Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. [எ]

அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com)

அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பிழம்பு said:

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார்.

"ஜனநாயக தேசிய கூட்டணி"யின் தலைவர் யார் என்று தெரியுமா? இது சிங்கள கட்சியா ? 
"ஜனநாயக தமிழ்  தேசிய கூட்டணி" என்று, ஒன்று... சித்தார்த்தன் தலைமையில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
பல கட்சிகள்... கிட்டத்தட்ட ஒரே பெயரில் உள்ளதால் ஒரே குழப்பம். 
மக்கள் எப்படி, குழம்பாமல்  வாக்களிக்கப் போகின்றார்கள் என்று பார்ப்போம்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

"ஜனநாயக தேசிய கூட்டணி"யின் தலைவர் யார் என்று தெரியுமா? இது சிங்கள கட்சியா ? 
"ஜனநாயக தமிழ்  தேசிய கூட்டணி" என்று, ஒன்று... சித்தார்த்தன் தலைமையில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
பல கட்சிகள்... கிட்டத்தட்ட ஒரே பெயரில் உள்ளதால் ஒரே குழப்பம். 
மக்கள் எப்படி, குழம்பாமல்  வாக்களிக்கப் போகின்றார்கள் என்று பார்ப்போம்.  

எல்லாரும் படத்தை நல்லாப் பார்த்து புள்ளடி போடிவினம்!

“யானைக்கு எதிரே புள்ளடி” என்று சின்ன வயதில் போஸ்ரர் பார்த்த நினைவு. இப்ப சங்கு, தபால்பெட்டி, வீடு, மான், சைக்கிள், திசைகாட்டி என்று கலாதியாக இருக்கு😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

"ஜனநாயக தேசிய கூட்டணி"யின் தலைவர் யார் என்று தெரியுமா? இது சிங்கள கட்சியா ? 
"ஜனநாயக தமிழ்  தேசிய கூட்டணி" என்று, ஒன்று... சித்தார்த்தன் தலைமையில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
பல கட்சிகள்... கிட்டத்தட்ட ஒரே பெயரில் உள்ளதால் ஒரே குழப்பம். 
மக்கள் எப்படி, குழம்பாமல்  வாக்களிக்கப் போகின்றார்கள் என்று பார்ப்போம்.  

மக்களைக் குழப்புவதற்காகத்தானே இத்தனை கட்சிகள். தேசியத்தின் மீதான பற்றுதலிலா இவர்கள் போட்டியிடுகிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

"ஜனநாயக தேசிய கூட்டணி"யின் தலைவர் யார் என்று தெரியுமா? இது சிங்கள கட்சியா ? 
"ஜனநாயக தமிழ்  தேசிய கூட்டணி" என்று, ஒன்று... சித்தார்த்தன் தலைமையில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
பல கட்சிகள்... கிட்டத்தட்ட ஒரே பெயரில் உள்ளதால் ஒரே குழப்பம். 
மக்கள் எப்படி, குழம்பாமல்  வாக்களிக்கப் போகின்றார்கள் என்று பார்ப்போம்.  

சத்தியாமா சொல்லுறன் ...எனக்கும் இந்த குழப்ப நிலை தான் ...நான் இங்க கேட்பம் எண்டு இருந்தேன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் ...செய்திகளை பார்க்கிற எங்களுக்கே குழப்பமா இருக்கு என்றால் ...செய்திகளை  வாசிக்காமல் ஐந்து வருடத்த்திற்கு ஒருக்கா வாக்கு சாவடிக்கு போகும் நம்ம பொதுஜனங்கள் பாடு எப்படியிருக்க போகுது....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மக்களைக் குழப்புவதற்காகத்தானே இத்தனை கட்சிகள். தேசியத்தின் மீதான பற்றுதலிலா இவர்கள் போட்டியிடுகிறார்கள்? 

தேசிய பட்டியலில் எம்.பி பதவி கிடைக்கும் என் நினக்கின்றனர் போலும் ..4000 வாக்குகள் எடுத்தாலும் சில சமயம் கிடைக்க கூடிய சந்தர்ப்பம் உண்டு ...என் நினைக்கினம் போல
தேசிய பாரளுமன்றம் சென்று சிறிலங்கா தேசியத்தில் வென்றால் சிறிலங்கா தேசியமும் ,தமிழ் தேசியத்தில் வென்றால் தமிழ் தேசியமும் பேசலாம் என எண்ணுகின்றனர் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, putthan said:

சத்தியாமா சொல்லுறன் ...எனக்கும் இந்த குழப்ப நிலை தான் ...நான் இங்க கேட்பம் எண்டு இருந்தேன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் ...செய்திகளை பார்க்கிற எங்களுக்கே குழப்பமா இருக்கு என்றால் ...செய்திகளை  வாசிக்காமல் ஐந்து வருடத்த்திற்கு ஒருக்கா வாக்கு சாவடிக்கு போகும் நம்ம பொதுஜனங்கள் பாடு எப்படியிருக்க போகுது....

இப்படி தலைசுற்றி விழுவதைவிட

தெரிந்த வீட்டுக்கும் சைக்கிளுக்கும் போடுவம் என மக்கள் எண்ணுகிறார்களோ தெரியாது.    

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்படி தலைசுற்றி விழுவதைவிட

தெரிந்த வீட்டுக்கும் சைக்கிளுக்கும் போடுவம் என மக்கள் எண்ணுகிறார்களோ தெரியாது.    

வீட்டுக்கு சங்கு ஊதுவம் எண்டு சனம் நினைக்குதோ தெரியவில்லை😅

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

வீட்டுக்கு சங்கு ஊதுவம் எண்டு சனம் நினைக்குதோ தெரியவில்லை😅

தமிழில் உள்ள ஒரு  பழைய மொழி போன்று தெரிந்த பிசாசுகளான வீட்டுக்கும், சைக்கிளுக்கும் தான் மக்கள் போடுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் பெரிய பிசாசு ஒன்றுக்கு நாதஸ்வரம் ஊதி வரவேற்க போகின்றார்களாம்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழில் உள்ள ஒரு  பழைய மொழி போன்று தெரிந்த பிசாசுகளான வீட்டுக்கும், சைக்கிளுக்கும் தான் மக்கள் போடுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் பெரிய பிசாசு ஒன்றுக்கு நாதஸ்வரம் ஊதி வரவேற்க போகின்றார்களாம்

தமிழர்கள் பயமில்லாமல் பிசாசுகளையும் அனுப்பலாம் காரணம் அங்கு பேய் ,பிசாசுகளை விரட்டியடிக்கிற பூசாரி வெப்பமிலையுடன் இருக்கிறார் ...😅

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, putthan said:

தமிழர்கள் பயமில்லாமல் பிசாசுகளையும் அனுப்பலாம் காரணம் அங்கு பேய் ,பிசாசுகளை விரட்டியடிக்கிற பூசாரி வெப்பமிலையுடன் இருக்கிறார் ...😅

ஒருவேளை பிசாசுகளுடன் கூட்டணி அமைக்க வேண்டி வந்தால் வேப்பிலையை எடுக்க முடியாதே.
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

ஒருவேளை பிசாசுகளுடன் கூட்டணி அமைக்க வேண்டி வந்தால் வேப்பிலையை எடுக்க முடியாதே.
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

இந்த பிசாசுகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை அந்த பூசாரிக்கு வராது என நினைக்கிறேன், ...அப்படி கூட்டணி வைத்தால் அவர் ஒர் நல்ல பூசாரியாக இருக்க முடியாது ....
பிசாசுகள் பூசாரியை விரட்டி விடுங்கள்😅

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

இந்த பிசாசுகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை அந்த பூசாரிக்கு வராது என நினைக்கிறேன், ...அப்படி கூட்டணி வைத்தால் அவர் ஒர் நல்ல பூசாரியாக இருக்க முடியாது ....

 

வெளியுலகப் பிசாசுகளுடன் டீல் போகிறது. இனிப்பெரும்பாலும் உள்ளூர் பிசாசுகளையும் அரவணைக்கவே வாய்ப்புள்ளது. ஒருவேளை 113 கிடைத்தால் உள்ளூர் பிசாசுகளைத் தேடார். தமிழரைத் தீர்க்கும் வழிதேடுவார்.
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி
 

5 minutes ago, putthan said:


பிசாசுகள் பூசாரியை விரட்டி விடுங்கள்😅

உண்மை. கோட்டாவுக்கு அறகலய போல் இவருக்கு அனுரகலய என்று வந்தாலும் ஆச்சரியப்படமுடியாது.
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தமிழர்கள் பயமில்லாமல் பிசாசுகளையும் அனுப்பலாம் காரணம் அங்கு பேய் ,பிசாசுகளை விரட்டியடிக்கிற பூசாரி வெப்பமிலையுடன் இருக்கிறார் ...😅

பட்டையும் கொட்டையுமாக இருக்கும் பூசாரி களமிறங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

எல்லாரும் படத்தை நல்லாப் பார்த்து புள்ளடி போடிவினம்!

“யானைக்கு எதிரே புள்ளடி” என்று சின்ன வயதில் போஸ்ரர் பார்த்த நினைவு. இப்ப சங்கு, தபால்பெட்டி, வீடு, மான், சைக்கிள், திசைகாட்டி என்று கலாதியாக இருக்கு😂

 

5 hours ago, Kapithan said:

மக்களைக் குழப்புவதற்காகத்தானே இத்தனை கட்சிகள். தேசியத்தின் மீதான பற்றுதலிலா இவர்கள் போட்டியிடுகிறார்கள்? 

3 hours ago, putthan said:

சத்தியாமா சொல்லுறன் ...எனக்கும் இந்த குழப்ப நிலை தான் ...நான் இங்க கேட்பம் எண்டு இருந்தேன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் ...செய்திகளை பார்க்கிற எங்களுக்கே குழப்பமா இருக்கு என்றால் ...செய்திகளை  வாசிக்காமல் ஐந்து வருடத்த்திற்கு ஒருக்கா வாக்கு சாவடிக்கு போகும் நம்ம பொதுஜனங்கள் பாடு எப்படியிருக்க போகுது....

முன்பு தேர்தல் என்றால்…. ஐந்து அல்லது ஆறு கட்சிகள்தான் போட்டியிடும். அவை மக்களுக்கு பழக்கமான கட்சிகள் என்ற படியால், மக்கள் குழம்பாமல் வாக்கு போட்டு விட்டு சென்று விடுவார்கள். 

இம்முறை என்றும் இல்லாத அளவு புற்றீசல் போல் கட்சிகள் கிளம்பி அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களையே குழப்பி விட்டுள்ள நிலைமைதான் தெரிகின்றது. 

ரெலிபோனுக்கும், கல்குலேட்டருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத யாழ்ப்பாண மக்கள்தான் பாவம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

ரெலிபோனுக்கும், கல்குலேட்டருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத யாழ்ப்பாண மக்கள்தான் பாவம். 😂 🤣

யாழ்ப்பாணத்தாரின் அடி மடியிலேயே கைவைக்கும் சிறியரை நான்  வன்மையாகக் கண்டிக்கும்,...🥱

1 hour ago, ஈழப்பிரியன் said:

பட்டையும் கொட்டையுமாக இருக்கும் பூசாரி களமிறங்கவில்லை.

நாலைந்து வருடங்களுக்கு முன்னர் அவரை கனடாவில் பார்க்கப் போயிருக்கும்போதே அவருக்கு மூச்சிரைக்கத்  தொடங்கியிருந்தது. இப்போது நிலைமை அவருடைய வயதுக்கு ஏற்ப இன்னும் இயலாமையை  கூட்டியிருக்கும் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

குட்டையை குழப்பி மீன் பிடித்து விடலாம் என்று கணக்கு போடுபவர்களுக்கு, மீன்கள் குழப்பத்தில் குட்டையை விட்டு வெளியேறி வேறொரு குட்டையையோ, நீர்நிலையையோ தேடஆயத்தமாகி விட்டன என்பது தெரியாமலிருக்கலாம். எந்த சின்னம் எந்த கட்சிக்கு என்று தெரியாமல் குழப்பமாக இருந்தாலும், தங்களுக்கு வேண்டாத சின்னம், தங்களை ஏமாற்றிய சின்னம், தங்களால் தூக்கி எறியப்படவேண்டிய சின்னம் எது  என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதிலொரு குழப்பமுமில்லை மக்களுக்கு. இப்போ முளைத்த சின்னத்தால் தமக்கு எதுவும் நடக்காது ஆகவே அந்த சின்னத்தையோ வேட்பாளரையோ பற்றியோ   மக்கள் நினைவில் வைத்திருக்கவோ சிந்திக்கவோ மாட்டார்கள். இவர்கள் செய்யும் கூத்து, ஒரே ஒரு சின்னம், அனுராவின் சின்னத்தை, அனுராவை நோக்கி மக்களை தள்ளுகிறார்கள் என்றே நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் திணைக்களமும் திணறப்போகுது, போட்டியிடும் கட்சிகளின் தொகை வாக்களிக்கும் மக்களின் தொகைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என. இதில் யாரும் மக்களுக்காக சேவை செய்ய விரும்பவில்லை, மக்களை ஏமாற்றி தங்களை சிறப்பிக்க, சும்மா இருந்து சுக வாழ்வு அனுபவிக்க விரும்புகிறார்கள் என்பது. இதற்கு அனுரா ஒரு முடிவு கட்டவேண்டும். ஒரு பதவியை வகிப்பவர் அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பதுபோல், இதற்கும் ஒரு வரையறை கொண்டுவந்து இவர்களை கட்டுப்படுத்த வேண்டும், அதற்கான பொறுப்புக்கூறல் செய்ய வைக்க வேண்டும். அதன் பின் தகுதியற்றவன் அரசியல் பக்கம் தலைவைத்து படுக்கவே மாட்டான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

இம்முறை என்றும் இல்லாத அளவு புற்றீசல் போல் கட்சிகள் கிளம்பி அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களையே குழப்பி விட்டுள்ள நிலைமைதான் தெரிகின்றது. 

சந்திக்கு சந்தி தேத்தண்ணி கடை போட்ட பழக்கம் தமிழர்களின் அடி நாதமான அரசியலிலும் வந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சந்திக்கு சந்தி தேத்தண்ணி கடை போட்ட பழக்கம் தமிழர்களின் அடி நாதமான அரசியலிலும் வந்து விட்டது.

குமாரசாமி அண்ணை, உண்மையில்… பல கட்சிகள் உருவாக தமிழரசு கட்சியின் செய்கைகளும் முக்கிய காரணம்.
ஆனால்… அதை பலர் இங்கு மூடி மறைத்துக் கொண்டு கருத்து எழுதுகின்றதை பார்க்க சிரிப்பாக இருக்குது. 😂
அது சரி…. வெள்ளை அடிக்கிற வேலையில் இறங்கியவர்களிடம் வேறு என்னத்தை எதிர் பார்க்க முடியும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பட்டையும் கொட்டையுமாக இருக்கும் பூசாரி களமிறங்கவில்லை.

 Exit the  spirituals

Enter the spirit 

வழமையா என்னை போல் ஆட்கள் மாறி செய்வினம் வயது வயது போக போக ஸிப்ரிட்டை விட்டு  ஸ்ப்ரிட்யுவலுக்கு 😅

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அனுராவின் சின்னத்தை, அனுராவை நோக்கி மக்களை தள்ளுகிறார்கள் என்றே நினைக்கிறன்.

இந்தப் பெருமளவிலான சுயேச்சைகளின் களமே அனுராவை நோக்கிய மடைமாற்றத்திற்காகவும் இருக்கலாம். யாரறிவார்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை. ஆளும் தரப்பினருடன் சேர்ந்து விட்டால் சுகம் அனுபவிக்கலாம் என வௌவால் போல தொங்கும் கூட்டம், தங்கள் பழைய எஜமானரையும் கட்சியையும் துறந்து வேறொரு பிறப்பெடுக்க முயற்சிக்கின்றனர். புதிய மொத்தையில் பழைய கள் குடுக்க முயற்சிக்கின்றனர், குடிப்பவர் யார்? அனுரா குடிப்பாரானால் முன்னையவர்கள் துரத்தியடிக்க பட்டிருக்க மாட்டார்களே.

மாற்றத்தை வேண்டித்தான் மக்கள் இவரை நாடினர், அது அவருக்கு நன்றாகத்தெரியும். அவர்களின் அவாவை நிறைவேற்றி வைக்க வேண்டியது இவரின் கடமை. இது இவருக்குள்ள பாரிய பொறுப்பு, இந்த சந்தர்ப்பத்தை கைவிட்டால் இவர்களுக்கோ, வேறு யாருக்கோ இப்படிப்பட்ட ஒரு பொன்னான சந்தர்ப்பம் இவர்களே நினைத்தாலும் திரும்பி வராது. சந்திரிக்கா நழுவ விட்டு இப்போ புலம்புகிறார். மஹிந்த மனதுக்குள்ளேயே குமுறுவார், நான் செய்த தவறு அவர்களின் தலைவரை கொன்றதுதான் என்று வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தாங்கள் செய்யாததை வேறொருவர் செய்து புகழடைவதை விரும்பவில்லை, தடைக்கற்களாக இருக்கிறார்கள்.  தங்கள் வாரிசுகள், சொத்துக்களுக்காக பொன்னான நாட்டை அடகு வைத்து அழிக்கிறார்கள். கண் கெட்டபின் நீலிக்கண்ணீர் வடித்து, நமஸ்காரம் செய்வதில் பயனில்லை. காலம் ஓடிக்கொண்டே இருக்கும், அது யாருக்காகவும் தன் ஓட்டத்தை நிறுத்தப்போவதில்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.