Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூரில் மரணதண்டனையை எதிர்கொள்ளும் தமிழருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - குடும்பத்தவர்கள் உருக்கமான வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

24 APR, 2023 | 11:29 AM
image

சிங்கப்பூரில் கஞ்சா வைத்திருந்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு  தண்டனை நிறைவேற்றத்தை எதிர்கொண்டுள்ள தங்கராஜூ சுப்பையா என்ற 46 வயது நபரின் குடும்பத்தினர் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர். 

 

இந்த வழக்கை மீள்விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கஞ்சாகடத்தல் முயற்சியில் ஈடுபட்டமைக்காக சுப்பையாவிற்கு 2018 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

np_file_223394.jpeg

 எனது சகோதரர் குறித்த வழக்கு நியாயமான விதத்தில் இடம்பெற்றதாக நாங்கள் கருதவில்லை எங்கள் ஜனாதிபதி மீது எனக்கு நம்பிக்கையுள்ளது அவர் மனுவை வாசிப்பார் என கருதுகின்றேன் என  சகோதரி லீலாவதி சுப்பையா தெரிவித்துள்ளார். இளவயதிலிருந்து எனது சகோதரர்இரக்ககுணமிக்கவர் அனைவராலும் விரும்பப்பட்டவர் அவர் எவருக்கும் எந்த தீமையும் செய்யவில்லை அவர் தனது குடும்பத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்தார் என சகோதரி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

ஆறுமாதகாலப்பகுதியில் சிங்கப்பூர் முதல்தடவையாக மரணதண்டனையை நிறைவேற்றவுள்ளது. 2017 இல் கஞ்சா வைத்திருந்தார் என அதிகாரிகள் சுப்பையாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர். தாய்லாந்து உட்பட பல நாடுகளில் கஞ்சா  வைத்திருப்பது குற்றமற்ற செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மரண்தண்டனையை கைவிடவேண்டும் என மனித உரிமை அமைப்புகள்வேண்டுகோள் விடுத்துவருகின்றன.

இந்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதத்தில் பல தவறுகளும் பிழைகளும் உள்ளதாக குடும்ப உறுப்பினர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/153596

  • Replies 60
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்த சொல்ல...?

ஒவ்வொரு நாட்டிலும்   சட்டங்களுக்கு அமைய வாழ்வதே சிறப்பு.


எனினும் தங்கராஜு சுப்பையா பொது மன்னிப்பில் வெளிவர வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

என்னத்த சொல்ல...?

ஒவ்வொரு நாட்டிலும்   சட்டங்களுக்கு அமைய வாழ்வதே சிறப்பு.

என்ன செய்வது இலங்கைக்கு கிடைத்தது போல் ஒரு டயானா "கஞ்சா" கமகே சிங்கைக்கும் கிடைத்திருந்தால் தங்கராஜு வாழ்விலும் வசந்தம் வீசியிருக்கும், 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

எனது சகோதரர் குறித்த வழக்கு நியாயமான விதத்தில் இடம்பெற்றதாக நாங்கள் கருதவில்லை எங்கள் ஜனாதிபதி மீது எனக்கு நம்பிக்கையுள்ளது அவர் மனுவை வாசிப்பார் என கருதுகின்றேன் என  சகோதரி லீலாவதி சுப்பையா தெரிவித்துள்ளார். இளவயதிலிருந்து எனது சகோதரர்இரக்ககுணமிக்கவர் அனைவராலும் விரும்பப்பட்டவர் அவர் எவருக்கும் எந்த தீமையும் செய்யவில்லை அவர் தனது குடும்பத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்தார் என சகோதரி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

ஆறுமாதகாலப்பகுதியில் சிங்கப்பூர் முதல்தடவையாக மரணதண்டனையை நிறைவேற்றவுள்ளது. 2017 இல் கஞ்சா வைத்திருந்தார் என அதிகாரிகள் சுப்பையாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர். தாய்லாந்து உட்பட பல நாடுகளில் கஞ்சா  வைத்திருப்பது குற்றமற்ற செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மரண்தண்டனையை கைவிடவேண்டும் என மனித உரிமை அமைப்புகள்வேண்டுகோள் விடுத்துவருகின்றன.

இந்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதத்தில் பல தவறுகளும் பிழைகளும் உள்ளதாக குடும்ப உறுப்பினர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/153596

இவர்கள் சிங்கப்பூரிலேயே.... பிறந்து வளர்ந்த அந்த நாட்டு குடிமக்கள் போலுள்ளது.
சிங்கப்பூர், மலேசிய சட்டங்கள்... சில போதை பொருளுக்கு  எதிராக கடுமையான 
நடவடிக்கைகள் எடுக்கும் என்பதை இவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

ஏற்கெனவே... இதற்காக பல மரண தண்டனைகளை விதித்ததையும் 
அந்நிய நாட்டில் வாழும் நாமே... பத்திரிகைகள் வாயிலாக அறிந்திருக்கும் போது,
இவர்களுக்கு அந்தச் சட்டத்தின்  வீரியம் தெரியாமல் போனது ஆச்சரியமாக  உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கராஜுவின் மரணதண்டனை: ரிச்சர்ட் பிரான்சனின் கருத்தை சாடுகிறது சிங்கப்பூர்

Published By: SETHU

25 APR, 2023 | 01:48 PM
image

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கப்பூர் நபரான தங்கராஜு சுப்பையாவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டாம் என பிரித்தானிய கோடீஸ்வரர் ரிச்சர்ட பிரான்சன் வலியுறுத்தியுள்ளார். 

ஓர் அப்பாவி மனிதரை அதிகாரிகள் கொல்லவிருக்கிறார்கள் போலும் என, வேர்ஜின் குழும நிறுவனத்தின் ஸ்தாபகர் சேர் ரிச்சர்ட் பிரான்சன் கூறியுள்ளார்.  

1017.9 கிராம் கஞ்சா வைத்திருந்தமை தொடர்பான வழக்கில் தங்கராஜு சுப்பையா (46) குற்றவாளி என 2017 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. 2018 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நாளை புதன்கிழமை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தங்கராஜுவுக்கு  மன்னிப்பு வழங்க வேண்டும் என அவரின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

இந்நிலையில், 'தங்கராஜா கைது செய்யப்படும்போது, அப்போதைப்பொருள் அவரிடம் இருக்கவில்லை. இது பெருமளவு அனுமானங்களின் அடிப்படையிலான சந்தர்ப்பசூழ்நிலை வழக்கு' என ரிச்சர்ட் பிரான்ஸன் கூறியுள்ளார்.

இந்த வழக்கை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்வர் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். போதைப்பொருள் கொள்கை ஆணைக்குழு எனும் ஜெனீனாவைத் தளமாக்க கொண்ட அமைப்பின் அங்கத்தவராக பிரான்சன் விளங்குகிறார்.  

சிங்கப்பூர் 2 வருட இடைவெளியின் பின்னர் 2022 மார்ச்சில் மரண தண்டனையை நிறைவேற்ற ஆரம்பித்தது. இறுதியாக 6 மாதங்களுக்கு முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அப்பாவி ஒருவரை அதிகாரிகள் கொல்லவிருக்கிறார்கள் போலும் என்ற ரிச்சர்ட் பிரான்சனின் கருத்தை சிங்கப்பூர் அரசாங்கம் இன்னு கடுமையாக சாடியள்ளது.

தங்கராஜுவின் குற்றம், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என சிங்கப்பூர் உள்துறை அமைச்சு இன்று விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/153710

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளிலும் கருணை எதிர்பார்க்க முடியாது. 

இதன் காரணமாகவே, இலங்கை இந்தியா, போலல்லாது, மக்கள் போதைப்பொருள்களில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.

அதேவேளை இந்த இளைஞருக்கு அனுதாபங்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் சிங்களப்பூர் ஆகாமல் இருப்பதற்குக் காரணமே அந்ந்த நாட்டின் சட்டதிட்டங்கள்தான். 

சிங்கப்பூர் சிங்கப்பூராகவே இருக்க வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

சிங்கப்பூர் சிங்களப்பூர் ஆகாமல் இருப்பதற்குக் காரணமே அந்ந்த நாட்டின் சட்டதிட்டங்கள்தான். 

சிங்கப்பூர் சிங்கப்பூராகவே இருக்க வாழ்த்துக்கள். 

அதே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கராஜு சுப்பையா: விடிந்தால் தூக்கு - சிங்கப்பூர் தமிழருக்கு எதிரான கஞ்சா வழக்கில் என்ன நடந்தது?

தங்கராஜ் சுப்பையா

பட மூலாதாரம்,TRANSFORMATIVE JUSTICE COLLECTIVE

 
படக்குறிப்பு,

தங்கராஜ் சுப்பையா

4 மணி நேரங்களுக்கு முன்னர்

சிங்கப்பூரில் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் மரண தண்டனை, நாளை கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டில் வாழும் தமிழர் ஒருவருக்கு நிறைவேற்றப்பட உள்ளது.

அவரை காப்பாற்ற கடைசி கட்ட முயற்சியாக கருதப்படும் கருணை மனு மறுஆய்வு சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் தங்கராஜு சுப்பையா என்ற அந்த தமிழரின் தண்டனை நிறைவேற்றம் உறுதியாகியிருக்கிறது.

மரணத்தின் கடைசி நேரத்தை அந்த நபர் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், பலவீனமான சாட்சியங்கள் அடிப்படையில் தங்கராஜு சுப்பையா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அரசு அதிகாரிகளோ தண்டனை விதித்தலுக்கு முந்தைய அனைத்து நடைமுறை மற்றும் வாய்ப்புகளை தங்கராஜு பெற்றதாகவும், புதன்கிழமை அவரது மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் அறிவுசார் குறைபாடுள்ள ஒருவருக்கு கடந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த தண்டனை நிறைவேற்றப்பட்ட ஓராண்டுக்குள் மற்றொரு மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு சிங்கப்பூர் அரசு தயாராகி வருகிறது.

சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் உள்ளன. அவை சமூகத்தைப் பாதுகாக்க அவசியம் என்று வாதிடுகிறது அந்நாட்டு அரசு.

தங்கராஜு சுப்பையாவின் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் சமீபத்திய நாட்களில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு மரண தண்டனை மன்னிப்பு வழங்கக் கோரும் மனுக்களை கடைசி கட்ட முயற்சியாக அளித்திருந்தனர்.

இந்நிலையில், மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பவரான பிரிட்டிஷ் பெரும் கோடீஸ்வரர் சர் ரிச்சர்ட் பிரான்சன் தங்கராஜுவின் மரண தண்டனையை நிறுத்தவும் அவர் மீதான வழக்கை மறுபரிசீலனை செய்யவும் அழைப்பு விடுத்துள்ளார்.

தங்கராஜுவின் சகோதரி லீலா சுப்பையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனது சகோதரர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும். அவரது வழக்கை ஆரம்பத்திலிருந்து விசாரிக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்," என்று கூறினார்.

என்ன வழக்கு?

சிங்கப்பூர் தமிழர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தங்கராஜு சுப்பையாவின் சகோதரி லீலாவதி சுப்பையா (மனுவுடன் இருப்பவர்), ஏப்ரல் 23ஆம் தேதி சிங்கப்பூரில் கருணை மனுவுடன் அதிபர் அலுவலகத்துக்கு செல்லும் முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

46 வயதான தங்கராஜு, 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை டெலிவரி செய்யும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.

டெலிவரி செய்யும் போது அவர் பிடிபடவில்லை என்றாலும், அந்த கஞ்சா கைமாறும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர் வகித்தார் என்று அரசு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். மேலும் தங்கராஜுவுக்காக டெலிவரி செய்த நபர் பயன்படுத்திய இரண்டு செல்பேசிகளும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் தாம் இல்லை என்று தங்கராஜு வாதிட்டார். தமது ஒரு செல்பேசி தொலைந்து போய் விட்டதாகவும் போலீஸார் கண்டுபிடித்த மற்றொரு செல்பேசி தன்னுடையது இல்லை என்றும் தங்கராஜு மறுத்தார்.

சிங்கப்பூர் சட்டம் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையை கட்டாயமாக்குகிறது. அதை விநியோகிக்கும் நபர்களுக்கு குறைவான தண்டனைகள் விதிக்கப்படும்.

இந்த வழக்கில் தங்கராஜுவின் கடைசி மேல்முறையீட்டில், கஞ்சா டெலிவரியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வகித்தது தங்கராஜு தான் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க முகாந்திரம் இருப்பதாக நீதிபதி கூறினார். இதனால் மென்மையான தண்டனைக்கு தங்கராஜு தகுதியற்றவர் ஆகிறார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

செயல்பாட்டாளர்கள் கவலை

தங்கராஜுவுக்கு மொழிபெயர்ப்பாளருக்கான போதிய அணுகல் வழங்கப்படவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் ஒரு வழக்கறிஞரைப் பெற முடியாமல் போனதால் தனது கடைசி மேல்முறையீட்டை தங்கராஜுவே வாதிட வேண்டியிருந்தது என்றும் செயல்பாட்டாளர்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.

ஆனால், இந்த வழக்கு விசாரணையின்போது தான் தங்கராஜு மொழிபெயர்ப்பாளரைக் கோரினார் என்றும் அதற்கு முன்பாக அவர் அதை கோரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மற்றபடி வழக்கின் அனைத்து விசாரணை நடைமுறைகளின் போதும் அவருக்கு சட்ட உதவி கிடைத்தது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூர் தமிழர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2022 ஆம் ஆண்டு அறிவுத்திறன் குறைபாடு உடைய நாகேந்திரன் தர்மலிங்கம் வேறொரு வழக்கில் தூக்கிலிடப்பட்டார். அந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த சர் ரிச்சர்ட் பிரான்சன், தங்கராஜுவின் வழக்கு "பல நிலைகளில் அதிர்ச்சியளிக்கிறது" என்று கூறுகிறார்.

ஒரு வலைப்பதிவு இடுகையில், சிங்கப்பூர் "சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளின் 'பின்னணியில்' ஒரு நிரபராதியை கொல்லப் போகிறது" என்று ரிச்சர்ட் கூறியுள்ளார்.

"சிங்கப்பூரின் நற்பெயருக்கு ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கும் வழக்கம், ஒரு அழியாத கறையாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பற்ற தண்டனையை (மரண தண்டனை) நிறைவேற்றுவது பிரச்னையை மேலும் மோசமாக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ரிச்சர்ட்டின் குற்றச்சாட்டுகளை மறுத்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம், அவரது கூற்றுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் "சிங்கப்பூர் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பை அவர் அவமதிக்கிறார்" என்றும் குற்றம்சாட்டியது.

சிங்கப்பூரை பாதுகாப்பாக்கும் அரசின் பல்நோக்கு அணுகுமுறையில் மரணதண்டனை "ஒரு முக்கிய அங்கம்" என்றும் உள்துறை கூறுகிறது.

சிங்கப்பூர் தமிழர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிங்கப்பூர் மரண தண்டனைக்கு எதிரான வழக்கறிஞர் குழுவான டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் (TJC) செய்தித் தொடர்பாளர் கிர்ஸ்டன் ஹான், இந்த விஷயத்தில் அரசாங்கம் அழுத்தத்திற்கு உள்ளாக விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

"சர்வதேச அரங்கிலும் ஐ.நா.விலும் சிங்கப்பூர் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில், குடிமக்களின் பெயரால் மக்களைக் கொல்லும் உரிமையைப் பாதுகாப்பது சிறப்பானது என்பதற்காக அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டியதில்லை," என்று அவர் கூறினார்.

அண்டை நாடுகளில் என்ன நிலைமை?

தங்கராஜு சுப்பையா

பட மூலாதாரம்,EPA

சிங்கப்பூரின் கடுமையான விதிகள் அதன் அண்டை நாடுகளின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு முரணாக உள்ளன.

தாய்லாந்து அரசாங்கம், கஞ்சா வர்த்தகத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது. அதே நேரத்தில் மலேசியா கடுமையான குற்றங்களுக்கான கட்டாய மரண தண்டனை விதித்தலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தங்கராஜுவின் குடும்பத்தினர், தூக்கிலிடப்படும் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானதையடுத்து, சாங்கி சிறையில் கண்ணாடி கூண்டுக்கு பின்னால் இருந்து தங்கராஜுவை சந்திக்க முடிந்தது," என்று தெரிவித்தனர்.

"அவர் என் அம்மா உடைந்து விடுவதை விரும்பாததால், துணிச்சலுடன் இருப்பதாக காட்டிக் கொண்டார்," என்று தங்கராஜுவின் மருமகள் சுபாஷினி இளங்கோ கூறினார்.

"இந்த நாள் வருவதற்கு அவர் மனதளவில் தயாராகிவிட்டார். இந்த வழக்கில் தனக்கு பெரிய அநீதி இழைக்கப்படுவதை அவர் உணர்கிறார். செய்யாத காரியத்துக்காக அவர் தூக்கிலிடப்படுவார்," என்று அவர் தெரிவித்தார்.

தங்கராஜுவின் மரணம், தூக்கு தண்டனையில் முடிந்தாலும் கூட சிங்கப்பூரின் சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று தங்கராஜுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

"என் அண்ணனுக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்கலாம். அது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. அதனால் தொடர்ந்து போராடுவேன், என்கிறார் தங்கராஜுவின் சகோதரி லீலா.

கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து தங்கராஜுவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா என்ற ஏக்கத்தில் அவர்கள் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.

https://www.bbc.com/tamil/articles/c10qgl2vgydo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Kapithan said:

சிங்கப்பூர் சிங்களப்பூர் ஆகாமல் இருப்பதற்குக் காரணமே அந்ந்த நாட்டின் சட்டதிட்டங்கள்தான். 

சிங்கப்பூர் சிங்கப்பூராகவே இருக்க வாழ்த்துக்கள். 

ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் மரணதண்டனை சட்டம் இல்லை.இருந்தாலும் அந்தந்த நாடுகள் சட்டங்கள் ஒழுங்குகளுடனேயே இயங்குகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் மரணதண்டனை சட்டம் இல்லை.இருந்தாலும் அந்தந்த நாடுகள் சட்டங்கள் ஒழுங்குகளுடனேயே இயங்குகின்றன.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. 

ஆனாலும், மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், ஆபிரிக்க, தென்னாசிய தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் சடம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகளை நாளடைவில் ஏற்படுத்தும் 

😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர்: கஞ்சா வழக்கில் தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா - கடைசி நேரத்தில் என்ன நடந்தது?

சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு

பட மூலாதாரம்,TRANSFORMATIVE JUSTICE COLLECTIVE

 
படக்குறிப்பு,

சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தங்கராஜூ சுப்பையா

2 மணி நேரங்களுக்கு முன்னர்

சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக தமிழர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை வேண்டாம் என்று ஐ.நா. உள்பட உலகம் முழுவதும் இருந்து வந்த வேண்டுகோள்களை சிங்கப்பூர் அரசு புறந்தள்ளிவிட்டது.

தங்கராஜூ சுப்பையா(46) என்கிற அந்த நபருக்கு சாங்கி சிறைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறினர்.

பலவீனமாக சாட்சிகள், விசாரணையின் போது மிகக் குறைந்த சட்ட உதவி ஆகியவற்றைக் கொண்டே அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதாக மரண தண்டனைக்கு எதிரான ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சிறைச்சாலையில் திரண்ட தங்கராஜூ சுப்பையா உறவினர்கள்

ஆனால், எல்லாம் உரிய முறைப்படி நடந்ததாகக் கூறும் சிங்கப்பூர் அரசு அதிகாரிகள், நீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் ஆர்வலர்களை விமர்சிக்கின்றனர்.

 

தூக்குத்தண்டனை நிறைவேற்றத்தை முன்னிட்டு, சாங்கி நகரின் கிழக்கில் உள்ள சிறைச்சாலையில் தங்கராஜ் சுப்பையாவின் உறவினர்கள் திரண்டிருந்தனர்.

தங்கராஜுவின் வாழ்க்கை, தூக்கு தண்டனையில் முடிந்தாலும் கூட சிங்கப்பூரின் சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று தங்கராஜுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

"என் அண்ணனுக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்கலாம். அது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. அதனால் தொடர்ந்து போராடுவேன், என்கிறார் தங்கராஜுவின் சகோதரி லீலா.

"கடைசி வரை அவரை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று குடும்பத்தினர் கூறினர். இது அவர்களுக்கு ஒரு வேதனையான அனுபவம்," என்று பிபிசியிடம் மரண தண்டனைக்கு எதிரான செயல்பாட்டாளர் கிர்ஸ்டன் ஹான் தெரிவித்தார்.

"இந்த வழக்கிலும், தங்கராஜ் சுப்பையாவுக்கு எதிரான ஆதாரங்களிலும் அவர்களுக்கு இன்னும் பல விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன" என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தங்கராஜுவின் சகோதரி லீலா

தங்கராஜூ மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

46 வயதான தங்கராஜு, 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை டெலிவரி செய்யும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.

டெலிவரி செய்யும் போது அவர் பிடிபடவில்லை என்றாலும், அந்த கஞ்சா கைமாறும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர் வகித்தார் என்று அரசு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். மேலும் தங்கராஜுவுக்காக டெலிவரி செய்த நபர் பயன்படுத்திய இரண்டு செல்பேசிகளும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் தாம் இல்லை என்று தங்கராஜு வாதிட்டார். தமது ஒரு செல்பேசி தொலைந்து போய் விட்டதாகவும் போலீஸார் கண்டுபிடித்த மற்றொரு செல்பேசி தன்னுடையது இல்லை என்றும் தங்கராஜு மறுத்தார்.

சிங்கப்பூர் சட்டம் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையை கட்டாயமாக்குகிறது. அதை விநியோகிக்கும் நபர்களுக்கு குறைவான தண்டனைகள் விதிக்கப்படும்.

2018-ம் ஆண்டு தங்கராஜூ சுப்பையா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அவரது குடும்பத்தினர் செய்த கடைசி நேர மேல் முறையீடுகளை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் நிராகரித்து விட்டன.

இந்த வழக்கில் தங்கராஜுவின் கடைசி மேல்முறையீட்டில், கஞ்சா டெலிவரியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வகித்தது தங்கராஜு தான் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க முகாந்திரம் இருப்பதாக நீதிபதி கூறினார். இதனால் மென்மையான தண்டனைக்கு தங்கராஜு தகுதியற்றவர் ஆகிறார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மனித உரிமை ஆர்வலர்கள் கவலை

தங்கராஜுவுக்கு மொழிபெயர்ப்பாளருக்கான போதிய அணுகல் வழங்கப்படவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் ஒரு வழக்கறிஞரைப் பெற முடியாமல் போனதால் தனது கடைசி மேல்முறையீட்டை தங்கராஜுவே வாதிட வேண்டியிருந்தது என்றும் செயல்பாட்டாளர்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.

ஆனால், இந்த வழக்கு விசாரணையின்போது தான் தங்கராஜு மொழிபெயர்ப்பாளரைக் கோரினார் என்றும் அதற்கு முன்பாக அவர் அதை கோரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2022 ஆம் ஆண்டு அறிவுத்திறன் குறைபாடு உடைய நாகேந்திரன் தர்மலிங்கம் வேறொரு வழக்கில் தூக்கிலிடப்பட்டார். அந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த சர் ரிச்சர்ட் பிரான்சன், தங்கராஜுவின் வழக்கு "பல நிலைகளில் அதிர்ச்சியளிக்கிறது" என்று கூறுகிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

"சிங்கப்பூரின் நற்பெயருக்கு ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கும் வழக்கம், ஒரு அழியாத கறையாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பற்ற தண்டனையை (மரண தண்டனை) நிறைவேற்றுவது பிரச்னையை மேலும் மோசமாக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ரிச்சர்ட்டின் குற்றச்சாட்டுகளை மறுத்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம், அவரது கூற்றுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் "சிங்கப்பூர் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பை அவர் அவமதிக்கிறார்" என்றும் குற்றம்சாட்டியது.

சிங்கப்பூரை பாதுகாப்பாக்கும் அரசின் பல்நோக்கு அணுகுமுறையில் மரணதண்டனை "ஒரு முக்கிய அங்கம்" என்றும் உள்துறை கூறுகிறது.

சிங்கப்பூர் மரண தண்டனைக்கு எதிரான வழக்கறிஞர் குழுவான டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் (TJC) செய்தித் தொடர்பாளர் கிர்ஸ்டன் ஹான், இந்த விஷயத்தில் அரசாங்கம் அழுத்தத்திற்கு உள்ளாக விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

"சர்வதேச அரங்கிலும் ஐ.நா.விலும் சிங்கப்பூர் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில், குடிமக்களின் பெயரால் மக்களைக் கொல்லும் உரிமையைப் பாதுகாப்பது சிறப்பானது என்பதற்காக அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டியதில்லை," என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

மரண தண்டனைக்கு எதிரான செயல்பாட்டாளர்களுடன் தங்கராஜூவின் சகோதரி லீலா

மலேசியாவில் மரண தண்டனை இல்லை - தாய்லாந்தில் கஞ்சா விற்க அனுமதி

சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் உள்ளன. அவை சமூகத்தைப் பாதுகாக்க அவசியம் என்று வாதிடுகிறது அந்நாட்டு அரசு.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் அறிவுசார் குறைபாடு உடையவரும் ஒருவர். ஹெராயின் கடத்தியதாகக் கூறி தூக்கில் போடப்பட்டார்.

போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் கடுமையான விதிகளும், மரண தண்டனையும் அதன் அண்டை நாடுகளின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு முரணாக இருப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மரண தண்டனையே கிடையாது என்று அறிவித்துள்ள மலேசியா, குற்றங்களைத் தடுப்பதற்கான அரணாக அது இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. கஞ்சா வர்த்தகத்தை அங்கீகரித்த உலகின் பல நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. அங்கே, கஞ்சா வர்த்தகம் ஊக்குவிக்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cndgx5zw97zo

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் பிரஜைகள் மேற்கு நாடுகளுக்கு வந்து போதைப் பொருள் பாவிப்பதற்கு சிங்கப்பூரின் வருமானம் பாவிக்கப்படுகிறது. இவர்களுக்கும் அதி உத்தம சிங்கப்பூர் மரண தண்டனை வழங்குமா..????!

என்ன மலே காரர் என்றால்.. கடத்தலாம்.. பாவிக்கலாம். தமிழன் என்றால்.. ஒரு போன் நம்பரை வைச்சே.. குற்றம் சாட்டி.. தூக்கில போடலாம். பிறகு.. தமிழனால் தான் சிங்கப்பூர் வளர்ந்தது என்றும்.. சொல்லிக்கிறது. அதே தமிழனை... தேவைக்கு ஏற்ப  பாவிச்சுக்கிறது. ஆக மொத்தத்தில் தமிழன் நாடில்லா.. நாதியில்லாத ஒரு பரதேசி. அவனை எவரும் என்னவும் செய்யலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

சிங்கப்பூர் பிரஜைகள் மேற்கு நாடுகளுக்கு வந்து போதைப் பொருள் பாவிப்பதற்கு சிங்கப்பூரின் வருமானம் பாவிக்கப்படுகிறது. இவர்களுக்கும் அதி உத்தம சிங்கப்பூர் மரண தண்டனை வழங்குமா..????!

என்ன மலே காரர் என்றால்.. கடத்தலாம்.. பாவிக்கலாம். தமிழன் என்றால்.. ஒரு போன் நம்பரை வைச்சே.. குற்றம் சாட்டி.. தூக்கில போடலாம். பிறகு.. தமிழனால் தான் சிங்கப்பூர் வளர்ந்தது என்றும்.. சொல்லிக்கிறது. அதே தமிழனை... தேவைக்கு ஏற்ப  பாவிச்சுக்கிறது. ஆக மொத்தத்தில் தமிழன் நாடில்லா.. நாதியில்லாத ஒரு பரதேசி. அவனை எவரும் என்னவும் செய்யலாம். 

👉//2022 ஆம் ஆண்டு அறிவுத்திறன் குறைபாடு உடைய நாகேந்திரன் தர்மலிங்கம் வேறொரு வழக்கில் தூக்கிலிடப்பட்டார். // https://www.bbc.com/tamil/articles/cndgx5zw97zo  👈

சென்ற முறை தூக்கிலிடப் பட்டதும் ஒரு தமிழனாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

👉//2022 ஆம் ஆண்டு அறிவுத்திறன் குறைபாடு உடைய நாகேந்திரன் தர்மலிங்கம் வேறொரு வழக்கில் தூக்கிலிடப்பட்டார். // https://www.bbc.com/tamil/articles/cndgx5zw97zo  👈

சென்ற முறை தூக்கிலிடப் பட்டதும் ஒரு தமிழனாம்.

யாழில் இந்தச் செய்தியும் இணைக்கப்பட்டிருக்கு அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

யாழில் இந்தச் செய்தியும் இணைக்கப்பட்டிருக்கு அண்ணை.

தேடி எடுத்து தந்தமைக்கு நன்றி ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனை என்பது மிக மோசமான தண்டனை முறையாகும். ஏனென்றால் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டாலும் அதை நஷ்ர ஈடு வழங்கி போன உயிரை திரும்ப கொண்டுவர முடியாது. 

ஆனால்,  

சிங்கப்பூர்  சட்டப்படி போதை வஸ்து கடத்தலுக்கு மரண தண்டனை என்றால் குற்றவாளிக்கு இன பேதமின்றி மரண தண்டனை என்பது சரி தான். தமிழேண்னா என்று ஒரு மோசமான குற்றவாளிக்கு வக்காலத்து வாங்கி ஒப்பாரி வைக்கத் தேவையில்லை. 

4 hours ago, nedukkalapoovan said:

 

என்ன மலே காரர் என்றால்.. கடத்தலாம்.. பாவிக்கலாம். தமிழன் என்றால்.. ஒரு போன் நம்பரை வைச்சே.. குற்றம் சாட்டி.. தூக்கில போடலாம். பிறகு.. தமிழனால் தான் சிங்கப்பூர் வளர்ந்தது என்றும்.. சொல்லிக்கிறது. அதே தமிழனை... தேவைக்கு ஏற்ப  பாவிச்சுக்கிறது. ஆக மொத்தத்தில் தமிழன் நாடில்லா.. நாதியில்லாத ஒரு பரதேசி. அவனை எவரும் என்னவும் செய்யலாம். 

தமிழனை மட்டும் குறிவைத்து தண்டனை கொடுக்கப்படவில்லை.  2023 இற்கு முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 9 பேரில் 2 அல்லது 3 பேர் தான் தமிழ் பெயர்களை கொண்டவர்கள். மலேசியர்களும் , சீனர்களும் கூட இதில் உள்ளனர்.

https://en.wikipedia.org/wiki/Capital_punishment_in_Singapore

29 minutes ago, island said:

 

சிங்கப்பூர்  சட்டப்படி போதை வஸ்து கடத்தலுக்கு மரண தண்டனை என்றால் குற்றவாளிக்கு இன பேதமின்றி மரண தண்டனை என்பது சரி தான். தமிழேண்னா என்று ஒரு மோசமான குற்றவாளிக்கு வக்காலத்து வாங்கி ஒப்பாரி வைக்கத் தேவையில்லை. 

தமிழ் தாயின் தமிழ் பால் குடித்து வளர்ந்தவர்கள் குற்றம் செய்வார்களா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரின் நீதியில் சந்தேகிக்க முடியாது நெடுக்கர். @nedukkalapoovan

லீ குவான் யூ பிரதமர். முதன் முதலாக, அவரது ஒரு அமைச்சர் கையூட்டு வாங்கினார் என கைதாக போகிறார் என்று செய்தி பரவுகிறது. அமைச்சர், ஓடிப்போய், பிரதமர் முன்னாள் நிக்கிறார். காப்பாத்துவார் என்று.

ஒரு பார்வை பார்த்துவிட்டு, தப்பு செய்திருந்தால், கைதாகு, இல்லாவிடில் செத்துப்போய்விடு. விசயம் சிம்பிள். போக முன்னர், ராஜினாமா செய்து விட்டு செல், நான் பதவி நீக்கம் செய்தால் உனக்கு மரியாதை இல்லை என்று சொல்லி விட்டார்.

அவர், வீடு திரும்பி, உயிரை மாய்த்துக்கொண்டார். அடுத்த நாள், அமைச்சரவையில் சொன்னார் லீ, உங்களுக்கு கூடிய சம்பளம் வேண்டுமானால், இங்கே பேசி முடிவு செய்யுங்கள். நாம் யாருக்கும் அதுகுறித்து விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை. லஞ்சம் வாங்காமல், சம்பளம் கூடுதலாக எடுப்பதில் தவறில்லையே என்றார்.

பல ஆண்டுகள் முன், லண்டனில் இருந்து சென்ற ஒரு உறவினர் கதை: சந்தை ஒன்றில் பொருள் வாங்க விலை கேட்டிருக்கிறார். பேரம் பேசி, கடைசியில் இந்த விலைக்கும்  வேண்டாம் என்று கிளம்ப, அந்த வியாபாரி, கொதியில், தலையில் ஒரு போடு போட்டு விட்டார், கையில் இருந்த கத்தியின் பிடியால்.

ரத்தம், கொட்ட, போலீஸ் வர.... வைத்தியசாலை போய், லண்டன் திரும்பி விட்டார். கொலை முயற்சி வழக்கில், அந்த கடைக்காரருக்கு எதிராக சாடசியம் சொல்ல, அவருக்கு, இலவச பிசினஸ் கிளாஸ் விமானசீட்டும், ஹோட்டல் வசதியும் செய்து கொடுத்து அழைத்து இருந்தார்கள். கடைக்காரருக்கு 5 வருட தண்டனையும், தண்டனை முடிந்து, நாடுகடத்தலும், ஒரு போதுமே சிங்கப்பூர் வரமுடியாது என்ற தடையும்.

அமெரிக்க 18 வயது இளைஞர் ஒருவர், சிங்கப்பூரில் போன இடத்தில், ஸ்பிரே பெயிண்ட் கான் ஒன்றினை வைத்து, கார்களை எல்லாம், பெயிண்ட் பண்ணி குறும்பு செய்தார். அவரை கைது செய்து, 50 பிரம்படி. அமெரிக்க ஜனாதிபதி மன்னிக்குமாறு கேட்டும், தண்டனை கொடுத்தே, அனுப்பி வைத்தார்கள். 

தலைமைத்துவமே ஒரு நாட்டின் நீதி, நெறிமுறைக்கு முக்கிய காரணம்.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

தமிழனை மட்டும் குறிவைத்து தண்டனை கொடுக்கப்படவில்லை.  2023 இற்கு முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 9 பேரில் 2 அல்லது 3 பேர் தான் தமிழ் பெயர்களை கொண்டவர்கள். மலேசியர்களும் , சீனர்களும் கூட இதில் உள்ளனர்.

தமிழர்கள் என்றால் அவர்கள்  குற்றம் செய்யமாட்டார்எள் என்ற மனப் பிரமையை,  மாயையை எமக்குள் நாமே (எமக்குள் மட்டும்)  பரப்புவதும் குற்றவாளியாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தால் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் தான் தமிழ் தேசியம் என்ற தவறான புரிதலே இவ்வாறாக இணையங்களிலும் முக நூல்களிலும் சகட்டு மேனிக்கு எழுத தூண்டுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

தலைமைத்துவமே ஒரு நாட்டின் நீதி, நெறிமுறைக்கு முக்கிய காரணம்.

அது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூக்கு தண்டனையின் விளிம்பில் மகன்; விவரம் தெரியாமல் சந்தித்து பேசிய தாய்

சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தங்கராஜூ சுப்பையா

பட மூலாதாரம்,TRANSFORMATIVE JUSTICE COLLECTIVE

2 மணி நேரங்களுக்கு முன்னர்

சரியாக காலை ஆறு மணிக்கு தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கடுமையான தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அந்த வகையில் போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கிலிடப்பட்டோர் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பவர் தங்கராஜு சுப்பையா.

சிங்கப்பூரில் கடைசியாக 2022 அக்டோபர் மாதம் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டில் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் தங்கராஜு.

உலகளவில் தற்போது 110 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துவிட்டன.

 

இந்நிலையில் சிங்கப்பூர் உள்ளிட்ட நான்கு நாடுகள் மட்டுமே போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுகின்றன என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் சுட்டிக்காட்டுகிறது.

இதற்குப் பதிலளித்துள்ள சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம், போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான சட்டங்களால் பல்லாயிரம் மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதாகக் கூறியுள்ளார்.

மரணத்தின் விளிம்பில் மகன்; விவரம் தெரியாமல் சந்தித்துப் பேசிய தாய்

"அனைவரும் எதிர்பார்த்த நிகழ்வுதான். எனினும், சக மனிதனின் உயிரிழப்பை ஜீரணித்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல," என்கிறார் சமூக செயல்பாட்டாளர் கோகிலா அண்ணாமலை.

தூக்குக் கயிற்றின் பிடியில் இருந்து தங்கராஜுவை மீட்டெடுக்கப் போராடியவர்களில் இவரும் ஒருவர். தங்கராஜுவின் கடைசித் தருணங்கள் குறித்து தமது முகநூல் பக்கத்தில் விரிவாகப் பதிவிட்டுள்ளார் கோகிலா.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) காலை சிங்கப்பூர் சிறையில் இருந்த தனது மகனை பார்க்க தங்கராஜுவின் தாயார் திருமதி பாப்பாவை தாம் அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டார்.

"சிறைக்குச் செல்லும் வழியில் உற்சாகமாகப் பேசியபடியே இருந்தார் திருமதி பாப்பா. முதுமை காரணமாக நர்சிங் ஹோம் ஒன்றில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

"நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகனை சந்திக்கப் போகும் ஒரு தாயின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தனது குடும்பத்துக்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட பெண்மணி அவர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சாலைத் துப்பரவுத் தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார்.

"மகன் தங்கராஜுவை மறுநாள் தூக்கிலிடப் போகிறார்கள் என்ற விவரம் அவருக்குத் தெரியாது. மகன் தன்னிடம் நன்றாகப் பேசியதாகவும், தங்கராஜுவின் கடந்தகால பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தனது திருமண நாள் குறித்தெல்லாம் பேசி மகிழ்ந்ததாகவும் கூறினார்.. என் மகன் தங்கராஜு நன்றாக இருக்கிறார். இதை அவரே என்னிடம் தெரிவித்தார் என்று மகனுடனான சந்திப்பு குறித்து அந்த மூதாட்டி என்னிடம் குறிப்பிட்டபோது வருத்தமாக இருந்தது. இனி அம்மூதாட்டியால் தனது வாழ்நாளின் இறுதி வரை தன் மகனை மீண்டும் சந்திக்கவே இயலாது. மகனின் குரலைக் கேட்க முடியாது என்ற உண்மை என் மனதை தாக்கியபோது, சில நொடிகளுக்கு நானும் நிலைகுலைந்து போனேன்," என்கிறார் கோகிலா அண்ணாமலை.

ஒரு வாரப் போராட்டம்; நிறைவேற்றப்படும் கைதிகளின் கடைசி விருப்பம்

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் ஒருவாரத்துக்கு முன்னர் சம்பந்தப்பட்ட கைதிக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கிறது.

அதன் பிறகு கைதியும் குடும்பத்தினரும் அனுபவிக்கும் மன உளைச்சலை வார்த்தைகளில் விவரிக்க இயலாது என்கிறார் கோகிலா.

தூக்குத்தண்டனையை எதிர்நோக்குபவரின் சின்னச்சின்ன ஆசைகளை நிறைவேற்றுகிறது சிங்கப்பூர் சிறைத்துறை. அதன்படி, மரண தண்டனைக் கைதி தனக்குப் பிடித்தமான உடையை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

குடும்பத்தாருக்கு விவரம் தெரிவித்து, தமக்குப் பிடித்தமான உணவுகளைக் கொண்டு வரச் செய்து சாப்பிடலாம்.

தங்கராஜுவுக்கு இந்தச் சலுகைகள் வாய்த்தன. அவரும் தனது குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்து, சிக்கன் ரைஸ், பிரியாணி, ஐஸ்கிரீம் சோடா, மைலோ பானத்தின் சுவைகொண்ட இனிப்புகள் ஆகியவற்றைச் சாப்பிட்டுள்ளார்.

எனினும், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் அதிகமாக உணவு உட்கொண்டதில் தனது உடல் எடை சுமார் பத்து கிலோ அளவுக்கு கூடிவிட்டதாகவும் அதன் காரணமாக தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவதாகவும் தங்கராஜு கூறியுள்ளார்.

"எடை கூடிவிட்டால் தூக்கிலிடப்படும்போது எனது உயிர் பிரிய அதிக நேரம் பிடிக்குமோ என்னவோ?" என்றும் அவர் குடும்பத்தாரிடம் கூறினாராம்.

எந்தவிதமான சலனமும் இன்றி அவர் இவ்வாறு குறிப்பிட்டதை வாழ்நாள் முழுவதும் மறக்கவே இயலாது என்கிறார் தங்கராஜுவின் சகோதரி லீலா.

kokila
 
படக்குறிப்பு,

"எதிர்பார்த்த நிகழ்வுதான். எனினும், சக மனிதனின் உயிரிழப்பை ஜீரணித்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல," - கோகிலா

ஒரு வாரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ள கைதி, தன்னைப்போன்றே மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் மற்ற கைதிகளுக்கும் பிடித்த உணவுகளை வாங்கிக்கொடுக்கலாம்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட தங்கராஜு, மீன் பர்கர், curry puffs (சமோசா போன்ற தின்பண்டம்), குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கித் தந்துள்ளார்.

இறக்கும் முன்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ள தங்கராஜு விரும்பவில்லை. எனினும் குடும்ப உறவினர் ஒருவர் விடுத்த உருக்கமான வேண்டுகோளை அடுத்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள சம்மதித்துள்ளார்.

"குடும்பத்தாருடன் கடந்த காலங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எடுத்து வரச் செய்து, அவற்றைப் பார்த்து பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார். அந்த இனிமையான நினைவுகள் தன்னை தூங்கவிடவில்லை என்றும் பின்னர் கூறினார்.

தண்டனை நிறைவேற்றப்பட சில மணி நேரங்கள் மட்டுமே இருந்த நிலையில், தங்கராஜு சார்பில் கடைசி நேர முயற்சியாக சிங்கப்பூர் அதிபரிடம் மேலும் ஒரு கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பலன் இல்லை.

"தங்கராஜுவின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை"

"அப்பு (தங்கராஜுவை இப்படியும் குறிப்பிடுகிறார்) தனக்குப் பிடித்தமான இசையைக் கேட்டு ரசிக்க, சிடீக்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும் சிடீக்கள் வாங்கும் பொருட்டு பணம் செலவழிக்க விரும்பவில்லை. அந்தத் தொகையை குடும்பத்துக்கு அளிக்க விரும்பினார்.

"ஒருவேளை மட்டுமே உணவருந்தினால் எனது எடை குறைவாக இருக்கும். அதனால் என் சடலத்தை தூக்கிச் செல்பவர்களின் சிரமும் குறையும் அல்லவா?" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

"தங்கராஜுவின் இரண்டு இறுதி ஆசைகளை எங்களால் நிறைவேற்ற முடியாமல் போனது. மலேசியாவின் சிலாங்கூர் நகரில் உள்ள கோவிலில் இருந்து ஹனுமன் ரூத்ராட்சியும் குங்குமமும் வேண்டும் என்று கேட்டார். அவற்றுக்கு ஏற்பாடு செய்தோம்.

"எனினும் சிறைத்துறை அவற்றை தங்கராஜுக்கு அளிக்க அனுமதிக்கவில்லை. அவரது உயிரை எடுத்துக்கொள்ளும் நிலையில், இதுபோன்ற சிறு விருப்பங்களையும் அவர்கள் அனுமதிக்க மறுப்பது ஏன்?" என்று தங்கராஜுவின் குடும்பத்தார் கேள்வி எழுப்புகின்றனர்.

"தூக்கிலிடப்படும் முன்பு சிறைக் காவலர்கள் தனக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இடத்தை காண்பிப்பர் என்றும் தூக்கிலிடப்படும் முறை குறித்து விவரிப்பர் என்றும் குடும்பத்தாரிடம் தங்கராஜு கூறியுள்ளார். இதற்கு முன்பு எந்தக் கைதியும் இவ்வாறு தகவல் தெரிவித்ததில்லை என்றே நினைக்கிறேன்.

"தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் தங்கராஜுவின் பொருள்களை சிறை நிர்வாகம் அவரது குடும்பத்தாரிடம் அளித்தது. இத்தகவலை அவரது குடும்பத்தார் என்னிடம் தெரிவித்தபோது அவர்களுடைய குரலில், இழப்பால் ஏற்பட்ட ஒருவித நடுக்கம் இருப்பதை உணர்ந்தேன். இனி தங்கராஜுவை பார்க்க இயலாது. இந்நிலையில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அப்பொருள்களைப் பார்க்கும்போது குடும்பத்தாருக்குப் பலதரப்பட்ட உணர்வுகள் ஏற்படவே செய்யும்.

"தங்கராஜவின் உடைகள், கைதாகும்போது அவர் அணிந்திருந்த மோதிரம், காலணிகள், கையில் கட்டியிருந்த புனித கயிறு ஆகியவற்றை மட்டுமே இனி அவரது நினைவாக குடும்பத்தார் வைத்திருக்க இயலும்," என்கிறார் கோகிலா.

தூக்கில் இருந்து தப்பித்தவரின் அனுபவங்கள்

"சிங்கப்பூரில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி ஏழு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

தூக்கிலிடப்படுவது உறுதியான நிலையில், மரண தண்டனைக் கைதி ஒருவர் அளிக்கும் 'சிறை விருந்துபசாரம்' குறித்து என்னிடம் பேசினார் அவர்.

"அப்போது, "அடுத்த ஓரிரு நாள்களில் மரணத்தை தழுவப்போகும் ஒரு மனிதர் நமக்கு அளிக்கும் விருந்தை எவ்வாறு ஏற்க முடியும். தட்டில் உள்ள உணவை எவ்வாறு சாப்பிட முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"அவ்வாறு அளிக்கப்படும் உணவையும் பானங்களையும் உட்கொள்ளும்போது ஒருவகையில் பயமாக இருக்கும் என்றார் அவர். என்னால் அவருக்குப் பதிலளிக்க முடியவில்லை," என்கிறார் கோகிலா.

தங்கராஜுவின் சகோதரி லீலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியாயமான முறையில் விசாரணை நடந்தது என சிங்கப்பூர் அரசு விளக்கம்

இதற்கிடையே எந்தவொரு குற்றத்திலும் ஈடுபடாத ஒருவருக்கு (தங்கராஜ்) சிங்கப்பூர் அரசாங்கம் தூக்கு தண்டனை வழங்கியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அந்த அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அவர் போதைப்பொருள்களை விநியோகித்தார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

தங்கராஜு தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும் போதைப்பொருள் (கஞ்சா) விநியோகத்திற்கு அவரது கைபேசி எண்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

"தங்கராஜு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியாயமான, வெளிப்படையான விசாரணை நடந்துள்ளது. சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என்று நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.

"அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இருந்தன. எனினும் குற்றச் செயல்களில் தாம் ஈடுபடவில்லை என்று தங்கராஜு கூறுவதை ஏற்பதற்கில்லை," என்று உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்தது.

சிங்கப்பூரில் போதைப்பொருள் பயன்பாடு, கடத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாட்டுக்கும் சட்டங்களுக்கும் அந்நாட்டு மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு உள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஊடகம் நடத்திய ஆய்வின்போது 95% பேர் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் சட்டங்களை குடிமக்களில் பெரும்பாலானோர் வரவேற்பதாக கூறப்பட்டாலும், தற்போது நிலைமை மாறி வருகிறது என்கிறார் சமூக செயல்பாட்டாளரான கிர்ஸ்டன் ஹென் (Kirsten Han).

பிபிசி தமிழிடம் பேசிய அவர், இதற்கு முன்பு போதைப்பொருள் சார்ந்த குற்றத்தில் சிக்கிய அறிவுசார் குறைபாடு உள்ளதாகக் கூறப்படும் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்படுவதை தடுத்து நிறுத்த இணையம் வழி விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று ஆன்லைன் மனுவில், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டதை சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே சில கடுமையான குற்றச்செயல்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் சண்முகம் கூறுகிறார்.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க அத்தண்டனை பயனளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்படுவதை அரசாங்கம் விரும்புவதில்லை. அதேசமயம் மக்களுக்கு எது சிறந்ததோ அதை அரசாங்கம் தொடர்ந்து செய்யவேண்டும்," என்றும் அமைச்சர் சண்முகம் இதற்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/ce7gner12pxo

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

தமிழர்கள் என்றால் அவர்கள்  குற்றம் செய்யமாட்டார்எள் என்ற மனப் பிரமையை,  மாயையை எமக்குள் நாமே (எமக்குள் மட்டும்)  பரப்புவதும் குற்றவாளியாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தால் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் தான் தமிழ் தேசியம் என்ற தவறான புரிதலே இவ்வாறாக இணையங்களிலும் முக நூல்களிலும் சகட்டு மேனிக்கு எழுத தூண்டுகிறது. 

தமிழர்கள் என்றால் அவர்கள்  குற்றம் செய்யமாட்டார்கள் என்ற மூடநம்பிக்கை சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. ஆனால் விடாமல் தொடர்ந்தும் தமிழர்களிடையே பரப்புகிறார்கள்.இதன் மூலம் குற்றம் செய்த தமிழரையும் காப்பாற்றுகிறார்கள். சிறு பெண்களிடம் பாலியல் வன்கொடுமை செய்தது குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் தான் என்பது பல பதிவாகி உள்ளன.வெளியாட்களோ வேறு இனத்தவரோ இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/4/2023 at 11:50, ஏராளன் said:
 

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கப்பூர் நபரான தங்கராஜு சுப்பையாவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டாம் என பிரித்தானிய கோடீஸ்வரர் ரிச்சர்ட பிரான்சன் வலியுறுத்தியுள்ளார். 

image

இந்த கோடீஸ்வரர் ஏன் அதிகம் கரிசனை கொள்கின்றார்?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹெரோயின் கடத்தலுக்காக இந்தோனிசியாவில் மரணதண்டனை கொடுக்கபட்ட அவஸ்ரேலிய இலங்கை தமிழருக்காகவும்  ரிச்சர்ட பிரான்சன்  மரதண்டனை கொடுக்க வேண்டாம் என்று இந்தோனிசிய அரசை கேட்டவர்.ஒரு நாகரீகம் அடைந்த நாட்டில் மரண தண்டனைக்கு இடம் இல்லை என்றார். மரதண்டனை ஒழிக்கபட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

8 hours ago, island said:

மரண தண்டனை என்பது மிக மோசமான தண்டனை முறையாகும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.