Jump to content

சம்பந்தர் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image00010-2.jpeg?resize=750,375

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடன் கதைத்து ஏமாறுவதற்குள் சம்பந்தன் இறந்து விட்டார் : அரியநேத்திரன்

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவினை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

 

மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் ஆத்ம சாந்தி வேண்டி, இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார கிளை தலைவர் செயலாளர், பொருளாளர், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2024/1390804

Link to comment
Share on other sites

  • Replies 256
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

நிழலி

சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

ஈழப்பிரியன்

கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழன்பன் said:

கடைசியாக இருந்த தமிழரசு கட்சியை பிளந்தததை தவிர இந்த திருவாளர் சாதித்தது என்ன? சும்மா வெறும் கதை விடக்கூடாது. புலிகளை இங்க சொல்வதற்கு என்ன முகாந்திரம் .

ஐயா , சம்பந்தர் அரசியல் செய்தாரா ? அட , அந்தாள் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் புது உடுப்பு போட்டதுதான் மிச்சம் . இது அரசியலா ? அட போங்க உங்க பகிடிக்கு அளவேயில்லை .

சம்பந்தன் எங்கே பிரித்தார்? தமிழ் கூட்டமைப்பின் ஒரேயொரு நிரந்தர முகமாக இருந்தார். யார் பிரிந்து போனார்கள் என்று நியூசில் வாசிக்காமலா இங்கே எங்களுக்கு பாடமெடுக்கிறீர்கள்😂

வாகன இறக்குமதிப்  பெர்மிற் விற்பனை, அரச வேலைக்கு கையூட்டு, இடைத்தங்கல் முகாமில் அடை பட்ட தமிழர்களை வெளியே எடுக்க கையூட்டு, இரகசிய கப்பம் என்று குஜாலாக இருந்த கூட்டமைப்பின் முன்னாள் ஆயுத தாரிகளான பா. உக்கள் சம்பந்தனின் அரசியலில் இதை இழக்க விரும்பாமல் பிரிந்தார்கள். வன்முறை அரசியல் சாரா சுமந்திரன் போன்றோர் இணைந்தார்கள்.

இதெல்லாம் உங்களுக்கு கூட்டமைப்பின் பிரிப்பாக தெரிகிறது, உங்கள் பார்வை அப்படி. எனக்கு இந்த முன்னாள் ஆயுத தாரிகளின் விலகலால் நல்ல திசையில் கூட்டமைப்பு நகர்வதாகத் தெரிகிறது.   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2024 at 17:18, island said:

சிறுவர் போராளிகளாக இயக்கத்தில் இணைந்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் அரசியலை கற்று கொடுக்காது போக்கிலியாக வளர்ததது யார் குற்றம்?  அரசியலை கற்று கொடுத்திருந்தால் அவர்கள் சம்பந்தரை விட சிறந்த அரசியலை செய்திருக்கலாம். 

எப்படி, உங்கட நானாமார் செய்யிற அரசியல் மாதிரியோ! அதுக்கேன் சொல்லிக்கொடுப்பான்? கும்பிடுபோடத்தெரிந்தால் மாத்திரம் போதுமே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இவை எல்லாவற்றிக்கும் சம்பந்தன்  பதில் சொல்லியிருக்க வேண்டும்.2009 க்கு முன்னரும் பின்னரும் சம்பந்தன் அரசியிலில் முதன்மையானவராகவே இருந்துள்ளார்.

 

இவரை உங்களுக்கு தெரியுமா?

நான் அறிந்தவரை ஆயுதங்கள் கடைசியாக மெளனிக்கப்பட முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் தலைமை இவரையே தமது பிரதிநிதியாக நியமனம் கொடுத்தார்கள். சம்பந்தர் இங்கு வெளி ஆள். அமைப்பினுள் உள்வாங்கப்பட்ட ஒருவர் அல்ல.  

 

LTTE appoints Pathmanathan as head of international relations

[TamilNet, Friday, 30 January 2009, 23:51 GMT]
The leadership of the Liberation Tigers of Tamileelam (LTTE) has recently named Selvarasa Pathmanathan, a high profile representative of the movement, as the Head of a newly established Department of International Relations, sources close to the LTTE said on Saturday. 

Mr. Pathmanathan will be representing the movement in any future peace initiatives and will be the primary point of contact for engaging with the international community, according to a letter sent to the various international actors by the LTTE's Department of International Relations. 

Pathmanathan will be working abroad with required mandate from the LTTE leadership, according to the letter.

LTTE's Poltiical Head B. Nadesan, when contacted by TamilNet, confirmed that Mr. Pathmanathan has already begun corresponding with international actors.

 

https://tamilnet.com/art.html?catid=13&artid=28224

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

இவரை உங்களுக்கு தெரியுமா?

உளமார தெரிந்த படியால் தான் இவரை நினைத்தாலே மூக்கின் மேல் கோபம் கோபமாக வருகின்றது.

இவர் நலமாக உயிருடன் இருக்கும் போதே சம்பந்தனை வாய்க்கு வந்தபடி யாழ்களத்தில் திட்டியிருக்கின்றேன். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

வாய்க்கு வந்தபடி யாழ்களத்தில் திட்டியிருக்கின்றேன். :cool:

நீங்கள் திட்டியது பலித்து விட்டது”   அதனால் தான்   இறந்துபோனார்.    🤣🤣🤣.  என்னையும்   ஒருக்கால். திட்டுங்கள்.  🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

காயம்பட்ட பொது மக்களை ஏற்ற கப்பல் அனுப்பியது ICRC யும், MSF உம். கப்பல் அனுப்ப வேண்டி வந்தததன் காரணம்,

ஆஹா...... ரொம்பவே வக்காலத்து வாங்குகிறீர்கள். காயம் பட்ட மக்களுக்கு மருந்து இல்லை, மக்கள் இறக்கின்றனர் மரத்தின்  கீழே சிகிச்சை அளிக்கிறோம் என பிரதம வைத்தியர் வேண்டுகோள் வைத்தபோது இவர்கள் ஏன் வரவில்லை? அனுமதிக்கப்படவில்லை? இவர்கள்  எங்கிருந்து  கோரிக்கை  வைத்தார்களோ   அங்கு மறுநாள் குண்டுபோட்டு காயம்பட்டவர்களை கொல்ல முடிந்தது எப்படி? அப்போ இவர்களெல்லாம் எங்கே போயிருந்தார்கள்? சாட்சிகளில்லாமல் தாம் அழிக்கப்படப்போகிறோம் என்பதை உணர்ந்த மக்கள் தங்களை விட்டுப்போகவேண்டாமென  கதறிய போது ஏன் வெளியேறினார்கள்? யார் வற்புறுத்தலின் பேரில் வெளியேறினார்கள்? வெளியேற்றப்பட்டவர்களால் எப்படி இத்தனை அழிவுகளின் பின் யார், இவர்களை ஏன் அனுமதித்தார்கள் என்பதை யோசித்தால் இவர்கள் யாருக்காக எவ்வாறு   செயற்பட்டார்கள் என்பது புரியும். தங்கள் பிள்ளைகளை உயிரோடு  பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என அள்ளிக்கொடுத்து விட்டு கண்ணீரோடு பல ஆண்டுகளாக தெருத்தெருவாக  தேடி அலைகிறார்களே, அவர்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாததும் ஏன்? இவர்களை ஒருமுறையாவது சம்பந்தர்  சந்தித்து ஆறுதல்  சொன்னாரா? சொல்லுங்க சார்!

16 hours ago, Kandiah57 said:

இலங்கையில் யாராலும் எதுவும் செய்ய முடியாது

யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின்  கீழ் மக்களுக்காக அரசியல்  செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல்  யாசகர்கள்  ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும். 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, satan said:

யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின்  கீழ் மக்களுக்காக அரசியல்  செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல்  யாசகர்கள்  ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும். 

 மேலே சிவப்பு எழுத்தில் கூறப்பட்டவை, இங்கு யாழில் விடுமுறைக்கு வன்னிக்கு போய் சும்மா மதவடியில் குந்தியிருப்போருடன் அரட்டை அடித்துவிட்டுவந்து அதுதான் முள்ளிவாய்க்காலில் இருந்த லட்சக்கணக்கான மக்களின் கருத்து என அம்புலிமாமா கதைசொல்லும் அப்பிரண்டிசுகளை இல்லைத்தானே!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின்  கீழ் மக்களுக்காக அரசியல்  செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல்  யாசகர்கள்  ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும். 

1977 இல்.  நீங்கள் குறிப்பிடும். நிலைமை இருந்தது    அமிர்.  பலம் வாய்ந்த. எதிர்கட்சி தலைவர்    பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அனேகமாக சட்டத்தரணிகள்  

ஜே  ஆரே சொன்னார்  கூட்டணியின்.  பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகமையை பார்க்க பெறமையாக இருப்பதாக    சுதந்திர கட்சி  பலமிழந்த நிலையிலிருந்தது  ... என்ன செய்தார்கள??? 

என்ன செய்தார்கள்.  ???  தமிழ் பகுதியில் உள்ள  முழு பாராளுமன்ற உறுப்பினர்களையும்.  தமிழர்கள்  ஒரணியில். நின்று பெற்றுக் கொண்டாலும்     எதுவும் செய்ய முடியாது   இது தான் யதார்த்தம்   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Eppothum Thamizhan said:

 

 மேலே சிவப்பு எழுத்தில் கூறப்பட்டவை, இங்கு யாழில் விடுமுறைக்கு வன்னிக்கு போய் சும்மா மதவடியில் குந்தியிருப்போருடன் அரட்டை அடித்துவிட்டுவந்து அதுதான் முள்ளிவாய்க்காலில் இருந்த லட்சக்கணக்கான மக்களின் கருத்து என அம்புலிமாமா கதைசொல்லும் அப்பிரண்டிசுகளை இல்லைத்தானே!

கடந்த காலங்களில் தேர்தல் நெருங்கும் வேளைகளில் மஹிந்த மாத்தையா சொன்னவை, "நீங்கள் போரில் இழந்த உயிர்களைத்தவிர மற்ற எல்லாவற்றயும் திருப்பி தந்துவிடுகிறேன்." என்று உறுதி கூறினார். மக்கள் ஆதரித்தனரா அவரை? தேர்தல் முடிந்த பின்னர் சொன்னார், வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்தினேன், காப்பற்தெருக்களை அமைத்தேன், அதை செய்தேன், இதை செய்தேன் ஆனால் தமிழ் மக்களின் மனதை என்னால் வெல்ல முடியவில்லை, காரணம் அவர்களின் தலைவனை நான் அழித்தேன்." என்பதே. மாவீரர் மாதம் பிறந்தாலே அத்தனை தடைகளையுந்தாண்டி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தம் வீர புருஷர்களுக்கு வணக்கம் செலுத்த  முண்டியடிக்கிறார்களே அதன் அர்த்தம் என்ன? எத்தனை போக்கிரித்தனம் செய்தாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை வெல்ல வைப்பதன் தாரக மந்திரம் என்ன? அன்று தலைவர், அரசியல் பொறுப்பை இவர்களை நம்பி ஒப்படைத்ததால் அதை தோல்வியடையாமல் மக்கள் தாங்கிப்பிடிக்கிறார்கள். இதுதான் மக்களின் கருத்து. யார் என்ன சொன்னாலும் செய்தாலும் மக்கள் தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள். சிலருக்கு அது புரிவதில்லை அல்லது புரியாததுமாதிரி கதையளப்பர்.

10 minutes ago, Kandiah57 said:

1977 இல்.  நீங்கள் குறிப்பிடும். நிலைமை இருந்தது    அமிர்.  பலம் வாய்ந்த. எதிர்கட்சி தலைவர்    பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அனேகமாக சட்டத்தரணிகள்  

ஜே  ஆரே சொன்னார்  கூட்டணியின்.  பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகமையை பார்க்க பெறமையாக இருப்பதாக    சுதந்திர கட்சி  பலமிழந்த நிலையிலிருந்தது  ... என்ன செய்தார்கள??? 

என்ன செய்தார்கள்.  ???  தமிழ் பகுதியில் உள்ள  முழு பாராளுமன்ற உறுப்பினர்களையும்.  தமிழர்கள்  ஒரணியில். நின்று பெற்றுக் கொண்டாலும்     எதுவும் செய்ய முடியாது   இது தான் யதார்த்தம்   🙏

அப்போதும் தமிழர் சார்பாக ஒரே ஒரு கட்சி இருந்திருக்காது, முன்னோர் யாரையாவது கேட்டுப்பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

449943544_876175164547457_33682771899789

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அப்போதும் தமிழர் சார்பாக ஒரே ஒரு கட்சி இருந்திருக்காது, முன்னோர் யாரையாவது கேட்டுப்பாருங்கள். 

எனக்கு தெரியும்    நான் முதலாவது ஆக வாக்கு போட்டேன்     வடக்கு முழுமையாக கூட்டணிக்கு தான்  கிழக்கில் கல்குடாத் தொகுதில். ஐக்கிய தேசிய கட்சி சார்பாக  தேவநாயகம் வென்றார்.  அவர்  தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்   மற்றும் குமாரசூரியர்.    அத்துடன்  இராசதுரை   அந்த நேரம் மட்டக்களப்பு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி அமிர்தலிங்கம். கூட்டணி சார்பில்   காசி ஆனந்தனையும். போட்டியில் இறக்கினார். இது இராசதுரைக்கு பிடிக்கவில்லை   எனவே… தேர்தலில் பிறகு அவர் அரசாங்கத்துடன் இணைத்து அமைச்சராகிவிட்டார்      3 பேர் தான் எதிராக சில நேரம் 4 உம் வரலாம்   கூட்டணிக்கு 24 பாராளுமன்ற உறுப்பினர்கள்  25   அல்லது 30 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் என்ன செய்ய முடியும்???  ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட்ட வேண்டும்   முஸ்லிம்கள் அமைதியாக இருந்து அதை தான் செய்கிறார்கள்  1970 ஆம் ஆண்டுகளில் தமிழரசு கட்சியில். போட்டி இட்ட் முஸ்லிம்கள் இன்று தனித்து போட்டி இடுகிறார்கள்  

அவர்கள் ஒருகாலத்தில்  இலங்கை அரசியலில் பலமிக்க சக்திவாய்ந்தவர்கள்  ஆகுவார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2024 at 00:02, ஈழப்பிரியன் said:

உண்மை தான் நிகழ்ச்சி நிரல் இருந்தது இப்பவும் இருக்குது.

ஆனால் எல்லாமே வெளிநாட்டவர்களிடம்.

2009 க்கு பின் வெளிநாட்டவர்களின் தாளத்துக்கு எமது தலைவர்கள் நடனம் போடுகிறார்கள்.

அதுசரி பொலிசுக்காரன் தோரணையில் இதைக் கேட்கிறீர்களே.

உங்களுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாதா ஐயா?

கோமாவில் இருந்து இப்பதான் எழும்பி வந்தீர்களா?

இங்கு அத்தனை பேருமே ஐயா சம்பந்தன் 2009 க்கு பின் தமிழ்மக்களுக்கு என்ன செய்தார் என்று தானே கேட்கிறார்கள்.

அவர் ஏதாவது செய்திருந்தால் எழுதுங்கள் எல்லோரும் அறிந்து கொள்வோம்.

வெளிநாட்டு கோஸ்டிகளின் நிகழ்ச்சி நிரல்களிற்கு ஒத்திசைவாக அவர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து சம்பந்தர் ஐயா தாயகத்தில் பணி ஆற்றினாரா என்பது சந்தேகமே. 

2009 இன் பின் அவரை கறிவேப்பிலை போல பயன்படுத்த முடியாது போனது பற்றிய கோபம் நியாமானதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிக்காக பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். 

கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப்பட்டது.  

GRny-Ii-ZWQAAJ5-By.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அஞ்சலிக்காக பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். 

கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப்பட்டது.  

GRny-Ii-ZWQAAJ5-By.jpg

 

சம்பந்தனின் அஞ்சலிக்கு...  இலவச பேரூந்தில், இலவச உணவு கொடுத்து..
அழைத்து செல்ல இருப்பதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். 
அப்படி இருந்தும்... ஒரு சனமும் ஆர்வம் காட்டவில்லை.

நல்ல தலைவனுக்கு இலவச விளம்பரம் தேவையில்லை.
மக்கள் தாமாகவே... முண்டியடித்து அஞ்சலி  செலுத்துவதுதான் தலைவனுக்கு அழகு. 

இறந்த பின் ஒருவனுக்கு கூடும் கூட்டத்தை வைத்து, அவன் எப்படிப் பட்டவன் என்பதை அறிந்து விடலாம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

ஆஹா...... ரொம்பவே வக்காலத்து வாங்குகிறீர்கள். காயம் பட்ட மக்களுக்கு மருந்து இல்லை, மக்கள் இறக்கின்றனர் மரத்தின்  கீழே சிகிச்சை அளிக்கிறோம் என பிரதம வைத்தியர் வேண்டுகோள் வைத்தபோது இவர்கள் ஏன் வரவில்லை? அனுமதிக்கப்படவில்லை? இவர்கள்  எங்கிருந்து  கோரிக்கை  வைத்தார்களோ   அங்கு மறுநாள் குண்டுபோட்டு காயம்பட்டவர்களை கொல்ல முடிந்தது எப்படி? அப்போ இவர்களெல்லாம் எங்கே போயிருந்தார்கள்? சாட்சிகளில்லாமல் தாம் அழிக்கப்படப்போகிறோம் என்பதை உணர்ந்த மக்கள் தங்களை விட்டுப்போகவேண்டாமென  கதறிய போது ஏன் வெளியேறினார்கள்? யார் வற்புறுத்தலின் பேரில் வெளியேறினார்கள்? வெளியேற்றப்பட்டவர்களால் எப்படி இத்தனை அழிவுகளின் பின் யார், இவர்களை ஏன் அனுமதித்தார்கள் என்பதை யோசித்தால் இவர்கள் யாருக்காக எவ்வாறு   செயற்பட்டார்கள் என்பது புரியும். தங்கள் பிள்ளைகளை உயிரோடு  பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என அள்ளிக்கொடுத்து விட்டு கண்ணீரோடு பல ஆண்டுகளாக தெருத்தெருவாக  தேடி அலைகிறார்களே, அவர்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாததும் ஏன்? இவர்களை ஒருமுறையாவது சம்பந்தர்  சந்தித்து ஆறுதல்  சொன்னாரா? சொல்லுங்க சார்!

யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின்  கீழ் மக்களுக்காக அரசியல்  செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல்  யாசகர்கள்  ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும். 

சும்மா அலட்டி நேரத்தை விரயமாக்காதீர்கள். முள்ளிவாய்க்காலுக்காக சம்பந்தனை திட்ட முதல் (அல்லது வேறெவரையும் திட்ட முதல்) ஆயுத முனையில் மக்களை தடுத்து வைத்தவர்களையும், அவர்கள் மீது குண்டு போட்டவர்களையும் தான் திட்ட வேண்டும். அதைச் செய்ய பக்தி முத்தி தடுத்தால் அது உங்கள் பிரச்சினை. அவ்வளவு தான் மேட்டர்.

 இதையெல்லாம் 2017 வரை இங்கே பேசியிருக்கிறோம். அந்த நேரம் "இனிப் பேசாதேயுங்கோ, முன்னகர்வோம்" என்று யாழ் நிர்வாகமும் பகிரங்கமாக அறிவித்து, (உங்களுக்குப் பச்சை போட்டவர்களில் இருவரும்😎) கை கூப்பிய பின்னர் நான் புலிகள் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தே வருகிறேன். ஆனால், உங்கள் போன்ற "மூடனுக்கு பீ அப்பினால் மூன்று இடத்தில் அப்பும்" என்ற மாதிரி நடந்து கொள்ளும் ஆட்களால், மீள நினைவூட்ட வேண்டியிருக்கிறது. 

அது சரி, இப்ப சம்பந்தரும் போய் விட்டார். சுமந்திரன் அடுத்த தேர்தலில் வெல்லாமல் தாயக மக்கள் வாக்களிக்கிறார்கள் (விரட்டியடிக்கிறார்கள்😂) என்று வைத்துக் கொள்ளுங்கள். ஓணாண், ஒட்டுண்ணி எல்லாம் கிளியர். யார் உங்கள் அடுத்த தலைவர் என நினைக்கிறீர்கள்?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட மராட்சியில் இருந்து சம்பந்தன் ஐயாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துபவர்களுக்கான இலவச பஸ் மற்றும் காலை, மதிய உணவு பார்சல்களும்  கிடைக்கும். உங்கள் வரவை உறுதிப் படுத்த.... 
தொடர்பு:  தீபன் 077652 XXXX  

Alagan Ratnam

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலைவழக்கில் விடுதலையான சாந்தனின் இழப்பிற்கும், 
ராஜீவின் நண்பரான சம்பந்தனின் இழப்பிற்கும் ஈழ தமிழ் மக்கள் தரும் பதில்...

-Livingston Edinborough-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

வெளிநாட்டு கோஸ்டிகளின் நிகழ்ச்சி நிரல்களிற்கு ஒத்திசைவாக அவர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து சம்பந்தர் ஐயா தாயகத்தில் பணி ஆற்றினாரா என்பது சந்தேகமே. 

2009 இன் பின் அவரை கறிவேப்பிலை போல பயன்படுத்த முடியாது போனது பற்றிய கோபம் நியாமானதுதான். 

புலம்பெயர் போராளிகளை சம்பந்தன் கணக்கெடுக்கவே இல்லை. அந்த கோவம் இருக்கும்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2024 at 17:03, நிழலி said:

அதே போல், புலி எதிர்ப்பு எனும் அதி தீவிர காச்சலால் பீடிக்கப்பட்டு, தாம் மாற்றுக் கருத்து வைக்கின்றோம் என்ற போர்வையில், எல்லா இடங்களிலும் புலிகளையும், புலிகளின் தலைமையையும் இழுத்து, மோசமாக விமர்சிக்கின்றவர்கள் ஆரோக்கியமான உரையாடல்களுக்கும், தவறுகளை விமர்சிப்பதனூடாக சரியான வழிகளை தேட முயல்கின்றவர்களின் எண்ணங்களுக்கும் எதிரானவர்கள் மட்டுமன்றி, அவர்களும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆகும்.

இதைத்தானே கால காலமாய் சொல்கிரம் ஆனால் இங்கு என்ன நடக்குது என்றால் பெருமாள் சம்பந்தனை புகழ்ந்து எழுதினாலும் உடனே அதுக்கு எதிர்கருத்து போடுகிறேன் என்று கருத்தை படிக்காமல் எதிர்கருத்து போடுகிரம் எனும் போர்வையில் குப்பைகளை எழுதி கொட்டுவது வழமையானது .

மற்றது இவ்வாளவு வயதாகியும் பதவியை வீட்டுகொடுக்காமல் இருந்தது அவர்களின் ஆதரவாளர்களின் உசுபேத்தல் சம்பந்தன் ஐயாவை விட்டால் திருகோனமலையில் வேறு யாரும் கிடையாது எனும் உசுப்பேத்தல் இனி யாருக்கு குத்துவார்கள் ? அதே போலத்தான் சுமத்திரன் விசுவாசிகளும் அவர் பிழை விடுகிறார் என்று தெரிந்தும் அவருக்கு ஆலவட்டம் பிடிப்பது .

உண்மையில் எங்களின் உண்மையான அரசியல் பின்னடைவுக்கு முழுகாரணம் இந்த சம்பந்தன் சுமத்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு விசுவாசாமான கூட்டம் தான் .

இந்த திரியிலும் ஏன் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ஒருவர் கோதாவில் இறங்கியதுதான் பிரச்சனை தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருகிறேன் என்று சொல்லி தான் பாரளுமன்றம் செல்கிறார்கள் சென்றபின் வழமை போல் சிங்கள அரசுக்கு சேவகம் செய்கிறார்கள் இதை சுட்டிகாட்டினால் உடனே அவர்களின் அடிவருடிகளுக்கு கோபம் பொத்து கொண்டு வருகிறது அதற்க்கு பதிலாக தேசிய தலைவர் மேல் பாய்வதும் புலிகளை இல்லாத பொல்லாத செயல்களை செய்ததாக மீண்டும் மீண்டும் இதே யாழில் எழுதுவது . முதலில் புலிகள் இல்லா விட்டால் தீர்வு கிடைக்கும் சொன்னவர்களை தேடிபிடித்து நாலு கேள்வி கேட்க தெரியாத வக்கற்ற ஜடம்கள் புலிகளை பற்றி விமர்சிக்கினமாம். இல்லை உங்கள் அரசியல் தலைவர்கள் சொன்னபடி நடக்கவில்லை ஏன் கேளுங்கள் மற்றபடி இந்த திரி 1௦௦ பக்கம் தாண்டினாலும் யானை  யானை தான் முயலுக்கு மூன்று கால்தான்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

சம்பந்தன் மௌனம் கலைய வேண்டும்-சிவசக்தி ஆனந்தன்

http://www.kuriyeedu.com/wp-content/uploads/2016/10/sivasakthi-ananthan.pngதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மௌனத்தை கலைத்து உண்மைகளை வெளியிட வேண்டும் என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகள், இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு மற்றும் காணி அபகரிப்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் உட்பட தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகள் தொடர்பில் கூட்டமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கதைப்பதை நிறுத்திவிட்டு, அனைவருடனும் கலந்துரையாட வேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இந்த வருட இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கட்சிக்குள் எவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றது என்பதனை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டம்
யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ளது. இந்த காலப்பகுதியில் யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு பகுதியினர் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறியிருக்கின்றனர். மேலுமொரு பகுதியினர் கால்நூற்றாண்டு காலமாக அகதி முகாம்களில் இருக்கின்றார்கள்.

மீளக்குடியேறியுள்ள மக்கள் தமது சொந்தக்காணியில் வசித்தாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலைமையே உள்ளது. அவர்களுக்கு தேவையான நிரந்தர வீட்டுத்திட்டம் வாழ்வாதாரம் அல்லது ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் பல கிராமங்களுக்கு இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை.

அதனால் வருடந்தோறும் ஏற்படும் பருவமழை காரணமாக தற்காலிக வீடுகளில் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஆகவே 7 வருட காலத்தில் இந்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்குவதில் கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கமாக இருந்தாலும் சரி தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் சரி வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது பாரிய குற்றச்சாட்டாகும்.

நாங்கள் புதிய அரசாங்கத்துடனும் கூட 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை ஒரு இலட்சத்தி 30 ஆயிரமாக மாற்றி 21 இலட்சமான அந்த தொகையை இருவருக்கு வழங்குமாறும் கோரியிருந்தோம். அத்துடன் பொருத்து வீடு என்பது எமது பகுதி காலநிலைக்கு ஏற்றதாக இருக்காது என்பதனால் நிரந்தரமான வீடாக அமைக்குமாறும் கேட்டுள்ளோம்.

குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இந்த பொருத்து வீட்டை நிரந்தரமான வீடாக வழங்குமாறு கேட்டிருந்தும் அரசாங்கமோ அமைச்சரோ இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்தவாரம் கூட சுவாமிநாதன் தலைமையில் வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாகாண அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்த இடத்திலும் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அந்த இடத்திலும் சுவாமிநாதன் பொருத்து வீட்டைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றார். எவரும் இந்த வீட்டைத் தருவதற்கு முன்வருகின்றார்கள் இல்லை என்றார்.

ஆனால் அரசாங்கம் குறைந்தபட்சம் இந்த போரால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் சொத்திழப்புகள் மட்டுமன்றி காணாமல்போனோரின் உறவுகள், நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்றோர் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி உள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு இந்த 7 வருடங்களில் நிவாரணங்களை வழங்காமல் இந்த பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ள முப்படையினரையும் அவர்களது குடும்பங்களையும் அவர்களுக்கு தேவையான சலுகைகளையும் வசதிகளையும் வழங்குவது தொடர்பாகவே ஜனாதிபதியும் பிரதமரும் பேசிக்கொண்டிருக்கின்றார்களே தவிர பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கு இந்த அரசாங்கம் முன்வரவில்லை. இது கண்டிக்கத்தக்க விடயம்.

கிடைத்துள்ள வீடுகளையாவது நிரந்தரமான வீடுகளாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் பேசப்பட்டாலும் கூட அதில் எந்தவிதமான முடிவும் எடுக்கமுடியாத நிலை உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த அரசாங்கம் மக்களினுடைய அபிவிருத்தி வாழ்வாதாரம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தவில்லை.

இரா.சம்பந்தன் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்

நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வைக் காணும் விடயத்திலும் கூட அக்கறையற்ற போக்கே உள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித்தலைவர் என்ற வகையில் சம்பந்தன் ஐயா தனது மௌனமான போக்கை கலைக்கவேண்டும்.

இந்த அரசாங்கத்துடன் நேரடியான பேச்சுக்கு செல்லவேண்டும். அந்த பேச்சுவார்த்தையில் எங்களுடைய உடனடிப்பிரச்சனைகள் என்ன? அரசியல் தீர்வு சம்பந்தமான விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது? என்பது தொடர்பாக எமது கட்சி கூட்டங்களில் பல தடைவை வலியுறுத்தியும் கூட சம்பந்தனால் இந்த அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ஓர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு சம்பந்தனும் விரும்பவில்லை அரசாங்கமும் விரும்பவில்லை.

ஆனால் மக்கள் மாவட்டம் தோறும் தங்களது பிரதிநிதிகளுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்தை வெறுமனே பாதுகாப்பது தான் எதிர்க்கட்சித் தலைவரதோ அல்லது கூட்டமைப்பின் தலைவரது கடமை என்று இல்லாமல் எமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு நாங்கள் மதித்து நடக்கவேண்டும்.

இதில் கூட்டமைப்பு தலைவரின் மௌனம் அல்லது அசமந்தம் இராஜதந்திர ரீதியாக பின்பற்றுகின்றார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. அரசாங்கத்தில் உள்ள் பிரதான இரு கட்சிகளும் தங்களது நிகழ்ச்சி நிரலில் சரியாக சென்று கொண்டிருக்கின்றார்கள்.

எனவே அரசாங்கததின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் நாங்கள் இழுபட்டு செல்ல முடியாது. கூட்டமைப்பின் தலைவர் எந்த விதமான அழுத்தமும் கொடுக்காமல் மென்போக்காக இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.

அடுத்த ஆண்டைப் பொறுத்தவரையில் தெற்கிலும் வடக்கிலும் பல தேர்தல்கள் இடம்பெறவுள்ள காரணத்தால் அடுத்த ஆண்டு இந்த அரசாங்கத்துடன் இணைந்து எதையும் செய்ய முடியாது.

ஆனால் சம்பந்தன் ஒரு சிலரோடு பல விடயங்களை பேசிக்கொண்டிருக்கின்றார். அதனால் 2016 முடிவதற்குள் தீர்வு வரும் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளார். ஆகவே அந்த நாட்களும் இன்னும் சொற்ப நாட்களாகவே உள்ளது. ஆனால் இதுவரை அவ்வாறாக தீர்வு கிடைப்பதற்கான சூழ்நிலை எதுவும் இல்லை என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியும். ஆகவே எமக்கு ஆதரவளித்த மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என தெரிவித்தார்.

https://www.kuriyeedu.com/?p=19364

Link to comment
Share on other sites

http://aruvi.com/img/uploads/2015/aruvi-news-photos/sivasakthi_ananthan.jpg

விடுதலைப் புலிகள் மீதான சுமந்திரனின் வசைபாடலுக்கு வித்திட்டவர் சம்பந்தனே: சிவசக்தி ஆனந்தன்!

Posted: 2020-05-17 06:25:27 EST

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் வசைபாடுவதற்கு வித்திட்டவர் அதன் தலைவரான சம்பந்தனாக இருக்கின்றார் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் வேலிக்கு ஓணான் சாட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப்போராட்டம் சம்பந்தமாக எதிர்மறையான கருத்துக்களை கூட்டமைப்பின் பேச்சாளர் சிங்கள் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தததை அடுத்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அக்கூற்று பற்றி தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை விடுத்து அதற்கான நியயப்படுத்தல்களையும் செய்திருந்தார்.

உண்மையிலேயே சுமந்திரன் தன்னுடைய அரசியல் தலைவராக சம்பந்தனையே கொள்வதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் சம்பந்தனைப் பொறுத்தவரையில் அவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுத இயக்கங்கள் பற்றி வெளிப்படையான நிலைப்பாடுகளை தெரிவிக்கும் ஒருவர் அல்லர்.

பாராளுமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தமிழ் மக்களுக்கான ஆயுத விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்தரித்து உரையாற்றியிருக்கின்றார். குறிப்பாக, போரின் பின்னரான நிலைமையிலும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்துடனான தேனிலவுக்காலத்திலும் இத்தகைய சித்தரிப்புக்களை அதிகமாகச் செய்திருந்தார்.

அதுமட்மன்றி, விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்றும் பாராளுமன்றத்திலே கூறியுள்ளார். அரச தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விடுதலைப்புலிகள் உருவாக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

அவர்கள் தன்னை கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கவில்லை என்றும், அவர்களின் கருத்துக்களுடன் இணைந்து செயற்படவில்லை என்றும் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட காலத்தில் பொய்யுரைத்திருந்தார்.

இவ்வாறான நிலையில் அவரினை தலைவராக ஏற்றிக்கும் சுமந்திரன் விடுதலைப்புலிகளையும், ஆயுதப்போராட்டத்தினையும் எவ்வாறு ஆதரிப்பார். குருவுக்கு மிஞ்சிய சீடன் என்பது போன்று சம்பந்தனை விட ஒருபடி மேலே சென்று போராட்டத்தினை கொச்சைப்படுத்தியிருக்கின்றார். பின்னர் சர்ச்சைகள் ஏற்படவும் அவருடைய கருத்துக்களை தெளிவு படுத்தி சம்பந்தன் அறிக்கை விடுகின்றார். இது வேடிக்கையாக இருக்கின்றது. வேலிக்கு ஓணான் சாட்சியா?

மூன்று தசாப்தங்களாக எத்தனையோ உயிர்த்தியாகங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த தியாகங்களை மதிக்காது வெறுமனே வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களை தியாகிகள் என்பதும் பின்னர் அவர்களை துரோகிகள் என்பது மேட்டுக்குடி அரசியல் தரப்பின் வழக்கமாகிவிட்டது.

ஆகவே சம்பந்தன், சுமந்திரன் கூட்டணியே கடந்த நான்கரை வருடங்கள் தமிழர்களை ஏமாற்றி நீதிக்கான கோரிக்கையையும் மலினப்படுத்தியது. இப்போது அவர்களின் உண்மையான முகத்திரையும் கிழிந்துவிட்டது. எனவே தமிழ் மக்களே தீர்க்கமான தீர்மானம் எடுப்பதற்கு தலைப்பட்டள்ளார்கள் என்றுள்ளது.

https://www.aruvi.com/article/tam/2020/05/17/11896/

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இன்று 07/07/2024 உலகளாவிய மன்னிப்பு தினம் / National Global Forgiveness Day" ["மன்னிப்போம்! மறப்போம்!! மகிழ்வாக வாழ்வோம்!"]   "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி  இழிவு செய்த வெட்கமற்ற மனமே  இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து  இதயம் திறந்து கேட்காயோ  'மன்னிப்பை?' " "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது  இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல  இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! "  [எனது ஒரு பாடலில் இருந்து எட்டு வரிகள்  கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]  மன்னிப்பு என்பதை ஆங்கிலத்தில் pardon, forgiveness, exemption or apology என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது செய்த தவறு, குற்றம் போன்றவற்றுக்காக ஒருவர்மீது கோபம் கொள்ளாமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடிவெடுத்து அதை அவருக்கு உணர்த்தும் செயல் என்றும் கூறலாம். இதற்கு எதிர்மாறான சொல்லாக மன்றுதல் அல்லது ஒறுத்தல் [தண்டஞ்செய்தல்,To fine, punish] காணப்படுகிறது.  மன்னித்தல் [Forgiveness] என்பது உண்மையில் ஒரு உளவியல் [psychological] செயல்முறை, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த ஒருவர், அந்த குற்றச்செயல் [offense] தொடர்பான உணர்வுகள் மற்றும் அணுகுமுறையில் மாற்றத்திற்கு உள்ளாகி அதில் இருந்து விடுபட வழிவகுக்கிறது எனலாம். அதாவது மனக்கசப்பு மற்றும் பழிவாங்குதல் போன்ற எண்ணங்களில் [ negative emotions such as resentment and vengeance ] இருந்து இதனால் அவர் விடுபடுகிறார் எனலாம். எனினும் ஆழமாக சிந்திக்கும் பொழுது மன்னிப்பு என்பது உணர்வு மட்டும் அல்ல அது ஒரு செயல் என்பது தெரியவரும்.  நாம் மனக்கசப்பை விட்டுவிட்டு, நாம் அனுபவித்த காயம் அல்லது இழப்புக்கு ஈடுசெய்யப்பட வேண்டும் என்ற எந்தவொரு கோரிக்கையையும் கைவிடும்போது மற்றவர்களை நாமாகவே மன்னித்து விடுகிறோம் எனலாம். அதே போல எமக்கு கொடுமை இழைத்தவர்கள் தங்கள் கொடுமையை உணர்ந்து, தமது தவறை மறைக்காமல், இனி அப்படி ஒன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து, தாம் செய்த அநியாயங்களை  வெளிப்படையாக கூறி, மன்னிப்பு கேட்பது இரு சாராரையும் ஒற்றுமையாக்கும். மன்னித்தல் எப்படி மாண்பு மிகுந்ததோ, அப்படித்தான் மன்னிப்பு கேட்பதும். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு பேருள்ளம்வேண்டும் பெருந்தன்மை வேண்டும். கூடுதலாக ஆண்மையும் வேண்டும். மேலும் ஒரு  குற்றத்தை ஒப்புக் கொள்வதே அதைத் தவறென்று உணர்ந்திருப்பதை வெளிப்படுத்தும். மன்னிப்பு கேட்பதே குற்றத்திற்கான பாதிதண்டனையை பெற்றுவிட்டதற்கு சமம்.  மன்னிப்பு கேட்பவனை விட மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன் என்பார்கள். அந்த மன்னிக்கத் தெரிந்த குணம் எப்போது வரும் என்றால் தவறு செய்தவன் தவறை உணரும் போதுதான். ஆனால் அந்த தவறையும் உணராமல் மன்னிப்பும் கேட்காமல் அவன் இருந்தால் ? இது தான் இன்று பெரும்பான்மை ஆட்சியாளரிடம் சிக்கி தவிக்கும் சிறுபான்மை இனத்தின் கதி ?  எனவே தான் உண்மையை கண்டறிந்து,  கொடூரத்தின் வெளிப்பாட்டை  அவனுக்கு உணர்த்தி, அதன் மூலம் அவனை மன்னிப்பு கேட்க வைக்க, இலங்கையில் காணாமல் போன பெற்றோர் இன்னும் அறவழியில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியான ஒருவரின் இன்றைய நிலையை  ''குஞ்சுகளைக் கண்டால் சொல்லுங்கோ....'' என்ற சிறு கதை மூலம் தீபம் ஆசிரியர், திரு செ. மனுவேந்தன் வெளிப்படுத்துகிறார் [http://www.ttamil.com/2021/07/blog-post_05.html]. பொதுவாக கூறுமிடத்து, நம்மை நாம் முதலாவதாக மன்னிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தலாம். அதாவது இந்த தவறை செய்ய மாட்டேன் என முடிவெடுத்து நம்மை நாம் மன்னிக்கும் போது, நாம்  அடுத்த நல்ல நிலைமைக்கு நம்மை எடுத்து செல்கிறோம் என்றாகிறது. மற்றவர்களை காட்டிலும் நாம் யாரை மன்னித்தோமோ அவர்களே நம் மீது அதிக அன்பு கூறுவார்கள் என்பது உண்மை. ஒருவர் நமக்கு தீமை செய்கிறார். நமக்கு அவர் மேல் கோபம் கொப்பளிக்கிறது. பின் அவர் தனது தவறை உணர்ந்து நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார். நாமும் மன்னித்தோம் என்று கூறி விடுகிறோம். இதனால் இருவருக்கும் இடையில் சமாதானம் ஏற்படுகிறது. இது தான் நாம் பெரும் பெரிய முதல் பரிசு ஆகும்.  எது எப்படியாகினும், நாம் உண்மையில் மன்னித்தோமா அல்லது மன்னிக்கப் பட்டோமா என்பது முக்கியம். அது கட்டாயம் உறுதிப்படுத்தப் படவேண்டும். அப்ப தான் சந்தேகம் அற்ற சமாதானம் நிலவும்.  இன்றைய உலகில் 'மன்னிப்பு' என்ற செயல் கொஞ்சம் வித்தியாசமாக மட்டும் அல்ல. பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றும். மன்னிப்பார்கள் என்று நம்பி வெள்ளைக்கொடியுடன் சென்று மாண்டவர்கள் எத்தனை ?.  எது எவ்வாறாகினும், நாளும் பிறர்க்குதவும் நல்லெண்ணம் மட்டும் இருப்பதாலோ அல்லது  பாசமும் பரிவும் காட்டும் உள்ளங்கள் இருப்பதாலோ நாம் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மன்னிக்கிற மாண்பு மாபெரும் வெற்றிகளை நிகழ்த்துகிறது. ஆமாம், மன்னிப்பு மானுடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது! தண்டனையால் முடியாத மாற்றத்தை மன்னிப்பு நிகழ்த்தி விடுகிறது.  “இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப்போல பகையை பகை அகற்ற முடியாது. அன்புதான் பகையை அகற்றும்”  என்றார் மார்ட்டின் லுாதர் கிங் [Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that - Martin Luther King] ஆமாம், அந்த அன்பு தான் மன்னிப்பு ஆகும். எனவே, மன்னித்தல் என்பது இயலாமையோ,கோழைத்தனமோ அல்ல. முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சொல்லியது போல, “மன்னித்தல் என்பது பலசாலிகளின் பண்பு” ஆகும். “கண்ணுக்குக்கண் என்ற பகையுணர்வு இருந்தால் உலகில் எல்லோருமே குருடர்களாகத்தான் திரிந்து கொண்டிருப்பார்கள்” என்று ஒரு முறை மகாத்மா காந்தி கூறியதை நினைவு படுத்துங்கள். "மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டால், உங்கள் பரலோகத் தகப்பன் உங்களுக்கு மன்னிப்பார் [For If You Forgive Men When They Sin Against You, Your Heavenly Father Will Also Forgive You]. நீங்கள் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்காவிட்டால், உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார் [But If You Do Not Forgive Men Their Sins, Your Father Will Not Forgive Your Sins]." என்று கிறிஸ்தவம் தனது மத்தேயு 6: 14-15 வில் மனிதர்களுக்கு ஒரு பயமுறுத்தலுடன் போதிக்கிறது. அதே போல "மன்னித்தல் அல்லாஹ் தனது நபிக்கும் அடியார்களுக்கும் ஏவிய நற்பண்புகளில் ஒன்று" என இஸ்லாத்தில் கூறப்படுகிறது.    உதாரணமாக, 'இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.' [whoever pardons and makes reconciliation – his reward is [due] from Allah]. (அல்குர்ஆன் 42:39-43)   இந்து மதத்தின் ஒரு காப்பியமான மகாபாரதத்தில், வனபர்வம் பகுதி 29 இல் [Mahabharata, Book 3, Vana Parva, Section XXIX,] மன்னிப்பு பற்றிய நீண்ட உரையாடல் காணப்படுகிறது. அதில்  "உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்கள் கருத்து. உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. ஓ அழகானவளே, என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே, ஞானி. அவனே பலவான். எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்ட பொறுமையானவர்களுக்காக சிறப்பு மிகுந்த மன்னிக்கும் தன்மை கொண்ட காசியபர் இந்த வரிகளைப் பாடியிருக்கிறார். "மன்னிப்பதே {பொறுமையே} அறம்; மன்னிப்பதே வேள்வி, மன்னிப்பே வேதம், மன்னிப்பே சுருதி. இதை அறிந்த மனிதன் எதையும் மன்னிக்கும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். பொறுமையே பிரம்மம், பொறுமையே உண்மை, மன்னிப்பே பாதுகாக்கப்பட்ட ஆன்மத்தகுதி, எதிர்கால ஆன்மத்தகுதியைக் காப்பது பொறுமையே. பொறுமையே தவம், பொறுமையே புனிதம், பொறுமையாலேயே இந்த அண்ட ம் தாங்கப்படுகிறது.  [For, O thou of handsome face, know that the birth of creatures is due to peace! If the kings also, O Draupadi, giveth way to wrath, his subjects soon meet with destruction. Wrath, therefore, hath for its consequence the destruction and the distress of the people. And because it is seen that there are in the world men who are forgiving like the Earth, it is therefore that creatures derive their life and prosperity. O beautiful one, one should forgive under every injury. It hath been said that the continuation of species is due to man being forgiving. He, indeed, is a wise and excellent person who hath conquered his wrath and who showeth forgiveness even when insulted, oppressed, and angered by a strong person. The man of power who controleth his wrath, hath (for his enjoyment) numerous everlasting regions; while he that is angry, is called foolish, and meeteth with destruction both in this and the other world. O Krishna, the illustrious and forgiving Kashyapa hath, in this respect, sung the following verses in honour of men that are ever forgiving, Forgiveness is virtue; forgiveness is sacrifice; forgiveness is the Vedas; forgiveness is the Shruti. Forgiveness protecteth the ascetic merit of the future; forgiveness is asceticism; forgiveness is holiness; and by forgiveness is it that the universe is held together.]" என்று கூறி உள்ளதை கவனிக்க.  "பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று." [குறள் 152] தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் [மன்னித்துக்] கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் [மன்னித்தலையும்] விட நல்லது என்கிறது திருவள்ளுவர் தந்த திருக்குறள். அதாவது, நாம் வாழ்வில் பல மனிதர்களை சந்திக்கிறோம். பெரும்பாலானோரிடம் நல்லவையும் உண்டு குறைகளும் உண்டு என்பதை அறிவோம். சிலரிடம் அதிக குறைகள் உண்டு. அவர்கள் அத்தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், திருத்துத்திக்கொள்ளவும் மாட்டார்கள். மறுபுறம் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். அது அவர்களின் நல்லுள்ளத்திற்கான சான்று. அவர்களின் முன்னேற்றத்திற்கான சான்று. மன்னிப்பு கேட்காதவரிடம் நாம்  அமைதியாக சகித்துக்கொண்டு செல்வது சிறப்பாகும். மன்னிப்பு கேட்பவரை மன்னித்து செல்வது சிறப்பாகும். ஆனால் இவற்றைவிடவும் அத்தவறுகளையும் குற்றங்களையும் அறவே மறந்துவிடுவது என்பது சகித்துக்கொள்வதை காட்டிலும் மன்னித்தலை காட்டிலும் மிக மிக சிறந்தது என்று திருவள்ளுவர் வாதாடுகிறார்.    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]               
    • தாயகத்தின் நிலை பற்றி எமக்கு வகுப்பு எடுக்க நீங்கள் யார்?? உங்கள் தகுதி அல்லது இதுவரையான செயற்பாடுகள் என்ன? அவை எந்த வகையில் எம்மை விட அதிகம்????????????
    • சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம்.   உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை, இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்ற படி ஏறியபோதே இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது வாராந்த அரசியல் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,  "2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 15 வருடங்கள் தமிழரசியலுக்கு தலைமை தாங்கி வழி நடாத்திய சம்பந்தன் காலமாகிவிட்டார். சம்பந்தனைப் போல பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான தமிழ்த்தலைவர் வேறு எவரும் இல்லை என்று கூறலாம். மரபு வழி தமிழ் அரசியலை விடுத்து இன்னோர் அரசியலை நகர்த்த முனைந்தமையே இந்த விமர்சனங்களுக்கு காரணமாகும்.  அரசியல் போராட்டங்கள்    தமிழர் அரசியலின் செல்நெறியை தீர்மானிப்பதற்கு இவரது தலைமைத்துவ காலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். சம்பந்தன் ஒருபோதும் தன்னை தமிழ்த்தேசியவாதியாக இனங்காட்டியதில்லை. போராட்ட அரசியல்வாதியாகவும் அவர் இருக்கவில்லை. தமிழ்த்தேசிய அரசியலிலோ அல்லது போராட்ட அரசியலிலோ நம்பிக்கை கொண்டவர் என்றும் அவரை கூறி விட முடியாது. தமிழ் மக்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டங்களிலும் இவர் கலந்து கொண்ட வரலாறு கிடையாது. 1961ஆம் ஆண்டு கச்சேரிகளுக்கு முன்னால் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுத்தது. சம்பந்தன் அப்போது ஓர் இளம் சட்டத்தரணியாக கலந்துகொண்டார். போராட்டத்தின் ஒரு கட்டத்தில் படையினர் போராட்டத்தை நசுக்கி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தனர். சம்பந்தனும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே “தனக்கும் இப் போராட்டத்திற்கும் ஒரு தொடர்புமில்லை” என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். எனினும், சம்பந்தனிடம் ஒரு பழக்கம் இருந்தது. தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சூழலுடன் இசைந்து செல்லும் போக்கை அவர் கடைப்பிடிப்பார்.  தலைமை பொறுப்பு    1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 1977 தேர்தலை தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என பிரகடனப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் தமிழீழத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவர் அல்ல. அதை அவர் நேரடியாகவே பலரிடம் கூறியிருந்தார். குறிப்பாக கிழக்கின் சூழ்நிலைக்கு தமிழீழத் தீர்மானம் பொருத்தமற்றது என்பது அவரது கருத்தாக இருந்தது. எனினும், சூழலுடன் இசைவுற்று 1977ஆம் ஆண்டு தேர்தலில் அவர் முதன் முதலாக திருகோணமலையில் போட்டியிட்டார். வெற்றியும் அடைந்தார். புலிகள் இயக்கத்தையோ, ஆயுதப் போராட்டத்தையோ சம்பந்தன் ஏற்றுக்கொண்டவர் அல்ல. இருந்தபோதும் புலிகளுடன் இணைந்தும் அரசியல் செய்ய தயாரானார். சமாதான காலத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பையும் ஏற்றார். புலிகள் இயக்கம் சம்பந்தனை விரும்பி இருந்தது என்றும் கூறி விட முடியாது. இயக்கம் ஜோசப்பரராசசிங்கத்தையே தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி வேண்டியது. ஜோசப்பரராசசிங்கம் சம்பந்தனை நியமியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே சம்பந்தன் தலைவராக்கப்பட்டார். இங்கு தான் ஆனந்தசங்கரிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் வேறுபாடு இருந்தது. ஆனந்தசங்கரி சூழலுடன் இசைந்து போகின்ற ஒருவர் அல்லர். புலிகள் இயக்கத்தோடு அவரால் ஒத்துப் போக முடியவில்லை. ஆனந்தசங்கரி   இதனால் தூக்கி வீசப்பட்டார். உண்மையில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரத்திற்கு பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை ஆனந்தசங்கரியிடமே சென்றது. அடுத்த மூத்த தலைவர் அவராகத்தான் இருந்தார். 1970ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். புலிகள் இயக்கத்துடன் ஒத்துப்போகாததன் காரணமாகவே சம்பந்தனிடம் தலைமை பாத்திரம் சென்றது. இதனால் தான் ஆனந்தசங்கரி அதிஸ்டம் இல்லாத மனிதர் என்று கூறுவதுண்டு. தன்னிடமிருந்த தலைமை பாத்திரத்தை பறித்தவர் சம்பந்தன் என்ற கோபம் ஆனந்தசங்கரியிடம் இன்று வரை உண்டு. சம்பந்தன் 1977ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலில் செயற்பாட்டாலும் சுமார் 32 வருடங்கள் துணை பாத்திரத்தையே ஆற்ற முடிந்தது. தலைமை பாத்திரத்தை ஆற்ற முடியவில்லை. அதற்கான வாய்ப்பு 2009ஆம் ஆண்டே அவருக்கு கிடைத்தது. தலைமை பாத்திரம் தனக்கு கிடைத்தவுடன் தனக்கேயுரிய அரசியலை அவர் முன்னெடுக்க தொடங்கினார். சுதந்திர தினம்   அந்த அரசியல் என்பது இணக்க அரசியலே. இந்த அரசியல் தமிழ் அரசியலின் மரபு வழி பாரம்பரியத்திற்கு முரணானது. ஆனாலும், சந்தர்ப்பம் அறிந்து துணிந்து அதனை முன்னெடுத்தார். அவரது இணக்க அரசியலும் கட்டம் கட்டமாக இடம்பெற்றது. முதலில் தான் இணக்க அரசியலுக்கு தயார் என்பதை சைகைகள் மூலம் வெளிப்படுத்தினார். தமிழ் அரசியல் பாரம்பரியத்திற்கு முரணாக யாழ்ப்பாணத்தில் வைத்தே சிங்கக் கொடியை அசைத்துக் காட்டினார். சிங்கக் கொடி தொடர்பான தமிழரசு கட்சியின் நிராகரிப்பு சிங்கக் கொடி உருவான காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ் மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து புறக்கணித்த கொடி என்பது இதற்கு காரணமாக அமைந்தது. தமிழ் தேசியவாதம் முனைப்படைந்த 70களில் தமிழ் பிரதேசங்களில் சிங்கக் கொடி ஏற்றுவதே துரோகமாக கருதப்பட்டது. சுதந்திர தினத்தை பொறுத்தவரையிலும் இதே நிலைதான் பின்பற்றப்பட்டது. தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அரசிற்கு கிடைத்த லைசன்சே சுதந்திரம் என கருதப்பட்டது. இதனால் சுதந்திர தினம் வருடம் தோறும் கரிநாளாகவே அனுஸ்டிக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு சம்பந்தனின் சொந்தத் தொகுதியான திருகோணமலையில் சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி கட்ட முற்பட்டமையினாலேயே திருமலை நடராசன் சுட்டுக் கொல்லப்பட்டார். மைத்திரிக்கு ஆதரவு     தமிழ் அரசியல் மரபுக்கு மாறாக சம்பந்தன் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இதுவும் இணக்க அரசியலுக்கான ஒரு சைகை தான். பிரிக்கப்பட முடியாத இலங்கை என்ற கோசத்தையும் முன்வைத்து பிரிவினைக்கு எதிரானவன் என்ற தோற்றத்தையும் வெளிப்படுத்தினார். நல்லாட்சி காலத்தில் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்க முனைந்தார். இது விடயத்தில் குறைந்த பிசாசுடன் கூட்டுச் சேருதல் என்பது அவரது கொள்கையாக இருந்தது.   மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார். இதன்போது ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட சந்திரிகா முன்வந்த போதும் அதனை நிராகரித்தார். “மனரீதியான ஒப்பந்தமாக இருக்கட்டும்” என கூறினார். சந்திரிகா “இவ்வளவு காலமும் ஏமாற்றப்பட்டபடியால் தான் ஒப்பந்தத்தை நிராகரிக்கின்றீர்களா?” என கேட்டபோது “மனரீதியாக இசைவு தான் முக்கியம” என குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் இவரது ஒத்துழைப்புக்கு பிரதி உபகாரமாக எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்கியது. அரசாங்கத்திற்கு விசுவாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நடைமுறையில் இவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கம்    ஆளும் கட்சியின் தலைவராகவே இருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வலிந்து தோள் கொடுத்து அரசாங்கத்தை பாதுகாத்தார். பொறுப்பு கூறல் விடயத்திலும் அரசாங்கத்தை பிணையெடுக்க முற்பட்டார். ஜெனிவாவில் அரசை பாதுகாக்கும் செயற்பாட்டையே அன்றைய காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்தது. “சர்வதேச விசாரணை முடிந்து விட்டது” என்கின்ற சுமந்திரனின் புகழ்பெற்ற வாசகமும் இக்காலத்திலேயே வெளிவந்தது. அரசியல் யாப்பு மூலமாக தீர்வு என்பதிலும் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார். நல்லாட்சி கால புதிய யாப்பு முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். வடக்கு - கிழக்கு பிரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சிக்குட்பட்ட தீர்வு யோசனைக்கும் இணக்கம் தெரிவித்தார். தீபாவளிக்கு தீர்வு வந்துவிடும். பொங்கலுக்கு தீர்வு வந்துவிடும் எனவும் கூறிக் கொண்டிருந்தார். நல்லிணக்க அரசியலின் இரண்டாம் கட்டத்தில் கட்சியை அதற்கேற்ற வகையில் மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த முதலாவது அம்பு தான் புலி நீக்க அரசியல். இணக்க அரசியல்    புலி நீக்க அரசியலை செய்யாமல் தென்னிலங்கை தரப்பை திருப்திபடுத்த முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதன் அடிப்படையில் புலிசார்பு அரசியல்வாதிகள் என கருதப்பட்ட புலிகளினால் கூட்டமைப்புக்கு அனுப்பப்பட்ட கஜேந்திரனையும், பத்மினி சிதம்பரநாதனையும் கூட்டமைப்பிலிருந்து நீக்கினார்.   இது விடயத்தில் கஜேந்திரகுமாரை நீக்குவது சம்பந்தனின் நோக்கமாக இருக்கவில்லை. சர்வதேச விவகாரங்களை கையாள்வதற்கு கஜேந்திரகுமார் பொருத்தமாக இருப்பார் என்பதே அவரது கருத்தாக இருந்தது. காங்கிரஸ் கட்சியை ஒதுக்குவது தன்னை பலவீனமாக்கும் எனவும் அவர் கருதி இருக்கலாம். ஆனால் சம்பந்தனின் இணக்க அரசியலோடு கஜேந்திரகுமாருக்கு உடன்பாடு இருக்காததினால் அவர் கூட்டமைப்பை விட்டு வெளியேறினார். சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலுக்கான முதல் அடி கஜேந்திரகுமாரின் வெளியேற்றத்தினாலேயே நிகழ்ந்தது. இணக்க அரசியலை எதிர்க்கும் தரப்பிற்கு ஒரு தலைமை கிடைத்தது. எனினும், அத்தலைமை தனக்குரிய இடத்தை பிடிக்க 10 வருடங்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது என்பது வேறு கதை. கஜேந்திரகுமார் இல்லாததினால் அவ்விடத்திற்கு சுமந்திரன் இறக்குமதி செய்யப்பட்டார். உண்மையில் சம்பந்தனின் அசல்வாரிசு சுமந்திரன் தான். விக்னேஸ்வரனும் இதன் அடிப்படையிலேயே இறக்கப்பட்டார். எனினும், அவர் சம்பந்தனோடு ஒத்துழைக்கவில்லை. சுமந்திரன் சம்பந்தனின் இணக்க அரசியலில் ஒரு படி மேலானவர் என கூறலாம். தென்னிலங்கை அரசியல்  சம்பந்தன் இணக்க அரசியலை முன்னெடுத்தாலும் அதற்கு மேலாக தென்னிலங்கை அரசியலை முன்னெடுக்க முனையவில்லை. சுமந்திரன் தென்னிலங்கை அரசியலை முன்னெடுப்பதையே தனது பிரதான அரசியல் செயற்பாடாக வரித்துக் கொண்டார். இதனால், சம்பந்தன் பெருந்தேசியவாதத்தின் முதுகு தடவும் அரசியலை தேர்ந்தெடுத்தார் என கூறிவிட முடியாது. அதேவேளை, மலையக அரசியல், முஸ்லிம் அரசியல் போல பெருந்தேசியவாத அரசியலுக்குள் தமிழ் அரசியலை கரைக்கவும் முற்படவில்லை. ஒருவகையில் சம்பந்தன் பின்பற்றிய இணக்க அரசியலை கனவான் இணக்க அரசியல் என கூறலாம். சம்பந்தன் தனது அரசியலில் மிகவும் உறுதியாக இருந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியினதும் ஜனநாயக கட்டமைப்புகள் தனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கும் என கருதியமையால் அதையெல்லாம் மீறினார். எல்லாவற்றிலும் தனி ஓட்டத்தையே மேற்கொண்டார். கூட்டமைப்பாகவோ, தமிழரசு கட்சியாகவோ ஓட முன் வரவில்லை. பல சந்தர்ப்பங்களில் கூட்டு முடிவுகளை நிராகரித்து தனித்தே முடிவுகளை எடுத்தார். மூத்த தலைவர் என்ற வகையில் அவருக்கு பெரிய எதிர்ப்புகள் ஆரம்பத்தில் வராதது அவரது தனி ஓட்டத்திற்கு சாதகமாக அமைந்தது. பிற்காலத்தில் சுமந்திரன் தனி ஓட்டம் ஓடுவதற்கு இவரே வழிகளை திறந்து விட்டார் என கூறலாம். மோடியின் அழைப்பு    இணக்க அரசியலின் அடுத்த கட்ட வளர்ச்சி தான் தமிழ் தேசிய நீக்க அரசியல். சிங்கக் கொடி அசைப்பு, சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளல், எதிர்ப்பு அரசியலை கைவிடல், தாயகம் , தேசியம் , சுய நிர்ணயம் என்கின்ற அடிப்படை கோசங்களை கைவிடல் என்பன இதன் அடிப்படையிலேயே எழுச்சி அடைந்தன. மொத்தத்தில் தமிழ் அரசியலில் பாரம்பரியத்தையே மாற்றி அமைக்க முற்பட்டார் எனலாம். இதன் ஒரு வெளிப்பாடாக இந்தியாவுடனான உறவுகளையும் கைவிட்டார். இந்திய பிரதமர் மோடி அழைத்தும் இந்தியாவிற்கு செல்ல அவர் முன் வரவில்லை. இந்திய சார்பு நிலை பெருந்தேசியவாதத்தை சினப்படுத்தும் என அவர் கருதி இருக்கலாம். பெருந்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு , தமிழின எதிர்ப்பு என்கின்ற தூண்களில் கட்டமைக்கப்பட்டது என்பது அவருக்கு நன்றாக தெரியும். தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக இந்தியா எதுவும் செய்யும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கவில்லை. இந்தியாவில் தங்கி இருப்பதை முழுமையாகவே தவிர்த்துக் கொண்டார். 13ஆவது திருத்தம்  தனது வசிப்பிடத்தையும் முழுமையாகவே இலங்கைக்கு மாற்றினார். இணக்க அரசியல் என்பது பரஸ்பரம் இரு பக்கம் சார்ந்த அரசியல். அது பரஸ்பரம் வெற்றி என்ற கோட்பாட்டை கொண்டது. பரஸ்பர முயற்சிகளையும் விட்டுக் கொடுப்புகளையும் வேண்டி நிற்பது. இங்குதான் சம்பந்தனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. தென்னிலங்கை தரப்பு அவரது முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்புகளையும் வழங்கவில்லை. அது தொடர்பான ஆத்மார்த்தமான அரசியல் விருப்பம் தென்னிலங்கையிடம் இருக்கவில்லை. குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விருப்பு கூட அதனிடம் இருக்கவில்லை. மறுபக்கத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. தனது சொந்த மாவட்டத்திலேயே ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த சம்பந்தனால் முடியவில்லை. கன்னியா வெந்நீரூற்றில் ஆக்கிரமிப்பு இடம்பெற்ற போது மௌனமாக பார்த்துக் கொண்டிருந்ததை தவிர வேறு எவற்றையும் செய்ய அவரால் முடியவில்லை. இறுதியில் விளைவுகள் அகமட்டத்தில் பாரதூரமாக இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது கண்ணுக்கு முன்னாலேயே சிதைவடைந்தது. இந்த சோகம் காய்வதற்கு முன்னர் சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியும் சிதைவுற்றது. பெருந்தலைவராக இருந்தும் சொந்த கட்சி நீதிமன்ற படி ஏறுவதை இவரால் தடுக்க முடியவில்லை. அவர் பல தடவை மன்றாடிக் கேட்ட போதும் அவரால் வளர்க்கப்பட்ட சுமந்திரன் அவரது மார்பிலேயே குத்தினார். உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை. தனது சொந்த கட்சி நீதிமன்றப் படி ஏறியபோதே இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/yodhilingam-spoke-about-sampanthan-1720254684?itm_source=article
    • தாயகத்தின் நிலை புரியாமல் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு  இப்போதும் விதண்டாவாதம் புரிபவர்களையும் , அவர்களுக்கு முண்டு கொடுப்பவர்களையும் கண்டிப்பதில் தவறேதும் இல்லை.  இப்படிப்பார்த்தால் செல்வா காலத்தில் இருந்து சம்பந்தன் சுமந்திரன்வரை எல்லோரும் சொந்த மக்களுக்குச் சேவகம் புரியவில்லை. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.