Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

நிலம் இல்லாத நீங்கள் அதாவது வடக்கு கிழக்கு உங்களுக்கு இல்லை அங்கே நீங்கள் சுயாட்சி நிறுவ முடியாது என்றால் 

எப்படி கடலில் உரிமை கோர முடியும்??  இந்த கடலை இலங்கை அரசு இந்தியா அல்லது சீனா  இல்லை இது போன்ற வேறு நாடுகளுக்கு 100. ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட முடியும்  உங்களால் தடை செய்ய முடியுமா??  இல்லையல்லவா??  எனவே அந்த கடலில்  எவர் மீன்கள் பிடித்தால் தான் உஙகளுக்கு என்ன?? 🙏

வடக்கு கிழக்கில் எங்களின் சுயாட்சி இல்லை, அதனால் எங்கள்:

  •  கடலில் எவர் மீன் பிடித்தால் என்ன
  • வயலில் எவர் உழுது விதைத்தால் என்ன
  • மேய்ச்சல்தரைகளில் எவர் மாடுகள் மேய்ந்தால் என்ன
  • இதையும் தாண்டி, எங்கள் வீடுகளில் கூட எவர் குடியேறினால் தான் என்ன

என்று அடுத்தடுத்து வரிசையாகச் சொல்லப் போகிறீர்களோ என்று பயமாக இருக்கின்றது.........🤣.

கந்தையா அண்ணை, எங்களின் கரையோர மக்கள் பாவம், என்ன பாவம் செய்தார்களோ என்றுமே தீராத நெருக்கடி அவர்களின் வாழ்க்கைகள்...........  

 

  • Replies 70
  • Views 4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    ராகுல் ட்ராவிட் விளையாடிய நாட்களில் அவரை 'The Wall' என்று சொல்வார்கள். நீங்களும் அதே போலவே, கந்தையா அண்ணை. உங்களில் முட்டி களமே களைத்து போய்விட்டது, அண்ணை..........🤣. இன்று எங்களின் இருப்பை தக்க

  • ஏழைகள் தங்கள் வருமானத்திற்கு எல்லை தாண்டுவார்கள் .... அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்.... கள்ள பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு வருவதற்காக நாங்கள் எவ்வளவோ தில்லு முள்ளு செய்தோம்....எல்லை தாண்டும்ப

  • நிழலி
    நிழலி

    ஆனால் நாம் ஏற்கனவே நலிவுற்று இருக்கும் ஒரு சமூகத்தின் வயிற்றில் அடித்து அவர்களின் வளம்களை கொள்ளை அடித்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்கவா அகதிகளாக கடல் கடந்து சென்றோம்? உலகம் முழுதும் தம் உயிரு

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

 கடலில் எவர் மீன் பிடித்தால் என்ன

இதை மட்டும் தான்  தமிழ் நாட்டைச்சேர்ந்த மீனவர்கள் செய்கிறார்கள்  அடிபடுங்கள்.  மொட்டையுமடியுங்கள.  சிங்களவருடன். சேர்த்து  ஒற்றை ஆட்சி உறுதியானது   தமிழ் ஈழத்தை கைவிடுங்கள். வடக்கு கிழக்கு இலும். கடலிலும். இலங்கை படையணிக்கள். நிலைகொண்டிருக்கட்டும். 🙏

 

12 minutes ago, ரசோதரன் said:
  • வயலில் எவர் உழுது விதைத்தால் என்ன
  • மேய்ச்சல்தரைகளில் எவர் மாடுகள் மேய்ந்தால் என்ன
  • இதையும் தாண்டி, எங்கள் வீடுகளில் கூட எவர் குடியேறினால் தான் என்ன

இவை சிங்களவர்கள். செய்வது   எனவே பிரச்சனை இல்லை   இலங்கை தமிழருக்கு புலிகள் காலத்தில் ஒரு. கொள்கை அதாவது  தமிழ் நாட்டையும்  தமிழக மீனவர்களையும். நன்கு பயன்படுத்தி கொண்டார்கள்   

2009 பிற்பாடு. அவர்கள் தேவையில்லை   ஒற்றை ஆட்சியை நடைமுறையில்  ஏற்றுக்கொண்டார்கள்  

ஆகவே  அத்து மீறும் ஒவ்வொரு தமிழக மீனவர்களையும். பிடித்து மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அனுப்பி வைக்கவும். 

குறிப்பு,.....கருணாநிதி உண்ணாவிரதத்தின் போது நடந்து கொண்ட முறை சரி தான்   ஏனெனில் அது அவரது வாழ்க்கை 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kandiah57 said:

இதை மட்டும் தான்  தமிழ் நாட்டைச்சேர்ந்த மீனவர்கள் செய்கிறார்கள்  அடிபடுங்கள்.  மொட்டையுமடியுங்கள.  சிங்களவருடன். சேர்த்து  ஒற்றை ஆட்சி உறுதியானது   தமிழ் ஈழத்தை கைவிடுங்கள். வடக்கு கிழக்கு இலும். கடலிலும். இலங்கை படையணிக்கள். நிலைகொண்டிருக்கட்டும். 🙏

இவை சிங்களவர்கள். செய்வது   எனவே பிரச்சனை இல்லை   இலங்கை தமிழருக்கு புலிகள் காலத்தில் ஒரு. கொள்கை அதாவது  தமிழ் நாட்டையும்  தமிழக மீனவர்களையும். நன்கு பயன்படுத்தி கொண்டார்கள்   

ஆகவே  அத்து மீறும் ஒவ்வொரு தமிழக மீனவர்களையும். பிடித்து மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அனுப்பி வைக்கவும். 

ராகுல் ட்ராவிட் விளையாடிய நாட்களில் அவரை 'The Wall' என்று சொல்வார்கள். நீங்களும் அதே போலவே, கந்தையா அண்ணை. உங்களில் முட்டி களமே களைத்து போய்விட்டது, அண்ணை..........🤣.

இன்று எங்களின் இருப்பை தக்க வைக்க நாங்கள் போராடும் வாழ்வாதார விடயங்களையே வரிசைப்படுத்தியிருந்தேன். இவை யாரால் - சிங்கள மக்கள், இஸ்லாமிய மக்கள், தமிழக மீனவர்கள்/முதலாளிகள் - எங்களுக்கு எதிராக செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து எம்மக்கள் எதிர்ப்பு காட்டுவதோ அல்லது தவிர்ப்பதோ என்றில்லை. இவை மிக அடிப்படையானவை, இவை எல்லாவற்றுக்கும் ஒரே விதமான எதிர்ப்பே எங்களால் காட்டப்படுகின்றது.

கடலில் மட்டும் அவர்களின் சுயநன்மை கருதி இலங்கை கடற்படை செய்யும் செயல்கள் இன்று எங்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது. ஆனால், எங்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இதனால் எங்களின் நிலைப்பாடு என்றும் மாறப்போவதும் இல்லை.

தமிழக மீனவர்களின் தலைமுடியை வெட்டாமல் விட்டிருக்கலாம் என்று தான் நான் எழுதியிருந்தேன். மற்றவர்கள் கூட செம்புள்ளி, கரும்புள்ளி என்று எழுதியது ஒரு உணர்ச்சிகரமான வெளிப்பாடே தவிர உண்மையான, மனமொத்த நிலைப்பாடு இல்லை என்றே நான் நினைக்கின்றேன்.

ஆதவன் செய்திகளுக்கு இருக்கும் அதிகூடிய வரவேற்பை பாருங்கள். அப்படி பொதுவெளியில் செய்திகளையும், கருத்துகளையும் எழுதுவது தான் இன்றைய எழுத்து முறை. பலதும் பொருளற்ற அல்லது பொருள் கொள்ளாத சொலவடைகள். செம்புள்ளி கரும்புள்ளியும் அப்படியே.

        

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

இதற்கும் சம்பந்தம் இல்லை. இதனால் எங்களின் நிலைப்பாடு என்றும் மாறப்போவதும் இல்லை

உண்மை தான் எற்றுகொள்கிறேன். இதை தான் கூடாது என்கிறேன்     தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறிவிட்டது  மாற்றி விட்டீர்கள் 1983 யூன் இனியும் வரத் தான் போகுது   எங்கே போகலாம்” [உடுத்த உடுப்புடன்    எங்களுக்கு துன்பம் வரும் போது தொப்புள்கொடி உறவுகள்    ] 1983 இல் தமிழ்நாட்டின் ஆதரவு இருந்தது 2024 இல்  நாங்களே’ இல்லாமல் செய்து விட்டோம்    

இன்று ஒரு இனக்கலவரம்   வந்து  தமிழ்நாட்டுக்கு   லட்சக்கணக்கானவர்கள் போனால்   வரவேற்பு எப்படி இருக்கும்??   திருப்பி அனுப்பமாட்டார்களா.?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kandiah57 said:

இன்று ஒரு இனக்கலவரம்   வந்து  தமிழ்நாட்டுக்கு   லட்சக்கணக்கானவர்கள் போனால்   வரவேற்பு எப்படி இருக்கும்??   திருப்பி அனுப்பமாட்டார்களா.?? 

அண்ணை இனி ஒருவரும் தப்பி ஓடமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

அண்ணை இனி ஒருவரும் தப்பி ஓடமுடியாது!

அப்படி ஓடினாலும். பிடித்து கப்பலில் ஏற்றி இலங்கை கடல்ப்படையிடம். ஒப்படைக்கப்படுவார்கள்.   அவர்களின் கதி அதேகதி தான்   

ஜேஆருக்கு தெரியும்  இலங்கைக்கும் இந்தியாவுகும்.  போர் நடந்தால் தமிழ் ஈழம் அமையும் என்று  எனவே புலிகளுடன். போர் புரிய வைத்தார்   இது ஒரு சிறந்த இராதந்திரம். 

இன்றும்  கடலை வைத்து தமிழ்நாட்டு மக்களையும்  இலங்கை தமிழர்களுயும். மோத வைக்கிறார்கள் இதுவும் ஒரு சிறந்த இராதந்திரம் தான்   நாங்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு பற்றியும் எதிர்காலம் பற்றியும் சிந்திப்பதில்லையே 

மேலே யாழ் கள உறவு புத்தன் வெளிநாடுகளில் எங்கள் சந்ததிகள். வெளிநாட்டவரின். வாழ்வு’ ஆதாரத்தை. எப்படி பறிக்கிறார்கள் என்று   அது 25    30 வருடங்களில் பெரிய பிரச்சனையாக மாறும்   🙏🙏🙏

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

அப்படி ஓடினாலும். பிடித்து கப்பலில் ஏற்றி இலங்கை கடல்ப்படையிடம். ஒப்படைக்கப்படுவார்கள்.   அவர்களின் கதி அதேகதி தான்   

 

யப்பா முடியலடா சாமி !! தமிழ் அகதிகளை எப்படி தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் நடத்துகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு வந்து இங்கு கருத்து எழுதுங்கள்! 🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

யப்பா முடியலடா சாமி !! தமிழ் அகதிகளை எப்படி தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் நடத்துகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு வந்து இங்கு கருத்து எழுதுங்கள்! 🙏

எனக்கு தெரியும்   நான் என்ன செய்ய முடியும்?? எனது வாதம்  இந்தியாவை திட்டிக்கொண்டு   பகைத்துக்கொண்டு   சுயாட்சி   தமிழ் ஈழம்  பெற முடியாது என்பது தான்  இலங்கையும் இந்தியாவும் போர் புரியும் போது தான்  

இலங்கை தமிழருக்கு சுயாட்சி அல்லது தமிழ் ஈழம் கிடைக்கும்   ஆனால் அவர்கள் போர் புரிய மாட்டார்கள் சிங்களவரகள் நிலைமைக்கு ஏற்ப வளைத்து கொடுப்பார்கள்  இதனை நான் 1975 முதல் அவதானித்து வருகிறேன் 

குறிப்பு,..இலங்கையில் பெற்றோர் சகோதரங்கள். சக மனிதர்கள்  எப்படி நடத்தப்படுகிறார்கள்?? 

நன்றி வணக்கம்…   இதுவரை நான் விளக்கமாக எழுதியதை. பிழை என்று எவருமே கருத்துகள் முன் வைக்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

யப்பா முடியலடா சாமி !! தமிழ் அகதிகளை எப்படி தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் நடத்துகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு வந்து இங்கு கருத்து எழுதுங்கள்! 🙏

'முடியல்லடா சாமி............' என்று உடனேயே ஓடமுடியாது........ கந்தையா அண்ணையுடன் ஒரு இரண்டு பதிவுகளாவது நின்று பிடித்து விட்டே அப்படிச் சொல்லிக்கொண்டு ஓடவேண்டும்................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

சற்றே புரிதலுக்காக,.. 👇
WHY SOME INMATES HAVE TO SHAVE THEIR HEADS BEFORE ENTERING 
There are a few reasons why people's heads are shaved before they enter prison in some areas.

1) First of all, for hygiene considerations, but also, to help prepare them for the,.

2) psychological and emotional reality of their life behind bars....   

3) In many areas having a convicted person's head shaved during prison intake is required by law..... 

4) Hair is an important symbol, with religious significance ...........in some cultures, and for this reason, the requirement that people in prison have their heads shaved has become controversial among certain incarcerated populations in some states (via NBC News). 

https://www.prisonlegalnews.org/in-the-news/2023/why-some-inmates-have-shave-their-heads-entering-prison-read-more-httpswwwgrungecom1221963why-some-inmates-have-shave-their-heads-entering-prison/

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை நோக்கி தார்மீக உதவியைக் கோரும் சகோதரர்களாக இன்று தமிழீழ தேசவிடுதலை கோரும் இனமொன்றின் சிந்தனைப் போக்கைப் பொதுமையாக நோக்கினால், அறிவின் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய எமது தலைமை இன்று இவற்றை அறிய நேருமாயின் இந்த மக்களுக்காகவா போராடினோம் என்ற எண்ணமே மேலெழும். தமிழீழத்தை இந்தியா பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்ற முடிவு தெரிந்தபோதும், அதாவது இந்திராகாந்தி அம்மையாரவர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டை நாம் பாதுகாப்போம் என்ற முன்மொழிவோடு யே.ஆரைப் பார்த்தசாரதி ஊடாக அணுகியபோதும் தமிழரது உரிமைகளை மறுத்ததோடு பின்வந்த ஆண்டுகளில் இந்திராகாந்தி அம்மையாரின் மறைவோடு மிகத்தந்திரமாகத் தமிழரோடு மோதலை ஏற்படுத்தும் களமாக யே.ஆர் சிங்களத்தின் சிறந்த அரசியல் விற்பனனாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக் கையாண்டதோடு, தமிழருக்கும், இந்திய அரசுக்கும் இடையே முரணை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றதோடு, அதன் தொடராக இன்றுவரை மிகக் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட 13ஆவது திருத்தமெனச் சுட்டப்படும் மாகாணசபைகளைக்கூட தொடர்ந்துவரும் அரசுகள் நடைமுறைப்படுத்தாது தட்டிக்கழித்தவருவதை நாம் கண்டுவருகின்றோம். (இந்த லட்சனத்தில் ரணிலுக்கு,சஜித்துக்கு, அனுரவுக்கு வாக்குக் கேட்கும் தமிழ் அரசியல் விற்பன்னர்கள் தமிழரை விற்றுக்கொண்டிருப்பது வேறுகதை) மிகவும் அருகிலே மொழி, கலை,பண்பாடு என்பவற்றோடு ஒன்றுக்குள் ஒன்றான தமிழகத்தையும், தமிழக மக்களையும் நாம் வென்றெடுத்து எம்மோடு இணைத்துப் பயணிக்க முடியாத சூழலில் பகையற்ற நிலையிலாவது வைத்திருக்க வேண்டுமென்ற பொதுவான நோக்குநிலை அவசியமற்றதா? சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டமைத்து அதனை மிகப்பெரும் இராணுவபூதத்தின் மீது நிலைநிறுத்தி வைத்துள்ள நிலையில் எமக்கு ஒரு துன்பமென்றால் குரல்கொடுக்கும் நிலையிலாவது தமிழகத்தைப் பேணுதல் வேண்டாமா? ஒருவேளை புலத்தமிழர் போதுமென்றால் ஏமாற்றமே மிஞ்சும். எங்களுக்குப்பின் தாயகத்துக்காக ஏதாவது எமது அடுத்த தலைமுறை, மூத்த தலைமுறையின் அர்ப்பணிப்போடு பெரிய அளவில் செய்யும் என்று எண்ணினால் ஏமாற்றமே. போராட்டத்தின் பின் தளமாக இருந்த தமிழகத்தையும், தமிழீழத்தையும் உணர்வுரீதியாகப் பிரிப்பதிலேயே இந்திய – சிங்கள அரசுகளின் பாதிவெற்றியை சாத்தியமாக்குகிறார்கள் என்பதை ஈழத்தமிழினம் அறிவுசார் புலமையோடு நோக்கவேண்டும். 
ஒப்பந்தம் போட்டுக் கொள்ளையிடும் (இந்திய) பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இது ஒரு சிறிய அளவிலான, ஆனால் அன்றாடப் பிழைப்புக்குக் கரையோரங்களை நாடும் எமது மீனவர்களைப் பாதிக்கும் செயற்பாடு. இதனை நிறுவனரீதியாக அணுகுதல் அவசியமானது. அதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் வெற்றியளிக்கவில்லை. வட-கிழக்கின் மீனவர்கள் ஒருங்கிணைந்த நிறுவனங்களை உருவாக்கி, அதனைச் செயல்நெறியோடு இயங்கவைப்பதும், அவற்றின் ஊடாகத் திணைக்களங்கள், அமைச்சுகளை அணுகி அழுத்தங்களைக் கொடுப்பதுமே ஆரோக்கியமானது.  நாம் நேரடியாகத் தமிழக மீனவரோடு முரண்படுவதோ, மொட்டையடித்து அனுப்புவதை வரவேற்பதோ பொருத்தமான அணுகுமுறையாகாது. தமிழக மீனவர் (தமிழர்) என்பதற்காகவே மொட்டையடிக்கப்பட்டனர் என்பதையும் நோக்க வேண்டும்.   இந்த விடயத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளை அணுகிக் காலத்தை விரயாமாக்குவதையும் கைவிடவேண்டும். ஏனெனில் அவர்கள் தமக்கென்ன லாபமெனக் கேட்கும் கூட்டமாகிப் பல்லாண்டுகளாகிவிட்டது. சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில, மத்திய அரசுகள் ஊடாக ஒரு எல்லைதாண்டாத வகையில் கட்டுப்படுத்தும் பொறிமுறையொன்றைக் கண்டடைவதே இருகரையிலும் தொழில் செய்யும் மீனவர்களுக்கு நன்மைபயக்கும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    
 
 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nochchi said:

 தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை நோக்கி தார்மீக உதவியைக் கோரும் சகோதரர்களாக இன்று தமிழீழ தேசவிடுதலை கோரும் இனமொன்றின் சிந்தனைப் போக்கைப் பொதுமையாக நோக்கினால், அறிவின் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய எமது தலைமை இன்று இவற்றை அறிய நேருமாயின் இந்த மக்களுக்காகவா போராடினோம் என்ற எண்ணமே மேலெழும். தமிழீழத்தை இந்தியா பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்ற முடிவு தெரிந்தபோதும், அதாவது இந்திராகாந்தி அம்மையாரவர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டை நாம் பாதுகாப்போம் என்ற முன்மொழிவோடு யே.ஆரைப் பார்த்தசாரதி ஊடாக அணுகியபோதும் தமிழரது உரிமைகளை மறுத்ததோடு பின்வந்த ஆண்டுகளில் இந்திராகாந்தி அம்மையாரின் மறைவோடு மிகத்தந்திரமாகத் தமிழரோடு மோதலை ஏற்படுத்தும் களமாக யே.ஆர் சிங்களத்தின் சிறந்த அரசியல் விற்பனனாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக் கையாண்டதோடு, தமிழருக்கும், இந்திய அரசுக்கும் இடையே முரணை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றதோடு, அதன் தொடராக இன்றுவரை மிகக் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட 13ஆவது திருத்தமெனச் சுட்டப்படும் மாகாணசபைகளைக்கூட தொடர்ந்துவரும் அரசுகள் நடைமுறைப்படுத்தாது தட்டிக்கழித்தவருவதை நாம் கண்டுவருகின்றோம். (இந்த லட்சனத்தில் ரணிலுக்கு,சஜித்துக்கு, அனுரவுக்கு வாக்குக் கேட்கும் தமிழ் அரசியல் விற்பன்னர்கள் தமிழரை விற்றுக்கொண்டிருப்பது வேறுகதை) மிகவும் அருகிலே மொழி, கலை,பண்பாடு என்பவற்றோடு ஒன்றுக்குள் ஒன்றான தமிழகத்தையும், தமிழக மக்களையும் நாம் வென்றெடுத்து எம்மோடு இணைத்துப் பயணிக்க முடியாத சூழலில் பகையற்ற நிலையிலாவது வைத்திருக்க வேண்டுமென்ற பொதுவான நோக்குநிலை அவசியமற்றதா? சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டமைத்து அதனை மிகப்பெரும் இராணுவபூதத்தின் மீது நிலைநிறுத்தி வைத்துள்ள நிலையில் எமக்கு ஒரு துன்பமென்றால் குரல்கொடுக்கும் நிலையிலாவது தமிழகத்தைப் பேணுதல் வேண்டாமா? ஒருவேளை புலத்தமிழர் போதுமென்றால் ஏமாற்றமே மிஞ்சும். எங்களுக்குப்பின் தாயகத்துக்காக ஏதாவது எமது அடுத்த தலைமுறை, மூத்த தலைமுறையின் அர்ப்பணிப்போடு பெரிய அளவில் செய்யும் என்று எண்ணினால் ஏமாற்றமே. போராட்டத்தின் பின் தளமாக இருந்த தமிழகத்தையும், தமிழீழத்தையும் உணர்வுரீதியாகப் பிரிப்பதிலேயே இந்திய – சிங்கள அரசுகளின் பாதிவெற்றியை சாத்தியமாக்குகிறார்கள் என்பதை ஈழத்தமிழினம் அறிவுசார் புலமையோடு நோக்கவேண்டும். 
ஒப்பந்தம் போட்டுக் கொள்ளையிடும் (இந்திய) பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இது ஒரு சிறிய அளவிலான, ஆனால் அன்றாடப் பிழைப்புக்குக் கரையோரங்களை நாடும் எமது மீனவர்களைப் பாதிக்கும் செயற்பாடு. இதனை நிறுவனரீதியாக அணுகுதல் அவசியமானது. அதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் வெற்றியளிக்கவில்லை. வட-கிழக்கின் மீனவர்கள் ஒருங்கிணைந்த நிறுவனங்களை உருவாக்கி, அதனைச் செயல்நெறியோடு இயங்கவைப்பதும், அவற்றின் ஊடாகத் திணைக்களங்கள், அமைச்சுகளை அணுகி அழுத்தங்களைக் கொடுப்பதுமே ஆரோக்கியமானது.  நாம் நேரடியாகத் தமிழக மீனவரோடு முரண்படுவதோ, மொட்டையடித்து அனுப்புவதை வரவேற்பதோ பொருத்தமான அணுகுமுறையாகாது. தமிழக மீனவர் (தமிழர்) என்பதற்காகவே மொட்டையடிக்கப்பட்டனர் என்பதையும் நோக்க வேண்டும்.   இந்த விடயத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளை அணுகிக் காலத்தை விரயாமாக்குவதையும் கைவிடவேண்டும். ஏனெனில் அவர்கள் தமக்கென்ன லாபமெனக் கேட்கும் கூட்டமாகிப் பல்லாண்டுகளாகிவிட்டது. சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில, மத்திய அரசுகள் ஊடாக ஒரு எல்லைதாண்டாத வகையில் கட்டுப்படுத்தும் பொறிமுறையொன்றைக் கண்டடைவதே இருகரையிலும் தொழில் செய்யும் மீனவர்களுக்கு நன்மைபயக்கும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    
 
 

நன்றிகள் பல.  மிகவும் அருமையான கருத்துகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல பயனுள்ள கருத்துக்கள் நொச்சி .........நாம் உள்ளத்தையும் இழந்து நிற்கும் இனமாக இருக்கின்றோம் . ......... சும்மா உணர்ச்சி வசப்பட்டு பகையை வளர்ப்பது மென்மேலும் இன அழிவுக்குத்தான் வழிவகுக்கும் . ......!  

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரை தமிழக  ஊடகங்களோ அல்லது அரசியல் கட்சிகளோ  தமிழக அரசோ தமிழக மீனவர்கள்  எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது  கைது செய்யப்பட்டார்கள் என்றோ அ;ல்லது மீன் பிடித்தார்கள் என்றோ ஒத்துக்கொள்வதும் இல்லை ஒருவரி செய்தி எழுதுவதும்  இல்லை.

எப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் ..

இலங்கை கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது,

கச்சதீவுக்கு அருகிலே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது..இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டார்கள் என்பதும்,

அல்லது இந்திய கடற்பரப்பில் அத்துமீறிய இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் என்றும் சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

பின்பு அதே வாயால் இலங்கை தமிழர்கள் உரிமையை, அவர்கள் வாழ்வு மேம்பாட்டை  வலியுறுத்துகிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிப்பார்கள்.

மூன்று தசாப்த காலமாக உயிர் உடமை இழந்து போருக்குள் வாழ்ந்த ஈழ தமிழர்கள் இப்போதுதான் படிப்படியாக மீண்டு வருகிறார்கள்அவர்கள்  வயிற்றில் அடிக்காதீர்கள் அது தவறென்று எந்த தரப்புமே தமது மீனவர்களுக்கு சொன்னதும் இல்லை தவறை சுட்டிக்காட்டியதும் இல்லை

காலம் காலமாக இலங்கை தமிழர் விவகாரத்தில் எம்ஜிஆரை தவிர்த்து ஏனைய தமிழக கட்சிகளும் ஊடகங்களும் செய்வது வெறும் அரசியல் வியாபாரமும் ஊடக வியாபாரமும் மட்டுமே.

உலகின் வலிமையான கடற்படையை கொண்டுள்ள இந்தியாவால் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் பல ஆயிரம் படகுகள் நடுவே கஞ்சா தங்கம் ஆயுதம்   கடத்தும் ஒருசில படகுகளையே கண்டறியும் இந்திய கடற்படையால் நூற்றுக்கணக்கில் எல்லை தாண்டும்  மீன்பிடி படகுகளை  கண்காணிப்பது அத்தனை சிரமம் அல்ல, ஆனாலும் கண்டுக்காமல் இருப்பார்கள்,  

ஒருதடவை கடலுக்கு போய்வர இழுவை படகுகளுக்கு சில லட்சம் வாடகை  பணம் செலுத்தும்  அன்றாடங்காய்ச்சி மீனவர்கள் பணத்தை செலுத்துவதற்காகவே தமது பகுதியை வெறுமையாக்கிவிட்டு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைகின்றனர்.

மத்திய மாநில அரசுகள் எல்லை தாண்டும் மீனவர்களுக்கெதிராய் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தினால் கொஞ்சமாவது பயப்படுவார்கள், ஆனால் அரசுகளே அவர்கள் எல்லை தாண்டினார்கள் என்று ஒருபோதும் சொல்வதில்லையே அப்புறம் எப்படி தண்டனைகள் சாத்தியம்?

ஒருதடவை எல்லைமீறும் மீனவர்களை விடுதலை செய்யுங்கள் அவர்கள் வரும் படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என்று சுப்பிரமணிய சுவாமி மஹிந்தவுக்கு ஐடியா கொடுத்தார் , அதன்படி இலங்கையும் நடந்து கொண்டது,பறிமுதல் செய்யப்பட்ட வள்ளங்கள் கரையோரங்களின் நிறுத்தப்பட்டு உக்கிபோனது.

அப்போது ஓரளவு அத்துமீறுதல் கட்டுக்குள் வந்தது,  பின்பு இந்திய அரசின் பேச்சுவார்த்தையால் அது கைவிடப்பட்டது, எனக்கு தெரிந்து சுப்பிரமணிய சுவாமி இலங்கை தமிழருக்கு நன்மையாக செய்த ஒரேயொரு முதலும் கடைசியுமான காரியம் அதுதான்.

மீனவர்கள் கைது செய்யப்படும்போது இந்திய ஊடகங்களில் பின்னூட்டமிடும் இந்திய தமிழர் பலர் , ஈழத்து அகதிகளுக்கு நாங்கள் இங்கே குடியுரிமை கொடுக்க வலியுறுத்துகிறோம், வீடுகட்டி கொடுக்கிறோம், சோறு போடுகிறோம், ஆனால் அவர்கள் எமது மீனவர்களை தாக்குகிறார்கள் கைது செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

ஈழத்து அகதிகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதை நன்றியுணர்வுடன் நோக்கத்தான் வேண்டும், அதற்காக இலங்கையில் உள்ள கரையோர மக்களை பட்டினி போடலாம் தப்பில்லை என்பதுபோல் அவர்கள் கொண்டிருக்கும் மனப்பான்மையை எந்த வழியில் புரிந்து கொள்வது?

வடபகுதி மீனவர்கள் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த  இலங்கை ஆயுதபடைகளின் உதவியை கேட்கும் அளவிற்கு நிலமை இன்றுள்ளது.அவர்களுக்கு வேறு வழியில்லை.

எந்த சிங்கள படைகளுக்கு எதிராக போரிட்டோமோ அதே சிங்கள படைகளுடன் ஈழ தமிழர்களை சேர்த்து வைக்கும் வேலையை தமிழகம் செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

@valavan

கனவு காணாமல் உண்மை நிலை என்ன என்பதை தெரிவிக்கும் சிறந்த கருத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

@valavan

கனவு காணாமல் உண்மை நிலை என்ன என்பதை தெரிவிக்கும் சிறந்த கருத்துக்கள்.

உண்மை தான் யார் இல்லை என்றார்கள்??  தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை நிறுத்த முடியும் நிறுத்தலாம்

சுவிட்சர்லாந்துக்கு ஜேர்மனியிலருந்து தரை வழியாக பயணித்த இலங்கை தமிழர்களை  எல்லைப்பகுதிகளில் சுவிற்சர்லாந்து பொலிஸாரினால் பிடித்து சணல் அடி வழங்கப்பட்டுள்ளன   பலரும் சொன்னார்கள் இலங்கை பொலிஸ் நன்று என்று 

இலங்கையில் ஒரு இனக்கலவரம்  வந்தால்  இலங்கை தமிழ் மக்கள் எல்லை தாண்ட முடியுமா??  தமிழ்நாட்டில் கால் வைக்கலாமா.  ?? 

1983 போல் ஒரு இனக்கலவரம். எற்ப்படுமாயின். 

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி   கொழும்பு காலி  அனுரதபுரம்.  அம்பாந்தோட்டை,   .   அடிப்பார்கள். வெட்டுவார்கள்.    ரயார். போட்டு கொழுத்துவார்கள். ஒரு இடமும் ஒட முடியாது  திட்டமிட்டவகையில் சுற்றி வளைத்து உள்ளார்கள்   இது முழுத் தமிழர்களையும். பாதிக்கும் செயல்   

நீங்கள் செய்வது இலங்கையில் தமிழர்களின் இருப்பை  இலகுவாக அழிக்கும் செயல்கள் 

பலமுறை  நடந்த இனக்கலவரங்களின் போதும்

ஆயத போராட்டங்களின் போதும் 

முள்ளிவாய்க்காலின் போதும்   இலங்கை தமிழர்கள் ஒடியய

ஒரே இடம் தமிழகம் தான்   

இது எல்லை தாண்டியது இல்லையா ??  ஏன். எல்லை தாண்டினீர்கள்??  

சிங்களப் பகுதிகளை நோக்கி ஒடியிருக்கலாம்.  ஏன். சிங்களப்பகுதிகளுக்கு போகவில்லை  ??   🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nochchi said:

 தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை நோக்கி தார்மீக உதவியைக் கோரும் சகோதரர்களாக இன்று தமிழீழ தேசவிடுதலை கோரும் இனமொன்றின் சிந்தனைப் போக்கைப் பொதுமையாக நோக்கினால், அறிவின் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய எமது தலைமை இன்று இவற்றை அறிய நேருமாயின் இந்த மக்களுக்காகவா போராடினோம் என்ற எண்ணமே மேலெழும். தமிழீழத்தை இந்தியா பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்ற முடிவு தெரிந்தபோதும், அதாவது இந்திராகாந்தி அம்மையாரவர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டை நாம் பாதுகாப்போம் என்ற முன்மொழிவோடு யே.ஆரைப் பார்த்தசாரதி ஊடாக அணுகியபோதும் தமிழரது உரிமைகளை மறுத்ததோடு பின்வந்த ஆண்டுகளில் இந்திராகாந்தி அம்மையாரின் மறைவோடு மிகத்தந்திரமாகத் தமிழரோடு மோதலை ஏற்படுத்தும் களமாக யே.ஆர் சிங்களத்தின் சிறந்த அரசியல் விற்பனனாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக் கையாண்டதோடு, தமிழருக்கும், இந்திய அரசுக்கும் இடையே முரணை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றதோடு, அதன் தொடராக இன்றுவரை மிகக் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட 13ஆவது திருத்தமெனச் சுட்டப்படும் மாகாணசபைகளைக்கூட தொடர்ந்துவரும் அரசுகள் நடைமுறைப்படுத்தாது தட்டிக்கழித்தவருவதை நாம் கண்டுவருகின்றோம். (இந்த லட்சனத்தில் ரணிலுக்கு,சஜித்துக்கு, அனுரவுக்கு வாக்குக் கேட்கும் தமிழ் அரசியல் விற்பன்னர்கள் தமிழரை விற்றுக்கொண்டிருப்பது வேறுகதை) மிகவும் அருகிலே மொழி, கலை,பண்பாடு என்பவற்றோடு ஒன்றுக்குள் ஒன்றான தமிழகத்தையும், தமிழக மக்களையும் நாம் வென்றெடுத்து எம்மோடு இணைத்துப் பயணிக்க முடியாத சூழலில் பகையற்ற நிலையிலாவது வைத்திருக்க வேண்டுமென்ற பொதுவான நோக்குநிலை அவசியமற்றதா? சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டமைத்து அதனை மிகப்பெரும் இராணுவபூதத்தின் மீது நிலைநிறுத்தி வைத்துள்ள நிலையில் எமக்கு ஒரு துன்பமென்றால் குரல்கொடுக்கும் நிலையிலாவது தமிழகத்தைப் பேணுதல் வேண்டாமா? ஒருவேளை புலத்தமிழர் போதுமென்றால் ஏமாற்றமே மிஞ்சும். எங்களுக்குப்பின் தாயகத்துக்காக ஏதாவது எமது அடுத்த தலைமுறை, மூத்த தலைமுறையின் அர்ப்பணிப்போடு பெரிய அளவில் செய்யும் என்று எண்ணினால் ஏமாற்றமே. போராட்டத்தின் பின் தளமாக இருந்த தமிழகத்தையும், தமிழீழத்தையும் உணர்வுரீதியாகப் பிரிப்பதிலேயே இந்திய – சிங்கள அரசுகளின் பாதிவெற்றியை சாத்தியமாக்குகிறார்கள் என்பதை ஈழத்தமிழினம் அறிவுசார் புலமையோடு நோக்கவேண்டும். 
ஒப்பந்தம் போட்டுக் கொள்ளையிடும் (இந்திய) பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இது ஒரு சிறிய அளவிலான, ஆனால் அன்றாடப் பிழைப்புக்குக் கரையோரங்களை நாடும் எமது மீனவர்களைப் பாதிக்கும் செயற்பாடு. இதனை நிறுவனரீதியாக அணுகுதல் அவசியமானது. அதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் வெற்றியளிக்கவில்லை. வட-கிழக்கின் மீனவர்கள் ஒருங்கிணைந்த நிறுவனங்களை உருவாக்கி, அதனைச் செயல்நெறியோடு இயங்கவைப்பதும், அவற்றின் ஊடாகத் திணைக்களங்கள், அமைச்சுகளை அணுகி அழுத்தங்களைக் கொடுப்பதுமே ஆரோக்கியமானது.  நாம் நேரடியாகத் தமிழக மீனவரோடு முரண்படுவதோ, மொட்டையடித்து அனுப்புவதை வரவேற்பதோ பொருத்தமான அணுகுமுறையாகாது. தமிழக மீனவர் (தமிழர்) என்பதற்காகவே மொட்டையடிக்கப்பட்டனர் என்பதையும் நோக்க வேண்டும்.   இந்த விடயத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளை அணுகிக் காலத்தை விரயாமாக்குவதையும் கைவிடவேண்டும். ஏனெனில் அவர்கள் தமக்கென்ன லாபமெனக் கேட்கும் கூட்டமாகிப் பல்லாண்டுகளாகிவிட்டது. சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில, மத்திய அரசுகள் ஊடாக ஒரு எல்லைதாண்டாத வகையில் கட்டுப்படுத்தும் பொறிமுறையொன்றைக் கண்டடைவதே இருகரையிலும் தொழில் செய்யும் மீனவர்களுக்கு நன்மைபயக்கும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    
 
 

இது தான் ஜதார்த்தம்....
இதில் கடற்றொழில் அமைச்சர் பதவியை தமிழ்மகனுக்கு கொடுத்து அவர் ஊடாக இந்தியா,சிறிலங்கா அதிகார மையங்கள் ஆடும் ஆட்டம் .....வடக்கு கிழககு மாகாணங்களுக்கு அதிகாரம் கொடுப்பது உந்த அதிகார மையங்களுக்கு பெரிய விடயம் அல்ல ஆனால் அதை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டிய நிலையில் இந்தியாவும் இலங்கையும் இருக்கின்றது...

இறையாண்மை உள்ள சிறிலங்காவில் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என தீர்மானிக்கும் சக்தியாக வெளிநாடுகள் இருக்கின்றன ....இந்த நிலை 40 வருடங்களுக்கு முன்பு இருக்கவில்லை....
சவுதி அரேபியா,ஈரான் போன்ற நாடுகளும் சிறிலங்காவின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்திகளாக்  மாறிவருகின்றன ...இந்த இலட்சணத்தில சிங்களவ்ர்கள் வடக்கு கிழக்கு உரிமை கொடுக்க கூடாது பிரச்சாரம்....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

 

1983 போல் ஒரு இனக்கலவரம். எற்ப்படுமாயின். 

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி   கொழும்பு காலி  அனுரதபுரம்.  அம்பாந்தோட்டை,   .   அடிப்பார்கள். வெட்டுவார்கள்.    ரயார். போட்டு கொழுத்துவார்கள். ஒரு இடமும் ஒட முடியாது  திட்டமிட்டவகையில் சுற்றி வளைத்து உள்ளார்கள்   இது முழுத் தமிழர்களையும். பாதிக்கும் செயல்   

 

சிங்களப் பகுதிகளை நோக்கி ஒடியிருக்கலாம்.  ஏன். சிங்களப்பகுதிகளுக்கு போகவில்லை  ??   🙏🙏

அடுத்த சிங்களத்தின் திட்டம் இதுவாக இருக்குமோ ?
வடக்குகிழக்கு பகுதியில் இனக்கலவரத்தை ஏற்படுத்துவார்கள் அங்கிருந்து சிங்கள பகுதிக்கு அடித்து துரத்துவார்கள் "அப்பே ஒக்கம எக்க ஜாதிய,எக்கரட்ட மினுசு"என ஒருசில புத்திஜீவிகள்(இனவாத )சொல்லுவார்கள் நீங்கள் எமது பகுதியில் சிங்கள மக்களுடன் இரண்டர கலந்து வாழுங்கள் ...வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை (காடையர்கள்,இராணுவம்) குடியேற்றி அந்த நிலத்தை ,கடல் வளத்தையும் இந்தியாவிடமிருந்து பாதுகாப்போம் எண்டு...
அதை சிறந்த தீர்ப்பு என நம்ம அரசியல் வாதிகளும் சொல்லுவார்கள் ... 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

அடுத்த சிங்களத்தின் திட்டம் இதுவாக இருக்குமோ ?
வடக்குகிழக்கு பகுதியில் இனக்கலவரத்தை ஏற்படுத்துவார்கள் அங்கிருந்து சிங்கள பகுதிக்கு அடித்து துரத்துவார்கள் "அப்பே ஒக்கம எக்க ஜாதிய,எக்கரட்ட மினுசு"என ஒருசில புத்திஜீவிகள்(இனவாத )சொல்லுவார்கள் நீங்கள் எமது பகுதியில் சிங்கள மக்களுடன் இரண்டர கலந்து வாழுங்கள் ...வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை (காடையர்கள்,இராணுவம்) குடியேற்றி அந்த நிலத்தை ,கடல் வளத்தையும் இந்தியாவிடமிருந்து பாதுகாப்போம் எண்டு...
அதை சிறந்த தீர்ப்பு என நம்ம அரசியல் வாதிகளும் சொல்லுவார்கள் ... 

சிந்திக்க வேண்டிய விடயம்.

சுற்றிவனைப்புகள் அப்படியானதொரு நிலையை நோக்கி இருப்பதுபோலவும், காலம் கனிவதற்காகச் சிங்களம் காத்திருப்பதுபோலவுமே தோன்றுகிறது. சிங்களத்தின் இறுதி இலக்கு அப்படியானதொரு திட்டத்தோடும் இருக்கலாம்.  

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி     
 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nochchi said:

சிந்திக்க வேண்டிய விடயம்.

சுற்றிவனைப்புகள் அப்படியானதொரு நிலையை நோக்கி இருப்பதுபோலவும், காலம் கனிவதற்காகச் சிங்களம் காத்திருப்பதுபோலவுமே தோன்றுகிறது. சிங்களத்தின் இறுதி இலக்கு அப்படியானதொரு திட்டத்தோடும் இருக்கலாம்.  

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி     
 

உலக இஸ்லாமிய கொள்கை வகுப்பாளர்கள் ,தங்களது கொள்கைகளை பரப்ப தமிழக/கேரளா இஸ்லாமிய சகோதரர்கள் சிறிலங்கா இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து தங்களது செயல்களை வடக்கு கிழக்கில் செய்கின்றனர்...அது ஒரு தனி டரக் போகின்றது ...

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம்.

வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது,  ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம்.

இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம்.

பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது.

இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள்.

எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும்.

பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.