யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
By
சுண்டல்
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
How To Perfect Your Deadlift 1. Toes 2.Overhand grip 3. Hips lower than shoulders 4. Set lats 5. Core involved 6. Lift 7. Squeeze glutes
-
By kandiah Thillaivinayagalingam · பதியப்பட்டது
"தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 25 மண்ணின் பூப்பை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதைப் போல் பெண்ணின் பூப்பையும், அதாவது பெண்ணின் உடல் தாய்மைக்கு உரிய கன்னித் தன்மையை அடையும் நிகழ்வையும் கொண்டாடும் மரபு, பிறப்பு சடங்குகளை அடுத்து வருகிறது. கிராமப் புறங்களில் சடங்கு என்றாலே அது பூப்புச் சடங்கையே பொதுவாகக் குறிக்கும். 10 முதல் 14 வயது என்பது பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது பொதுவான விதி. எனவே பெரும்பாலும் மங்கை என்ற மகளிர் பருவத்தில் இந்த பருவ மாற்றம் நடை பெறுகிறது எனலாம், எனினும் சிலவேளை முன்பும், அதாவது பெதும்பை பருவத்திலும் அல்லது பின்பும், அதாவது, மடந்தை பருவத்திலும் நடை பெறலாம். சுமங்கலிப் பெண்கள் கூடி மஞ்சள் கலந்த நீரால் பூப்படைந்த பெண்ணைக் குலவை இட்டுப் [வாயைத் திறந்து நாக்கை வாயின் பக்கவாட்டிலோ மேலும் கீழுமாகவோ அசைத்து மங்கள ஒளி எழுப்பி] புனித நீராட்டுவதும், எதிர்காலத்தில் அவள் குழந்தையைத் தாங்கும் வலிமையைப் பெறவேண்டும் என்பதற்காக ஊட்டச் சத்தான உணவு வகைகளை கொடுப்பதும், பெண் இல்வாழ்க்கைக்கு உரிய தகுதியைப் பெற்ற நிலையை உறவினர்களுக்கும் உலகத்தார்க்கும் தெரிவிப்பதும், பூப்புச் சடங்கில் தாய்மாமன் முதலிடம் அல்லது தலைமை வகிப்பதும் முக்கிய நிகழ்வாகும். பொதுவாக உளுந்தில் செய்த உணவுகளும், எள் கலந்த உணவுகளும் மற்றும் உணவில் அதிகம் நல்லெண்ணெயும் சேர்க்கப் படும். பெண்ணின் பூப்பெய்தல், அதை ஒட்டிய நிகழ்வுகளை மறைமுகமாக தெரிவிக்கும் ஒரே ஒரு பண்டைய பாடலாக, சங்கப்பாடல், புறநானுறு 337 இன்று எமக்கு கிடைத்துள்ளது. அதில் வரி: "காண்டற்கு அரியளாகி மாண்ட பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய துகில் விரி கடுப்ப நுடங்கித் தண்ணென அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு மனைச் செறிந்தனளே வாணுதல் இனியே அற்றன்றாகலின் தெற்றெனப் போற்றிக்" [7 - 13] முக்கியமானது. அவள் பிறரால் காண்பதற்கு அரியவளாக, பெண்மை நிறைந்த [பூப்பு எய்திய] பொலிவோடு [அழகுடன்], மனைக்குள் திகழ்ந்தாள். நீரில் நனைத்துக் காயவிடப்பட்ட மெல்லிய துணி காற்றில் அசைவதுபோல் நடுங்கினாள் [அசைந் தாள்]. கூந்தலில் அவள் ஊட்டிய குளுமையான அகில் புகை தந்த நறும்புகை மெதுவாகச் சென்று படிந்த கபில நிறமுடைய பெரிய அரண்மனையில் மறைந்து இருந்தாள் என்கிறது. [She is hiding in her brown mansion filled with delicately moving fragrant smoke of akil wood. She trembles like a fine washed cloth hung to dry]. இப்படியான சடங்குகளை ஒருவர் அல்லது ஒரு குழு, ஒரு குடும்ப நிலையில் இருந்து இன்னொரு குடும்ப நிலைக்கு மாறிச் செல்வதற்கான சடங்குகள் [Rites of passage) என்றும் கூறலாம். உதாரணமாக பெண்ணுக்கு நான்கு இன்றியமையாத வாழ்க்கை வட்டச் சடங்குகள் வழியாக பூப்பு, வதுவை [திருமணம்], மகப்பேறு, கைம்மை [widowhood] ஆகிய மாற்றங்கள் நிகழ்கின்றன என்பார். இந்த மாற்றங்களின் ஊடாக குமரி, மனைவி, தாய், கைம்பெண் முதலான குடும்ப / சமூக பாத்திரங்களை ஒரு பெண் ஏற்கிறாள் எனலாம். பூப்பு, யாழ்ப்பாணத் தமிழில் “சாமத்தியச் சடங்கு” என்று பொதுவாக அழைக்கப்படும். தங்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தையைக் கருத்தரிக்கக் கூடிய கர்ப்பப் பையைக் கொண்டவளாய் இருக்கிறாள் என்பதற்கான விளம்பரம் தான் சாமத்தியச் சடங்கு என்றும் கூறலாம். “பூப்பு" ஓர் உடல் இயலின் பதிவு, அவ்வளவு தான்! பூப்புனித நீராட்டு விழாக்களைப் பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும், அப்படியான ' வயதுக்கு வருதல்' [‘Coming of Age’] சடங்குகள் அநேக மான பூர்வீக குடிகளிடம் இன்னும் உண்டு. ஈழத்தில் பூப்புனித நீராட்டு விழா மதங்களுக்கு அப்பாற்பட் டது. இந்துக்கள் மட்டுமன்றி கிறித்தவ ஈழத் தமிழர்களும் தமது பெண் குழந்தைகளுக்கு சாமத்தியச் சடங்கை, இந்துக்கள் போலவே, ஆலாத்துதல் (ஆரத்தி) போன்ற சடங்குகளைச் செய்து கொண் டாடுவார்கள். அது மட்டும் அல்ல இங்கு பெண்கள் பொட்டு வைப்பது, தாலி அணிவது, இப்படியான சடங்குகள் செய்வது எல்லாம் தமிழ்ப் பாரம்பரியமாக மட்டுமே கருதப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் மத்தியிலும் திருமணம், பூப்புனித நீராட்டு போன்ற சடங்குகளில் தாய் மாமனுக்குத் தனி மரியாதை உண்டு. இலங்கையில் வேடர் சமுதாயம், பேய்கள், துர்தேவதைகள், இரத்த மற்றும் சதை போன்றவற்றில் மகிழ்வடைகின்றன என நம்புகிறார்கள் [The Veddas of Sri Lanka believe demons relish blood and flesh]. எனவே பூப்படைத்தலில் இரத்தம் ஒரு முக்கிய இடத்தை பெறுவதால், பேய்களின் கோபத்தை தணிக்க அல்லது குறைக்க சில நடவடிக்கைகளை அவர்கள் கையாண்டார்கள். அதுவே இன்று சிங்கள சமூகத்தினரிடமும் ஒரு சடங்காக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. இது இலங்கை இந்தியா மக்களைத் தவிர, மேலும் ஆப்கானிஸ்தான், ஜப்பான், பொலினேசியா, கொலம்பியா, அந்தமான் தீவுகள், நியூ கினி மற்றும் மத்திய ஆபிரிக்கா [Afghanistan, Japan, Polynesia, Colombia, the Andaman Islands, New Guinea and Central Africa] போன்ற நாடுகளிலும் காணப் படுகின்றன. இலங்கையின் ஒரு புத்த புராணக் கதை, மகா சம்மதவின் மகள், ஒரு வளர்நிலைச் சடங்கில் [Rites of passage] ஈடு படத்தை குறிக்கிறது [Maha Sammata was the first monarch of the world according to Buddhist tradition.]. தமிழ்ச்சமுதாயத்தில் நிலவும் தாய் தெய்வ வழிபாடும் கொற்றவை வழிபாடும் இதை உறுதிப்படுத்தும். இந்த தாய்தெய்வம் மிகப் பழமையான தெய்வம் என்பதால் "பழையோள்" என்றும் மணிமேகலையில் "முதியோள் கோட்டம்": என்றும் குறிக்கப்படுவதைக் காணலாம். தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே பெண் பூப்படைதலைக் கொண்டாடும் சடங்கு பல்வேறு சமூகங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் பெண்ணுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மறு உற்பத்தி அதிகாரம் கண்டு பொறாமை கொண்ட ஆண் சமுதாயமும், ஆரிய இனப்பண் பாட்டின் தாக்கமும், இன்றைய மத நம்பிக்கையும், முதலாளித்துவம் கலந்து பெண்ணை அடிமைப் படுத்த முனைந்த காலத்தில் தான், பெண்ணின் பூப்புடைதல் கொண்டாட்டத்தை ஆணின் நுகர்ப் பொருள் கொண்டாட்டமாக்கி, பாலியல் உறவில் ஆணின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சடங்காகி விட்டது என்பது தான் உண்மை. அதனால்த் தான் பெண்ணின் பூப்படைதலும் மாதவிலக்கும் தீட்டாகிப் போனது எனலாம். எனவே தேவையற்ற சடங்குகளை ஒழிப்பதன் மூலமே நிகழ் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளமுடியும் என நம்புகிறேன். வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இனி வருபவை திருமணச் சடங்கும், இறுதியாக மனிதன் பிறப்பதற்கு முன்பே தொடங்கிய சடங்குகளின் முடிவாக, அவன் இறந்த பின்பும் தொடரும் இறப்புச் சடங்கும் ஆகும், அவை அடுத்த அடுத்த பகுதிகளில் ஓரளவு விரிவாக தரப் பட உள்ளது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 26 தொடரும் -
அத்தனை சந்திகளும், இடங்களும் நினைவில் வந்து போகின்றன.........! 😂 நன்றி நிழலி .........!
-
By தமிழ் சிறி · Posted
சம்பந்தருக்கு அடுத்து சங்கரியாரை கிழித்து தொங்க விட இப்பவே… “ஹோம் வேர்க்” செய்து வையுங்கள் தமிழன்பன். 😂
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 0 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts