Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருமை - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருமை

- வ.ஐ.ச.ஜெயபாலன்

நான் சிறுசாய் இருக்கையில்

உலகம் தட்டையாய் இருந்தது.

எங்க பாட்டிக்குத் தெரிந்த ஒர் அரக்கன்

ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி

ஒளித்து விட்டானாம்.

அப்போதெல்லாம்

பகல்தொறும் பகல்தொறும்

ஏழு வண்ணக் குதிரைத் தேரில்

சூரியன் வருகிற வழி பார்த்திருந்து

பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன்.

ஒரு நாள் வகுப்பறையில்

என் அழகான ஆசிரியை

உலகை உருண்டையாய் வனைந்து

பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள்.

சூரியனை தேரினால் இறக்கி

பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள்.

பின்னர் கல்லூரியிலோ

ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள்

கோடி கோடி சூரியன் வைத்தார்.

இப்படியாக என்

பாட்டியின் மானச உலகில்

வாழ்வு மனசிலாகியது.

கற்ற உலகிலோ எனது அறிவு

கவசம் பூண்டு ஆயுதம் தரித்தது.

இந்த இரு வேறு உலகும்

என் இருப்பு நதியின்

எதிர் புதிர்க் கரைகள்.

நதியின் அக் கரையோ

முன் பொரு காலத்தில்,

அங்கு உண்மை பேசியதால்

ஏழை விறகு வெட்டிக்கு

பொற் கோடரியும் தருகிறாள்

வனதேவதை.

இக் கரையோ எதிர் காலத்தில்,

அங்கு மனிதனையே

பிரதிமை செய்கிறார் விஞ்ஞானியர்கள்.

காற்றரனாய்

தீபத்தில் கூப்பிய கரம்போல்,

அலைப்புறும் என்மீது

நம்பிக்கைகளும் விஞ்ஞானங்களும்.

Edited by poet

இரு வேறுபட்ட நிலைகளில்ல் இருந்து புனைந்த கவிதை நன்றாக உள்ளது

அங்கே மெய்ஞானம் இங்கே விஞ்ஞானம் அருமை

இந்த இரு வேறு உலகும்

என் இருப்பு நதியின்

எதிர் புதிர்க் கரைகள்

:D கருத்துக்களத்தின் நிலையறிந்து இணைத்த கவிதை போலுள்ளது. எனது இருப்பு என்பது என்னோடு (எனது நிலைப்பாட்டோடு) மட்டும் தங்கியிருப்பதில்லை, அது எதிரியின் (எதிர் நிலைப்பாட்டின்) இருப்போடும் தங்கியிருக்கிறது என்கிற தத்துவார்த்த வரிகள். எப்போது எழுதப்பட்ட கவிதை இது? இதன் சூழல் பின்னணி குறித்தும் எழுதினால் பயன்மிக்கதாய் இருக்கும்.

Edited by இளைஞன்

வேறுபட்ட இரு நிலைகளிலிருந்து கவிதை புனைந்துள்ளீர்கள்

பாராட்டுக்கள்

இருமையிலும் ஒருமை கண்டேன் அருமைச் சிந்தனைக் கவிதை நன்றி தொடருங்கள்

சிந்தனையை தூண்டும் நல்ல படைப்பு. எதிர்பார்ப்புகளும் வளர்கின்றது. வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நதியின் அக் கரையோ

முன் பொரு காலத்தில்,

அங்கு உண்மை பேசியதால்

ஏழை விறகு வெட்டிக்கு

பொற் கோடரியும் தருகிறாள்

வனதேவதை.

இக் கரையோ எதிர் காலத்தில்,

அங்கு மனிதனையே

பிரதிமை செய்கிறார் விஞ்ஞானியர்கள்.

அக்கரை - குழந்தைப் பருவம்

இக்கரை - வயதான சிந்திக்கக்கூடிய பருவம்

?

இரண்டு perceptions காட்டும் கவிதை..நன்றாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இருமை ,கவிதை அருமை

விளங்காவிட்டால் நானொரு எருமை

விளங்குமா பருவத்தின் உணர்வை

கவி,விளக்கிவிட்டாயது உமக்கு பெருமை

வரைந்திடு நீயொரு கவிதை "பாமை"

இருமை

- வ.ஐ.ச.ஜெயபாலன்

நதியின் அக் கரையோ

முன் பொரு காலத்தில்,

அங்கு உண்மை பேசியதால்

ஏழை விறகு வெட்டிக்கு

பொற் கோடரியும் தருகிறாள்

வனதேவதை.

இக் கரையோ எதிர் காலத்தில்,

அங்கு மனிதனையே

பிரதிமை செய்கிறார் விஞ்ஞானியர்கள்.

காற்றரனாய்

தீபத்தில் கூப்பிய கரம்போல்,

அலைப்புறும் என்மீது

நம்பிக்கைகளும் விஞ்ஞானங்களும்.

அக்கரையோ அக்கரையாய்

வாழ்வின் அர்த்தம் சொன்னது

இக்கரையோ இருப்பிற்கு

இதம் சேர்த்து நின்றது

என்று எழுதி இருந்தீர்களானால் ஒருகரையில் மெஞ்ஞானமும் மறுகரையில் விஞ்ஞானமும் உங்கள் கவிதையில் உள்ளதாக சொல்லலாம்.ஆனால் உங்கள் கவிதையில் ஒருகரையில் தங்க கோடரி தரும் மாயாஜாலம் மறுகரையில் விஞ்ஞானம்.

தேவதை வந்து தங்க மழை பொழியும் மாயஜாலம் அல்ல மெஞ்ஞானம். எண்ணூறூடன் தொன்னூரை ஒப்பிடுதல் போலாகும் இது.

ஒருகரையில் பொய்மை

மறுகரையில் உண்மை

சிறந்த கவிபடைக்கும் திறமை

இருந்தும் (இது) கரைகடக்கா கவிதை :lol:

Edited by vettri-vel

கவிஞர் மெஞ்ஞானம் பற்றி எங்கும் குறிப்பிடவில்லையே. மெஞ்ஞானத்துக்கு உதாரணமாக அந்த "தேவதை & கோடரி" கதையை முன்வைத்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஒருபுறம் சாதாரண மனித நம்பிக்கைகளும், அதன் பின்னால் இருக்கும் எதிர்பார்ப்புகளும் கற்பனைகளும், மறுபுறம் அறிவியலும் ஆய்வுகளும் என்று தெளிவாகவே வரையறுத்துள்ளார். ஆனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு நதி ஓடுவதையும் தத்துவார்த்தமாக சுட்டிநிற்கிறார். கருத்தியல் ரீதியாக நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தக்கூடிய விடயமாகவே நான் பார்க்கிறேன்.

கவிஞர் மெஞ்ஞானம் பற்றி எங்கும் குறிப்பிடவில்லையே. மெஞ்ஞானத்துக்கு உதாரணமாக அந்த "தேவதை & கோடரி" கதையை முன்வைத்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஒருபுறம் சாதாரண மனித நம்பிக்கைகளும், அதன் பின்னால் இருக்கும் எதிர்பார்ப்புகளும் கற்பனைகளும், மறுபுறம் அறிவியலும் ஆய்வுகளும் என்று தெளிவாகவே வரையறுத்துள்ளார். ஆனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு நதி ஓடுவதையும் தத்துவார்த்தமாக சுட்டிநிற்கிறார். கருத்தியல் ரீதியாக நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தக்கூடிய விடயமாகவே நான் பார்க்கிறேன்.

நீங்கள் சொல்வதை சரியென்றே வைத்துக் கொண்டாலும், சிலர் இங்கு தெரிவித்திருக்கும் கருத்துக்களில் அப்படியான கருத்துருவாக்கம் செய்வதற்கான முயற்சி மறைந்திருப்பது உங்களுக்கு புரியவில்லையா. மற்றும்படி திரு.ஜெயபாலன் சிறந்த கவிஞர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைகளுக்குள்ளும், விஞ்ஞானத்திற்குள்ளும் நீங்களே தத்தளித்தால் எங்கள் நிலையைக் கூறவா முடியும்?

இப்படியாக என்

பாட்டியின் மானச உலகில்

வாழ்வு மனசிலாகியது.

கற்ற உலகிலோ எனது அறிவு

கவசம் பூண்டு ஆயுதம் தரித்தது.

இந்த இரு வேறு உலகும்

என் இருப்பு நதியின்

எதிர் புதிர்க் கரைகள்.

இரண்டு நிலையில் இருந்து கவிதையை தந்த விதம் மிகவும் நன்றாக இருகிறது.........அதிலும் இந்த வரிகள் அருமை!!இந்த கவிதையை தாங்கள் எப்போது எழுதினீங்கள் என்று கூறமுடியுமா...... :lol:

கவிதையை ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நிலைப்பாடுகளிலிருந்து அணுக முடியும். இன்னொருவரின் அணுகுமுறையை வைத்துக்கொண்டு கவிதை இதைத் தான் வெளிப்படுத்துகின்றது என்று கொள்ளமுடியாது. உதாரணமாக அகதிகள் பற்றிய வேறு நாட்டுக் கவிதைகள் ஈழத்து அகதிகளுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கும். அதற்காக அந்தக் கவிஞன் ஈழத்து அகதிகள் பற்றித்தான் எழுதினான் என்று நாங்கள் எல்லை வரையறுக்க முடியாது.

சூரியகிரகணத்தை முதலில் பார்த்த மனிதர் பாம்பு விழுங்குகிறது என்றார்கள். பின்னர் வந்த மனிதர் அவற்றை ஆராய்ந்து நிலவின் நிழல் அது என்றார்கள். இரண்டு பேரும் பார்த்த நிகழ்வு ஒன்று தான். ஒவ்வொன்றையும் எங்கிருந்து, எதனூடாக, எவ்வளவு இடைவெளியில் இருந்து பார்க்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.

அவரவர் கரைகளிலிருந்து ஒவ்வொன்றையும் பார்க்கக் கற்றுக் கொண்டோமானால் அவை அப்படித் தோன்றுவதற்கான காரணங்களை இலகுவில் அறிந்துகொள்ள முடியும். எங்கள் எங்கள் கரைகளில் மட்டும் தான் இருப்போம் என்று அடம்பிடித்தால் ஒன்றும் செய்ய முடியாதுதான்.

ஒரு நாள் வகுப்பறையில்

என் அழகான ஆசிரியை

உலகை உருண்டையாய் வனைந்து

பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள்.

சூரியனை தேரினால் இறக்கி

பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள்.

பின்னர் கல்லூரியிலோ

ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள்

கோடி கோடி சூரியன் வைத்தார்.

நாம் இதுதான் எல்லை என்று வரையறுத்து வைத்திருக்கிற எல்லைகள் ஒவ்வொன்றாய் உடைந்து விரிவடைந்து போவதை அழகாககச் சுட்டியிருக்கிறார் கவிஞர். தொட்டும்விடும் தூரத்தில் தான் வானம் என்று சிறுவயது நம்பிக்கை, பெரிய ஏணி வைத்து தொட்டுவிடலாம் என்ற ஆசை, அதன் எல்லைகள் விரிவடைந்து போவது அறிந்தபோது சிதறியுடைந்தது. இப்படித்தான் நாம் மனசு என்கிறோம் நெஞ்சைத் தொடுகிறோம். வானம் என்கிறோம் அண்ணாந்து பார்க்கிறோம். காதல் என்றதும் இதயத்தை நினைக்கிறோம். இப்படித்தான் எமது நம்பிக்கைகள். ஒவ்வொன்றாய் உடைபட்டு உருப்பெற்று...

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நிலைப்பாடுகளிலிருந்து அணுக முடியும்.

அவரவர் கரைகளிலிருந்து ஒவ்வொன்றையும் பார்க்கக் கற்றுக் கொண்டோமானால் அவை அப்படித் தோன்றுவதற்கான காரணங்களை இலகுவில் அறிந்துகொள்ள முடியும். எங்கள் எங்கள் கரைகளில் மட்டும் தான் இருப்போம் என்று அடம்பிடித்தால் ஒன்றும் செய்ய முடியாதுதான்.

நாம் இதுதான் எல்லை என்று வரையறுத்து வைத்திருக்கிற எல்லைகள் ஒவ்வொன்றாய் உடைந்து விரிவடைந்து போவதை அழகாககச் சுட்டியிருக்கிறார் கவிஞர்.

நன்றி இளைஞன் உங்கள் சிந்தனையும் விமர்சனப் பார்வையும் ஆர்வம் தருகிறது. என்றாவது ஒருநாள் சந்திக்கிறபோது நிறைய பேசலாம் நல் வாழ்த்துக்களுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.