Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2009இல் இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியா நடந்துகொண்டவிதத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் - பிரிட்டனில் அண்ணாமலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

28 JUN, 2023 | 06:47 AM
image
 

2009 ம் ஆண்டு ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

2009 இல் இந்தியா நடந்துகொண்டவிதத்தை நானும் தமிழ்நாட்டின் தமிழர்களும் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் என குறிப்பிட்டள்ள அவர் இந்தியா தலையிட்டு யுத்தத்தை தடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2009 மே மாதம் பத்தாம் திகதி குஜராத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கையில் எனது சகோதர சகோதரிகள் படுகொலை செய்யப்படும்போது இந்திய அரசாங்கம் என்ன செய்கின்றது என நரேந்திரமோடி பகிரங்கமாக கேள்வி எழுப்பினார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களிற்கு இந்திய பிரதமர் அரசியல் தீர்வொன்றை வழங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

2014 இல் பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் அணுகுமுறை மாற்றமடைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் தமிழ்நாட்டிற்கும் பலாலிக்கும் இடையிலான நேரடிவிமானசேவை காரைக்கால் காங்கேசன்துறை இடையிலான படகு சேவை மற்றும் மன்னார் தமிழ்நாட்டிற்கு இடையிலான படகுசேவை திட்டம் போன்றவற்றினால் மக்கள் மத்தியிலான தொடர்பு அதிகரிக்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு சென்ற மலையக மக்களை சந்தித்த முதல் இந்திய பிரதமர் நரேந்திரமோடி என்பதையும் அண்ணாமலை நினைவூட்டியுள்ளார்.

1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் மலையக்தமிழர்கள் பெருந்துன்பங்களை அனுபவித்துள்ளனர் இருசமூகத்தினரையும் சர்வதேச சக்திகள் தங்கள் சதுரங்கவிளையாட்டிற்காக பயன்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/158732

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஈழத்தமிழர்கள் மலையக்தமிழர்கள் பெருந்துன்பங்களை அனுபவித்துள்ளனர் இருசமூகத்தினரையும் சர்வதேச சக்திகள் தங்கள் சதுரங்கவிளையாட்டிற்காக பயன்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சக்திகள் நஹி ஹே ஜீ 
ஹமாறா பாரத் மாத்தாக்கி துஷ்மன் ஹே 
சாத்தான் வேதம் ஓதுவது அந்தக்காலம் சாத்தான் பிரிட்டிஷில் வேதம் ஓதுவது இந்தக்காலம் 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த கோமாளி தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு விமோசனத்தை உருவாக்கட்டும் அதன் பின் இலங்கையை பற்றி கதைக்க வரட்டும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது - புதிதாக பௌத்த ஆலயங்கள் - லண்டனில் அண்ணாமலை கவலை

Published By: RAJEEBAN

28 JUN, 2023 | 02:36 PM
image
 

இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கைகுறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் சபையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து அண்ணாமலை உரையாற்றியுள்ளார்.

பிரிட்டனின் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்தஇந்த நிகழ்வில் இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுகுறித்து அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவடைந்துள்ளமை  எனக்கு கரிசனை அளிக்கின்றது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த போக்கு கவலையளிக்கும் விடயம் ஏனென்றால் எதிர்வரும் காலங்களில்  இந்த பகுதிகளில் இந்துக்களின் கலாச்சாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் பௌத்த தொல்பொருள் கட்டிடங்கள் உருவாகிவருவது குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பலஆயிரங்களாக இலங்கையின்வடக்குகிழக்கு தனிப்பட்ட கலாச்சாரம் அடையாளம் ஆகியவற்றை பேணிவந்துள்ளன,என தெரிவித்துள்ள அண்ணாமலை புதிதாக பௌத்ததொல்பொருள் கட்டிடங்கள் இந்த பகுதியில் உருவாகிவருவது ஈழத்தமிழர்களிற்கும் பௌத்தர்களிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தசாப்தங்களில் நிரந்தரதீர்வை காண்பதற்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதுஅவசியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/158775

10 வருடமாக இவர்கள்தானே இந்தியாவை ஆட்சி செய்கிறார்கள். தமிழருக்கு ஆதரவாக ஒரு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. மாறாக பல விடயங்களில் சிங்களவருக்கு ஆதரவளித்ததுதான் அதிகம். இவர்களது நோக்கம் தமிழர்களுக்கு உதவுவது கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர் என்றால் ஈழத்துப் புலம்பெயர்ஸ்  ? 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, இணையவன் said:

10 வருடமாக இவர்கள்தானே இந்தியாவை ஆட்சி செய்கிறார்கள். தமிழருக்கு ஆதரவாக ஒரு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. மாறாக பல விடயங்களில் சிங்களவருக்கு ஆதரவளித்ததுதான் அதிகம். இவர்களது நோக்கம் தமிழர்களுக்கு உதவுவது கிடையாது.

அந்த ஒரு துரும்பை நகர்த்துவதானாலும் இந்திய அனுமதியின்றி நகர்த்த முடியாது.

1 hour ago, குமாரசாமி said:

அந்த ஒரு துரும்பை நகர்த்துவதானாலும் இந்திய அனுமதியின்றி நகர்த்த முடியாது.

அண்ணாமலையால் மட்டுமல்ல, எந்த தமிழக அரசியல்வாதிகளாலும் அவர்கள் என்ன பதவி வகித்தாலும் எந்த துரும்பையும் அசைக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

10 வருடமாக இவர்கள்தானே இந்தியாவை ஆட்சி செய்கிறார்கள். தமிழருக்கு ஆதரவாக ஒரு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. மாறாக பல விடயங்களில் சிங்களவருக்கு ஆதரவளித்ததுதான் அதிகம். இவர்களது நோக்கம் தமிழர்களுக்கு உதவுவது கிடையாது.

அது மட்டுமல்ல சேர்ந்திருக்கும் தமிழர்களைக் கூட பிரிக்கிற வேலையையே யாழில் செய்கிறார்கள்.பிரதேச சபைகளில் இருந்து சகல சபைகளும் இவர்களின் விருப்பத்திற்கேற்பவே நடைபெறுவதாகவும் சொல்கிறார்கள்.

 

உலகத்தில் எந்த நாட்டுக்குப் போன அகதியாலும் படித்து முன்னேற முடியுது.

ஆனால் இந்தியாவுக்கு போன அகதிகளால் ஒரு அளவுக்கு மேல் அவர்கள் விரும்பிய துறைகளில் படிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் - கல் நெஞ்சகாரர்கள்.

இவ்வளவு முயற்சிகள், தகிடுதத்தங்கள் - அத்தனைக்கும் பின்னும் இந்தியா, பிஜேபி, றோ எண்டால் வள் என்று பாய்ந்து பிராண்டினால் எப்படி?

ஒப்பந்தத்தை ரத்து செய்தால் நீங்களா சோறு போடுவீர்கள்?

உழைப்புக்காவது மரியாதை கொடுக்கலாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்+

வயித்துக் குத்தை நம்பினாலும்.... நம்பக்கூடாது; என்னை நீங்கள் கீழானவனாக நினைச்சாலும் பரவாயில்லை, இது என்ர நிரந்தரக் கொள்கை பாருங்கோ... 

இவங்கள் எங்களுக்கு ஒரு புல்லைக்கூடப் புடுங்கிப் போடப்போவது கிடையாது. எங்களுக்கு உதவுவது போன்று பாசாங்கு செய்து, தமிழ்நாட்டில் அனுதாபத்தை ஓரளவிற்குத் திரட்டி, தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறாங்கள். அவ்வளவுதான்.

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.