Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

 செல்வி  தங்கம்மா அப்பகுட்டி என்பவரும்.  எனது ஊருக்கு பக்கத்து ஊர் நாவற்குழியை. சேர்ந்த ஒரு நபரும் ஆசிரியர்கள்   இருவரும் ஒருவரையொருவர் காதலித்தவர்கள்  திருமணம் செய்ய இரு வீட்டு பெற்றோர்களும். கடுமையான எதிர்ப்பு   காரணம் சாதிப்பாகுபாடு  இருபகுதியும். வேளாளர் தான்  அதற்குள்ளும் பாகுபாடுகள்   எனவே… இருவரும் முடிவு செய்தார்கள்  திருமணம் செய்தால் நாம் இருவருமே இல்லையென்றால் திருமணம் வேண்டாம்,.செய்வதில்லை,..அதன்படியே இருவரும் வாழ்ந்து இறந்து விட்டார்கள்    

அந்த நாவற்குழி மனிதனின் தம்பியார். மகேந்திரன் மாஸ்டர்  எனக்கு தமிழ் இலக்கியம் படிப்பித்தவர் அப்போ 

தமிழ்மொழி,..தமிழ் இலக்கியம்   என. தமிழில் இரண்டு பாடங்களுண்டு    இவர்களை  யாழ் கள உறவு   சசி க்கு தெரியலாம். மேலும் தங்கம்மா அப்பகுட்டி. நேர்மையானவர். 

அவருடைய சீடன். தான் ஆறு திருமுருகன்   இவரும் மிகவும் நேர்மையானவன் என்று அறிந்து உள்ளேன்   நாவற்குழியில். கண்டி றேட்டில்.  பெரிய அளவில்  சைவசமயம். பற்றிய தகவல்கள் கொண்ட நிலையம் உண்டு”  அங்கே ஆறு அல்லது ஏழு மொழிகளில் விளக்கம் உண்டு   இது ஆறுதிருமுருகன். கட்டி நிர்வாகம் செய்கிறார்கள்    ஊருக்கு போனால் போய் பார்க்கவும்” 🤣🤣🤣🙏

சரவணபவனில் எனக்கு நம்பிக்கை இல்லை   ஆறுதிருமுருகனில்  நம்பிக்கை உண்டு”    அமைதியாக இருங்கள்’ வழக்கின் முடிவை பார்ப்போம்   ......

குறிப்பு,....சரவணபவன்.  சமாதானமாகப் போகக்கூடிய.  வாய்ப்புகள் அதிகம் உண்டு”   இது என கருத்துகள்    

கந்தையர், 

இங்கே நான் திருமுருகனை எந்த இடத்திலும் நிந்திக்கவில்லை என்பதைக் கவனிக்கவும். 

 

  • Replies 76
  • Views 5.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நியாயம்
    நியாயம்

    துர்க்க துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கின்றேன்.  அந்த காலத்தில் இயக்கமும் இயங்கியது.  சிவத்தமிழ்ச்செல்வி தங்

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    தவறான புரிதல் தமிழ் சிறி. சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிரானவர்கள் என்று சுட்டுகின்றீர்கள். நான் வாசித்த கருத்துக்களில் அப்படி யாரும்  சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிராக எழுதியதை யாழ் களத்தில் காணவ

  • கந்தப்பு
    கந்தப்பு

    தெல்லிப்பளையில் இருக்கும் தெரிந்தவர்களுடன் உரையாடும் போது உதயன் பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தினை அதன் உரிமையாளர் சிவபூமி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டதினால் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஆறுதிருமுருகன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, Kandiah57 said:

அந்த நாவற்குழி மனிதனின்

அந்த நாவற்குழி மனிதரின் பெயர் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அந்த நாவற்குழி மனிதரின் பெயர் என்ன? 

மறந்து போனேன்   ஆனால் நல்ல சிவலை   சில நேரம்    நடராஜா ஆக இருக்கலாம்   ........சசி வரணம்.     தெரிந்து இருக்கும்    நீங்கள் நாவற்குழிய??  அவரின் பெயர் விசாரித்து சொல்ல முடியும்     தேவையா  ??? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

IMG-4308.jpg

IMG-4309.jpg

ஆறு திருமுருகனின் மகளிர் இல்லத்துக்கு எதிராக கம்பு சுற்றிய ஆட்கள் எல்லாரும் வரிசையாக வரவும். 

வேடிக்கை என்னவென்றால்… ஈழம், சைவம் என்றால்  "அலர்ஜி" உள்ள பெரும்பாலானவர்கள்தான் இங்கும் கம்பு சுற்றியது கவனிக்கத்தக்கது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

IMG-4308.jpg

IMG-4309.jpg

உதயன் மீடியா மாபியா எதை எழுதினாலும் நம்பும் காலம் மலையேறி போச்சு உண்மை ஜெயித்தது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆறு திருமுருகனின் மகளிர் இல்லத்துக்கு எதிராக கம்பு சுற்றிய ஆட்கள் எல்லாரும் வரிசையாக வரவும். 

வேடிக்கை என்னவென்றால்… ஈழம், சைவம் என்றால்  "அலர்ஜி" உள்ள பெரும்பாலானவர்கள்தான் இங்கும் கம்பு சுற்றியது கவனிக்கத்தக்கது.

இது அவர்களின் பரம்பரை தொழில் அழியவிடாமல்.   செய்து கொண்டிருக்கிறார்கள் ......🤣 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kandiah57 said:

இது அவர்களின் பரம்பரை தொழில் அழியவிடாமல்.   செய்து கொண்டிருக்கிறார்கள் ......🤣 

இல்லாவிட்டடால்...
அவர்கள் தமிழர்கள் என்று சொல்ல எந்த அத்தாட்சியும்  இல்லாமல் போய்விடும்.
பொதுச் சேவை செய்கிறவன் மேல் சேறு அடித்து, 
அதனை செய்ய விடாமல் தடுக்க எவ்வளவு முனைப்பு காட்டுகின்றார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஆறு திருமுருகனின் மகளிர் இல்லத்துக்கு எதிராக கம்பு சுற்றிய ஆட்கள் எல்லாரும் வரிசையாக வரவும். 

வேடிக்கை என்னவென்றால்… ஈழம், சைவம் என்றால்  "அலர்ஜி" உள்ள பெரும்பாலானவர்கள்தான் இங்கும் கம்பு சுற்றியது கவனிக்கத்தக்கது.

தட்டை மாற்றிப் போடாதீர்கள். 

 

இது சைவ சமயத்திற்கு எதிரான (ஆளுநர் உட்பட) செயல் என்று கூக்குரலிட்ட ஆட்கள்தான் இங்கே அதிகம். அவர்கள் எல்லோரும் குளியல் அறைக் கமறாவை விட்டுவிட்டு, அங்கே உள்ள சிறுமிகளைப் பற்றிக் கவலைப்படாது, திருமுருகன் பற்றி மட்டுமே கவனமெடுத்தவர்கள். 

(கமறா பொருத்தப்பட்டிருப்பது உண்மை என்று வலம்புரி உறுதிப்படுத்துகிறது)

இது  அயோக்கியத்தனத்தின் உச்சம். 👆

4 hours ago, Kandiah57 said:

இது அவர்களின் பரம்பரை தொழில் அழியவிடாமல்.   செய்து கொண்டிருக்கிறார்கள் ......🤣 

உங்கள் முட்டாள்தனத்திற்கு எல்லை இல்லை கந்தையர். 

எல்லாவற்றையும் மறைத்த தாங்கள் தங்களின் கொண்டையை மறைக்க மறந்துவிட்டீர்கள். 

4 hours ago, தமிழ் சிறி said:

இல்லாவிட்டடால்...
அவர்கள் தமிழர்கள் என்று சொல்ல எந்த அத்தாட்சியும்  இல்லாமல் போய்விடும்.

பொதுச் சேவை செய்கிறவன் மேல் சேறு அடித்து, 
அதனை செய்ய விடாமல் தடுக்க எவ்வளவு முனைப்பு காட்டுகின்றார்கள்.

சாயம் சிறிது சிறிதாக  வெளுக்கிறது. 👆

(இதை சிறியரிடம் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

"" தேசியத்தில் உறுதியா நிற்பவர்களைம் சைவ தொண்டு ஆற்றுபவர்களையும் எல்லாவற்றையும் காசாக்க நினைப்பவர்களுக்கு இடையூறா இருக்கும் தொண்டாற்றுபவர்களையும்  வடக்கு ஆளுநர் கிறிஸ்தவ பெண்மணி அம்மையார் திருமதி சார்ள்ஸ் அவர்களை வைத்து முடக்க நினைக்கிறார்கள். ""

இது 👆 சுண்டலால் எழுதப்பட்டது. சமய வெறுப்பு என்பது சுண்டலில் நிறைய உண்டு என்பதற்கு ஆதாரம். 

இதற்கு Like ❤️ போட்டது  கந்தையர். 

 

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஆறு திருமுருகனின் மகளிர் இல்லத்துக்கு எதிராக கம்பு சுற்றிய ஆட்கள் எல்லாரும் வரிசையாக வரவும். 

தவறான புரிதல் தமிழ் சிறி.

சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிரானவர்கள் என்று சுட்டுகின்றீர்கள். நான் வாசித்த கருத்துக்களில் அப்படி யாரும்  சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிராக எழுதியதை யாழ் களத்தில் காணவில்லை. நடைபெறும் தவறுகளைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் என்பதைத்தான் என்னால் பார்க்க முடிகிறது.  சைவ சமயத்தை முன் நிறுத்தி  மற்றவர்களை முட்டாள்களாக்கும் செயல்களைத்தான் எதிர்க்கிறார்கள். நேற்றுக் கூட ஒரு செய்தி வாசித்தேன். “கைத்தொலைபேசி, சமூக ஊடகங்களைப் பார்த்து உங்கள் கண்களில் கர்மா நிறைந்திருக்கும். உங்கள் கண்களின் கர்மாவைப் போக்க, தங்கத் தேர் இழுத்து, அதைப் பாருங்கள். கர்மா நீங்கி விடும்.  ஆலய நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றிருந்தது” இப்படியான மோசடிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் தப்பில்லைத்தானே.

 

சரி விடயத்துக்கு வருகிறேன்

இல்லத்தில் உள்ள பெண்கள் குளிக்கும் இடத்தை நோக்கிப்  பொருத்தப்பட்ட கமரா ஒரு நிகழ்வு, தராதரமற்ற நிலையில் இயங்கிய சிறுவர் இல்லங்களை மூட வேண்டும் என்பது இரண்டாவது செய்தி. நீங்கள் இரண்டையும் ஒரு பெட்டிக்குள் போட்டு வைத்திருக்கிறீர்கள். அல்லது யாரோ குழப்பி விட்டிருக்கிறார்கள்.

கமரா விடயம் நீதிமன்றம்வரை போய் விட்டது. அங்கேதான் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு நிறுவனத்தை நடாத்துவது ஒன்றும் சுலபமான விடயமல்ல. அங்கே ஏதாவது நிர்வாகச் சீர்கேடுகள், குளறுபடிகள் இருந்தால், பதில் சொல்ல வேண்டியவர் அதன் பொறுப்பாளர். “எனக்கு ஏதும் தெரியாது. யாரோ விசமிகள் செய்ததற்கு நான் பொறுப்பேற்க முடியாது” என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போக முடியாது.  “தவறு ஒன்று நடந்திருக்கிறது. இப்பொழுதுதான் எனது கவனத்திற்கு வந்திருக்கின்றது. உரிய நடவடிக்கைகள் எடுத்து, இனி வரும் காலங்களில் இப்படியான தரக்குறைவான நிகழ்வுகள் நடைபெறாது பார்த்துக் கொள்கிறோம்” என்பதுபோல் அறிக்கை விட்டு  ஆவன செய்திருந்தால் பிரச்சனை முடிந்துவிடப் போகின்றது. அதை விடுத்து ‘அப்படி ஒரு பிரச்சனையே இல்லை. அது நாங்கள் இல்லை. நாங்கள் இவரின் வாரிசுகள். பலகாலங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்’  என்ற பாணியில் நிற்பது ஒரு நிறுவனத்திற்கோ, அதன் பொறுப்பாளருக்கோ அழகல்ல.

‘நான் நல்லவன். அப்பழுக்கற்றவன். நான் இவரது வாரிசு’ என்று சொல்வது எல்லாம் ஒருவர் தனது ஒழுக்கங்களுக்கு மேலாகப் போட்டுக் கொள்ளும் போர்வைகள்.

 

‘கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்

கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு ….’ என்று சுண்டல் எழுதி இருந்தார். இந்த இரண்டு வரிகளுக்குப் பின்னால் கண்ணதாசன் இப்படி எழுதியிருக்கிறார்.

‘காப்பாற்றச் சில பேர் இருந்து விட்டால்

கள்ளர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு

கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி

குணத்துக்குத் தேவை மன சாட்சி…’

 

சமூகத்தில் ஒரு தவறான பிரச்சனை நடந்தால், தட்டிக் கேட்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் எதிர்க் குரலாவது கொடுக்கலாம். அதுதான் நல்ல ஒரு சமுதாய வளர்ச்சிக்கு உதவும் உரமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கந்தப்பு said:

IMG-4308.jpg

IMG-4309.jpg

தெல்லிப்பழையில் இருக்கும் இரு இல்லங்களை மூடுவதாக இன்னும் வடமாகாண சபை தளத்தில் செய்தி இருக்கிறதே? குருபரனின் மானநஷ்ட எச்சரிக்கை கடிதத்தில், ஜூலை 4 இற்கு முன் எதுவும் எச்சரிக்கை கிடைக்கவில்லை என்றார்கள். பின்னர், ஜூலை 5 ஆம் திகதி மூன்று பேர் கொண்ட குழு விசாரித்து கிளீன் சேர்டிபிகேட் கொடுக்க வேண்டிய தேவை ஏன் வந்ததாம்😎?

இங்கே வலம்புரி பொய்செய்தி போட்டிருக்கிறதா அல்லது மாகாண சபை பொய் செய்தி போட்டிருக்கிறதா?

உதயன் மறுப்பு/மன்னிப்பு வெளியிட்டு விட்டதாமா? 48 மணி நேரம் தாண்டி விட்டதென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2024 at 07:08, கிருபன் said:

அந்த விடுதியில் 10 குளியலறைகள் காணப்படுகின்றபோதிலும், அவை அனைத்தும் விடுதிப் பராமரிப்பாளர்களின் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட் டுள்ளன. சிறுமிகளுக்கு வெளிப்புறமாக நீர் நிரப்பப்பட்ட தொட்டியொன்றே குளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சிறுமிகள் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியே கண்காணிப்புக் கமராவால் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

On 4/7/2024 at 12:57, ஏராளன் said:

தெல்லிப்பளையிலுள்ள பெண்கள் விடுதியை மூட உத்தரவு!

02-1.jpg

 

இது வெளியில் உள்ள குளிக்கும் தொட்ட,.

அங்கே 10. குளியலறைகள். மட்டுமே உண்டு அவை அனைத்தும்   அங்கு வேலை செய்பவர்களுக்கு மட்டுமே 

கபிதன் இணைத்த படம் வேறு   மேலே உள்ள படம்.  இல்லை எனபதை கவனியுங்கள் 

On 4/7/2024 at 22:10, Kapithan said:

 

யாழில் இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்! விசாரணையில் அம்பலம் | Children S Homes Operating Worse Place In Jaffna

குறித்த

 

On 4/7/2024 at 22:10, Kapithan said:

 

யாழில் இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்! விசாரணையில் அம்பலம் | Children S Homes Operating Worse Place In Jaffna

குறித்த வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 மலையக

 

On 4/7/2024 at 22:10, Kapithan said:

கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

யாழில் இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்! விசாரணையில் அம்பலம் | Children S Homes Operating Worse Place In Jaffna

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பழை சிறுவர், மகளிர் இல்ல விவகாரம்

1351592106.JPG

குறைபாடுகளை நிவர்த்திக்குக் ஆளுநர் நேற்று அதிரடி உத்தரவு
உதயனின் செய்தி மீளவும் உறுதிசெய்யப்பட்டது!!!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் இயங்கும் மகளிர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் தொடர்பில், ஆளுநரின் அபயம் குழுவினருக்கு அண்மையில் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் குறைபாடுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை நிவர்த்திக்குமாறு ஆளுநர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான ஆளுநர் அலுவலக அறிக்கை, வட மாகாண இணையத்தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:- யாழ்ப்பாணம் - தெல்லிப்பழைப் பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு ஆளுநரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்திசெய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

வடமாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் வரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்தும் விதமான அறிவுறுத்தல்களும் ஆளுநரால் தொடர்புடைய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆளுநரின் அறிவுறுத்தல்களில் இருந்து மாறுபட்ட வகையில் சில ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் வெளியிடும் செய்திகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் எமது அறிவிப்புகளை  www.np.gov.lk என்ற வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பார்வையிட முடியும் - என்றுள்ளது.

ஆசிரியர் குறிப்பு:

  • ஆளுநரின் குறித்த அறிவிப்பு மூலம், 'தெல்லிப்பழை மகளிர், சிறுவர் இல்லங்களை மூட உத்தரவிடவில்லை' என்று பரப்பப்பட்ட தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆளுநர் உத்தரவிட்ட செய்தி அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இணையத்தில் இப்போதும் இருக்கிறது. எனவே அதுவே உண்மையான தகவல் என்பதையே ஆளுநர் மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.
  • தெல்லிப்பழையில் இயங்கும் மகளிர் இல்லமொன்றில், மாணவிகள் குளிக்கும், உடைமாற்றும் பகுதிக்கு மேலாக சி.சி.ரி.வி. கமரா பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும், இன்னொரு சிறுவர் இல்லம் அனுமதியற்று இயங்கி வருகின்றமை தொடர்பிலும் உதயனின் ஜூலை 4ஆம் திகதிய பதிப்பில் செய்தியொன்று அறிக்கையிடப்பட்டிருந்தது.
  • ஆளுநர் அலுவலகத்தின் செய்தியறிக்கைகள் வெளிப்படுத்தப்படும், www.np.gov.lk இணையத்தளத்தில் ஜூலை 4ஆம் திகதி 'யாழ்ப்பாணம் தெல்லிப் பழைப்பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை' என்ற தலைப்பில் ஆளுநரின் உத்தரவு தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் வழக்கம்போல இந்தச் செய்தி குறித்த இணையத்தில் பதிவேற்றப்பட முன்னதாக ஜூலை 3 ஆம் திகதியே ஊடகங்களுக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ 'வட்ஸப்' குழுமத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது.
  • 'மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி. கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது. 'அபயம்' பிரிவினரால் கோரப்பட்டதற்கு அமைய தெல்லிப்பழைப் பிரதேச செயலாளரால் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு, களவிஜய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளின் பிரகாரம் தெல்லிப்பழைப் பகுதியில் இயங்கும் குறித்த இரண்டு இல்லங்களையும் மூடுமாறும், விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது' என்பதாக ஆளுநர் அலுவலகத்தின் அந்தச் செய்தியறிக்கை அமைந்திருந்தது.

அதை அடிப்படையாகக் கொண்டு மேலதிக புலனாய்வுத் தேடல்களின் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் உதயனின் ஜூலை 4 ஆம் திகதிய செய்தி அமைந்திருந்தது. ஆனால், உதயன் வெளிப்படுத்திய செய்தி தவறு என்று சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறிருக்கையில், ஆளுநரின் நேற்றைய அறிக்கையானது உதயனின் செய்தியின் உண்மைத் தன்மையை மீளவும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதை உதயன் சுட்டிக்காட்ட விரும்புகின்றான்.

வாசகர்கள் www.np.gov.lk என்ற தளத்துக்குச்செல்வதன்மூலம், உதயனின் முன்னைய செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பிலும், ஆளுநரின் நேற்றைய உத்தரவு தொடர்பிலும் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். (
 

https://newuthayan.com/article/தெல்லிப்பழை_சிறுவர்,_மகளிர்_இல்ல_விவகாரம்;

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வாசகர்கள் www.np.gov.lk என்ற தளத்துக்குச்செல்வதன்மூலம், உதயனின் முன்னைய செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பிலும், ஆளுநரின் நேற்றைய உத்தரவு தொடர்பிலும் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

large.IMG_6850.jpeg.5dc7c3d3556bc91442c5

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். தெல்லிப்பளை சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் வடக்கு ஆளுநரின் அறிக்கை

Published By: DIGITAL DESK 3   11 JUL, 2024 | 05:09 PM

image
 

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கிய மகளிர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக  வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த அறிக்கையில்,

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு வடமாகாண ஆளுநரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.  

இதன் தொடர்ச்சியாக ஆளுநரினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில்  கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய  ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளைப் பின்பற்றி  இயங்குவதை உறுதிப்படுத்தும் விதமான அறிவுறுத்தல் ஆளுநரால் தொடர்புடைய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் அறிவுறுத்தல்களில் இருந்து மாறுபட்ட வகையில் சில ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் வெளியிடும் செய்திகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை ஆளுநரால் தெல்லிப்பளை பகுதியில் உள்ள மகளிர் இல்லம் ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னர் வெளியான செய்தியினை யாழில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று பொய்யான செய்தி என செய்தி வெளியிட்டு இருந்த நிலையிலையே ஆளுநர் இந்த அறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/188210

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசம்நெற் ஜெயபாலன் முகப்புத்தகத்தில் நட்சத்திரன் செவ்விந்தியனின் பகிர்வைப் போட்டவர். அதில் நிறைய  குற்றச்சாட்டுகளை ஆறு திருமுருகன் ஐயா மீதே வைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தேசம்நெற் ஜெயபாலன் முகப்புத்தகத்தில் நட்சத்திரன் செவ்விந்தியனின் பகிர்வைப் போட்டவர். அதில் நிறைய  குற்றச்சாட்டுகளை ஆறு திருமுருகன் ஐயா மீதே வைக்கிறார்.

ஓம் நானும் அருண் அண்ணாவின் பதிவைப் பார்த்தேன்.

அது ஒரு புறமிருக்க சில ஊடகங்களும் நரிகளும் கிடைச்ச காப்பில புகுந்து  வெள்ளையடிக்க முயலுகினை!

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2024 at 02:54, சுண்டல் said:

உதயன் மீடியா மாபியா எதை எழுதினாலும் நம்பும் காலம் மலையேறி போச்சு உண்மை ஜெயித்தது 

இப்ப, வலம்புரியின் போலிச்செய்தியை வட்சப்பில் இருந்து எடுத்துப் போட்டு "உண்மை ஜெயித்தது" என்று டயலாக் விட்ட @சுண்டல் சக நண்பர்கள் "முகத்தை மூடிக்" கொண்டாவது வரிசையாக வரவும்😂!

பிகு: தேசம்நெற் ஜெயபாலன் ஆறுதிருமுருகனைப் பற்றி முன்னரும் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். யாழ் பல்கலையின் மூதவையில் இருந்தபடி சில முன்னேற்றகரமான விடயங்கள் பல்கலையில் நிகழாமல் தடை போடும் ஒருவராக ஆறுதிருமுருகன் அவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். உதாரணமாக, வவுனியா வளாகம் (அடுத்து கிளிநொச்சி வளாகம்) தனியான பலக்லைகளாகத் தரமுயர்த்தப் பட்டால், இந்து/சைவர் அல்லாதவர்கள் தலைமைப் பதவிக்கு வந்து விடுவர் என்ற அச்சத்தை மறைமுகமாக ஆறுதிருமுருகன் வெளிப்படுத்தியிருக்கிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

டயலாக் விட்ட @சுண்டல் சக நண்பர்கள் "முகத்தை மூடிக்" கொண்டாவது வரிசையாக வரவும்😂

ஏன்??  இந்த பகுதியை தவிர்த்து கருத்துகள் எழுத முடியாத?? மதம் சார்ந்து மொழி சார்ந்து  நடப்பது  ஒவ்வொருவருக்கும் இருக்கும் சுதந்திரம்  தனிப்பட்ட விருப்பமும் ஆகும்    நீங்கள் என்ன செய்கிறீர்கள்  தமிழ் மொழியையும்  கிறித்தவத்தையும். ஆதரிக்கவில்லையா?? அது பிழையில்லை உங்களது விருப்பம்   அதேபோல ஆறுதிருமுருகனும். செயற்படலாம்.    

மேலும்   விடுதியில் பிள்ளைகள் இருக்க விருப்பமில்லை என்றால்  வெளியேற  வேண்டியது தான்    யார் மறிப்பது?? எவருமில்லை  

காணியில் சரவணபவனுக்கு. எழுதி விடுவதும். நல்லது     😂🤣😂

ஏனெனில்  அவர் தொடர்ந்து உண்மை செய்திகளை பிரசுரித்து வரலாம்   ஆமா   யாழ்ப்பாணத்தில்.  வைத்தியசாலைகளில் நடக்கும் மோசடிகள் உதயனுக்கு தெரியவில்லையா??? அல்லது இவருக்கும். பங்குகள் கிடைக்கும்    

ஆறுதிருமுருகன். ஆசிரியர்   அதிபர்    பதவிகள் வகித்தவர்   திருமணம் செய்யவில்லை மனைவி பிள்ளைகள் கிடையாது    தனது செந்த பணத்தில்  பல வறிய. மாணவர்களுக்கு உதவி உள்ளார்   அவர்கள்  உலகின் பல பகுதிகளில் சிறப்பாக வாழ்கின்றனர்    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஏன்??  இந்த பகுதியை தவிர்த்து கருத்துகள் எழுத முடியாத?? மதம் சார்ந்து மொழி சார்ந்து  நடப்பது  ஒவ்வொருவருக்கும் இருக்கும் சுதந்திரம்  தனிப்பட்ட விருப்பமும் ஆகும்    நீங்கள் என்ன செய்கிறீர்கள்  தமிழ் மொழியையும்  கிறித்தவத்தையும். ஆதரிக்கவில்லையா?? அது பிழையில்லை உங்களது விருப்பம்   அதேபோல ஆறுதிருமுருகனும். செயற்படலாம்.    

மேலும்   விடுதியில் பிள்ளைகள் இருக்க விருப்பமில்லை என்றால்  வெளியேற  வேண்டியது தான்    யார் மறிப்பது?? எவருமில்லை  

காணியில் சரவணபவனுக்கு. எழுதி விடுவதும். நல்லது     😂🤣😂

ஏனெனில்  அவர் தொடர்ந்து உண்மை செய்திகளை பிரசுரித்து வரலாம்   ஆமா   யாழ்ப்பாணத்தில்.  வைத்தியசாலைகளில் நடக்கும் மோசடிகள் உதயனுக்கு தெரியவில்லையா??? அல்லது இவருக்கும். பங்குகள் கிடைக்கும்    

ஆறுதிருமுருகன். ஆசிரியர்   அதிபர்    பதவிகள் வகித்தவர்   திருமணம் செய்யவில்லை மனைவி பிள்ளைகள் கிடையாது    தனது செந்த பணத்தில்  பல வறிய. மாணவர்களுக்கு உதவி உள்ளார்   அவர்கள்  உலகின் பல பகுதிகளில் சிறப்பாக வாழ்கின்றனர்    

என்ன திரும்பத் திரும்ப இல்லம் நடத்துபவரின் வரலாற்றையே எல்லாக் கருத்துகளுக்கும் பதிலாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அவர் பரோபகாரியாக இருப்பதால்  "அவர் நடத்தும் இல்லத்தில் முறைகேடுகள் இருக்கலாம், அதை பேப்பர்கள் எழுதக் கூடாது, அப்படி எழுதினால் வலம்புரி போன்ற ஓர ஊடகங்களில் இருந்து பொய்ச்செய்தியை மேற்கோள் காட்டி முரட்டு முட்டுக் குடுக்கலாம்" என்கிறீர்களா😂

என் கருத்தின் பின்னணியை அறிய மேலே இருக்கும் கருத்துக்களை வாசியுங்கள். இதை விட உங்கள் போன்ற முரட்டு முட்டு அலட்டல் பேர்வழிகளுக்கு மேலதிகமாக நேரம் செலவழிக்க என்னிடம் நேரமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
வட இலங்கையின் 'மக்கள் தொண்டர்' ஆறு திருமுருகன் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய யாழ்ப்பாண உதயன் பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வட இலங்கையின் ‘மக்கள் தொண்டர்’ ஆறு திருமுருகன் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய யாழ்ப்பாண உதயன் பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

 

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றவரும்  இலங்கையில் சைவமும் தமிழும் தளைத்தோங்க உழைத்து வருபவரும். ஆதரவற்ற பிள்ளைகளின் ஒரே தாயாகவும் தந்தையாகவும் திகழ்வபவருமான வட  இலங்கையின் ‘மக்கள் தொண்டர்’ ஆறு திருமுருகன் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய  யாழ்ப்பாண உதயன் பத்திரிகைக்கும் அதன் உரிமையாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சரவணபவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆறுதிருமுருகள் அவர்களின் சட்டத்தரணிகள் தற்போது தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

சரவணபவான் அவர்களின் பத்திரிகையான  யாழ்ப்பாண உதயன் நிறுவனம் “இழுத்து’ மூடப்படாமல் இருக்க அவருக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அன்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

 

https://uthayannews.ca/2024/07/09/வட-இலங்கையின்-மக்கள்-தொண/#google_vignette

https://uthayannews.ca/2024/07/09/வட-இலங்கையின்-மக்கள்-தொண/#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Justin said:

என்ன திரும்பத் திரும்ப இல்லம் நடத்துபவரின் வரலாற்றையே எல்லாக் கருத்துகளுக்கும் பதிலாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அவர் பரோபகாரியாக இருப்பதால்  "அவர் நடத்தும் இல்லத்தில் முறைகேடுகள் இருக்கலாம், அதை பேப்பர்கள் எழுதக் கூடாது, அப்படி எழுதினால் வலம்புரி போன்ற ஓர ஊடகங்களில் இருந்து பொய்ச்செய்தியை மேற்கோள் காட்டி முரட்டு முட்டுக் குடுக்கலாம்" என்கிறீர்களா😂

என் கருத்தின் பின்னணியை அறிய மேலே இருக்கும் கருத்துக்களை வாசியுங்கள். இதை விட உங்கள் போன்ற முரட்டு முட்டு அலட்டல் பேர்வழிகளுக்கு மேலதிகமாக நேரம் செலவழிக்க என்னிடம் நேரமில்லை!

அனைத்தும் வாசித்துக்கொண்டு வருகிறேன்   நான் அனைத்து விடயங்களையும் கதைக்கிறேன்.  நீங்கள் காணி விடயம் பற்றி ஒரு விடயமும். எழுதவில்லை   பத்திரிகைகாரன். தான் ஒழுங்காக இருந்து கொண்டு வடிவாக. எழுதட்டும்.  அதாவது கள்ள காணி பிடிப்பதை நிறுத்தி விட்டுட்டு எழுதட்டும்.   இவனே கள்ளன்  இவர் எப்படி மற்றவருக்கு ஒழுக்கம் போதிக்க முடியும்??   ஆறுதிருமுருகனில். என்ன பிழை உண்டு”   ?? நடந்த சீர்கேடு என்ன??  விளங்கவில்லை   

விடுதிகளில். தங்கிய பெண்களில்.  ஒருத்தி பிழை எனில் முழுவரையும்.  பழுதக்கி விட்ட வரலாறு எனக்கு தெரியும்    இன்றைய நிலையில்  விடுதிகளில். ஆணகள் சரி  பெண்கள்   சரி  தனித்தனியாக. பாதுகாக்கவும் விடப்பட்ட போதும்  ஒருவரையொருவர் கட்டி பிடித்தல் கொஞ்சுவது  .....பாலியல் சேட்டைகள். சர்வ சாதாரணம்.  எனவே… இந்த பெண்கள் உத்தமிகள் என வைத்து  ஒரு சமூக சேவையாளனை   தூற்றுகிறீர்கள் 🙏 நன்றி வணக்கம்… 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

அனைத்தும் வாசித்துக்கொண்டு வருகிறேன்   நான் அனைத்து விடயங்களையும் கதைக்கிறேன்.  நீங்கள் காணி விடயம் பற்றி ஒரு விடயமும். எழுதவில்லை   பத்திரிகைகாரன். தான் ஒழுங்காக இருந்து கொண்டு வடிவாக. எழுதட்டும்.  அதாவது கள்ள காணி பிடிப்பதை நிறுத்தி விட்டுட்டு எழுதட்டும்.   இவனே கள்ளன்  இவர் எப்படி மற்றவருக்கு ஒழுக்கம் போதிக்க முடியும்??   ஆறுதிருமுருகனில். என்ன பிழை உண்டு”   ?? நடந்த சீர்கேடு என்ன??  விளங்கவில்லை   

விடுதிகளில். தங்கிய பெண்களில்.  ஒருத்தி பிழை எனில் முழுவரையும்.  பழுதக்கி விட்ட வரலாறு எனக்கு தெரியும்    இன்றைய நிலையில்  விடுதிகளில். ஆணகள் சரி  பெண்கள்   சரி  தனித்தனியாக. பாதுகாக்கவும் விடப்பட்ட போதும்  ஒருவரையொருவர் கட்டி பிடித்தல் கொஞ்சுவது  .....பாலியல் சேட்டைகள். சர்வ சாதாரணம்.  எனவே… இந்த பெண்கள் உத்தமிகள் என வைத்து  ஒரு சமூக சேவையாளனை   தூற்றுகிறீர்கள் 🙏 நன்றி வணக்கம்… 

இங்கே ஆறு திருமுருகன் அவர்கள் எதுவும் செய்திருக்கிறார் என்று எவரும் எழுதவில்லை. அவர் நிர்வாகத்தின் கீழ் இருந்த நிலையத்தில் சில சீர்கேடான நிலை இருந்திருக்கிறது, அதற்குப் பொறுப்பான அரச நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது நல்ல விடயம் என்று தான் பெண்கள், குழந்தைகள் நலன்களை முன்னிறுத்தும் எவரும் நினைப்பர்.

ஆனால், நீங்கள் எழுதியிருக்கும் இரண்டாம் பந்தியின் படி, நீங்கள் "வேற குறூப்" 😂, இந்த குறூப்புகளை யாழில் நாம் முன்னரும் கண்டிருக்கிறோம். வைரமுத்து சின்மயி பிரச்சினை, கனடாவில் மனைவியைக் கொன்ற கணவன் பிரச்சினை போன்ற திரிகளில் இந்த குறூப் வந்து இப்ப நீங்கள் எழுதியிருப்பதைப் போலவே எழுதியிருக்கிறார்கள்.

என் ஆச்சரியம், நீங்களெல்லாம், வயசாளிகள் என்று இங்க திரிகிறீர்கள், ஆனால் வயதுக்கேற்ற நடத்தைகளை , இந்த திரியில் நீங்கள் வெளிப்படுத்தவில்லை. இதை மூப்பு வாதமாக (ageism) எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் போன்ற மூத்தவரிடம் இது போன்ற கருத்துக்களை நான் எதிர்பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

ஆறுதிருமுருகனில். என்ன பிழை உண்டு”   ?? நடந்த சீர்கேடு என்ன??  விளங்கவில்லை   

large.IMG_6855.jpeg.d4ce084edd1d2da533a1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.