Jump to content

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

images-16.jpeg?resize=300,168

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராகச் செயல்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து இஸ்மாயில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன்  அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறதுடன் இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்ததுள்ளது.

மேலும் 90 ஆயிரத்து 589க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன நிலையில் இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394215

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

valavan

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும். குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அ

valavan

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள்  வெளியேற்றப்பட்டது  90ம் ஆண்டு. அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன? இன்ற

nunavilan

பலஸ்தீனியர்களையும் ஒரே கூடைக்குள் போட்டீர்கள்  பாருங்கள் அங்கை தான் நீங்கள் நிற்கிறீர்கள். அது சரி பெரும்பாலான போர்களுக்கு ஏன் அமெரிக்கா காரணகர்த்தாவாக நிற்கிறது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? ப

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளுக்குத் தேவையான மருந்து இஸ்ரேலிடம் தான் உண்டு. இன்னொரு ஹெஸ்புல்லா பயங்கரவாதிக்கும் மருந்துகொடுக்கப்பட்டுள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் சிரேஷ்ட தலைவர் ஈரானில் படுகொலை

Published By: DIGITAL DESK 3   31 JUL, 2024 | 09:52 AM

image

ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் இன்று புதன்கிழமை (31) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் இஸ்மாயில் ஹனியே இன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது மெயப்பாதுகாவலரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை புதிய ஈரானின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியே கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/189858

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவிப்பு

இஸ்மாயில் ஹனியே

பட மூலாதாரம்,REUTERS

31 ஜூலை 2024, 04:04 GMT
புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியே கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

''சம்பவத்திற்கான" காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் "விசாரணை செய்யப்பட்டு வருகிறது" என்று இரானிய புரட்சிகர காவல்படை கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

62 வயதான ஹனியே 1980களின் பிற்பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்.

இஸ்ரேல் சொல்வது என்ன?

இஸ்ரேலிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் இன்னும் வரவில்லை.

ஆனால் இஸ்ரேலின் தீவிர வலதுசாரியான கலாசார அமைச்சர் அமிக்கேய் எலியாஹு போன்ற சில அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்வினை வந்துள்ளது.

ஹனியேவின் மரணம் "உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுகிறது" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹமாஸ் கூறியது என்ன?

''பாலஸ்தீனிய மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கும், உலகின் அனைத்து சுதந்திர மக்களுக்கும் ஹமாஸ் இரங்கல் தெரிவித்து கொள்கிறது'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹனியேவின் படுகொலைக்கு தங்கள் குழு பதிலடி கொடுக்கும் என்று ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

''இந்த கோழைத்தனமான செயலுக்கு, நிச்சயம் தண்டனை கிடைக்கும்'' என என்று முசா அபு மர்சூக் கூறியுள்ளதாக ஹமாஸ் நடத்தும் அல்-அக்ஸா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

முன்பு கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்கள்

அக்டோபர் 7-ல் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பிணைக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குலுக்கு பிறகு ஹமாஸின் மூத்த தலைவர்களை ''அழிப்போம்'' என இஸ்ரேல் தொடர்ந்து கூறி வந்தது.

அதன் பிறகு பல மூத்த ஹமாஸ் தலைவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர் என நம்பப்படுகிறது. ஹமாஸின் துணை அரசியல் தலைவர் சலே அல்-அரூரி மற்றும் ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசா ஆகியோர் இதில் அடங்குவர்.

இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் மற்றும் அவரது நான்கு பேரக்குழந்தைகள் ஏப்ரல் மாதம் காசாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இஸ்மாயில் ஹனியே

பட மூலாதாரம்,REUTERS

இஸ்மாயில் ஹனியே யார்?

அபு அல்-அப்து என்ற புனைப்பெயர் கொண்ட இஸ்மாயில் அப்தெல் சலாம் ஹனியே, பாலத்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர். இவர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவர்.

இஸ்மாயில் ஹனியே ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராக பரவலாகக் கருதப்படுகிறார். 1980 முதல் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்.

பாலத்தீன அரசாங்கத்தின்(Palestinian Authority government) பத்தாவது பிரதமராக 2006-ஆம் ஆண்டில் வகித்தார். ஒராண்டுக்கு பிறகு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

அவர் 2017 இல் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை 2018 இல் பயங்கரவாதியாக அறிவித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் தலைவரின் படுகொலை மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது - மத்திய கிழக்கு தொடர்பான நிபுணர் கருத்து

Published By: RAJEEBAN   31 JUL, 2024 | 11:29 AM

image
 

ஹமாஸ் தலைவர்  இஸ்மாயில் ஹனியே  கொல்லப்பட்டுள்ளமை மத்திய கிழக்கை முழுமையான ஒரு யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான பேராசிரியர் நடெர் ஹசேமி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவரின் படுகொலை முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என  அவர்தெரிவித்துள்ளார்.

இது பெரும் திருப்புமுனை என தெரிவித்துள்ள அவர் பெய்ரூட்டின் தென் பகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவரை சில மணிநேரத்திற்கு முன்னர் இஸ்ரேல் படுகொலை செய்ய முயன்றுள்ளதால்  ஹமாஸ் தலைவரின் படுகொலை லெபானிலும் எதிரொலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹனியேயின் படுகொலைக்கு பின்னர் இந்த மோதலை தீவிரப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189875

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள், இஸ்ரேலிய அரச பயங்கரவாதிகளின் அழிவு நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுக்குள்ளும் முக்கிய தலைவரை காப்பாற்ற முடியவில்லை அராபியர்களால். 

அதேவேளை அங்கு சென்று தாக்குதலை நடாத்தி விட்டு சேதமற்று வந்திருக்கிறது இஸ்ரேல்.

கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியாக வரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, தமிழ் சிறி said:

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து இஸ்மாயில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன்  அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இவரும் எங்கட புலம்பெயர் ஈழதமிழர்கள் பலர் போன்று தான் சொந்த நாட்டில் ஒரு வீடும் இலங்கையில் ஒரு வீடும் வைத்திருப்பது போன்று.

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும்.

குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அது பலமுறை நடந்திருக்கிறது.

சஹ்ரான் சாகுமுன்  வெளியிட்ட ஒரு வீடியோவில்  இஸ்லாமியர்களல்லாதவர்களை அவர்கள் எமக்கு எந்த அநியாயமும் செய்யவில்லையென்றாலும்  மூட்டு மூட்டாக வெட்டி கொல்லுங்கள் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னான், 

இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையென்றால்கொல்லப்படுவீர்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும்  சொன்னான்.

அவன் வெளிப்படையாக சொல்லிட்டான் ஆனால் மறைமுகமாக ஏறத்தாள உலகின் அனைத்து இஸ்லாமியர்களும் தமது மதம்தான் உலகையே ஆளவேண்டும் என்ற கருத்தை ,அமதுக்குள் கொண்டவர்கள் .

பாலஸ்தீன பிரச்சனை அவர்கள் மண் சார்ந்த பிரச்சனை என்றாலும், மதம் என்று வந்தால் அவர்களும் உலகின் பிற முஸ்லீம்கள் போன்ற கருத்தை கொண்டவர்களே

32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவரும் எங்கட புலம்பெயர் ஈழதமிழர்கள் பலர் போன்று தான் சொந்த நாட்டில் ஒரு வீடும் இலங்கையில் ஒரு வீடும் வைத்திருப்பது போன்று.

.அவர் முதல் துருக்கியிலிருந்தார் , பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கத்தாரில் பதுங்கினார், பிறகு ,அங்கிருந்து ஈரான் வந்தபோது இஸ்ரேலினால் துல்லியமாக போட்டு தள்ளப்பட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சமூக ஊடகங்களில் இஸ்மாயில் ஹனியேயின் இழப்பை தாங்கிகொள்ள முடியாத  இந்திய இலங்கை முஸ்லீம்கள், சம்பந்தமே இல்லாமல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது மகிழ்ச்சி என்று பதிவிடுகிறார்கள்,

புலிகளின் தலைவர் கமாஸ் தலைவர்கள்போல சொந்த மக்களையும் போராளிகளையும்  சாகவிட்டு அந்நியநாட்டுக்கு ஓடிபோய் அங்குள்ள அரண்மனைகளிலிருந்தபடி அறிக்கைவிட்டு வெட்டி வீரம் காண்பிக்கவில்லையென்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமலேயே! 

  • Like 9
  • Thanks 4
Link to comment
Share on other sites

50 minutes ago, valavan said:

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும்.

குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அது பலமுறை நடந்திருக்கிறது.

சஹ்ரான் சாகுமுன்  வெளியிட்ட ஒரு வீடியோவில்  இஸ்லாமியர்களல்லாதவர்களை அவர்கள் எமக்கு எந்த அநியாயமும் செய்யவில்லையென்றாலும்  மூட்டு மூட்டாக வெட்டி கொல்லுங்கள் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னான், 

இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையென்றால்கொல்லப்படுவீர்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும்  சொன்னான்.

அவன் வெளிப்படையாக சொல்லிட்டான் ஆனால் மறைமுகமாக ஏறத்தாள உலகின் அனைத்து இஸ்லாமியர்களும் தமது மதம்தான் உலகையே ஆளவேண்டும் என்ற கருத்தை ,அமதுக்குள் கொண்டவர்கள் .

பாலஸ்தீன பிரச்சனை அவர்கள் மண் சார்ந்த பிரச்சனை என்றாலும், மதம் என்று வந்தால் அவர்களும் உலகின் பிற முஸ்லீம்கள் போன்ற கருத்தை கொண்டவர்களே

.அவர் முதல் துருக்கியிலிருந்தார் , பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கத்தாரில் பதுங்கினார், பிறகு ,அங்கிருந்து ஈரான் வந்தபோது இஸ்ரேலினால் துல்லியமாக போட்டு தள்ளப்பட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சமூக ஊடகங்களில் இஸ்மாயில் ஹனியேயின் இழப்பை தாங்கிகொள்ள முடியாத  இந்திய இலங்கை முஸ்லீம்கள், சம்பந்தமே இல்லாமல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது மகிழ்ச்சி என்று பதிவிடுகிறார்கள்,

புலிகளின் தலைவர் கமாஸ் தலைவர்கள்போல சொந்த மக்களையும் போராளிகளையும்  சாகவிட்டு அந்நியநாட்டுக்கு ஓடிபோய் அங்குள்ள அரண்மனைகளிலிருந்தபடி அறிக்கைவிட்டு வெட்டி வீரம் காண்பிக்கவில்லையென்ற அடிப்படை புரிதல்கூட 

 

பலஸ்தீனியர்களையும் ஒரே கூடைக்குள் போட்டீர்கள்  பாருங்கள் அங்கை தான் நீங்கள் நிற்கிறீர்கள்.
அது சரி பெரும்பாலான போர்களுக்கு ஏன் அமெரிக்கா காரணகர்த்தாவாக நிற்கிறது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?
பாலசிங்கம் எங்கை இருந்தவர்?

  • Like 3
  • Thanks 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

1) இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையென்றால்கொல்லப்படுவீர்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும்  சொன்னான்.

2) அவன் வெளிப்படையாக சொல்லிட்டான் ஆனால் மறைமுகமாக ஏறத்தாள உலகின் அனைத்து இஸ்லாமியர்களும் தமது மதம்தான் உலகையே ஆளவேண்டும் என்ற கருத்தை ,அமதுக்குள் கொண்டவர்கள் .

3) பாலஸ்தீன பிரச்சனை அவர்கள் மண் சார்ந்த பிரச்சனை என்றாலும், மதம் என்று வந்தால் அவர்களும் உலகின் பிற முஸ்லீம்கள் போன்ற கருத்தை கொண்டவர்களே

 

1)  கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பெண்கள் தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருப்பதன் பின்னணி இதுதான். தமிழ்  ஆண்களைக் கொன்றுவிட்டு பெண்களைத் துப்பாக்கி முனையில் மதம் மாற்றம் செய்தார்கள்


2) 100%


3) 100%  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

 

பலஸ்தீனியர்களையும் ஒரே கூடைக்குள் போட்டீர்கள்  பாருங்கள் அங்கை தான் நீங்கள் நிற்கிறீர்கள்.
அது சரி பெரும்பாலான போர்களுக்கு ஏன் அமெரிக்கா காரணகர்த்தாவாக நிற்கிறது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?
பாலசிங்கம் எங்கை இருந்தவர்?

எனது இனம் கொத்து கொத்தாய் மடிந்ததுக்கு யுத்தவெற்றி வாழ்த்து சொன்ன எம்மைபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட பாலஸ்தீன மக்களுக்கு தலைமை தாங்கும் அதன் தலைமையை எந்த கூடையில் வேண்டுமென்றாலும் போடலாம் என்ற கருத்து கொண்டுள்ளேன், நீங்கள் அதே  கூடைக்குள் அவர்களை போடாதிருப்பதில் மகிழ்ச்சி.

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, ஏராளன் said:

ஹமாஸ் தலைவரின் படுகொலை மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது - மத்திய கிழக்கு தொடர்பான நிபுணர் கருத்து

Published By: RAJEEBAN   31 JUL, 2024 | 11:29 AM

image
 

ஹமாஸ் தலைவர்  இஸ்மாயில் ஹனியே  கொல்லப்பட்டுள்ளமை மத்திய கிழக்கை முழுமையான ஒரு யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான பேராசிரியர் நடெர் ஹசேமி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவரின் படுகொலை முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என  அவர்தெரிவித்துள்ளார்.

இது பெரும் திருப்புமுனை என தெரிவித்துள்ள அவர் பெய்ரூட்டின் தென் பகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவரை சில மணிநேரத்திற்கு முன்னர் இஸ்ரேல் படுகொலை செய்ய முயன்றுள்ளதால்  ஹமாஸ் தலைவரின் படுகொலை லெபானிலும் எதிரொலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹனியேயின் படுகொலைக்கு பின்னர் இந்த மோதலை தீவிரப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189875

இவர் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர். ஆயுதப் பிரிவுக்கு அல்ல. 

இவரைப் படுகொலை செய்ததன் உண்மையான நோக்கம் ஈரானை எப்பாடுபட்டாவது போருக்குள் இழுத்துவிடுவதுதான். 

ஆனால் அது நடக்கும் என்று தோன்றவில்லை. 

 

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites

12 minutes ago, valavan said:

எனது இனம் கொத்து கொத்தாய் மடிந்ததுக்கு யுத்தவெற்றி வாழ்த்து சொன்ன எம்மைபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட பாலஸ்தீன மக்களுக்கு தலைமை தாங்கும் அதன் தலைமையை எந்த கூடையில் வேண்டுமென்றாலும் போடலாம் என்ற கருத்து கொண்டுள்ளேன், நீங்கள் அதே  கூடைக்குள் அவர்களை 

ஆனாப்பட்ட கியூபாவே எங்களுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என நினைக்கிறீர்கள்?

14 minutes ago, Kapithan said:

இவர் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர். ஆயுதப் பிரிவுக்கு அல்ல. 

இவரைப் படுகொலை செய்ததன் உண்மையான நோக்கம் ஈரானை எப்பாடுபட்டாவது போருக்குள் இழுத்துவிடுவதுதான். 

ஆனால் அது நடக்கும் என்று தோன்றவில்லை. 

 

கிஸ்புல்லாவை வைத்து செய்ய வேண்டியதை செய்வார்கள்.

 

18 minutes ago, valavan said:

எனது இனம் கொத்து கொத்தாய் மடிந்ததுக்கு யுத்தவெற்றி வாழ்த்து சொன்ன எம்மைபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட பாலஸ்தீன மக்களுக்கு தலைமை தாங்கும் அதன் தலைமையை எந்த கூடையில் வேண்டுமென்றாலும் போடலாம் என்ற கருத்து கொண்டுள்ளேன், நீங்கள் அதே  கூடைக்குள் அவர்களை போடாதிருப்பதில் மகிழ்ச்சி.

நாங்கள் மொக்குதனமாக முஸ்லிம்களை அடித்துவிரட்ட சிறிலங்கா அரசு முஸ்லிம் நாடுகளில் புலிகள் முஸ்லிம்களை அடித்து கலைக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தின் பலாபலன் தான் அது.

  • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இவரும் எங்கட புலம்பெயர் ஈழதமிழர்கள் பலர் போன்று தான் சொந்த நாட்டில் ஒரு வீடும் இலங்கையில் ஒரு வீடும் வைத்திருப்பது போன்று.

அவரது பிள்ளைகள் சகோதர்கள் பலர் அண்மையில் இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

3 hours ago, விசுகு said:

ஈரானுக்குள்ளும் முக்கிய தலைவரை காப்பாற்ற முடியவில்லை அராபியர்களால். 

அதேவேளை அங்கு சென்று தாக்குதலை நடாத்தி விட்டு சேதமற்று வந்திருக்கிறது இஸ்ரேல்.

கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியாக வரும் 

இஸ்ரேலுக்குள் உள்ள பணய கைதிகளையும் காப்பாற்ற முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

இவரைப் படுகொலை செய்ததன் உண்மையான நோக்கம் ஈரானை எப்பாடுபட்டாவது போருக்குள் இழுத்துவிடுவதுதான். 

நான் அப்படி நினைக்கவில்லை  ......இவர்  சம்பந்தனைப்போல்.   பதவியில் ஒட்டி கொண்டு இருப்பார்,.......இதனால் இளைஞர்கள்  திறமைசாலிகள்……………… தலைவர்கள் ஆகும் வாய்ப்புகளை இழந்து விடுவார்கள . , .... புதிய  சிறந்த  திறமையான தலைவர்களை உருவாகிறது இஸ்ரேல்   😂😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

ஆனாப்பட்ட கியூபாவே எங்களுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என நினைக்கிறீர்கள்?

இப்போது கியூபாவை தொட்டுகொள்கிறீர்கள், பின்பு ரஷ்யா,இந்தியா என்றும் தொடரும் வாய்ப்பிருக்கிறது,

 

நாங்கள் பாலஸ்தீன தலைவர் பலி தொடர்பான திரியில் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம் அதனால் அவர்பற்றி பேசினேன், கியூபா பற்றிய செய்திகளாயிருந்தால் கண்டிப்பாக அதே கூடையில்தான் கியூபா  தலைமையும்  போடப்படும் என்பதில் மாற்றமில்லை.

எனது இனத்தின் அழிவை கொண்டாடியவர்களுக்கு முன்னால் நடு நிலமை என்பது ஒருபோதும் இல்லை.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும்.

இது 100%    உண்மையாகும்     

Link to comment
Share on other sites

ஹெஸ்புல்லாவின் கொமாண்டோவான Fouad Chokr என்பவரை லெபனானின் தலைநகரில் நடத்திய தாக்குதலில் தாம் கொன்றுள்ளதாக இஸ்ரெயில் அறிவித்துள்ளது. இவர் கடந்த சனி இஸ்ரெயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பானவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் ஐயா ஓய்வு காலத்தை நோக்கி செல்கின்றார். அடுத்த தலைவர் சிங்கமா அல்லது கமலா அக்காவா என்பது தெரியாது. அமெரிக்காவின் அரசியல் தலைமையின் நிச்சயமற்ற தன்மையை இஸ்ரேல், ஈரான், இரஷ்யா, தமக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கலாம். 

 

Link to comment
Share on other sites

2 minutes ago, நியாயம் said:

பைடன் ஐயா ஓய்வு காலத்தை நோக்கி செல்கின்றார். அடுத்த தலைவர் சிங்கமா அல்லது கமலா அக்காவா என்பது தெரியாது. அமெரிக்காவின் அரசியல் தலைமையின் நிச்சயமற்ற தன்மையை இஸ்ரேல், ஈரான், இரஷ்யா, தமக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கலாம். 

 

சிங்கம் வந்தாலும் இஸ்ரேல் பிரச்சனை இஸ்ரேலுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் போலுள்ளது. கமலா இஸ்ரேலியர்களுக்கு எதிரானவர் என்று பிரச்சாரம் செய்து யூதர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அபு அல்-அப்து என்ற புனைப்பெயர் கொண்ட இஸ்மாயில் அப்தெல் சலாம் ஹனியே, பாலத்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர். இவர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவர்.

சொந்த மண்ணின் அருமையும் அந்த மண்ணின் மீதான தாக்குதலும் அந்த மண்ணின் சுரண்டலும் வலிகளும் வேதனைகளும் சொந்த மண்ணிலேயே அகதியானவனுக்குத்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

ஆழ்ந்த அனுதாபங்கள், இஸ்ரேலிய அரச பயங்கரவாதிகளின் அழிவு நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

இஸ்ரேல் ஆதரவாளர்கள் இஸ்ரேல் செய்யும் அழிவுகளையும் ஆக்கிரப்புகளையும் கொலைகளையும் கண்டுகொள்வதுமில்லை.கண்டிப்பதுமில்லை.

 கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவருக்கு அழ்ந்த அனுதாபங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயிலின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்!

Published By: DIGITAL DESK 3   31 JUL, 2024 | 03:16 PM

image

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனத்தை வெளியிட்டுள்ளார். 

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189902

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஏராளன் said:

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயிலின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்!

Published By: DIGITAL DESK 3   31 JUL, 2024 | 03:16 PM

image

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனத்தை வெளியிட்டுள்ளார். 

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189902

இங்கே பாரடா? 

1 hour ago, குமாரசாமி said:

சொந்த மண்ணின் அருமையும் அந்த மண்ணின் மீதான தாக்குதலும் அந்த மண்ணின் சுரண்டலும் வலிகளும் வேதனைகளும் சொந்த மண்ணிலேயே அகதியானவனுக்குத்தான் தெரியும்.

இது ஏன் அண்ணா உக்ரைன் மக்களுக்கு பொருந்தாது???

2 hours ago, valavan said:

எனது இனம் கொத்து கொத்தாய் மடிந்ததுக்கு யுத்தவெற்றி வாழ்த்து சொன்ன எம்மைபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட பாலஸ்தீன மக்களுக்கு தலைமை தாங்கும் அதன் தலைமையை எந்த கூடையில் வேண்டுமென்றாலும் போடலாம் என்ற கருத்து கொண்டுள்ளேன், நீங்கள் அதே  கூடைக்குள் அவர்களை போடாதிருப்பதில் மகிழ்ச்சி.

 

1 hour ago, valavan said:

இப்போது கியூபாவை தொட்டுகொள்கிறீர்கள், பின்பு ரஷ்யா,இந்தியா என்றும் தொடரும் வாய்ப்பிருக்கிறது,

 

நாங்கள் பாலஸ்தீன தலைவர் பலி தொடர்பான திரியில் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம் அதனால் அவர்பற்றி பேசினேன், கியூபா பற்றிய செய்திகளாயிருந்தால் கண்டிப்பாக அதே கூடையில்தான் கியூபா  தலைமையும்  போடப்படும் என்பதில் மாற்றமில்லை.

எனது இனத்தின் அழிவை கொண்டாடியவர்களுக்கு முன்னால் நடு நிலமை என்பது ஒருபோதும் இல்லை.

நன்றி எனது நேரத்துக்கு. .

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 09 SEP, 2024 | 12:35 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் 3 நேர் செட்களில் வெற்றியீட்டிய இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் முதல் தடவையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சபாலென்காவும் சின்னரும் இந்த வருடம் நடைபெற்ற முதலாவது மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டியிலும் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தனர். சின்னருக்கும் ப்ரிட்ஸுக்கும் இடையிலான ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருந்தது. முதலாவது செட்டில் ஒரு கட்டத்தில் 3 - 3 என்ற ஆட்டங்கள் கணக்கில் இருவரும் சம நிலையில் இருந்தனர். ஆனால், அடுத்த 3 ஆட்டங்களையும் தனதாக்கிக்கொண்ட சின்னர் முதல் செட்டில் 6 - 3 என வெற்றிபெற்றார். தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது செட்டிலும் இருவரும் சம அளவில் மோதிக்கொண்ட போதிலும் தரவரிசையில் முதல் நிலை வீரரான சின்னர் 6 - 4 என வெற்றிபெற்று 2 - 0 என்ற செட்கள் கணக்கில் முன்னலையில் இருந்தார். மூன்றாவது செட்டில் யார் வெற்றிபெறுவார் என்று கூறமுடியாத அளவுக்கு இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். சமநிலை முறிப்புவரை நீடித்த மூன்றவாது செட்டில் சின்னர் 7 - 5 என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்டதாக கடந்த  மார்ச் மாதத்தில் இரண்டு தடவைகள் நேர்மறையான மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வெளியான நிலையில், சின்னர் குற்றமற்றவர் என உறுதி செய்யப்பட்டு 19 தினங்களில் இந்த வெற்றி அவருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க பகிரங்க டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சம்பியனான முதலாவது இத்தாலி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் சின்னர் நிலைநாட்டினார். https://www.virakesari.lk/article/193214
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வார நாட்களில் வேலைப் பளுவைக் காரணம் காட்டி அல்லது இணையத்தில் மூழ்கி 5 அல்லது 6 மணி நேரம் மட்டுமே தூங்குவதை நம்மில் சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் மனதில் நினைப்பது என்னவென்றால், இதற்கெல்லாம் சேர்த்து வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் தூங்கிக் கொள்ளலாம் என்பது தான். இதற்கு ஸ்லீப் டெப்ட் (Sleep Debt) என்று பெயர், அதாவது ஒருநாளைக்கு ஒருவர் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என ஆய்வுகள் கூறும் போது (இது வயதிற்கு ஏற்றாற் போல மாறுபடும்), அதற்கு நேர்மாறாக 5 மணி நேரம் மட்டுமே ஒருவர் தூங்கினால் 2, 3 மணிநேரங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்படியே பல நாட்களுக்கு தொடர்ந்து 2 அல்லது 3 மணிநேரங்கள் தூக்கத்தை இழப்பது ‘ஸ்லீப் டெப்ட்’ எனப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மேலும்மேலும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பது போலாகும். இவ்வாறு வார நாட்களில் முறையாக தூங்காமல், வார இறுதி நாட்களில் சேர்த்து வைத்து தூங்கிக் கொள்ளலாம் என நினைப்பது சரியா? ‘தூக்கமின்மை முழு உடலையும் பாதிக்கும்’ நரம்பியல் விஞ்ஞானியும் ‘Why we sleep’ என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர். மேத்யூ வாக்கர், "தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்திற்கான ஒரு ஆயுதம் போல. அதாவது அதை முறையாக பயன்படுத்தினால் வலிமை கூடும், உடல் நன்றாக இருக்கும், ஆனால் அதை உதாசீனப்படுத்தினால் உடல் கெட்டுப் போகும், நோய்கள் அதிகரிக்கும். தூக்கம் குறைவாக இருந்தால் , உங்கள் முழு உடலும் பாதிக்கப்படும்." என்று சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசுகையில் கூறியிருந்தார். தூக்கத்திற்கான சில மணிநேரத்தை நாம் வேறு வேலைகளுக்காக ‘கடன் வாங்கலாம்’, ஆனால் அதை நாம் நிச்சயம் திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மேத்யூ வாக்கர் கூறுகிறார். “ஒரு நாளைக்கு நாம் 8 மணிநேரம் தூங்க வேண்டும். தொடர்ந்து பல நாட்களுக்கு 6 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான பாதிப்பு 200 சதவீதம் அதிகமாக உள்ளது” என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது ‘தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது’ அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் டாக்டர். மைக்கன் நெடர்கார்ட் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், “தூக்கத்தின் போது, மூளை ‘கிளைம்ஃபேடிக் சிஸ்டம்’ எனப்படும் ‘சுத்தப்படுத்தும் செயல்முறைக்கு’ உட்படுகிறது. அல்சைமர் நோயுடன் தொடர்புடைய புரதமான பீட்டா-அமிலாய்டு உள்ளிட்ட நச்சுகளை இந்த அமைப்பு மூளையிலிருந்து வெளியேற்றுகிறது.” என்று கண்டறியப்பட்டது. அதாவது நம் சிறுநீரகம் எப்படி கழிவுகளை வெளியேற்றுகிறதோ அதே போல தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அந்த ஆய்வு கூறுகிறது. குறைவான தூக்கத்தால், மூளையின் கழிவுகள் சுத்தமாவது குறையும் என்றும், இது நீண்ட கால அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. எனவே உறக்கம் என்பது ஓய்வுக்காக மட்டுமல்ல, அது மூளையின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ‘ஸ்லீப் டெப்ட்’ பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு முன்பாக, தூக்கத்தின் கட்டங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் (National Library of Medicine) இணையதள கட்டுரையின்படி, பொதுவாக தூக்கத்தின் ஒரு சுழற்சி என்பது 90- 110 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஒரு இரவின் தூக்கத்தில் இதுபோன்ற 4-5 சுழற்சிகளை நாம் வழக்கமாக கடக்கிறோம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது இதில் ஒவ்வொரு சுழற்சியிலும் 5 கட்டங்கள் இருக்கும். சுழற்சியின் முதல் மூன்று கட்டங்கள், 'விரைவற்ற கண் அசைவு தூக்கம்' (Non rapid eye movement- என்ஆர்இஎம்) என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் நாம் இதை ஆழ்ந்த தூக்கம் என்று சொல்கிறோம். தூக்கத்தின் 75% ‘என்ஆர்இஎம்’ நிலையில் தான் செலவிடப்படும். இரண்டாவது கட்டம், விரைவான கண் அசைவு (REM- ஆர்இஎம்) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக கனவு காண்கிறோம். நாம் தூங்கும் போது, படிப்படியாக ‘என்ஆர்இஎம்’ குறைந்து, ‘ஆர்இஎம்’ அதிகரிக்கிறது. தூக்கம் தொடர்பான நோய்களை எதிர்கொள்ளும் அனைவருக்குமே, இந்த இரண்டு கட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளன. ஞாபக சக்தி, முடிவெடுக்கும் திறன், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் இந்த இரண்டு கட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி தூக்கத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் ஒருவர் தூக்க சுழற்சியின் முக்கியமான ‘ஆர்இஎம்’ மற்றும் ‘என்ஆர்இஎம்’ கட்டங்களை இழக்க நேரிடும். இது ஞாபக சக்தி குறைதல், முடிவெடுக்கும் திறன் குறைதல், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் கட்டுரை கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘குறைவான தூக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு’ இந்த வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவின் ‘யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின்’ வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், “அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும், மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது. அவை வாழ்க்கையின் பிற்பகுதியில் பக்கவாதம் மற்றும் டிமென்ஷியா (மறதிநோய்), அபாயத்தை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுளளது. யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் ஆய்வுக் குழு, மிகக் குறைவான தூக்கம் (ஏழு மணி நேரத்திற்கும் குறைவானது), உகந்த தூக்கம் (ஏழு முதல் ஒன்பது மணி நேரத்திற்கு) மற்றும் அதிக தூக்கம் (ஒன்பது மணிநேரத்திற்கும் அதிகமாக தூங்குவது) என இந்த மூன்றும் மூளையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்தது. இதில் தினமும் ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குவதற்கும், மூளை மற்றும் உடலின் ஆரோக்கிய குறைபாட்டிற்கும் நேரடி தொடர்பு உள்ளது என கண்டறியப்பட்டது.   ‘தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம்’ படக்குறிப்பு,எஸ்.ஜெயராமன், நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் “வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு குறைவான நேரம் உறங்கிவிட்டு, பின்னர் வார இறுதியில் 10 முதல் 12 மணிநேரம் வரை உறங்குவது நிச்சயமாக நாம் இழந்த தூக்கத்தை ஈடுசெய்யாது. தற்காலிகமாக உடல்சோர்வு நீங்கியது போல தோன்றினாலும் கூட, நீண்ட காலத்திற்கு இதை பின்பற்றுவது, இதய நோய்கள் முதல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் எஸ்.ஜெயராமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இரவு 10 முதல் காலை 6 மணி வரை என்பதே தூங்க உகந்த நேரம். அதுவும் கண்டிப்பாக 8 மணிநேரம் தூக்கம் அவசியம். ஒருவேளை இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் என்றால், பணி முடிந்த பிறகு தினமும் 8 மணி நேரம் தொடர்ச்சியாக உறங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.” என்கிறார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, டெய்சுகே ஹோரி என்ற 40 வயதான நபர், கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாகவும், தனது ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்க அவர் இவ்வாறு செய்வதாகவும் ஆங்கில நாளிதழான ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டது. குறைவான, அதே சமயத்தில் ஆழமான தூக்கத்தால் தனது செயல்திறன் மேம்பட்டுள்ளதாக அவர் கூறுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகப் பரவியது. இது குறித்து எஸ்.ஜெயராமனிடம் கேட்டபோது, “இது நிச்சயம் எல்லோருக்குமானது அல்ல. தூக்கம் குறித்து எவ்வளவோ ஆய்வுகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் ஏற்படும் என்றே அனைத்து ஆய்வுகளும் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களும் வரக்கூடும். எனவே பொது மக்கள் இதுபோன்ற செய்திகளைப் பார்த்து விட்டு, குறைவான நேரம் உறங்கக்கூடாது.” என்கிறார். மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கையை தூக்கத்தில் கழிக்கும் வகையிலேயே மனித இனம் படைக்கப்பட்டுள்ளது என்று கூறிய எஸ்.ஜெயராமன், “தூங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பு டிஜிட்டல் திரைகள் பார்க்காமல் இருப்பது, சீக்கிரமாக இரவு உணவு எடுத்துக்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது, போன்ற சில பழக்கங்கள் மூலம் தினமும் 8 மணி நேர தூக்கம் என்பது சாத்தியமே” என்று கூறினார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czjyx771ll8o
    • ஜோர்தான் மேற்கு கரை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • 09 SEP, 2024 | 12:30 PM மேற்குகரையில் ஜோர்தான் எல்லைக்கு அருகில் ஜோர்தானை சேர்ந்த வாகனச்சாரதி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இஸ்ரேலை சேர்ந்த மூன்று இஸ்ரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜோர்தான் ஆற்றினை கடக்கும் பகுதியில் உள்ள அலன்பை பாலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதியொருவர் டிரக்கில் அலைன் பை பாலத்தை நோக்கி வந்தார் டிரக்கிலிருந்து இறங்கினார் அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ,தாக்குதலை மேற்கொண்டவரும் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கி தாக்குதல் தனிநபரின் செயல் என தெரிவித்துள்ள ஜோர்தான் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  தெரிவித்துள்ளது. துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டவர் ஜோர்தானை சேர்ந்த 39 வயது நபர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/193212
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.