Jump to content

கத்தியை தீட்டாதீர்கள் புத்தியை தீட்டுங்கள்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

அன்று கையில்
புத்தகமும் கையுமாய் 
கல்வியும் கண்ணுமாய் 
அன்னை தந்தை
ஆசிரியன் சொற்படிமாய்
தமிழ்த் தம்பிமார் இருந்தார்கள் 

இன்று வாயில்
புகையும் தண்ணியுமாய் 
கையில் கத்தியுமாய் வாளுமாய் 
கொன்று திரிகிறார்கள் 

அன்று ஒரு காலம் மேய்ப்பவன் 
ஒருவன் இருந்தான் 
ஏன் என்று கேட்க

அங்கு ஒரு ஒழுங்கு இருந்தது 
அமைதி பேண தமிழருக்காய் 
ஒரு படை இருந்தது 
இன்று என்ன இருக்கின்றது 

இன்று எவரும் இல்லாமல் 
ஏன் என்று கேட்க
தானாய் தம்மையே 
அழிக்கிறார்கள் தமிழர்

தெரிந்து கொள்ளுங்கள்  
எம்மை ஆக்கிரமித்து 
இருப்பவனுக்கும் 
நாம் அழிவது தானே விருப்பம் 

இனி என்ன தான் 
மிஞ்சி இருக்கப் போகிறது 
கஞ்சிக்கு கடைசியில் 
என்ன செய்வீர் 
கல்வியைத் தொலைத்து விட்டு

புலம் பெயர்ந்து இருக்கும் 
உங்கள் அண்ணனும் அக்காவும் 
மாமனும் மச்சானும் 
இன்னும் எத்தனை காலம் தான் 
காசு தருவான்
அவனுக்கும் நரை 
விழுந்து விட்டது தலையில் 

இனி இங்கு இருக்கும் எம் 
இளசுகள் உங்களை நினைக்குமோ 
நாம் அறியோம் 
எங்களையே இவர்கள் பழசுகள் 
என்றழைக்கும் காலம் இப்போ 

அவர்கள் பாதை புதியது 
தெரிவுகளும் புதியது 
எங்கள் அடையாளமும் 
காலமும் கலாச்சாரமும் 
இங்கு மாறித்தான் 
சுழர்கிறது 

நினைவில் வையுங்கள் 
கத்தியும் வாளும் கடைசியில் 
உங்களையும் கொல்லும் 
காலம் வரும் 

தமிழராக தலை நிமிரும் 
பாதையை தேடுங்கள் 
கத்தியை தீட்டாதீர்கள் 
புத்தியை தீட்டுங்கள்.

பா.உதயன்✍️
 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, uthayakumar said:

அன்று கையில்
புத்தகமும் கையுமாய் 
கல்வியும் கண்ணுமாய் 
அன்னை தந்தை
ஆசிரியன் சொற்படிமாய்
தமிழ்த் தம்பிமார் இருந்தார்கள் 

இன்று வாயில்
புகையும் தண்ணியுமாய் 
கையில் கத்தியுமாய் வாளுமாய் 
கொன்று திரிகிறார்கள் 

அன்று ஒரு காலம் மேய்ப்பவன் 
ஒருவன் இருந்தான் 
ஏன் என்று கேட்க

அங்கு ஒரு ஒழுங்கு இருந்தது 
அமைதி பேண தமிழருக்காய் 
ஒரு படை இருந்தது 
இன்று என்ன இருக்கின்றது 

இன்று எவரும் இல்லாமல் 
ஏன் என்று கேட்க
தானாய் தம்மையே 
அழிக்கிறார்கள் தமிழர்

தெரிந்து கொள்ளுங்கள்  
எம்மை ஆக்கிரமித்து 
இருப்பவனுக்கும் 
நாம் அழிவது தானே விருப்பம் 

இனி என்ன தான் 
மிஞ்சி இருக்கப் போகிறது 
கஞ்சிக்கு கடைசியில் 
என்ன செய்வீர் 
கல்வியைத் தொலைத்து விட்டு

புலம் பெயர்ந்து இருக்கும் 
உங்கள் அண்ணனும் அக்காவும் 
மாமனும் மச்சானும் 
இன்னும் எத்தனை காலம் தான் 
காசு தருவான்
அவனுக்கும் நரை 
விழுந்து விட்டது தலையில் 

இனி இங்கு இருக்கும் எம் 
இளசுகள் உங்களை நினைக்குமோ 
நாம் அறியோம் 
எங்களையே இவர்கள் பழசுகள் 
என்றழைக்கும் காலம் இப்போ 

அவர்கள் பாதை புதியது 
தெரிவுகளும் புதியது 
எங்கள் அடையாளமும் 
காலமும் கலாச்சாரமும் 
இங்கு மாறித்தான் 
சுழர்கிறது 

நினைவில் வையுங்கள் 
கத்தியும் வாளும் கடைசியில் 
உங்களையும் கொல்லும் 
காலம் வரும் 

தமிழராக தலை நிமிரும் 
பாதையை தேடுங்கள் 
கத்தியை தீட்டாதீர்கள் 
புத்தியை தீட்டுங்கள்.

பா.உதயன்✍️
 

ஒவ்வொரு வரியும், அருமையான கேள்விகளை  கேட்ட... 
அருமையான கவிதைக்கு நன்றி உதயன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருத்துக்கவிதை :thumbs_up:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் சிந்திக்க தூண்டும் வரிகள் . பாராட்டுக்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரிக்கு வரி சாட்டையடி .......சொல்லி வேல இல்ல.....அருமையான கவிதை.......!  👍

நன்றி உதயன்......! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கங்களைச் சுமந்து வருகின்றது உங்கள் கவிதை...!

எங்கள் அனைவரது அங்கலாய்ப்பும் இப்போது இது தான்..!

கவிதைக்கு நன்றிகள்....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2023 at 08:54, தமிழ் சிறி said:

ஒவ்வொரு வரியும், அருமையான கேள்விகளை  கேட்ட... 
அருமையான கவிதைக்கு நன்றி உதயன்.

 

On 18/3/2023 at 11:49, குமாரசாமி said:

நல்லதொரு கருத்துக்கவிதை :thumbs_up:

 

On 18/3/2023 at 15:57, நிலாமதி said:

எல்லோரையும் சிந்திக்க தூண்டும் வரிகள் . பாராட்டுக்கள். 

 

On 18/3/2023 at 21:30, suvy said:

வரிக்கு வரி சாட்டையடி .......சொல்லி வேல இல்ல.....அருமையான கவிதை.......!  👍

நன்றி உதயன்......! 

 

On 19/3/2023 at 00:27, புங்கையூரன் said:

ஏக்கங்களைச் சுமந்து வருகின்றது உங்கள் கவிதை...!

எங்கள் அனைவரது அங்கலாய்ப்பும் இப்போது இது தான்..!

கவிதைக்கு நன்றிகள்....!

கருத்திட்ட யாழ் உறவுகளுக்கு நன்றிகள் 🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2023 at 07:35, uthayakumar said:

புலம் பெயர்ந்து இருக்கும் 
உங்கள் அண்ணனும் அக்காவும் 
மாமனும் மச்சானும் 
இன்னும் எத்தனை காலம் தான் 
காசு தருவான்
அவனுக்கும் நரை 
விழுந்து விட்டது தலையில் 

இங்கு வரும்போதே நரை விழுந்து 30 களில்   முழு மொட்டை இதுக்குள்ளை 😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2023 at 15:35, uthayakumar said:

தமிழராக தலை நிமிரும் 
பாதையை தேடுங்கள்
 
கத்தியை தீட்டாதீர்கள் 
புத்தியை தீட்டுங்கள்.

அருமையான வசனங்கள், நாங்க ரெடி நீங்க ரெடியா????

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.