Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிளவுபட்ட தமிழ் கட்சிகளை கொழும்புக்கு அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://tamilwin.com/article/separated-tamil-parties-1674130611

இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனையும் ஒன்றாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நான்கு நாள் பயணத்தை நேற்று முன்தினம் (17.01.2023) ஆரம்பித்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர், இன்று (19.01.2023) கொழும்புக்கு வந்தடைந்தார்.

விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு  

 

கொழும்பில் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நாளை (20.01.2023) காலை 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார்.

இந்த சந்திப்புக்கு விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிளவுபட்ட தமிழ் கட்சிகளை கொழும்புக்கு அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் | Separated Tamil Parties  

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான இரா.சம்பந்தன் த.சித்தார்த்தன் ஆகியோருடன் தானும் பங்கெடுப்பார் என்று பேச்சாளர் எம். ஏ.சுமந்திரன் பத்திரிக்கை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக தாங்கள் பிரிவதாக கூறி வடக்கு கிழக்கிலுள்ள குறிப்பாக, தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் பிளவுபட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புளொட் வெளியேறியிருப்பதாக அறிவித்து புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், புதிய கூட்டணியிலிருந்து வெளியேறிய விக்னேஸ்வரனும் ஒரு கூட்டணியை அமைத்து கிட்டத்தட்ட தமிழர் தரப்பு 3 தரப்புகளாக தமிழ் தேசியம் சார்ந்திருக்க கூடிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் இந்த காலகட்டத்தில் இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

முக்கியமான சந்திப்பு

இந்நிலையில், தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் தேசியம் சார்ந்திருக்க கூடிய கட்சிகளை ஓரணியாக அழைத்திருப்பது என்பது முக்கியமான செய்தியை கூறுவதற்கு மறைமுகமாக அரசியல் ரீதியாக முற்படுவதாக தெரிவதுடன் இன்னும் ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

பிளவுபட்ட தமிழ் கட்சிகளை கொழும்புக்கு அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் | Separated Tamil Parties

 

ஒட்டுமொத்தத்தில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் கட்சிகளுடைய ஒற்றுமையை இந்தியா விரும்புகின்றதா அல்லது என்ன விடயத்தை கலந்துரையாடப் போகின்றார்கள்.

இலங்கை அரசு எப்படியான வகையில் கலந்துகொள்ள வேண்டும். தமிழ் தேசிய கூட்டமையில் இருந்து இரண்டு கட்சிகள் வெளியேறிய சூழ்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் யார் யார் கலந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கின்ற போது, ஜெய்சங்கருடனான சந்திப்பானது மிக முக்கியமான சந்திப்பாக அரசியல் பரப்பில் பார்க்கப்படுகின்றது.

 

இந்தியாவின் அடிமைகளை இந்தியா சபசுவதற்கு அழைத்துள்ளது. தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் உள்ள பிணக்கைத் தீர்க்க வேண்டிய இந்தியா. தனது அடிமைக்கட்சிகளுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்ப்பதற்பகு முனைகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

https://tamilwin.com/article/separated-tamil-parties-1674130611

இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனையும் ஒன்றாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நான்கு நாள் பயணத்தை நேற்று முன்தினம் (17.01.2023) ஆரம்பித்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர், இன்று (19.01.2023) கொழும்புக்கு வந்தடைந்தார்.

விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு  

 

கொழும்பில் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நாளை (20.01.2023) காலை 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார்.

இந்த சந்திப்புக்கு விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிளவுபட்ட தமிழ் கட்சிகளை கொழும்புக்கு அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் | Separated Tamil Parties  

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான இரா.சம்பந்தன் த.சித்தார்த்தன் ஆகியோருடன் தானும் பங்கெடுப்பார் என்று பேச்சாளர் எம். ஏ.சுமந்திரன் பத்திரிக்கை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக தாங்கள் பிரிவதாக கூறி வடக்கு கிழக்கிலுள்ள குறிப்பாக, தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் பிளவுபட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புளொட் வெளியேறியிருப்பதாக அறிவித்து புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், புதிய கூட்டணியிலிருந்து வெளியேறிய விக்னேஸ்வரனும் ஒரு கூட்டணியை அமைத்து கிட்டத்தட்ட தமிழர் தரப்பு 3 தரப்புகளாக தமிழ் தேசியம் சார்ந்திருக்க கூடிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் இந்த காலகட்டத்தில் இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

முக்கியமான சந்திப்பு

இந்நிலையில், தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் தேசியம் சார்ந்திருக்க கூடிய கட்சிகளை ஓரணியாக அழைத்திருப்பது என்பது முக்கியமான செய்தியை கூறுவதற்கு மறைமுகமாக அரசியல் ரீதியாக முற்படுவதாக தெரிவதுடன் இன்னும் ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

பிளவுபட்ட தமிழ் கட்சிகளை கொழும்புக்கு அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் | Separated Tamil Parties

 

ஒட்டுமொத்தத்தில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் கட்சிகளுடைய ஒற்றுமையை இந்தியா விரும்புகின்றதா அல்லது என்ன விடயத்தை கலந்துரையாடப் போகின்றார்கள்.

இலங்கை அரசு எப்படியான வகையில் கலந்துகொள்ள வேண்டும். தமிழ் தேசிய கூட்டமையில் இருந்து இரண்டு கட்சிகள் வெளியேறிய சூழ்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் யார் யார் கலந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கின்ற போது, ஜெய்சங்கருடனான சந்திப்பானது மிக முக்கியமான சந்திப்பாக அரசியல் பரப்பில் பார்க்கப்படுகின்றது.

 

இந்தியாவின் அடிமைகளை இந்தியா சபசுவதற்கு அழைத்துள்ளது. தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் உள்ள பிணக்கைத் தீர்க்க வேண்டிய இந்தியா. தனது அடிமைக்கட்சிகளுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்ப்பதற்பகு முனைகிறது.

புலவர்,

இந்தியா கூப்பிடவில்லை எனும் போது, கூப்பிட்டும் யாரும் வரவில்லை என கூறும் சீனாவுடன் ஏன் சைக்கிள்காரார் ஒரு புகைப்பட-வாய்ப்பை ஆவது ஏற்படுத்தக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

புலவர்,

இந்தியா கூப்பிடவில்லை எனும் போது, கூப்பிட்டும் யாரும் வரவில்லை என கூறும் சீனாவுடன் ஏன் சைக்கிள்காரார் ஒரு புகைப்பட-வாய்ப்பை ஆவது ஏற்படுத்தக்கூடாது?

😀

நடக்கிற காரியமாய் சொல்லுங்க 😀

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

புலவர்,

இந்தியா கூப்பிடவில்லை எனும் போது, கூப்பிட்டும் யாரும் வரவில்லை என கூறும் சீனாவுடன் ஏன் சைக்கிள்காரார் ஒரு புகைப்பட-வாய்ப்பை ஆவது ஏற்படுத்தக்கூடாது?

உலகில் ஜனநாயக நாடு என கூறிக்கொள்ளும் நாடுகள்தான் மிக பெரிய அடக்குமுறை நாடுகளாகும், இந்திய இலங்கை ஒப்பந்தம் கைசாத்தான காலகட்டத்தில் விடுதலை புலிகள் இந்திய அரசினை பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள் (திலீபன்) " இந்திய அரசு தலைவர் பிரபாகரனை கொல்ல முயற்சிக்கிறது".

சைக்கிள்காரர்கள் சாதாரணமான மனிதர்கள், அவர்களுக்கு உயிரில் ஆசையுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

😀

நடக்கிற காரியமாய் சொல்லுங்க 😀

நடக்க கஸ்டம் எண்டுதானே சைக்கிள் எடுத்தவை🤣

1 hour ago, vasee said:

உலகில் ஜனநாயக நாடு என கூறிக்கொள்ளும் நாடுகள்தான் மிக பெரிய அடக்குமுறை நாடுகளாகும், இந்திய இலங்கை ஒப்பந்தம் கைசாத்தான காலகட்டத்தில் விடுதலை புலிகள் இந்திய அரசினை பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள் (திலீபன்) " இந்திய அரசு தலைவர் பிரபாகரனை கொல்ல முயற்சிக்கிறது".

சைக்கிள்காரர்கள் சாதாரணமான மனிதர்கள், அவர்களுக்கு உயிரில் ஆசையுண்டு.

அவ்வளவு இலகுவாக இவர்களை போட்டுதள்ள முடியாது என நினைக்கிறேன்.

இவர்கள் சீனாவிடம் உயிர் உத்தரவாதம் கேட்டு அதன் பின் பேசலாம்.

சீனாவின் நண்பர்கள் என தெரிந்த பின், சீனா இவர்களை தம் சிறகின் கீழ் எடுத்த பின், இவர்களில் இந்தியா கைவைத்தால் - ஒரு இந்திய சார்பு அரசியல்வாதியை சீனா தூக்கும் என்பதை இந்தியா அறியும்.

இந்தியா -

மேற்கு -

இலங்கை -

சீனா -

 என்றால் 🚴 காரார் யாருடந்தான் பேசி தீர்வுகாண போகிறார்கள்?

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

நடக்க கஸ்டம் எண்டுதானே சைக்கிள் எடுத்தவை🤣

அவ்வளவு இலகுவாக இவர்களை போட்டுதள்ள முடியாது என நினைக்கிறேன்.

இவர்கள் சீனாவிடம் உயிர் உத்தரவாதம் கேட்டு அதன் பின் பேசலாம்.

சீனாவின் நண்பர்கள் என தெரிந்த பின், சீனா இவர்களை தம் சிறகின் கீழ் எடுத்த பின், இவர்களில் இந்தியா கைவைத்தால் - ஒரு இந்திய சார்பு அரசியல்வாதியை சீனா தூக்கும் என்பதை இந்தியா அறியும்.

இந்தியா -

மேற்கு -

இலங்கை -

சீனா -

 என்றால் 🚴 காரார் யாருடந்தான் பேசி தீர்வுகாண போகிறார்கள்?

 

மேற்கூறிய எவரில் உங்களுக்கு அதிகம் நம்பிக்கை உண்டு??  ஏன்?  

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் பொத்திக் கொண்டு 13 ஐ எடுங்கோ என்று சொல்ல போறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எல்லாரும் பொத்திக் கொண்டு 13 ஐ எடுங்கோ என்று சொல்ல போறாரோ?

அதுக்கு மேலை எதுவும் கேட்டு எங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பாரோ? இதுகள் வகுப்பு எடுக்கும் நிலையில் எங்கட தலைவர்கள், விடிவு எப்படியானதாக இருக்கும்? சொந்தமாய் முடிவெடுத்து மக்களை வழிநடத்த தெரியாதவர்கள் எல்லாம் தலைவர்கள்!  

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் மக்களுக்காக தங்களுக்குள் ஒன்றுபட்டு உழைக்கத்தெரியாதவர்கள், இந்தியா சொன்னவுடன் கேள்வி கேட்காமல் ஒன்றுபடுவினமாம்....? பிறகு எதற்கு இவர்களுக்கு மக்கள் வாக்கு போட வேண்டும்? பேசாமல் இந்தியாவுக்கு மனு எழுதிக்கொடுத்துவிட்டு இருக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புலவர் said:

இலங்கை அரசு எப்படியான வகையில் கலந்துகொள்ள வேண்டும். தமிழ் தேசிய கூட்டமையில் இருந்து இரண்டு கட்சிகள் வெளியேறிய சூழ்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் யார் யார் கலந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கின்ற போது, ஜெய்சங்கருடனான சந்திப்பானது மிக முக்கியமான சந்திப்பாக அரசியல் பரப்பில் பார்க்கப்படுகின்றது.

தன்னுடைய பிராக்சி கூத்தாடிகளின் கூத்து களேபாரத்தினால் டீல் மேக்கர் கடும் அப்செட்,
அதுதான் நேரடியாக பெரிய  காயை அனுப்பி  தயவு செய்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கூத்தாடுங்கள் தனியே தனியே நின்று ஆடினால் யாவாரம் படுத்துரும் என்ற செய்தியை அனுப்பியிருப்பார்கள் போல்.

 

5 hours ago, goshan_che said:

இந்தியா -

மேற்கு -

இலங்கை -

சீனா -

 என்றால் 🚴 காரார் யாருடந்தான் பேசி தீர்வுகாண போகிறார்கள்?

கஜே கோஷ்ட்டி அவர்களுக்கு அதரவான சக்திகளுடன் பேசி தீர்வை காண்பார்கள் வேடிக்கை என்னவென்றால் அது யாரென்று அவர்களுக்கே தெரியாது. சீனாவுடன் இந்தியாவை சுழிச்சு/ சடைந்துவிட்டு அரசியல் செய்வது என்பது கலை. சரக்கு வற்றிப்போய் இந்தியாவின் அடிமையாகிவிட்ட  ஈழத்தமிழர்களுக்கு  அது என்றுமே கைவராது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நடக்க கஸ்டம் எண்டுதானே சைக்கிள் எடுத்தவை🤣

அவ்வளவு இலகுவாக இவர்களை போட்டுதள்ள முடியாது என நினைக்கிறேன்.

இவர்கள் சீனாவிடம் உயிர் உத்தரவாதம் கேட்டு அதன் பின் பேசலாம்.

சீனாவின் நண்பர்கள் என தெரிந்த பின், சீனா இவர்களை தம் சிறகின் கீழ் எடுத்த பின், இவர்களில் இந்தியா கைவைத்தால் - ஒரு இந்திய சார்பு அரசியல்வாதியை சீனா தூக்கும் என்பதை இந்தியா அறியும்.

இந்தியா -

மேற்கு -

இலங்கை -

சீனா -

 என்றால் 🚴 காரார் யாருடந்தான் பேசி தீர்வுகாண போகிறார்கள்?

 

70 வருட பழமை கொண்ட எமட்கு பிரச்சினையினை அவ்வளவு இலகுவாக தீர்த்துவிடமுடியுமா?

பனிப்போர் கால உலக் ஒழுங்கில் பல தேசிய இனங்களுக்கு சார்பாக இருந்த உலக ஒழுங்கு தொடக்கம் தற்போதுள்ள புதிய ஒழுங்குவரை எமது பிரச்சினை தனது பயணத்தினை தொடர்கிறது இதுவரை எந்த மாற்றமுமில்லாமல்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

மேற்கூறிய எவரில் உங்களுக்கு அதிகம் நம்பிக்கை உண்டு??  ஏன்?  

நம்பிக்கை எவரிடமும் இல்லை.

ஆனால் சில பிரபஞ்ச உண்மைகளில் நம்பிக்கை உண்டு.

1. வெளி மத்யஸ்தம் இன்றி இலங்கையுடன் பேசும் எந்த பேரமும் ஏமாற்றத்தில்தான் முடியும்.

2. தனியே தமிழர் இனப்பிரச்சனை மட்டும் அல்ல, இலங்கையில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் இந்தியா அதில் தன் மூக்கை நுழைப்பதை தவிர்க்க முடியாது. குறிப்பாக இலங்கையில் பலகாலம் முதலாம் அதிகாரி/ உதவி ஸ்தானிகர் பதவிகளை வகித்த ஜெய்சங்கர் போன்றோர் இருக்கும் போது.

3. சீனாவினை தமிழர் தரப்பு நெருங்குவது போல் பாவனை மட்டும் செய்தாலே கூட, இந்தியா-இலங்கை தமிழரை கிள்ளுகீரையாக நினைக்கும், நடத்தும் தற்போதைய நிலையில் சிறிதளவேனும் மாற்றம் வர வாய்ப்புண்டு.

4. இந்தியாவை பகைத்து இலங்கையில் தலையிடும் அளவுக்கு மேற்குக்கு இலங்கை முக்கியம் இல்லை. மேற்கும் இந்தியாவும் அதிமுகவும், பாஜகவும் போல. கூட்டணியா இல்லையா, தனித்து செயல்படுகிறார்களா என்றெல்லாம் யோசிக்க தோன்றும். உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்கவும் கூடும் ஆனால் பெரிய தேர்தல் என்றால் ஒன்றாகி விடுவார்கள்.

5. இந்தியாவே தலையில் அடித்து கொள்ளும் அளவுக்கு கோமாளித்தனமான அரசியல் செய்கிறார்கள் தமிழ் தேசியத்தரப்பினர்.

8 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லாரும் பொத்திக் கொண்டு 13 ஐ எடுங்கோ என்று சொல்ல போறாரோ?

ஆம்

4 hours ago, அக்னியஷ்த்ரா said:

கஜே கோஷ்ட்டி அவர்களுக்கு அதரவான சக்திகளுடன் பேசி தீர்வை காண்பார்கள் வேடிக்கை என்னவென்றால் அது யாரென்று அவர்களுக்கே தெரியாது. சீனாவுடன் இந்தியாவை சுழிச்சு/ சடைந்துவிட்டு அரசியல் செய்வது என்பது கலை. சரக்கு வற்றிப்போய் இந்தியாவின் அடிமையாகிவிட்ட  ஈழத்தமிழர்களுக்கு  அது என்றுமே கைவராது. 

ஒன்றை தவிர மிச்சம் எல்லாவற்றுடனும் 100% உடன்பாடு.

சரக்கு வற்றவில்லை. இருந்தால்தானே வற்ற?

4 hours ago, vasee said:

70 வருட பழமை கொண்ட எமட்கு பிரச்சினையினை அவ்வளவு இலகுவாக தீர்த்துவிடமுடியுமா?

பனிப்போர் கால உலக் ஒழுங்கில் பல தேசிய இனங்களுக்கு சார்பாக இருந்த உலக ஒழுங்கு தொடக்கம் தற்போதுள்ள புதிய ஒழுங்குவரை எமது பிரச்சினை தனது பயணத்தினை தொடர்கிறது இதுவரை எந்த மாற்றமுமில்லாமல்.

இனியும் உலகமாந்தர் செவ்வாயில் குடியேறிய பின்னும் தொடரும்….

 

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

புலவர்,

இந்தியா கூப்பிடவில்லை எனும் போது, கூப்பிட்டும் யாரும் வரவில்லை என கூறும் சீனாவுடன் ஏன் சைக்கிள்காரார் ஒரு புகைப்பட-வாய்ப்பை ஆவது ஏற்படுத்தக்கூடாது?

புலிகள் இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்திருந்த வேளையில் கூட சுpனாவுடனோ அல்லது அமெரிக்காவுடனோ தொடர்புகளைப் பேணவில்லை. அது தமிழ்நாட்டுக்கும் தமிழ்ஈழத்துக்குமான உறவில் தாக்கத்தைச் செலுத்தும் என்பதால் அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள். ஆனால் சிறிலங்கா அரசுடன் மட்டும் பேசித் துpர்வை எடுக்கலாம் என்ற மனோநிலையில் இன்னும் தமிழத்தலைவர்கள் மக்களைப் பேய்க்காட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கஜேக்கள் சீனாவுடன் உறவு வைத்தால் அது அவர்களின் தேர்தல் அரசியலைப் பாதிக்கும். தங்களுக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்பதால் அவர்களைப் பேச்சுக்ககு அழைக்கவே மறுக்கும் இந்தியா அவர்களின் கட்சியை அழிக்கவே பார்க்கும். இப்பவே மணியைப்பிரித்து விக்கியுடன் சேரத்ததன் மூலம் அந்தக்கட்சியை உடைக்கும் வேலையைத் தொடக்கி விட்டது. ஆனால் கஜேக்கள் சீனாவுடன் பேசுவது நல்லது என்றே நான் நினைக்கிறேன்.9ஊள்ளூராட்சித் தேர்தல்கள் முடிந்தபின்)அதுவே என் விருப்பமும் ஆகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

தற்போதைய நிலையில் சிறிதளவேனும் மாற்றம் வர வாய்ப்புண்டு.

சிறிலங்கா இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தததயே மதிக்காமல் வழக்குப் போட்டு கிழித்தெறிந்த போது ஊமையாக இருந்த இந்தியா என்ன மாற்றத்தைக் கொண்டு வரும்.
 

8 hours ago, goshan_che said:

வெளி மத்யஸ்தம் இன்றி இலங்கையுடன் பேசும் எந்த பேரமும் ஏமாற்றத்தில்தான் முடியும்.

 ஐநா தீர்மானங்களுக்கே ஆதரவளிக்காத இந்தியாவினன் மத்தியஸ்தம் தமிழர்களின் குறைந்த பட்ட கோரிக்கைக்கு கூட சார்பு நிரல எடுக்குமா?

8 hours ago, goshan_che said:

. தனியே தமிழர் இனப்பிரச்சனை மட்டும் அல்ல, இலங்கையில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் இந்தியா அதில் தன் மூக்கை நுழைப்பதை தவிர்க்க முடியாது. குறிப்பாக இலங்கையில் பலகாலம் முதலாம் அதிகாரி/ உதவி ஸ்தானிகர் பதவிகளை வகித்த ஜெய்சங்கர் போன்றோர் இருக்கும் போது

இதற்குப்பிறகும் இந்தியாவை எதற்கு நம்பணும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புலவர் said:

புலிகள் இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்திருந்த வேளையில் கூட சுpனாவுடனோ அல்லது அமெரிக்காவுடனோ தொடர்புகளைப் பேணவில்லை. அது தமிழ்நாட்டுக்கும் தமிழ்ஈழத்துக்குமான உறவில் தாக்கத்தைச் செலுத்தும் என்பதால் அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள். ஆனால் சிறிலங்கா அரசுடன் மட்டும் பேசித் துpர்வை எடுக்கலாம் என்ற மனோநிலையில் இன்னும் தமிழத்தலைவர்கள் மக்களைப் பேய்க்காட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கஜேக்கள் சீனாவுடன் உறவு வைத்தால் அது அவர்களின் தேர்தல் அரசியலைப் பாதிக்கும். தங்களுக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்பதால் அவர்களைப் பேச்சுக்ககு அழைக்கவே மறுக்கும் இந்தியா அவர்களின் கட்சியை அழிக்கவே பார்க்கும். இப்பவே மணியைப்பிரித்து விக்கியுடன் சேரத்ததன் மூலம் அந்தக்கட்சியை உடைக்கும் வேலையைத் தொடக்கி விட்டது. ஆனால் கஜேக்கள் சீனாவுடன் பேசுவது நல்லது என்றே நான் நினைக்கிறேன்.9ஊள்ளூராட்சித் தேர்தல்கள் முடிந்தபின்)அதுவே என் விருப்பமும் ஆகும்.

நன்றி.

தேர்தல் அரசியல் = 1 அல்லது 2 எம்பி சீட் என கருதுகிறேன்.

சரிதானே?

ஆனால் இவர்களின் இலட்சியம் இனத்தின் மீட்சியா?

இல்லை

தேர்தலில் வெல்வதா?

இவர்கள் சீனவை அணுகி, இனத்துக்கு நல்லது நடந்தால் - தேர்தல் போனால் போகுது உரோமம் எண்டு விட்டு விடலாம் அல்லவா?

அப்புறம் நல்லது நடந்தால் சனம் அவர்களை கொண்டாடும் அல்லவா? அப்போ வட கிழக்கின் அத்தனை சீட்டுகளையும்  வெல்லலாமே?

9 minutes ago, புலவர் said:

சிறிலங்கா இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தததயே மதிக்காமல் வழக்குப் போட்டு கிழித்தெறிந்த போது ஊமையாக இருந்த இந்தியா என்ன மாற்றத்தைக் கொண்டு வரும்.

இந்தியாவுக்கு அதில் தமிழர் சார்பாக தலையிட ஒரு தேவை இருக்கவில்லை.

ஆகவே சும்மா இருந்தது. இதைதான் கிள்ளுகீரை என்கிறேன். Taken for granted.

தமிழரும் சீனாவுடன் பேசுகிறார்கள் என்றால் - இந்தியா சிங்கள தரப்பை நடத்துவது போல் எம்மையும் நடத்துவதை தவிர வேறு வழியில்லையே?

12 minutes ago, புலவர் said:

ஐநா தீர்மானங்களுக்கே ஆதரவளிக்காத இந்தியாவினன் மத்தியஸ்தம் தமிழர்களின் குறைந்த பட்ட கோரிக்கைக்கு கூட சார்பு நிரல எடுக்குமா?

9 hours ago, goshan_che said:

இல்லாவிடில் தமிழர் தரப்பு சீனாவை அணுகும் என்ற நிலை உருவானால் நிச்சயம் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

13 minutes ago, புலவர் said:

இதற்குப்பிறகும் இந்தியாவை எதற்கு நம்பணும்.

நம்ப சொல்லி யார் சொன்னது?

எமக்கு உதவி செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துள் இந்தியாவை தள்ள வேண்டும்.

அதற்கு தமிழரின் ஒரு தரப்பு இந்தியாவோடு நின்றால் மறு தரப்பு சீனாவோடு நிற்க வேண்டும்.

ஏலவே மேற்கு எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு மோடில் இருக்கும். 2 எம்பி மக்கள் ஆதரவு தளம் உள்ள சைக்கிள்காரர்தான் சீனாவை அணுக தோதான ஆட்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சி வி சமூகமளிக்கவில்லையாம். கஜேந்திரன் பங்குபற்றியதாக ஒரு செய்தி கூறுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

சி வி சமூகமளிக்கவில்லையாம். கஜேந்திரன் பங்குபற்றியதாக ஒரு செய்தி கூறுகிறது.

https://tamilwin.com/article/sri-lankan-tamil-political-parties-dr-s-jaishankar-1674233148

மோடியின் அழைப்பை புறக்கணித்த சம்பந்தன்: தமிழ் கட்சிகளுக்கு ஜெய்சங்கரின் முக்கிய தகவல் (Video)

இதைப் பாருங்கப்பா சும்பந்தன் புறக்கணிப்பாம். தமிழரசுக்கட்சி பிளவுபட்ட நிலையில் சம்பந்தனின் வீல் செயராய் தள்ளுறதுக்கு கூட ஆள்கிடைக்கவில்லயாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நம்ப சொல்லி யார் சொன்னது?

எமக்கு உதவி செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துள் இந்தியாவை தள்ள வேண்டும்.

அதற்கு தமிழரின் ஒரு தரப்பு இந்தியாவோடு நின்றால் மறு தரப்பு சீனாவோடு நிற்க வேண்டும்.

ஏலவே மேற்கு எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு மோடில் இருக்கும். 2 எம்பி மக்கள் ஆதரவு தளம் உள்ள சைக்கிள்காரர்தான் சீனாவை அணுக தோதான ஆட்கள்.

எங்கட அரசியல்வாதிகள் எங்கட மக்களின் பிரதிநிதிகள் என்ற புரிதலுடன் கருத்துகளை வைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். திடீரென மக்கள் மீது பற்றுறுதியுடன் சிந்தித்து முடிவெடுக்க சொன்னால் அவர்கள் எங்குபோவார்கள். நாங்கள் இருக்கும்வரை அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள், அவர்கள் இருக்கும்வரை நாங்களும் அப்படித்தான் இருப்போம்.

இலங்கை அரசையும் அரசியலமைப்பையும் சாடிக்கொண்டே அவர்களின் அரசியலமைப்பில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு அந்த பாராளுமன்றத்துக்காக அடிபடுவோம்.

திடீரென வந்து சீனாவுடன் சேரு, வியட்னாமுடன் சேரு, வெனிசுலாவுடன் சேரு என்றால். அம்பாறையை கூட கூகிள் வரைபடத்தில் பார்த்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமித்த நாங்கள் என்ன செய்வோம். 

உங்களுக்காக வேணும் என்றால் openai chatgpt இல் தமிழரின் தீர்வு எப்போ என்று கேட்டுப்பார்க்கவா. AI என்ன ஆராய்ந்து சொல்லுது என்றாவது பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

எங்கட அரசியல்வாதிகள் எங்கட மக்களின் பிரதிநிதிகள் என்ற புரிதலுடன் கருத்துகளை வைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். திடீரென மக்கள் மீது பற்றுறுதியுடன் சிந்தித்து முடிவெடுக்க சொன்னால் அவர்கள் எங்குபோவார்கள். நாங்கள் இருக்கும்வரை அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள், அவர்கள் இருக்கும்வரை நாங்களும் அப்படித்தான் இருப்போம்.

இலங்கை அரசையும் அரசியலமைப்பையும் சாடிக்கொண்டே அவர்களின் அரசியலமைப்பில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு அந்த பாராளுமன்றத்துக்காக அடிபடுவோம்.

திடீரென வந்து சீனாவுடன் சேரு, வியட்னாமுடன் சேரு, வெனிசுலாவுடன் சேரு என்றால். அம்பாறையை கூட கூகிள் வரைபடத்தில் பார்த்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமித்த நாங்கள் என்ன செய்வோம். 

உங்களுக்காக வேணும் என்றால் openai chatgpt இல் தமிழரின் தீர்வு எப்போ என்று கேட்டுப்பார்க்கவா. AI என்ன ஆராய்ந்து சொல்லுது என்றாவது பார்ப்போம்.

உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளீர்கள்.

#tragicomedy 

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது: தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

 

 

தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வடக்கு-கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

 

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் வடக்கு -கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், இருக்கும் அதிகார பகிர்வு விடயங்களை இடைக்கால தீர்வாக அமுல்படுத்தாது போனால் கிடைப்பதும் இல்லாது போய்விடும் என்பதை தமிழ் அரசியல் தரப்புக்கு தெளிப்படுத்தினார்.

தெற்குடனான பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதை தமிழர் தரப்பே செய்ய வேண்டும் எனவும் அதில் இந்தியா தலையிட முடியாது எனவும் ஜெய்சங்கர் கூறினார்.

இதை தவிர அதிகார பகிர்வுக்கு எமது ஆதரவை முழுமையாக வழங்கத் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
 

https://athavannews.com/2023/1321074

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, முதல்வன் said:

இலங்கை அரசையும் அரசியலமைப்பையும் சாடிக்கொண்டே அவர்களின் அரசியலமைப்பில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு அந்த பாராளுமன்றத்துக்காக அடிபடுவோம்.

ஊர்புதினத்தில் சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக பேசிக்கொண்டே  உலக நடப்பில் ரஷ்ய ஆக்கிரமிப்பை ஆதரிப்பதும் இதே வகைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2023 at 17:50, கிருபன் said:

தெற்குடனான பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதை தமிழர் தரப்பே செய்ய வேண்டும் எனவும் அதில் இந்தியா தலையிட முடியாது எனவும் ஜெய்சங்கர் கூறினார்.

ம் ...ஹூம், இதை சொல்வதற்குத்தான் இவ்வளவு காலமும் இவர்களை அழைத்து அலைக்கழித்துப் பேசினார்களாக்கும், அதை அவர்களே பாத்துக்கொள்ளட்டும் என்று விட்டிருக்கலாமே, எதற்கு எதற்கெடுத்தாலும் மூக்கை நீட்டினவை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.