Jump to content

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 

நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்களும், பெருமளவு சிறுவர்களும் இருந்தார்கள். வழமைபோல ஆண்கள் வட்டமாக அமர்ந்துகொண்டு பேச, பெண்களும் அவ்வாறே செய்தார்கள். நடுவில் சிறுவர்கள் தமது விளையாட்டுத் துப்பாக்கிகளோடு ஓடித்திரிய வீடு அமர்க்களமாகியிருந்தது.


இளையராஜா பாடல்கள், அக்காலத்தில் எமக்குத் தெரியாமலிருந்த இன்னும் சில இசையமைப்பாளர்கள் , அநிருத்தின் சிட்னி இசை நிகழ்ச்சி என்று ஆரம்பித்து சில படங்கள் குறித்த விமர்சனம் என்று நீண்டு, அரசியலுக்குள் நுழைந்தது சம்பாஷணை. 

அங்கிருந்தவர்களில் பல தரப்பினர் இருந்தனர். புலிகளை ஆதரிப்பவர்கள், நடுநிலையாளர்கள், விமர்சிப்பவர்கள் என்று மூன்று வகையினர். நடுநிலைவாதிகள் அநேகமான வேளைகளில் அரசியலைப் பேச ஆரம்பிப்பார்கள். அங்கும் இன்றி, இங்கும் இன்றி அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். புலிகளை ஆதரிப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சிப்பவர்கள் எப்போதாவது சம்பாஷணையில் தமக்கான தருணங்கள் வரும்போது கலந்துகொள்வார்கள். 

நேற்றும் அதுதான் நடந்தது. கருணாவின் பிளவு குறித்து ஆரம்பித்த சம்பாஷணை, டி.பி.எஸ்.ஜெயராஜ் குறித்து நீண்டபோது, அவர் அணமையில் கொழும்பு டெயிலி மிரர் பத்திரிக்கையில் எழுதிய "கிழக்கை இழந்த கருணாவும், ஈழத்தைப் பறிகொடுத்த பிரபாகரனும்" என்கிற கட்டுரை குறித்து பேசப்பட்டபோது, நான் தலைப்பைப் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன் என்று கூறவும் நடுநிலைவாதியான ஒருவர், "அது எப்படி கடந்து செல்வீர்கள்? உள்ளே என்ன இருக்கிறது என்று படிக்காமலேயே விமர்சிப்பீர்களா? தலைவர் கூட இறுதிவரை அவரது கட்டுரைகளை இன்னொருவர் மொழிபெயர்க்க அறிந்துகொண்டுதான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். நானோ, "அவர் புலிகள் குறித்து அவதூறாகவே எழுதிவருகிறார், அவரின் வாசகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களே, அவர்களை மகிழ்விக்கவே அவர் இவ்வாறான கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுகிறார்" என்று கூறினேன். இதில் மெதுவாக சம்பாஷணை சூடேறத் தொடங்கியிருந்தது. இடையிடையே சிலர் இதுகுறித்த தமது கருத்துக்களை கூறினார்கள்.

இடையில் யாழ்ப்பாணம் சென்று வந்த ஒருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, நாவற்குழியில் கட்டப்பட்டிருக்கும் விகாரை பற்றியும் பேசினார். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்ற வளைவிற்குப் பின்னால் தெரிவது பெளத்தர்களின் விகாரை என்று அவர் கூறி வேதனைப்படும்போது, உண்மைதான், அங்கு கிட்டத்தட்ட 148 சிங்களக் குடும்பங்களும் குடியேறியிருக்கிறார்கள் என்றுய் கேள்விப்பட்டேன் என்று கூறினேன். இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. 

டி.பி.எஸ்.ஜெயராஜின் அபிமானியான அவர், "சிங்களவர்கள் 83 இற்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், அரச வேலைகள், தனியார் வேலைகள், வியாபாரங்கள் என்று வாழ்ந்தவர்கள், அவர்கள் மீள யாழ்ப்பாணத்திற்கு வருவதில் ஒரு பிரச்சினையுமில்லை. சண்டை ஆரம்பித்ததால் விட்டுச் சென்றவர்கள், தற்போது வருகிறார்கள். நீங்கள் கொழும்பில் சென்று வாழ்வதில்லையா? அதுபோலத்தான் அவர்களும் வடக்குக் கிழக்கில் வாழ்கிறார்கள்" என்று கூறினார். எனக்கு அது சரியென்று படவில்லை. 

"கொழும்பில் சிங்களவர்கள் கூறும் விலைக்கு அதிகமாகக் கொடுத்து, காணிகளை வாங்கி வீடுகளை  கட்டுவதும், வாங்குவதும், வடக்குக் கிழக்கில் அரச இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களைக் கொன்றுவிட்டோ, அடித்துத் துரத்திவிட்டோ அடாத்தாகக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறுவதும் ஒன்றா? சிங்களக் குடியேற்றவாதிகளை ஆயுதமயப்படுத்தி, கூடவே பாதுகாப்பிற்கென்று இராணுவ முகாம்களையும் அமைத்து, சிறுகச் சிறுக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதும், தமிழர்கள் கொழும்பில் வாழ்வதும் ஒன்றா? கொழும்பில் புலிகள் முகாம் அமைத்துத் தமிழர்களை ஆயுததாரிகளாக்கி, சிங்களவர்களை கொன்றோ அல்லது விரட்டியோ ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்களா? என்று சற்றுச் சூடாகவே கேட்டுவிட்டேன். அவர் மெளனமாகிவிட்டார். எதுவும் பேசவில்லை. "நான் கூறவந்ததைக் கேட்காமலேயே நீங்கள் டென்ஷன் ஆகிவிட்டீர்கள்" என்று மட்டும் கூறினார். ஆத்திரப்பட்டதற்காக வருந்தினேன்.

ஆனால், இக்கேள்வி அடிக்கடி நடுநிலைவாதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. 

இவ்வாறு இவர்கள் கேட்பது தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்திவிடுவதாக எனக்குப் படுகிறது. இந்த வேறுபாட்டினை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமற்போனது எங்கணம்?  இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?

  • Like 4
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?  நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்கள

ரஞ்சித்

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வ

Kapithan

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? இப்படி ஒரு கேள்வி எழுவதே பிழை என்பது என் எண்ணம்.  நாவற்குழி குடியேற்றமும், கொழும்பில் தேவை நிமித்தம் போய் வ

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?

இப்படி ஒரு கேள்வி எழுவதே பிழை என்பது என் எண்ணம். 

நாவற்குழி குடியேற்றமும், கொழும்பில் தேவை நிமித்தம் போய் வாழ்வதும் ஒன்று என நினைப்பது அவர்களுக்கு   தமிழர் போராட்ட வரலாறு தொடர்பான அடிப்படை அறிவே இல்லை எனக் காட்டுகிறது. 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


சிங்களவர் வேலைக்கு வருவதில் பிழை இல்லை.

அனால், நோக்கம் என்ன? 

தமிழர்கள்  வேலை இல்லது இருக்கும் போது சிங்களவரை நியமிப்பது, உடனடியாக வருவாய், வாழ்வாதரத்தை தட்டி பறித்தாலும், அதன் தாக்கம் அதை விட ஆழமானது - அது தான் சிங்களத்தின் நோக்கமும் கூட.

 அதன் தாக்கத்தில் முக்கியம், தமிழரின் institutional government business, bureaucracy, administration, analysis போன்ற மிகவும் வேண்டிய துறையின் அனுபவ தொடர்ச்சி தடுக்கப்பட்டு, அந்த துறையின் தமிழரிடம் உள்ள institutional legacy and memory இல்லாது செய்யப்படுகிறது.

மீண்டும் அதை பெறுவது முடியாது,  ஒன்று சிங்களம் பின்பு விடாது, தமிழராலும் முடியாது.

காலம் போக, மிக குறைந்த அரச பொறுப்புக்கும் சிங்களவரை தங்கி  இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒருவரையும் குறை சொல்லவில்லை - ஆனால்  தமிழர் அரச கலை பற்றி வாசித்தவது அறிய வேண்டும்.

இது கண்ணுக்கு தெரியாத சிங்களத்தின் (ஒரு சமூகத்தின், தமிழரின்) அறிவை அழித்தல், அகற்றுதல்  

மற்ற பிரச்சனைகள் வெளிப்படையானவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் மெத்தப் படித்த பலரே அரசு குடியேற்றங்களை கண்டிப்பதில்லை.

நீங்கள் கேட்டவைகள் அத்தனையும் சரியே.

கூடுதலான இப்படியான கதைகள் எங்காவது பார்ட்டியில் தான் பூதம் கிழம்பினமாதிரி கிழம்பும்.

எனக்கு தண்ணி சரிவராது என்பதால் ஏதாவது காரசாரமாக கொடுத்துவிட்டு வந்துடுவேன்.யாராவது சிரமப்பட்டு கொண்டாட்டம் நடத்தும் போது பிரச்சனைகள் வருவதை அறவே வெறுக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

எம்மவர்கள் தெற்கில் சென்று சிங்களம் தெரிந்தே அரச அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள்.வடக்கு கிழக்கில் சிங்கள உத்தியோகத்தர்கள் மக்களிடம் சிங்களத்தில்  பேசி தமது அலுவல்களை செய்யும் படி மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வற்புறுத்தி சிங்களம் பேச முடியாத தமிழ் மக்களை மிகுந்த அசெளகரியத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.
 

  • Like 3
Link to comment
Share on other sites

ஜேவிபி யின் அனுர கூட, இவ்வாறான ஒரு அரைகுறை புரிதலுடன் தான் தமிழர்களிடம் வாக்கு கேட்கின்றார். அவரை ஆதரிக்கும் தமிழ் இளையவர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றது.

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் சிங்களவர், தெற்கில் தமிழர் இரண்டும் ஒன்றல்ல. மேலே பலர் சுட்டியிருப்பது போல அரச ஆதரவுடன் குடியேற்றம் என்பது தான் முக்கிய காரணி.

ஆனால், சில விடயங்களை நாம் எதிர்க்க முடியாது. உதாரணமாக, ஒரு சிங்களவர் மிக அடிப்படையான தமிழ் பரிச்சயத்துடன் வடக்கில் வேலை செய்ய நியமனம் கிடைத்தால் அதில் எதிர்க்க எதுவும் இல்லை. ஏனெனில், மிகக் குறைந்த சிங்களப் பரிச்சயத்துடன் தெற்கில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். அதே போல, யாழ் பல்கலைக்கு சிங்கள மாணவர்கள் விரும்பி வருவதையும் நாம் எதிர்க்க இயலாது. தெற்கின் பல்கலைகளில் தமிழ் மாணவர்கள் விரும்பிச் சென்று படிக்கிற நிலையும் இருக்கிறது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Justin said:

வடக்கு கிழக்கில் சிங்களவர், தெற்கில் தமிழர் இரண்டும் ஒன்றல்ல. மேலே பலர் சுட்டியிருப்பது போல அரச ஆதரவுடன் குடியேற்றம் என்பது தான் முக்கிய காரணி.

ஆனால், சில விடயங்களை நாம் எதிர்க்க முடியாது. உதாரணமாக, ஒரு சிங்களவர் மிக அடிப்படையான தமிழ் பரிச்சயத்துடன் வடக்கில் வேலை செய்ய நியமனம் கிடைத்தால் அதில் எதிர்க்க எதுவும் இல்லை. ஏனெனில், மிகக் குறைந்த சிங்களப் பரிச்சயத்துடன் தெற்கில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். அதே போல, யாழ் பல்கலைக்கு சிங்கள மாணவர்கள் விரும்பி வருவதையும் நாம் எதிர்க்க இயலாது. தெற்கின் பல்கலைகளில் தமிழ் மாணவர்கள் விரும்பிச் சென்று படிக்கிற நிலையும் இருக்கிறது.

கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த நகர்வுகளுக்கும் அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் ஆக்கிரமிப்பு நகர்வுகளுக்கும் இடையில் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் மக்கள் எம்மத்தியில் அதிகம். ஆனால் இவர்கள் உண்மையில் ஒன்றுமே தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள முயலாதவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இவை இரண்டும் ஒன்றல்ல. திட்டமிட்ட குடியேற்றங்களும்  கொழும்பு போன்ற Metropole city ஐ  நோக்கிய தமிழரின் குடிப்பரம்பலும் ஒன்றல்ல.

ஆனால்,  இவற்றை  தடுத்திருக்க  அல்லது  தமிழரின் இனப்பரம்பலை வட கிழக்குப் பிரதேசங்களில்  அதிகரித்திருத்து இதன் ஈடு செய்திருக்கக் கூடிய  அரசியல் தீர்வை பெற கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமக்கே உரி ய பாணியில் தவறவிட்டதன் விளைவுகளில் இதுவும் ஒன்று.  தற்போதைய எமது நிலையில் எமக்கு  சாத்தியமானவற்றை பெற தாயக/ புலம் பெயர் அரசியலாளர்கள் ஒன்றாக இணைந்து முயற்சிப்பது ஒரு வழி  (ஒருவருக்கொருவர் துரோகி பட்டங்களை வழங்குவதன் மூலம் தம்மை புனிதராக காட்ட  விளையும் மூடத்தனமான அரசியல் செய்வதை விடுத்து)  

அல்லது,  தாயகத்தில் தமிழரின் இருப்பை பாதுகாக்க வேண்டும் பொது எண்ணம் கொண்ட,  துணிச்சல்  கொண்ட  இளைஞர்கள் வருங்காலத்தில் அமையும் அரசாங்கங்களுடன் (முஸ்லீம்  மக்களைப் போல்)  அமைச்சரவையில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் அனுகூலங்களை பாவித்து எமது மக்களின்  குடிப்பரம்பலை  வட கிழக்கில் மெதுவான வேகத்திலாவது அதிகரிக்க செய்ய முயற்சிக்க  முடியும். எமது மக்களின் உற்பத்தி, கல்வி, பொருளதாரம் ஆகியவற்றில் எம்மை பலப்படுத்தி இலங்கைத் தீவில் நாமும் ஒரு சக்தி என்பதை காப்பாற்றிக்  கொள்ளலாம். அப்படி இல்லை எமது பழைய வழி முறைகளில் நாம் வீரர்கள்  என்று நிருப்பிக்க கங்கணம் கட்டி உசுப்பேற்றிக் கொண்டிருந்தால்,   இப்படியே இணையங்களிலும் முகநூல்களிலும் மட்டும் தேசியம் பேசி காலத்தை வீண்டித்து மாயாஜால அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால்   இலங்கையில் தமிழரின் அரசியல் பலம் இன்னும் இப்போதிருப்பதை விட இன்னும்  மோசமாகும் ஆபத்து கண்முன்னே தெரிகிறது.   ஒவ்வொன்றாக இழந்துவிட்டு எதிரி மோசமானவன் என்பதை உலகத்திற்கு காட்டுவதற்காகவே இந்த அரசியலை செய்தோம் என்று கூறிக்கொண்டிருப்பது எம்மை நாமே ஏமாற்றும் மடைத்தனமான அரசியல். அதையே கடந்த 70 வருடங்களாக செய்து வருகிறோம். 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

  ஒவ்வொன்றாக இழந்துவிட்டு எதிரி மோசமானவன் என்பதை உலகத்திற்கு காட்டுவதற்காகவே இந்த அரசியலை செய்தோம் என்று கூறிக்கொண்டிருப்பது எம்மை நாமே ஏமாற்றும் மடைத்தனமான அரசியல். அதையே கடந்த 70 வருடங்களாக செய்து வருகிறோம்

சத்தியமான வார்த்தைகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2024 at 04:33, ரஞ்சித் said:

"கொழும்பில் சிங்களவர்கள் கூறும் விலைக்கு அதிகமாகக் கொடுத்து, காணிகளை வாங்கி வீடுகளை  கட்டுவதும், வாங்குவதும், வடக்குக் கிழக்கில் அரச இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களைக் கொன்றுவிட்டோ, அடித்துத் துரத்திவிட்டோ அடாத்தாகக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறுவதும் ஒன்றா? சிங்களக் குடியேற்றவாதிகளை ஆயுதமயப்படுத்தி, கூடவே பாதுகாப்பிற்கென்று இராணுவ முகாம்களையும் அமைத்து, சிறுகச் சிறுக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதும், தமிழர்கள் கொழும்பில் வாழ்வதும் ஒன்றா? கொழும்பில் புலிகள் முகாம் அமைத்துத் தமிழர்களை ஆயுததாரிகளாக்கி, சிங்களவர்களை கொன்றோ அல்லது விரட்டியோ ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்களா? என்று சற்றுச் சூடாகவே கேட்டுவிட்டேன்.

உங்கள் நண்பர் கேட்டது போலவே 80களில் என் அண்ணரிடமும் நான் கேட்டிருந்தேன். அதற்கு அவர் சொன்ன பதிலும் நீங்கள் சொன்னது போலவே இருந்தது.

வணக்கம் ரஞ்சித்!
இலங்கை இனப்பிரச்சனைக்கு மிக அவசியமான  கருப்பொருளை இங்கே முன் வைத்திருக்கின்றீர்கள்.
எல்லோராலும் அலசி ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள்   ஒருவித தமிழின அழிப்பையே சிங்கள இனவாதிகள் செய்கின்றார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

5 hours ago, Justin said:

வடக்கு கிழக்கில் சிங்களவர், தெற்கில் தமிழர் இரண்டும் ஒன்றல்ல. மேலே பலர் சுட்டியிருப்பது போல அரச ஆதரவுடன் குடியேற்றம் என்பது தான் முக்கிய காரணி.

ஆனால், சில விடயங்களை நாம் எதிர்க்க முடியாது. உதாரணமாக, ஒரு சிங்களவர் மிக அடிப்படையான தமிழ் பரிச்சயத்துடன் வடக்கில் வேலை செய்ய நியமனம் கிடைத்தால் அதில் எதிர்க்க எதுவும் இல்லை. ஏனெனில், மிகக் குறைந்த சிங்களப் பரிச்சயத்துடன் தெற்கில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். அதே போல, யாழ் பல்கலைக்கு சிங்கள மாணவர்கள் விரும்பி வருவதையும் நாம் எதிர்க்க இயலாது. தெற்கின் பல்கலைகளில் தமிழ் மாணவர்கள் விரும்பிச் சென்று படிக்கிற நிலையும் இருக்கிறது.

ஆம் பலோத்காரமாக இனப்பரம்பலை ஏற்படுத்த அரசும் அதன் அடிபொடிகளும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படுகிறார்கள். இதனை தான் தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள். 
இதே விதமான கருத்தை குளோபல் தமிழ் செய்திகளுக்கு ஒரு நேயரின் கருத்துக்கு பதில் எழுதும் போது(காலம் 2010) (இப்போ கருத்து எழுத முடியுமா தெரியவில்லை) கொரனவில் பிள்ளையார் சிலையை வைத்து தமிழ் மக்களை குடியேற்றினால் சிங்களவரின் எதிர்வினை எப்படி இருக்கும் என கேட்டிருந்தேன். பதில் அக்கருத்தாளரிடம் இருக்கவில்லை.
யாழ பல்கலைகளகத்தில் சிங்கள மாணவர்களை அதிகரிப்பதும் சிங்கள அரசின் நரி மூளைகளில் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

தாயகத்தில் தமிழரின் இருப்பை பாதுகாக்க வேண்டும் பொது எண்ணம் கொண்ட,  துணிச்சல்  கொண்ட  இளைஞர்கள் வருங்காலத்தில் அமையும் அரசாங்கங்களுடன் (முஸ்லீம்  மக்களைப் போல்)  அமைச்சரவையில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் அனுகூலங்களை பாவித்து எமது மக்களின்  குடிப்பரம்பலை  வட கிழக்கில் மெதுவான வேகத்திலாவது அதிகரிக்க செய்ய முயற்சிக்க  முடியும். எமது மக்களின் உற்பத்தி, கல்வி, பொருளதாரம் ஆகியவற்றில் எம்மை பலப்படுத்தி இலங்கைத் தீவில் நாமும் ஒரு சக்தி என்பதை காப்பாற்றிக்  கொள்ளலாம்.

நடைமுறைபடுத்த கூடிய நல்ல செயல் .

3 hours ago, island said:

அப்படி இல்லை எமது பழைய வழி முறைகளில் நாம் வீரர்கள்  என்று நிருப்பிக்க கங்கணம் கட்டி உசுப்பேற்றிக் கொண்டிருந்தால்,   இப்படியே இணையங்களிலும் முகநூல்களிலும் மட்டும் தேசியம் பேசி காலத்தை வீண்டித்து மாயாஜால அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால்  

 வழமை போல ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

தாயகத்தில் தமிழரின் இருப்பை பாதுகாக்க வேண்டும் பொது எண்ணம் கொண்ட,  துணிச்சல்  கொண்ட  இளைஞர்கள் வருங்காலத்தில் அமையும் அரசாங்கங்களுடன் (முஸ்லீம்  மக்களைப் போல்)  அமைச்சரவையில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் அனுகூலங்களை பாவித்து எமது மக்களின்  குடிப்பரம்பலை  வட கிழக்கில் மெதுவான வேகத்திலாவது அதிகரிக்க செய்ய முயற்சிக்க  முடியும்.

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒவ்வொரு அரசவையிலும் தமிழ் உயர் அதிகாரிகளும்,அமைச்சர்களும் அங்கம் வகிக்கின்றார்கள்.
இன ரீதியாக ஏதாவது நல்ல விடயங்கள் நடந்ததா? அல்லது முன்னேற்பாடுகள் ஏதாவது எடுக்கப்பட்டதா?
அண்மையில் கூட அண்ணன் டக்ளசை அடித்து விரட்டிய சம்பவ செய்திகள் தான் மிச்சம்...அதை விட அண்ணன் டக்ளஸ் அவர்களே தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் சரியில்லை என குற்றம் சாட்டிக்கொண்டிருப்பவர். 🤣
ஏதோ தான் சிங்களவன் மாதிரி :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Vasee இங்கே இதை பற்றி ஒரு படம் செய்தி போட்டிருந்தார்

அந்த பிரதேசம் உப்பு தன்மை கொண்ட மண்  என்று மக்களால் கைவிடபட்ட பிரதேசமாம் (அந்த படத்திலும் தெரிகின்றது) அதில் யப்பான் கொம்பனி ஒன்று சீமான் தொழில்சாலை அமைக்க விரும்பி  முயற்சி செய்ததாம்.அதை விடக்கூடாது தொழில்சாலை அமைய விடக்கூடது நல்ல விடயங்கள் முன்னேற்பாடுகள் ஏதாவது  நடைபெற கூடாது  என்று அரசியல் நோக்கத்திற்காக சிலரை தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

தொழில்சாலை அமைய விடக்கூடது நல்ல விடயங்கள் முன்னேற்பாடுகள் ஏதாவது  நடைபெற கூடாது  என்று அரசியல் நோக்கத்திற்காக சிலரை தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

சீமேந்துத் தொழிற்சாலை அமையக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடுவது அரசியல் விடயமா? எப்படி? ஒரு சீமேந்துத் தொழிற்சாலை அமைவதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அறிந்திருக்கிறீர்களா? இல்லையென்றால், காங்கேசந்துறைத் தொழிற்சாலையைச் சுற்றியிருந்த பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் ஏன் இன்று தரிசாகக் கிடக்கின்றன என்று சென்று பாருங்கள். அப்பகுதிகளில் காணப்படும் பாரிய அகழிகளால் ஏற்பட்டிருக்கும் சூழல் நாசத்தைச் சென்று பாருங்கள். குறுகிய கால வேலைவாய்ப்பிற்காகவும், வருமானத்திற்காகவும் ஒரு பிரதேசத்தினை நாசமாக்குவதைத் தடுக்க அப்பிரதேச மக்கள் போராடுவதை அரசியல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

அல்லது,  தாயகத்தில் தமிழரின் இருப்பை பாதுகாக்க வேண்டும் பொது எண்ணம் கொண்ட,  துணிச்சல்  கொண்ட  இளைஞர்கள் வருங்காலத்தில் அமையும் அரசாங்கங்களுடன் (முஸ்லீம்  மக்களைப் போல்)  அமைச்சரவையில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் அனுகூலங்களை பாவித்து எமது மக்களின்  குடிப்பரம்பலை  வட கிழக்கில் மெதுவான வேகத்திலாவது அதிகரிக்க செய்ய முயற்சிக்க  முடியும்.

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வைத் தரவில்லை என்று நாம் சொல்கிறோமோ, அதே அரசுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். தனக்கெதிராகப் போராடியபோது கொடுக்காத விடயங்களை, தன்னுடன் சேரும்போது கொடுத்துவிடும் என்கிறீர்கள். சரி, அப்படியே இருக்கட்டும். 

தேவநாயகம், இராசதுரை, டக்ளஸ், தொண்டைமான், கதிர்காமர், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், அங்கஜன், மகேஸ்வரன் தம்பதிகள் போன்ற தமிழர்கள் அரசில் நேரடியாகவோ அல்லது கூட்டணிக் கட்சியாகவோ அங்கம் வகித்தவர்கள். இவர்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டதன் மூலம் சிங்களம் அடைந்த ஒரு பிரச்சார நண்மை என்னவென்றால் தமிழர்கள் எம்மோடு இருக்கிறார்கள், எமது கொள்கைகளை ஆதரிக்கிறார்கள், அவர்களது நலன்களை நாம் பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார்கள்,  ஒருசில தமிழர்கள் தான் முரண்டுபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று சர்வதேசத்தில் தனக்கு நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிந்தமைதான். ஆனால், இத்தமிழ் அரசியல்வாதிகளால் காக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் என்ன? தொண்டைமான் கூட மலையக மக்களின் பல விடயங்களில் அரசுடன் விட்டுக்கொடுத்தே செல்ல வேண்டியதாயிற்று. அவர்களின் அன்றாட வாழ்க்கை நூற்றாண்டுகளாக இன்னும் அப்படியே கிடக்கிறது. ஏனைய தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று எமக்குத் தெரியும். இத்தனை தமிழ்த் தலைவர்களும் ஏறத்தாள அடிமைகளைப்போன்றே அரசில் ஒட்டியிருந்தார்கள். அப்படியிருக்க, இனிவரும் தலைமுறை சிங்கள அரசுடன் எவ்வாறான இணக்கப்பட்டுடன் செல்லாம் என்று கருதுகிறீர்கள்? இவர்களையும் தமது "தமிழ் நண்பர்களாக" அரசு சர்வதேசத்தில் காட்டாது என்பது என்ன நிச்சயம்? 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

Vasee இங்கே இதை பற்றி ஒரு படம் செய்தி போட்டிருந்தார்

அந்த பிரதேசம் உப்பு தன்மை கொண்ட மண்  என்று மக்களால் கைவிடபட்ட பிரதேசமாம் (அந்த படத்திலும் தெரிகின்றது) அதில் யப்பான் கொம்பனி ஒன்று சீமான் தொழில்சாலை அமைக்க விரும்பி  முயற்சி செய்ததாம்.அதை விடக்கூடாது தொழில்சாலை அமைய விடக்கூடது நல்ல விடயங்கள் முன்னேற்பாடுகள் ஏதாவது  நடைபெற கூடாது  என்று அரசியல் நோக்கத்திற்காக சிலரை தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

 

இந்தப் பிரதேசத்தை எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.  அந்தப் பிரதேசத்தை மக்கள் கைவிடவில்லை.

அந்தப் பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலையை அமைப்பதனால் அந்தப் பிரதேச இயற்கை வளம் மிகவும்  மோசமாக பாதிப்படையும். 

ஏற்கனவே அந்தப் பிரதேசம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு. மாரிகாலத்தில்கூட நன்னீருக்குப் பல மைல்கள் சென்றுதான் குடிநீரைப் பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அத்துடன் அந்தப் பிரதேசம் யானைகளின் வழித்தடத்தில் அமைந்திருக்கிறது. 

அங்கே சீமெந்து தொழிற்சாலை அமைக்கத் தெரிவு செய்யப்பட  அந்த இடத்தின் புவியியல் முக்கியத்துவமே காரணம். 

இலங்கை வரைபடத்தில் பேய்முனை Devils point என இந்த இடம்  அழைக்கப்படுகிறது. இந்த முனையில் ஒரு உயர்ந்த கோபுரத்தை நிறுவினால் வடக்கே  நெடுந்தீவிலிருந்து தெற்கே மன்னார் தீவுவரையுள்ள பாக்கு நீரிணையை Palk Strait  மிக மிக இலகுவாக (கண்களாலேயே) கண்காணிப்பிற்குள் கொண்டுவர முடியும். 

சீமெந்து தொழிற்சாலையை அமைக்க விரும்புவது அதானி நிறுவனம் என்று கேள்வி. 

இப்போது இந்தப் பிரச்சனையின் பின்னணியை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியுமல்லவா 🤨

 

Edited by Kapithan
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை, நலன்களையல்ல, தமது பகுதிகளில் கட்டுப்பாட்டிற்குற்பட்ட அபிவிருத்தி. இது அனுமதிக்கப்பட்டதற்கான ஒற்றை காரணம், தமிழர்களுக்கெதிரான போரில் முஸ்லீம்களை தமிழர்களுடன் இணைய விடாது பிரித்தெடுத்து, தமிழரூகெதிரான போரில் அவர்களைப் பயன்படுத்தி தமிழ‌ர்களின் அபிலாஷைகளை முற்றாக அழிப்பதற்காகத்தான். 2009 வரை அரசின் செல்லபிள்ளைகளாக இருந்த  ஹிஸ்புள்ளா, ரவூப் ஹக்கீம், பதிருதீன் ஆகியோர் இப்போது எங்கே? 2009 இற்குப் பின்னர் முஸ்லீம் அமைச்சர்கள் இருந்தபோதும் கூட அச்சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட களுத்துறை, உகணை உள்ளிட பிரதேசங்கள் மீதான வன்முறைகளை அவர்களால் தடுக்க முடிந்ததா? தமது சொந்தப் பைகளை நிரப்பி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்வம் ஏற்படுத்தியதை விட அவர்கள் முஸ்லீம் இனத்தின் நலன்களைக் காக்க செய்த நடவடிக்கைகள் என்ன? அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதியில் தீகவாபியை அஷ்ரப்பின் காலத்திலேயே அரசு அடாவடியாக வளைத்துப் போட்டதே? அப்போது அஷ்ரப்பால் செய்ய முடிந்தது என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம்,

1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல்.
2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல்.
3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல்.
4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல்.
5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல்.

ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,]


பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில் 
அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது. 


வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது

அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது. 

நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக 
புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில் 
வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது.

கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,  
   
Anuradhapura period (377 BCE–1017)
Polonnaruwa period (1056–1232)
Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம் 

The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815) 

கொழும்பு வை எடுத்துக்கொண்டால் 

பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே!

2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது.

இல    இனம்    சனத்தொகை    மொத்த %
1    சிங்களவர்    265,657    41.36
2    இலங்கைத் தமிழர்    185,672    28.91
3    இலங்கைச் சோனகர்    153,299    23.87
4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17
5    இலங்கை மலேயர்    11,149    1.73
6    பறங்கியர்    5,273    0.82
7    கொழும்புச் செட்டி    740    0.11
8    பரதர்    471    0.07
9    மற்றவர்கள்    5,934    0.96
10    மொத்தம்    642,163    100

இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட!

Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது] 

இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது.

Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]

 
Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights. 
 
THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS.

Raja Shehadeh, Palestinian lawyer and writer    


நன்றி 

Edited by kandiah Thillaivinayagalingam
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வைத் தரவில்லை என்று நாம் சொல்கிறோமோ, அதே அரசுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். தனக்கெதிராகப் போராடியபோது கொடுக்காத விடயங்களை, தன்னுடன் சேரும்போது கொடுத்துவிடும் என்கிறீர்கள். சரி, அப்படியே இருக்கட்டும். 

தேவநாயகம், இராசதுரை, டக்ளஸ், தொண்டைமான், கதிர்காமர், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், அங்கஜன், மகேஸ்வரன் தம்பதிகள் போன்ற தமிழர்கள் அரசில் நேரடியாகவோ அல்லது கூட்டணிக் கட்சியாகவோ அங்கம் வகித்தவர்கள். இவர்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டதன் மூலம் சிங்களம் அடைந்த ஒரு பிரச்சார நண்மை என்னவென்றால் தமிழர்கள் எம்மோடு இருக்கிறார்கள், எமது கொள்கைகளை ஆதரிக்கிறார்கள், அவர்களது நலன்களை நாம் பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார்கள்,  ஒருசில தமிழர்கள் தான் முரண்டுபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று சர்வதேசத்தில் தனக்கு நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிந்தமைதான். ஆனால், இத்தமிழ் அரசியல்வாதிகளால் காக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் என்ன? தொண்டைமான் கூட மலையக மக்களின் பல விடயங்களில் அரசுடன் விட்டுக்கொடுத்தே செல்ல வேண்டியதாயிற்று. அவர்களின் அன்றாட வாழ்க்கை நூற்றாண்டுகளாக இன்னும் அப்படியே கிடக்கிறது. ஏனைய தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று எமக்குத் தெரியும். இத்தனை தமிழ்த் தலைவர்களும் ஏறத்தாள அடிமைகளைப்போன்றே அரசில் ஒட்டியிருந்தார்கள். அப்படியிருக்க, இனிவரும் தலைமுறை சிங்கள அரசுடன் எவ்வாறான இணக்கப்பட்டுடன் செல்லாம் என்று கருதுகிறீர்கள்? இவர்களையும் தமது "தமிழ் நண்பர்களாக" அரசு சர்வதேசத்தில் காட்டாது என்பது என்ன நிச்சயம்? 

எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே! 

 

6 hours ago, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒவ்வொரு அரசவையிலும் தமிழ் உயர் அதிகாரிகளும்,அமைச்சர்களும் அங்கம் வகிக்கின்றார்கள்.
இன ரீதியாக ஏதாவது நல்ல விடயங்கள் நடந்ததா? அல்லது முன்னேற்பாடுகள் ஏதாவது எடுக்கப்பட்டதா?
அண்மையில் கூட

அல்லது நீங்கள்  கூறலாமே!   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

இந்தப் பிரதேசத்தை எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.  அந்தப் பிரதேசத்தை மக்கள் கைவிடவில்லை.

தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.

இது யாழ்ப்பாணத்தில் இல்லை. 

பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது. 

 

https://www.aloeus.com/devils-point-veravil/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, island said:

எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே! 

 

அல்லது நீங்கள்  கூறலாமே!   

எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே.

தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம்.

இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன்.


இப்போது அதுவல்ல பிரச்சனை.

தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்...
வெட்டுறம்...
கொத்துறம்.....
அடிக்கிறம்...
வெட்டி
தாக்கிறம்...
புடுங்குறம்...
பொங்கிறம்..
படைக்கிறம்...
எங்கடை...
உரிமைகளை..
வெண்டெடுக்கிறம்...
அமெரிக்கவோட...
கதைக்கிறம்...
லண்டனோடை...
கதைக்கிறம்...
குயின்னோடை ...
கதைக்கிறம்...
ஐரோப்பாவோடை...
கதைக்கிறம்....

என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள்.

வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள்.

தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது) மற்றும் அமைச்சர் பென்னி காண்ட்ஸ் (வலது) கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டி கூனே பதவி, பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா பகுதியில் போருக்குப் பிந்தைய திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வகுக்காவிட்டால் பதவி விலகுவதாக இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பென்னி காண்ட்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார். ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆறு இலக்குகளை முன்வைத்த பென்னி காண்ட்ஸ், அவற்றை அடைவதற்கான காலக்கெடுவை ஜூன் 8 வரை நிர்ணயித்தார். காஸாவில் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருதல், அங்கு ஒரு பன்னாட்டு சிவில் நிர்வாகத்தை நிறுவுதல், காஸாவில் ஹமாஸால் கைப்பற்றப்பட்ட அனைத்து இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக் கைதிகளையும் மீட்பது மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் இடம்பெயர்ந்த பாலத்தீன குடிமக்கள் வடக்கு காஸாவுக்கு திரும்புவது உட்பட ஆறு "மூலோபாய இலக்குகள்" அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. "நீங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை தள்ளி வைத்து தேசியத்தை முன் நிறுத்தினால், நாங்கள் உங்களுடன் தோள் கொடுத்து பக்கபலமாக நிற்போம். ஆனால் நீங்கள் வெறியர்களின் பாதையைத் தேர்ந்தெடுத்து ஒட்டுமொத்த தேசத்தையும் படுகுழிக்கு இட்டுச் சென்றால், நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்." என்று அறிவித்துள்ளார். காண்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையை நிராகரித்த நெதன்யாகு, அமைச்சரின் கருத்துகள் மோசமான, வலிமையற்ற வார்த்தைகள் என்றும் இது இஸ்ரேல் தோல்வியுற்றதாக பொருள்படும் என்றும் குறிப்பிட்டார். காஸாவில் உள்ள அகதிகள் முகாம்களில் ஒன்றான ரஃபா மற்றும் வடக்கு நகரமான ஜபாலியாவில் இஸ்ரேலியப் படைகள் செயல்பட்டு வருகிறது. ஹமாஸ் படையினர் இங்கு இல்லை என்று இஸ்ரேல் முன்பு குறிப்பிட்ட பகுதியில் அதன் ராணுவம் முகாம் அமைத்து மீண்டும் செயல்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS   இஸ்ரேலின் மற்றொரு போர் குழு உறுப்பினரான பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், `காஸாவை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்க இஸ்ரேலுக்கு எந்தத் திட்டமும் இல்லை’ என்று பகிரங்கமாக அறிவிக்குமாறு நெதன்யாகுவை வலியுறுத்தினார். அவரின் அறிக்கைக்கு சில நாட்களுக்குப் பிறகு காண்ட்ஸ் பதவி விலகுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த பிரச்னை குறித்து பல மாதங்களாக கேள்வி எழுப்பியும் நெதன்யாகு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கேலண்ட் கூறியுள்ளார். `காஸாவில் ராணுவக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது இஸ்ரேலின் பாதுகாப்பு அபாயங்களை அதிகரிக்கும்’ என்பதே கேலண்ட் மற்றும் காண்ட்ஸின் ஒருமித்த கருத்து. அதே சமயம் இஸ்ரேல் அரசாங்கத்தில் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணியின் தீவிர வலதுசாரி உறுப்பினர்கள் உட்பட்டோர் ஹமாஸைத் தோற்கடிக்க தொடர்ச்சியான ராணுவ கட்டுப்பாடு அவசியம் என்று நம்புகிறார்கள். சனிக்கிழமை அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், காண்ட்ஸ் நெதன்யாகுவை குறிப்பிட்டு "இஸ்ரேல் மக்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களின் நிலைப்பாடு என்ன? சியோனிசமா (இஸ்ரேலின் தேசிய சித்தாந்தம்) இழிவான செயல்பாடா? ஒற்றுமையா பிரிவினையா? பொறுப்பா அக்கிரமமா? வெற்றியா பேரழிவா? நீங்கள் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள் ? " என்று அவர் கேள்வி எழுப்பினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "இரான் மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கு எதிராக மேற்கு நாடுகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான விரிவான செயல்முறை வகுக்க வேண்டும். அதன் பகுதியாக, சவுதி அரேபியா உடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு இஸ்ரேல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்” என்று காண்ட்ஸ் குறிப்பிட்டார். போர்க்குழு அமைச்சர் காண்ட்ஸின் உரைக்கு பதிலளித்த நெதன்யாகு, "காண்ட்ஸின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அது போரின் முடிவு மற்றும் இஸ்ரேலின் தோல்விக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பணயக் கைதிகளை கைவிட நேரிடும். ஹமாஸை அப்படியே விட்டுவிட்டு பாலத்தீன அரசை நிறுவவும் வழிவகுக்கும்" என்று கூறினார். காஸாவிற்கு அருகில் உள்ள இஸ்ரேலிய பகுதி மீது கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேலின் போர் அமைச்சரவை நிறுவப்பட்டது. காஸாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் 35,386 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி, நெதன்யாகுவிடம் தனிப்பட்ட முறையில், போருக்கு பிந்தைய நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியதாக ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் ஜபாலியா போன்ற வடக்கு காஸாவின் சில பகுதிகளுக்கு மீண்டும் திரும்பியுள்ளது. அப்பகுதிகளில் ஹமாஸ் படை இல்லை என்று அறிவித்த பின்னர் தற்போது ராணுவம் சென்றுள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES "காஸாவில் எதிர்கால மாற்று அரசாங்கத்திற்கான அடித்தளம் அமைக்கப்படும் அதே வேளையில், அங்கு பொதுமக்களுக்கான விவகாரங்களை நிர்வகிக்க கூடிய அமெரிக்க, ஐரோப்பிய, அரபு மற்றும் பாலத்தீன நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இஸ்ரேல் பாதுகாப்பு கட்டுப்பாட்டை ஓரளவுக்கு பராமரிக்க முடியும்” என்று காண்ட்ஸ் விவரித்துள்ளார். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஜபாலியாவில் தாங்கள் பாலத்தீன ஆயுதக் குழுக்களுடன் சண்டையிட்டதாகக் கூறினர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன மருத்துவர்கள் தெரிவித்தனர். `ஜபாலியா மீது இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்’ என்று ஹமாஸ் தரப்பு கூறியது. கடந்த வாரம், இஸ்ரேல் ரஃபாவில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. ஹமாஸின் கடைசி புகலிடங்களை தகர்க்க ராணுவப் படை நகரத்திற்குள் நுழைய வேண்டும் என்று கூறியது. சனிக்கிழமை அன்று, அது நகரின் கிழக்கில் உள்ள இலக்குகள் மீது வான்வழி தாக்குதல்களை தொடங்கியது. சனிக்கிழமை மாலை, இஸ்ரேல் வடக்கு காஸாவின் சில பகுதிகளில் பொதுமக்கள் வெளியேறும்படி உத்தரவுகளை வெளியிட்டது, ஆயுதக் குழுக்கள் அதன் எல்லையை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியதாக கூறியது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைவர் பிலிப் லாஸரினி காஸாவின் சூழலை விவரிக்கையில், ``சுமார் 800,000 பாலத்தீனர்கள் இப்போது ரஃபாவை விட்டு வெளியேறி, சிதைந்து போயிருக்கும் கான் யூனிஸ் நகரத்திலோ அல்லது கடற்கரை ஓரத்திலோ தஞ்சம் புகுந்துள்ளனர். காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து, பாலத்தீனர்கள் பாதுகாப்பைத் தேடி பலமுறை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” "மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் போது, அவர்கள் செல்லும் பாதைகள் பாதுகாப்பானதாக இல்லை. அதே சமயம் ஒவ்வொரு முறையும் வெளியேற்றப்படும் போது, அவர்கள் தங்களிடம் உள்ள சில உடமைகளை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மெத்தைகள், கூடாரங்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் அடிப்படை பொருட்களை கொண்டு செல்லவோ அல்லது போக்குவரத்துக்கு பணம் செலுத்தவோ முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.” "காஸாவில் உள்ள மக்கள் 'பாதுகாப்பான' பகுதிகளுக்குச் செல்லலாமே என்று கேள்வி எழுப்புவது தவறானது. ஒவ்வொரு முறையும் அவர்கள் பயணிக்கும் போது, அவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை." என்று பிலிப் லாஸரினி விளக்கினார். அமெரிக்க அதிபர் பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலில் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். குடிமக்களைப் பாதுகாக்கும் திட்டம் இல்லாத நிலையில், ரஃபா மீதான எந்தவொரு முழு அளவிலான இஸ்ரேலிய தாக்குதலுக்கும் பைடன் நிர்வாகத்தின் எதிர்ப்பை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன், சல்லிவன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது குறித்தும், பாலத்தீன அரசு அந்தஸ்தை அடைவது குறித்தும் அவர்கள் விவாதித்ததாக சவுதி அரசு ஊடகம் தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/cv22513ljgzo
    • ஊரில் பல வீடுகளில் விலாட்டு மரங்கள் காய்த்திருப்பதைப் பார்த்தேன். எங்கள் வீட்டிலும், மனைவியின் பிறந்து வளர்ந்த வீடு, ஒரு மரம் காய்த்திருக்கின்றது. கறுத்த கொழும்பானை பார்க்கவேயில்லை என்று இப்பொழுது தான் நினைவுக்கு வருகின்றது. நான் பிறந்து வளர்ந்த வீட்டில் இரண்டு கறுத்த கொழும்பான் மரங்கள் முந்தி நின்றது. இப்ப இல்லை. முந்தி அவையும் சில வருடங்கள் காய்த்துக் கொட்டின, சில வருடங்கள் பகிஷ்கரித்தும் இருக்கின்றன. என்ன டிசைனோ.....😀
    • ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டரை கண்டுபிடிக்க முடியாத நிலை - ஈரான் ஊடகங்கள் தகவல் Published By: RAJEEBAN   19 MAY, 2024 | 08:45 PM   ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிக்கொப்டரை கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மோசமான காலநிலை நிலவுகின்றது- குறிப்பிட்ட பகுதியில் மழையும் கடும் பனியும் காணப்படுவதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிக்காக அனுப்பப்பட்ட ஹெலிக்கொப்டர் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிவிட்டது என தகவல்கள் வெளியாகின்றன. ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டர் தொலைதூர பகுதியொன்றில் அவசரமாக தரையிறங்கியுள்ளது என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்திற்கு பயணம் செய்துகொண்டிருந்தார் ஈரானின் வெளிவிவகார அமைச்சரும் அவருடன் பயணம் செய்தார் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹெலிக்கொப்டர் அவசரமாக தரையிறங்கிய பகுதிக்கு செல்வது கடினமாக உள்ளது என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/183984
    • 🤣.......நல்ல யோசனை. பெட்டி பெட்டியாகத்தான் விற்கின்றார்கள். ஆறிலிருந்து பத்து அல்லது பன்னிரண்டு பழங்கள் ஒரு பெட்டியில் வரும். மாழ்பழத்தின் வகைகளையும், அளவுகளையும் பொறுத்து வேறுபடும். 'நல்ல டீல்' என்று சொல்லி, இந்த மாதங்களில் ஒரே நேரத்தில் சில பல பெட்டிகள் வீட்டுக்குள் வரும். பிறகு 'அய்யய்யோ, பழுதாகப் போகுதே....' என்று ஒரு குரல் விடாமல் கேட்கும்........ பிறகென்ன...காற்றுக்கென்ன வேலி.... நம்மவர்கள், இந்தியர்கள், வாங்கும் போது இரண்டு மூன்று பெட்டிகளை கலந்து ஒரு 'நல்ல' பெட்டியை உண்டாக்க முயல்வார்கள். கடைக்காரர் நொந்து போய் விடுவார்........  
    • அருந்தலாக கிடைப்பதால் அதில் ஆசை கூட இருக்கும் அக்கா. அப்ப இதுக்கு(அளவா சாப்பிட) ஒரு தீர்வே இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.