Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூரில் மரணதண்டனையை எதிர்கொள்ளும் தமிழருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - குடும்பத்தவர்கள் உருக்கமான வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரண தண்டனை உலகம் முழுவதும் ஒழிக்கபட வேண்டுமாயின் ஜனநாயகம் முற்றி வெடித்து   உலகத்திற்கே அதனை போதிக்கும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

Si la peine de mort doit être abolie partout dans le monde, elle doit commencer par les États-Unis d'Amérique, où la démocratie a explosé et l'a enseignée au monde.

If the death penalty is to be abolished all over the world, it must start from the United States of America, where democracy has exploded and taught it to the world.

  • Replies 60
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

தமிழனை மட்டும் குறிவைத்து தண்டனை கொடுக்கப்படவில்லை.  2023 இற்கு முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 9 பேரில் 2 அல்லது 3 பேர் தான் தமிழ் பெயர்களை கொண்டவர்கள். மலேசியர்களும் , சீனர்களும் கூட இதில் உள்ளனர்.

https://en.wikipedia.org/wiki/Capital_punishment_in_Singapore

தமிழ் தாயின் தமிழ் பால் குடித்து வளர்ந்தவர்கள் குற்றம் செய்வார்களா என்ன?

சிங்கப்பூர் சனத்தொகையில்.. 30 சதவீதம் தமிழர்களா... அவர்கள்.... குற்றவாளிகளா..??! சிங்கப்பூரில்.. போதைவஸ்தை தமிழர்கள் தான் கடத்துகிறார்களா.. அல்லது பாவிக்கிறார்களா..??! போதைவஸ்து பாவனையை தடுப்பது சிங்கப்பூரின் கொள்கை. அதே நாடு தன் பிரஜைகள்.. மற்றைய நாடுகளில் அதை பாவிப்பதை தடுக்க ஒரு ஒத்துழைப்பும் இல்லை.

மேலும்.. இந்த வழக்கில்... குறித்த தமிழ் இளைஞன் போதை வஸ்தை வைத்திருந்ததோ.. கடத்தினதோ இறுதி வரை உறுதி செய்யப்படவில்லை. அவரது தொலைபேசில்.. ஒரு போதைவஸ்து சப்பிளையரின் போன் நம்பர் இருந்தது தான்.. மரண தண்டனைக் குற்றமாகி இருக்கிறது.

இதனை தான்.. மனித உரிமை அமைப்புக்கள்.. மற்றும் மரண தண்டனைக்கு எதிரான அமைப்புக்கள் கேள்விகுரியதாக்கி உள்ளன. 

தமிழர்கள் விடயத்தில் சிங்கப்பூர் நெகிழ்வுப் போக்கில்லாமல் நடந்து கொள்வது இது முதற்தடவையும் அல்ல. அதற்காக சிங்கப்பூர் மலே ஆக்கள் திறம்.. குற்றம் செய்யாத சுத்தவான்கள் என்ற சிங்கப்பூரின் காட்சிப்படுத்தல்.. கேவலமானது. 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nedukkalapoovan said:

சிங்கப்பூர் சனத்தொகையில்.. 30 சதவீதம் தமிழர்களா... அவர்கள்.... குற்றவாளிகளா..??! சிங்கப்பூரில்.. போதைவஸ்தை தமிழர்கள் தான் கடத்துகிறார்களா.. அல்லது பாவிக்கிறார்களா..??! போதைவஸ்து பாவனையை தடுப்பது சிங்கப்பூரின் கொள்கை. அதே நாடு தன் பிரஜைகள்.. மற்றைய நாடுகளில் அதை பாவிப்பதை தடுக்க ஒரு ஒத்துழைப்பும் இல்லை.

மேலும்.. இந்த வழக்கில்... குறித்த தமிழ் இளைஞன் போதை வஸ்தை வைத்திருந்ததோ.. கடத்தினதோ இறுதி வரை உறுதி செய்யப்படவில்லை. அவரது தொலைபேசில்.. ஒரு போதைவஸ்து சப்பிளையரின் போன் நம்பர் இருந்தது தான்.. மரண தண்டனைக் குற்றமாகி இருக்கிறது.

இதனை தான்.. மனித உரிமை அமைப்புக்கள்.. மற்றும் மரண தண்டனைக்கு எதிரான அமைப்புக்கள் கேள்விகுரியதாக்கி உள்ளன. 

தமிழர்கள் விடயத்தில் சிங்கப்பூர் நெகிழ்வுப் போக்கில்லாமல் நடந்து கொள்வது இது முதற்தடவையும் அல்ல. அதற்காக சிங்கப்பூர் மலே ஆக்கள் திறம்.. குற்றம் செய்யாத சுத்தவான்கள் என்ற சிங்கப்பூரின் காட்சிப்படுத்தல்.. கேவலமானது. 

உங்களை நீதிபதி ஆக்கினால் தமிழன் என்ற சேர்டிபிகற் இருந்தால் எந்த கேவலமான செயலை செய்த குற்றவாளியையும் விடுதலை செய்திருப்பீர்கள். உங்களின் தொடர்சசியான கருத்துகளை பார்ககும் போது சிங்கள இனவாதிகளுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை.  

1 hour ago, nedukkalapoovan said:

சிங்கப்பூர் சனத்தொகையில்.. 30 சதவீதம் தமிழர்களா... அவர்கள்.... குற்றவாளிகளா..??! சிங்கப்பூரில்.. போதைவஸ்தை தமிழர்கள் தான் கடத்துகிறார்களா.. அல்லது பாவிக்கிறார்களா..??! போதைவஸ்து பாவனையை தடுப்பது சிங்கப்பூரின் கொள்கை. அதே நாடு தன் பிரஜைகள்.. மற்றைய நாடுகளில் அதை பாவிப்பதை தடுக்க ஒரு ஒத்துழைப்பும் இல்லை.

மேலும்.. இந்த வழக்கில்... குறித்த தமிழ் இளைஞன் போதை வஸ்தை வைத்திருந்ததோ.. கடத்தினதோ இறுதி வரை உறுதி செய்யப்படவில்லை. அவரது தொலைபேசில்.. ஒரு போதைவஸ்து சப்பிளையரின் போன் நம்பர் இருந்தது தான்.. மரண தண்டனைக் குற்றமாகி இருக்கிறது.

இதனை தான்.. மனித உரிமை அமைப்புக்கள்.. மற்றும் மரண தண்டனைக்கு எதிரான அமைப்புக்கள் கேள்விகுரியதாக்கி உள்ளன. 

தமிழர்கள் விடயத்தில் சிங்கப்பூர் நெகிழ்வுப் போக்கில்லாமல் நடந்து கொள்வது இது முதற்தடவையும் அல்ல. அதற்காக சிங்கப்பூர் மலே ஆக்கள் திறம்.. குற்றம் செய்யாத சுத்தவான்கள் என்ற சிங்கப்பூரின் காட்சிப்படுத்தல்.. கேவலமானது. 

என் நேரம் பொன்னானது!

  • கருத்துக்கள உறவுகள்

நான் வன்னியில் , புலிகளின் ஆழுகையின் கீழ் இருந்தேன். நள்ளிரவிலும் ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் நடமாடித் திரிந்தோம். பயம் என்பது எள்ளளவும்  இருந்ததில்லை.  குற்றங்கள் மிக மிக   மிகக் குறைவு. ஏனென்றால் அங்கே சட்டங்களில் கடுமை. 

சிங்கப்பூர் சிங்கப்பூராகவே இருக்க வேண்டும், சிங்களப்பூர் ஆக அல்ல.

வாழ்க சிங்கப்பூர். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

அமெரிக்க 18 வயது இளைஞர் ஒருவர், சிங்கப்பூரில் போன இடத்தில், ஸ்பிரே பெயிண்ட் கான் ஒன்றினை வைத்து, கார்களை எல்லாம், பெயிண்ட் பண்ணி குறும்பு செய்தார். அவரை கைது செய்து, 50 பிரம்படி. அமெரிக்க ஜனாதிபதி மன்னிக்குமாறு கேட்டும், தண்டனை கொடுத்தே, அனுப்பி வைத்தார்கள். 

நாதம்ஸ் 
நீங்கள் கூறியது எல்லாமே சரி ஆனால் 50 பிரம்படி என்பது பிழை, 24 அடிகளுக்கு மேல் ஒரு வழக்கிற்கு வழங்கமாட்டார்கள். இந்த பிரம்படிகள் எல்லாம் சும்மா ஆசிரியர் மாணவருக்கு அடிக்கும் அடிகள் அல்ல. 
ஒரு முழு வளர்ச்சியடைந்த மனிதன் 6 இற்கு மேல் ஒரேதடவையில் வாங்கினாலே அவர் சூப்பர் மேன் வகையறா தான். மூன்றிற்கே மயங்கிவிழுத்துவிடுவினம். அப்படி மயங்கி விழுந்தால் ஆளை எழுப்பி பின்னால் சூடு விழுந்த இடத்தில் களிம்பு தடவி ஆறவைத்து இன்னுமோர் நன்னாளில் மீண்டும் சூடு விழும். 
பெரிய அப்பாடக்கர் என்றால் பந்தாவாக எழுதிக்கொடுத்துவிட்டு ஒரே தடவையில் 10 சூடு வரை வாங்கலாம்.

அந்த அமெரிக்க வாலிபருக்கு 6 சூடு தான் தண்டனை, அமெரிக்கா தனது இராசதந்திர பலம் முழுவதையும் பாவித்தும் சிங்கப்பூர் இரண்டு சூடுகளை மட்டும் குறைத்துக்கொண்டது. அதன்படி 5 May 1994 இல் அவருக்கு சூடு விழுந்தது. 
உபரித்தகவல்: ஒருவர் இரண்டுக்கு மேல் சூடு வாங்கினால்  ஆயுளுக்கும் அந்த வீரத்தழும்பு  பின்புறத்தில் இருக்கும். அன்றுமுதல் அவர் மார்க் மாயாண்டி என்று அன்புடன் அழைக்கப்படுவார்
 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உபரித்தகவல்: ஒருவர் இரண்டுக்கு மேல் சூடு வாங்கினால்  ஆயுளுக்கும் அந்த வீரத்தழும்பு  பின்புறத்தில் இருக்கும். அன்றுமுதல் அவர் மார்க் மாயாண்டி என்று அன்புடன் அழைக்கப்படுவார்.

மார்க் மாயாண்டி. 😁 😂

இப்படி அடி வாங்கியவர்கள்… பொது வெளியில் நடமாடும் போது
அவர்களின் நடை, உடை, பாவனையை பார்த்து….
இவர் மார்க் மாயாண்டி என்பதை கண்டு பிடிக்க முடியுமா. 😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

போதைவஸ்து பாவனையை தடுப்பது சிங்கப்பூரின் கொள்கை. அதே நாடு தன் பிரஜைகள்.. மற்றைய நாடுகளில் அதை பாவிப்பதை தடுக்க ஒரு ஒத்துழைப்பும் இல்லை.

யார் சொன்னது 
கீழே இருக்கும் இணைப்பை வாசியுங்கள். நல்லவேளை சிங்கப்பூர் அரசாங்கம் ஒவ்வொரு வெளிநாடு செல்லும் குடிமக்கள் பின்னேயும் ஒரு காவற்துறை அதிகாரியை அனுப்பவேண்டும் என்று சொல்லாதமட்டிலும் சந்தோசம்  
https://www.channelnewsasia.com/singapore/saliva-test-drugs-roadblocks-land-checkpoints-changi-airport-3303071

6 hours ago, nedukkalapoovan said:

தமிழர்கள் விடயத்தில் சிங்கப்பூர் நெகிழ்வுப் போக்கில்லாமல் நடந்து கொள்வது இது முதற்தடவையும் அல்ல. அதற்காக சிங்கப்பூர் மலே ஆக்கள் திறம்.. குற்றம் செய்யாத சுத்தவான்கள் என்ற சிங்கப்பூரின் காட்சிப்படுத்தல்.. கேவலமானது. 

சிங்கையில் சீனர்கள் தான் அதிகம் அதற்குப்பிறகுதான் மலே. தவறுசெய்தால் தண்டனை உறுதி அதுதான் சிங்கப்பூர், அவர்களது புலனாய்வு, துப்பறியும் முறை எல்லாம் சர்வதேசத்திற்கு இணையானது. தொலைபேசி இலக்கத்தை வைத்திருந்ததை ஆதாரமாக மட்டும்வைத்து  பிடித்துக்கொண்டுபோய் அடைக்கும் வேலையை இலங்கை வேண்டுமானால் செய்யலாம். சிங்கப்பூரில் மட்டும் இந்த வேலை நடந்தால் நீதிபதி முதல் போலீஸ் உத்தியோகத்தர் வரை வருடக்கணக்கில் களி தின்னுவர்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

உங்களை நீதிபதி ஆக்கினால் தமிழன் என்ற சேர்டிபிகற் இருந்தால் எந்த கேவலமான செயலை செய்த குற்றவாளியையும் விடுதலை செய்திருப்பீர்கள். உங்களின் தொடர்சசியான கருத்துகளை பார்ககும் போது சிங்கள இனவாதிகளுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை.  

உங்களுக்கு எழுதிற கருத்தை வாசிச்சு விளங்கிற பிரச்சனை இருக்குது.

எல்லா சமூகங்களிலும் குற்றவாளிகள் உள்ளனர். ஆனால்.. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரு சில சிறுபான்மை இன மக்கள் தொடர்ந்து ராகெட் குறூப்புக்குள் வைக்கப்பட்டு.. கண்காணிக்கப்படுவதும்.. அவர்கள் தான் குற்றங்களை அதிகம் செய்கிறவர்கள் என்ற மனோபாவமும் வளர்க்கப்பட்டு இருக்கிறது. அதில் தமிழர்கள் அடங்குவது.. ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

இதே நிலை அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு உள்ளது. பிரித்தானியாவிலும் வெள்ளைகளை விட கறுப்பர்கள்.. அதிகம் தடுத்தி நிறுத்தி.. உடற்சோதனை செய்யப்படுகிறார்கள். இதற்கு கறுப்பர்கள் என்றால்.. குற்றம் செய்பவர்கள் என்ற மனோபாவத்தின் தாக்கமே அதிகம். அதே தான் சிங்கப்பூரிலும்.. தமிழர்கள் மீது உள்ளது. அதனால் தான்... தமிழர்கள் மீதான.. சிங்கப்பூரின் நடவடிக்கைகள்.. சும்மா சிலாகித்துப் போகிற விடயம் அல்ல. நீண்ட மனோபாவப் பிரச்சனையின் பின்னணியில் தான் அதன் நீதிச் செயற்பாடு உள்ளது. அதனால்.. தான் சிங்கப்பூர் தொடந்து சர்வதேச அளவில் மனித உரிமைகள் விடயத்தில் அதிகம் எதிர் விமர்சிப்பை எதிர்கொள்ளும் நாடாக உள்ளது. 

இந்த விடயத்தில்.. சிங்கை.. மற்றும் மலேசியா வாழ் தமிழ் மக்களுக்கு எமது ஆதரவு இருக்கும். அதற்காக தமிழ் குற்றவாளிகள் பெருக உதவுவதாக அது அமையாது. தமிழ் மக்கள் மீதான இரண்டாம் தர மூன்றாம் தர அணுகுமுறைகளை இந்த நாடுகள் கைவிட வேண்டும். 

7 hours ago, நிழலி said:

என் நேரம் பொன்னானது!

அதே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

யார் சொன்னது 
கீழே இருக்கும் இணைப்பை வாசியுங்கள். நல்லவேளை சிங்கப்பூர் அரசாங்கம் ஒவ்வொரு வெளிநாடு செல்லும் குடிமக்கள் பின்னேயும் ஒரு காவற்துறை அதிகாரியை அனுப்பவேண்டும் என்று சொல்லாதமட்டிலும் சந்தோசம்  
https://www.channelnewsasia.com/singapore/saliva-test-drugs-roadblocks-land-checkpoints-changi-airport-3303071

சிங்கையில் சீனர்கள் தான் அதிகம் அதற்குப்பிறகுதான் மலே. தவறுசெய்தால் தண்டனை உறுதி அதுதான் சிங்கப்பூர், அவர்களது புலனாய்வு, துப்பறியும் முறை எல்லாம் சர்வதேசத்திற்கு இணையானது. தொலைபேசி இலக்கத்தை வைத்திருந்ததை ஆதாரமாக மட்டும்வைத்து  பிடித்துக்கொண்டுபோய் அடைக்கும் வேலையை இலங்கை வேண்டுமானால் செய்யலாம். சிங்கப்பூரில் மட்டும் இந்த வேலை நடந்தால் நீதிபதி முதல் போலீஸ் உத்தியோகத்தர் வரை வருடக்கணக்கில் களி தின்னுவர்.

என்ன அக்னி.. தனது பிரஜை ஒருவரின் மனோநிலையில் மாற்றத்தை உருவாக்க முடியாத சிங்கப்பூர்.. கடும் சட்டங்களை தனது எல்லைக்குள் வைச்சிருப்பது.. அதன் தோல்வி தானே...???! ஏன் பிற நாடுகளில் குற்றங்களை பதிவு செய்யும் தனது பிரஜைகளை அதன் கடவுச் சீட்டு மூலம் கண்காணிக்கலாம்.. தானே.. ஆளுக்கு பின்னால் திரியனுன்னு இல்லையே. அதன் மூலம்.. தன் நாடு சட்டங்கள் மூலம் மட்டுமல்ல.. தனது பிரஜைகள் மூலமான குற்றங்களையும் தடுப்பதாக உலகிற்கு காட்டலாம் தானே.. ஏன் செய்ய முடியவில்லை..???!

சிங்கப்பூர் எல்லாத்திலும் திறம்.. கள்ளமட்டை போடுவதில் இருந்து போதை வஸ்து பாவிப்பது.. விபச்சாரம் வரை எல்லாத்திலும் திறம் தான். ஆனால்.. மனிதர்களை அடிப்படை மனிதாபிமான முறையில் கூட நடத்தாமை.. சிறுபான்மை இன மக்களை குற்றவாளிகள் என்ற மனோநிலையில் நடத்துவது.. தெற்காசிய பிரஜைகளை அடிமைகள் போல நடத்துவது.. இவை எல்லாம் அங்குண்டு. குறிப்பாக.. ஹிந்திய வேலையாட்களை நடத்தும் முறைமை சர்வதேச தரத்தில் இல்லை. நவீன அடிமைத்தன தரத்தில் தான் உள்ளது.

மேலும் நீதிமுறையில்.. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு மதிப்பில்லை. இந்த இளைஞரின் விடயத்தில் கூட அவர் தனக்காக இறுதியாக வாதாட ஒரு சட்டவாளரை கூட வைக்க முடியவில்லை. அதற்கான அவகாசம் கூட இல்லை. சிங்கப்பூரில்.. ஊழல்.. நடக்கவில்லையோ..??!

3 hours ago, Kapithan said:

நான் வன்னியில் , புலிகளின் ஆழுகையின் கீழ் இருந்தேன். நள்ளிரவிலும் ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் நடமாடித் திரிந்தோம். பயம் என்பது எள்ளளவும்  இருந்ததில்லை.  குற்றங்கள் மிக மிக   மிகக் குறைவு. ஏனென்றால் அங்கே சட்டங்களில் கடுமை. 

சிங்கப்பூர் சிங்கப்பூராகவே இருக்க வேண்டும், சிங்களப்பூர் ஆக அல்ல.

வாழ்க சிங்கப்பூர். 

 

புலிகள் கூட போதைவஸ்துக் குற்றங்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்குவதில்லை. தொடர் எச்சரிப்புகளுக்கு பிறகும் தொடர்ந்து குற்றம் செய்தால் மட்டும் தான் தண்டனை.

அதுசரி.. புலிகளின் இந்த நடைமுறைகளை பயங்கரவாதம் என்று சொல்லி புலிகளையே அழிச்சவை.. சிங்கப்பூரின்.. செயற்பாடுகளை.. சவுதியின் செயற்பாடுகளை ஏனோ.. பயங்கரவாதம் என்று சொல்லுவதில்லை. ஏனேனில்.. ஒன்று சர்வதேச வியாபார காம்பிளிங் மையம். இன்னொன்று உலக எண்ணெய் வியாபார காம்பிளிங் மையம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nedukkalapoovan said:

என்ன அக்னி.. தனது பிரஜை ஒருவரின் மனோநிலையில் மாற்றத்தை உருவாக்க முடியாத சிங்கப்பூர்.. கடும் சட்டங்களை தனது எல்லைக்குள் வைச்சிருப்பது.. அதன் தோல்வி தானே...???! ஏன் பிற நாடுகளின் குற்றங்களை பதிவு செய்யும் தனது பிரஜைகளை அதன் கடவுச் சீட்டு மூலம் கண்காணிக்கலாம்.. தானே..

இதற்கு பெயர் தான் எழுதவேண்டுமென்பதற்காக  எழுதுவது 
தாய்லாந்து போன்ற போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கிய நாட்டில் ஒரு சிங்கப்பூர் குடிமகன் போதைப்பொருள் பாவித்தால் அது அந்த நாட்டில் குற்றமாக பதியப்படுமா கடவுச்சீட்டுமூலம் கண்காணிக்க ...?

29 minutes ago, nedukkalapoovan said:

சிறுபான்மை இன மக்களை குற்றவாளிகள் என்ற மனோநிலையில் நடத்துவது.. தெற்காசிய பிரஜைகளை அடிமைகள் போல நடத்துவது.. இவை எல்லாம் அங்குண்டு. குறிப்பாக.. ஹிந்திய வேலையாட்களை நடத்தும் முறைமை சர்வதேச தரத்தில் இல்லை.

சிறுபான்மை இன மக்கள் விகிதாசாரத்தில் பெரும்பாண்மை இனமக்களை விட அதிகக்குற்றத்தில் ஈடுபட்டால் அப்படித்தான் நிலைமை இருக்கும். இங்கு வந்துபாருங்கள் போனவருடம் சிங்கப்பூரை கலக்கிய வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும்  இந்திய வம்சாவளிகளும்  தமிழர்களும். சிங்கையில் இருக்கும் Secret societyகளில் சீனர்களை விட இன விகிதாசாரத்தில் குறைந்த இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் அதிகம்.

 

சிங்கையில் ஒரு ஹிந்திய தெலுங்கு தொழிலாளியினால், நமது மட்டக்களப்பை சேர்ந்த பாலியல் தொழிலாளி கர்ப்பிணிப்பெண் ஒருவர் வயிற்றிலிருந்த கருவுடன் சேர்த்து கொலை செய்யப்பட்டது தெரியுமா. தெற்காசியாவிலிருந்து வயிற்றை கழுவ என்று வந்து விட்டு இவ்வாறான வேலைகளை பார்த்தால் குற்றச்சமூகமாகத்தான் அடையாளப்படுத்தப்படுவோம்
https://soc.culture.singapore.narkive.com/6fdsz0mx/only-life-sentence-for-indian-ft-murderer
 

செய்வது பூரா கேப்மாரி வேலைகள் ஆனால் தமிழர்கள் என்று மரியாதை ஹைகோர்ட் வேற வேண்டும் 

 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nedukkalapoovan said:

மேலும் நீதிமுறையில்.. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு மதிப்பில்லை. இந்த இளைஞரின் விடயத்தில் கூட அவர் தனக்காக இறுதியாக வாதாட ஒரு சட்டவாளரை கூட வைக்க முடியவில்லை. அதற்கான அவகாசம் கூட இல்லை. சிங்கப்பூரில்.. ஊழல்.. நடக்கவில்லையோ..??!


https://singaporelegaladvice.com/law-articles/free-legal-clinics/

சிங்கப்பூரில் இலவசமாகவே சட்டஆலோசனை பெற வசதிகள் உண்டு 
ஆனால் நமது பக்கம் பெரிய பெரிய ஓட்டைகளை வைத்துக்கொண்டு நிரபராதி என்று தீர்ப்பு எதிர்பார்க்க முடியாது. தீர்ப்பளித்திருப்பது சிங்கப்பூர் உயர்நீதிமன்றம். இவர்கள் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தர வதிவிடவாளர்களாக இருப்பின் அவர்களுக்கு நாம் நீதித்துறையை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனது நண்பன் சிங்கப்பூர் சீன  குடிமகனுக்கெதிராகவே வீட்டு வாடகை பிரச்சினை தொடர்பாக  வழக்கு தொடர்ந்து வென்று சிங்கை குடிமகனுக்கு தண்டப்பணத்துடன் தனக்கு  நஷ்ட்டஈடும் பெற்றவன். அன்று எனது கண்ணிற்கு முன்னே வந்தது இலங்கையில் சிங்களவனுக்கெதிராக சிங்கள ஊரில்  நான் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனை காட்சியே. 
சும்மா உங்களது தமிழ் கோஷங்களால் எந்த பிரயோசமுமில்லை, நெற்றிக்கண் திறப்பினும் தமிழன் குற்றம் செய்தால் குற்றவாளியே. ஆட்டிற்குள் கொண்டுவந்து மாட்டை விடவேண்டாம் 
(சிங்கப்பூரிற்குள் கொண்டுவந்து மலேசியாவை சொருகவேண்டாம் அது முற்றான முஸ்லீம் நாடு அதனை பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை )     

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:


https://singaporelegaladvice.com/law-articles/free-legal-clinics/

சிங்கப்பூரில் இலவசமாகவே சட்டஆலோசனை பெற வசதிகள் உண்டு 
ஆனால் நமது பக்கம் பெரிய பெரிய ஓட்டைகளை வைத்துக்கொண்டு நிரபராதி என்று தீர்ப்பு எதிர்பார்க்க முடியாது. தீர்ப்பளித்திருப்பது சிங்கப்பூர் உயர்நீதிமன்றம். இவர்கள் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தர வதிவிடவாளர்களாக இருப்பின் அவர்களுக்கு நாம் நீதித்துறையை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனது நண்பன் சிங்கப்பூர் சீன  குடிமகனுக்கெதிராகவே வீட்டு வாடகை பிரச்சினை தொடர்பாக  வழக்கு தொடர்ந்து வென்று சிங்கை குடிமகனுக்கு தண்டப்பணத்துடன் தனக்கு  நஷ்ட்டஈடும் பெற்றவன். அன்று எனது கண்ணிற்கு முன்னே வந்தது இலங்கையில் சிங்களவனுக்கெதிராக சிங்கள ஊரில்  நான் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனை காட்சியே. 
சும்மா உங்களது தமிழ் கோஷங்களால் எந்த பிரயோசமுமில்லை, நெற்றிக்கண் திறப்பினும் தமிழன் குற்றம் செய்தால் குற்றவாளியே. ஆட்டிற்குள் கொண்டுவந்து மாட்டை விடவேண்டாம் 
(சிங்கப்பூரிற்குள் கொண்டுவந்து மலேசியாவை சொருகவேண்டாம் அது முற்றான முஸ்லீம் நாடு அதனை பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை )     

Convicted traffickers who can prove that they were only couriers may be able to avoid the death penalty. Drug possession and consumption draw lesser punishments including prison and fines.

In Tangaraju Suppiah's last appeal, the judge agreed with the prosecution that he had been responsible for co-ordinating the delivery, which made him ineligible for a more lenient sentence.

Activists had raised concerns that he had not been given adequate access to a Tamil interpreter and had been forced to represent himself at his last appeal because his family was unable to secure a lawyer.

(https://www.bbc.co.uk/news/world-asia-65395390

நீங்கள் சொல்லுற இலவச சட்ட வல்லுனர்கள் ஏன் உதவவில்லை...??!

மேலும்.. மலேசிய - சிங்கப்பூர் எல்லை திறந்து தானே இருக்குது சிங்கப்பூர் ஆக்களுக்கும் மலேசிய ஆக்களுக்கும். குற்றவாளிகள் சுதந்திரமாகப் போய் வரக் கூடிய சூழல் இருக்குது.

மேலும்.. போதைவஸ்து வைச்சிருந்தால்.. பாவிச்சால்.. குற்றம் குறைவு. ஆனால்.. கடத்தலை திட்டமிட்டு நடத்தினால்.. மரண தண்டனை..??! இதுதான் சிங்கப்பூர் சட்டமென்றால்.. எல்லைகளை மூடுவது தானே தகும். ஏனெனில் அயல்நாடுகளில் அது குற்றமில்லாத போது. 

மேலும் தமிழர்கள் குற்றவாளிகளாகப் பெருகனுன்னு இதைச் சொல்லவில்லை.. தமிழர்கள் தான் குற்றவாளிகள் என்பதான மனோநிலை வளர்வது ஆபத்து என்பதை தான் வலியுறுத்துகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nedukkalapoovan said:

Activists had raised concerns that he had not been given adequate access to a Tamil interpreter and had been forced to represent himself at his last appeal because his family was unable to secure a lawyer.

https://en.wikipedia.org/wiki/Tangaraju_Suppiah
தங்கராஜு சுப்பையாவின் தூக்கு தண்டனை  நிறைவேற்றப்பட்டுவிட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக. Plea Bargain ( பேரம் பேசலை ஏற்றுக்கொண்டிருந்தால் 12 வருடங்களில் சில மார்க்குகளுடன் வெளியே வந்திருக்கலாம் ) 
சிங்கப்பூர் மலேசிய தமிழர்கள் மீண்டும் அசட்டுத்தைரியத்தில் சூப்பர் மேன்களாக மாறி போதைப்பொருள் கடத்தி உங்களை நீங்களே மாய்த்துக்கொல்லாமல் அடக்கமாக இருக்குமாறு வினயமாக கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

 

புலிகள் கூட போதைவஸ்துக் குற்றங்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்குவதில்லை. தொடர் எச்சரிப்புகளுக்கு பிறகும் தொடர்ந்து குற்றம் செய்தால் மட்டும் தான் தண்டனை.

 

தவறான புரிதல் என நம்புகிறேன். 

 

7 minutes ago, Kapithan said:

ஏன், உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமோ ? 

🤣

நெடுக்ஸ் சிங்கப்பூரின் மனிதாபிமானம் தொடர்பாக கோபம் கொள்ளுகிறார். அவர் வெளிநாட்டுக்கு வரும்போது சிங்கப்பூர் வழியாக வந்தவரோ என்று சந்தேகமாக இருக்கிறது  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

https://en.wikipedia.org/wiki/Tangaraju_Suppiah
தங்கராஜு சுப்பையாவின் தூக்கு தண்டனை  நிறைவேற்றப்பட்டுவிட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக. Plea Bargain ( பேரம் பேசலை ஏற்றுக்கொண்டிருந்தால் 12 வருடங்களில் சில மார்க்குகளுடன் வெளியே வந்திருக்கலாம் ) 
சிங்கப்பூர் மலேசிய தமிழர்கள் மீண்டும் அசட்டுத்தைரியத்தில் சூப்பர் மேன்களாக மாறி போதைப்பொருள் கடத்தி உங்களை நீங்களே மாய்த்துக்கொல்லாமல் அடக்கமாக இருக்குமாறு வினயமாக கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்  

அவர் மரண தண்டனையில் இருந்து எவ்வாறு தப்பியிருக்கலாம் என்பதை விரிவாக கூறமுடியுமா? வேறு யாருக்கும் பயன்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

நான் வன்னியில் , புலிகளின் ஆழுகையின் கீழ் இருந்தேன். நள்ளிரவிலும் ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் நடமாடித் திரிந்தோம். பயம் என்பது எள்ளளவும்  இருந்ததில்லை.  குற்றங்கள் மிக மிக   மிகக் குறைவு. ஏனென்றால் அங்கே சட்டங்களில் கடுமை. 

சிங்கப்பூர் சிங்கப்பூராகவே இருக்க வேண்டும், சிங்களப்பூர் ஆக அல்ல.

வாழ்க சிங்கப்பூர். 

அதே.

தலைவரின் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற கோட்பாடும்

சீமான் சொல்லும் அன்பான சர்வாதிகாரமும் இதைத்தான் சொல்கின்றன. 

3 hours ago, Kapithan said:

நெடுக்ஸ் சிங்கப்பூரின் மனிதாபிமானம் தொடர்பாக கோபம் கொள்ளுகிறார். அவர் வெளிநாட்டுக்கு வரும்போது சிங்கப்பூர் வழியாக வந்தவரோ என்று சந்தேகமாக இருக்கிறது  

 

சிங்கப்பூர் மற்றும் மலேஷியா சட்டங்கள் கத்திநுனியில் நடப்பது போன்றவை. சிங்கப்பூரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. ஆனால் மலேஷியாவில் மலேயர்களுடன் ஒப்பிடுகையில் தமிழர்களுக்கு இலங்கையில் இருக்கும் சட்டப்பாதுகாப்பு கூட இல்லை. 😭

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அவர் மரண தண்டனையில் இருந்து எவ்வாறு தப்பியிருக்கலாம் என்பதை விரிவாக கூறமுடியுமா? வேறு யாருக்கும் பயன்படலாம்.

நான் சிங்கப்பூர் சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒரு சட்டத்தரணியில்லை. எனக்கு தெரிந்த வரையில் சிங்கையில் உள்ள குற்றப்பத்திரிகை தயார்செய்யும் போது அதனை தயாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் எவற்றையெல்லாம் சமர்ப்பிப்பார்கள், நீதிமன்றத்தில் உள்ள சில நடைமுறைகளை பற்றியும் அதன் இந்த வழக்கு தொடர்பான தாக்கத்தையும் விபரிக்கிறேன்.

1. குற்றத்தின் தன்மைக்கேற்ப அதனை விசாரிக்கும் பொறுப்பு சிங்கை போலீஸ் படையின் குறிப்பிட்ட பிரிவுக்கு வழங்கப்படும். குற்றத்தின் கடுமைக்கேற்ப அதனை IO (Investigation Officer) அல்லது SIO (Senior Investigation officer ) இடம் ஒப்படைப்பார்கள். இனி குற்றவாளி பிடிபடும் வரை இந்த அதிகாரியின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு புலனாய்வில் ஈடுபடுவார்கள்.

2. இப்போது சந்தேகநபர்  பிடிபட்டால் அவரது வசமிருக்கும் அனைத்து ஆதாரங்களையும் போலீஸ் பறிமுதல் செய்வதுடன் குற்றத்தின் முகாந்திரம்,பின்னணி, வேறு சந்தேகநபர்களுக்கு தொடர்பு உண்டா என்பதை அறிய விசாரணை நடத்துவார்கள். இந்த தருணத்தில் இனி தப்பிப்பிழைக்க முடியாது என்று சந்தேகநபர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் அவர்களது ஒத்துழைப்பு பற்றிய அதிகாரியின் அறிக்கையும் வழக்கு தாக்கல் செய்யும் போது சேர்த்து ஒப்படைக்கப்படும். 

3. இனி வழக்கு நடைபெறும்போது அரச தரப்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச தண்டனையுடன் வழக்கை முடிவுறுத்துவதாக சந்தேகநபரிட்கு அரசதரப்பிலிருந்து பேரம்பேசல் நடக்கும்
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் வழங்கக்கூடிய  மிகக்குறைந்த தண்டனையுடன் வழக்கை சிங்கை நீதித்துறை முடித்துவைக்கும். சந்தேகநபர் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தி வழக்கை தொடர்ந்தால் வழக்கு முடிவில் குற்றவாளியாக இனங்காணும் பட்சத்தில் அதியுச்ச தண்டனை பரிசாக கிடைக்கும்  

இனி இந்த வழக்கில் தங்கராஜு சுப்பையா A.K.A  "இந்தியா",  செல்வா என்ற நபர் மூலம் மலேசியாவிலிருந்து மோகன் என்பவரிடம் அனுப்பிவைக்கப்பட்ட கஞ்சாவினை எப்படி தனது கைக்கு கொண்டுவர பிரயத்தனம் பண்ணினார் என்பதை இணைத்திருக்கும் இணைப்பில் படிக்கலாம். ஆனால் மோகன் எல்லை சோதனைச்சாவடியிலேயே மாட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டு "இந்தியா"  வை பிடிக்க உதவியதால் 23 வருட 
சிறை 15 சூடுகளுடன் தப்பிவிட .
போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதித்துறையை சவாலுக்குற்படுத்தலாம் என்று கிடைத்த ஆலோசனைக்கேற்ப நீதித்துறை வழங்கிய 20 வருட சிறையை மறுத்ததோடு அல்லாமல் நீதித்துறை படிப்படியாக குறைத்த 15 மற்றும் 12 வருடங்களையும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் நிராகரித்தார்.
உண்மையில் மலேசியாவிலிருந்து கடத்தியவரை விட குறைந்த தண்டனையை பெற்றிருக்கவேண்டியவர் 
அசட்டுத்தைரியத்தால் இன்று தூக்குக்கயிற்றில் உயிர் துறந்திருக்கிறார். நீதித்துறையை challenge செய்வதென்றால் நம்பக்கம் செம ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும்.        

Edited by அக்னியஷ்த்ரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நான் சிங்கப்பூர் சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒரு சட்டத்தரணியில்லை. எனக்கு தெரிந்த வரையில் சிங்கையில் உள்ள குற்றப்பத்திரிகை தயார்செய்யும் போது அதனை தயாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் எவற்றையெல்லாம் சமர்ப்பிப்பார்கள், நீதிமன்றத்தில் உள்ள சில நடைமுறைகளை பற்றியும் அதன் இந்த வழக்கு தொடர்பான தாக்கத்தையும் விபரிக்கிறேன்.

1. குற்றத்தின் தன்மைக்கேற்ப அதனை விசாரிக்கும் பொறுப்பு சிங்கை போலீஸ் படையின் குறிப்பிட்ட பிரிவுக்கு வழங்கப்படும். குற்றத்தின் கடுமைக்கேற்ப அதனை IO (Investigation Officer) அல்லது SIO (Senior Investigation officer ) இடம் ஒப்படைப்பார்கள். இனி குற்றவாளி பிடிபடும் வரை இந்த அதிகாரியின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு புலனாய்வில் ஈடுபடுவார்கள்.

2. இப்போது சந்தேகநபர்  பிடிபட்டால் அவரது வசமிருக்கும் அனைத்து ஆதாரங்களையும் போலீஸ் பறிமுதல் செய்வதுடன் குற்றத்தின் முகாந்திரம்,பின்னணி, வேறு சந்தேகநபர்களுக்கு தொடர்பு உண்டா என்பதை அறிய விசாரணை நடத்துவார்கள். இந்த தருணத்தில் இனி தப்பிப்பிழைக்க முடியாது என்று சந்தேகநபர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் அவர்களது ஒத்துழைப்பு பற்றிய அதிகாரியின் அறிக்கையும் வழக்கு தாக்கல் செய்யும் போது சேர்த்து ஒப்படைக்கப்படும். 

3. இனி வழக்கு நடைபெறும்போது அரச தரப்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச தண்டனையுடன் வழக்கை முடிவுறுத்துவதாக சந்தேகநபரிட்கு அரசதரப்பிலிருந்து பேரம்பேசல் நடக்கும்
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் வழங்கக்கூடிய  மிகக்குறைந்த தண்டனையுடன் வழக்கை சிங்கை நீதித்துறை முடித்துவைக்கும். சந்தேகநபர் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தி வழக்கை தொடர்ந்தால் வழக்கு முடிவில் குற்றவாளியாக இனங்காணும் பட்சத்தில் அதியுச்ச தண்டனை பரிசாக கிடைக்கும்  

இனி இந்த வழக்கில் தங்கராஜு சுப்பையா A.K.A  "இந்தியா",  செல்வா என்ற நபர் மூலம் மலேசியாவிலிருந்து மோகன் என்பவரிடம் அனுப்பிவைக்கப்பட்ட கஞ்சாவினை எப்படி தனது கைக்கு கொண்டுவர பிரயத்தனம் பண்ணினார் என்பதை இணைத்திருக்கும் இணைப்பில் படிக்கலாம். ஆனால் மோகன் எல்லை சோதனைச்சாவடியிலேயே மாட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டு "இந்தியா"  வை பிடிக்க உதவியதால் 23 வருட 
சிறை 15 சூடுகளுடன் தப்பிவிட .
போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதித்துறையை சவாலுக்குற்படுத்தலாம் என்று கிடைத்த ஆலோசனைக்கேற்ப நீதித்துறை வழங்கிய 20 வருட சிறையை மறுத்ததோடு அல்லாமல் நீதித்துறை படிப்படியாக குறைத்த 15 மற்றும் 12 வருடங்களையும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் நிராகரித்தார்.
உண்மையில் மலேசியாவிலிருந்து கடத்தியவரை விட குறைந்த தண்டனையை பெற்றிருக்கவேண்டியவர் 
அசட்டுத்தைரியத்தால் இன்று தூக்குக்கயிற்றில் உயிர் துறந்திருக்கிறார். நீதித்துறையை chalenge செய்வதென்றால் நம்பக்கம் செம ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும்.        

உண்மையிலேயே அப்பாவியாக இருந்திருந்தால் என்ற கவலை தான். 

நன்றி உங்கள் விரிவான தகவல்களுக்கு அக்னி.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நான் சிங்கப்பூர் சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒரு சட்டத்தரணியில்லை. எனக்கு தெரிந்த வரையில் சிங்கையில் உள்ள குற்றப்பத்திரிகை தயார்செய்யும் போது அதனை தயாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் எவற்றையெல்லாம் சமர்ப்பிப்பார்கள், நீதிமன்றத்தில் உள்ள சில நடைமுறைகளை பற்றியும் அதன் இந்த வழக்கு தொடர்பான தாக்கத்தையும் விபரிக்கிறேன்.

1. குற்றத்தின் தன்மைக்கேற்ப அதனை விசாரிக்கும் பொறுப்பு சிங்கை போலீஸ் படையின் குறிப்பிட்ட பிரிவுக்கு வழங்கப்படும். குற்றத்தின் கடுமைக்கேற்ப அதனை IO (Investigation Officer) அல்லது SIO (Senior Investigation officer ) இடம் ஒப்படைப்பார்கள். இனி குற்றவாளி பிடிபடும் வரை இந்த அதிகாரியின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு புலனாய்வில் ஈடுபடுவார்கள்.

2. இப்போது சந்தேகநபர்  பிடிபட்டால் அவரது வசமிருக்கும் அனைத்து ஆதாரங்களையும் போலீஸ் பறிமுதல் செய்வதுடன் குற்றத்தின் முகாந்திரம்,பின்னணி, வேறு சந்தேகநபர்களுக்கு தொடர்பு உண்டா என்பதை அறிய விசாரணை நடத்துவார்கள். இந்த தருணத்தில் இனி தப்பிப்பிழைக்க முடியாது என்று சந்தேகநபர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் அவர்களது ஒத்துழைப்பு பற்றிய அதிகாரியின் அறிக்கையும் வழக்கு தாக்கல் செய்யும் போது சேர்த்து ஒப்படைக்கப்படும். 

3. இனி வழக்கு நடைபெறும்போது அரச தரப்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச தண்டனையுடன் வழக்கை முடிவுறுத்துவதாக சந்தேகநபரிட்கு அரசதரப்பிலிருந்து பேரம்பேசல் நடக்கும்
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் வழங்கக்கூடிய  மிகக்குறைந்த தண்டனையுடன் வழக்கை சிங்கை நீதித்துறை முடித்துவைக்கும். சந்தேகநபர் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தி வழக்கை தொடர்ந்தால் வழக்கு முடிவில் குற்றவாளியாக இனங்காணும் பட்சத்தில் அதியுச்ச தண்டனை பரிசாக கிடைக்கும்  

இனி இந்த வழக்கில் தங்கராஜு சுப்பையா A.K.A  "இந்தியா",  செல்வா என்ற நபர் மூலம் மலேசியாவிலிருந்து மோகன் என்பவரிடம் அனுப்பிவைக்கப்பட்ட கஞ்சாவினை எப்படி தனது கைக்கு கொண்டுவர பிரயத்தனம் பண்ணினார் என்பதை இணைத்திருக்கும் இணைப்பில் படிக்கலாம். ஆனால் மோகன் எல்லை சோதனைச்சாவடியிலேயே மாட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டு "இந்தியா"  வை பிடிக்க உதவியதால் 23 வருட 
சிறை 15 சூடுகளுடன் தப்பிவிட .
போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதித்துறையை சவாலுக்குற்படுத்தலாம் என்று கிடைத்த ஆலோசனைக்கேற்ப நீதித்துறை வழங்கிய 20 வருட சிறையை மறுத்ததோடு அல்லாமல் நீதித்துறை படிப்படியாக குறைத்த 15 மற்றும் 12 வருடங்களையும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் நிராகரித்தார்.
உண்மையில் மலேசியாவிலிருந்து கடத்தியவரை விட குறைந்த தண்டனையை பெற்றிருக்கவேண்டியவர் 
அசட்டுத்தைரியத்தால் இன்று தூக்குக்கயிற்றில் உயிர் துறந்திருக்கிறார். நீதித்துறையை challenge செய்வதென்றால் நம்பக்கம் செம ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும்.        

அக்னி, மிக்க நன்றி விளக்கத்திற்கு! அமெரிக்க, ஐரோப்பிய நீதித்துறை போலத் தான் இருக்கிறது சிங்கப்பூர். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் நீதித்துறை, செயல்திறனோடு செயல்பட இந்த plea deal முறை உதவுகிறது.

பி.கு: இணைப்பேதும் இணைக்க மறந்து விட்டீர்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

அக்னி, மிக்க நன்றி விளக்கத்திற்கு! அமெரிக்க, ஐரோப்பிய நீதித்துறை போலத் தான் இருக்கிறது சிங்கப்பூர். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் நீதித்துறை, செயல்திறனோடு செயல்பட இந்த plea deal முறை உதவுகிறது.

பி.கு: இணைப்பேதும் இணைக்க மறந்து விட்டீர்களோ?

 

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

https://en.wikipedia.org/wiki/Tangaraju_Suppiah
தங்கராஜு சுப்பையாவின் தூக்கு தண்டனை  நிறைவேற்றப்பட்டுவிட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக. Plea Bargain ( பேரம் பேசலை ஏற்றுக்கொண்டிருந்தால் 12 வருடங்களில் சில மார்க்குகளுடன் வெளியே வந்திருக்கலாம் ) 
சிங்கப்பூர் மலேசிய தமிழர்கள் மீண்டும் அசட்டுத்தைரியத்தில் சூப்பர் மேன்களாக மாறி போதைப்பொருள் கடத்தி உங்களை நீங்களே மாய்த்துக்கொல்லாமல் அடக்கமாக இருக்குமாறு வினயமாக கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்  

மேலே இணைத்துள்ளார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

பி.கு: இணைப்பேதும் இணைக்க மறந்து விட்டீர்களோ

முந்திய இணைப்பில் அவர் பற்றிய விக்கி தகவல்களை இணைத்திருந்தேன். இவரைப்பற்றி தனிப்பட்ட தகவல்கள் தெரியாது ஆனால் சிங்கை நீதித்துறை தகவல்களை 

https://stomp.straitstimes.com

இந்த தளத்தில் வசிப்பது வாடிக்கை. விக்கியில் போதுமான தகவல்கள் உண்டு

https://en.wikipedia.org/wiki/Tangaraju_Suppiah

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நான் சிங்கப்பூர் சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒரு சட்டத்தரணியில்லை. எனக்கு தெரிந்த வரையில் சிங்கையில் உள்ள குற்றப்பத்திரிகை தயார்செய்யும் போது அதனை தயாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் எவற்றையெல்லாம் சமர்ப்பிப்பார்கள், நீதிமன்றத்தில் உள்ள சில நடைமுறைகளை பற்றியும் அதன் இந்த வழக்கு தொடர்பான தாக்கத்தையும் விபரிக்கிறேன்.

1. குற்றத்தின் தன்மைக்கேற்ப அதனை விசாரிக்கும் பொறுப்பு சிங்கை போலீஸ் படையின் குறிப்பிட்ட பிரிவுக்கு வழங்கப்படும். குற்றத்தின் கடுமைக்கேற்ப அதனை IO (Investigation Officer) அல்லது SIO (Senior Investigation officer ) இடம் ஒப்படைப்பார்கள். இனி குற்றவாளி பிடிபடும் வரை இந்த அதிகாரியின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு புலனாய்வில் ஈடுபடுவார்கள்.

2. இப்போது சந்தேகநபர்  பிடிபட்டால் அவரது வசமிருக்கும் அனைத்து ஆதாரங்களையும் போலீஸ் பறிமுதல் செய்வதுடன் குற்றத்தின் முகாந்திரம்,பின்னணி, வேறு சந்தேகநபர்களுக்கு தொடர்பு உண்டா என்பதை அறிய விசாரணை நடத்துவார்கள். இந்த தருணத்தில் இனி தப்பிப்பிழைக்க முடியாது என்று சந்தேகநபர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் அவர்களது ஒத்துழைப்பு பற்றிய அதிகாரியின் அறிக்கையும் வழக்கு தாக்கல் செய்யும் போது சேர்த்து ஒப்படைக்கப்படும். 

3. இனி வழக்கு நடைபெறும்போது அரச தரப்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச தண்டனையுடன் வழக்கை முடிவுறுத்துவதாக சந்தேகநபரிட்கு அரசதரப்பிலிருந்து பேரம்பேசல் நடக்கும்
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் வழங்கக்கூடிய  மிகக்குறைந்த தண்டனையுடன் வழக்கை சிங்கை நீதித்துறை முடித்துவைக்கும். சந்தேகநபர் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தி வழக்கை தொடர்ந்தால் வழக்கு முடிவில் குற்றவாளியாக இனங்காணும் பட்சத்தில் அதியுச்ச தண்டனை பரிசாக கிடைக்கும்  

இனி இந்த வழக்கில் தங்கராஜு சுப்பையா A.K.A  "இந்தியா",  செல்வா என்ற நபர் மூலம் மலேசியாவிலிருந்து மோகன் என்பவரிடம் அனுப்பிவைக்கப்பட்ட கஞ்சாவினை எப்படி தனது கைக்கு கொண்டுவர பிரயத்தனம் பண்ணினார் என்பதை இணைத்திருக்கும் இணைப்பில் படிக்கலாம். ஆனால் மோகன் எல்லை சோதனைச்சாவடியிலேயே மாட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டு "இந்தியா"  வை பிடிக்க உதவியதால் 23 வருட 
சிறை 15 சூடுகளுடன் தப்பிவிட .
போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதித்துறையை சவாலுக்குற்படுத்தலாம் என்று கிடைத்த ஆலோசனைக்கேற்ப நீதித்துறை வழங்கிய 20 வருட சிறையை மறுத்ததோடு அல்லாமல் நீதித்துறை படிப்படியாக குறைத்த 15 மற்றும் 12 வருடங்களையும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் நிராகரித்தார்.
உண்மையில் மலேசியாவிலிருந்து கடத்தியவரை விட குறைந்த தண்டனையை பெற்றிருக்கவேண்டியவர் 
அசட்டுத்தைரியத்தால் இன்று தூக்குக்கயிற்றில் உயிர் துறந்திருக்கிறார். நீதித்துறையை challenge செய்வதென்றால் நம்பக்கம் செம ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும்.        

 

நன்றி சகோ..

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, அக்னியஷ்த்ரா said:

முந்திய இணைப்பில் அவர் பற்றிய விக்கி தகவல்களை இணைத்திருந்தேன். இவரைப்பற்றி தனிப்பட்ட தகவல்கள் தெரியாது ஆனால் சிங்கை நீதித்துறை தகவல்களை 

https://stomp.straitstimes.com

இந்த தளத்தில் வசிப்பது வாடிக்கை. விக்கியில் போதுமான தகவல்கள் உண்டு

https://en.wikipedia.org/wiki/Tangaraju_Suppiah

ம்..வாசித்தேன், ஒரே மூச்சில்.

எந்த வழக்கிலும் சட்டத்தரணியை பயன்படுத்த வேண்டும். மரண தண்டனை கிடைக்கக் கூடிய வழக்கில் தானாக சில சமர்ப்பிப்புகளைச் செய்திருக்கிறார். சட்டத்தரணிகள் முன்வராததாலா அல்லது அவரது முடிவா எனத் தெரியவில்லை. சோகமான முடிவு!

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு செய்தியிலும் தெரிந்துகொள்ள எவ்வளவு விடயங்கள் இருக்கிறது!!!
விக்கி தகவல்கள் முழுமையாக ஒரே மூச்சில் வாசித்தேன். இந்த தம்பி ஆழம் அறியாமல் சட்ட ஆற்றில் காலை விட்டு உயிரை போக்கிக்கொண்டதாகவே உணர்கிறேன்.

தமிழன் ஒருவன் தண்டிக்கப்படுகிறான் என்பதற்காக ஞாய, அநியாயங்களை, சட்ட வரையறைகளை எல்லாம் சகட்டு மேனிக்கு குறை சொல்லக்கூடாது. எல்லா சம்பவங்களையும் பொதுமை படுத்தவும் கூடாது. 

டொரோண்டோவில் நடந்த பிரபல போதை வஸ்து கடத்தல் வழக்கில் 8ஆவது ஜூரியாக கடமையை ஆற்றி, குற்றவாளிக்கு சட்டத்தின் பிரகாரம் தீர்ப்பை பெற்று கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு.
இதை வாசிக்கும் போது அந்த நாட்களின் ஞாபகங்கள் தோன்றி மறைந்தன. 😞

Edited by Sasi_varnam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.