Jump to content

வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   14 SEP, 2024 | 10:36 AM

image
 

தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையின் பரந்துபட்ட அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால அமைச்சரவையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்துவதற்கு தனது கட்சி முயலும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம். சிங்கள அரசாங்கத்தையில்லை, என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் சாராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கும் முதலாவது அமைச்சரவையாக இது காணப்படும் என தெரிவித்துள்ளார்.

222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்குகிழக்கு மலையகத்தை சேர்ந்த சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/193648

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேச்சே,.......

நாங்கள் பகிஸ்கரிப்போம் அல்லது அதற்குப் போட்டியாக இன்னும் ஒரு அ

அமைச்சரவையை கொண்டுவருவோம். அது இயங்காவிட்டலும் பிரச்சனை இல்லை. 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்குகிழக்கு மலையகத்தை சேர்ந்த சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த அதிபர் அநுரகுமார தான்.  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கை வாழ் மக்களனைவரும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த இடைக்கால அமைச்சரவையில் வடக்கைச் சேர்ந்தவர்களும்  அமைச்சராவார்கள். அதன்படி திரு சிறீதரன் அவர்கள் திருக்குறள், திருக்குறள் அபிவிருத்தி மற்றும் பேச்சுப்போட்டி அமைச்சராக வரவாய்ப்பு உள்ளது!

Edited by வாலி
  • Haha 3
Link to comment
Share on other sites

36 minutes ago, வாலி said:

அடுத்த அதிபர் அநுரகுமார தான்.  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கை வாழ் மக்களனைவரும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த இடைக்கால அமைச்சரவையில் வடக்கைச் சேர்ந்தவர்களும்  அமைச்சராவார்கள். அதன்படி திரு சிறீதரன் அவர்கள் திருக்குறள், திருக்குறள் அபிவிருத்தி மற்றும் பேச்சுப்போட்டி அமைச்சராக வரவாய்ப்பு உள்ளது!

அரியத்துக்கு என்ன அமைச்சு பதவி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

அரியத்துக்கு என்ன அமைச்சு பதவி?

ஆப்பிழு குரங்குகள் மற்றும் அப்பம் பிரிப்பு, பராமரிப்பு அமைச்சுப் பதவி ஏற்கனவே ரெடியாகிவிட்டதே!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் அய்யாவுக்கு என்ன அமைச்சர் பதவி என்று கேட்கலாமா  அவர் தான் துணை ஜனாதிபதி

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் அய்யாவுக்கு என்ன அமைச்சர் பதவி என்று கேட்கலாமா  அவர் தான் துணை ஜனாதிபதி

வடமாகாண அபிவிருத்தி அமைச்சர் என சொன்னால் குறைந்தா போய்விடியல்😅...மலையக தமிழ் பிரதிநிதிகள் ஏறகனவே அமைச்சரா இருக்கின்றனர் ..அன்றைய தொன்டமானிலிருந்து இன்றைய தொண்டமான் வரை.....

அதாவது இன்று இந்தியாவுக்கு தேவை முழு சிறிலங்காவும் தனது  ஆட்சியின் கீழ் இருக்க் வேணுமென நினைக்கின்றனர் ...தமிழர்கள் ,தமிழ் மொழி பேசும் மாகாணங்கள் இலங்கையில் இல்லைஎன்பதை உலகறி செய்ய முழு மூச்சாக செயல் படுகின்றனர்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, கொள்கையளவில் இணைந்திருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத் தீர்ப்பொன்றின் ஊடாக பிரித்துப்போட்டது இவரது கட்சிதான். இலங்கையில் இருக்கும் அனைத்து இன மக்களுக்கும் இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினையே தமிழர்களுக்கும் இருக்கின்றது, அவர்களுக்கென்று இனரீதியாகப் பிரச்சிகள் இல்லை என்று கூறுவதும் இவரது கட்சிதான். இதுகுறித்த தமிழ் மக்களின் பதில் என்ன?

இவரை ஆதரிப்பதால் 

1. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கத் தேவையில்லை
2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான பிரச்சினைகள் இல்லை

என்கிற முடிவிற்குத் தமிழர்கள் வந்துவிட்டோமா? இங்கே எழுதப்படும் கருத்துக்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரஞ்சித் said:

வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கத் தேவையில்லை
2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான பிரச்சினைகள் இல்லை

என்கிற முடிவிற்குத் தமிழர்கள் வந்துவிட்டோமா? இங்கே எழுதப்படும் கருத்துக்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது.

இணக்க அரசியலில் சங்கமமாகி விட்டார்கள்.

அடக்கு முறைக்குள் இருந்து சுதந்திரமாக உலாவ முடிகிறது.

நீண்ட வரிசையில் நின்று களைத்துப் போனோம்.

இப்போ பாணும் பருப்பும் சுலபமாக கிடைக்கிறது.

இதுக்கு அப்பால் என்ன தான் வேண்டும்.

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரஞ்சித் said:

அதுசரி, கொள்கையளவில் இணைந்திருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத் தீர்ப்பொன்றின் ஊடாக பிரித்துப்போட்டது இவரது கட்சிதான். இலங்கையில் இருக்கும் அனைத்து இன மக்களுக்கும் இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினையே தமிழர்களுக்கும் இருக்கின்றது, அவர்களுக்கென்று இனரீதியாகப் பிரச்சிகள் இல்லை என்று கூறுவதும் இவரது கட்சிதான். இதுகுறித்த தமிழ் மக்களின் பதில் என்ன?

இவரை ஆதரிப்பதால் 

1. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கத் தேவையில்லை
2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான பிரச்சினைகள் இல்லை

என்கிற முடிவிற்குத் தமிழர்கள் வந்துவிட்டோமா? இங்கே எழுதப்படும் கருத்துக்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

எங்கள் கொள்கைகளைக்  கைவிடவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.

ஆனால் கொள்கைகள் கைகூட வேண்டுமெனில் இருப்பு முக்கியம்  அல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

இருப்பு முக்கியம்  அல்லவா

எப்பிடி, வடக்குக் கிழக்கை பிரித்தே வைத்திருக்கலாம் என்று அவர்களுடன் ஒத்துப்போவதன் ஊடாகவா இருப்பைத் தக்கவைக்கப்போகிறீர்கள்? ஆக, வடக்குக் கிழக்கு தனித்தனியாக பிரிக்கப்பட்டு சிறுகச் சிறுக அரிக்கப்படுவது தமிழர்களின் இருப்பைப் பாதிக்கப்போவதில்லை என்கிறீர்கள். நீங்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். 

 

9 minutes ago, Kapithan said:

எங்கள் கொள்கைகளைக்  கைவிடவேண்டும்

அப்போது இதுகுறித்து எப்போதுதான் அவர்களுடன் பேசுவதாக உத்தேசம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

 

ஆனால் கொள்கைகள் கைகூட வேண்டுமெனில் இருப்பு முக்கியம்  அல்லவா? 

இதைப் பற்றி ஒருத்தருக்கும் பிரச்சனையில்லை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

எப்பிடி, வடக்குக் கிழக்கை பிரித்தே வைத்திருக்கலாம் என்று அவர்களுடன் ஒத்துப்போவதன் ஊடாகவா இருப்பைத் தக்கவைக்கப்போகிறீர்கள்? ஆக, வடக்குக் கிழக்கு தனித்தனியாக பிரிக்கப்பட்டு சிறுகச் சிறுக அரிக்கப்படுவது தமிழர்களின் இருப்பைப் பாதிக்கப்போவதில்லை என்கிறீர்கள். நீங்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். 

 

அப்போது இதுகுறித்து எப்போதுதான் அவர்களுடன் பேசுவதாக உத்தேசம்? 

உங்கள் புரிதலில் தவறு உள்ளது. 

விபு க்கள் கூட பேச்சுவார்த்தை என்று வரும்போது முதலில் வாழ்வாதார,  நடைமுறைப் பிரச்சனைகளைப் பற்றியே பேசினர். 

எங்கள் அரசியல்வாதிகளுக்கு முள்ளந்தண்டும் மூளையும் இருந்திருப்பின் கடந்த 15 வருடங்களில் அங்குள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை எவ்வளவோ தீர்த்திருக்க முடியும். 

நாங்கள் முஸ்லிம் தலைமைகளைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டும்.  அடுத்த 10 / 15 வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். அப்போது எம்மைப்பற்றிக் கதைக்க ஒருவரும் இலர். 

ஆகாயத்தில் கோட்டை கட்ட முடியாது. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பும் அடிப்படை வாழ்க்கை  பிரச்சனைகளும் மிகவும் முக்கியானது. ஆனால்ஜேவிபி வந்தால் முழு இலங்கைக்கும் தீமை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

460202055_8542603712428564_8320627508372

ஜேவிபி இனவாத கூட்டத்தின் ஏமாற்று விளையாட்டு அம்பலம்.

சீனா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வழங்கியிருந்தும் மக்களை திரட்ட முடியாமல் கூட்டம் சேர்ந்ததாக மக்களையும், காசு கொடுத்த சீனாக்காரனையும் ஏமாற்றுவதற்காக எடிட்டிங் விளையாட்டுக்களில் ஈடுபட்டு அரசியல் தெளிவற்றவர்களை ஏமாற்றி வாக்குகளை பறிக்கும் திட்டம் அம்பலமாகியுள்ளது.

Kunalan Karunagaran 

May be an image of one or more people, heart and crowd

இது தான் உண்மையான படம். அதிலேயேட்கள் அதிகமாக இருக்கும் போது எடிட்டிங் ஏன்? ஆர்வக் கோளாறோ....  😂 🤣

செந்தூர் தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

460202055_8542603712428564_8320627508372

ஜேவிபி இனவாத கூட்டத்தின் ஏமாற்று விளையாட்டு அம்பலம்.

சீனா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வழங்கியிருந்தும் மக்களை திரட்ட முடியாமல் கூட்டம் சேர்ந்ததாக மக்களையும், காசு கொடுத்த சீனாக்காரனையும் ஏமாற்றுவதற்காக எடிட்டிங் விளையாட்டுக்களில் ஈடுபட்டு அரசியல் தெளிவற்றவர்களை ஏமாற்றி வாக்குகளை பறிக்கும் திட்டம் அம்பலமாகியுள்ளது.

Kunalan Karunagaran 

May be an image of one or more people, heart and crowd

இது தான் உண்மையான படம். அதிலேயேட்கள் அதிகமாக இருக்கும் போது எடிட்டிங் ஏன்? ஆர்வக் கோளாறோ....  😂 🤣

செந்தூர் தமிழ்

இதையெல்லாம் ஒரு விடயமாக எடுக்க வேண்டுமா ? 

பெறுமதியற்ற விடயங்களைத் தவிர்ப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

17 hours ago, ரஞ்சித் said:

அதுசரி, கொள்கையளவில் இணைந்திருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத் தீர்ப்பொன்றின் ஊடாக பிரித்துப்போட்டது இவரது கட்சிதான். இலங்கையில் இருக்கும் அனைத்து இன மக்களுக்கும் இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினையே தமிழர்களுக்கும் இருக்கின்றது, அவர்களுக்கென்று இனரீதியாகப் பிரச்சிகள் இல்லை என்று கூறுவதும் இவரது கட்சிதான். இதுகுறித்த தமிழ் மக்களின் பதில் என்ன?

இவரை ஆதரிப்பதால் 

1. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கத் தேவையில்லை
2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான பிரச்சினைகள் இல்லை

என்கிற முடிவிற்குத் தமிழர்கள் வந்துவிட்டோமா? இங்கே எழுதப்படும் கருத்துக்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

வடக்கில் அனேகமான தொகுதிகளில் நாலாவதாக தான் வருவார். கிழக்கில் பல இடங்களில் மூன்றாவதாகவும், சில இடங்களில் நான்காவதாகவும் வருவார் என நினைக்கிறேன்.

சமூக நீதி எனும் முகமூடியை போட்டு கொண்டு வரும் இனவாத ஜேவிபி யின் சனாதிபதி கனவு வடக்கு கிழக்கு மக்களால் முறியடிக்கப்படும் சாத்தியமே அதிகம்.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

உங்கள் புரிதலில் தவறு உள்ளது. 

விபு க்கள் கூட பேச்சுவார்த்தை என்று வரும்போது முதலில் வாழ்வாதார,  நடைமுறைப் பிரச்சனைகளைப் பற்றியே பேசினர். 

எங்கள் அரசியல்வாதிகளுக்கு முள்ளந்தண்டும் மூளையும் இருந்திருப்பின் கடந்த 15 வருடங்களில் அங்குள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை எவ்வளவோ தீர்த்திருக்க முடியும். 

நாங்கள் முஸ்லிம் தலைமைகளைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டும்.  அடுத்த 10 / 15 வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். அப்போது எம்மைப்பற்றிக் கதைக்க ஒருவரும் இலர். 

ஆகாயத்தில் கோட்டை கட்ட முடியாது. 

புலிகள் அன்றாடப் பிரச்சினைகள் குறித்துப் பேசலாம் என்றுகேட்டது உண்மைதான். ஏனென்றால், நீண்டகாலப்பிரச்சினைகளான உரிமை, தாயக நிலம், அதிகாரம் என்பவற்றினைபெற்றுக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. தமது ஆயுதப் போராட்ட ஊடாக அரசைப்பணியவைக்கவோஅல்லது தனிநாட்டை உருவாக்கவோ அவர்களிடம் வல்லமையும்நம்பிக்கையும் இருந்தது. அதனால் அன்றாடப் பிரச்சினைகள்குறித்து இப்போது பேசலாம், நீண்டகாலப் பிரச்சினைகளைபின்னர் பார்க்கலாம் என்று கூறினார்கள். மக்களுக்கும் அதுநம்பிக்கை தருவதாக இருந்தது.

 

இன்று அன்றாடப் பிரச்சினைகளை மட்டுமே பேசிவிட்டு அரசியல்ப்பிரச்சினைகளை பின்னர் பேசலாம் என்கிற நம்பிக்கையோஅல்லது சிங்களவர்கள் அதனைத் தருவார்கள் என்கிறநம்பிக்கையோ உங்களுக்கு இருக்கிறதா? எதற்காக அவர்கள்அதனை உங்களுக்குத் தாரைவார்த்துத் தருவார்கள் என்றுநம்புகிறீர்கள்?

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

புலிகள் அன்றாடப் பிரச்சினைகள் குறித்துப் பேசலாம் என்றுகேட்டது உண்மைதான். ஏனென்றால், நீண்டகாலப்பிரச்சினைகளான உரிமை, தாயக நிலம், அதிகாரம் என்பவற்றினைபெற்றுக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. தமது ஆயுதப் போராட்ட ஊடாக அரசைப்பணியவைக்கவோஅல்லது தனிநாட்டை உருவாக்கவோ அவர்களிடம் வல்லமையும்நம்பிக்கையும் இருந்தது. அதனால் அன்றாடப் பிரச்சினைகள்குறித்து இப்போது பேசலாம், நீண்டகாலப் பிரச்சினைகளைபின்னர் பார்க்கலாம் என்று கூறினார்கள். மக்களுக்கும் அதுநம்பிக்கை தருவதாக இருந்தது.

 

இன்று அன்றாடப் பிரச்சினைகளை மட்டுமே பேசிவிட்டு அரசியல்ப்பிரச்சினைகளை பின்னர் பேசலாம் என்கிற நம்பிக்கையோஅல்லது சிங்களவர்கள் அதனைத் தருவார்கள் என்கிறநம்பிக்கையோ உங்களுக்கு இருக்கிறதா? எதற்காக அவர்கள்அதனை உங்களுக்குத் தாரைவார்த்துத் தருவார்கள் என்றுநம்புகிறீர்கள்?

உங்கள் கற்பிதம் தவறு. 

அவர்கள் தாரைவார்த்துத் தருவார்கள் என்று ஒருவரும் கூறவில்லை. ஆனால் அதற்காக அங்குள்ள மக்களை ஏழ்மையிலும் பட்டினியிலும் வாழ விட முடியாது. 

பசியில்லை, பயமில்லை, பாதுகாப்புப் பிரச்சனையோ அல்லது எதிர்காலம் தொடர்பான பயமோ உங்களுக்கும் எனக்கும்  இல்லை. அதனால் நீங்களும் நானும்  உரிமையைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். 

தாயக மக்களின் நிலையோ நேரெதிரானது. 

உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக் கண்ணன் எனும் நிலைக்கு தாயகத்தில் உள்ளவர்களைத் தள்ளி இட முடியாது. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

உங்கள் கற்பிதம் தவறு. 

அவர்கள் தாரைவார்த்துத் தருவார்கள் என்று ஒருவரும் கூறவில்லை. ஆனால் அதற்காக அங்குள்ள மக்களை ஏழ்மையிலும் பட்டினியிலும் வாழ விட முடியாது. 

பசியில்லை, பயமில்லை, பாதுகாப்புப் பிரச்சனையோ அல்லது எதிர்காலம் தொடர்பான பயமோ உங்களுக்கும் எனக்கும்  இல்லை. அதனால் நீங்களும் நானும்  உரிமையைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். 

தாயக மக்களின் நிலையோ நேரெதிரானது. 

உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக் கண்ணன் எனும் நிலைக்கு தாயகத்தில் உள்ளவர்களைத் தள்ளி இட முடியாது. 

 

தமிழர்களின் அன்றாடப் பிரச்சினைகள் என்பது எப்போதுமே உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட்டே வருகின்றது. சிங்கள ஆளும்தரப்புக்கள் தொடர்ச்சியாகவே தமிழர்களை ஏதோவொரு அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைக்குள் அமிழ்த்தியே வைத்திருக்கின்றன. 

 

புலிகளின் காலத்தில் அரசியல்ப் பிரச்சினைபற்றிப் பேசலாம் என்று புலிகள் கேட்டபோதெல்லாம், அன்றாடப் பிரச்சினைகள் முதலில்பேசலாம் என்றே அரசுகள் அலைக்கழித்துவந்தன. அதனாலேயே புலிகளும் ஒரு கட்டத்தில் அரசின் வழியில் சென்று, சரி பேசலாம், இடைக்கால நிர்வாக சபையினைத் தாருங்கள் என்று கேட்டார்கள். உடனே அரசு சுதாரித்துக்கொண்டு அரசியல்ப் பிரச்சினை பற்றிப்பேசலாம் என்றது.

 

தமிழரின் அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளைத்தீர்த்தபின்னர்தான் அரசியல்ப் பிரச்சினை பற்றிப் பேசலாம்என்றால், தமிழருக்கு அரசியல்த் தீர்வு ஒருபோதுமே கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால், அன்றாடப்பிரச்சினைகளை அரசு ஒருபோதும் தீர்க்காது.

 

இப்போது அரசியல் பேசவேண்டாம், அன்றாடப் பிரச்சினை பற்றிப்பேசலாம் என்கிறீர்கள். சரி, அப்போ எப்போதுதான் அரசியல்ப்பிரச்சினை குறித்துப் பேசலாம் என்று நினைக்கிறீர்கள்? இன்னும் 5 வருடங்களில்? 10 வருடங்களில்? 50 வருடங்களில்? அப்போதுமட்டும் தமிழர்களின் அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகள்தீர்க்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறீர்கள்?

 

அரசியல்ப் பிரச்சினையும், அன்றாடப் பிரச்சினையும் சமாந்தரமாகஒரே நேரத்தில் பேசப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

தமிழர்களின் அன்றாடப் பிரச்சினைகள் என்பது எப்போதுமே உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட்டே வருகின்றது. சிங்கள ஆளும்தரப்புக்கள் தொடர்ச்சியாகவே தமிழர்களை ஏதோவொரு அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைக்குள் அமிழ்த்தியே வைத்திருக்கின்றன. 

 

புலிகளின் காலத்தில் அரசியல்ப் பிரச்சினைபற்றிப் பேசலாம் என்று புலிகள் கேட்டபோதெல்லாம், அன்றாடப் பிரச்சினைகள் முதலில்பேசலாம் என்றே அரசுகள் அலைக்கழித்துவந்தன. அதனாலேயே புலிகளும் ஒரு கட்டத்தில் அரசின் வழியில் சென்று, சரி பேசலாம், இடைக்கால நிர்வாக சபையினைத் தாருங்கள் என்று கேட்டார்கள். உடனே அரசு சுதாரித்துக்கொண்டு அரசியல்ப் பிரச்சினை பற்றிப்பேசலாம் என்றது.

 

தமிழரின் அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளைத்தீர்த்தபின்னர்தான் அரசியல்ப் பிரச்சினை பற்றிப் பேசலாம்என்றால், தமிழருக்கு அரசியல்த் தீர்வு ஒருபோதுமே கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால், அன்றாடப்பிரச்சினைகளை அரசு ஒருபோதும் தீர்க்காது.

 

இப்போது அரசியல் பேசவேண்டாம், அன்றாடப் பிரச்சினை பற்றிப்பேசலாம் என்கிறீர்கள். சரி, அப்போ எப்போதுதான் அரசியல்ப்பிரச்சினை குறித்துப் பேசலாம் என்று நினைக்கிறீர்கள்? இன்னும் 5 வருடங்களில்? 10 வருடங்களில்? 50 வருடங்களில்? அப்போதுமட்டும் தமிழர்களின் அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகள்தீர்க்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறீர்கள்?

 

அரசியல்ப் பிரச்சினையும், அன்றாடப் பிரச்சினையும் சமாந்தரமாகஒரே நேரத்தில் பேசப்பட வேண்டும்.

அரசியல் பற்றி பேசவேண்டாம் என்று யாரும் கூறவில்லை. அன்றாடப் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள் என்பது பிழையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அரசியல் பற்றி பேசவேண்டாம் என்று யாரும் கூறவில்லை. அன்றாடப் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள் என்பது பிழையா? 

தமிழர்களுக்கென்று  அரசியல்ப்  பிரச்சினைகள்  எதுவும்கிடையாது. இருப்பதெல்லாம்  ஏனைய இலங்கையர்களைப்  போன்று  பொருளாதாரப்  பிரச்சினை  மட்டும்தான்  என்று கூறுகின்ற  ஒரு  கட்சிக்காக வாக்குக்  கேட்கிறீர்கள்.  சரி,  ஒரு  பேச்சிற்கு  தமிழர்களின்  பொருளாதாரப்  பிரச்சினைகளைத்தீர்த்துவிடுகிறார்கள்  என்று  வைத்துக்கொள்வோம்.  அதன்  பின்னர்  இனித்  தமிழர்களுக்குப்  பிரச்சினையில்லை  என்றுகையை  விரித்தால்  என்ன  செய்வதாக  உத்தேசம்? இதற்குத்தான்,  தமிழரின்  அரசியல்ப்  பிரச்சினைகளையும் சேர்த்தே  பேசுங்கள்  என்று கேட்கிறோம்.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 SEP, 2024 | 01:26 PM - இலங்கை குடியரசில் மூவினத்தவர்களுக்கும் சமவுரிமை - போரினால் சகலருக்கும் ஒரே விதமான பாதிப்பு - மன்னித்து முன்னோக்கிச் செல்வோம் முப்­பது வரு­ட­கால போரில் தமி­ழர்கள் மாத்­தி­ர­மன்றி சிங்­க­ள­வர்­களும், முஸ்­லிம்­களும் உயி­ரி­ழந்­தனர்.  அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழப்­ப­தனால் ஏற்­படக் கூடிய வலியை நான் புரிந்துக் கொள்­கிறேன். இருப்­பினும் அந்த வலி இரு­த­ரப்­புக்­கு­மா­னது என்­பதை நீங்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். நாம் அனை­வரும் ஒரே வித­மான பாதிக்­கப்­பட்டோம். நாம் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிப்­ப­ளித்து முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும். அதே­போன்று இந்த மண்ணில் பிறி­தொரு போர் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்கக்கூடாது என்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். அதே­போன்று இலங்கை குடி­ய­ரசின் அதி­கா­ரங்கள் 1972ஆம் ஆண்டு முதல் சலக பிர­ஜை­க­ளுக்கும் சம­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. நீங்கள் சிங்­கள, தமிழ்,  முஸ்லிம், மலே, கிறிஸ்­தவ, சமூ­கங்­களில் எதனை சார்ந்­தி­ருப்­பினும் இந்­நாட்டில் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சம­மான உரி­மைகள் உண்டு. அவ்­வா­றி­ருக்­கையில் யாருக்கும் எம்மால் விசேட அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். வீர­கே­ச­ரியின் 'ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரிடம் கேளுங்கள் - 2024' எனும் தலைப்பில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்­களால் தொடுக்­கப்­பட்ட வினாக்­களில் முக்­கிய வினாக்­க­ளுக்கு பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நாமல் ராஜ­பக்ஷ அளித்­துள்ள பதில்கள் வரு­மாறு, கேள்வி இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு தமிழ் சமூகம் நீண்­ட­கா­ல­மாக முயற்­சித்து வரு­கின்­றது. இனங்­க­ளுக்கு இடையில் நிலை­யான அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உங்கள் நிர்­வாகம் எவ்­வா­றான முயற்­சி­களை மேற்­கொள்ளும்? குறிப்­பாக, சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சியல் தீர்வை ஏற்­றுக்­கொள்­வது தொடர்பில் உங்கள் நிலைப்­பாடு என்ன? பதில் இக்­கு­டி­ய­ரசின் அதி­கா­ரங்கள் 1972ஆம் ஆண்டு முதல் சலக பிர­ஜை­க­ளுக்கும் சம­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன.  நீங்கள் சிங்­கள, தமிழ், முஸ்லிம், மலே, கிறிஸ்­தவ, சமூ­கங்­களில் எதனை சார்ந்­தி­ருப்­பினும் இந்­நாட்டில் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சம­மான உரி­மைகள் உண்டு. அவ்­வா­றி­ருக்­கையில் யாருக்கும் எம்மால் விசேட அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது. இப்­பின்­ன­ணியில் இன சமூ­கங்­களை பெரும்­பான்மை அல்­லது சிறு­பான்மை என முத்­தி­ரைக்­குத்­து­வது தவ­றாகும்.இது ஒரு மேற்­குல சிந்­த­னை­யாகும். நாம் சகல பிர­ஜை­க­ளுக்­கு­மான சமத்­துவ இறை­யாண்­மையை கொண்ட ஒரு­மித்த குடி­ய­ர­சாவோம். வடக்கில் வாழும் ஒரு தமிழ் பிர­ஜைக்கு சிங்­கள அல்­லது முஸ்லிம் பிர­ஜைக்­குள்ள அதே சிவில் உரி­மைகள் உண்டு. இருப்­பினும் அனைத்து பிர­ஜை­க­ளுக்­கு­மான அர­சாங்கம் என்ற ரீதியில் நாம் அனைத்து இன குழு­மங்­க­ளி­னதும் கலாச்­சார அடை­யா­ளங்­களை பாது­காப்­ப­துடன் மாத்­தி­ர­மன்றி,  எமது நாட்டின் பல்­லி­னத்­தன்­மையை கொண்­டா­டுவோம்.வடக்கில் வாழும் மக்­களின் உண்­மை­யான கரி­ச­ணைகள் தெற்கில் வாழும் மக்­களின் கரி­ச­ணை­களை ஒத்­த­வை­யாகும்.  ஆவர்கள் அவர்கள் அனை­வ­ருக்கும் பொரு­ளா­தார வளர்ச்சி, சமூக மேம்­பாடு, மற்றும் நிலை­பே­றான சூழல் என்­பவே தேவை­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.அவை  எவ்­வித இன­பா­கு­பா­டு­க­ளு­மின்றி சக­ல­ருக்கும் கிடைப்­பதை நாம் உறு­திப்­ப­டுத்­துவோம். கேள்வி இறு­திக்­கட்­டப்­ போரில் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் கடத்­தப்­ப­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் கொண்­டி­ருக்கும் பொறுப்­புக்­கூறல் குறித்த உங்­க­ளது நிலைப்­பாடு என்ன? நீங்கள் ஆட்­சி­பீ­ட­மேறும் பட்­சத்தில் மனி­த­கு­லத்­துக்கு எதி­ரான மிக­மோ­ச­மான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்­ட­வி­ரோத படு­கொ­லைகள் பற்­றிய குற்­றச்­சாட்­டுக்­களை எவ்­வாறு அணு­கப்­போ­கின்­றீர்கள்? பதில் சுமார் 30 வரு­ட­காலம் நீடித்த போரில் இறு­திக்­கட்ட யுத்­தத்தை பற்றி மாத்­திரம் ஒரு­வரால் பேச முடி­யாது அது இலங்கை அர­சாங்­கத்­துக்கும் ஆயு­த­மேந்­திய பயங்­க­ர­வாத குழு­வுக்­கு­மி­டையில் நடைப்­பெற்ற போராகும்.  அந்­நீண்­ட­கால பகு­தியில் ஆயி­ர­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­தனர். அவர்­களில் தமி­ழர்கள் மாத்­தி­ர­மன்றி, சிங்­க­ள­வர்­களும்,  முஸ்­லிம்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இருப்­பினும் நாம் தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்கள், துப்­பாக்கிச் சூடு, கொலைகள்,  மற்றும் விடு­தலை புலிகள் இயக்­கத்­தி­னரால் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட தற்­கொலை குண்­டு­தா­ரிகள், சிறுவர் போரா­ளிகள் என சக­ல­வற்­றையும் முடி­வுக்கு கொண்டு வந்தோம்.அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழப்­ப­தனால் ஏற்­படக் கூடிய வலியை நான் புரிந்துக் கொள்­கிறேன்.இருப்­பினும் அந்த வலி இரு­த­ரப்­புக்­கு­மா­னது என்­பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.நாம் அனை­வரும் ஒரே வித­மான பாதிக்­கப்­பட்டோம். ஒரு நாடு என்ற ரீதியில் நாம் பெரு­ம­ளவு உயிர்­களை இழந்து விட்டோம்.நாம் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிப்­ப­ளித்து முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும்.அதே­போன்று இந்த மண்ணில் பிறி­தொரு போர் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்க கூடாது. கேள்வி நாட்டில் போர் சூழ்­நிலை இல்­லாத பின்­ன­ணி­யில்,  வரவு செலவுத் திட்­டத்தில் பாது­காப்­புத்­து­றைக்­கான செல­வி­னத்தை குறைப்­ப­தற்கு உங்­க­ளது நிர்­வாகம் நட­வ­டிக்கை எடுக்­கு­மா? பதில் எமது நாட்­டுக்கு எதி­ரான உள்­ளக மற்றும் சர்­வ­தேச சக்­தி­களின் அச்­சு­றுத்­தல்கள் இன்­னமும் தொடர்­கின்­றன. ரஷ்ய – உக்ரைன் மோதல், இஸ்ரேல் - பலஸ்தீன் மோதல் மற்றும் ஐரோப்­பாவில் வன்­முறை எழுச்சி என்­பன உள்­ள­டங்­க­ளாக உல­க­ளா­விய ரீதியில் பல்­வேறு வன்­முறை மோதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­வ­தனை பார்க்க முடி­கி­றது. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மிகப் பாரிய இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.அதே­போன்று 2022 இல் உள்­ளக பாது­காப்பு பொறி­மு­றையின் தோல்­வியின் கார­ண­மாக  வன்­முறை எழுச்சி ஒன்று உரு­வா­னதை பார்த்தோம். எனவே பாது­காப்பு துறைக்­கான செல­வி­னத்தை எம்மால் குறைக்க முடி­யாது. இருப்­பினும் பாது­காப்பு வீரர்­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­துடன், எமது பாது­காப்பு துறைசார் தொழில்­நுட்­பங்­களை மேம்­ப­டுத்­து­வதை முன்­னி­றுத்தி பணி­யாற்றி வரு­கிறோம்.அது அனைத்து பிர­ஜை­க­ளி­னதும் பாது­காப்­பினை இலக்­காகக் கொண்­ட­தாகும் அதனை நாம் தொடர்ந்து முன்­னெ­டுப்போம். கேள்வி அர­ச­துறை செல­வி­னங்கள் மற்றும் வரி­களைக் குறைப்­பதை இலக்­கா­கக்­கொண்டு அரச ஊழி­யர்­களின் எண்­ணிக்­கையைக் குறைப்­பது தொடர்பில் நீங்கள் கொண்­டி­ருக்கும் நிலைப்­பாடு என்ன? 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவ­சியம் என்று நீங்கள் கரு­து­கி­றீர்­களா? அல்­லது இந்த எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தற்­கான நகர்­வு­களை நீங்கள் மேற்­கொள்­வீர்­களா? பதில் பிர­ஜை­களின் எண்­ணிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தி­நி­தித்­துவம் அதி­க­ரிப்­பது என்­பது நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்கு உகந்­த­தாகும். பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வாகும் உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர்­களின் தொகு­தியை மாத்­தி­ர­மன்றி நாட்டின் சகல பிர­ஜை­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு உண்டு. ஒரு சிங்­கள பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கிறேன்.ஒரு தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அத­னையே செய்ய வேண்டும். இந்த இன மைய அர­சி­யலை விடுத்து ஒட்­டு­மொத்த நாட்­டி­னதும் அபி­வி­ருத்­திக்­காக அனை­வரும் ஒன்­றி­ணைந்து பணி­யாற்ற வேண்டும். ஏனைய வேட்­பா­ளர்­களை போன்று வரிக்­கு­றைப்பு தொடர்பில் நாம் இலக்­கி­டப்­பட்ட தொகை­களை அறி­விக்­க­வில்லை. அவர்கள் மக்­களை ஏமாற்­று­கி­றார்கள். நாம் 2019இல் வரிக்­கு­றைப்பு தொடர்பில் இலக்­கங்­களை அறி­வித்து இத­னையே செய்தோம். இருப்­பினும் பின்னர் அது எமக்கு எதி­ராக பயன்­ப­டுத்­தப்­பட்­டது. எனவே அதன்­மூலம் நாம் பாடம் படித்­தி­ருக்­கிறோம். எவ்­வா­றி­ருப்­பினும் மக்­க­ளுக்கு நியா­ய­மான நிவா­ர­ணத்தை வழங்­கு­வ­தாக நாம் உறு­தி­ய­ளிக்­கிறோம். பல்­வேறு வித­மாக பெய­ரி­டப்­பட்­டி­ருக்கும் வரி­களை நாம் நிச்­ச­ய­மாக குறைப்போம். அது வரி செலுத்­து­ப­வர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கும். தற்­போது அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­வற்றில் 'நாமல் இலக்கு' மாத்­தி­ரமே நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மான கொள்கைத் திட்­ட­மாகும். கேள்வி நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கி, மீண்டும் பாரா­ளு­மன்ற ஆட்சி முறைமைக் கொண்­டு­வ­ரு­வது குறித்த உங்கள் நிலைப்­பாடு என்ன? பதில் நாம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்தால்,  அந்த நிறை­வேற்­ற­தி­கார வகி­பா­கத்தை வழங்கக் கூடிய பிறி­தொரு கட்­ட­மைப்பு எமக்கு தேவைப்­படும். பாரா­ளு­மன்றம் என்­பது சட்­டங்கள் என்ற வடி­வத்தில் தீர்­மானம் எடுக்கும் ஒரு கட்­ட­மைப்­பாகும். அதனை நாம் சட்­ட­வாக்கம் என கூறு­கிறோம். அவ்­வா­றெனில் அந்த சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி, அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் மற்றும் நிறை­வேற்று பொதுச்­சேவை ஆகிய மூன்று கட்­ட­மைப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. இங்கு சட்­ட­வாக்­கத்­துக்கும் நிறை­வேற்­ற­தி­கா­ரத்­துக்கும் இடையில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும். இல்­லா­விடின் ஒரே கட்­ட­மைப்பே அவை  விரும்­பி­யது போன்று சட்­டங்­களை இயற்றி அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்தும். அது எதேர்ச்­ச­தி­கா­ர­மா­னது. தற்­போ­தைய நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறைமை அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்­துடன்  பினைந்­துள்­ளது. எனவே நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்தால் மாகாண சபை முறை­மையும் ஒழிக்­கப்­படும். எனவே இது சாதா­ர­ண­மாக கலந்­து­ரை­யா­டப்­பட முடி­யாத ஒரு பார­து­ர­மான விட­ய­மாகும். எனவே  தற்­போது அர­சி­ய­ல­மைப்பில் தலை­யீடு செய்­வ­தற்கு நான் முன்­னு­ரி­மை­ய­ளிப்­ப­தில்லை. மாறாக அத­னூ­டாக நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கே முயற்­சிக்­கிறேன். கேள்வி நீங்கள் வெற்­றி­யீட்­டினால் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் செயற்­திட்­டத்­தின்கீழ் தொடர்ந்து செயற்­ப­டு­வீர்­களா? பொது­மக்­க­ளுக்கு அவ­சி­ய­மான நிவா­ர­ணங்­களை வழங்கும் அதே­வே­ளைஇ சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் நிபந்­த­னை­க­ளையும் பூர்த்­தி­செய்­வதில் எவ்­வாறு சம­நி­லையைப் பேணு­வீர்கள்? மின்­சா­ரம், நீர் மற்றும் எரி­வாயு போன்ற பயன்­பாட்டு சேவை­கள் இலா­ப­மீட்ட வேண்­டும் அல்­லது செல­வு­களை ஈடு­கட்ட வேண்டும் ஆகிய இரண்டில் உங்­க­ளது அபிப்­பி­ராயம் என்ன? மேலும்,  பொதுப்­போக்­கு­வ­ரத்து சேவை மற்றும் ஸ்ரீலங்கன் விமா­ன­சேவை என்­ப­வற்றின் முறை­யற்ற நிர்­வா­கத்தை எவ்­வாறு சீர­மைக்­கப்­போ­கின்­றீர்கள்? பதில் சர்­வ­தேச நாணய நிதியம் பெரு­ம­ள­வுக்கு அர­சாங்க வரு­மா­னத்­திலும்,  செல­வி­னத்­தி­லுமே கவனம் செலுத்­து­கி­றது. இருப்­பினும் அத­னூ­டாக மாத்­திரம் பொரு­ளா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்ய முடி­யாது. நாம் இவ்­வொட்­டு­மொத்த செயற்­திட்­டத்தை மாற்­றி­ய­மைப்­பது குறித்து மீளக் கலந்­து­ரை­யா­ட­மாட்டோம்.  அர­சாங்க வரு­மானம்,  மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் கடன் வீதம் போன்ற முக்­கிய இலக்­குகள் வர­வேற்­கத்­தக்­க­தாகும்.  எமக்கும் அவ்­வி­லக்­குகள் உண்டு. இருப்­பினும் அவ்­வி­லக்­கு­களை அடை­வ­தற்­கான எமது அணு­கு­முறை வேறுப்­பட்­ட­தாகும்.  உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வரி­களை அதி­க­ரித்தல்,  தோல்­வி­ய­டைந்த உத்­தி­யாகும்.  நல்­லாட்சி அர­சாங்கம் அதனை செய்­த­துடன் பொரு­ளா­தா­ரத்தை அழித்­தது. அதே விடயம் தற்­போது மீண்டும் நடை­பெ­று­கி­றது. பொரு­ளா­தார வளர்ச்சி இல்­லாத போது அங்கு வரு­மானம் குறை­வ­டை­வ­துடன் அது வரி வரு­மா­னத்­திலும்  வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும்.  எனவே இவற்றில் ஒரு சம­னி­லையை பேண வேண்டும். அதுவே எமது உத்­தி­யாகும் .இதனை நாம் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தசாப்­த­கால ஆட்­சியில் செய்தோம். அதனை எம்மால் மீண்டும் செய்ய முடியும். அர­சுக்கு சொந்­த­மான கட்­ட­மைப்­புக்கள் உள்­ள­டங்­க­ளாக அரச சொத்­துக்­களை நாம் விற்­பனை செய்­ய­மாட்டோம். மாறாக அவற்­றுக்கு பொருத்­த­மான தலை­மைத்­து­வத்தை நிய­மிப்­பதன் ஊடா­கவும் சர்­வ­தேச முகா­மைத்­துவ செயன்­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதன் ஊடா­கவும் அவற்றை செயற்­திறன் மிக்க சொத்­துக்­க­ளாக மாற்­றி­ய­மைப்போம். அதனை எம்மால் செய்ய முடியும் என நிரூ­பித்­தி­ருக்­கிறோம். செவ­ன­கல சீனித் தொழிற்­சாலை அதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும். கோட்­ட­பய ராஜ­ப­க்ஷவின் வெறும் இரு­வ­ருட ஆட்­சியில்,  அதிலும் குறிப்­பாக கொவிட் தொற்­றுக்கு மத்­தியில் நாம் அதனை இலா­ப­மீட்டும் கைத்­தொ­ழி­லாக மாற்­றினோம். அக்­கா­லப்­ப­கு­தியில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறு­வன கடன்­க­ளையும் குறிப்­பி­டத்­தக்க அளவில் குறைத்தோம் எனவே எம்மால் இதனை செய்ய முடியும். எமது  முயற்­சி­யாண்­மை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு அனு­பவம் வாய்ந்த இளம் தொழில் படை அவ­சி­ய­மாகும். நான் அத்­தகு நபர்­களின் ஆத­ர­வினை பெற்­றி­ருக்­கிறேன். கேள்வி மலை­யக தமிழ் சமூகம் குறிப்­பி­டத்­தக்க சமூக பொரு­ளா­தார சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. அவர்­களின் சம்­ப­ளம்,  நில உரி­மை­கள், வீடு­கள், சுகா­தாரம் மற்றும் கல்வி மேம்­பாடு போன்ற அடிப்­படை வச­தி­க­ளுக்­கான அணு­கலை மேம்­ப­டுத்த உங்கள் நிர்­வாகம் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும்? பதில் எமது கொள்கை பிர­க­ட­னத்தில் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளு­டைய வேதன விட­யத்­துக்கு பரஸ்­பர உடன்­பாட்டின் அடிப்­ப­டையில் முக்­கி­யத்­துவம் கொடுப்போம்.  சம்­பள அதி­க­ரிப்பின் ஊடாக மாத்­திரம் அவர்­க­ளது வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்த முடி­யாது. அதே­நரம் உற்­பத்திச் செலவை அதி­க­ரிக்கும் பட்­சத்தில் உலக சந்­தையில் தேயி­லைக்­கான கேள்வி வீழ்ச்­சி­ய­டையும். இது தேயிலை உற்­பத்தி துறையில் வேலை­வாய்ப்­பின்மை ஏற்­படும். இதனால் தொழி­லா­ளர்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள். எனவே இந்த விட­யத்தில் ஒருங்­கி­ணைந்த இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் தீர்வு காண வேண்டும். நாட்டின் ஏனைய மக்­களை போன்று இந்த மக்­க­ளு­டைய வரு­மான மூலங்­களை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யு­மென நம்­பு­கிறேன். அதே­நேரம் பெருந்­தோட்­டத்­து­றை­களில் சகல வச­தி­க­ளையும் கொண்ட பாட­சா­லை­களை உரு­வாக்­குவோம். தேயிலை உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு தேவை­யான தொழில்­நுட்ப தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். மேலும் உயர் தொழில் தகை­மை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கு­ரிய பயிற்­சிளை வழங்கி தொழில் வாய்ப்­பு­களை பெற்­றுக்­கொ­டுப்போம். கேள்வி நாட்டில் பல்­வேறு துறை­களில் ஊழல் மோச­டிகள் மேலோங்­கி­யி­ருக்­கின்­றன. அதனை எதிர்த்­துப்­ போ­ராட உங்கள் நிர்­வாகம் எத்­த­கைய வழி­மு­றை­களை கையாளும்? பொது­நி­தியை முறை­கே­டாகப் பயன்­ப­டுத்தி பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு வித்­திட்ட அர­சி­யல்­வா­திகள் மற்றும் அதி­கா­ரிகள் மீது நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா? மேலும் இது­போன்ற பொரு­ளா­தாரக் குற்­றங்­களில் ஈடு­பட்ட நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா? பதில் ஒவ்­வொரு பிர­ஜையும் குற்றம் நிரூ­பிக்­கப்­படும் வரை நிர­ப­ரா­தி­களே. குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன்­பாக ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பிக்­கப்­பட வேண்டும். அந்­த­வ­கையில் எனது குடும்­பத்தார் மீது இது­வரை எந்த குற்­றச்­சாட்­டுக்­களும் எதுவும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. இவை அனைத்தும் எமது எதி­ரா­ளி­க­ளது கீழ்­த­ர­மான செயற்­பா­டுகள். என்­னு­டைய நகர்­வுகள் பிழை­யென்றால் இன்று ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­கு­ரிய ஆத­ரவை பெற்­றி­ருக்க முடி­யுமா? மக்கள் எம்மை நன்கு அறிந்­து­வைத்­துள்­ளார்கள்.  நாம் ஊழலை  கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான பொறி­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­துவோம். தனித்­துவ அடை­யாள அட்டை முறை­மையை நடை­மு­றைப்­ப­டுத்­துவோம். வெளிப்­ப­டை­யான கணனி தொழில்­நுட்ப முறை­மையை கொண்­டு­வ­ருவோம். இந்த தொழில்­நுட்­பங்கள் ஆரம்­பத்தில் பயன்­பாட்டில் இருக்­க­வில்லை. என்­னு­டைய அர­சாங்­கத்தில் எந்த குற்­றச்­சாட்­டுக்­களும் எழு­வதை நான் விரும்­ப­வில்லை. என்­னு­டைய அர­சாங்­கத்தில் தவ­றான செயற்­பா­டு­க­ளுக்கு கண்­டிப்­பான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சர்­வ­தேச ரீதி­யி­லான தட­வியல் கணக்­காய்­வுகள் இறுக்­க­மாக முன்­னெ­டுக்­கப்­படும்.  குறித்த அறிக்­கைகள் வெளிப்­ப­டை­யாக மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தப்­படும். இது­போன்ற காலத்­துக்­கேற்ற வாக்­கு­று­தி­களை வழங்கும் ஒரே­வேட்­பா­ள­ராக நானே காணப்­ப­டு­கிறேன். காரணம் என்­னு­டைய குடும்­பமே 30 ஆண்­டு­கால யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­ட­வந்­தது. அதே­போன்று நானும் மூன்­றாண்­டு­க­ளுக்குள் ஊழலை நவீன தொழில்­நுட்ப உத­வி­யோடு முடி­வுக்­கட்­டுவேன். கேள்வி மத சிறு­பான்­மை­யினர் திட்­ட­மிட்டு ஓரங்­கப்­ப­டு­வ­து­டன்,  பல்­வேறு ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­துள்­ளனர். உங்கள் நிர்­வாகம் மத நல்­லி­ணக்­கத்தை வலுப்­ப­டுத்தும் என்றும் எதிர்­கா­லத்தில் இது­போன்ற சம்­ப­வங்கள் நடை­பெ­றாமல் தடுக்கும் என்றும் உங்­களால் உத்­த­ர­வாதம் அளிக்க முடி­யுமா? பதில் நான் இத­னுடன் உடன்­ப­ட­வில்லை. உல­க­ளா­விய ரீதியில் உயர் வரு­மானம் பெறும் சில நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் உயர் மத சுதந்­தி­ரத்தைக் கொண்­டி­ருக்கும் நாடு­களில் ஒன்­றாக இலங்கை இருக்­கி­றது. பௌத்­தர்­களும் இந்­துக்­களும் பல நூற்­றாண்டு கால­மாக அமை­தி­யாக ஒரு­மித்து வாழ்ந்து வரு­கின்­றனர். பௌத்த விகா­ரை­களை பாருங்கள் அவற்­றுக்குள் இந்து வழி­பாட்டு பகு­திகள் உள்­ளன. தெற்கில் உள்ள இந்து கோயில்­களில் அவர்­க­ளது பண்­டி­கை­களை கொண்­டா­டு­வ­தற்­கான சுதந்­திரம் உள்­ளன.  மோதல்கள் தொடர்பில் ஆங்­காங்கே சில சம்­ப­வங்கள் எப்­போதும் இருக்கும் சட்­டங்கள் மற்றும் தண்­ட­னை­களின் ஊடாக மாத்­திரம் எம்மால் ஒரு முழு நிறை­வான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. மத தலை­வர்­க­ளுக்கு அவர்­களை பின்­பற்­றுவோர் மத்­தியில் நம்­பிக்­கைகள் சார்ந்த பரஸ்­பர புரிந்­து­ணர்வு மற்றும் சகிப்புத் தன்­மையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய பொறுப்­புண்டு வடக்கை பாருங்கள். அங்கே சாதி ஒடுக்­கு­மு­றைமை கார­ண­மாக இந்­துக்­களை உள்ளே அனு­ம­திக்­காத சில கோயில்கள் இருக்­கின்­றன. அது அர­சாங்க முறை­மை­யினால் ஏற்­பட்ட பிர்­சி­ச­னை­யல்ல மாறாக அது வடக்கின் கலாச்­சார ரீதி­யி­லான பிரச்­சி­னை­யாகும். அதனை இந்து மத தலை­வர்­களே தீர்க்க வேண்டும்.  அதில் அர­சாங்கம் தலை­யிட்டால் அவர்கள் தமது மத சுதந்­திரம் பறிக்­கப்­ப­டு­வ­தாக கூறு­வார்கள்.  நாம் அர­சாங்கம் என்ற ரீதியில் அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்­டுள்­ள­வாறு அனைத்து பிர­ஜை­க­ளுக்­கு­மான மத சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்தி பாது­காப்போம். இது குறித்த தனித்த பிரிவு எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ளது. கேள்வி சட்­ட­வி­ரோத போதைப்­பொருள் கடத்தல் மற்றும் பயன்­பாடு என்­பன அதி­க­ரித்து வரு­வது நாட்டின் சிறுவர் மற்றும் இளைஞர் சமு­தா­யத்­துக்குப் பாரிய அச்­சு­றுத்­த­லாக அமைந்­தி­ருக்­கி­றது. பாதாள உல­கக்­கு­ழுக்­க­ளும்,  அர­சி­யல்­வா­தி­களும் இத­னுடன் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாகப் பொது­மக்கள் நம்­பு­கின்­றனர். எனவே இவற்றைத் தடுப்­ப­தற்­கும்,  சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டவும் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பீர்கள்? பதில் அரச பாது­காப்பை குறைக்க முடி­யாது என்­ப­தற்கு இது சிறந்த உதா­ரணம். திக­மான சட்­ட­வி­ரோ­த­மான போதைப்­பொருள் வர்த்­தகம் சர்­வ­தேச வர்த்­த­கர்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.இவற்றை முறி­ய­டிப்­ப­தற்கு பாது­காப்பு படை­களை பலப்­ப­டுத்த வேண்டும். இதனை நாம் செய்ய முற்­ப­டும்­போது தமிழ் அர­சி­யல்­வா­திகள் நாம் வடக்கை இரா­ணுவ மயப்­ப­டுத்­து­வ­தாக முறை­யி­டு­கின்­றனர்.இது இலங்கை முழு­வதும் உள்ள கரி­ச­னை­யாகும்.நங்கள் பாதாள உலக செயற்­பா­டுகள் போதைப்­பொருள் மற்றும் பயங்­க­ர­வாதம் ஆகி­யவை தொடர்பில் நாம் பொறுமை காக்க மாட்டோம் என்­பதை எனது விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டுள்ளேன். கேள்வி இலத்­தி­ர­னி­யல்,  மருத்­து­வ­மனை மற்றும் பிளாஸ்டிக் கழி­வுகள் உள்­ளிட்ட வெளி­நாட்டு கழி­வு­களை கொட்டும் இட­மாக மாறு­வது உட்­பட கடு­மை­யான சுற்­றுச்­சூழல் நெருக்­க­டியை இலங்கை எதிர்­கொண்­டுள்­ளது. இந்த சூழ­லியல் சவால்­களை எதிர்­கொள்­ள­வும்இ கால­நிலை மாற்­றத்தின் தாக்­கங்­களைக் குறைக்­கவும் உங்கள் நிர்­வாகம் கொண்­டி­ருக்கும் உறு­தி­யான திட்­டங்கள் என்ன? பதில் சுற்­றாடல் நிலை­பேண்­தகு என்­பது எமது அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டத்தின் மிக­முக்­கி­ய­மாக கருத்­திட்­ட­மாகும்.நாம் நாட்டின் இயற்கை அழகை தொடர்ந்தும் பாது­காப்போம்.ஆனால் மக்கள் மிக விரை­வான பொரு­ளா­தார வளர்ச்­சியை கோரு­கின்­றனர் என்­பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார வளர்ச்சி எனும் போது அங்கு சுற்­றாடல் ரீதி­யான விலை ஏற்­ப­டக்­கூடும்.அதிக பொரு­ளா­தார வளர்ச்சி உள்ள நாடு­களில் சுற்­றாடல் மாசு­டைவு மிகப்­பா­ரி­ய­ளவில் உள்­ளது.நாம் எமது விவ­சா­யத்தில் நூறு சேத­ன­ப­சளை திட்­டத்­துக்கு செல்ல முற்­பட்டோம்.ஆனால் விவ­சா­யிகள் அதற்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை.எனவே மஹிந்த சிந்­தனை திட்­டத்தில் உள்­ள­வாறு நாம் இர­சாய உர நிகழ்ச்சித் திட்­டத்தை தொடர தீர்­மா­னித்­துள்ளோம்.ஆனால் எமது நாட்டை வேறு நாடு­களின் கழி­வு­களை கொட்டும் மைதா­ன­மாக உரு­வா­கு­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம். கேள்வி இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­க­ளை, குறிப்­பாக உயர் திற­மை­யான வேலை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான உங்கள் நீங்கள் உத்­திகள் எவை? இளை­ஞர்கள் மத்­தியில் எத்­த­கைய திறன்கள் அவ­சி­ய­மா­னவை என நீங்கள் கரு­து­கின்­றீர்கள்? அவற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பீர்கள்? பதில் மஹிந்த ராஷ­ப­க்ஷவின் யுகத்தில் இலங்கை சுதந்­தி­ரத்தின் பின்னர் மிகப்­பெ­ரிய மற்றும் விரை­வான பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­பட்­டது. 24 பில்­லியன் டொலர்­க­ளாக இருந்த மொத்த தேசிய உற்­பத்தி 80 பில்­லியன் டொலர்­க­ளாக 9 வரு­டங்­களில் உயர்­வ­டைந்­தது. மஹிந்த சிந்­தனை தசாப்­தத்­தி­லேயே இலங்கை ஐக்­கிய நாடுகள் மனித அபி­வி­ருத்தி சுட்­டெண்ணில் இலங்கை மிகப்­ பெ­ரிய இடத்தை பிடித்­தது. நீங்கள் எந்த சர்­வ­தேச தர நிலை­களை பார்த்­தாலும்  இதுதான் கதை­யாகும். இது ஏன்? காரணம் நாம் மஹிந்த சிந்­த­னையின் கீழ் தேசிய விட­யங்­களை நோக்­க­மா­கக்­கொண்டு நவீ­ன­தொ­ழி­நுட்­பங்­களின் அடிப்­ப­டை­யி­லான செயற்­பாட்டு ரீதி­யான கொள்­கை­களை பின்­பற்­றினோம். 2015ஆம் ஆண்டு பின்னர் இது தொடர்ந்­தி­ருந்தால் எமது நாடு அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடாக அடைந்­தி­ருக்கும்.அந்­த­வி­டயம் நிறுத்­தப்­பட்­டி­ருந்த இடத்­தி­லி­ருந்து நவீன தொழிற்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி இந்த பொரு­ள­தாh­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது எனது இலக்­காகும்.பாரம்­ப­ரிய ஏற்­று­ம­தி­க­ளுக்கு நாம் ஆத­ர­வ­ளிப்­ப­து­டன சர்­வ­தேச சேவைத்­து­றை­களான் கல்வி மற்றும்  சுகா­தா­ரத்­துறை போன்­ற­வற்றில் புதிய முத­லீ­டு­களை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மி­டு­கிறேன். புதிய தொழில்­வாய்­பு­களை உரு­வாக்க­வேண்டும். இலங்­கையில் உயர்­மட்ட தொழில்­நுட்ப உற்­பத்­தி­களை முன்­னெ­டுப்­பது தொடர்பில் நான் ஏற்­க­னவே சர்­வ­தேச பங்­க­ளார்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­துள்ளேன்.நவீன தொழில் நுட்­பத்தை பயன்­பத்தி பொரு­ள­தா­ரத்தை வளல'ச'சஜ­யடை செய்­வதை தவிர எமக்கு வேறு­வ­ழி­யில்லை.எந்­த­வொரு பிரச்­சி­னையும் தீர்ப்­ப­தற்கும் அதன் தன்மை நீங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். இலங்­கையை பொருத்­த­மட்டில் பிர­தான பிரச்­சி­னை­யாக இருப்­பது வெளி­நாட்டு கடன்­க­ளாகும்.பல்­த­ரப்பு கடன்­களை நாம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கிறோம். 2027ஆம் ஆண்டு வரை இரு­த­ரப்பு கடன்கள் ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.பிணை­முறி கடன்கள் மீள செலுத்தப்படு­வ­தில்லை. அவை இன்னும் மறு­சீ­ர­மைக்­கப்­ப­டவும் இல்லை. எனவே, நாடு இன்னும் நெருக்­க­டியில் இருக்­கி­றது.பிணை­முறி கடன்­களில் அதி­க­ளவு பெறு­ம­தியை யார் பெற்­றது.நல்­லாட்சி அர­சாங்­கமே 12.5 பில்­லியன் டொலர்­களை பெற்­றுள்­ளது. இங்கு தான் நெருக்­க­டியே இருக்­கி­றது.தற்­போது இதற்கு என்ன தீர்வு? நாம் மற்­ற­வர்­களை குறைக் கூறிக் கொண்­டி­ருக்க முடி­யாது. நாம் அந்த கடன்­களை மிக­வி­ரை­வாக மீள செலுத்த ஆரம்­பிக்க வேண்டும்.வெளி­நாட்டு வரு­மா­னத்தை பெறு­வதே அதற்கு இருக்கும் ஒரே வழி­யாகும். இதற்கு நாம் சுற்­று­லாத்­து­றையை விரி­வுப்­ப­டுத்­து­வ­துடன் வரு­ட­மொன்­றுக்கு 80 மில்­லியன் சுற்­றுலா பய­ணி­களை வர­வ­ழைக்க வேண்டும்.அந்­நிய செலா­வணி வரு­மா­னத்தை அதி­க­ரிக்­க­செய்ய வேண்டும்.பெரிய மற்றும் நடுத்­தர அள­வி­லான முத­லீ­டு­களை அதி­க­ரிப்­ப­த­துடன் புதிய வர்த்­த­கங்­க­ளு­ட­னான ஏற்­று­ம­தி­களை அதி­க­ரிப்­பது அவ­சி­ய­மாகும். அதே­நேரம் ரூபா வரு­மா­னத்தை அதி­க­ரிப்­ப­துடன் உள்­நாட்டு கடன்­களை செலுத்­தவும் வெளி­நாட்டு நாண­யங்­களை கொள்­வ­னவு செய்­யவும் ரூபா வரு­மா­னத்தை அதி­க­ரித்துக் கொள்ள வேண்டும்.சுருக்­க­மாக இதுவே எமது பொரு­ளா­தார கொள்­கை­யாகும். மேல­திக விரி­வான விட­யங்­களை எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கேள்வி வேலை­வாய்ப்பு மேம்­பாடு மற்றும் தொழில்­நுட்ப - நடை­முறை திறன்­களை உள்­ள­டக்­கிய நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட கல்­வித்­திட்­டத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான உங்கள் திட்டம் என்ன?  பதில் இரண்டு பிர­தான கோணங்­களில் நாம் கல்­வித்­து­றையை பார்க்­கிறோம்.முத­லா­வது மக்கள் சேவைக்­கான அர­சாங்க கல்வி மற்றும் சர்­வ­தேச சேவைக்­கான கல்­வி­யாகும்.மஹிந்த சிந்­தனை யுகத்­தி­லேயே இலங்­கையின் கல்­வித்­து­றையில் மிகப்­பெ­ரிய வளர்ச்சி ஏற்­பட்­டது.நாம் உள்­நாட்டு பாட­சா­லை­களை தொடர்ந்தும் அபி­வி­ருத்தி செய்வோம். அதே­ச­மயம் சமூ­கத்­துக்கும் சந்­தைக்கும் தற்­போது தேவை­யான வகையில் ஒரு வரு­டத்­துக்குள் சகல பாடத்­திட்­டங்­க­ளையும் மீளாய்வு செய்வோம். கற்­பிப்­ப­வர்­க­ளுக்­காக நாம் செய­லாக்க முகா­மைத்­துவ முறை ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­துவோம். அதன் ஊடாக அவர்­க­ளது ஊக்­கு­விப்­புகள் அவர்­க­ளது செய­லாக்­கத்தின் ஊடாக தீர்­மா­னிக்­கப்­படும். இலங்­கையை அமை­தி­யான சர்­வ­தேச கல்வி நிலை­ய­மாக முன்­னேற்­று­வ­தற்கு எம்­மிடம் விரி­வான திட்டம் உள்­ளது. கேள்வி கர்ப்­பி­ணித்­தாய்­மார் மற்றும் குழந்­தை­களின் ஊட்­டச்­சத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நீங்கள் முன்­னெ­டுக்­க­வுள்ள நட­வ­டிக்­கைகள் எவை? குழந்­தைகள் மத்­தியில் அதி­க­ரித்­தி­ருக்கும் மந்­த­போ­சணை மற்றும் வளர்ச்சி குன்றல் ஆகி­ய­வற்றை சீர்­செய்­வ­தற்கு எத்­த­கைய திட்­டங்­களை வைத்­தி­ருக்­கின்­றீர்கள்? பதில் சிறு­வர்­களே நாட்டின் எதிர்­காலம். அவர்கள் எமது நாட்டின் எதிர்­கா­லத்தை வடி­வ­மைக்­கி­றார்கள். எனவே சிறு­வர்­க­ளுக்கு சம­நி­லை­யான போசாக்கு வெற்­றிக்­கொள்ளும் ஆளுமை மற்றும் ஒலி இசை­வாக்கம் போன்­ற­வற்றை வழங்­கு­வதே எமது பொறுப்­பாக இருக்­கி­றது.கிராம சிறுவர் பிர­சவ சிகிச்சை நிலை­யங்கள் ஊடாக கர்ப்­பி­ணித்­தாய்­மார்­க­ளுக்கும் பிறந்த குழந்­தை­க­ளுக்கு திரி­போஷ விட்­டமின் உண­வு­க­ளையும் வழங்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சமுர்த்தி திட்டம் ஊடாக குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பங்­களின் பிள்­ளை­க­ளுக்கு ஆரம்ப பாட­சாலை கல்­விக்கு மானியம் வழங்­கப்­படும். இலங்­கையில் தாய்­மார்கள் வெளி­நா­டு­களில் பணி­பு­ரிதல், தந்தைமார் குடி மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமைஇ பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்தல், பிள்ளை­களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளுவது என்பது மிக வேகமாக அதிகரிக்கும் சோக நிலைமையாக இருக்கி­றது. அவ்வாறான குழந்தைகளுக்கு முறையான பெற்றோருக்குரிய பாதுகாப்பு முறை ஒன்று அறிமுக்கப்படுத்தப்படுவதுடன் அதன் ஊடாக தேவையான வசதிகளும் கவனிப்பும் வழங்கப்படும். அவ்வாறான குழந்தைகளுக்கு மாதாந்தம் உதவிகளை வழங்குவதற்கு உள்நாட்டில் உள்ள மற்றும் வெளிநாட்டில் உள்ள பரோபகாரிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். அந்த உதவிகளின் ஊடாக மிக நெருக்கமாக கண்காணிக்கப்படும் ஒரு தொழில் செயற்பாடு அமுல்படுத்தப்படும். அதாவது இந்த குழந்தைகளுக்கு உணவு தயாரித்தல் மற்றும் கவனிப்புகளை செய்வதற்காக சமுர்த்தி உதவிப்பெறும் தாய்மார்கள் தொண்டர்களாக செயற்படுவார்கள். கேள்வி விவசாயத்தை இலாபகரமான மற்றும் நிலைபேறான துறையாக மாற்ற உங்கள் திட்டங்கள் என்ன? தேயிலை, இறப்பர், தென்னை,  கறுவா,  மிளகு,  வெற்றிலை உள்ளிட்ட ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பீர்கள்? பதில் விவசாயத்துக்கு தேவையான நீர், விதைகள் மற்றும் உரம் என்பன உத்தரவாத விலைக்கேற்ப, தேவைக்கேற்ப விளைநிலங்களுக்கு விநியோகிக்கப்படும். இதன் ஊடாக விவசாயிகளின் முதலீட்டுக்குரிய வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும். நவீன தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். இதன் ஊடாக உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பில் விவசாய கூட்டுறவு வலுபெறும். இதனால் சிறிய மற்றும் பாரியளவிலான ஏற்றுமதி இனங்காணப்பட்ட வேறுபாட்டை தவிர்க்கலாம். காரணம் தற்போது கறுவா, மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற உற்பத்திகள் பாரிய உற்பத்திகளான தேயிலை,  தெங்கு மற்றும் இறப்பர் உற்பத்தியோடு சந்தையில் போட்டியிடுகின்றன. கேள்வி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்புணர்வு மற்றும் ஒடுக்குமுறைத்தாக்குதல்களைத் தடுப்பதற்கு உங்கள் நிர்வாகம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன? பாதிக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் குற்ற­வாளிகளுக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றை எவ்வாறு உறுதிசெய்வீர்கள்? பதில் இந்த உதவிகள் பெண் தலைமைதாங்கும் குடும்­பங்கள் பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட பெண்க­ளுக்கு வழங்கப்படும். இதன் ஊடாக பெண்கள் சிறிய­விலான மற்றும் நடுத்தர வர்த்தகத்­தில் ஈடு­படக்கூடிய வாய்ப்பு கிட்டும். மேலும் பெண்களுக்கான சமஉரிமை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படுகிறது.அதேவேளை பெண்களது பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு உதவியளிக்கும் வகையில் விசேட துரித எண்கள் மற்றும் தொலைபேசி பயன்பாடு என்பன ஏற்படுத்திக்கொடுக்கப்படும். கேள்வி பால்புதுமையின சமூகத்தினரின் உரிமைகள்இ  கருக்கலைப்பு மற்றும் தெரிவுசெய்வதற்கான உரிமை என்பன தொடர்பில் உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள்? பதில் இரண்டாயிரம் ஆண்டுகளில் நாமே நாகரிகமான வரலாற்றை ஏற்படுத்துகிறோம். நாம் முதுமை கலா­சாரத்தை மதிக்க வேண்டும். மேலைத்தேய சித்தாந்­தங்­களை போன்று எமது கலாசாரத்தை மாற்றியமைக்க முடியாது.ஆனால் நாம் வேறுபட்ட மத கலாசாரங்களை மதிக்கி­றோம். ஆகவே எமது நாட்டின் சட்டத்திட்டத்­துக்­கேற்ப சமத்துவம் நிலைநாட்டப்படும் என்பதை நம்புகிறோம். https://www.virakesari.lk/article/194012
    • எங்கள் கைகளில் ரத்தம் இல்லை! நாங்கள் அப்பாவிகள்! – நாமல் ராஜபக்ச. ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸதெரிவித்துள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“  ‘நாம் ஏனோ தனோவென்று  வீதிகளை அமைக்கவில்லை. அதேபோன்று குடியிருப்புகளையும் நிர்மாணிக்கவில்லை. முதலீட்டாளர்களும் கொண்டுவரப்படவில்லை. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டமும் தொலைநோக்கு பார்வையும் எங்களிடம் இருந்தது. செய்யப்படும் ஒவ்வொரு முதலீட்டிற்கும் நாங்கள் பொறுப்பு. வாங்கிய ஒவ்வொரு கடனும் இந்த பூமிக்கு ஒரு மதிப்பைக் கொடுத்திருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பெறப்பட்ட அனைத்து கடன்களுக்கும் நாமே பொறுப்பு. திருடிவிட்டோம் என்று யாராவது சொன்னால், உலகில் எந்த நீதிமன்றத்துக்கும் சென்று நிரபராதி என்பதை நிரூபிக்கத் தயார் என்று சவால் விடுகிறோம். போராட்டத்துக்குப் பிறகு இந்தத் தேர்தலை எதிர்கொள்ள பயப்படுகிறோமா? என்று சமீபத்தில் எங்களிடம் கேட்கப்பட்டது. எங்கள் கைகளில் ரத்தம் இல்லை. எந்த தவறும் செய்யப்படவில்லை. எங்களைப் பற்றி வேறுவிதமான புரிதல் இருக்கலாம், ஆனால் மக்கள் முன் வந்து வாக்கு கேட்கும் வலிமை எம்மிடம் உள்ளது. நாம் அப்பாவிகள் என்பதாலும், நாம் உருவான அரசியல் சூழலாலும் அந்த சுய பலம் நமக்காக கட்டமைக்கப்பட்டது. அதைத்தான் நான் சொல்கிறேன் நான் சவால்களை விரும்புகிறேன். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது மற்றும் உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பது போன்ற சவாலையும் நான் விரும்புகிறேன். அந்த சவாலை நான் வெல்வேன்’ இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1400013
    • பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்! பழம்பெரும் நடிகையான  ‘சி.ஐ.டி சகுந்தலா  மாரடைப்பு காரணமாக தனது 85 ஆவது வயதில் நேற்று உயிரிழந்தார். பின்னணி நடனக் கலைஞராக சினிமாவில் கால் பதித்த நடிகை சகுந்தலா,தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த நேதாஜி (1996), நான் வணங்கும் தெய்வம் (1963), கை கொடுத்த தெய்வம் (1964) உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399906
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மிட்செல் ராபர்ட்ஸ் பதவி, டிஜிட்டல் சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கொரோனா வைரஸின் புதிய திரிபால் மேற்கத்திய நாடுகளில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கோவிட் வைரஸின் புதிய திரிபு, இதுவரை பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதாக, எக்ஸ் சமூக வலைதள பயனர்கள் தெரிவிக்கின்றனர். குளிர் காலத்தில் வேகமாக பரவத்தக்க சில புதிய பிறழ்வுகளை இந்த வைரஸ் கொண்டிருப்பதாகவும் தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்த திரிபால் மனிதர்களுக்கு தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கோவிட் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்களுக்கு பிரிட்டன் சுகாதார அமைப்பான என்.ஹெச்.எஸ் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குகிறது. சமீப கால புதிய கொரோனா திரிபுகளுக்கு ஏற்ப தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. XEC எனும் இந்த புதிய திரிபு, முந்தைய ஒமிக்ரான் திரிபிலிருந்து உருவானதாகும். லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜில் மரபியல் மையத்தின் இயக்குநராக உள்ள பேராசிரியர் ஃபிராங்காயிஸ் பால்லாக்ஸ் பிபிசியிடம் கூறுகையில், “கோவிட் வைரஸின் முந்தைய திரிபுகளைவிட இந்த புதிய திரிபு வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் இதற்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாக செயலாற்றும்” என்றார். இந்த புதிய திரிபு குளிர்காலத்தில் அதிகளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என அவர் தெரிவித்தார். அலையாக மாறுமா? கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் டிரான்ஸ்லேஷனல் மையத்தின் இயக்குநர் எரிக் டோபோல், “இந்த புதிய திரிபு தற்போதுதான் தொடங்கியுள்ளது” என கூறினார். “இது ஓர் அலையாக மாறுவதற்கு பல வாரங்கள் அல்லது சில மாதங்கள் கூட ஆகலாம்,” என அவர் LA டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பரிசோதனைகள் குறைந்துள்ளதால் தொற்று பாதிப்பை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது (சித்தரிப்புப் படம்) அறிகுறிகள் என்ன? முந்தைய திரிபுகளை போன்றே சளி அல்லது காய்ச்சல் போன்றவை அறிகுறிகளாக உள்ளன. அதிக உடல் வெப்பம் உடல் வலி சோர்வு இருமல் அல்லது வறண்ட தொண்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வைரஸ்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு புதிய திரிபு ஏற்படுவது சாதாரணமானதுதான் என்கின்றனர் நிபுணர்கள் (சித்தரிப்புப் படம்) பாதிப்பு ஏற்பட்ட சில வாரங்களில் பெரும்பாலானோரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் நீண்ட நாட்களுக்கு பிறகே குணமடைவர். இந்த புதிய திரிபின் தாக்கம் டென்மார்க் மற்றும் ஜெர்மனியில் அதிகம் இருப்பதாக, எக்ஸ் பக்கத்தில் கோவிட் தரவுகள் குறித்து ஆராய்ந்துவரும் மைக் ஹனி தெரிவித்துள்ளார். முன்பைவிட தற்போது குறைவான பரிசோதனைகளே செய்யப்படும் நிலையில், எவ்வளவு பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமை (UKHSA) கூறுகையில், வைரஸ்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு, புதிய திரிபுகள் தோன்றுவது வழக்கமானதுதான் என தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என என்.ஹெச்.எஸ் கூறியுள்ளது (சித்தரிப்புப் படம்) பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமையின் துணை இயக்குநர் டாக்டர் காயத்ரி அமிர்தலிங்கம் கூறுகையில், “மரபியல் ரீதியாக வைரஸ்கள் ஒவ்வொரு காலத்திற்கும் மாறுவது சாதாரணமானதுதான். பிரிட்டன் மற்றும் உலகளவில் பரவும் கோவிட்டின் திரிபுகள் குறித்து UKHSA அனைத்து தரவுகளையும் கண்காணித்து வருகிறது, எங்களிடம் உள்ள தரவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். கோவிட் 19 தொற்றுக்கு எதிராக தீவிரமான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதிலிருந்து தடுப்பூசிகள் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.” என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7xnjg7v4wo
    • வரலாறு காணாத வறட்சி – 700 உயிரினங்களை கொன்று மக்களுக்கு வழங்க திட்டம். தென் ஆப்பிரிக்காவின் பல பிரதேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப்படி கடந்த 40 ஆண்டுகளில் இது மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 83 யானைகள் உள்ளடங்கலாக சுமார் 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்தது. இந்நிலையில், நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 50 யானைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 காட்டு யானைகளை கொன்று இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1399926
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.