Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

norway1.webp?resize=750,375&ssl=1

நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!

நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது காரில் மற்றுமொரு நபரும் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். அவரை மீட்ட காவற்துறையினர் ஒஸ்லோவில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் மூலம் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கி ஒன்றும் காரின் உள்ளே கிடந்து மீட்கப் பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனச் சந்தேகிக்கப்படுகிறது.இளைஞன் யுவதியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் மூன்றாவது நபர்கள் எவராவது இதில் சம்பத்தப் பட்டுள்ளனரா என்பதை அறிவதற்காகப் பொலீஸார் சாட்சிகளிடம் தகவல்களைக் கோரியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட யுவதி முப்பது வயதான ராகவி வரதராஜன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒரு பல் மருத்துவர். உயிரிழந்த ஆணின் விவரங்கள் தெரியவில்லை.  அத்துடன், உயிரிழந்தப் பெண் பலமுறை உயிர் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளதாகவும், அது குறித்து காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த முறைப்பாடு தொடர்பில் காவற்துறையினர் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நோர்வேயின் கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023ஆம் ஆண்டில் அதிகமான மக்கள் (36 பேர்) கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு, வருடாந்த கொலை எண்ணிக்கை 30ஐத் தாண்டியது இதுவே முதல் முறையாகும். புத்தாண்டு தினத்திலிருந்து மேலும் ஆறு கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1365101

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் தமிழ் பெண் வைத்தியர் படுகொலை

Published By: DIGITAL DESK 3   06 JAN, 2024 | 02:59 PM

image
 

நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (02) நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் புத்தாண்டு தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் உடலில் பல துப்பாக்கி சூடு காயங்கள் இருந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர் பல் வைத்தியர் என்பதோடு நீண்ட காலமாக இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் சடலம் கண்டெடுக்கப்பட்ட காரிலிருந்து கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை மிரட்டல் தொடர்பில் உயிரிழந்த பெண் பல தடவைகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததோடு, அது தொடர்பில் உரிய முறையில் பொலிஸார் கவனம் செலுத்தவில்லை என குடும்பத்தினர் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வேயில் தமிழ் பெண் வைத்தியர் படுகொலை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி பூங்கா நோர்வேயில் என்ன நடக்கிறது?  கொலை செய்தவர் தமிழரா???

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

அமைதி பூங்கா நோர்வேயில் என்ன நடக்கிறது?  கொலை செய்தவர் தமிழரா???

சமாதான புறா. .??😭

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 

இந்த செய்தி முன்பு தமிழ்வின் தளத்தில் வந்தது.

கூகிழ் தேடலில் சாவு அறிவித்தல் கண்டேன். 

https://www.tamilthakaval.org/obituaries/ragavi-varatharajan/

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் பாஸ்போட் காரரையும் இன்ரனசனல் கியூவில வரச் சொல்லுற நோர்வே.. ஐரோப்பிய ஒன்றியக் காரர் தானியங்கி ஸ்கான் மூலம் போகலாம்.. என்றப்போ..  பாகிஸ்தானிய.. சோமாலிய.. கிழக்கு ஐரோப்பிய.. மற்றும் உக்ரைன் மாபியாக்களை இறக்கி வைச்சு குசலம் விசாரிச்சால் இப்படித்தான் ஆகும். 

நோர்வேயில் முன்னரும் தமிழ் குழுச் சண்டை இருந்தது. இது தனிப்பட்ட விவகாரமாக இருக்கலாம். அங்க இப்ப எங்கட ஆக்கள் மத்தியில்.. கேய்.. லெஸ்பியன் கூடிட்டுது. இப்படியான கொலைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

பிரிட்டன் பாஸ்போட் காரரையும் இன்ரனசனல் கியூவில வரச் சொல்லுற நோர்வே.. ஐரோப்பிய ஒன்றியக் காரர் தானியங்கி ஸ்கான் மூலம் போகலாம்.. என்றப்போ..  பாகிஸ்தானிய.. சோமாலிய.. கிழக்கு ஐரோப்பிய.. மற்றும் உக்ரைன் மாபியாக்களை இறக்கி வைச்சு குசலம் விசாரிச்சால் இப்படித்தான் ஆகும். 

நோர்வேயில் முன்னரும் தமிழ் குழுச் சண்டை இருந்தது. இது தனிப்பட்ட விவகாரமாக இருக்கலாம். அங்க இப்ப எங்கட ஆக்கள் மத்தியில்.. கேய்.. லெஸ்பியன் கூடிட்டுது. இப்படியான கொலைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.

பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களும் இரண்டு காலில் தானே நடக்கின்றார்கள்? உங்களுக்கு பிரித்தானிய கடவுச்சீட்டுடன் சென்றபோது நோர்வே விமான நிலையத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லையோ?

இந்தப்பெண்ணின் தந்தை மாஸ்டர் என காணப்பட்டது, பெயர் வரதராஜன் (வரதர்) என உள்ளது.  நான் யாழில் பிரபலமான பொருளியல் ஆசிரியர் பெண்ணோ என நினைத்தேன். இது வேறோர் வரதர் பொண்ணு. 

தமிழ் பல் மருத்துவர் மீது துப்பாக்கி சூடு அதுவும் நோர்வேயில் இது அரிதான சம்பவம். அதற்காக நோர்வேயை இழுத்து வைத்து கும்மக்கூடாது. 

கடந்த வருடம் என நினைக்கின்றேன் தனது மனைவியை இன்னோர் ஆள் மூலம் சுட்டுக்கொன்ற தமிழருக்கு கனடா நீதிமன்றத்தில் தண்டனை கொடுக்கப்பட்டது என ஒரு செய்தி வாசித்த ஞாபகம். இதுவும் ஒரு உறவுநிலை சம்மந்தப்பட்ட மரணம் போலுள்ளது. தனிப்பட்டவர்களின் மனநல பிரச்சனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டை குறை சொல்லலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

இந்த சம்பவத்தை விபரிக்கும் செய்தி: https://www.newsinenglish.no/2024/01/03/more-murders-marred-holiday-weekend/

மேலே தமிழ் செய்தியில் சொல்லப் பட்டிருப்பது போல, காவல் துறையிடம் முறையிட்டு பாதுகாப்புக் கேட்குமளவுக்கு தெரிந்த நபரிடமிருந்து அச்சுறுத்தல் இருந்திருக்கிறது. காவல் துறை தங்கள் கடமையைச் செய்யவில்லையென இப்போது தாமதமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

(இது போன்ற செய்திகளை வாசிக்கும் அனேகருக்கு உடனே ஏற்படுவது  "இத்தனை வருட உழைப்பும், வாழ்க்கையும் இழக்கப் பட்டு விட்டதே" என்ற சோக உணர்வாகத் தான் இருக்கும்! ஆனால், இமிக்ரேஷன் கஷ்டங்களும், கலாச்சாரக் காவலர் உணர்வும் தான் உடனே வெளிப்படுகிறதென்றால், என்ன வகை மன அமைப்பென்று விளங்கவில்லை!)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அவர்கள் தனிப்பட்ட பிரச்சனையாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரை சுட்டவர் தன்னைத் தானும் சுட்டு தற்கொலை செய்தமையாகவும் ஓர் தகவல்:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

பிரிட்டன் பாஸ்போட் காரரையும் இன்ரனசனல் கியூவில வரச் சொல்லுற நோர்வே.. ஐரோப்பிய ஒன்றியக் காரர் தானியங்கி ஸ்கான் மூலம் போகலாம்.. என்றப்போ..  பாகிஸ்தானிய.. சோமாலிய.. கிழக்கு ஐரோப்பிய.. மற்றும் உக்ரைன் மாபியாக்களை இறக்கி வைச்சு குசலம் விசாரிச்சால் இப்படித்தான் ஆகும். 

நோர்வேயில் முன்னரும் தமிழ் குழுச் சண்டை இருந்தது. இது தனிப்பட்ட விவகாரமாக இருக்கலாம். அங்க இப்ப எங்கட ஆக்கள் மத்தியில்.. கேய்.. லெஸ்பியன் கூடிட்டுது. இப்படியான கொலைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.

தமிழர்களுக்குள் நடந்த கொலையில் பாதிக்கப்பட்டது  அப்பாவி தமிழ் பெண். கொலையாளி தமிழர். கொலையாளி மீது கோபம் வரவில்லை. 

ஆனால்,  நோர்வே இமிக்கிறேசனை  திட்டுகின்றீர்கள். பாகிஸ்தானியரை, சோமாலியரை கிழக்கு. ஐரோப்பியரை, உக்கிரேனரை கேய், லெஸ்பியனை எல்லாம் இதற்குள் இழுத்து அவர்கள் தான் இதற்கு காரணம் போல்……..

என்ன டிசைனப்பா நீங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா எழுதிக்கொண்டிருந்த நெடுக்ஸ்க்கு என்ன ஆச்சு எண்டு தெரியேல்ல.. நோர்வேக்கும் அடி சோமாலிக்கும் அடி பாகிஸ்த்தானிக்கும் அடி ஜரோப்பிக்கும் அடி ஓரினச்சேர்க்கைக்கும் போட்டு கும்முறாப்ல..😂

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nedukkalapoovan said:

பிரிட்டன் பாஸ்போட் காரரையும் இன்ரனசனல் கியூவில வரச் சொல்லுற நோர்வே.. ஐரோப்பிய ஒன்றியக் காரர் தானியங்கி ஸ்கான் மூலம் போகலாம்..

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரிட்டன் பாஸ்போட் காரரையும் இன்ரனசனல் கியூவில வரச் சொன்னா அதுக்கு ஒரு நியாயம் இருக்கு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நோர்வே செய்வது பிரிட்டிஸ்காரருக்கு கடுப்பேத்தும் செயல்தான்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்லா எழுதிக்கொண்டிருந்த நெடுக்ஸ்க்கு என்ன ஆச்சு எண்டு தெரியேல்ல.. நோர்வேக்கும் அடி சோமாலிக்கும் அடி பாகிஸ்த்தானிக்கும் அடி ஜரோப்பிக்கும் அடி ஓரினச்சேர்க்கைக்கும் போட்டு கும்முறாப்ல..😂

என்ன சொல்கிறீர்கள்?

நெடுக்கரின் குடியேறி எதிர்ப்பு மனநிலை அவர் குடியேறியாக இருந்த போதே அவரது எழுத்தில் வெளிவந்திருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர் மீதான காண்டு போலி விஞ்ஞானக் கட்டுரையை இணைத்து வாதிடும் அளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது. இறந்தது பெண், கொன்றது ஆண் என்பதால் கொன்றவரை விட்டு விட்டு, எல்லாரையும் கை காட்டியிருக்கிறார்!  இது பழைய நெடுக்கர் தான்! புதிதாக ஒன்றுமில்லை😎.

58 minutes ago, புலவர் said:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரிட்டன் பாஸ்போட் காரரையும் இன்ரனசனல் கியூவில வரச் சொன்னா அதுக்கு ஒரு நியாயம் இருக்கு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நோர்வே செய்வது பிரிட்டிஸ்காரருக்கு கடுப்பேத்தும் செயல்தான்.

நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய பயண ஏற்பாடான செங்கன் (Schengen) நடைமுறையில் இருக்கிறது. எனவே, செங்கனில் இல்லாத பிரிட்டனின் பிரஜைகள் நடந்து தான் போக வேணும்!

"போலந்துக் காரன் சட்டரீதியாக பிரிட்டனுக்குள்  வரவும் கூடாது - எனவே ஐ.ஓவில் இருந்து நாம் அவுட், ஆனால் பிரிட்டன் பிரஜைகளை ஐரோப்பிய நாடுகளில் திறந்த வீட்டினுள் செல்லப் பிராணி செல்வது போல அனுமதிக்கவும் வேண்டும்!" இரண்டையும் எப்படி எதிர்பார்க்க முடியும்😎?  

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, island said:

தமிழர்களுக்குள் நடந்த கொலையில் பாதிக்கப்பட்டது  அப்பாவி தமிழ் பெண். கொலையாளி தமிழர். கொலையாளி மீது கோபம் வரவில்லை. 

ஆனால்,  நோர்வே இமிக்கிறேசனை  திட்டுகின்றீர்கள். பாகிஸ்தானியரை, சோமாலியரை கிழக்கு. ஐரோப்பியரை, உக்கிரேனரை கேய், லெஸ்பியனை எல்லாம் இதற்குள் இழுத்து அவர்கள் தான் இதற்கு காரணம் போல்……..

என்ன டிசைனப்பா நீங்கள். 

கருத்தை முதலில் ஒழுங்காக இணைக்கப்பட்ட செய்தியோடு சேர்த்து வாசிச்சு விளங்கப்பழகனும். அது யாழில் பலருக்கு இல்லை என்பது இங்கு தெளிவாகிறது.

நோர்வே.. அமைதிப்பூங்காவாக இருந்த காலம் எப்பவோ மலையேறிட்டுது. அதேபோல் சுவீடனும். இதற்கு முதன்மைக் காரணம் எல்லைகள் கிழக்கு ஐரோப்பியர்களுக்கு திறந்து விடப்பட்டமை. 

நோர்வே மக்களே சொல்லினம்.. முன்னர் ஒரு பொருளை வீதியில் போட்டால்.. அது அப்படியே இருக்கும். ஆனால்.. இப்போது கிழக்கு ஐரோப்பியர்கள் வந்த பின்.. போட்ட பொருள் தனக்குத்தான் என்று களவாடிச் சென்று விடுகிறார்கள் என்று. இது நோர்வேயில் மக்களிடம் கதைச்சறிந்த விடயம்.

அதேபோல்.. மிகவும் கிறிஸ்தவ கலாசாரத்தில் பற்றுள்ள நோர்வே மக்கள் ஒருபால் சேர்க்கை அதிகரிப்பு குறித்தும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். சாதாரண மக்களின் கருத்துக்களில் இவை தொணிக்கும். அதற்கு முதலில் நோர்வே மக்களோடு பழகனும்.

தமிழ் கடையிலும்.. பாக்கி கடையிலும்.. சமான் வாங்கிறதும்.. சமைக்கிறதும்.. சாப்பிடுறதும்.. பேர்த்டே பார்ட்டி செய்யுறதும்.. ஏதோ வேலைக்கு போறதும்.. வாறதும் என்ற வாழ்க்கையில்.. இவை தெரிய வர வாய்ப்புக் குறைவு.

மேலும்.. மேற்குறிப்பிட்ட சம்பவத்தில்.. கொலைக்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால்.. நோர்வேயில் உள்ள தமிழ் பெற்றோர் தங்கள் பிள்ளைகள்.. அதிகரித்துவரும்.. ஒருபாலினச் சேர்க்கைக்குள் இழுபட்டு விடுவார்களோ என்ற அச்சம் கொண்டிருப்பதை.. பொதுவாக அவதானிக்கலாம்.

இதனை நோர்வே மட்டுமல்ல.. பிற மேற்குலக நாடுகளிலும் காணலாம். ஆனால்.. நோர்வேயில்.. இந்தக் கவலை முன்னரை விட இப்போ அதிகரித்திருப்பது தெரிகிறது.

அந்த வகையில்.. தான்.. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.. என்று சொல்லப்பட்டிருக்கே தவிர.. வேறு எதையும் புனையும் நோக்கம் இங்கில்லை. 

முதலில் கருத்தை செய்தியோடு சரிவர பொருந்தி படித்து விளங்கத் தெரிய வேண்டும். அதைவிடுத்து வெறுமனவே குற்றம் சாட்டிச் செல்வது பொருத்தமானதல்ல.

மேலும் சிலர் அவர்கள் பார்வையை மாற்றத் தயாரில்லை. தாங்கள் நெடுக்ஸை நோக்கி உருவகித்து வைத்திருக்கும்.. விம்பத்திற்கு லைக் வெறுப்பு கருத்து எழுதிச் செல்கிறார்கள். அவர்களின் கருத்தை.. செயல்களைக் கண்டுகொள்வதே இல்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

நெடுக்கரின் குடியேறி எதிர்ப்பு மனநிலை அவர் குடியேறியாக இருந்த போதே அவரது எழுத்தில் வெளிவந்திருக்கிறது

இது குடியேறி எதிர்ப்பு மனநிலை அல்ல.. குடியேறி.. குடியேறிய நாட்டின் உயர் பண்புகளை ஏற்றுக் கொள்ளாமல்... தங்கள்.. தாய் நாட்டில் செய்த அதே கீழ்த்தரமான செயல்களை குடியேறிய நாட்டிலும் அரங்கேற்றும் செயல்களுக்கு எதிரான மனநிலை. 

3 hours ago, Justin said:

நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய பயண ஏற்பாடான செங்கன் (Schengen) நடைமுறையில் இருக்கிறது. எனவே, செங்கனில் இல்லாத பிரிட்டனின் பிரஜைகள் நடந்து தான் போக வேணும்!

செங்கனில் இல்லாத போதும்.. நோர்வே உட்பட ஐரோப்பிய பிரஜைகளை பிரிட்டன் தானியங்கி மூலம் உள்நுழைய அனுமதிக்கும் போது தாராளவாதம் பேசும் நோர்வே உட்பட்ட ஐரோப்பிய நாடுகள்.. பிரிட்டன் மீது காட்டும் இந்த வேற்றுமைக்கு என்ன காரணம்.. செங்கனா..??????!

3 hours ago, Justin said:

ஓரினச் சேர்க்கையாளர் மீதான காண்டு போலி விஞ்ஞானக் கட்டுரையை இணைத்து வாதிடும் அளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது. இறந்தது பெண், கொன்றது ஆண் என்பதால் கொன்றவரை விட்டு விட்டு, எல்லாரையும் கை காட்டியிருக்கிறார்!  இது பழைய நெடுக்கர் தான்! புதிதாக ஒன்றுமில்லை

ஓரினச் சேர்க்கை என்பது...இப்போ இயற்கை சார் விடயமாக அன்றி..  புகுத்தப்படும் விடயமா மாறி கனகாலமாயிட்டுது. நீங்கள் இன்னும் உங்கள் பழைய நிலைப்பாட்டில் நின்று தொங்குவதற்கு நாம் என்ன செய்ய முடியும். அந்தளவு தான் தாங்கள் விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கடந்து செல்வதைத் தவிர.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

அதேபோல்.. மிகவும் கிறிஸ்தவ கலாசாரத்தில் பற்றுள்ள நோர்வே மக்கள் ஒருபால் சேர்க்கை அதிகரிப்பு குறித்தும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். சாதாரண மக்களின் கருத்துக்களில் இவை தொணிக்கும். அதற்கு முதலில் நோர்வே மக்களோடு பழகனும்.

 

வழமை போல, தரவுகளைப் புறந்தள்ளி விட்டு உங்கள் கற்பனைகளை அள்ளி விட்டிருக்கிறீர்களென நினைக்கிறேன்😎. உங்கள் கற்பனை உலகை குலைக்காமல்,  உண்மை அறிய விரும்பும் யாழ் வாசகர்களுக்கு மட்டும் எழுதுவது:

உலகில், LGBTQ+ இனருக்கு அதிக பாதுகாப்பும், சமத்துவமும் வழங்கும் முதல் 10 நாடுகளில் நோர்வே உட்பட்ட ஸ்கண்டினேவிய நாடுகள் அடங்கும். இன்று வரை அமெரிக்கா, கனடா, பிரிட்டனில் நடக்கும்  கலாச்சாரப் போர் (Culture war) ஸ்கண்டினேவிய நாடுகளில் பரவவில்லை.

நோர்வே கிறிஸ்தவர்கள், LGBTQ+ இனை ஒதுக்காமல் வரவேற்கும் Evangelical Lutherans எனப்படும் தரப்பினர். நோர்வே திருச்சபை எந்த போப்பின் கீழும் இல்லாத சுதந்திர திருச்சபை (அங்கிலிக்கன் போல). 2015 இல் இருந்து ஒர் பாலினத் திருமணங்களை நோர்வே திருச்சபை தன் ஆலயங்களில் அனுமதித்திருக்கிறது. பொது மக்களிடையேயும் இந்த உறவுகளுக்கு எதிர்ப்புக் குறைவு.

இவை நோர்வே அரசு, HRW ஆகியவற்றின் தளங்களில் இருக்கும் தரவுகள்!

நெடுக்கர் சொல்லும் ஓர் பாலின உறவுகள் பற்றிய homophobia நோர்வேயில் இருந்தால், நிச்சயமாக நெடுக்கர் போன்ற குடியேறிகளிடையே தான் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன்.

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

நடந்திருப்பது ஒரு கொலை ஒரு தற்கொலை. 

இவை தொடட்பான விபர ங்கள் வெளிவருமுன்னரே ஆளாளுக்கு விரும்பினாற்போல தங்கள் யூகங்களை அடித்துவிடுவது ஏன்? 

புரியவில்லை ☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

வழமை போல, தரவுகளைப் புறந்தள்ளி விட்டு உங்கள் கற்பனைகளை அள்ளி விட்டிருக்கிறீர்களென நினைக்கிறேன்😎. உங்கள் கற்பனை உலகை குலைக்காமல்,  உண்மை அறிய விரும்பும் யாழ் வாசகர்களுக்கு மட்டும் எழுதுவது:

உலகில், LGBTQ+ இனருக்கு அதிக பாதுகாப்பும், சமத்துவமும் வழங்கும் முதல் 10 நாடுகளில் நோர்வே உட்பட்ட ஸ்கண்டினேவிய நாடுகள் அடங்கும். இன்று வரை அமெரிக்கா, கனடா, பிரிட்டனில் நடக்கும்  கலாச்சாரப் போர் (Culture war) ஸ்கண்டினேவிய நாடுகளில் பரவவில்லை.

நோர்வே கிறிஸ்தவர்கள், LGBTQ+ இனை ஒதுக்காமல் வரவேற்கும் Evangelical Lutherans எனப்படும் தரப்பினர். நோர்வே திருச்சபை எந்த போப்பின் கீழும் இல்லாத சுதந்திர திருச்சபை (அங்கிலிக்கன் போல). 2015 இல் இருந்து ஒர் பாலினத் திருமணங்களை நோர்வே திருச்சபை தன் ஆலயங்களில் அனுமதித்திருக்கிறது. பொது மக்களிடையேயும் இந்த உறவுகளுக்கு எதிர்ப்புக் குறைவு.

இவை நோர்வே அரசு, HRW ஆகியவற்றின் தளங்களில் இருக்கும் தரவுகள்!

நெடுக்கர் சொல்லும் ஓர் பாலின உறவுகள் பற்றிய homophobia நோர்வேயில் இருந்தால், நிச்சயமாக நெடுக்கர் போன்ற குடியேறிகளிடையே தான் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன்.

இவர் ஒரு தரவுப் பெட்டகம். எல்லாத்தையும் விரல் நுனியில் வைச்சு அடிச்சுத் தள்ளுவார் நம்பிவிடுங்கள் மக்கள்.

முதலில் மக்களோடு பழகிப் பார்த்து மக்கள் கருத்தறியுங்கள். அதைவிடுத்து.. தேர்வு செய்யப்பட்ட தெரிவுத் தரவு எடுக்கும் நிறுவனங்களின் தேவைக்கு பயன்படுத்தப்படும் தரவுகள் மூலம்.. ஒரு பல்லின சமூக நாட்டின் உண்மை நிலையை வெளிக்கொணர முடியாது. இது ஈழத்தில் இன்று மக்களின் நிலைக்கு உதாரணம் சொல்லலாம். 

நோர்வே அரசின் நிலைப்பாடு என்பது பரந்துபட்டதாக இருக்கலாம். உதாரணத்துக்கு.. அது உலகெங்கும் இருந்து அகதிகளை உள்வாங்கிறது. ஒரு காலத்தில் நோர்வே இந்தளவுக்கு.. அகதிகளை உங்காங்கும் கொள்கையை கொண்டிருக்கவில்லை. ஆனால். உள்ளக.. நோர்வே மக்களிடம் இதன் தாக்கம் குறித்து அரச கருத்துக் கேட்டதாக இல்லை. அரசின் செயலில் அங்கும் விமர்சனங்கள் உள்ளது.

அண்மையில் கூட நோர்வேயில் லண்டன் பப்பில்.. ஒருபால் சேர்க்கையாளர்களின் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. அது இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லப்பட்டாலும்..  அமைதிப்பூங்காவான நோர்வேக்குள் இஸ்லாமிய பயங்கரவாதம் எப்படி புகுந்தது...??! அது குறிப்பாக.. ஒருபால் சேர்க்கையாளர்களை குறிவைக்க என்ன காரணம்..???!

வழமை போல்.. மனநோயாளர் என்று நோர்வே பொலிஸ் காரணம் சொல்லி தப்பி விடும். அதேபோல் தான்.. சில ஆண்டுகளுக்கு முன்.. நோர்வே வரலாற்றில்.. பலரை சுட்டுக்கொன்ற நபரையும் (80 க்கும் அதிக அப்பாவிகளை தேடி தேடி வேட்டையாடிய).. மனநோயாளர் என்று.. நோர்வே பொலிஸ்.. இப்ப.. அதே மக்களின் வரிப்பணத்தில் சகல வசதிகளுடனும் வாழ வைத்துள்ளது. இதில் நோர்வே மக்களுக்கு அதிருப்தி உண்டு. 

தரவுப் பெட்டகம் இதற்கும்.. தரவு இருப்பதாகச் சொல்லலாம். முதலில் தரவுகளை எங்கிருந்து எடுக்கிறார்.. என்ற உசாத்துணையே இல்லாமல்.. அதன் பக்கச்சார்பின்மை.. நம்பகத்தன்மை.. எல்லாமே கேள்வியாக இருக்கும் நிலையில்.. தான் அடித்து விடுவதே சரி என்பது இவரின் வழமையான பாணி. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

நடந்திருப்பது ஒரு கொலை ஒரு தற்கொலை. 

இவை தொடட்பான விபர ங்கள் வெளிவருமுன்னரே ஆளாளுக்கு விரும்பினாற்போல தங்கள் யூகங்களை அடித்துவிடுவது ஏன்? 

புரியவில்லை ☹️

நடந்த மரணங்களைப் பற்றிய உத்தியோகபூர்வமான விபரங்கள் வராமல், அவற்றைப் பற்றி எதுவித ஆதாரங்களும் இல்லாமல் எழுந்தமானத்திற்கு எழுதுவதும்,   சம்பந்தமில்லாத விடயங்களை (உறுதி செய்யப்படாத) எழுதி திசையைத் திருப்புவதும் ஆர்வக்கோளாறு அல்லது விடுப்புக்கேட்கும் மனநிலை என்றுகொள்ளமுடியாது. அதையும் தாண்டி ஏதோ ஒரு வெறுப்பு இருக்கின்றது. குடும்பத்தினருக்கு மேலும் வேதனைகளைக் கொடுக்காமல் இருக்க முயற்சிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

கருத்தை முதலில் ஒழுங்காக இணைக்கப்பட்ட செய்தியோடு சேர்த்து வாசிச்சு விளங்கப்பழகனும். அது யாழில் பலருக்கு இல்லை என்பது இங்கு தெளிவாகிறது.

நோர்வே.. அமைதிப்பூங்காவாக இருந்த காலம் எப்பவோ மலையேறிட்டுது. அதேபோல் சுவீடனும். இதற்கு முதன்மைக் காரணம் எல்லைகள் கிழக்கு ஐரோப்பியர்களுக்கு திறந்து விடப்பட்டமை. 

நோர்வே மக்களே சொல்லினம்.. முன்னர் ஒரு பொருளை வீதியில் போட்டால்.. அது அப்படியே இருக்கும். ஆனால்.. இப்போது கிழக்கு ஐரோப்பியர்கள் வந்த பின்.. போட்ட பொருள் தனக்குத்தான் என்று களவாடிச் சென்று விடுகிறார்கள் என்று. இது நோர்வேயில் மக்களிடம் கதைச்சறிந்த விடயம்.

அதேபோல்.. மிகவும் கிறிஸ்தவ கலாசாரத்தில் பற்றுள்ள நோர்வே மக்கள் ஒருபால் சேர்க்கை அதிகரிப்பு குறித்தும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். சாதாரண மக்களின் கருத்துக்களில் இவை தொணிக்கும். அதற்கு முதலில் நோர்வே மக்களோடு பழகனும்.

தமிழ் கடையிலும்.. பாக்கி கடையிலும்.. சமான் வாங்கிறதும்.. சமைக்கிறதும்.. சாப்பிடுறதும்.. பேர்த்டே பார்ட்டி செய்யுறதும்.. ஏதோ வேலைக்கு போறதும்.. வாறதும் என்ற வாழ்க்கையில்.. இவை தெரிய வர வாய்ப்புக் குறைவு.

மேலும்.. மேற்குறிப்பிட்ட சம்பவத்தில்.. கொலைக்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால்.. நோர்வேயில் உள்ள தமிழ் பெற்றோர் தங்கள் பிள்ளைகள்.. அதிகரித்துவரும்.. ஒருபாலினச் சேர்க்கைக்குள் இழுபட்டு விடுவார்களோ என்ற அச்சம் கொண்டிருப்பதை.. பொதுவாக அவதானிக்கலாம்.

இதனை நோர்வே மட்டுமல்ல.. பிற மேற்குலக நாடுகளிலும் காணலாம். ஆனால்.. நோர்வேயில்.. இந்தக் கவலை முன்னரை விட இப்போ அதிகரித்திருப்பது தெரிகிறது.

அந்த வகையில்.. தான்.. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.. என்று சொல்லப்பட்டிருக்கே தவிர.. வேறு எதையும் புனையும் நோக்கம் இங்கில்லை. 

முதலில் கருத்தை செய்தியோடு சரிவர பொருந்தி படித்து விளங்கத் தெரிய வேண்டும். அதைவிடுத்து வெறுமனவே குற்றம் சாட்டிச் செல்வது பொருத்தமானதல்ல.

மேலும் சிலர் அவர்கள் பார்வையை மாற்றத் தயாரில்லை. தாங்கள் நெடுக்ஸை நோக்கி உருவகித்து வைத்திருக்கும்.. விம்பத்திற்கு லைக் வெறுப்பு கருத்து எழுதிச் செல்கிறார்கள். அவர்களின் கருத்தை.. செயல்களைக் கண்டுகொள்வதே இல்லை. 

நடந்த கொலை நீங்கள் சொன்ன எந்த காரணிகளுக்குள்ளும் வராது.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நடந்த மரணங்களைப் பற்றிய உத்தியோகபூர்வமான விபரங்கள் வராமல், அவற்றைப் பற்றி எதுவித ஆதாரங்களும் இல்லாமல் எழுந்தமானத்திற்கு எழுதுவதும்,   சம்பந்தமில்லாத விடயங்களை (உறுதி செய்யப்படாத) எழுதி திசையைத் திருப்புவதும் ஆர்வக்கோளாறு அல்லது விடுப்புக்கேட்கும் மனநிலை என்றுகொள்ளமுடியாது. அதையும் தாண்டி ஏதோ ஒரு வெறுப்பு இருக்கின்றது. குடும்பத்தினருக்கு மேலும் வேதனைகளைக் கொடுக்காமல் இருக்க முயற்சிக்கவேண்டும்.

அதுமட்டுமல்ல, இறந்தவர்களது நல்ல பண்புகளைப்பற்றிக்  கதைப்பதுதான் இதுவரை நமது கலாசாரத்தில் நடைமுறையில் உள்ள பழக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரால் திருமணம் பேசி வைத்த பொடியன்(பழக்கவழக்கம்) சரி இல்லை என கொல்லப்பட்ட பிள்ளை திருமணம் செய்ய மறுத்துவிட்டதனால் தொடர் அச்சுறுத்தலின் பின் கொல்லப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் நோர்வேயில் காதலனால் சுட்டுக் கொலை!

நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது முன்னாள் காதலனினால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே பொலிஸாரிடம் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார்.

இருப்பினும் நோர்வேயின் Elverum என்ற இடத்தில் குறித்த பெண்ணை அவரது முன்னாள் காதலன் சுட்டுக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 30 வயதான வரதராஜன் ராகவி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்தநிலையில், குறித்த பெண்ணின் முன்னாள் காதலன் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி கைது செய்யப்பட்ட நோர்வே இளைஞரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நோர்வே பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

https://thinakkural.lk/article/287336

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.