Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிராக பிக்குகளினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிர தேசியவாத பௌத்த மதகுருமார்களின் குழுவினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெளத்த தேரர்களின் பங்கேற்போடு இடம்பெற்ற இந்த பேரணியானது நாடாளுமன்ற வீதியை செல்லும்போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த போராட்டத்தின் போது 13வது அரசியலமைப்பு திருத்த பிரதியை பிக்குக்கள் தீ வைத்து எரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

 

https://athavannews.com/2023/1323512

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா தொடங்கீட்டாங்கள் பிறகென்ன இனி மகிந்த கோத்தா ரணில் காட்டில் அடைமழை தான்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, வாதவூரான் said:

இந்தா தொடங்கீட்டாங்கள் பிறகென்ன இனி மகிந்த கோத்தா ரணில் காட்டில் அடைமழை தான்

உருவாக்கிவிட்டு காத்திருக்கினம் நனைய.

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டை செல்லங்கள், எங்க கை விட்டு விடுவாங்களோ எண்டு கவலைப்பட்டேன். இந்தா வந்துடாங்கள்.

தெய்வங்கள் மாதிரி, வந்து, உலகத்துக்கு, சிங்களத்தினை புரிய வைக்கிறார்கள். 🐕

  • கருத்துக்கள உறவுகள்

13ஐ தீயிட்டு கொளுத்தி பௌத்த தேரர்கள் போராட்டம் நீதிமன்ற தடையுத்தரவை மீறி பாராளுமன்ற வீதிக்குள் பிரவேசிக்க முற்பட்டதால் அமைதியற்ற நிலை

By T. SARANYA

08 FEB, 2023 | 04:03 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தெரிவிக்கப்பட்டமைக்கு  எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை கொழும்பில் பௌத்த பிக்குகளால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பௌத்த தேரர்களால் 13ஆவது திருத்தத்தின் பிரதியொன்றும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது.

கடந்த ஜனவரி 26ஆம் திகதி இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது 'தனிப்பட்ட பிரேரணையூடாக 13ஐ நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும். ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. ' என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அத்தோடு கடந்த 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு அற்றிய விசேட உரையின் போதும் ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வு வழங்கப்படும் என்றும் , எனினும் நாடு பிளவுபட ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும்' குறிப்பிட்டிருந்தார்.

_MG_8695.jpg

இந்நிலையிலேயே பௌத்த பிக்குகளால் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டை பேரகும்பா பிரிவெனாவில் விசேட சங்க மாநாடொன்றும் இடம்பெற்றது. அங்கு ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் பாராளுமன்ற வீதியின் ஊடாக பொல்துவ சந்தியைச் சென்றடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு நுழைய முயற்சித்தனர். இதனை பொலிஸார் தடுக்க முற்பட்ட போது அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

அமைதியான போராட்டத்தில் ஈடுபடுவதாக பௌத்த பிக்குகள் அறிவித்திருந்த போதிலும் , குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு இடையூறு விளைக்கும் வகையில் அவர்களை அச்சுறுத்தல் அத்துமீறிச் செல்ல முற்பட்டமையின் காரணமாகவே அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதிகளில் நுழைவதற்கு கொழும்பு மேலதிக நீதவான் தடை விதித்திருந்ததன் பின்னணியிலேயே அவர் இவ்வாறு அத்துமீறிச் செல்ல முயற்சித்தனர். எவ்வாறிருப்பினும் இவர்களை பாராளுமன்ற சுற்று வட்டத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை.

_MG_8920.jpg

இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் பொல்துவ சந்தியில் வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக குறித்த பகுதியின் ஊடாக போக்குவரத்துக்கள் ஓரிரு மணித்தியாலங்கள் முற்றாக முடங்கின. இதனால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கினர். அத்தோடு இதன் போது மஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி தம்மரத்ன தேரரினால் 13ஆவது அரசியலமைப்பின் பிரதியொன்று தீயிட்டு கொளுத்தப்பட்டது. 'இனியொரு போதும் இதனை நடைமுறைப்படுத்த முடியாது.' என்று கோஷமெழுப்பியவாறு அவர் அந்த பிரதியை எரித்தார்.

_MG_8771.jpg

இதேவேளை, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பின் காமந்த துஷார என்ற நபர் ஆகியோர் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விடத்திலிருந்து செல்லுமாறு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்ட போதிலும் , அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமையினால் பின்னர் பொலிஸ் பொறுப்பிலெடுக்கப்பட்டனர்.

மேலும் 13ஆம் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜகிரிய - ஜயநேகராமயவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

_MG_9154.jpg

(படப்பிடிப்பு. ஜே.சுஜீவ குமார்)

https://www.virakesari.lk/article/147719

  • கருத்துக்கள உறவுகள்

அருமை... பட்டினி கிடந்தாலும், பிரிட்டிஷ்காரன் பிடிச்சுத்தந்த தமிழர் நாட்டினை விட மாட்டோம்.

பின்ன பண்ணிப்பாருங்கோவன்.  😁

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பட்டும் அறிவில்லா ஜனங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

 

நெருப்பு வைக்கிற ஆட்களில், இடதுபக்கம், முன்னால நிக்கிறவர், எங்கண்ட மட்டக்கிளப்பு தூசண பிக்கர்.

ஓடி வந்து நிக்கிறார் சிங்கன்.

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக போராட்டத்தில் கையாளும் தடியடி, தண்ணீர் பாய்ச்சலுக்கு என்ன நடந்தது? உலகம் பாக்கட்டும் பிக்குகளின் பயங்கர வாதமும், நாட்டின் பிச்சைத்தட்டு ஏந்தும் பாத்திரமும். உண்மையிலேயே பதின்மூன்றை நடைமுறைப்படுத்துபவர் அதை எதிர்க்கும், எரிக்கும் நாலை பிடிச்சு உள்ளுக்கை நாலு போட்டு விகாரைகளோடு வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் பயங்கரவாதத்தை என்று படிப்பித்தால் அல்லது காவியை களட்டிபோட்டு வந்து போராடுங்கள் என்று அழைத்தால் அடங்கும். மக்கள் இவர்களுக்கெதிராக வீதியில் இறங்கவேண்டும். நடக்கிற தள்ளு முள்ளில பிக்குகளின்ர காவியள் உரியப்போகுது, உள்ளுக்கை ஜொக்கா யொகா போட்டிருக்கிறாங்களோ தெரியலையே?    

  • கருத்துக்கள உறவுகள்

13 ம் திருத்தத்தை கொளுத்துவது என்பது நாட்டின் அரசியல் சட்டத்தையே தீயிட்டு கொளுத்துவதுக்கு சமன்  என்பது கூட தெரியாத ஜென்மங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அழிவில காசு பாக்கிற கூட்டம், இதுக்கு பின்னாலும் ஏதும் திட்டமிருக்கும். ஏன் கடிதத்தை வாங்கும்போது கிழித்தெறிந்து எச்சரித்திருந்திருக்கலாம். மவுனம் சம்மதத்துக்கு அடையாளம். பசிலின்ர அரசியல் மீள் பிரவேசத்துக்கு அடிக்கல்!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

வழமையாக போராட்டத்தில் கையாளும் தடியடி, தண்ணீர் பாய்ச்சலுக்கு என்ன நடந்தது? உலகம் பாக்கட்டும் பிக்குகளின் பயங்கர வாதமும், நாட்டின் பிச்சைத்தட்டு ஏந்தும் பாத்திரமும். உண்மையிலேயே பதின்மூன்றை நடைமுறைப்படுத்துபவர் அதை எதிர்க்கும், எரிக்கும் நாலை பிடிச்சு உள்ளுக்கை நாலு போட்டு விகாரைகளோடு வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் பயங்கரவாதத்தை என்று படிப்பித்தால் அல்லது காவியை களட்டிபோட்டு வந்து போராடுங்கள் என்று அழைத்தால் அடங்கும். மக்கள் இவர்களுக்கெதிராக வீதியில் இறங்கவேண்டும். நடக்கிற தள்ளு முள்ளில பிக்குகளின்ர காவியள் உரியப்போகுது, உள்ளுக்கை ஜொக்கா யொகா போட்டிருக்கிறாங்களோ தெரியலையே?    

May be a cartoon

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்.
உண்மையான அரசு எனில் பங்கெடுத்த பிக்குகளை உள்ளே தள்ளி இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

May be a cartoon

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்து புத்தமதம் எனும் அரக்கன்  விரட்டியடிக்கப்பட போவதை இந்தப்படம் கட்டியம் கூறுதா சிறியர்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.