Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத்தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jeevan-thondaman-New.jpg?resize=520,375&

இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத்தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்!

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

”சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துவிட்டதாக” சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கும் விதமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்றுத் தவறை சரி செய்வதற்கு தமக்குள்ள பொறுப்பை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.

இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு சென்றவர்களில் ஒரு தரப்புக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படாமல் இருப்பது கவலையளிக்கின்றது.

இதனால் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. கடும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது மக்களுக்கு இலங்கையில் குடியுரிமையை பெற்றுக்கொடுத்தோம். இந்த வரலாற்று தவறை சீர்செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

எமது மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டுவதற்கான நல்லிணக்க பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 பேர்ச்சஸ் காணி உரிமையும் வழங்கப்பட்டு வருகின்றது. இவை போதுமானவை அல்ல. பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ள மக்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் ” இவ்வாறு அமைச்சர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1361948

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

இவ்வாறு சென்றவர்களில் ஒரு தரப்புக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படாமல் இருப்பது கவலையளிக்கின்றது.

80 ஆயிரம் திபேத்தியர்களுக்கு குடியுரிமை வழங்கி உள்ளது நடுவம் அரசு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு சென்றவர்களில் ஒரு தரப்புக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படாமல் இருப்பது கவலையளிக்கின்றது.

இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவழினருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டதா?

இல்லை என்றே எண்ணுகிறேன்.

இல்லை என்றால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவழினருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டதா?

இல்லை என்றே எண்ணுகிறேன்.

இல்லை என்றால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 இலங்கையில் மலையக தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. 
ஆனால் இந்தியா திரும்பிய மலையக தமிழர் முப்பதாயிரம் பேருக்கு 
இந்தியாவில் இன்னும் குடியுரிமை வழங்கப்பட வில்லை.

அந்த முப்பதாயிரம் மலையக தமிழர் உட்பட ஒரு லட்சம் ஈழத் தமிழர் 
நாற்பது வருடமாக அகதிகளாகவே தமிழ்நாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இலங்கையில் மலையக தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது.

இது தவறான தகவலாக இருக்கலாம்.

சரி கம ப வில் நடந்த பாட்டுப் போட்டியில் மலையகத்தில் இருந்து வந்து பாடும் அசானி என்பவரின் தகப்பனிடம் உங்களுக்க இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டு விட்டதா என சத்தியராஜ் கேட்க இல்லை என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இது தவறான தகவலாக இருக்கலாம்.

சரி கம ப வில் நடந்த பாட்டுப் போட்டியில் மலையகத்தில் இருந்து வந்து பாடும் அசானி என்பவரின் தகப்பனிடம் உங்களுக்க இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டு விட்டதா என சத்தியராஜ் கேட்க இல்லை என்கிறார்.

அவர் தெரியாமல் சொல்லி இருக்க வேண்டும். இங்குள்ள எல்லோருக்குமே குடியுரிமை வழங்கி இருக்கிறார்கள். ஆனாலும், மற்ற இனங்களுக்கு உள்ள வசதி வாய்ப்புக்கள் அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம்.

எல்லா மக்களுக்கும் காணி, வீடு என்று வசதிகள் இல்லை. அவர்களுக்கு என்று வீட்டு விலாசம் இல்லை. நேற்றைய தீர்ப்பில் எல்லா வீடுகளுக்கும் இன்னும் ஒன்பது மாதங்களுக்குள் விலாசம் கொடுப்பதட்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுடைய தோட்ட்ங்களும், கம்பெனிகளும் செய்துகொள்ளப்படட உடன்படிக்கைகள் சலுகைகள் காரணமாக சில செயட்பாடுகள் சிக்கலானவை. இருந்தாலும் முன்னயைவிட அவர்களது வாழக்கைத்தரம் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் மேலும் பல முன்னேற்றங்களை எதிர் பார்க்கலாம்.

இருந்தாலும், இந்தியாவில் உள்ள தோடட தமிழர்களை மீண்டும் கொண்டுவந்து இங்கு குடியற்றும் இவர்களது முடிவு சிங்கள தீவிரவாதிகளை மீண்டும் தட்டியெழுப்பும் ஒரு செயலாகவே இருக்கும். முதலில் இங்குள்ள தோடட தமிழர்களின் பிரச்சினையை முடித்துவிட்டு அதை பேசலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Cruso said:

அவர் தெரியாமல் சொல்லி இருக்க வேண்டும். இங்குள்ள எல்லோருக்குமே குடியுரிமை வழங்கி இருக்கிறார்கள். ஆனாலும், மற்ற இனங்களுக்கு உள்ள வசதி வாய்ப்புக்கள் அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம்.

எல்லா மக்களுக்கும் காணி, வீடு என்று வசதிகள் இல்லை. அவர்களுக்கு என்று வீட்டு விலாசம் இல்லை. நேற்றைய தீர்ப்பில் எல்லா வீடுகளுக்கும் இன்னும் ஒன்பது மாதங்களுக்குள் விலாசம் கொடுப்பதட்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுடைய தோட்ட்ங்களும், கம்பெனிகளும் செய்துகொள்ளப்படட உடன்படிக்கைகள் சலுகைகள் காரணமாக சில செயட்பாடுகள் சிக்கலானவை. இருந்தாலும் முன்னயைவிட அவர்களது வாழக்கைத்தரம் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் மேலும் பல முன்னேற்றங்களை எதிர் பார்க்கலாம்.

இருந்தாலும், இந்தியாவில் உள்ள தோடட தமிழர்களை மீண்டும் கொண்டுவந்து இங்கு குடியற்றும் இவர்களது முடிவு சிங்கள தீவிரவாதிகளை மீண்டும் தட்டியெழுப்பும் ஒரு செயலாகவே இருக்கும். முதலில் இங்குள்ள தோடட தமிழர்களின் பிரச்சினையை முடித்துவிட்டு அதை பேசலாம். 

தகவலுக்கு நன்றி குருசோ.

11 hours ago, தமிழ் சிறி said:
 

 இலங்கையில் மலையக தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. 
ஆனால் இந்தியா திரும்பிய மலையக தமிழர் முப்பதாயிரம் பேருக்கு 
இந்தியாவில் இன்னும் குடியுரிமை வழங்கப்பட வில்லை.

அந்த முப்பதாயிரம் மலையக தமிழர் உட்பட ஒரு லட்சம் ஈழத் தமிழர் 
நாற்பது வருடமாக அகதிகளாகவே தமிழ்நாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

தோழர் பாலன்

தமிழ் சிறி உங்கள் தகவலுக்கு நன்றி.

நான் தான் அவர்களின் சம்பாசணையை வைத்து பிழையாக சொல்லிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2023 at 16:30, ஈழப்பிரியன் said:

இது தவறான தகவலாக இருக்கலாம்.

சரி கம ப வில் நடந்த பாட்டுப் போட்டியில் மலையகத்தில் இருந்து வந்து பாடும் அசானி என்பவரின் தகப்பனிடம் உங்களுக்க இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டு விட்டதா என சத்தியராஜ் கேட்க இல்லை என்கிறார்.

ஆமாம் சரி  குடியுரிமை அனைவருக்கும் வழங்கப்படவில்லை  ஒரு பகுதியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது 

On 5/12/2023 at 02:40, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி குருசோ.

தமிழ் சிறி உங்கள் தகவலுக்கு நன்றி.

நான் தான் அவர்களின் சம்பாசணையை வைத்து பிழையாக சொல்லிவிட்டேன்.

இல்லை  

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சோம்பேறி சிங்களவனால் வந்த வினை .

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2023 at 16:30, ஈழப்பிரியன் said:

சரி கம ப வில் நடந்த பாட்டுப் போட்டியில் மலையகத்தில் இருந்து வந்து பாடும் அசானி என்பவரின் தகப்பனிடம் உங்களுக்க இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டு விட்டதா என சத்தியராஜ் கேட்க இல்லை என்கிறார்.

நீங்கள் பார்த்த நிகழ்ச்சியில் மலையகத்தில் இருந்து வந்தவர்  தமிழ்நாட்டு இந்திய அனுதாபத்தை பெற்று கொள்வதற்காக அப்படி சொல்லியிருக்க வேண்டும். இப்படி பல மிகைபடுத்தபட்ட  கற்பனை கதைகள் இலங்கை தமிழர்களாலும்  இந்திய தொலைகாட்சிகளில் சொல்லபட்டதாக பார்ப்பவர்கள் சொன்னார்கள். சிறி அண்ணாவும்,  குருசோவும் சொன்னது சரி.
இலங்கையில் மலையக தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் வாழ்க்கைநிலை யாழ்பாண தமிழர்கள் மாதிரி இல்லை. படு மோசம்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

இதெல்லாம் சோம்பேறி சிங்களவனால் வந்த வினை .

 

சிங்களவனை சோம்பேறிஎனருசொல்லிக்க சொல்லி இப்ப தமிழர்தான் வெளிநாட்டுக் காசால் சோம்பேறிக்களாகி விட்டார்கள். 

On 4/12/2023 at 09:24, தமிழ் சிறி said:
 

 இலங்கையில் மலையக தமிழர் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. 
ஆனால் இந்தியா திரும்பிய மலையக தமிழர் முப்பதாயிரம் பேருக்கு 
இந்தியாவில் இன்னும் குடியுரிமை வழங்கப்பட வில்லை.

அந்த முப்பதாயிரம் மலையக தமிழர் உட்பட ஒரு லட்சம் ஈழத் தமிழர் 
நாற்பது வருடமாக அகதிகளாகவே தமிழ்நாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

தோழர் பாலன்

இது தொடர்பாக அண்மையில் வந்த செய்தி / தீர்ப்பு 

 

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்தியா- இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய குடிமகன்களாக அங்கீகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் இரும்பூதிப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த டி.கணேசன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், மனுதாரர் இந்திய குடியுரிமைக்காக தாக்கல் செய்துள்ள ஆவணங்கள், மனுதாரர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என மத்திய உள்துறை செயலாளர் 11.2.2022-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்து தன்னையும், தனது குடும்பத்தினரையும் இந்திய குடிமகன்களாக அங்கீகரிக்கக்கோரி கணேசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையினர். தமிழர்கள் சிறுபான்மையினர். அங்கு தமிழர்கள் ஒரே குழுவினராக இல்லை. தமிழர்களில் பெரு்ம்பாலானவர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டனர். அவர்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ளனர். இலங்கையில் வாழும் தமிழர்களின் குறிப்பிட்ட சதவீதம் பேர் இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழகத்திலி்ருந்து 19வது நூற்றாண்டில் சென்றவர்கள். இவர்கள் இலங்கை எப்போது சுதந்திரம் பெற்றதோ, அப்போதிலிருந்து நாடற்றவர்களாக மாறிவிட்டனர்.

இலங்கையில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களின் நலன் தொடர்பாக இந்தியா, இலங்கை இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. 1964-ல் போடப்பட்ட முதல் ஒப்பந்தத்தில், இலங்கையிலிருந்து 5.25 லட்சம் தமிழர்களை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும், 1974-ல் ஏற்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் 1.50 லட்சம் பேரில் 50 சதவீதம் பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்குவது, 75 ஆயிரம் பேரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி, இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் 16 வயதில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு 1982-ல் தான் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதில் மனுதாரரின் சிறுவயது புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் மற்றும் விபரங்களை பாஸ்போர்ட் அதிகாரி சான்றொப்பம் அளித்துள்ளார்.

இந்திய அரசு மனுதாரின் பாஸ்போர்ட் மற்றும் அதிலுள்ள விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பவில்லை. அதில் உள்ள புகைப்படம் தான் தற்போது பிரச்சினையாக உள்ளது. சிறு வயது புகைப்படத்தை வைத்து ஒருவரை அடையாளம் காணும் யுகத்தில் இருக்கிறோம். பாஸ்போர்ட்டின் உண்மை தன்மையில் சந்தேகம் இல்லாத போது, அதிலுள்ள புகைப்படத்தை உரிமை கோருபவருடன் பொருத்தி சரிபார்ப்பதை அதிகாரிகள் தான் செய்ய வேண்டும். அந்த சுமையை மனுதாரர் மீது திணிக்கக்கூடாது.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பும் 6 லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுவரை 4,61,639 பேரின் இந்திய குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.10.1981 ஆகும். மனுதாரர் 1970-ல் விண்ணப்பித்துள்ளார். 33 வயதில் இந்தியா வந்த மனுதாரர் தற்போது பேரன், பேத்திகளுடன் உள்ளார்.

இலங்கையில் இருந்து தாயகம் திரும்புவோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பான கணக்கீடு 1974ல் எடுக்கப்பட்டுள்ளது. கணக்கீடு எடுக்கப்பட்டு அரை நூற்றாண்டு காலம் கடந்து விட்டது. இன்னும் 1.37 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். தற்போது இந்திய குடியுரிமை கேட்டு 5130 பேர் விண்ப்பித்துள்ளனர்.

மனுதாரரின் இந்திய குடியுரிமையை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடவில்லை. இலங்கை- இந்தியா ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பதை நிறைவேற்ற வேண்டும் என்று தான் கூறுகிறோம். எனவே மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர், அவரது குடும்பத்தினரை இந்திய குடிமகன்களாக அங்கீகரிக்க வேண்டும். மனுதாரருக்கு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை மாநில அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/1161810-indian-citizenship-for-sri-lankan-returnees-hc-directs-union-govt-2.html

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஒரே இரவில்.. வெளியேற்றப்பட்டார்கள் என்று கூவும் போது அதற்கு ஆமாப் போடும் சிங்களம்..

தான் செய்த இந்த பாதகச் செயலை... தவறென்று ஏற்றுக்கொண்டு.. பல தசாப்தங்களாக வாழ்ந்த மலையக தமிழ் மக்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் மீண்டும் மீளக் குடியேற அனுமதிக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இருந்தும்.. மணலாறு.. மன்னார் சிலாபத்துறை.. வவுனியாவில் இருந்தும் (குடியேற்றி பின் வெளியேறிய).. வெளியேறிய சிங்களவர்களை எல்லாம் மீளக்குடியமர்த்த அழைத்த மகிந்த கும்பல்.. இந்த மலையக மக்களைக் கண்டுகொள்ளாதது ஏனோ.

ஏன் எங்கட வடக்குக் கிழக்கு டமிழ் கட்சிகள் கூட இப்படி ஒரு விசயம் இருப்பதாகக் காட்டிக்கொண்டதே இல்லை.

ஆனால்.. பாலகுமார் அண்ணா தலைமையிலான ஈரோஸ் இந்த விடயத்தை முன்னரே வலியுறுத்தி வந்திருக்கிறது. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.