Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன்

ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாககின்றது என்றும் குறிப்பிட்டார்.

சுதந்திரதினம் என்ற போர்வையில் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை நாடும் கடனாளியாக இருக்கின்றது நிலையில் 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட விரும்புவதை அடியோடு நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் வருகின்ற மாசி மாதம் 04 ஆம் திகதி மட்டக்களப்பில் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் என்ற தொனிப்பொருளில் பெப்ரவரி நான்காம் திகதி இலங்கை தமிழரசு கட்சி, போராட்டத்தை நடத்தும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1322220

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன்

இங்கு இப்படி சொல்லுவார் தேர்தல் வருவதால் .தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்களுக்கான சர்வதேச பொறிகளிலிருந்து இலங்கை அரசைக் காப்பாற்றியதைத் தவிர சுமத்திரன் தமிழர்களுக்கு  எதனையும் செய்யவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

இங்கு இப்படி சொல்லுவார் தேர்தல் வருவதால் .தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்களுக்கான சர்வதேச பொறிகளிலிருந்து இலங்கை அரசைக் காப்பாற்றியதைத் தவிர சுமத்திரன் தமிழர்களுக்கு  எதனையும் செய்யவில்லை.

இரட்டை நாக்கு சுமந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய சுதந்திர தின நிகழ்வில் சம்வசும்  2 பேரும் கலந்து கொணடனரே . அது பொன்நாளா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, புலவர் said:

பழைய சுதந்திர தின நிகழ்வில் சம்வசும்  2 பேரும் கலந்து கொணடனரே . அது பொன்நாளா?

அது வேற வாய், இது நாற  வாய்.  

சுதந்திர தின நிகழ்வுகளில் சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்பு- மகிந்த அணி  புறக்கணிப்பு - NewMannar நியூ மன்னார் இணையம்

ஏழு  வருடத்துக்கு முதல், காலிமுகத்திடல் போய்... காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு... 
சுதந்திரதின அணிவகுப்பை ரசிக்கின்ற அழகோ அழகு.

43 வருடங்களின் பின்னர் தேசிய சுதந்திர தினத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத் துரோகிகள் தான் ! | EelamView

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் சம்பந்தன் கண்ணீர் விட்டதாக கதை ! –  Eelamaravar

THAMILKINGDOM: இவ்வாண்டும் சம்பந்தன் சுமந்திரனுடன் சுதந்திரதின நிகழ்வு (காணொளி,படங்கள்)

43 வருடங்களின் பின்னர் தேசிய சுதந்திர தினத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

https://tamil.news.lk/news/sri-lanka/item/6018-43

ஏழு  வருடத்துக்கு முதல், வந்த செய்தி இது. 👆
தமிழனின் மறதிக் குணம், அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக போய் விட்டது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே இவர்களை போன்றவர்கள் கடந்த 75 ஆண்டுகளாக சொல்லி சொல்லி தமிழினத்தை மேலும் மேலும் படுகுழியில் தள்ளியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.  இப்படியே தாம் பாடையில் போகும் மட்டும் உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டு போய் சேரவேண்டியதுதான்.  

வட்சப், பேஸ்புக்,  ரியூட்டரில் மட்டும் “தமிழேண்டா” என்று தமக்குள் வில்லுப் பாட்டு பாடி, ஆமா போட்டு மகிழ மட்டும் தான் தமிழ் அரசியல் கடந்த 75 வருடமாக உதவியுள்ளது. அந்த கற்பனை இன்பத்தை தவிர நிஜத்தில் எல்லாம் பூச்சியம் தான். 😭 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இங்கு இப்படி சொல்லுவார் தேர்தல் வருவதால் .தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்களுக்கான சர்வதேச பொறிகளிலிருந்து இலங்கை அரசைக் காப்பாற்றியதைத் தவிர சுமத்திரன் தமிழர்களுக்கு  எதனையும் செய்யவில்லை.

என்ன பெருமாள்  இப்படி சொல்லிப்போய்யிட்டீங்கள்.? இலங்கை அரசை காப்பாற்றியது கூட. தமிழருக்கு செய்தது ஆகிவிட்டது சுமந்திரன் தமிழருக்கு எதுவும் செய்யவில்லை செய்யபோவதுமில்லை செய்யவும் முடியாது   

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தமுறை இவர்களுக்கு சுதந்திரதின விழாவில் பங்கேற்பதற்கு அழைப்பு வரவில்லையோ? ஓ ..... தேர்தல் வருகிறபடியால் நிராகரிப்பு! மக்களுக்கு முன்னுரிமை! கொடிபிடித்து ஆட்டின கையை அனிஞாயமாய் தேர்தல் வந்து                                                      கட்டிப்போட்டுவிட்டதே. வருடா வருடம் வரும் சுதந்திர தினந்தானே, அடுத்தமுறை இதையும் சேர்த்து கொண்டாடிவிட்டால்ப் போச்சு. தேர்தல், வாக்கு முக்கியம் இப்போது!

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டியும் சால்வையுமாக போய் இருக்கேக்க இது தெரியவில்லை…

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2023 at 07:32, தமிழ் சிறி said:

ஏழு  வருடத்துக்கு முதல், வந்த செய்தி இது. 👆
தமிழனின் மறதிக் குணம், அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக போய் விட்டது. 

தலைவர் சிங்க கொடியை ஆட்டினாரே

அதைக் காணலையே.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

தலைவர் சிங்க கொடியை ஆட்டினாரே

அதைக் காணலையே.

பெரிய சிங்கத்தின் உடம்பு இயலுமெனில் கொடியோடு போய் விடுவார் அவர்கள் அழைக்காவிட்டாலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தலைவர் சிங்க கொடியை ஆட்டினாரே

அதைக் காணலையே.

சம்பந்தன்,  சிங்கக் கொடி ஆட்டினது…  யாழ்ப்பாணத்தில் 2012’ம் ஆண்டு நடந்த
மேதின கொண்டாட்டத்தின் போது நடந்த வேறு ஒரு சம்பவம் ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2023 at 20:41, தமிழ் சிறி said:

75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட விரும்புவதை அடியோடு நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

 

On 29/1/2023 at 20:41, தமிழ் சிறி said:

சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள்

 

On 29/1/2023 at 20:41, தமிழ் சிறி said:

சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை

அப்போ ....கடந்த வருடங்களில் கொண்டாடும்போது சுதந்திரம் இருந்தது தமிழருக்கு நாட்டில், இந்தவருடம் மட்டும் அது பறிபோய் கரிநாளாய் மாறி கடுப்பேத்தி விட்டதோ? என்னமா கதை அளக்கிறார் எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு, உள்ளூர ஜனாதிபதிக்கு பக்கத்தில நின்று படம் பிடிக்க முடியவில்லையே என்று கவலையாக இருக்கும். அதெல்லாம் இரகசியமாக கொண்டாடுவார்கள் கவலை வேண்டாம். மக்களை உசுப்பேத்தி அதிலும் சிங்களத்துக்குத்தான் நன்மை செய்வார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29/1/2023 at 13:32, தமிழ் சிறி said:

ழு  வருடத்துக்கு முதல், காலிமுகத்திடல் போய்... காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு... 
சுதந்திரதின அணிவகுப்பை ரசிக்கின்ற அழகோ அழகு.

43 வருடங்களின் பின்னர் தேசிய சுதந்திர தினத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

 

சிறித்தம்பி! உதுகளின்ரை அரசியலை கதைச்சால் நமக்குத்தான் ரெஞ்சன்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.