Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்..! கேள்வி எழுப்பிய சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்?” என சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இரா.சம்பந்தன் விலக வேண்டும் என சக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக இரா.சம்பந்தன் தம்முடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

அத்துடன் தம்மை நேரடியாக கொழும்பில் சந்திக்குமாறு சம்பந்தன் கோரியிருப்பதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளாார்.

என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்..! கேள்வி எழுப்பிய சம்பந்தன் | Sampanthan Resignation Call To Mavai

செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடல்

 

இந்நிலையில் என்னை பதவி விலக சொல்லி சொல்வதற்கு சுமந்திரன் யார்? என சம்பந்தன் என்னிடம் கேட்டதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் விரைவில் நேரடியாக சந்தித்து இரா.சம்பந்தனுடன் இது தொடர்பாக கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

 

இதனிடையே இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக கலந்துரையாடப்படும் எனவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

 

எனினும் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வவுனியாவில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அதில் இரா.சம்பந்தன் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்குழுக் கூட்டத்தில் இரா.சம்பந்தனின் பதவி விலகல் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படுமா என எழுப்பிய கேள்விக்கு மாவை சேனாதிராஜா பதில் அளிப்பதை தவிர்த்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/sampanthan-resignation-call-to-mavai-1698592705?itm_source=parsely-detail

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு கல்லறைக்கு செல்லும் வரைக்கும் இந்த பதவி ஆசை  விட்டு போகாது போல.

என்ன இருந்தாலும் சுமந்திரனுக்கு அரசியல் செய்ய தெரியாது. பொய் சொல்லி , தாஜா பண்ணிக்கொண்டு செல்லாத வரைக்கும் அரசியல் கடினம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

“என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்?” என சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஏன் இதைக் கூட சம்பந்தர் தனது வாயால் சொல்ல மாட்டாரோ?

பின் கதவுகளால் கொண்டுவந்து தள்ளிவிட்டால் இப்படித் தான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

"என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்..! கேள்வி எழுப்பிய சம்பந்தன்"

வளர்த்த கடா...😀

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

ஐயாவுக்கு கல்லறைக்கு செல்லும் வரைக்கும் இந்த பதவி ஆசை  விட்டு போகாது போல.

என்ன இருந்தாலும் சுமந்திரனுக்கு அரசியல் செய்ய தெரியாது. பொய் சொல்லி , தாஜா பண்ணிக்கொண்டு செல்லாத வரைக்கும் அரசியல் கடினம்தான். 

சும் நன்றாகவே அரசியல் செய்கிறார்.

உங்களுக்கு திருமலையின் நிலவரம் புரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

திருமலைக்குச் சம்பந்தன் என்ன செய்கிறார்? 

அவர் ஒன்றுமே செய்யாதபடியால்தானே அவரை பதவி விலகச் சொல்லிக் கேட்கிறார்கள்? 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தர் இன்னும் கதிரையில் இருப்பதால் தமிழர்கள் திருமலையில் இருக்க முடியுது ...சம்மந்தரின் இறப்பின் பின் திருமலையில் தமிழரின் இருப்பு கேள்விக் குறிதான் 
 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

திருமலைக்குச் சம்பந்தன் என்ன செய்கிறார்? 

அவர் ஒன்றுமே செய்யாதபடியால்தானே அவரை பதவி விலகச் சொல்லிக் கேட்கிறார்கள்? 

 

 

ரதி அக்காவின் பதிலை கண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

மேலும் சம் இற்கு வாக்களித்த மக்கள் ஒன்றுமே கேட்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சம்மந்தர் இன்னும் கதிரையில் இருப்பதால் தமிழர்கள் திருமலையில் இருக்க முடியுது ...சம்மந்தரின் இறப்பின் பின் திருமலையில் தமிழரின் இருப்பு கேள்விக் குறிதான் 
 

ஏன் சம்மந்தர் குந்தியிருக்க அவ்வளவு நிலப்பரப்பு தேவைப்படுதா?
கொஞ்சம் புரிகிறமாதிரி சொல்லுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

ரதி அக்காவின் பதிலை கண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

மேலும் சம் இற்கு வாக்களித்த மக்கள் ஒன்றுமே கேட்கவில்லை.

இத்தனை காலமும் வாக்களித்த மக்களின் சொல்லைக் கேட்டா நடந்தனர் எமது அரசியல்வாதிகள, இப்போது கேட்பதற்கு? 

 வெளிநாட்டிலிருந்து வந்த  தனது அரசியல் வாரிசை முன்னிலைப்படுத்தும்வரை அவர் பதவி விலகார்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இத்தனை காலமும் வாக்களித்த மக்களின் சொல்லைக் கேட்டா நடந்தனர் எமது அரசியல்வாதிகள, இப்போது கேட்பதற்கு? 

 வெளிநாட்டிலிருந்து வந்த  தனது அரசியல் வாரிசை முன்னிலைப்படுத்தும்வரை அவர் பதவி விலகார்!

அவரும் சும் இன் கைக்கூலியாகி வருடங்கள் பல.

மேலும் நீங்கள் பன்மையில் “கேட்கிறார்கள்” என கூறியமையால் தான்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, MEERA said:

அவரும் சும் இன் கைக்கூலியாகி வருடங்கள் பல.

மேலும் நீங்கள் பன்மையில் “கேட்கிறார்கள்” என கூறியமையால் தான்.

நல்ல விடயம்தானே! 

எல்லோரும் இந்தியாவுக்குத்தான் சாமரம் வீசவேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே?  மேற்கிற்கும் கொஞ்சப்பேர் விசலாம்தானே 😀

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

“என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்?” சம்பந்தன்

சபாஷ்.. சரியான போட்டி.....🤣

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே மாறி மாறி சொந்தக் கட்சி பதவிக்கு அடிபட வேண்டியான். இதில மக்களுக்கு உரிமையாவது மண்ணாங்கட்டியாவது. இவங்களிடமே கட்சி சனநாயம் இல்லை.. இதில.. தாங்கள் பெரிய சனநாயகவாதிகளாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் 2 பெருந்தவறுகள் செய்தார்.2009 இற்குப் பின் புலி நீக்க அரசியல் செய்தார்.பின்னர் சுமத்திரனைக் கட்சிக்குள் கொண்டு வந்தார். சுமத்திரன் விக்கியை தமிழத்தேசியக்கூட்டமைப்பிலிருந்து நீக்கினார். சுரேசின் கட்சியை நீக்கினார்.அனந்தி ரவிகரனை நீக்கினார்.தன் சகாவான ஆர்னோல்டடடை ஓரங்கட்டினார். தமிழரசுக்கட்சித்தலைவர் பதவி  பெற்றுத் தருகிறேன் என்று சொல்லி ஆசைகாட்டி சிறிதரனை கூட்டுச்சேரத்து கட்சித்தலைவர் மாவையை தேர்தலில் தோற்கடித்து ஓரங்கட்டினார். புளொட்>ரெலோலவ நீக்கினார். சிறிதரனுக்கு ஆப்படித்து விட்டு சாணக்கியனை சேர்த்துக் கொண்டார்.அருந்தவபாலைனை ஓரங்கட்டினார். சசிகலா ரவிராஜை ஓரங்கட்டினார்.தமிழ்த்தேசியக் கூட்டமைபபை உடைத்தார். தமிழரசுக்கட்சியை உடைத்தார். இப்பொழுது சம்பந்தருக்கும் ஆப்படிக்கிறார். ஆனால் ஈது அவர் மல்லாந்து கிடந்து கொண்டு துப்பினமாதிரி இருக்குது. சுமத்திரனை தமித்தேசிய அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றாவிட்டால் தமிழத்தேசியத்திற்கு பெரும் பின்னடைவு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, புலவர் said:

சம்பந்தர் 2 பெருந்தவறுகள் செய்தார்.2009 இற்குப் பின் புலி நீக்க அரசியல் செய்தார்.பின்னர் சுமத்திரனைக் கட்சிக்குள் கொண்டு வந்தார். சுமத்திரன் விக்கியை தமிழத்தேசியக்கூட்டமைப்பிலிருந்து நீக்கினார். சுரேசின் கட்சியை நீக்கினார்.அனந்தி ரவிகரனை நீக்கினார்.தன் சகாவான ஆர்னோல்டடடை ஓரங்கட்டினார். தமிழரசுக்கட்சித்தலைவர் பதவி  பெற்றுத் தருகிறேன் என்று சொல்லி ஆசைகாட்டி சிறிதரனை கூட்டுச்சேரத்து கட்சித்தலைவர் மாவையை தேர்தலில் தோற்கடித்து ஓரங்கட்டினார். புளொட்>ரெலோலவ நீக்கினார். சிறிதரனுக்கு ஆப்படித்து விட்டு சாணக்கியனை சேர்த்துக் கொண்டார்.அருந்தவபாலைனை ஓரங்கட்டினார். சசிகலா ரவிராஜை ஓரங்கட்டினார்.தமிழ்த்தேசியக் கூட்டமைபபை உடைத்தார். தமிழரசுக்கட்சியை உடைத்தார். இப்பொழுது சம்பந்தருக்கும் ஆப்படிக்கிறார். ஆனால் ஈது அவர் மல்லாந்து கிடந்து கொண்டு துப்பினமாதிரி இருக்குது. சுமத்திரனை தமித்தேசிய அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றாவிட்டால் தமிழத்தேசியத்திற்கு பெரும் பின்னடைவு வரும்.

நீங்கள் கூறியவற்றில் மிகப்பெரும்பான்மையானவற்றுடன் உடன்படுகிறேன்.

ஆனால், "சுமத்திரனை தமித்தேசிய அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றாவிட்டால் தமிழத்தேசியத்திற்கு பெரும் பின்னடைவு வரும்" என்று கூறினீர்களே அங்குதான்  உதைக்குது. 

எங்களிடம் எங்கே தமிழ்த் தேசியம் இருக்கிறது பின்னடைவை  சந்திப்பதற்கு...?

எங்களிடம் இருப்பதெல்லாம் Timeல் தேசியமெல்லோ? 

🤨

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நீங்கள் கூறியவற்றில் மிகப்பெரும்பான்மையானவற்றுடன் உடன்படுகிறேன்.

ஆனால், "சுமத்திரனை தமித்தேசிய அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றாவிட்டால் தமிழத்தேசியத்திற்கு பெரும் பின்னடைவு வரும்" என்று கூறினீர்களே அங்குதான்  உதைக்குது. 

எங்களிடம் எங்கே தமிழ்த் தேசியம் இருக்கிறது பின்னடைவை  சந்திப்பதற்கு...?

எங்களிடம் இருப்பதெல்லாம் Timeல் தேசியமெல்லோ? 

🤨

என்ன சொல்ல வருகிறிர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, MEERA said:

சும் நன்றாகவே அரசியல் செய்கிறார்.

உங்களுக்கு திருமலையின் நிலவரம் புரியவில்லை. 

அது சரி. உங்களுக்கு புரிந்தால் மிகவும் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

சம்பந்தர் 2 பெருந்தவறுகள் செய்தார்.2009 இற்குப் பின் புலி நீக்க அரசியல் செய்தார்.பின்னர் சுமத்திரனைக் கட்சிக்குள் கொண்டு வந்தார். சுமத்திரன் விக்கியை தமிழத்தேசியக்கூட்டமைப்பிலிருந்து நீக்கினார். சுரேசின் கட்சியை நீக்கினார்.அனந்தி ரவிகரனை நீக்கினார்.தன் சகாவான ஆர்னோல்டடடை ஓரங்கட்டினார். தமிழரசுக்கட்சித்தலைவர் பதவி  பெற்றுத் தருகிறேன் என்று சொல்லி ஆசைகாட்டி சிறிதரனை கூட்டுச்சேரத்து கட்சித்தலைவர் மாவையை தேர்தலில் தோற்கடித்து ஓரங்கட்டினார். புளொட்>ரெலோலவ நீக்கினார். சிறிதரனுக்கு ஆப்படித்து விட்டு சாணக்கியனை சேர்த்துக் கொண்டார்.அருந்தவபாலைனை ஓரங்கட்டினார். சசிகலா ரவிராஜை ஓரங்கட்டினார்.தமிழ்த்தேசியக் கூட்டமைபபை உடைத்தார். தமிழரசுக்கட்சியை உடைத்தார். இப்பொழுது சம்பந்தருக்கும் ஆப்படிக்கிறார். ஆனால் ஈது அவர் மல்லாந்து கிடந்து கொண்டு துப்பினமாதிரி இருக்குது. சுமத்திரனை தமித்தேசிய அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றாவிட்டால் தமிழத்தேசியத்திற்கு பெரும் பின்னடைவு வரும்.

தனி ஒரே ஆளினால் நீங்கள் கூறிய இவ்வளவையும் செய்ய முடியுமானால் அவருடைய ஆளுமையை என்னவென்று சொல்லுவது. அப்படி என்றால் அங்கு நீங்கள் கூறிய எல்லோருமே மட்டி மடயர்களா? ஒரு சிலர் மட்டி மடையர்கள் என்று தெரியும். ஆனால் இத்தனை மட்டி மடையர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

எனக்கு என்னமோ நீங்கள் சொல்லுவதை பார்த்தல் இவருக்கு ஆளுமை இருப்பதுபோல தான் தெரிகின்றது. ஆனால் ஒன்று, சுமந்திரனுக்கு அரசியலுக்கும் சரிப்பட்டு வராது. அரசியல் சாக்கடை என்று சொல்லுவார்கள். அந்த சாக்கடையில் நீந்த முடியாவிடடாள் அரசியல் செய்ய முடியாது. அது சுமந்திரனுக்கு முடியாது. ஆளுமை இருந்தாலும் அரசியல் ஞானம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Cruso said:

எனக்கு என்னமோ நீங்கள் சொல்லுவதை பார்த்தல் இவருக்கு ஆளுமை இருப்பதுபோல தான் தெரிகின்றது. ஆனால் ஒன்று, சுமந்திரனுக்கு அரசியலுக்கும் சரிப்பட்டு வராது. அரசியல் சாக்கடை என்று சொல்லுவார்கள். அந்த சாக்கடையில் நீந்த முடியாவிடடாள் அரசியல் செய்ய முடியாது. அது சுமந்திரனுக்கு முடியாது. ஆளுமை இருந்தாலும் அரசியல் ஞானம் இல்லை.

இதெல்லாம் சுமத்திரனின் ஆளுமை என்று சால்ல முடியாது. சம்பந்தர் கொடுத்த துணிவில்தான் இவை எல்லாவற்றையும் செய்தார். சம்பந்தரும் கண்டும் காணாமலும் விட்டிருந்தார். மற்றவர்கள் மாவை உட்பட எல்வலாரும் சம்பந்தரின் வயதுக்கும் அனுபவத்திற்கும் மதிப்புக் கொடுத்து அடக்கி வாசித்தார்கள். இனி சம்பந்தரால் முடியாத நிலையில் தலைமையைக் கைப்பற்ற சுமத்திரன் சம்பந்தருக்கே ஆப்பை அடித்தார். ஆ னால் சம்பந்தர் உடலளவில் பலவீனப்பட்டாலும் பதவியைக் விட்டுக் கொடுக்க விரும்பாமல் என்னை விலகச் சொல்ல சுமத்திரன் யார் என்று கேள்வியை எழுப்புகிறார். தமிழரசுக்கட்சிக்குள் சுமத்திரனுக்கு செல்வாக்கு இல்லை. மாவைக்குத்தான் செல்வாக்கு.இப்ப சம்பந்ரை வீளாய் பகைத்து விட்டதால் மாவையின் கை ஓங்கும். மாவை மிகப் பொறுமைசாலி யார் எதைப் பேசினாலும் எதிர்த்து அரசியல்செய்யாமல் ஒத்தோடி தனது அரசியல் இருப்பைத் தகக வைத்துக்கொள்வார். சுமத்திரனுக்கு அரசியல் அனுபவம் இல்லை. சம்பந்தர் கொடுத்த தைரியத்தில் அளவுக்கு அதிகமா ஆடி விட்டார். இனி சுமத்திரகனுக்கு அரசியல் எதிர்காலமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இதெல்லாம் சுமத்திரனின் ஆளுமை என்று சால்ல முடியாது. சம்பந்தர் கொடுத்த துணிவில்தான் இவை எல்லாவற்றையும் செய்தார். சம்பந்தரும் கண்டும் காணாமலும் விட்டிருந்தார். மற்றவர்கள் மாவை உட்பட எல்வலாரும் சம்பந்தரின் வயதுக்கும் அனுபவத்திற்கும் மதிப்புக் கொடுத்து அடக்கி வாசித்தார்கள். இனி சம்பந்தரால் முடியாத நிலையில் தலைமையைக் கைப்பற்ற சுமத்திரன் சம்பந்தருக்கே ஆப்பை அடித்தார். ஆ னால் சம்பந்தர் உடலளவில் பலவீனப்பட்டாலும் பதவியைக் விட்டுக் கொடுக்க விரும்பாமல் என்னை விலகச் சொல்ல சுமத்திரன் யார் என்று கேள்வியை எழுப்புகிறார். தமிழரசுக்கட்சிக்குள் சுமத்திரனுக்கு செல்வாக்கு இல்லை. மாவைக்குத்தான் செல்வாக்கு.இப்ப சம்பந்ரை வீளாய் பகைத்து விட்டதால் மாவையின் கை ஓங்கும். மாவை மிகப் பொறுமைசாலி யார் எதைப் பேசினாலும் எதிர்த்து அரசியல்செய்யாமல் ஒத்தோடி தனது அரசியல் இருப்பைத் தகக வைத்துக்கொள்வார். சுமத்திரனுக்கு அரசியல் அனுபவம் இல்லை. சம்பந்தர் கொடுத்த தைரியத்தில் அளவுக்கு அதிகமா ஆடி விட்டார். இனி சுமத்திரகனுக்கு அரசியல் எதிர்காலமே இல்லை.

இதைத்தான் நான் சுமந்திரனுக்கு அரசியல் தெரியாது என்று குறிப்பிட்டிருக்கிறேன். அப்படி என்றால் இவர்கள் சம்பந்தருக்கு பிறகு யாரை மதித்து அரசியல் செய்யப்போகிறார்கள்? மாவையை மதித்தா? அப்படி எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்குமென்று கொஞ்சம் சிந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Cruso said:

இதைத்தான் நான் சுமந்திரனுக்கு அரசியல் தெரியாது என்று குறிப்பிட்டிருக்கிறேன். அப்படி என்றால் இவர்கள் சம்பந்தருக்கு பிறகு யாரை மதித்து அரசியல் செய்யப்போகிறார்கள்? மாவையை மதித்தா? அப்படி எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்குமென்று கொஞ்சம் சிந்தியுங்கள்.

மாவை ஒரு ஆளுமை இல்லாத தலைவர்.கட்சிக்குள் சுமத்திரனை விட மாவைக்கு செல்வாக்கு அதிகம். தேர்தலுக்கு போனால் 2 பேருமே தோற்கும் நிலைதான்வரப் போகிறது. தமிழரசுக்கட்சிக்னகு எதிர்காலம் இல்லை. சம்பந்தர் சுமத்திரகன உள்வாங்கி தமீழத்தேசியக்கூட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியை உடைத்து கடைசியில் தனக்கும் அழிவைத் தேடிக்கொண்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

மாவை ஒரு ஆளுமை இல்லாத தலைவர்.கட்சிக்குள் சுமத்திரனை விட மாவைக்கு செல்வாக்கு அதிகம். தேர்தலுக்கு போனால் 2 பேருமே தோற்கும் நிலைதான்வரப் போகிறது. தமிழரசுக்கட்சிக்னகு எதிர்காலம் இல்லை. சம்பந்தர் சுமத்திரகன உள்வாங்கி தமீழத்தேசியக்கூட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியை உடைத்து கடைசியில் தனக்கும் அழிவைத் தேடிக்கொண்டார். 

கட்சிக்குள் செல்வாக்கு இருந்தால் மட்டும் போதாது. அதை கொண்டு நடத்துவதட்கு ஆளுமை இருக்க வேண்டும். நாலு பேருடன் பேசகூட்டிய , அவர்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தலைவராக இருக்க வேண்டும். சும்மா கோப்புகளை தூக்கிக்கொண்டு மற்றவர்களுக்கு பின்னால் ஓடுறவர்களாக, எடுபிடி அரசியல்வாதிகளாக  இருக்கக்கூடாது.  மற்றப்படி இவர்கள் எல்லோரும் சுயநல அரசியல்வாதிகளே. 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/10/2023 at 18:01, Maruthankerny said:

ஏன் சம்மந்தர் குந்தியிருக்க அவ்வளவு நிலப்பரப்பு தேவைப்படுதா?
கொஞ்சம் புரிகிறமாதிரி சொல்லுங்கள் 

சம்மந்தர் திருகோணமலையில் தேர்தலில் நிக்கா விடின் அவர்களது கட்சி சார்பாய் நிக்க போவது யார்?...அவர்கள் வெல்லுவார்களா ?...அவர்கள் வெல்லா விட்டால் அந்த இடத்திற்கு யார் வருவார்கள் என்று விளங்குதா?...நான் ஒன்றும் சம்மின் ஆதரவாளர் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சம்மந்தர் திருகோணமலையில் தேர்தலில் நிக்கா விடின் அவர்களது கட்சி சார்பாய் நிக்க போவது யார்?...அவர்கள் வெல்லுவார்களா ?...அவர்கள் வெல்லா விட்டால் அந்த இடத்திற்கு யார் வருவார்கள் என்று விளங்குதா?...நான் ஒன்றும் சம்மின் ஆதரவாளர் இல்லை 

ஒற்றுமையாக யார் ஒரு தமிழர் தமிழரசு சார்பாக நின்றாலும் திருமலை மாவட்டத்தில் ஒரு தமிழ் சீட் வரும் என்றே நினைக்கிறேன்.

அது கட்டாயம் சம்பந்தர் அல்லது அவர் மகன் அல்லது அவரின் வளர்ப்பு பூனையாகத்தான் இருக்க வேண்டியதில்லை.

On 30/10/2023 at 22:02, புலவர் said:

சம்பந்தர் 2 பெருந்தவறுகள் செய்தார்.2009 இற்குப் பின் புலி நீக்க அரசியல் செய்தார்.பின்னர் சுமத்திரனைக் கட்சிக்குள் கொண்டு வந்தார். சுமத்திரன் விக்கியை தமிழத்தேசியக்கூட்டமைப்பிலிருந்து நீக்கினார். சுரேசின் கட்சியை நீக்கினார்.அனந்தி ரவிகரனை நீக்கினார்.தன் சகாவான ஆர்னோல்டடடை ஓரங்கட்டினார். தமிழரசுக்கட்சித்தலைவர் பதவி  பெற்றுத் தருகிறேன் என்று சொல்லி ஆசைகாட்டி சிறிதரனை கூட்டுச்சேரத்து கட்சித்தலைவர் மாவையை தேர்தலில் தோற்கடித்து ஓரங்கட்டினார். புளொட்>ரெலோலவ நீக்கினார். சிறிதரனுக்கு ஆப்படித்து விட்டு சாணக்கியனை சேர்த்துக் கொண்டார்.அருந்தவபாலைனை ஓரங்கட்டினார். சசிகலா ரவிராஜை ஓரங்கட்டினார்.தமிழ்த்தேசியக் கூட்டமைபபை உடைத்தார். தமிழரசுக்கட்சியை உடைத்தார். இப்பொழுது சம்பந்தருக்கும் ஆப்படிக்கிறார். ஆனால் ஈது அவர் மல்லாந்து கிடந்து கொண்டு துப்பினமாதிரி இருக்குது. சுமத்திரனை தமித்தேசிய அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றாவிட்டால் தமிழத்தேசியத்திற்கு பெரும் பின்னடைவு வரும்.

 

On 31/10/2023 at 01:18, Cruso said:

தனி ஒரே ஆளினால் நீங்கள் கூறிய இவ்வளவையும் செய்ய முடியுமானால் அவருடைய ஆளுமையை என்னவென்று சொல்லுவது

இல்லை சுமந்திரன் பற்றிய என் ஆரம்ப கணிப்பு - அவர் அரசியல் நகர்வு நுணுக்கம் உள்ளவர்  என்பதே.  அது சரிதான்.

மேலே புலவர் கொடுத்துள்ள நரி வேலைகள் உண்மையிலேயே ஒரு impressive list.

ஆனால் இந்த இயலுமையை சொந்த இனம் சார்பாக, எதிரிகளிடம் காட்டாமல், சுய நலத்துக்கு சொந்த இனத்திடம் மட்டும் பாவிக்கிறார்.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.