Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்யாவின் கோர தாக்குதல் – உக்ரைனின் முக்கிய தளபதி மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் கோர தாக்குதல் – உக்ரைனின் முக்கிய தளபதி மரணம்

7-11.jpg

உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஜெலென்ஸ்கி நொறுங்கிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது இளமை காலம் மொத்தமும் ரஷ்யாவுக்கும் அதன் பினாமிகளுக்கும் எதிராக சண்டையிட்டவர் இந்த டா வின்சி என புகழ்ந்துள்ளார் ஜெலென்ஸ்கி.

27 வயதான Dmytro Kotsiubailo இந்த வாரம் கிழக்கு நகரமான பக்முத்தில் கொல்லப்பட்டார்.

பக்முத் நகரமானது ஒருபக்கம் ரஷ்ய துருப்புகளாலும் மறுபக்கம் ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையாலும் உக்கிரமாக தாக்கப்பட்டு வருகிறது.

அந்த பக்முத் நகரை காக்கும் பொருட்டு, டா வின்சியின் ஓநாய்கள் என்ற பெயரில் செயல்பட்டு வந்த பிரிவுடன் இவர் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கடந்த ஆண்டில் உக்ரைனின் ஹீரோ என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, நமது வீரர்களை இழப்பது என்பது துயரமான ஒன்று. அவர்களின் தியாகத்தை நாம் எப்பொழுதும் மறக்கமாட்டோம். எப்போதும் நன்றியுள்ளவர்களாகவும் இருப்போம் என்றார்.

 

https://akkinikkunchu.com/?p=240694

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்துக்குள் 1100 ரஷ்ய படையினர் பலி: உக்ரேனிய ஜனாதிபதி

Published By: SETHU

13 MAR, 2023 | 02:30 PM
image

உக்ரேனின் பக்முத் நகரை கைப்பற்றவதற்கான சமரில் 1,100 இற்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளனனர் என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி கூறியுள்ளார்.

கைத்தொழில் நகரான பக்முத்தை கைப்பற்றுவதற்கு ரஷ்ய படையினர் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதியிலிருந்து முயன்று வருகின்றனர். 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமாகிய பின்னர் மிக நீண்டகாலமாக நடைபெறும் சமர் இதுவாகும்.

தற்போது பக்முத்தில் உக்கிரமான மோதல் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

பக்முத்தின் கிழக்குப் பகுதியை ரஷ்ய படையினர் மற்றும் ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழு ஆகியன கைப்பற்றியுள்ளன. அந்நகரின் மேற்குப் பகுதி உக்ரேனிய படையினர் வசம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 6 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்துக்குள் 1,100 இறகும் அதிகமான எதிரிப் படையினரை நாம் கொன்றுள்ளோம் என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி கூறியுள்ளார். அத்துடன், மேலு; சுமார் 1500 ரஷ்ய படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை? உக்ரேனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 220 உக்ரேனிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது,

https://www.virakesari.lk/article/150415

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான செய்தி மறைக்கப்படுகிறது (அதற்காக நான் இவரின் இழப்பின் உக்கிரைன் மீதான தாக்கத்தை மலினப்படுத்தவில்லை).


ருசியா உக்கிரன் மேற்கில் இருந்து செயற்றப்படும் நேட்டோ உயர் அதிகாரிகளின் 80 மீட்டருக்கும் ஆழமான பதுங்கு குளியைப் தாக்கி அளித்து உள்ளது.

இந்த பதுங்கு  குழி அமைப்பு 300 பேர் அளவு கொண்டு இருந்ததகவ்ம், 40 நேட்டோ உயர் அதிகாரிகள் மரணித்து உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

இதற்கு  பதிலடியாக, நேட்டோ / அமெரிக்க st பீட்டர்ஸ் பேர்க் க்கு 200 கிம் தொலைவில் அணு ஆயுத விமானங்களை அனுப்பி ருசியாவை அச்சுறுத்தி உள்ளது.

முன்பு சொல்லி இருந்தேன், கண்ணனுக்கு தெரியாத அணுஆயுத பிரயோக சந்தர்ப்பங்கள், வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுடும்.

😀

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

உண்மையான செய்தி மறைக்கப்படுகிறது (அதற்காக நான் இவரின் இழப்பின் உக்கிரைன் மீதான தாக்கத்தை மலினப்படுத்தவில்லை).


ருசியா உக்கிரன் மேற்கில் இருந்து செயற்றப்படும் நேட்டோ உயர் அதிகாரிகளின் 80 மீட்டருக்கும் ஆழமான பதுங்கு குளியைப் தாக்கி அளித்து உள்ளது.

இந்த பதுங்கு  குழி அமைப்பு 300 பேர் அளவு கொண்டு இருந்ததகவ்ம், 40 நேட்டோ உயர் அதிகாரிகள் மரணித்து உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

இதற்கு  பதிலடியாக, நேட்டோ / அமெரிக்க st பீட்டர்ஸ் பேர்க் க்கு 200 கிம் தொலைவில் அணு ஆயுத விமானங்களை அனுப்பி ருசியாவை அச்சுறுத்தி உள்ளது.

முன்பு சொல்லி இருந்தேன், கண்ணனுக்கு தெரியாத அணுஆயுத பிரயோக சந்தர்ப்பங்கள், வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்று.

ருசியா இன்னும் 6 மாதகாலம் போரை இழுத்தால் 

வழமை போல அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு கொடுக்குமா தெரியவில்லை?

எல்லோரும் கைவிட்டால் உக்ரேனால் தாக்குப் பிடிக்க முடியாதென்றே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

உண்மையான செய்தி மறைக்கப்படுகிறது (அதற்காக நான் இவரின் இழப்பின் உக்கிரைன் மீதான தாக்கத்தை மலினப்படுத்தவில்லை).


ருசியா உக்கிரன் மேற்கில் இருந்து செயற்றப்படும் நேட்டோ உயர் அதிகாரிகளின் 80 மீட்டருக்கும் ஆழமான பதுங்கு குளியைப் தாக்கி அளித்து உள்ளது.

இந்த பதுங்கு  குழி அமைப்பு 300 பேர் அளவு கொண்டு இருந்ததகவ்ம், 40 நேட்டோ உயர் அதிகாரிகள் மரணித்து உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

இதற்கு  பதிலடியாக, நேட்டோ / அமெரிக்க st பீட்டர்ஸ் பேர்க் க்கு 200 கிம் தொலைவில் அணு ஆயுத விமானங்களை அனுப்பி ருசியாவை அச்சுறுத்தி உள்ளது.

முன்பு சொல்லி இருந்தேன், கண்ணனுக்கு தெரியாத அணுஆயுத பிரயோக சந்தர்ப்பங்கள், வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்று.

dana on Twitter: "‼️‼️⚡️A US nuclear bomber fired training shots at St.  Petersburg, Russia. The strategic bomber B-52H Stratofortress of the US Air  Force, capable of carrying nuclear weapons, entered the position

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ருசியா இன்னும் 6 மாதகாலம் போரை இழுத்தால் 

வழமை போல அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு கொடுக்குமா தெரியவில்லை?

எல்லோரும் கைவிட்டால் உக்ரேனால் தாக்குப் பிடிக்க முடியாதென்றே எண்ணுகிறேன்.

சீனா தொலைநோக்கில் காய்களை நகர்த்திவருகிறது 
பைடனுக்கு டிமென்ஷியா வர வர கூடுகிறது என்றே எண்ணுகிறேன் 
இந்தியா ரூபாயில் டிரேட் செய்ய போகிறது 13 நாடுகள் இஸ்திரேல் உட்பட உடன்பட்டு இருக்கிறார்கள்.
டாலருக்கு நல்ல அடி வீழ இருக்கிறது 
எமக்கும் இன்னுமொரு பொருளாதார நெருக்கடி வருவத்துக்கு அதிக சாத்தியம் உண்டு 

சீனாவை எங்களால் இனி எதிர்க்க முடியாது இந்த அடிப்படை புரியாத லூசுகள் அரசியலில் இருப்பதால் 
பொருளாதார அழிவை தடுக்க முடியாது. எங்களின் முதலாவது ட்ரேட் பங்காளி சீனாதான் 
எங்களிடம் இருந்து 50% வரையான இறக்குமதியை சீனா செய்கிறது ... இதை இன்னொரு நாட்டால் ஈடு செய்ய முடியாது. சீனாவில் இருந்துவரும் எல்லா காண்டைனர்களும் மீண்டும் நிரம்பியே திரும்புகின்றன .. இவ்வளவு தொகை பண்டங்களை வேறு எங்கும் அனுப்ப முடியாது 

3 hours ago, ஈழப்பிரியன் said:

ருசியா இன்னும் 6 மாதகாலம் போரை இழுத்தால் 

வழமை போல அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு கொடுக்குமா தெரியவில்லை?

எல்லோரும் கைவிட்டால் உக்ரேனால் தாக்குப் பிடிக்க முடியாதென்றே எண்ணுகிறேன்.

இப்போதே தல்லாம் தல்லாம் என்று சொன்ன தாங்கிகளை யாரும் அனுப்புவதாக இல்லை 
ஜெர்மனி டெக்னாலஜி மேம்படுத்தும் வேலை நடந்துகொண்டு இருப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கிறது. 
சீன இரானிய ஆயுதங்கள் ரஸ்யாவுக்கு போகின்றன சீனாவுக்கு போதிய எண்ணை மலிவு விலையில் கிடைக்கிறது. 

இங்கு இப்போதும் கொலிவூட் பாணியில் செய்திகள் வாசிப்பு 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

இந்த பதுங்கு  குழி அமைப்பு 300 பேர் அளவு கொண்டு இருந்ததகவ்ம், 40 நேட்டோ உயர் அதிகாரிகள் மரணித்து உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆதாரம்?

 

6 hours ago, Kadancha said:

இதற்கு  பதிலடியாக, நேட்டோ / அமெரிக்க st பீட்டர்ஸ் பேர்க் க்கு 200 கிம் தொலைவில் அணு ஆயுத விமானங்களை அனுப்பி ருசியாவை அச்சுறுத்தி உள்ளது.

இது உண்மை. இது நடந்த போது அதன் flight tracking படத்தை திண்ணையில் போட்டேன் (கீழே மருதரும் போட்டுள்ளார்).

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

இதற்கு  பதிலடியாக, நேட்டோ / அமெரிக்க st பீட்டர்ஸ் பேர்க் க்கு 200 கிம் தொலைவில் அணு ஆயுத விமானங்களை அனுப்பி ருசியாவை அச்சுறுத்தி உள்ளது.

 

இந்த "அச்சுறுத்தல்" பறப்புகளை முதலில் வழமையாக்கியதே ரஷ்யா தான். ரஷ்யாவின் strategic bomber "கரடி - Bear" என்று அழைக்கப் படும் Tu-95 விமானங்கள், அலாஸ்காவின் எல்லை வரை வந்து போவதுண்டு. அமெரிக்க - கனடா கூட்டு வான்பாதுகாப்பு அமைப்பான NORAD இதை அச்சுறுத்தல் என்று குறிப்பிடுவதில்லை, ஏனெனில் இவை சர்வதேச வான்பரப்புகளை விட்டு விலகுவதில்லை.

 பல சமயங்களில் நோர்வேயின் வான் பரப்பிற்கு மிக அண்மையாக "கரடி" வந்ததால், நோர்வே விமானப் படை F-35 சண்டை விமானங்களை அனுப்ப வேண்டி வந்திருக்கிறது, ஆனால் எந்த எச்சரிக்கையும் இல்லாமல், எல்லையைக் குறித்துக் காட்டி "கரடியை"😂 சர்வதேசப் பரப்பிற்கு அனுப்பி வைத்தல் மட்டுமே நடந்தது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஏராளன் said:

ஒரு வாரத்துக்குள் 1100 ரஷ்ய படையினர் பலி: உக்ரேனிய ஜனாதிபதி

ரஷ்யாவின் அன்றைய இன்றைய வரலாறுகளை கவனித்து பார்த்தால் தன் படை பலிகளை கண்டு அஞ்சும்/பின் வாங்கும் நாடல்ல அது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யாவின் அன்றைய இன்றைய வரலாறுகளை கவனித்து பார்த்தால் தன் படை பலிகளை கண்டு அஞ்சும்/பின் வாங்கும் நாடல்ல அது.

உந்த உக்ரைன் புலிக்கேசியிட மொத்தக் கணக்குப் படி பார்த்தால்.. இப்ப ரஷ்சியாவிடம் இராணுவமுமில்லை. ஆயுதமும் இல்லை.. விமானமும் இல்லை. டாங்கியும் இல்லை. ஆனால்.. புலிக்கேசி இன்னும் அமெரிக்கனிடமும் அமெரிக்க அடிவருடிகளிடமுன் ஆயுதம் கேட்டு கெஞ்சுவது ஏனோ..??! 

உக்ரைன் புலிக்கேசிட கணக்கை.. ஏவிவிட்ட எஜமானர்களே நம்புவதில்லை. நீங்க என்னடான்னா..?!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

உந்த உக்ரைன் புலிக்கேசியிட மொத்தக் கணக்குப் படி பார்த்தால்.. இப்ப ரஷ்சியாவிடம் இராணுவமுமில்லை. ஆயுதமும் இல்லை.. விமானமும் இல்லை. டாங்கியும் இல்லை. ஆனால்.. புலிக்கேசி இன்னும் அமெரிக்கனிடமும் அமெரிக்க அடிவருடிகளிடமுன் ஆயுதம் கேட்டு கெஞ்சுவது ஏனோ..??! 

உக்ரைன் புலிக்கேசிட கணக்கை.. ஏவிவிட்ட எஜமானர்களே நம்புவதில்லை. நீங்க என்னடான்னா..?!

பலரது கோபத்துக்கு ஆளாகப் போகிறீர்கள். 

😀

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

ரஸ்யாவின் கோர தாக்குதல் – உக்ரைனின் முக்கிய தளபதி மரணம்

உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஜெலென்ஸ்கி நொறுங்கிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஸ்யாவின் அகோர தாக்குதலில்.... அகால மரணமடைந்த, டாவின்சியின்...  
பிரிவால் துயருற்று இருக்கும்,  புலிகேசி சாரி... ஜெலென்ஸ்கிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of one or more people and people standing

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2023 at 17:27, goshan_che said:

ஆதாரம்?

நம்புவது, நம்பாததும் உங்களை பொறுத்தது.

இந்த ஊடகம், இந்தவச்செய்தி வந்ததும் இணைய முடக்குதலுக்கு உள்ளாகி, மீண்டும் இயங்க தொடக்கி இருக்கிறது. ரஷ்யா சார்பு ஊடகம் தான். 

அதில் சொல்லப்படுவது, ருசியா படைத்தரப்பின் தகவல்.

https://www.theinteldrop.org/2023/03/09/2nd-kinzhal-attack-hits-natos-western-command-center-400-feet-underground-40-killed/

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

நம்புவது, நம்பாததும் உங்களை பொறுத்தது.

இந்த ஊடகம், இந்தவச்செய்தி வந்ததும் இணைய முடக்குதலுக்கு உள்ளாகி, மீண்டும் இயங்க தொடக்கி இருக்கிறது. ரஷ்யா சார்பு ஊடகம் தான். 

அதில் சொல்லப்படுவது, ருசியா படைத்தரப்பின் தகவல்.

https://www.theinteldrop.org/2023/03/09/2nd-kinzhal-attack-hits-natos-western-command-center-400-feet-underground-40-killed/

நன்றி. இணைப்புக்கும். இணையதளத்தின் சார்புநிலை பற்றிய விளக்கத்துக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.