Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். நெடுந்தீவில் பயங்கரம்! : வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 5 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

 

 

இந்தக் கத்தியால... தேங்காய் கூட உரிக்க முடியாது. இதால ஆக்களை வெட்டிக் கொன்றானாம்..?! நாய்க்கு விழுந்துள்ள வெட்டுக்காயப்படி பார்த்தால் கூட கூரிய ஆயுதத்தால் வெட்டிய அடையாளம் போன்றே தெரிகிறது. குறிப்பாக துப்பாக்கி முனைக் கத்தியால் குத்தியது போன்ற காயம் நாயில் காணப்படுகிறது.

மேலும்.. இந்த கத்திக்கதை நேற்று முந்தினமே வெளியாகிட்டுது. ஆனால் படம் இன்று வந்திருக்குது. கிணற்றுக்குள் இருந்து மீட்ட சாரத்தில் இரத்தக்கறை அப்படியே கரைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டிருக்குது.

என்ன கலிகாலம் என்றால்.. ஒரு இனத்தையே மொத்தமாகப் படுகொலை செய்து அந்தக் கொலைகளில் இருந்தெல்லாம் தம்மை விடுவித்துக் கொண்ட சிங்களப் படைகளுக்கும் கூலிகளுக்கும்.. வக்காளத்து வாங்குவோரைப் பார்த்தால்.... இவர்களின் கருத்துப் பஞ்சத்துக்கு என்ன விலையும் கொடுக்கக் கூடியவர்கள் என்று தெரிகிறது. சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். 

5 hours ago, Sasi_varnam said:

சகோ நீங்கள் சொல்லும் கருத்துக்கு எதிர் கருத்து எழுதுகிறேன் என்று பார்க்காதீர்கள். என்னுடைய அனுபவத்தை பதிவிடுகிறேன். 
சில மாதங்களுக்கு முன்னேயான என்னுடைய நெடுந்தீவு பயண அனுபவத்தில் நீங்கள் கூறியதைப்போல பல விடயங்கள் இருக்கவில்லை.

யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்தில் இருந்து குறிகாட்டுவான் ஜெட்டி போகும் வரையிலும் பஸ் வண்டியை மறித்து சோதனை செய்யவோ, நெடுஞ்சாலை வழியே முகாம்லோ  இருக்கவில்லை. ஆனால் ஓரிரண்டு மினி முகாம்கள் (பெரிய வீடுகளை கொண்டதாக) காணக்கூடியமாதிரி இருந்தது.  

குறிக்கட்டுவான் ஜெட்டியில் கடற்படை ராணுவமும், ஒரு சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். அங்கு ஒன்றும் அடையாள அட்டை பரிசோதனை, உடல், பை  பரிசோதனை என்று எதுவும் இருக்கவில்லை. அவர்கள் அங்கே நின்று மக்கள் கிரமமாக படகினுள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் உதவியாக நிட்கிறார்கள். சிறுவர்கள் தாமரை மலர்கள் விற்கிறார்கள். சுவையான சைவ சாப்பாட்டு கடையும், தொப்பிகள் விற்கும் ஒரு முஸ்லீம் சகோதரரும் இன்னும் ஒரு சில கடைகளும் இயங்கிக்கொண்டு இருந்தன. சைவ சாப்பாட்டு கடை கல்லாவில் வேலை செய்யும் இளம் பெண் வனப்புடன் கூடிய கிராமத்து அழகு தேவைதை. நான் டிப்ஸ் காசு கொடுத்ததையும் எடுக்கவில்லை.  🥰
அதே போல அங்கிருந்து சற்று முன்னால்  குறிக்கட்டுவான் பஸ் நிலையம் அருகே ஒரு போலீஸ் நிலையம் இருக்கிறது. யாரும் யாரையும் பொருட்படுத்தியதாக எனக்கு ஞாபகம் இல்லை.

நானும் இதே பகுதியால் நயினாதீவுக்கு பயணித்திருக்கிறேன். சொறீலங்கா கடற்படை ஒழுங்கு படுத்தலில் தான் படகுகள் ஓடுகின்றன. குறிக்காட்டுவானில்.. சொறீலங்கா கடற்படை கண்காணிப்பு நிலை இருக்குது. அதேபோல்.. நயினாதீவில்... கோவில் இறங்குறையில் வெளிப்படையாக இல்லை. ஆனால் சொறீலங்கா கடற்படை புலனாய்வாளர்கள் மற்றும் ஈபிடிபி குப்பல் ஆட்களின் நடமாட்டம் இருப்பதை கூட்டிச் சென்ற உள்ளூர் மக்களே சொல்கிறார்கள்.

உங்களை சொறீலங்கா கடற்படை தனது வோட்டர் ஜெட்டில் கூட்டி கொண்டு போய் கொண்டு வந்துவிட்டது.. பால் சோறும் கட்டாச்சம்பலும் தந்தது என்றும் எழுதலாம்... அது உங்களின் செல்வாக்கிற்கு உண்மையாகவும் இருக்கலாம்.. ஆனால்.. உள்ளூர் மக்களை விட உங்களுக்கு அங்குள்ள நிலைமையின்  உண்மைத் தன்மையோ.... கஸ்டமோ தெரிய வாய்ப்பில்லை. 

Edited by nedukkalapoovan

  • Replies 98
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nedukkalapoovan said:

 

 

இந்தக் கத்தியால... தேங்காய் கூட உரிக்க முடியாது. இதால ஆக்களை வெட்டிக் கொன்றானாம்..?! நாய்க்கு விழுந்துள்ள வெட்டுக்காயப்படி பார்த்தால் கூட கூரிய ஆயுதத்தால் வெட்டிய அடையாளம் போன்றே தெரிகிறது. குறிப்பாக துப்பாக்கி முனைக் கத்தியால் குத்தியது போன்ற காயம் நாயில் காணப்படுகிறது.

மேலும்.. இந்த கத்திக்கதை நேற்று முந்தினமே வெளியாகிட்டுது. ஆனால் படம் இன்று வந்திருக்குது. கிணற்றுக்குள் இருந்து மீட்ட சாரத்தில் இரத்தக்கறை அப்படியே கரைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டிருக்குது.

என்ன கலிகாலம் என்றால்.. ஒரு இனத்தையே மொத்தமாகப் படுகொலை செய்து அந்தக் கொலைகளில் இருந்தெல்லாம் தம்மை விடுவித்துக் கொண்ட சிங்களப் படைகளுக்கும் கூலிகளுக்கும்.. வக்காளத்து வாங்குவோரைப் பார்த்தால்.... இவர்களின் கருத்துப் பஞ்சத்துக்கு என்ன விலையும் கொடுக்கக் கூடியவர்கள் என்று தெரிகிறது. சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். 

நானும் இதே பகுதியால் நயினாதீவுக்கு பயணித்திருக்கிறேன். சொறீலங்கா கடற்படை ஒழுங்கு படுத்தலில் தான் படகுகள் ஓடுகின்றன. குறிக்காட்டுவானில்.. சொறீலங்கா கடற்படை கண்காணிப்பு நிலை இருக்குது. அதேபோல்.. நயினாதீவில்... கோவில் இறங்குறையில் வெளிப்படையாக இல்லை. ஆனால் சொறீலங்கா கடற்படை புலனாய்வாளர்கள் மற்றும் ஈபிடிபி குப்பல் ஆட்களின் நடமாட்டம் இருப்பதை கூட்டிச் சென்ற உள்ளூர் மக்களே சொல்கிறார்கள்.

உங்களை சொறீலங்கா கடற்படை தனது வோட்டர் ஜெட்டில் கூட்டி கொண்டு போய் கொண்டு வந்துவிட்டது.. பால் சோறும் கட்டாச்சம்பலும் தந்தது என்றும் எழுதலாம்... அது உங்களின் செல்வாக்கிற்கு உண்மையாகவும் இருக்கலாம்.. ஆனால்.. உள்ளூர் மக்களை விட உங்களுக்கு அங்குள்ள நிலைமையின்  உண்மைத் தன்மையோ.... கஸ்டமோ தெரிய வாய்ப்பில்லை. 

நானும் இதை யோசிச்சன் நெடுக்கர்...ஆனால் களத்திலை எழுதி உந்தக் கத்தியாலை நானும் வாங்கவேணும்...உந்தக் கத்தியாலை ஆடகளை வெட்டுகில் ஒருநாளக்கு ஒராளையே வெட்டமுடியும் ..அதுவும் 24 மணிநேரம் முயன்றால்...சாரம் அதுவும் பட்டிக் சாரம்...5 பேருக்கு உவ்வளவு ரத்தம்...2 நாள் கிணற்றில் கிடந்து ஊறியும் பட்டிக் டிசைன் மாதிரிக்கிடக்கு...அத்வும் வருசத்துக்கு எடுத்த புதுச்சரம் போலை..

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, nedukkalapoovan said:

 

 

இந்தக் கத்தியால... தேங்காய் கூட உரிக்க முடியாது. இதால ஆக்களை வெட்டிக் கொன்றானாம்..?! நாய்க்கு விழுந்துள்ள வெட்டுக்காயப்படி பார்த்தால் கூட கூரிய ஆயுதத்தால் வெட்டிய அடையாளம் போன்றே தெரிகிறது. குறிப்பாக துப்பாக்கி முனைக் கத்தியால் குத்தியது போன்ற காயம் நாயில் காணப்படுகிறது.

மேலும்.. இந்த கத்திக்கதை நேற்று முந்தினமே வெளியாகிட்டுது. ஆனால் படம் இன்று வந்திருக்குது. கிணற்றுக்குள் இருந்து மீட்ட சாரத்தில் இரத்தக்கறை அப்படியே கரைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டிருக்குது.

என்ன கலிகாலம் என்றால்.. ஒரு இனத்தையே மொத்தமாகப் படுகொலை செய்து அந்தக் கொலைகளில் இருந்தெல்லாம் தம்மை விடுவித்துக் கொண்ட சிங்களப் படைகளுக்கும் கூலிகளுக்கும்.. வக்காளத்து வாங்குவோரைப் பார்த்தால்.... இவர்களின் கருத்துப் பஞ்சத்துக்கு என்ன விலையும் கொடுக்கக் கூடியவர்கள் என்று தெரிகிறது. சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். 

நானும் இதே பகுதியால் நயினாதீவுக்கு பயணித்திருக்கிறேன். சொறீலங்கா கடற்படை ஒழுங்கு படுத்தலில் தான் படகுகள் ஓடுகின்றன. குறிக்காட்டுவானில்.. சொறீலங்கா கடற்படை கண்காணிப்பு நிலை இருக்குது. அதேபோல்.. நயினாதீவில்... கோவில் இறங்குறையில் வெளிப்படையாக இல்லை. ஆனால் சொறீலங்கா கடற்படை புலனாய்வாளர்கள் மற்றும் ஈபிடிபி குப்பல் ஆட்களின் நடமாட்டம் இருப்பதை கூட்டிச் சென்ற உள்ளூர் மக்களே சொல்கிறார்கள்.

உங்களை சொறீலங்கா கடற்படை தனது வோட்டர் ஜெட்டில் கூட்டி கொண்டு போய் கொண்டு வந்துவிட்டது.. பால் சோறும் கட்டாச்சம்பலும் தந்தது என்றும் எழுதலாம்... அது உங்களின் செல்வாக்கிற்கு உண்மையாகவும் இருக்கலாம்.. ஆனால்.. உள்ளூர் மக்களை விட உங்களுக்கு அங்குள்ள நிலைமையின்  உண்மைத் தன்மையோ.... கஸ்டமோ தெரிய வாய்ப்பில்லை. 

large.20220830_180055.jpg.cbe0fa91a4e42937cb7bdee9dc28e714.jpg

நெடுக்காலபோவானிடம் இருந்து இப்படியான குறுக்கால போகும் பின்னூட்டம் வரும் என்பதையும் நிச்சயம் எதிர்பார்த்தேன், ஆச்சரியம் இல்லை!!!
அப்பு, இங்கே இணைக்கப்பட்டிருக்கும் படத்தில் இருக்கும் தனியார் படகில் தான் நாங்கள் பயணம் செய்தோம். அடுத்தமுறை போகும் போது  அப்படியே நீங்கள் "போகாத ஊரான" நெடுந்தீவுக்கும் போய் வாருங்கள், உள்ளூர் வாசிகளின் தொடர்புகளையும் தந்து உதவலாம், அவர்களே கூட்டிக்கொண்டு கூட்டி வருவார்கள். இந்த நேவி, கூவியை மட்டும் நம்பி பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இங்கே எந்த ஒரு அரச, ராணுவ கொலைப்படைக்கும் வெள்ளை அடிக்கவேண்டிய தேவை யாருக்கும் இல்லை.
நிதர்சனங்களை மூடி மறைத்து, இல்லாத பொல்லாத உடான்சுகளையும் இங்கே அவிழ்த்து கொட்ட வேண்டிய அவசியம் இல்லை.
சமூக சீர்கேடுகள், அவலங்களை, அப்படியே யதார்த்தமாக எழுதினாலே போதும். 

பின்குறிப்பு:
படத்தின் பின்னணியில் இருக்கும் நீல நிற கட்டிடம் தான் நான் சொன்ன சைவ உணவகம். அடுத்த முறை கட்டாயம் அங்கே போய் சுடச்சுட வடை, சட்னி சாப்பிட்டு அதை பற்றி எழுதுங்கள்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
❤️செல்லம் அன்ரி❤️
நெடுந்தீவு என்றால் கற்கள் கொண்டு அமைக்கப்படும் வேலி முறை என்றும் அதிக சுற்றுலா இடங்கள் உள்ள அழகான தீவு என்றும் எங்கு திரும்பினும் கோவில்களும் ஆலயங்களும் நிறைந்து பேசப்படும் உயிருள்ள தீவு என்றும் கூறப்படும் அன்பும் உபசரிப்பும் பரிவும் நிறைந்த இலங்கையின் தலைத்தீவே நெடுந்தீவாகும். சிலருக்கு நெடுந்தீவு என்று சொன்னதும் நினைவில் வருவது குமுதினிப்படகும் அதன் படுகொலை நிகழ்வுகளுமே ஆகும்.
°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நெடுந்தீவின் நானுணர்ந்த இறங்குதுறையில் இவ்வாறான கொடூர காப்பரங்கள் இல்லா காலமது. தீவை விட்டு வெளியேறும்போது செல்லம் அன்ரியிடம் தேனீர் குடித்து சென்ற நேரங்களில் அவர் முகத்தில் தோல் சுருங்கவில்லை. இதே சிரிப்பும் இதே உபசரிப்பும் அன்புகலந்த உண்மை உறவாடலுமே அன்ரியிடம் இருந்தது. யெற்றி கடலுக்கு சிப்பி பிறக்க போகும்போது அன்ரி கண்ணில படாம போக முடியாது. ஆனா போறத தடுக்கமாட்டா கூடவே தானும் வாறன் என்டு நெடுந்தீவின் நீண்ட கதைகளை சொல்லும் ஓர் பொக்கிஷம். கிழக்கு சனசமூக நிலையத்தில் புத்தகம் எடுக்க போறப்போ அன்ரி வீட்டு மதிலில சைக்கிள சாத்திட்டு அன்ரி இத பாத்துக்கொள்ளுங்க என்டா வரும் மட்டும் நிக்கும் காவல் தெய்வம் செல்லம் அன்ரி💚.
இன்னாரின் மகன் என்று சொன்னா அம்மா, அம்மாச்சி, மாமா, பெரியம்மா, என தனக்கும் எங்கள் குடும்பத்துக்குமிடையிலான நீண்ட கருத்தாடல்களை கூறுவதுடன் அதே தேனீர் மற்றும் பிஸ்கட்டுக்களுடனும் முருங்கைக்காய் பார்சலும் சுற்றி வழியனுப்பும் நல்உள்ளம் செல்லம் அன்ரி. கண்டதும் நலம் விசாரிப்பது தொடக்கம் பாசத்துடன் நிறைந்த தங்குமிடங்களையும் வழங்கிய கொடை வள்ளல் 🩵.
ஊர்பற்றியும் உலகு பற்றியும் நாட்டு நடப்புக்களையும் தெரிந்ததை பிடித்தவர்களுடன் பகிரும் நடமாடும் பத்திரிகை செல்லம் அன்ரி. இறுதியாக போடப்படும் வீதீகளின் உயரம் தரம் பற்றி தனக்கு தெரிந்ததை எடுத்து கூறியதுடன் சிவனாலயம் கட்டுறாங்க நீயும் அத பாக்க விரும்பினா இன்னைக்கு வா என்ற செல்லம் அன்ரி.. 🧡
😭😭இன்று இல்லை😭😭
"வாழும் காலத்தில் அன்பை கொடுத்தீர்
நல் உறவை வளர்த்தீர்..
பேசும் மொழிகளிலே உலகை வரைந்தீர்
என் உள்ளமதில் எப்போதும் நிற்பீர் தாயே.." ❤️
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நெடுந்தீவு என்றால் குமுதினியின் கதை சொல்லும் செல்லம் அன்ரியின் இறப்பு கூட இனி நெடுந்தீவில் ஆண்டாண்டு கதை சொல்லும்.
May be an image of 1 person and smiling
ஆறாவதாக காயபட்ட நிலைpயிலிருந்த ழுதாட்டியும் மரணம்...
  • கருத்துக்கள உறவுகள்

கொடியவர்கள் கரங்களால் உயிரிழந்த அறுவரின்  ஆன்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள். 
 

  • கருத்துக்கள உறவுகள்

சசி, இப்ப படைகள் பல சிவிலில் தான். படகோட்டியே புலனாய்வு பிரிவில் அல்லது தொடர்பில் காணப்படலாம். சீருடையில் திரியவேண்டிய அவசியம் அவர்களுக்கு உள்ளதா?

காப்புறுதி காசுக்கு வெட்டு நடந்து உள்ளது என நம்பும் இடத்தில் இதன் பின்னால் நெடுக்காலபோவான் கூறுவது போன்ற காரணியையும் யோசிக்கவே வேண்டி உள்ளது. 

எனது அவதானிப்பில் ஒரு விடயத்தை கூறுகின்றேன். அமெரிக்காவை எடுங்கள் அல்லது எழுந்தமானமாக நடைபெறும் கொலைகளை பாருங்கள். தாக்குதலாளி மனம் பேதலித்தவனாக காணப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இங்கும் கொலை செய்தவன் புத்திபேதலித்த ஒன்றாய் கிடக்கலாம். 

கொடுவா கத்தியால் ஆறுபேரை வெட்டி சாய்ப்பதற்கு சாதாரணமான ஒருவரால் முடியாது. பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் மனவளம் குன்றிய ஒருத்தனாலேயே இது செய்யப்படமுடியும். 

வயோதிப காலத்தில் அவலச்சாவு அடைவது மிகவும் துயரமானது. மரணத்தித்த பெரியவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

ஓம் சாந்தி!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:
❤️செல்லம் அன்ரி❤️
நெடுந்தீவு என்றால் கற்கள் கொண்டு அமைக்கப்படும் வேலி முறை என்றும் அதிக சுற்றுலா இடங்கள் உள்ள அழகான தீவு என்றும் எங்கு திரும்பினும் கோவில்களும் ஆலயங்களும் நிறைந்து பேசப்படும் உயிருள்ள தீவு என்றும் கூறப்படும் அன்பும் உபசரிப்பும் பரிவும் நிறைந்த இலங்கையின் தலைத்தீவே நெடுந்தீவாகும். சிலருக்கு நெடுந்தீவு என்று சொன்னதும் நினைவில் வருவது குமுதினிப்படகும் அதன் படுகொலை நிகழ்வுகளுமே ஆகும்.
°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நெடுந்தீவின் நானுணர்ந்த இறங்குதுறையில் இவ்வாறான கொடூர காப்பரங்கள் இல்லா காலமது. தீவை விட்டு வெளியேறும்போது செல்லம் அன்ரியிடம் தேனீர் குடித்து சென்ற நேரங்களில் அவர் முகத்தில் தோல் சுருங்கவில்லை. இதே சிரிப்பும் இதே உபசரிப்பும் அன்புகலந்த உண்மை உறவாடலுமே அன்ரியிடம் இருந்தது. யெற்றி கடலுக்கு சிப்பி பிறக்க போகும்போது அன்ரி கண்ணில படாம போக முடியாது. ஆனா போறத தடுக்கமாட்டா கூடவே தானும் வாறன் என்டு நெடுந்தீவின் நீண்ட கதைகளை சொல்லும் ஓர் பொக்கிஷம். கிழக்கு சனசமூக நிலையத்தில் புத்தகம் எடுக்க போறப்போ அன்ரி வீட்டு மதிலில சைக்கிள சாத்திட்டு அன்ரி இத பாத்துக்கொள்ளுங்க என்டா வரும் மட்டும் நிக்கும் காவல் தெய்வம் செல்லம் அன்ரி💚.
இன்னாரின் மகன் என்று சொன்னா அம்மா, அம்மாச்சி, மாமா, பெரியம்மா, என தனக்கும் எங்கள் குடும்பத்துக்குமிடையிலான நீண்ட கருத்தாடல்களை கூறுவதுடன் அதே தேனீர் மற்றும் பிஸ்கட்டுக்களுடனும் முருங்கைக்காய் பார்சலும் சுற்றி வழியனுப்பும் நல்உள்ளம் செல்லம் அன்ரி. கண்டதும் நலம் விசாரிப்பது தொடக்கம் பாசத்துடன் நிறைந்த தங்குமிடங்களையும் வழங்கிய கொடை வள்ளல் 🩵.
ஊர்பற்றியும் உலகு பற்றியும் நாட்டு நடப்புக்களையும் தெரிந்ததை பிடித்தவர்களுடன் பகிரும் நடமாடும் பத்திரிகை செல்லம் அன்ரி. இறுதியாக போடப்படும் வீதீகளின் உயரம் தரம் பற்றி தனக்கு தெரிந்ததை எடுத்து கூறியதுடன் சிவனாலயம் கட்டுறாங்க நீயும் அத பாக்க விரும்பினா இன்னைக்கு வா என்ற செல்லம் அன்ரி.. 🧡
😭😭இன்று இல்லை😭😭
"வாழும் காலத்தில் அன்பை கொடுத்தீர்
நல் உறவை வளர்த்தீர்..
பேசும் மொழிகளிலே உலகை வரைந்தீர்
என் உள்ளமதில் எப்போதும் நிற்பீர் தாயே.." ❤️
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நெடுந்தீவு என்றால் குமுதினியின் கதை சொல்லும் செல்லம் அன்ரியின் இறப்பு கூட இனி நெடுந்தீவில் ஆண்டாண்டு கதை சொல்லும்.
May be an image of 1 person and smiling
ஆறாவதாக காயபட்ட நிலைpயிலிருந்த ழுதாட்டியும் மரணம்...

அட தெய்வமே! இருந்த நம்பிக்கையும் அற்றுப்போய்விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமூக குற்றம் இடம்பெறும்போது அவசரப்பட்டு வெறும் ஊகங்களின் அடிப்படையில் நாமே அடுத்தவர்கள் மீது பழிபோடுவது உண்மையான குற்றவாளிகளை நாமே காப்பாற்ற உதவுவது போலாகும்.

இவ்வறிக்கைகள் கடற்படையினர் மீது குற்றம் சுமத்தி கொலைகாரரை காப்பாற்றுவதற்கான அறிக்கைகள் போன்று அமைந்திருப்பதாக இன்றைய தினம் பேரினவாதிகளின் கைக்கூலிகளான ஈபிடிபி கும்பலின் கருத்துகள் வெளிப்படுகின்றன . 

மிகுந்த சிரமப்பட்டு கைய்யும் மெய்யுமாக பிடித்துக்கொடுத்த நாங்களே அமைதியாக இருக்குறம் . கண்டவன் கிண்டவனெல்லாம் அதுவும் சில ஈபிடிபிகாரனுகள் படுற பாடு . 

அப்போ இந்த அதிபர் யாரை கைது செய்வதற்காக அல்லது குறிவைத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்?

அது அவர்களின் அரசியல் மூலதனம். இப்போ அடிச்சு பிடிச்சு படம் காட்டி பிடுங்கவேண்டும், இதுகளை காட்டி மக்களை ஏமாற்றி அரசியலில் நிலைத்துவிட்டால் படுக்கையறையில் குவிக்கலாம்.

யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்தில் இருந்து குறிகாட்டுவான் ஜெட்டி போகும் வரையிலும் பஸ் வண்டியை மறித்து சோதனை செய்யவோ, நெடுஞ்சாலை வழியே முகாம்லோ  இருக்கவில்லை. ஆனால் ஓரிரண்டு மினி முகாம்கள் (பெரிய வீடுகளை கொண்டதாக) காணக்கூடியமாதிரி இருந்தது.  

குறிக்கட்டுவான் ஜெட்டியில் கடற்படை ராணுவமும், ஒரு சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். அங்கு ஒன்றும் அடையாள அட்டை பரிசோதனை, உடல், பை  பரிசோதனை என்று எதுவும் இருக்கவில்லை. அவர்கள் அங்கே நின்று மக்கள் கிரமமாக படகினுள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் உதவியாக நிட்கிறார்கள்.

அடடே ... இதற்குத்தானா இன்னும் எமது நிலங்களில், நாங்கள் படகுகளில்   ஏற இறங்க எமக்கு உதவியாக  இருகிறார்கள்? அவர்களின் நல்லெண்ணத்தை புரியாமல் நாங்கள்தான் அவர்களை குறைகூறிக்கொண்டு இருக்கிறோம். எமது மனநிலை எந்தளவுக்கு மாறுகிறது? ஒருவேளை அவர்களின்  கொடூரங்களை அனுபவியாதவர்களாய் இருப்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:
❤️செல்லம் அன்ரி❤️
நெடுந்தீவு என்றால் கற்கள் கொண்டு அமைக்கப்படும் வேலி முறை என்றும் அதிக சுற்றுலா இடங்கள் உள்ள அழகான தீவு என்றும் எங்கு திரும்பினும் கோவில்களும் ஆலயங்களும் நிறைந்து பேசப்படும் உயிருள்ள தீவு என்றும் கூறப்படும் அன்பும் உபசரிப்பும் பரிவும் நிறைந்த இலங்கையின் தலைத்தீவே நெடுந்தீவாகும். சிலருக்கு நெடுந்தீவு என்று சொன்னதும் நினைவில் வருவது குமுதினிப்படகும் அதன் படுகொலை நிகழ்வுகளுமே ஆகும்.
°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நெடுந்தீவின் நானுணர்ந்த இறங்குதுறையில் இவ்வாறான கொடூர காப்பரங்கள் இல்லா காலமது. தீவை விட்டு வெளியேறும்போது செல்லம் அன்ரியிடம் தேனீர் குடித்து சென்ற நேரங்களில் அவர் முகத்தில் தோல் சுருங்கவில்லை. இதே சிரிப்பும் இதே உபசரிப்பும் அன்புகலந்த உண்மை உறவாடலுமே அன்ரியிடம் இருந்தது. யெற்றி கடலுக்கு சிப்பி பிறக்க போகும்போது அன்ரி கண்ணில படாம போக முடியாது. ஆனா போறத தடுக்கமாட்டா கூடவே தானும் வாறன் என்டு நெடுந்தீவின் நீண்ட கதைகளை சொல்லும் ஓர் பொக்கிஷம். கிழக்கு சனசமூக நிலையத்தில் புத்தகம் எடுக்க போறப்போ அன்ரி வீட்டு மதிலில சைக்கிள சாத்திட்டு அன்ரி இத பாத்துக்கொள்ளுங்க என்டா வரும் மட்டும் நிக்கும் காவல் தெய்வம் செல்லம் அன்ரி💚.
இன்னாரின் மகன் என்று சொன்னா அம்மா, அம்மாச்சி, மாமா, பெரியம்மா, என தனக்கும் எங்கள் குடும்பத்துக்குமிடையிலான நீண்ட கருத்தாடல்களை கூறுவதுடன் அதே தேனீர் மற்றும் பிஸ்கட்டுக்களுடனும் முருங்கைக்காய் பார்சலும் சுற்றி வழியனுப்பும் நல்உள்ளம் செல்லம் அன்ரி. கண்டதும் நலம் விசாரிப்பது தொடக்கம் பாசத்துடன் நிறைந்த தங்குமிடங்களையும் வழங்கிய கொடை வள்ளல் 🩵.
ஊர்பற்றியும் உலகு பற்றியும் நாட்டு நடப்புக்களையும் தெரிந்ததை பிடித்தவர்களுடன் பகிரும் நடமாடும் பத்திரிகை செல்லம் அன்ரி. இறுதியாக போடப்படும் வீதீகளின் உயரம் தரம் பற்றி தனக்கு தெரிந்ததை எடுத்து கூறியதுடன் சிவனாலயம் கட்டுறாங்க நீயும் அத பாக்க விரும்பினா இன்னைக்கு வா என்ற செல்லம் அன்ரி.. 🧡
😭😭இன்று இல்லை😭😭
"வாழும் காலத்தில் அன்பை கொடுத்தீர்
நல் உறவை வளர்த்தீர்..
பேசும் மொழிகளிலே உலகை வரைந்தீர்
என் உள்ளமதில் எப்போதும் நிற்பீர் தாயே.." ❤️
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நெடுந்தீவு என்றால் குமுதினியின் கதை சொல்லும் செல்லம் அன்ரியின் இறப்பு கூட இனி நெடுந்தீவில் ஆண்டாண்டு கதை சொல்லும்.
May be an image of 1 person and smiling
ஆறாவதாக காயபட்ட நிலைpயிலிருந்த ழுதாட்டியும் மரணம்...

ஆறாவதாக இறந்த இவருக்கு 100 வயது என்று வாசித்த நினைவு.
அவரது கணவரும், 1986’ம் ஆண்டு குமுதினி படகில் கொலை செய்யப் பட்டவராம்,   மனது வலிக்கின்றது.

அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவனொருவனே தனியாக அறுவரையும் வெட்டிச்சாய்த்தவனென்றால் ஒவ்வொருவராக வெட்டும்போது, அடுத்தவர் உலக்கையை எடுத்து இவனின் மண்டையில் போட்டிருந்தால் இருவராவது உயிர் தப்பியிருப்பர். பாவம் வயதுபோனவர்கள் தங்கள் தங்கள் உயிரை காப்பாற்ற போராடியிருப்பர். இனிமேல் இப்படிப்பட்ட்துகள்தான் நாட்டில மிஞ்சப்போகுதுகள். அதுகளின்ர கையிற்தான் அரசியலும். ஆனால் பிடித்துக்கொடுத்த இளைஞர்மேல் ஒட்டுக்குழுக்கள், இராணுவக்குழுக்கள் ஒரு  கண்ணாயிருப்பர்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இவனொருவனே தனியாக அறுவரையும் வெட்டிச்சாய்த்தவனென்றால் ஒவ்வொருவராக வெட்டும்போது, அடுத்தவர் உலக்கையை எடுத்து இவனின் மண்டையில் போட்டிருந்தால் இருவராவது உயிர் தப்பியிருப்பர். பாவம் வயதுபோனவர்கள் தங்கள் தங்கள் உயிரை காப்பாற்ற போராடியிருப்பர். இனிமேல் இப்படிப்பட்ட்துகள்தான் நாட்டில மிஞ்சப்போகுதுகள். அதுகளின்ர கையிற்தான் அரசியலும். ஆனால் பிடித்துக்கொடுத்த இளைஞர்மேல் ஒட்டுக்குழுக்கள், இராணுவக்குழுக்கள் ஒரு  கண்ணாயிருப்பர்! 

 

On 22/4/2023 at 22:50, நிழலி said:

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐவரும் 75 வயதை கடந்த முதியவர்களே ! பல கோணங்களில் விசாரணை !

22 APR, 2023 | 09:23 PM
image

 

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக இன்று மீட்கப்பட்டுள்ளார். 

2__9_.jpg

100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

2__6_.jpg

லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82) , பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76) , கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83) , மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலங்களாக இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

நெடுந்தீவு மாவளி இறங்கு  துறைக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டியொருவர் நெடுந்தீவுக்கு செல்வோருக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல் ,உணவு வழங்குதல் போன்றவற்றை தொழிலாக செய்து வந்துள்ளார். 

இவரது கணவர் 1986ஆம் ஆண்டு குமுதினி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த மூதாட்டி தனது வாழ்வாதாரத்தை தானே கொண்டு நடாத்தி வந்துள்ளார். 

2__2_.jpg

நெடுந்தீவில் உள்ள ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து வந்திருந்த ஐவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டில் தங்கியுள்ளனர். 

2__10_.jpg

இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை காலை எவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அயலவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது வெட்டு காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டுள்ளனர். 

ஒருவர் வீட்டின் வெளியேயும் ஏனையவர்கள் வீட்டின் உள்ளே படுக்கை மற்றும் ஏனைய பாகங்களிலும் கொடூரமான வெட்டு காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டனர்.

2__3_.jpg

அதில் ஒருவர் படுகாயங்களுடன் காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர். 

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் குழு நெடுந்தீவு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

2__7_.jpg

நால்வர் அடங்கிய கும்பலே படுகொலை செய்தது ?

நால்வர் கொண்டே கும்பலே படுகொலையை செய்துள்ளதாகவும் , வீட்டின் சற்று தூரத்தில் முன் பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ளமையால் , வீட்டின் பின் பகுதி  ஊடாகவே கும்பல் வீட்டினுள் புகுந்து இருக்கலாம் எனவும் , வாள்கள் மற்றும் கோடரி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

2__4_.jpg

அதேவேளை வீட்டில் இருந்த ஐவர் படுகொலையாகி உள்ளதாலும் , ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாலும் , வீட்டில் இருந்த பொருட்கள் எவையேனும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனவா ? என்பதனை அறிய முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

படகு சேவைகள் இடைநிறுத்தம்

நெடுந்தீவில் இருந்து குற்றவாளிகள் தப்பி செல்லாதவாறு நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையிலான படகு சேவைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. 

 

நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை

 

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் நெடுந்தீவுக்கு நேரில் சென்று சம்பவ இடத்தினை நேரில் பார்த்து விசாரணைகளை முன்னெடுத்தார். 

2__8_.jpg

அதேவேளை யாழ்ப்பாண தடயவியல் பொலிஸ் குழுவும், சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். 

 

நீதிபதியை வழிமறித்து போராட்டம்

 

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் விசாரணைகளை முடித்துக்கொண்டு நெடுந்தீவு இறங்கு துறைக்கு வந்த நீதவானை வழிமறித்து மக்கள் போராட்டம் நடாத்தினார்கள். 

 

குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் எனவும் , நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரி போராட்டம் செய்தனர். 

 

சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் 

நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , உடற்கூற்று பரிசோதனைக்காக சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

டக்ளஸ் பொலிஸாருக்கு பணிப்பு

வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன்,  இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார். 

https://www.virakesari.lk/article/153511

மேலே நிழலி இணைத்த செய்தியில்…. நால்வர் கொண்ட கும்பல் இந்தப் படுகொலையை
 நிகழ்த்தியதாகவும், அதற்கு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்கள் பாவிக்கப் பட்டதாகவும் கூறப் பட்டுள்ளது.

நிச்சயம் இது, தனி ஒருவனால் நிகழ்த்தப் பட்ட கொலை போல் தெரியவில்லை.
காலை 4:30’க்கும் 5:00 மணிக்கும் இடைப்பட்ட அரை மணி நேரத்தில் 
ஆறு பேரையும், அந்த வீட்டுப் பிராணியையும் வெட்டி விட்டு 
அந்தத் தீவில் இருந்து தப்பி வள்ளத்தில் இன்னொரு தீவுக்கு போவதென்பது சாதாரண
விடயம் அல்ல.

நிச்சயம் இதற்குப் பின்னால்… ஒட்டுக் குழுவும், கடற்படையும் இருக்கும்.
ஓட்டுக் குழுத் தலைவன் டக்ளஸ் தேவானந்தா ஓடி வந்து குரல் கொடுக்கும் போதே…
”எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று வெள்ளையடிக்கும் வேலை என்று தெரிந்து விட்டது.

இந்தக் கொலையின் முதல் குற்றவாளியை கண்டு பிடித்துக் கொடுத்ததே… 
சாதாரண ஒரு பொதுமகன் என்கிறார்கள். காவல் துறை அல்ல.
முதலில் காவல் துறைக்கு அறிவித்த போது அவர்கள் அலட்சியம் காட்டியதாகவும்,
பின் மேலிடத்துக்கு அறிவித்த பின்பே… அவரை கைது செய்ய நடவடிக்கையில் இறங்கியதாகவும் கூறப் படுகின்றது.

சிலர் இங்கு வைக்கும் கருத்துக்களைப் பார்த்தால்…
ஓட்டுக் குழுவும், கடற் படையும் இதுவரை ஒரு கொலைகளுமே செய்யாதவர்கள் என்று..
அவர்களுக்கு “வெள்ளை அடிக்கும்”, தமது வழமையான வேலையில் இறங்கி உள்ளார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

 

மேலே நிழலி இணைத்த செய்தியில்…. நால்வர் கொண்ட கும்பல் இந்தப் படுகொலையை
 நிகழ்த்தியதாகவும், அதற்கு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்கள் பாவிக்கப் பட்டதாகவும் கூறப் பட்டுள்ளது.

நிச்சயம் இது, தனி ஒருவனால் நிகழ்த்தப் பட்ட கொலை போல் தெரியவில்லை.
காலை 4:30’க்கும் 5:00 மணிக்கும் இடைப்பட்ட அரை மணி நேரத்தில் 
ஆறு பேரையும், அந்த வீட்டுப் பிராணியையும் வெட்டி விட்டு 
அந்தத் தீவில் இருந்து தப்பி வள்ளத்தில் இன்னொரு தீவுக்கு போவதென்பது சாதாரண
விடயம் அல்ல.

நிச்சயம் இதற்குப் பின்னால்… ஒட்டுக் குழுவும், கடற்படையும் இருக்கும்.
ஓட்டுக் குழுத் தலைவன் டக்ளஸ் தேவானந்தா ஓடி வந்து குரல் கொடுக்கும் போதே…
”எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று வெள்ளையடிக்கும் வேலை என்று தெரிந்து விட்டது.

இந்தக் கொலையின் முதல் குற்றவாளியை கண்டு பிடித்துக் கொடுத்ததே… 
சாதாரண ஒரு பொதுமகன் என்கிறார்கள். காவல் துறை அல்ல.
முதலில் காவல் துறைக்கு அறிவித்த போது அவர்கள் அலட்சியம் காட்டியதாகவும்,
பின் மேலிடத்துக்கு அறிவித்த பின்பே… அவரை கைது செய்ய நடவடிக்கையில் இறங்கியதாகவும் கூறப் படுகின்றது.

சிலர் இங்கு வைக்கும் கருத்துக்களைப் பார்த்தால்…
ஓட்டுக் குழுவும், கடற் படையும் இதுவரை ஒரு கொலைகளுமே செய்யாதவர்கள் என்று..
அவர்களுக்கு “வெள்ளை அடிக்கும்”, தமது வழமையான வேலையில் இறங்கி உள்ளார்கள்.

ஏதோ..... எங்கள் கருத்துக்களை வாசித்துத்தான் போலீசார் குற்றவாளிகளை தேடுவதுபோலவும், நாங்கள் குற்றவாளிகளை தப்ப வைக்க பொலிஸாரின் கவனத்தை திசை திருப்புவதுபோலவும் எழுதுகிறார்கள் இதை என்ன சொல்வது? பின் எதற்கு தாடியர் களத்திலே நின்று குதிக்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

ஏதோ..... எங்கள் கருத்துக்களை வாசித்துத்தான் போலீசார் குற்றவாளிகளை தேடுவதுபோலவும், நாங்கள் குற்றவாளிகளை தப்ப வைக்க பொலிஸாரின் கவனத்தை திசை திருப்புவதுபோலவும் எழுதுகிறார்கள் இதை என்ன சொல்வது? பின் எதற்கு தாடியர் களத்திலே நின்று குதிக்கிறார்?

அவர்களுக்கு… நாங்கள்  ஒட்டுக் குழுவை சொன்னது, சுட்டுப் போட்டுது போலை கிடக்கு.

பொலிஸ்காரன் எங்கடை கருத்தை வாசித்து, திசை திரும்பி விடுவானென்று
அதற்கு முட்டுக் கொடுப்பது வேடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

ஒரு சமூக குற்றம் இடம்பெறும்போது அவசரப்பட்டு வெறும் ஊகங்களின் அடிப்படையில் நாமே அடுத்தவர்கள் மீது பழிபோடுவது உண்மையான குற்றவாளிகளை நாமே காப்பாற்ற உதவுவது போலாகும்.

இவ்வறிக்கைகள் கடற்படையினர் மீது குற்றம் சுமத்தி கொலைகாரரை காப்பாற்றுவதற்கான அறிக்கைகள் போன்று அமைந்திருப்பதாக இன்றைய தினம் பேரினவாதிகளின் கைக்கூலிகளான ஈபிடிபி கும்பலின் கருத்துகள் வெளிப்படுகின்றன . 

மிகுந்த சிரமப்பட்டு கைய்யும் மெய்யுமாக பிடித்துக்கொடுத்த நாங்களே அமைதியாக இருக்குறம் . கண்டவன் கிண்டவனெல்லாம் அதுவும் சில ஈபிடிபிகாரனுகள் படுற பாடு . 

அப்போ இந்த அதிபர் யாரை கைது செய்வதற்காக அல்லது குறிவைத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்?

அது அவர்களின் அரசியல் மூலதனம். இப்போ அடிச்சு பிடிச்சு படம் காட்டி பிடுங்கவேண்டும், இதுகளை காட்டி மக்களை ஏமாற்றி அரசியலில் நிலைத்துவிட்டால் படுக்கையறையில் குவிக்கலாம்.

யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்தில் இருந்து குறிகாட்டுவான் ஜெட்டி போகும் வரையிலும் பஸ் வண்டியை மறித்து சோதனை செய்யவோ, நெடுஞ்சாலை வழியே முகாம்லோ  இருக்கவில்லை. ஆனால் ஓரிரண்டு மினி முகாம்கள் (பெரிய வீடுகளை கொண்டதாக) காணக்கூடியமாதிரி இருந்தது.  

குறிக்கட்டுவான் ஜெட்டியில் கடற்படை ராணுவமும், ஒரு சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். அங்கு ஒன்றும் அடையாள அட்டை பரிசோதனை, உடல், பை  பரிசோதனை என்று எதுவும் இருக்கவில்லை. அவர்கள் அங்கே நின்று மக்கள் கிரமமாக படகினுள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் உதவியாக நிட்கிறார்கள்.

அடடே ... இதற்குத்தானா இன்னும் எமது நிலங்களில், நாங்கள் படகுகளில்   ஏற இறங்க எமக்கு உதவியாக  இருகிறார்கள்? அவர்களின் நல்லெண்ணத்தை புரியாமல் நாங்கள்தான் அவர்களை குறைகூறிக்கொண்டு இருக்கிறோம். எமது மனநிலை எந்தளவுக்கு மாறுகிறது? ஒருவேளை அவர்களின்  கொடூரங்களை அனுபவியாதவர்களாய் இருப்பார்களோ?

அவர்கள் இப்ப ரெம்ப நல்லவர்கள்

வட கிழக்கில் புலனாய்வு பிரிவுகள் இப்ப மக்களுக்கிடையே இல்லை, அவர்கள் சாந்தமாக தங்கள் வேலைகளை இரணுவ கடற்படை முகாம்களுக்குள் இருக்கின்றார்கள், அவர்கள் இப்ப எவ்வளவு நல்லவர்கள், எம்மவர்கள்தான் இவர்களின் தயவின்றி பல கொள்ளை கொலைகளில் ஈடுபடுகின்றனர், இப்படி சொன்னால்தான் மக்கள் நம்புவார்கள், இதை எப்படியும் நம்பிவிடுவார்கள் முழு உலகமே அணுவாயத த்தால் அழிவை சந்தித்தது என நம்பியவர்கள் ஆச்சே🤭

 அப்புகாத்தர்களுக்கு ஆப்பு வைத்து பலகாமகிவிட்டது இப்ப பழைய அப்புகாத்தர்களை நினைவில் வருவதை நினைக்க, இப்படியானவர்களை படித்த மக்கள் கூட்டங்கள் இன்னுமா நம்புகின்றார்கள்😃

31 minutes ago, தமிழ் சிறி said:

அவர்களுக்கு… நாங்கள்  ஒட்டுக் குழுவை சொன்னது, சுட்டுப் போட்டுது போலை கிடக்கு.

பொலிஸ்காரன் எங்கடை கருத்தை வாசித்து, திசை திரும்பி விடுவானென்று
அதற்கு முட்டுக் கொடுப்பது வேடிக்கை.

இது கொடுமையிலும் கொடுமை, 2023 இல் மிகச்சிறந்த  Comedy

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

அடுத்தமுறை போகும் போது  அப்படியே நீங்கள் "போகாத ஊரான" நெடுந்தீவுக்கும் போய் வாருங்கள்

அப்போ அவரும் என்னை போன்றே நெடுந்தீவை இதுவரை பார்க்கும்  அதிஷ்டம் கிடைக்காதவர் 😭

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் குழுவாக இலங்கை சென்றிருந்த போது நானும் சிலரும் நெடுந்தீவுக்கு கடற்பயணம் செய்து பார்க்க ஆசைபட்டோம். ஆனால் பெரும்பான்மையினர் இலங்கை படகு பயணம் பாதுகாப்பானது இல்லை என்று பயந்ததினால் போக முடியவில்லை.
இலங்கையில் படகு பயணம் செய்வதற்கு பாவிக்கபடுபவை ரஷ்ய தயாரிப்பு படகுகளாக இருக்கலாம்

நான் அறிந்த வரையில்.... அங்கு பாவிக்கப் படும் படகுகள் 
அமெரிக்க தயாரிப்புகள் என்று உறுதியாக சொல்கிறார்கள். 😜

இதுவரை.... உலகத்திலேயே குறைந்த விமான விபத்துக்களை சந்தித்தது 
ரஷ்ய விமானங்கள் என்பது கொசுறு தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

முந்திரிக்கொட்டை  மாதிரி தான் களத்தில் நின்று போலீசாரை  வழி நடத்தியதார்த்தான் கொலைகாரன் பிடிபட்டான் என அறிக்கையும் விடக்கூடும். இதே போலீசார் தினேஷ் சாப்டரின் வழக்கை பலமாதங்களாக விசாரிக்கினமாம் நாளொரு அறிக்கை விடுகினம். ஆனால் ஒரு பொலிஸ் அதிகாரி அங்குள்ள இளைஞரின் உதவியாற்தான் கொலைகாரனை கைது செய்ய முடிந்தது என்றும் பொலிஸாரின் அஜாக்கிரதையையும் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போ, அதில் தாடியரின் வழிகாட்டலும் அடங்குந்தானே? பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியவரல்லவா? "நாய்க்கேன் போர்த்தேங்காயை?" பழமொழியைச்சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அவர்கள் இப்ப ரெம்ப நல்லவர்கள்

வட கிழக்கில் புலனாய்வு பிரிவுகள் இப்ப மக்களுக்கிடையே இல்லை, அவர்கள் சாந்தமாக தங்கள் வேலைகளை இரணுவ கடற்படை முகாம்களுக்குள் இருக்கின்றார்கள், அவர்கள் இப்ப எவ்வளவு நல்லவர்கள், எம்மவர்கள்தான் இவர்களின் தயவின்றி பல கொள்ளை கொலைகளில் ஈடுபடுகின்றனர், இப்படி சொன்னால்தான் மக்கள் நம்புவார்கள், இதை எப்படியும் நம்பிவிடுவார்கள் முழு உலகமே அணுவாயத த்தால் அழிவை சந்தித்தது என நம்பியவர்கள் ஆச்சே🤭

 அப்புகாத்தர்களுக்கு ஆப்பு வைத்து பலகாமகிவிட்டது இப்ப பழைய அப்புகாத்தர்களை நினைவில் வருவதை நினைக்க, இப்படியானவர்களை படித்த மக்கள் கூட்டங்கள் இன்னுமா நம்புகின்றார்கள்😃

இது கொடுமையிலும் கொடுமை, 2023 இல் மிகச்சிறந்த  Comedy

இப்போது ஒட்டுக் குழுக்களும்.. அப்புக்காத்து வைத்திருக்கிறார்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, satan said:

ஏதோ..... எங்கள் கருத்துக்களை வாசித்துத்தான் போலீசார் குற்றவாளிகளை தேடுவதுபோலவும், நாங்கள் குற்றவாளிகளை தப்ப வைக்க பொலிஸாரின் கவனத்தை திசை திருப்புவதுபோலவும் எழுதுகிறார்கள் இதை என்ன சொல்வது? பின் எதற்கு தாடியர் களத்திலே நின்று குதிக்கிறார்?

 

3 hours ago, தமிழ் சிறி said:

நான் அறிந்த வரையில்.... அங்கு பாவிக்கப் படும் படகுகள் 
அமெரிக்க தயாரிப்புகள் என்று உறுதியாக சொல்கிறார்கள். 😜

இதுவரை.... உலகத்திலேயே குறைந்த விமான விபத்துக்களை சந்தித்தது 
ரஷ்ய விமானங்கள் என்பது கொசுறு தகவல்.

 

3 hours ago, உடையார் said:

அவர்கள் இப்ப ரெம்ப நல்லவர்கள்

வட கிழக்கில் புலனாய்வு பிரிவுகள் இப்ப மக்களுக்கிடையே இல்லை, அவர்கள் சாந்தமாக தங்கள் வேலைகளை இரணுவ கடற்படை முகாம்களுக்குள் இருக்கின்றார்கள், அவர்கள் இப்ப எவ்வளவு நல்லவர்கள், எம்மவர்கள்தான் இவர்களின் தயவின்றி பல கொள்ளை கொலைகளில் ஈடுபடுகின்றனர், இப்படி சொன்னால்தான் மக்கள் நம்புவார்கள், இதை எப்படியும் நம்பிவிடுவார்கள் முழு உலகமே அணுவாயத த்தால் அழிவை சந்தித்தது என நம்பியவர்கள் ஆச்சே🤭

 அப்புகாத்தர்களுக்கு ஆப்பு வைத்து பலகாமகிவிட்டது இப்ப பழைய அப்புகாத்தர்களை நினைவில் வருவதை நினைக்க, இப்படியானவர்களை படித்த மக்கள் கூட்டங்கள் இன்னுமா நம்புகின்றார்கள்😃

சொல்லி வேலையில்லை....அவ்வளவும் பொருள்  :rolling_on_the_floor_laughing:  :thumbs_up:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

அடடே ... இதற்குத்தானா இன்னும் எமது நிலங்களில், நாங்கள் படகுகளில்   ஏற இறங்க எமக்கு உதவியாக  இருகிறார்கள்? அவர்களின் நல்லெண்ணத்தை புரியாமல் நாங்கள்தான் அவர்களை குறைகூறிக்கொண்டு இருக்கிறோம். எமது மனநிலை எந்தளவுக்கு மாறுகிறது? ஒருவேளை அவர்களின்  கொடூரங்களை அனுபவியாதவர்களாய் இருப்பார்களோ?

நான் பார்த்த என்னுடைய அனுபவத்தை மட்டும் தான் இங்கே பதிந்தேன். ஈழ தேசத்துக்கு விசுவாசியாக  இருப்பதை காட்ட கற்பனையில் அனுமானித்து எழுத எனக்கு தோன்றவில்லை. அரச படைகளின் கொடூர வெறியாட்டங்களை பந்தி பந்தியாய் எழுதியதை நீங்கள் கவனிக்காமல் இருந்து இருக்கலாம்...

இந்த கொலைகளுக்கும் அரச படைகளுக்கும் தொடர்புகள் இருக்குமா, இல்லையா என்றும் நான் எங்கும் விவாதிக்கவில்லை. அது விசாரணையின் முடிவில் வரலாம், வராமல் விடலாம், மறைக்கப்படலாம்.
எது இப்படியே இழப்பு என்பது பாவப்பட்ட தமிழ் மக்களுக்குத்தான்.
கனடாவில் இருந்து போன ஓரு ஐயா, அம்மா (எனக்கு தெரிந்தவரின் தாயும், தகப்பனும்) அனலைதீவில் வைத்து அடித்து, வெட்டி மிகவும் கோரமாக தாக்கப்பட்ட சம்பவம் கூட சொத்து தகராறு, தனிப்பட்ட பகை என்று தான் இன்றுவரையிலும் பேசப்படுகிறது.
நான் பார்த்ததை எழுதினத்துக்கு 10 பேர் என்னையும் ஈபிடிபி, அரச கைக்கூலி ரேஞ்சில் ஹைலைட் பண்ணுகிறார்கள்.  தமிழ் தேசியம் நல்லா வளரும் டேய்!! 🙏

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Sasi_varnam said:

நான் பார்த்த என்னுடைய அனுபவத்தை மட்டும் தான் இங்கே பதிந்தேன். ஈழ தேசத்துக்கு விசுவாசியாக  இருப்பதை காட்ட கற்பனையில் அனுமானித்து எழுத எனக்கு தோன்றவில்லை. அரச படைகளின் கொடூர வெறியாட்டங்களை பந்தி பந்தியாய் எழுதியதை நீங்கள் கவனிக்காமல் இருந்து இருக்கலாம்...

இந்த கொலைகளுக்கும் அரச படைகளுக்கும் தொடர்புகள் இருக்குமா, இல்லையா என்றும் நான் எங்கும் விவாதிக்கவில்லை. அது விசாரணையின் முடிவில் வரலாம், வராமல் விடலாம், மறைக்கப்படலாம்.
எது இப்படியே இழப்பு என்பது பாவப்பட்ட தமிழ் மக்களுக்குத்தான்.
கனடாவில் இருந்து போன ஓரு ஐயா, அம்மா (எனக்கு தெரிந்தவரின் தாயும், தகப்பனும்) அனலைதீவில் வைத்து அடித்து, வெட்டி மிகவும் கோரமாக தாக்கப்பட்ட சம்பவம் கூட சொத்து தகராறு, தனிப்பட்ட பகை என்று தான் இன்றுவரையிலும் பேசப்படுகிறது.
நான் பார்த்ததை எழுதினத்துக்கு 10 பேர் என்னையும் ஈபிடிபி, அரச கைக்கூலி ரேஞ்சில் ஹைலைட் பண்ணுகிறார்கள்.  தமிழ் தேசியம் நல்லா வளரும் டேய்!! 🙏

தமிழாவது

தேசியமாவது?

புட்டின் மகாராசா வாழ்க

ரசிய விரிவாக்கம் ஓங்குக

தப்பிக்க வழி ராசா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

நான் பார்த்த என்னுடைய அனுபவத்தை மட்டும் தான் இங்கே பதிந்தேன். ஈழ தேசத்துக்கு விசுவாசியாக  இருப்பதை காட்ட கற்பனையில் அனுமானித்து எழுத எனக்கு தோன்றவில்லை. அரச படைகளின் கொடூர வெறியாட்டங்களை பந்தி பந்தியாய் எழுதியதை நீங்கள் கவனிக்காமல் இருந்து இருக்கலாம்...

இந்த கொலைகளுக்கும் அரச படைகளுக்கும் தொடர்புகள் இருக்குமா, இல்லையா என்றும் நான் எங்கும் விவாதிக்கவில்லை. அது விசாரணையின் முடிவில் வரலாம், வராமல் விடலாம், மறைக்கப்படலாம்.
எது இப்படியே இழப்பு என்பது பாவப்பட்ட தமிழ் மக்களுக்குத்தான்.
கனடாவில் இருந்து போன ஓரு ஐயா, அம்மா (எனக்கு தெரிந்தவரின் தாயும், தகப்பனும்) அனலைதீவில் வைத்து அடித்து, வெட்டி மிகவும் கோரமாக தாக்கப்பட்ட சம்பவம் கூட சொத்து தகராறு, தனிப்பட்ட பகை என்று தான் இன்றுவரையிலும் பேசப்படுகிறது.
நான் பார்த்ததை எழுதினத்துக்கு 10 பேர் என்னையும் ஈபிடிபி, அரச கைக்கூலி ரேஞ்சில் ஹைலைட் பண்ணுகிறார்கள்.  தமிழ் தேசியம் நல்லா வளரும் டேய்!! 🙏

கொடுக்கான் குத்தி விஷத்தை கொட்டியபின் கொடுக்கை மடித்து விடும். அதற்காக குத்தவில்லை என்று பொருள் இல்லை. காரணமேயில்லாமல் கொலை செய்தவர்கள், நிலத்தில் தங்கியிருப்பவர்கள், கேட்டால் மக்களை காக்கிறார்களாம், மக்களுக்கு உதவுகிறார்களாம், மக்களின் நலனை காப்பவர்கள், இவர்களை கடந்து எவ்வளவு கொடூரங்கள் நிகழ்கின்றன. அவர்களைப்பொறுத்தவரை இப்படியான ஊர்களுக்கு பெரும்பாலும் சுற்றுலாப்பயணிகளே வருகின்றனர், அதிலும் புலம்பெயர் தமிழர் வந்தால் பவ்வியமாக பாவனை செய்வார்கள் காரணம்; பிறகு வெளிநாட்டில் எதிர்ப்பு நடக்கும், இவர்களை வைத்து வெளிநாட்டு அரசுகளின் கருத்துக்களை மாற்றலாம், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கலாம். உங்களை நான் ஒட்டுக்குழுக்களோடு ஒப்பிடவில்லை எந்தளவுக்கு எங்கள் மனம் மாறும்படி நடிக்கிறார்களா அல்லது ஏமாந்து விடுகிறோமா மறந்துவிடுகிறோமா என்பதே எனது சந்தேகம்.

15 hours ago, தமிழ் சிறி said:

இப்போது ஒட்டுக் குழுக்களும்.. அப்புக்காத்து வைத்திருக்கிறார்கள். 

கொலைகளை ஒழுங்கு படுத்தவும், குற்றங்களை மறைத்து சுற்றவாளிகள் என நிரூபிக்கவும் ஆனால் அவர்களின் முடிவும் ஒட்டுக்குழுவாலேயே.

பொதுமக்கள் பதற்றப்படக்கூடாது என்பதும் குற்றவாளி வெளியில் இருந்தால் இன்னமும் கொலைகளைச் செய்யக்கூடும் என்பதும் அவசரத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

கொஞ்சம் பொறுங்கள்! அவருடைய அவசரம், பொதுமக்கள் மேலுள்ள பொறுப்பு எப்படிப்பட்டது என்பது வெளிவரும். சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரின் சகாக்கள் வெளிநாடுகளில் அவர்களின் பொறுப்புகளை, பொறுக்கித்தனங்களை வெளியிட்டதுபோல், ஊடகவியலாளர் கொலை வழக்கில், இவரது சகா வெளியிட்டுக்கொண்டிருக்கிறார், விரைவில் வெளிவரும். என்ன.... இங்கே நீதித்துறை, அரசியற்துறை, காவற்துறை, எல்லாத்துறைகளும் அவ்வாறே செயற்படுவதால், இவர்களை இயக்குவதால் அது இவர்களுக்கு அவமானமாக இருக்காது, தண்டனையும் கிடைக்காது. ஆனால் தாடியர் எப்படிப்பட்டவர் என்பது அவரது சகா மூலம் தெரிந்துகொள்ளலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு படுகொலை : காயமடைந்த 100 வயது மூதாட்டியும் உயிரிழப்பு

27 APR, 2023 | 07:15 PM
image

 

நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த 6ஆவது நபரான மூதாட்டியும் உயிரிழந்தார்.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் உறுதி செய்தது.

100 வயது மூதாட்டியான பூரணம் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த கொலைகளை அரங்கேற்றி நகைகளுடன் தப்பித்தவர் புங்குடுதீவில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/153949

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு கூட்டுப் படுகொலை தொடர்பான சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: DIGITAL DESK 3

07 JUN, 2023 | 10:36 AM
image
 

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அறுவரின் கொலை தொடர்பான வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (06)  ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டடார். இந்த வழக்கும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவில் 5 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 101 வயது மூதாட்டியும் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களில் 4 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர்.

https://www.virakesari.lk/article/157130

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.