-
Tell a friend
-
Topics
-
0
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
-
Posts
-
தீவிர வலதுசாரி கட்சிக்கு பிரான்ஸ் மக்கள் வாக்களித்ததற்கு 4 காரணங்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,முன்பு எப்போதும் இல்லாத வகையில் பிரான்ஸ் வாக்காளர்கள் மரைன் லே பென் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸாண்ட்ரா ஃபூஷ்ஷே பதவி, பிபிசி உலக சேவை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்சின் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் 33% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. இடதுசாரிகள் கூட்டணியான புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி, 28% வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பிரான்ஸ் அதிபர் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கூட்டணி 21% வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. நாடாளுமன்றத்தில் வலதுசாரிகள் அதிக இடங்களைப் பெறுவதைத் தடுக்க, மையவாத மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென அதிபர் மக்ரோங் தற்போது அழைப்பு விடுத்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் முதல் முறையாக மரைன் லே பென் மற்றும் ஜோர்டான் பர்டெல்லா தலைமையிலான தேசிய பேரணிக் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பிரான்ஸ் வாக்காளர்கள் இந்த கட்சிக்கு ஆதரவளித்ததின் சில முக்கிய காரணங்கள் என்ன? இது சாத்தியமானது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரான்சின் மூத்த அரசியல் விமர்சகர் அலைன் டுஹாமெல் கூறுகிறார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 1) உள்நாட்டுக் காரணம் மற்றும் பொருளாதாரத்தில் நிலை மக்களின் வாங்கும் திறனைக் குறைத்த விலைவாசி உயர்வு, அத்துடன் எரிபொருட்களின் விலை உயர்வு, மருத்துவ சேவைகள் முறையாகக் கிடைப்பதில் சிக்கல், "பாதுகாப்பின்மை’’ என்று பிரான்ஸ் மக்கள் அழைக்கும் குற்றங்கள் அதிகரித்து வரும் அச்சம் ஆகியவை வாக்காளர்களின் முதன்மை பிரச்சனைகளாக உள்ளன. பிரான்சின் பொருளாதாரம் நல்ல நிலையிலிருந்தாலும், பெரிய நகரங்களிலிருந்து தள்ளிச் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் வசிக்கும் மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்ததாக பிபிசியிடம் கூறினர். நிதியும், கவனமும் பெரிய நகரங்களுக்குச் சென்ற நிலையில், பிற பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது. சில இடங்களில் வேலைவாய்ப்பின்மை 25 சதவீதத்தைக் கூட தொட்டது. உள்ளூரில் சிலரால் வீடுகளை வாங்க முடியாத அளவுக்கு, வீடுகளின் விலை அதிகரித்தது. நிதிப் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன. நகர்ப்புறங்களில் உள்ள மிகப்பெரிய சுகாதார மையங்களுக்காக, உள்ளூர் சுகாதார மையங்கள் மூடப்பட்டது பலரைக் கவலையடைய வைத்தது. உலகமயமாக்கலில் பலனடைந்தவர்கள் மக்ரோங்கிற்கு ஆதரவளித்தனர். இதில் கைவிடப்பட்டவர்கள் வலதுசாரிகள் பக்கம் திரும்பினர் என பேராசிரியர் தாமஸ் பிகெட்டி பிபிசியிடம் கூறினார். Capital in the Twenty-First Century என்ற அதிக விற்பனையான புத்தகத்தை எழுதிய தாமஸ் பிகெட்டி, ’’ தொழிற்சாலைகள் மூடப்பட்டது, பொதுச் சேவைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டது, ரயில்கள் நிறுத்தப்பட்டது, மருத்துவமனைகள் மூடப்பட்டது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட சிறு நகரங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வலதுசாரிகளுக்கு ஆதரவளித்தனர். பெரிய நகரங்களிலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் மக்களுக்கு, தங்களது குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி வழங்குவது கூட கடினமானதாக உள்ளது’’ என்கிறார். படக்குறிப்பு,37 வயதான தூய்மைப்பணியாளரான அவுரிலே தனது இரண்டு மகன்களுடன் அமியென்ஸ் நகரில் வசிக்கிறார் பாரிஸின் கிழக்கே பொன்டால்ட் - கம்பால்ட் நகரில் வசிக்கும் பேட்ரிக், ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் தேசிய பேரணி கட்சிக்கு வாக்களித்தார். பிபிசியிடம் பேசிய அவர், ’’இங்கு வசிக்கும் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அவர்கள் வாக்களிப்பதில் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. சாலைகளில் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள்’’ என்றார். 37 வயதான தூய்மைப்பணியாளரான அவுரிலே தனது இரண்டு மகன்களுடன் வடக்கு பிரான்ஸின் அமியென்ஸ் நகரில் வசிக்கிறார். இங்குதான் பிரான்ஸ் அதிபர் மக்ரோங் வளர்ந்தார். தேசிய பேரணி கட்சியினருடன் தான் உடன்படுவதில் ’பாதுகாப்பின்மை’ முதன்மையானது என்கிறார். '’நான் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து வேலைக்குச் செல்வேன். முன்பு சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்வேன். ஆனால் இப்போது காரில் செல்கின்றேன்’’ என பிபிசியிடம் கூறினார். ‘’இளைஞர்கள் எப்போதும் வெளியே சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு பயமாக உள்ளது’’ ஓய்வூதியம் வழங்குவதற்கான வயதை 62-இல் இருந்து 64-ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மக்ரோங் அரசு கொண்டுவந்த சட்டம் வாக்காளர்களிடையே பிரச்சனையாக உருவெடுத்தது. ஓய்வூதிய திட்டத்தை நிலைக்க வைக்க, சீர்திருத்தம் அவசியம் என்று மக்ரோங் கூறினார். குளிர்காலத்தில் வீடுகளை வெப்பப்படுத்தும் எரிவாயு மற்றும் மின்சாரத்தின் விலை சமீப காலத்தில் கடுமையாக உயர்ந்தது. 100 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மின்சாரம்/எரிவாயுவின் விற்பனை வரி குறைப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும், சில மாதங்களில் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தேசிய பேரணி கட்சியின் தலைவர் ஜோர்டான் பர்டெல்லா கூறினார். 2) தற்போது உள்ள அமைப்பின் மீதான வெறுப்பு பிரான்ஸில் தற்போது உள்ள அரசியல் அமைப்பு தங்களுக்கு ஏற்றதாக இல்லை என வாக்காளர்கள் அடிக்கடி கூறி வந்துள்ளனர். "நான் திருப்தி அடைகிறேன், ஏனென்றால் எங்களுக்கு மாற்றம் தேவை," என்று மரைன் லே பென் கட்சியின் வடக்கு பகுதி கோட்டையான ஹெனின்-பியூமண்டில் வசிக்கும் ஜீன்-கிளாட் கெயில்லெட் ஞாயிற்றுக்கிழமையன்று வாக்களித்த பிறகு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். ’’எந்த விஷயமும் மாறவில்லை. அவை மாற வேண்டும்’’ ’’மக்கள் சோர்ந்து போனதால் அவர்களால் [தேசிய பேரணி] வாக்குகளைப் பெற முடிந்தது. எங்களுக்குக் கவலை இல்லை, அவர்களுக்கு வாக்களித்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்’’ என்கிறார் தேசிய பேரணி கட்சியின் மற்றொரு ஆதரவாளரான 80 வயதான மார்குரைட். '’ஆனால் இப்போது நான் பயப்படுவது என்னவென்றால், மற்ற அரசியல் கட்சிகள் தடைகளை ஏற்படுத்தும். நாங்கள் வாக்களித்தோம், இவைதான் முடிவுகள். அவற்றை ஏற்றுக்கொண்டு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.’’ என்கிறார் அவர். ஆனால், யமினா அட்டோ தேசிய பேரணி கட்சியின் வெற்றியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவாக வாக்காளர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதாவும், அவர்களின் முடிவு பிரான்ஸ் சமுதாயத்தில் ஆபத்தான பிளவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். ’’அது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நான் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். ஏனென்றால் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உணரவில்லை. அவர்கள் வாங்கும் திறன் குறித்தும், பிற குறுகிய கால விஷயங்களை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர்’’ என்கிறார் யமினா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சிக்கு அதிபர் மக்ரோங்கே காரணம் என கூறப்படுகிறது நாடு தற்போதுள்ள நெருக்கடிக்கு அதிபர் மக்ரோங்கை பலர் குற்றம் சாட்டுகின்றனர். எகனாமிஸ்ட்டின் பாரிஸ் அலுவலக தலைவரான சோஃபி பெடர், “அனைத்து விதமான அரசியல் சார்பு மக்களையும் ஒன்றிணைக்க மக்ரோங் ஒருமித்த இயக்கத்தை உருவாக்கினார். அது பலனளித்தது. நாடாளுமன்றத்திலும் இரு தரப்புக்கும் இடையே நடந்த முடிவில்லாத சண்டைக்கு இது முற்றுப்புள்ளி வைத்தது'' "ஆனால் விளைவு என்னவென்றால், இடது மற்றும் வலது மிதவாதிகள் அனைவரும் மக்ரோங் கட்சியில் சேர்ந்தனர். அவருக்கு மாற்றாக, தீவிர வலதுசாரிகள் மட்டுமே இருந்தனர்’’ என பிபிசியிடம் கூறினார். 3) குடியேற்றம் மற்றும் பிரான்ஸ் அடையாளத்தைச் சுற்றியுள்ள அச்சம் தேசிய பேரணியின் நாடாளுமன்ற தலைவரான மரைன் லே பென், தனது கட்சியை பிரதான அரசியல் நீரோட்டத்துடன் இணைக்கவும், மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றவும் பல ஆண்டுகளாக பணியாற்றினார். தனது தந்தை ஜீன்-மேரி லே பென் மற்றும் சிலர் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி கட்சியை தேசிய பேரணி என்று மறுபெயரிட்டதுடன், கட்சியின் கொள்கையை யூத எதிர்ப்பு மற்றும் தீவிர கொள்கையிலிருந்து நகர்த்தினார். இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் குடியேற்றத்திற்கு எதிரான கட்சியாகவே இது உள்ளது. புலம்பெயர்ந்தோருக்கான சமூக நலனை மட்டுப்படுத்தவும், வெளிநாட்டில் பிறந்த பெற்றோரைக் கொண்ட குழந்தைகளுக்கு பிரான்ஸ் குடியுரிமைக்கான உரிமையை அகற்றவும் தேசிய பேரணி கட்சியின் தற்போதைய தலைவர் ஜோர்டான் பர்டெல்லா வலியுறுத்துகிறார். புலம்பெயர்ந்தோர், குறிப்பாக முஸ்லீம்கள், பிரான்ஸ் சமுதாயத்தில் இணைய மாட்டார்கள் என்ற அச்சத்தை வைத்து இக்கட்சி அரசியல் செய்கின்றது. எடுத்துக்காட்டாக, இக்கட்சியின் வேட்பாளரான இவான்கா டிமிட்ரோவா, "பிரான்ஸ் தேசத்தின் சட்டங்களுக்கு மேலாக தங்கள் மதச் சட்டத்தை வைத்திருக்க விரும்பும் குடியேறிகளுக்கு எதிராக தங்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்’’ என்று பிபிசியிடம் கூறினார். தேசிய பேரணி கட்சியின் நேட்டோ எதிர்ப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு கொள்கைகள் மென்மையாக்கப்பட்டுள்ளன. விளாடிமிர் புடினில் ரஷ்யாவுடனான தேசிய பேரணியின் நெருங்கிய உறவுகள் அமைதியாகக் கைவிடப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழுக்கத்தை 2022 முதல் தேசிய பேரணி கட்சி முன்னிலைப்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புலம்பெயர்ந்தோர், குறிப்பாக முஸ்லீம்கள், பிரான்ஸ் சமுதாயத்தில் இணைய மாட்டார்கள் என்ற அச்சத்தை வைத்து தேசிய பேரணி கட்சி அரசியல் செய்கின்றது. 4) சமூக ஊடகத்தில் தீவிர பரப்புரை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜோர்டான் பர்டெல்லாவை டிக்டோக் அரசியல்வாதி என்று அழைக்கின்றனர் தேசிய பேரணி கட்சி எளிய முழக்கங்கள் மற்றும் யோசனைகளில் வெற்றிகரமாகப் பிரசாரம் செய்தது. மக்கள் தங்கள் பிரெஞ்சு அடையாளத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தையும்,விலைவாசி உயர்வையும் முன்னிலைப்படுத்தி இக்கட்சியினர் பிரசாரம் செய்தனர். வாக்காளர்களை இடையே தாங்கள் நம்பகமானவர்கள் மற்றும்ன் பரிச்சயமானவர்கள் என்பதை உணர வைக்க சமூக ஊடகங்களை மிகவும் திறம்படப் பயன்படுத்தினர். "பிரான்சில், ஜோர்டான் பர்டெல்லாவை டிக்டோக் அரசியல்வாதி என்று அழைக்கிறோம். ஏனென்றால் அவர் சமூக ஊடகங்களில் மக்களைத் திரட்டும் அரசியல்வாதி" என்று பிரான்ச்-காம்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வின்சென்ட் லெப்ரூ பிபிசியின் நியூஸ்நைட் நிகழ்ச்சியில் கூறினார். ’’பெரும்பாலான மக்கள் இனவெறி கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தற்போது உள்ள அமைப்பால் சோர்வடைந்துவிட்டனர். அவர்கள் மக்ரோங்கின் கொள்கைகளால் சோர்வடைந்துள்ளனர்’’ என்கிறார் தேசிய பேரணிக்கு எதிராகப் போட்டியிடும் புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியின் வேட்பாளர் சார்லஸ் குலியோலி. https://www.bbc.com/tamil/articles/c97dpyzjzgdo
-
By ஏராளன் · பதியப்பட்டது
02 JUL, 2024 | 05:57 PM யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக முதியவருடன் வசித்து வந்த இளைஞன் தெரிவித்துள்ளார். மரணத்தில் சந்தேகம் காணப்பட்டமையால், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. உடற்கூற்று பரிசோதனையில் முதியவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் முதியவருடன் வசித்து வந்த இளைஞனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று திங்கட்கிழமை (01) யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187515 -
சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்களின் வாழ்வின் முக முக்கிய மூன்று காலகட்டங்களிலும் அரசியல் செய்தவர். இந்த மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலும் அவர் பெற்ற அனுபவங்களீன் அளவு, தென்னாசியாவில் எவரும் பெற்று இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த அனுபவங்களினூடாக அவர் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக் கொடுக்க செய்த காத்திரமான முயற்சிகள் என்ன? பூச்சியம். வெறுமனே வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்திப்பதும், கால காலமாக சந்திரிக்கா, சரத் பொன்சேக்கா, மகிந்த, மைத்திரி, ரணில் என சிங்கள இனவாதத் தலைவர்களை நம்பியதும், ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடக் கூடாது, அப்படி கிடைப்பது தம் பிராந்திய நலன்களுக்கு எதிரானது என காரியமாற்றும் இந்தியாவை நம்பியதும் தவிர உருப்படியான எந்த விடயத்தை இந்த பழுத்த, தமிழ் அரசியல்வாதி ஆற்றியிருக்கின்றார்? மக்கள் மயப்படுத்திய போராட்டம் ஒன்றை முன்னெடுத்த நிகழ்வு ஏதேனும் இந்த 40 வருடங்களில் செய்து இருக்கின்றாரா? தானும் ஏமாந்து, தமிழ் மக்களயும் வாக்குறுதிகளால் ஏமாற்றியதைத் தவிர என்ன செய்து இருக்கின்றார்? முதுமையில் தள்ளாடிய போதும், தன் பதவியில் இருந்து இறங்காமல் கால விரயம் செய்தவர். ஆகக் குறைந்த தான் பிரதி நிதித்துவம் செய்யும் திருகோணமலையில் நிகழும் சிங்கள மயமாக்கலுக்கு கூட எதிர்வினை ஆற்றாமல் தன் எம் பி பதவியில் மட்டும் குறியாக நின்றவர். இவர் மிதவாத தலைவர் அல்ல. தன் நலன்களை மட்டுமே முன்னெடுத்த பிரமுகர். அவர் அரசியல் ரீதியில் கண்டிப்பாக கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவர். அப்படியான விமர்சகர்களை நோக்கி 'நீ என்ன புடுங்கினாய் அவரை விமர்சிக்க' என்று கேட்பவர்கள், ஆரோக்கியமான விமர்சனங்களை விரும்பாத கூட்டத்தினை சேர்ந்தவர்கள் என நம்புகின்றேன். அதே நேரம், அவர் சாவினை கொண்டாட்டமாக கருதுவதும், பட்டாசு கொளுத்தி கொண்ஂடாடுகின்றவர்களை போற்றுவதும் அரசியல் நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமான செயல்கள் மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டிய செயல்கள். அதே போல், புலி எதிர்ப்பு எனும் அதி தீவிர காச்சலால் பீடிக்கப்பட்டு, தாம் மாற்றுக் கருத்து வைக்கின்றோம் என்ற போர்வையில், எல்லா இடங்களிலும் புலிகளையும், புலிகளின் தலைமையையும் இழுத்து, மோசமாக விமர்சிக்கின்றவர்கள் ஆரோக்கியமான உரையாடல்களுக்கும், தவறுகளை விமர்சிப்பதனூடாக சரியான வழிகளை தேட முயல்கின்றவர்களின் எண்ணங்களுக்கும் எதிரானவர்கள் மட்டுமன்றி, அவர்களும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆகும். டொட்.
-
கெஹலியவின் பிணை மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு 02 JUL, 2024 | 04:33 PM தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை நீக்கி தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) உத்தரவிட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா இல்லையா மற்றும் பிணை தொடர்பான தீர்ப்பு ஆகியன தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. https://www.virakesari.lk/article/187500
-
By kandiah Thillaivinayagalingam · Posted
எல்லோருக்கும் நன்றிகள்
-
-
Our picks
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts