Jump to content

யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்


Recommended Posts

  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

16 அணிகளின் சுற்றில்
சுவிஸ் 2 - 0 இத்தாலி
யேர்மனி 2  - 0 டென்மார்க்

On 25/6/2024 at 13:04, சுவைப்பிரியன் said:

சுவிசுக்கு இந்த மட்ச் கோப்பை வென்டதுக்குச் சமன்.


சுவிஸ்கார ஈழம் தமிழ் எனக்கு வட்சப் தகவல் அனுப்புகிறார் "குறித்து வைத்து கொள் இறுதி ஆட்டத்தில் சுவிஸ்சுடன் விளையாட போவது யேர்மனி அல்லது யோர்ஜியா".

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் இந்த முறை மகிகத்தரமான விளையாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. வலுவான அணி இநறுதிப் போட்டியில் விளையாடும் தகமை அதற்கு உள்ளது. பார்ப்போம். சென்ற தடவை பனால்டியில் கோட்டை விட்டவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கோல்களை தொழில்நுட்ப முறையில் கொடுக்காமல் விட்டிருக்கிறார்கள். டென்மார்க் வுpரின்கையில் இலேசாக கை பட்டதற்கு பனால்ட்டி கொடுத்தது எனக்கு ஏற்புடையதல்ல. தொழில் நுட்பத்தைப் பாவிப்பதால் ஆட்டத்தில் சுவாரஸயம் குறைந்து விடுகிறது.டென்மார்க்குக்கு கொடுக்காமல் விட்ட ஓவ்சைட் கோல் அபத்தம்.ஆமுலும் ஒரு கோல் என்பது விநளயாட்டு வீரர்களின் உளவியலைப் பாதித்து விடுகிறது.பழைய முறையில் நடுவர்களின் தீர்ப்பு விளையாட்டில் சுவராஸசிமானது. சில நடுவர்கள் வேண்டுமென்றே பக்கச்சார்பான தீர்ப்புக்களைக் கொடுத்ததால்வந்த வினை இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தும் இன்றைக்கு  வெளியயே போக இல்லை 😄 கால் இறுதி ஆட்டத்துக்கு செல்கின்றது.
இங்கிலாந்து 2  - 1 சிலோவாக்கியா

இது வரை  ஸ்பெயின் 1 - 1 யோர்ஜியா

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பானியா இரண்டாவது இலக்கை தனதாக்கியுள்ளது.

ஸ்பானியா 2 - யோர்ஜியா 1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பானியா மூன்றாவது மற்றும் நான்காவது இலக்கையும்(77 நி -83நி) தனதாக்கியுள்ளது.

ஸ்பானியா 4 - யோர்ஜியா 1

Link to comment
Share on other sites

போத்துக்கல், சுலோவேலியா போட்டி சுவாரசியமாக நடந்து முடிந்தது. மேலதிக நேரம் கொடுக்கப்பட்டு இறுதியில் பெனால்டி உதை மூலம் முடிவு தீர்மானிக்கப்பட வேண்டி இருந்தது. போத்துக்கல் கோல் காப்பாளர் 3 பெனால்டி உதைகளையும் தடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு செல்கிறார்கள்.
வழமையான நேரத்தில்  சுலோவேனியாவிற்கு எதிராக ஒரு பெனால்டி கிறிஸ்ரியானோ றொனால்டோவால் அடிக்கப்பட  சுலோவேனியாவின் கோல் தடுப்பாளரால் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போத்துக்கல் பிரான்சுடன் ஜூலை 6 ல் விளையாடவுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

மேலதிக நேரம் கொடுக்கப்பட்டு இறுதியில் பெனால்டி உதை மூலம் முடிவு தீர்மானிக்கப்பட வேண்டி இருந்தது. போத்துக்கல் கோல் காப்பாளர் 3 பெனால்டி உதைகளையும் தடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு செல்கிறார்கள்.

ஓம் சிலோவேனியா போர்ச்சுகல்  விளையாட்டு முடிவடைந்த போது   0 - 0, மேலும்  30 நிமிடங்கள் நீடிக்கபட்டும் 0 - 0.
பின்பு பெனால்டியி சர்ந்தர்பம் கொடுக்கபட்டு
போத்துக்கல் 3 - 0 சிலோவேனியா

பிரான்ஸ் 1 - 0 பெல்ஜியம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெனால்டி தவறியதால் மைதானத்தில் கண்ணீர்விட்ட ரொனால்டோ

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,போட்டி முழுவதுமே உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தார் ரொனால்டோ
3 மணி நேரங்களுக்கு முன்னர்

போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதால் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு கால்பந்து உலகில் பேசுபொருளாகி இருக்கிறது.

யூரோ கோப்பை தொடரில் ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியின்போது கூடுதல் நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி மூலம் கோல் அடிக்க முயன்றார். ஆனால் ஸ்லோவேனியா கோல்கீப்பர் அதைத் தடுத்து விட்டார்.

எனினும் இதனால் போர்சுகலின் வெற்றி பாதிக்கப்படவில்லை. ஷூட்அவுட் முறையில் போர்ச்சுகல் அணி யூரோ 2024 இன் காலிறுதிக்கு முன்னேறியது.

இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், ஷூட் அவுட் முறையில் போர்ச்சுகல் வென்றது.

வாட்ஸ்ஆப்

யூரோ 2024 தொடரில் தனது முதல் கோலை அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ரொனால்டோ. ஆனால் இதுவரை அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இந்தப் போட்டியின் ஆட்ட நேரத்தின் கடைசி நேரத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பு ஒன்றை அவர் வீணடித்தார். நேராக பந்தை ஸ்லோவேனியா கோல்கீப்பர் ஒப்லாக்கிடம் அடித்ததால், அவர் அதை எளிதாகத் தடுத்துவிட்டார்.

முன்னதாக போட்டி முழுவதும் தலையால் முட்டி பந்தைக் கடத்தும் அவரது பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பல வாய்ப்புகளை அவர் தவறவிட்டதைப் பார்க்க முடிந்தது.

பெனால்ட்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் வெற்றிபெறாமல் போயிருந்தால், அது ரொனால்டோவுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்திருக்கும்.

வெள்ளிக்கிழமை ஹம்பர்க்கில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் பிரான்ஸை எதிர்கொள்கிறது, அதே சமயம் ஸ்லோவேனியா போட்டியை விட்டு வெளியேறுகிறது.

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோல் அடிக்கத் திணறும் ரொனால்டோ

எப்போதும்போல ரொனால்டோவுக்கும் ரசிகர்களின் பலமான வரவேற்பு யூரோ போட்டியில் இருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு கோல் கூட அடிக்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஸ்லோவேனியாவுடனான போட்டியில் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். தனது உணர்ச்சிகளையும் அவ்வப்போது காட்டிக் கொண்டிருந்தார்.

கைகளை வானத்தை நோக்கி வீசுவதும், விரக்தியில் காற்றில் குத்துவதும், தவறவிட்ட வாய்ப்புகளைக் கண்டு திகைத்து நிற்பதும் ரொனால்டோவின் வழக்கமாக இருந்தது. ஆனால் அவருக்கான வாய்ப்பு வந்தபோது, அவர் அதைத் தவறவிட்டார்.

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

கண்ணீர்விட்ட ரொனால்டோ

கூடுதல் நேரத்தில் போர்சுகலுக்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. ரொனால்டோ அதை கோலாக்குவதற்கு அடித்தார். ஆனால் ஸ்லோவேனியா கோல்கீப்பர் அதை சிறப்பாகத் தடுத்துவிட்டார்.

29 கோல்களை பெனால்டி மூலம் அடித்திருக்கும் ரொனால்டோ, மிக முக்கியமான தருணத்தில் கோல் அடிக்க முடியாததால் திகைத்து நின்றார். கோலடிக்க முடியவில்லை என்பதை அவராலேயே நம்பமுடியவில்லை என்பது போலக் காணப்பட்டார்.

சில நொடிகளில் கூடுதல் நேரத்தின் பாதி முடிந்துவிட்ட விசில் அடித்ததால், ரொனால்டோ கண்ணீர் மல்க அழத் தொடங்கிவிட்டார். சக வீரர் பல்கின்ஹா அவரை ஆறுதல்படுத்தினார்.

ரொனால்டோ அழுவதை பெரிய திரையில் கண்ட அவரது ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தும் பாடலைப் பாடினர்.

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெனால்ட்டி ஷூட் அவுட்டில் வென்ற பிறகு மகிழ்ச்சி

ஆட்ட நேரம் முடிந்த பெனால்ட்டி ஷூட் அவுட் வந்த பிறகு, 3-0 என்ற கணக்கில் போர்ச்சுகல் வென்றது.

முதலில் ஒரு துயரம். பிறகு மகிழ்ச்சி அதுதான் கால்பந்து உங்களுக்குத் தருவது” என்று வெற்றி பெற்ற பிறகு ரொனால்டோ கூறினார்.

இந்த ஆண்டில் பெனால்ட்டியில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாகத் தேவைப்பட்டபோது ஒப்லாக் அதைத் தடுத்துவிட்டார்” என்று கூறினார் அவர்.

யூரோ கோப்பையில் ரொனால்டோ

ரொனால்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
  • இத்தொடரில் கோல் அடிக்காத வீரர்களின் பட்டியலில், 20 முறை கோல் அடிக்க முயற்சி செய்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ரொனால்டோ
  • ரொனால்டோ கடந்த எட்டு யூரோ கோப்பை அல்லது உலகக்கோப்பை போட்டிகளில் கோல் அடிக்காமல் இருந்ததில்லை
  • யூரோ கோப்பை 2024 தொடரின் லீக் சுற்று போட்டிகளில் கோல் அடிக்க தவறியதன் மூலம், இத்தொடரின் லீக் போட்டிகளில் முதல் முறையாக கோலை பதிவு செய்ய தவறியுள்ளார் ரொனால்டோ
Link to comment
Share on other sites

தொடர்ந்து 3 பெனால்டிகளை தடுத்த டியாகோ கோஸ்டா  பற்றி ஒரு வரி கூட பி பி சி எழுதவில்லை. அங்கே நிற்கிறது பி பி சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடதுபக்கம் பெரிய அணிகளை மோதவிடுவதும் வலது பக்கம் சிறிய அணிகளை மோதவிடுவதும் தற்செயலாக நடந்ததா?வலது பக்க அணிகளில் நெதர்லாண்ட் மட்டுமே ஒரு முறை ஐரோப்பிய கிண்ணத்தை வெற்றி பெற்ற அணி. இடது புற அணிகள் பலமுறை உலக க் கிண்ணத்தையும் வெற்றி பெற்ற அணிகள்.May be an image of text

வலது புற அணியில; சுவிவும; ஒஸ;ரியாவும; கடந;த போட;டிகளில; தரமான விளையாட;டை விளையாடியிருக;கின;றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

தொடர்ந்து 3 பெனால்டிகளை தடுத்த டியாகோ கோஸ்டா  பற்றி ஒரு வரி கூட பி பி சி எழுதவில்லை. அங்கே நிற்கிறது பி பி சி.

அப்படித்தான் அங்கால நடந்து முடிந்த கிறக்கற் உலக கோப்பையிலும் அக்சர்பட்லேைப் பற்றியும் ஒன்று இரன்டு யுரியுப்புகளைத் தவிர மற்றவர்கள் வாய் திறக்க வில்லை.நன்றி கெட்டவர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

நன்றி கெட்டவர்கள்.

ஒன்றுமே விளங்கவில்லை போத்துக்கல் கோல் கீப்பர்  Diogo Costa  பெனால்டி 3 கோல்களை தடுத்து போத்துக்கலை காப்பாற்றினார் அதற்க்கு ஏன் மற்றவர்கள் நன்றி சொல்ல வேண்டும் 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5e271aa51d00bccf1b12e0a6021af304.gif

ஐரோப்பிய நேரம் மாலை ஆறு மணிக்கு... 
animiertes-deutschland-fahne-flagge-bildஜேர்மனியும், animiertes-spanien-fahne-flagge-bild-001  ஸ்பெயினும் 
ஸ்ருட்கார்ட் (Stuttgart) விளையாட்டு மைதானத்தில்... 
கால் இறுதி ஆட்டம்  விளையாட இருக்கின்றது.
animiertes-deutschland-fahne-flagge-bild ஜேர்மனி வெற்றி பெற,  முற்கூட்டிய ❤️ வாழ்த்துக்கள். animiertes-luftballon-bild-0001.gif

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் ஒரு கோல்  அடித்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

goal-hockey-goal.gif  animiertes-deutschland-fahne-flagge-bild 

ஜேர்மனி 1 - ஸ்பெயின் 1
88´வது நிமிடத்தில் ஜேர்மனி ஒரு   கோல்  அடித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி 1 - ஸ்பெயின் 2
ஸ்பெயின்... கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஜேர்மனி 1 - ஸ்பெயின் 2
ஸ்பெயின்... கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

இதில் ஜேர்மனி தோல்வியுற்றது மிக மிக கவலையான விடயம் மட்டுமல்ல  பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். அதில் என் காரணம்  என்னவென்றால் ஜேர்மனி சொந்த மண்ணில் விளையாடுகின்றது.அதனால் இந்த நாட்டுமக்கள் ஒரு வித்தியாசமான பெருமைமிக்க உணர்வுடன் நாடு முழுவதும் உற்சாகமாக கார் ஊர்வலங்கள் வருவார்கள்.நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் உற்சாகமாக திரிவர்.வியாபர நிலையங்களும் களைகட்டும்.
ஜேர்மன் கொடி எங்கும் பறக்கும்.நாடே உற்சாகமாக இருக்கும். ஆனால் இப்போது ஜேர்மனி தன் நாட்டில் தோல்வியை சந்தித்து விட்டது. இனி இந்நாட்டு மக்களும் ஏனோ தானோ என்றுதான் திரிவர்.ஊர்மனைகளில் இருந்த கலகலப்பு இல்லாமல் போய் விட்டது.

ஜேர்மனி தோற்றாலும் பரவாயில்லை. இறுதி ஆட்டத்திற்கு வந்து தோற்றிருக்கலாம்.

Bild

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

இதில் ஜேர்மனி தோல்வியுற்றது மிக மிக கவலையான விடயம் மட்டுமல்ல  பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். அதில் என் காரணம்  என்னவென்றால் ஜேர்மனி சொந்த மண்ணில் விளையாடுகின்றது.அதனால் இந்த நாட்டுமக்கள் ஒரு வித்தியாசமான பெருமைமிக்க உணர்வுடன் நாடு முழுவதும் உற்சாகமாக கார் ஊர்வலங்கள் வருவார்கள்.நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் உற்சாகமாக திரிவர்.வியாபர நிலையங்களும் களைகட்டும்.
ஜேர்மன் கொடி எங்கும் பறக்கும்.நாடே உற்சாகமாக இருக்கும். ஆனால் இப்போது ஜேர்மனி தன் நாட்டில் தோல்வியை சந்தித்து விட்டது. இனி இந்நாட்டு மக்களும் ஏனோ தானோ என்றுதான் திரிவர்.ஊர்மனைகளில் இருந்த கலகலப்பு இல்லாமல் போய் விட்டது.

ஜேர்மனி தோற்றாலும் பரவாயில்லை. இறுதி ஆட்டத்திற்கு வந்து தோற்றிருக்கலாம்.

Bild

10வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ ஜேர்ம‌ன் அணி இரும்பு அணி

வெற்றி மேல் வெற்றி

 

2014உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு அந்த‌ அணிக்கு என்ன‌ ஆச்சு என்று தெரிய‌ வில்லை தொட‌ர் தோல்விக‌ளை ச‌ந்திக்கின‌ம்....................

ப‌ழைய‌ ஜேர்ம‌ன் அணியா 2026 உல‌க‌ கோப்பையில் பார்க‌லாம் என்று ந‌ம்புகிறேன் தாத்தா...............................

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

அரை இறுதிக்கு இங்கிலாந்து சுவிசை  5-3 பெனால்டி உதை மூலம் வென்று  சுவிசை வீட்டுக்கு அனுப்பி உள்ளது. அடுத்த துருக்கி 1 - நெதர்லாந்து 0  45 நிமிடம் வரை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதிப் போட்டி
பிரானஸ் எதிர் ஸபெயின்
இங்கிலாந்து எதிர் கொலண்ட்(நெதர்லாண்ட்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2024 at 22:15, வீரப் பையன்26 said:

0வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ ஜேர்ம‌ன் அணி இரும்பு அணி

ஜேர்மன் அணியை முற்றாக மாற்ற வேண்டும். பழையை கிழடுகளை வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக றூடிக்கா  பின்களத்தடுப்பாளர் அந்த வேலையைச் செய்யாமல் அடிக்கடி முன:னுக்குவந்து பின்களத்தடுப்பை உடைக்கிறார்.தலையால் அடிக்கக் கூடியவர் என்றாலும் கோணர் கிக்குன்கு முன்னே வந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.எப்போதும் முன்னே வந்தால் கின்களத்தை யார் பார்ப்பது.அடுத்தது ரொனி குறூஸ்  வயதாகி விட்டது . இருவரும் றியால்மட்றிட்க:க விளையாடுவதால் அணியில் சேர்க்க முடியாது. ஜெர்மன் அணி நட்சத்திர வுpரர்களைக் கொண்ட அணியாக எப்போதும் இருந்ததில்லை. அது ஒரு 11 பேர் கொண்ட சிறந்த அணியாகவே முன்பு இருந்தது. அதனால் வெற்றிகளைப் பெற்றார்கள்.முல்லர்>கிம்மின்ஸ் எல்லாம் வேஸ்ட்

On 5/7/2024 at 21:39, குமாரசாமி said:

இதில் ஜேர்மனி தோல்வியுற்றது மிக மிக கவலையான விடயம் மட்டுமல்ல  பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். அதில் என் காரணம்  என்னவென்றால் ஜேர்மனி சொந்த மண்ணில் விளையாடுகின்றது.அதனால் இந்த நாட்டுமக்கள் ஒரு வித்தியாசமான பெருமைமிக்க உணர்வுடன் நாடு முழுவதும் உற்சாகமாக கார் ஊர்வலங்கள் வருவார்கள்.நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் உற்சாகமாக திரிவர்.வியாபர நிலையங்களும் களைகட்டும்.
ஜேர்மன் கொடி எங்கும் பறக்கும்.நாடே உற்சாகமாக இருக்கும். ஆனால் இப்போது ஜேர்மனி தன் நாட்டில் தோல்வியை சந்தித்து விட்டது. இனி இந்நாட்டு மக்களும் ஏனோ தானோ என்றுதான் திரிவர்.ஊர்மனைகளில் இருந்த கலகலப்பு இல்லாமல் போய் விட்டது.

ஜேர்மனி தோற்றாலும் பரவாயில்லை. இறுதி ஆட்டத்திற்கு வந்து தோற்றிருக்கலாம்.

Bild

இ.ந்த பெனால்ட்டி ஏன் கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஜேர்மனி விளையாட்டு  படமோசம். பனாலட்டி உதை மூலம் வெல்வது அதிஸ்டம் திறமை என்று சொல்ல முடியாது. ஜேர்மன் அணியை முற்றாக மாற்றி அமைக்க வேண்டும்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி  ஐரோப்பிய உதைபந்தாட்ட நிகழ்விலிருந்து வெளியே சென்றதில் மட்டற்ற மகிழ்சி.👍🏼
விளையாட்டில் அரசியல் இல்லை என்பவர்களுக்கு நல்ல செருப்படி.


Wolfsgruß«: Was steckt hinter der nationalistischen Geste? - DER SPIEGEL

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வாழ்த்திய ஈழப்பிரியன் அண்ணா, ஏராளன்,nunavilan,சிறி, நிலாமதி, பெருமாள், புங்கையூரன், suvy  அவர்களுக்கு எனது நன்றிகள்.  கடந்த பத்து நாட்களாக அம்மா மற்றும் சகோதரங்களுடன் மருமகனின் கல்யாண வீட்டுக்கு கனடா வந்திருப்பதால் யாழ் பக்கம் வந்து பார்க்க பிந்தி விட்டது.  
    • த‌லைவ‌ரும் அவ‌ரின் த‌ம்பி மார்க‌ளும் சுட்டெரிக்கும் வெய்யில்ல‌ நின்று க‌டும் போர் செய்ய‌ அதை சாட்டி தான் புல‌ம்பெய‌ர் நாட்டில் 7ல‌ச்ச‌ ம‌க்க‌ளுக்கு மேல் எங்க‌ட‌ நாட்டில் பிர‌ச்ச‌னை என்று புல‌ம்பெய‌ர் நாட்டில் சொகுசு வாழ்க்கை வாழுகின‌ம்   உங்க‌ளுக்கு அடைக்க‌ல‌ம் த‌ந்த‌ நாடு ஆர‌ம்ப‌த்தில் கேட்க்க‌ வில்லையா எத‌ற்காக‌ எங்க‌ள் நாட்டுக்கு வ‌ந்தீங்க‌ள் என்று.......................த‌லைவ‌ரும் போராளிக‌ளும் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சை எதிர்த்து போர் செய்ய‌ அதை சாட்டி புல‌ம்பெய‌ர் நாட்டில் ப‌ல‌ன் அடைந்த‌ ந‌ப‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருத‌ர்......................   பிர‌பாக‌ர‌னால் ப‌ல‌ன் அடைந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நிறைய‌ இருக்கு  எப்ப‌டி தான் எழுதினாலும் அது உங்க‌ளுக்கு புரியாது.......................   இப்ப‌ வெளி நாட்டுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளை ஒரு நாடும் அவ‌ர்க‌ளுக்கு த‌ங்க‌ட‌ நாடுக‌ளில் த‌ங்கும் வ‌ச‌தி கொடுக்கின‌ம் இல்லை உட‌ன‌ நாட்டுக்கு திரும்பி போங்கோ என்று தான் சொல்லுகின‌ம்......................இப்ப‌ தெரியுதா பிர‌பாக‌ர‌னால் ப‌ல‌ன் அடைஞ்ச‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேர் என்று😉................................
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோதி முதன்முறையாக ரஷ்யா சென்றுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் அகமது பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி இந்திக்காக லண்டனிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வெள்ளி அன்று, ஹங்கேரி நாட்டுப் பிரதமர் விக்டர் ஆர்பான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்தார். ஐரோப்பியத் தலைவர்கள் பலர் இந்த அதிகாரபூர்வச் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட யுக்ரேனுக்கு ஆயுதங்கள் உட்படப் பல உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கிவரும் சூழலில், ஐரோப்பியத் தலைவர்கள் எவரும் ரஷ்யாவுக்குச் செல்வது இதர ஐரோப்பிய நாடுகளுக்குச் செய்யப்படும் துரோகமாகவே கருதப்படுகிறது. ஐரோப்பாவிலேயே மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் நாடாக ஹங்கேரி கருதப்படுகிறது. மேலும் விக்டர் ஆர்பானைச் சர்வாதிகாரி என பலரும் வர்ணிக்கின்றனர். இந்தச் சூழலில், ஜூலை 8, 9 தேதிகளில் ரஷ்யாவுக்கு இந்தியப் பிரதமர் மோதி மேற்கொள்ளும் பயணத்தை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு பார்க்கின்றன? இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்த நாடும் வெளிப்படையாகக் கருத்து கூறவில்லை என்றபோதும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி வியாழக்கிழமை அன்று, ரஷ்யாவைப் போருக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சியில் இந்தியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார். யுக்ரேன் மீது படையெடுத்து, இன்று ஐரோப்பாவில் பதட்டமான சூழலை உருவாக்கிய நபராகக் கருதப்படும் புதினுடன் மோதி நிற்கும் புகைப்படங்கள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தாது என்பது மட்டும் நிச்சயம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் பயணமா? 22-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டை நடத்துவதற்கான புதினின் அழைப்பை ஏற்று மோதி ரஷ்யாவுக்குச் செல்கிறார் என்கிறது அதிகாரபூர்வ அறிவிப்பு. 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக இரு நாட்டு உறவு ரீதியான சந்திப்புகள் ஏதும் நடைபெறவில்லை. இந்தச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் குறித்து புதன்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய அரசு, இரு நாட்டுத் தலைவர்களும், 'பாரம்பரியமாக நட்பு பாராட்டும் ரஷ்ய-இந்திய நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள்' பற்றி விவாதிப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இந்தியா இந்தச் சந்திப்பு தொடர்பாக அதிகமான தகவல்களை வெளியிடவில்லை எனினும் இரு நாடுகளுக்கிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று நம்பப்படுகிறது. இந்தச் சந்திப்பு மேற்கத்திய நாடுகளைப் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இரு நாடுகளின் நட்பைத் தாண்டி இந்தச் சந்திப்பில் ஏதேனும் இருக்கிறதா? தெற்காசிய அரசியல் ஆய்வுகளில் சிறந்த நிபுணராகக் கருதப்படும் கிங்க்ஸ் கல்லூரியின் பேராசிரியர் க்றிஸ்டோஃபர் ஜாஃபர்லாட் மோதியின் மாஸ்கோ பயணம் புவிசார் அரசியல் பரிமாணங்களைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். "ஆயுதங்களுக்காக ரஷ்யாவைச் சார்ந்திருப்பது மட்டுமின்றி அனைத்து தரப்பு நாடுகளுடன் நட்பைப் பேணுவதில் இந்தியா ஆர்வம் காட்டுவதால் ரஷ்யாவுடனான தொடர்பை இந்தியா தொடர விரும்புகிறது," என்று குறிப்பிடுகிறார் ஜாஃபர்லாட்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"இந்தியா அனைத்து நாடுகளுடன் மேம்பட்ட உறவை தொடர விரும்புகிறது" மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு சீனாவுடன் ரஷ்யா காட்டும் நெருக்கமும் இந்தப் பயணத்திற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது. "மாஸ்கோவுடனான உறவை இந்தியா நல்ல முறையில் வைத்துக் கொள்ளும் பட்சத்தில், சீனாவுடனான ரஷ்யாவின் நல்லுறவுக்குச் சவால் விடலாம்," என்றும் அவர் மேற்கோள்காட்டினார். மோதி கடைசியாக மாஸ்கோவுக்கு 2015-ஆம் ஆண்டு தான் பயணித்தார். பிறகு 2019-இல் ரஷ்யா சென்ற அவர் விளாதிவோஸ்தோக்கில் நடைபெற்ற பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்றார். புதின் டெல்லிக்கு 2021-ஆம் ஆண்டு வருகை புரிந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற எஸ்.சி.ஒ. மாநாட்டில் மோதியும், புதினும் சந்தித்துக் கொண்டனர். அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய உறவு நாடுகளும் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. மேலும், உலகளவில் ரஷ்யாவைத் தனிமைப்படுத்த இந்நாடுகள் முயற்சி செய்து வருகின்ற சூழலில், மோதி மாஸ்கோவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஏற்கனவே இந்நாடுகள் ரஷ்யாவுடனான அதிகாரபூர்வச் சந்திப்புகளைக் கணிசமாக குறைத்துள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேற்கத்திய நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிரான போக்கு நிலவி வருகின்ற சூழலில் மோதியின் இந்த பயணம் பரவவிவாதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்குக் கோபமூட்டுமா? மோதியின் இந்தப் பயணத்தை இந்தியா, 'தன்னிச்சையான, தேசிய நலன்களைக் கருத்தில் கொண்ட வெளியுறவுக் கொள்கை அடிப்படையிலான சந்திப்பு' என வர்ணிக்கிறது. ஆனால், ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிரான போக்கு நிலவி வருகின்ற சூழலில், மோதியின் மாஸ்கோ பயணம், இந்தியாவின் கூட்டாளியான அமெரிக்காவுக்குக் கோபத்தை ஏற்படுத்துமா? அமெரிக்காவின் பால்டிமோரில் அமைந்திருக்கும் 'தி ஜான்ஸ் ஹாப்கின்ஸ்' பல்கலைக்கழகத்தில் அப்ளைட் எக்கானமிக்ஸ் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஸ்டீவ் எச். ஹாங்கே, இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு வரலாற்று ரீதியானது என்று குறிப்பிடுகிறார். ஸ்டீவ், அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகனின் பொருளாதார ஆலோசகர் குழுவில் பணியாற்றியவர். "சோவியத் காலத்தில் இருந்தே நல்ல நட்புடன் விளங்கும் ரஷ்யா உட்பட, இந்தியா அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவைத் தொடர விரும்புகிறது என்பது மோதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் வெளியிட்ட அறிக்கையில் வெளிச்சமாகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இருநாட்டு உறவும் தற்போது உச்சத்தில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர் இந்தியா-ரஷ்யா உறவின் வரலாறு 1960களில் இருந்து 1980கள் வரை இந்தியாவில் வளர்ந்த யாரும் சோவியத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்திருக்க முடியாது. இந்தியாவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி ஆலைகளை சோவியத் தான் துவங்கியது. இந்தியாவின் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு உதவியது சோவியத் ஒன்றியம். இந்தியா நெருக்கடிகளைச் சந்தித்த காலத்தில் சோவியத் ஒன்றியம் இந்தியாவுடன் துணை நின்றது. 1965-ஆம் ஆண்டு, தாஷ்கெண்டில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு மத்தியஸ்தராகச் செயல்பட்டது சோவியத் ஒன்றியம். நீங்கள் ரஷ்யாவுக்குச் சென்றால், அங்கு பாலிவுட் நடிகர் ராஜ் கபூரைப் பற்றி மக்கள் பேசுவதைக் கேட்க முடியும். 2000-களில் புதின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட போது, இரு நாட்டினரும், ‘டிக்ளரஷன் ஆஃப் ஸ்ட்ராடெஜிக் பார்ட்னர்ஷிப்’ என்ற பெயரின் கீழ் பாதுகாப்பு, விண்வெளி, மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒப்பந்தமிட்டனர். S-400 ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம், எரிசக்தி தொடர்பான திட்டங்கள் இவ்விரு நாட்டின் உறவுகளுக்கானச் சமீபத்திய எடுத்துக்காட்டுகள். மாறிவரும் உலக அரசியலுக்கு மத்தியில் இவ்விரு நாடுகளும் தங்களின் நட்பை ஆழப்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகளையே இவை சுட்டிக்காட்டுகின்றன. வலதுசாரிக் கருத்தியலாளரான முனைவர் சுவ்ரோகமல் தத்தா இது குறித்துப் பேசுகையில், இரு நாட்டு உறவும் தற்போது உச்சத்தில் உள்ளது என்கிறார். மோதியின் பயணம், மாறிவரும் புவிசார் அரசியல் தளத்தில் மாற்றங்களையும், புதிய உறவுகளையும் கொண்டுவரும் என்கிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் மீதான போரை இந்தியா கண்டிக்கவில்லை என்பது குறித்தும் மேற்கத்திய நாடுகள் கவலை கொண்டுள்ளன மேற்கத்திய நாடுகளுக்கு அதிருப்தியா? யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் சட்டத்திற்குப் புறம்பான 'சட்டத்திற்குப் புறம்பான போரை' எதிர்த்து வலுவான ஜனநாயக நாடான இந்தியா கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை என்று மேற்கு உலகினர் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் 'நடுநிலைத்தன்மை' ரஷ்யாவின் 'சார்பு நிலையாகப்' பலமுறை புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், ரஷ்யா குறித்த விவகாரங்களில் மேற்கத்திய ஊடகங்கள் நடுநிலைத் தன்மையை இழந்துவிடுவதாக இந்தியா கருகிறது. "எந்தச் சூழலிலும் யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கும் என்ற மேற்கத்திய நாடுகளின் எதிர்பார்ப்பு நிறைவேறப் போவதில்லை. இந்தியாவுக்கு அதன் தேச நலன் மட்டுமே முக்கியமானது," என்கிறார் முனைவர் தத்தா. இருப்பினும், இந்தியா-ரஷ்யா உறவுகள் குறித்தும், யுக்ரேன் மீதான போரை இந்தியா கண்டிக்கவில்லை என்பது குறித்தும் மேற்கத்திய நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்தியாவின் இந்த நிலைப்பாடு, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரஷ்யாவை ஓரங்கட்டும் முயற்சிகளைச் சிக்கலாக்குவதாகக் கருதுகின்றனர். இந்தியா ரஷ்யாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டுவது, வர்த்தகம் மற்றும் ராணுவ ரீதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, ரஷ்யாவின் யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர வற்புறுத்தும் வகையில் சர்வதேச அளவில் அழுத்தம் தருவதற்கான பிரசாரங்களை குறைத்து மதிப்பிடுவது, போன்றவை மேற்கத்திய நாடுகளைக் கவலையடைய வைத்துள்ளது. இந்தியா ரஷ்யாவில் இருந்து அதிக அளவு எரிசக்தியை இறக்குமதி செய்கிறது. ஆனால் மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை இந்தியா மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இது ஒரு சிக்கலான விவகாரம் என்பது இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும். மூலோபய நலன் மற்றும் எரிசக்திப் பாதுகாப்புக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்கத் தன்னுடைய திறனை நம்பியுள்ள அதே வேளையில், இந்தியா பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறது. 2022-ஆம் ஆண்டு யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கிய பின், இந்தியா ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்த கச்சாப்பொருட்களின் மதிப்பானது 13% அதிகரித்துள்ளது என்று, கச்சாப்பொருட்கள் இறக்குமதி தொடர்பாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் CREA (Centre for Research on Energy and Clean Air) வெளியிட்ட மதிப்பாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக 2023-2024-ஆம் ஆண்டுகளில் இந்தியா ரஷ்யா இடையேயான வர்த்தகம் சுமார் 5.3 லட்சம் கோடி இந்திய ரூபாயாக (64 பில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரித்துள்ளது. ஆனால், இதில் இந்தியாவின் பங்கானது வெறும் 33,400 கோடி இந்திய ரூபாய் (4 பில்லியன் டாலர்கள்) தான். யுக்ரேன் மீதான போருக்குப் பின், ரஷ்யா தற்போது பணக்கார நாடாக மாறியுள்ளது. அந்நாட்டின் கச்சாப்பொருட்களை இறக்குமதி செய்த சீனாவும் இந்தியாவும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் பரவலாகச் செய்தி வெளியிட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் நிலைமை மாறும் என்கிறார் நிபுணர் ஒருவர். பொருளாதாரத் தடை பயனளிக்கிறதா? யுக்ரேன் மீதான போருக்குத் தேவையான நிதியைத் தடுத்து நிறுத்தும் வகையில் மேற்கத்திய நாடுகள் விதித்தப் பொருளாதாரத் தடை பயனளிக்கவில்லையா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாஷிங்டனில் நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் இதற்கு வலுவான மறுப்பைப் பதிவு செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பொருளாதாரத் தடை இருந்த போதும், இந்தியாவைக் காட்டிலும், மேற்கத்திய நாடுகள் தான் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளன என்று குறிப்பிட்டார். "நீங்கள் ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதியைப் பற்றிப் பேச வேண்டுமெனில், முதலில் ஐரோப்பிய நாடுகளைக் கவனியுங்கள். எரிசக்தி பாதுகாப்பின் தேவையைக் கருதி நாங்கள் எரிசக்தி இறக்குமதி செய்கிறோம். ஆனால், ஐரோப்பிய நாடுகள் ஒருநாள் மதியம் இறக்குமதி செய்யும் கச்சாப் பொருட்களின் மதிப்பு, இந்திய இறக்குமதிகளின் ஒரு மாத இறக்குமதி மதிப்பைவிட அதிகம். இதனை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார். பொருளாதாரத் தடை பயனளிக்காது என்று கருதும் எண்ணற்ற அமெரிக்க நிபுணர்களில் பேராசிரியர் ஸ்டீவும் ஒருவர். "பொருளாதாரத் தடை, வர்த்தகத்தில் இடையூறு போன்றவற்றை நான் எதிர்த்தேன். கொள்கை மற்றும் நடைமுறையில் எந்த இலக்கைக் கருத்தில் கொண்டு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதோ, அந்த இலக்கு அடையப்படவில்லை. எனவே, இந்தியாவின் கருத்து தான் என்னுடைய கருத்து," ,” என்கிறார். பேராசிரியர் ஜாஃபர்லாட் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார். "மேற்கிலுள்ள பலரும் வேறுபட்ட கருத்தைத் தெரிவிக்கின்றனர். பொருளாதாரத் தடைகள் செயல்படாததற்குக் காரணம், அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான். குறிப்பாக, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவியாக இருந்தன. இந்த நடைமுறை சர்ச்சைக்குரிய ஒன்றா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்," என்கிறார். தற்போது சாத்தியமானதாகத் தோன்றும் ஒரு அரசியல் நிகழ்வு டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராவது. அது நடந்தால் என்ன நடக்கும்? ஃப்ரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்தியாவை எச்சரிக்கிறார். "அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்துமே மாறும். யுக்ரேன் மீதான ரஷ்யப் போர் முதல் அனைத்தில் இருந்தும் புதின் தப்பித்துவிடுவார். ஆனால், இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்? இமயமலை பிராந்திய ஒருமைப்பாட்டு விவகாரத்தில், இந்தியாவுக்குப் பாதகமான முடிவை சீனா எடுக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.   புதினின் கீழ் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாஸ்கோவுக்கு மோதியின் வருகை என்பது புதினின் காதுகளுக்கு இசையாக தான் இருக்கும். 2014-ஆம் ஆண்டு க்ரைமியாவைத் தன்னோடு இணைத்துக்கொண்டது, யுக்ரேன் மீது போர் தொடுத்தது, போன்ற நடவடிக்கைகளால் சர்வதேச அளவில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளால், ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பொருளாதாரத் தடை மற்றும் அரசியல்சார் பின்னடைவுகளை ஏற்படுத்த வகை செய்தது. ஆனால் சீனா, இந்தியா, மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை எப்போதும் போல் வலுவாகப் பேணி வந்தது ரஷ்யா. இது மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளின் தாக்கங்களை குறைக்க உதவியது. மோதி உள்ளிட்ட தலைவர்கள் ரஷ்யாவின் தலைநகருக்குச் செல்வது ரஷ்யா, அல்லது புதின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான சமிக்ஞைகள் இல்லை என்கிறார் பேராசிரியர் ஸ்டீவ். "மோதியும் புதினும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது நல்லது. அரசியல் உறவுகள் இப்படித்தான் நடைபெறும்," என்று அவர் கூறினார் பேராசிரியர் ஜாஃபர்லாட், புதின் சர்வாதிகார அரசுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். "சர்வாதிகார ஆட்சியாளர்களிடம் இருந்து ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை. மாஸ்கோ, ஆப்பிரிக்க சர்வாதிகார நாடுகள், சீனா, இரான் போன்ற நாடுகளுடன் நெருங்கிய உறவில் நீடிப்பது இதற்கு ஒரு உதாரணம். ஹங்கேரி மட்டும் தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து மாஸ்கோவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நாடு. அந்த ஒன்றியத்தில் சுதந்திரமற்ற நாடு அது. ஆனால் இந்தியா?" என்றும் கேள்வி எழுப்பினார் அவர். "ஜனநாயகத்தை நிராகரிப்பது போன்ற செயல்பாடுகளில் ஒருமித்த தொடர்புகளைக் கொண்டிருப்பதால் கூட இந்தியா ரஷ்யாவுடனான உறவை நீட்டிக்கலாம். மேலும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான உலகத்தின் தெற்கிலிருக்கும் நாடுகளின் தலைவராகவும், அதன் ஆதிக்கத்தை நிரூபிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சியாகவும் இது இருக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா, ஹங்கேரி, சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தகளை ஏற்படுத்திக் கொள்வது அமெரிக்கா விதித்த பொருளாதார ஒப்பந்தம் தோல்வி அடைந்ததற்கு காரணம் என்று பலரும் நம்புகின்றனர். மேலும் இந்நாடுகளின் ஒத்துழைப்பு யுக்ரேனில் போரை நீட்டிப்பதோடு, உலக அதிகார மட்டங்களை மாற்றியமைக்கிறது. மோதியின் ரஷ்யப் பயணம் புதினுக்குப் பெருமகிழ்ச்சியாகத்தான் இருக்கும். https://www.bbc.com/tamil/articles/c10lm1me562o
    • பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி - எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் முட்டுக்கட்டை நிலை 08 JUL, 2024 | 02:57 PM   பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றிபெற்றுள்ள போதிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை தொடர்ந்து அங்கு அரசியல் முட்டுக்கட்டை நிலை உருவாகியுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரி கூட்டணிக்கு 182 ஆசனங்கள் கிடைத்துள்ளன , ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சிக்கு 163 ஆசனங்கள் கிடைத்துள்ள அதேவேளை இம்முறை அதிகாரத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட தீவிரவலதுசாரி கட்சியான ஆர்எல்லிற்கு 143 ஆசனங்களே கிடைத்துள்ளன. முதல் சுற்று தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.எனினும் அவர்கள் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற அச்சம் காரணமாக இடம்பெற்ற மூலோபாயரீதியிலான வாக்களிப்பின் காரணமாக அவர்கள் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இடதுசாரிகள் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள போதிலும் அவர்களிற்கு பெரும்பான்மை கிடைக்காததன் காரணமாக பிரான்ஸ் தனது எதிர்கால அரசாங்கம் தொடர்பில் நிச்சயமற்ற நிலையை  எதிர்கொள்கின்றது. இதேவேளை இடதுசாரிகளின் வெற்றியை அதன்  ஆதரவாளர்கள் கொண்டாடிவரும் அதேவேளை தீவிரவலதுசாரி கட்சியின் ஆதரவாளர்கள் ஏமாற்றம் வெளியிட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/187964
    • மிகவும் தந்திரமான முறையில் வெளியேற்றப்பட்டிருக்கும் வைத்தியர் அர்ச்சுனா.அடுத்து வரும் நியமனக் கடித்தை வாங்குவாரா...விடுவாரா ..........?  வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.......🖐️🖐️  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.