிபதி காலை வாரி விட்டார், காரணம் வழக்குத் தொடுனர் குழுவின்  iron-clad கேஸ்.

பின்னர், மேன்முறையீடு செய்த போதும் ராஜரட்ணம் தரப்பு இந்த ஒட்டுக் கேட்ட ஆதாரத்தை நீக்க வேண்டுமென வாதிட்டது. அப்பீல் நீதிபதிகளும் நீக்க மறுத்து விட தண்டனை பெற்றார்.

நாதம், உங்கள் நேரம், உழைப்பு என்பவற்றை மிகவும் மதிக்கிறேன். ஆனால், கொஞ்சம் ஆழமாக வழக்கு ஆவணங்களை வாசித்து விட்டு வாசிப்போருக்கு தரமான பதில்களைக் கொடுங்கள். இந்தத் திரியில் நீங்கள் கொடுத்திருக்கும் பல தகவல்களுக்கு ஆதாரங்கள் இல்லை, பல தகவல்கள் பிழை.    

  • கருத்துக்கள உறவுகள்

விடிந்தால் சீதைக்கு, ராமன் என்ன முறை கதை தான் இங்கே நடக்கிறது.

முன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒட்டு கேட்கும் சான்று, முதல் தடவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நீதிபதி காலை வாரியதன் காரணம், ராஜ் ராஜரத்தினத்தின் தோலின் நிறம் வெள்ளை இல்லை என்பது தான் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்கிறோம் இங்கே.

என்னத்தை பத்தி விவாதிக்கிறோம் எண்டு புரியாம, லிங்குகளை ஒட்டி என்ன பிரயோசனம். 🤦‍♂️

****

இதுவும் அமேரிக்க நீதித்துறையின் ஒரு சீர்கேடு தான்.

Although Simpson was acquitted in the criminal case, he was also sued by the victims’ families for wrongful death, and the civil trial began in October 1996. Less than four months later, that jury found him responsible for the deaths of Nicole Brown Simpson and Ronald Goldman and awarded their families $33.5 million in damages. 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தினர் கொட்டிக்கொடுத்ததை விட(😉) மேலதிகமாகவே அதே நிறுவனத்தினூடாக (ஒரே தடவையில்)  நானும் என் நண்பனும் செய்திருக்கிறோம். 

17 hours ago, Kapithan said:

உயிரைக் கொடுத்து போராடியவர்கள் இருக்கும் போது எனது பங்களிப்பு தூசுக்குச் சமானம் என்பதை நன்கறிவேன். 

 

15 hours ago, Kapithan said:

அதில் தவறில்லை. அவர் தனது சொந்தப்பணத்தில் கூட உதவியச் செய்திருக்கலாம்.. அது அவரின் விருப்பம். பாராட்டலாம்.

இதுக்குதான் இவ்வளவு முகவுரை தேவைப்பட்டதா?

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

யாழ் களத்தினர் கொட்டிக்கொடுத்ததை விட(😉) மேலதிகமாகவே அதே நிறுவனத்தினூடாக (ஒரே தடவையில்)  நானும் என் நண்பனும் செய்திருக்கிறோம். 

 

இதுக்குதான் இவ்வளவு முகவுரை தேவைப்பட்டதா?

 

பிழைகளை பிழை என்றும் , சரியானதை சரியென்றும் கூறுங்கள். அதுதான்  நேர்மை. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாய் ஒரு கேள்வி. இப்போ, ராஜ் ராஜரட்ணம் தாயகமக்களுக்கு உதவி செய்ய  வேணுமா வேண்டாமா சார்?

 

  • கருத்துக்கள உறவுகள்

இருக்க வேண்டும். அப்படி இருந்தால், குற்றத்தீர்ப்பும்

1 hour ago, Nathamuni said:

விடிந்தால் சீதைக்கு, ராமன் என்ன முறை கதை தான் இங்கே நடக்கிறது.

முன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒட்டு கேட்கும் சான்று, முதல் தடவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நீதிபதி காலை வாரியதன் காரணம், ராஜ் ராஜரத்தினத்தின் தோலின் நிறம் வெள்ளை இல்லை என்பது தான் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்கிறோம் இங்கே.

****

இதுவும் அமேரிக்க நீதித்துறையின் ஒரு சீர்கேடு தான்.

Although Simpson was acquitted in the criminal case, he was also sued by the victims’ families for wrongful death, and the civil trial began in October 1996. Less than four months later, that jury found him responsible for the deaths of Nicole Brown Simpson and Ronald Goldman and awarded their families $33.5 million in damages. 

 

😂

ஒன்று அரச தரப்பு போடும் கிரிமினல் வழக்கு: இதற்கு அவசியமான சான்றுகளின் தரம் (threshold) மிக உயர்வாக  இருக்க வேண்டும். அப்படி இருந்தால், குற்றத்தீர்ப்பும் சிறையுட்பட்ட தண்டனை கிடைக்கும். கொஞ்சம் reasonable doubt இருந்தாலும் குற்றமற்றவர் என்ற தீர்ப்புத் தான்.

மற்றையது பாதிக்கப் பட்டவரின் குடும்பமோ , தரப்போ சந்தேக நபர் மீது  போடும் சிவில் வழக்கு. இதில் குற்றத் தீர்ப்பு வழங்க தேவையான சான்றுகள் கிரிமினல் வழக்கை விடக் குறைந்த தரத்திலிருந்தாலே போதும். சிவில் வழக்குகளில் சிறைத் தண்டனை கொடுப்பது மிக அரிது, எனவே நட்ட ஈடு. சிவில் வழக்குகளின் தீர்ப்பு "இவர் மரணத்திற்குப் பொறுப்பாக இருந்தார் (liable)" என்று தான் எழுதப் படுமேயொழிய, "இவர் கொலை செய்தார் (guilty)" என்று இருப்பதில்லை.

இது அமெரிக்க நீதி வட்டாரங்களில் மிகவும் சாதாரணமாக நடப்பது. சிவில் வழக்கின் முடிவை வைத்து கிரிமினல் வழக்கின் தீர்ப்பு பிழை என்று வாதிடுவதில்லை!

இந்த அடிப்படை விடயம் கூடத் தெரியாமலா  ராஜரட்ணம் வழக்கின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டவர் போல எழுதுகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.