Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். வந்தடைந்த இந்திய அரசின் உயர்மட்ட குழுவுக்கு உற்சாக வரவேற்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வந்தடைந்த இந்திய அரசின் உயர்மட்ட குழுவுக்கு உற்சாக வரவேற்பு!

 

இந்திய அரசின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) மதியம் பலாலி சர்வதேச விமானத்தை வந்தடைந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின் உயர்மட்ட குழுவினருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், யாழ். இந்திய துணைத் தூதுவர், சிவசேனை அமைப்பின் தலைவர் ஆகியோர் இந்திய உயர்மட்ட குழுவினை மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இணை அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://athavannews.com/2023/1323686

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய நீதிமன்றால்.. தேடப்படும் குற்றவாளியாக உள்ள டக்கிளசிடம் போய் மாலை போட்டுக்கும் ஹிந்தியனை என்னென்பது..?! சொந்த நாட்டு நீதிமன்ற கட்டளையையே மதிக்காத ஹிந்தியன்.. ஈழத்தமிழருக்கு என்னத்தை செய்து கழிப்பான்..???!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஹிந்திய நீதிமன்றால்.. தேடப்படும் குற்றவாளியாக உள்ள டக்கிளசிடம் போய் மாலை போட்டுக்கும் ஹிந்தியனை என்னென்பது..?! சொந்த நாட்டு நீதிமன்ற கட்டளையையே மதிக்காத ஹிந்தியன்.. ஈழத்தமிழருக்கு என்னத்தை செய்து கழிப்பான்..???!

புரிகிறதல்லவா ? 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இந்திய அரசின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர்.

சிவனுடைய கிங்டம் இந்தியாவில் இருந்து  சிவபூமியான யாழ்ப்பாணம் வந்தடைந்த அரச குழுவை சிவசேனை அமைப்பின் தலைவர் வரவேற்றது பொருத்தம்😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், யாழ். இந்திய துணைத் தூதுவர், சிவசேனை அமைப்பின் தலைவர் ஆகியோர் இந்திய உயர்மட்ட குழுவினை மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

மாலை போட்டு வரவேற்கும் கூடத்தைப்பாத்தால் மிகுதியை புரிந்துகொள்ளலாம் குணம் குணத்தோடுதான் சேரும் தீமையின் காலமிது. இதில உற்சாக வரவேற்பு என்று தலையங்கம் வேறு! சீனனை கடுப்பேத்துகிறோமென நினைக்கிறார்களோ தலையங்கம் போட்டு?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன்

 

6 hours ago, கிருபன் said:

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஏதாவது ஆக்கபூர்வமா கதையுங்கோ.. 👍

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத துறையில் அமைச்சர்கள். அவர்களுக்கே அவர்களின் துறைகளைப்பற்றி தெரியாது. ஒருவர் கதைப்பது மற்றவருக்கு சிதம்பர சக்கரத்தில் நடராசர் ஊழிக்கூத்தாடின மாதிரிதான் விளங்கும். இதில ஆக்கப்பூர்வமாக என்ன இருக்கப்போகிறது? ஏதோ கதைப்பினம் வேறோர் அறிக்கை விடுவினம் மக்கள் கேட்கவா போகிறார்கள்? மக்கள் வரிப்பணத்தில் இவர்கள் சுற்றுலா, உல்லாசம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

மாலை போட்டு வரவேற்கும் கூடத்தைப்பாத்தால் மிகுதியை புரிந்துகொள்ளலாம் குணம் குணத்தோடுதான் சேரும் தீமையின் காலமிது. இதில உற்சாக வரவேற்பு என்று தலையங்கம் வேறு! சீனனை கடுப்பேத்துகிறோமென நினைக்கிறார்களோ தலையங்கம் போட்டு?

நாம் நினைச்சால் ஒரு மணித்தியாலத்தில் நிற்போம்..இதுதான்  சீனனுக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

அத்தியடிக் குத்தியான் வெறும் தமிழ்நாட்டு ப ஜ க தலைவர்களை சந்தித்தது ஒன்றும் பெரிசில்லை.  இந்தியாவின் வெளிவிவகார மந்திரியே சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அவனுக்கெதிரான வழக்காவது மண்ணாவது! தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்றாலே இந்தியாவின் நண்பர்கள் என்றுதானே அர்த்தம்?!!!!!Image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் சுமைகளை குறைப்பதற்கு இந்தியா உதவிசெய்யும் - இந்திய அமைச்சர்

By T. Saranya

10 Feb, 2023 | 09:03 AM
image

(எம்.நியூட்டன்)

இலங்கை மக்களின் பிரச்சினைகள், சுமைகளை குறைப்பதில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.

யாழ்  பொது நூலகத்தில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும்  உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

20230209_161644.jpg

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தொடர்ந்தும் பல துன்பங்களை  சந்தித்து வருகின்றது. அவ்வாறான நிலையில், மக்களுக்கு  உதவி செய்வதில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆர்வமாக உள்ளார். அதன் வெளிப்பாடுதான் இந்த உதவிகளை செய்கின்றோம் இது மட்டுமன்றி பல்வேறு வகையான அபிவிருத்திகள் இடம்பெற்றுவருகிறது.

இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும்  நிகழ்வில் கலந்துகொள்வதற்காக  யாழ்ப்பாணத்துக்கு நேற்று (09) வருகை தந்துள்ள நிலையில் இந்த உதவி திட்டம் வழங்கப்பட்டது

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து மதிய விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

20230209_163222.jpg

அதன் பின்னர் யாழ்  பொது நூலகத்தில் இடம்பெறுகின்ற உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளார். 

அதன் பின்னர் காங்கேசன் துறைக்கு செல்ல உள்ள அமைச்சர் காங்கேசன் துறைக்கும்  காரைக்காலுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்,

நாளைய தினம் இந்திய அரசின் நிதி பங்களிப்பில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள  மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.

20230209_162350.jpg

  •  

 

 

 

https://www.virakesari.lk/article/147844

 

  • கருத்துக்கள உறவுகள்

20230209_163222.jpg

உலர் உணவுப் பொருட்களையா பையில் போட்டு கொடுக்கிறார்கள்.
பாதிக்கப் பட்ட மக்களை  படம் எடுத்து... விளம்பரம் தேடுவது, 
அவர்களது மனதை எவ்வளவு பாதிக்கும் என்று தெரியுமா?

இந்தியா... 10 வருடத்துக்கு முன் தெரிவித்த, 55,000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் 
என்று  சொன்ன வாக்குறுதியில்... எவ்வளவு வீடுகள் இதுவரை கட்டி முடிக்கப் பட்டுள்ளது?
அல்லது அதுகும் வாயால்... வடை சுடும் வேலையா?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2023 at 06:46, nedukkalapoovan said:

ஹிந்திய நீதிமன்றால்.. தேடப்படும் குற்றவாளியாக உள்ள டக்கிளசிடம் போய் மாலை போட்டுக்கும் ஹிந்தியனை என்னென்பது..?! சொந்த நாட்டு நீதிமன்ற கட்டளையையே மதிக்காத ஹிந்தியன்.. ஈழத்தமிழருக்கு என்னத்தை செய்து கழிப்பான்..???!

சிறிலங்கா இராணுவத்தையும்,நாட்டையும் அழிவுபாதைக்கு இட்டு சென்ற நம்ம அம்மான் களயும்,கப்பல் கப்பலாக ஆயுதங்களை கொள்வனவு செய்து அதை நாட்டுக்குள் கடத்தி பெரும் பெரும் தாக்குதல் செய்ய உதவிய கே.பி எல்லாம் சிறிலங்காவில் பாதுகாப்பாக இருக்க சிறிலங்கா அரசு அனுமதி கொடுத்த மாதிரி,...ஒரு கொலை செய்த(நிருபிக்க படவில்லை) குற்றத்திலும் பார்க்க ,,,,, டக்கிளஸை அரவணைத்தால் தமிழனையும் சிங்களவனையும் முட்டாளாக்க முடுயும் என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்தித்திருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, alvayan said:

நாம் நினைச்சால் ஒரு மணித்தியாலத்தில் நிற்போம்..இதுதான்  சீனனுக்கு....

அமெரிக்கா காரனே ஆகாயத்தைப் பார்த்துக்கிட்டு கிடக்கான். சீனாக்காரனுக்கு கை போதும் உதுகளைச் சமாளிக்க. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.