Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ஸ் களால் இலங்கை வாழ் வடக்கு கிழக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது  என்கிறீர்களா? 

நீங்கள் நல்ல வைத்தியரை பார்ப்பது எங்கள் நேரத்தை வீணாக்காது. 

Edited by விசுகு

  • Replies 77
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    மக்கள்  விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்கள் தாம் தமிழருக்கு உரிமை எதனையும் கொடுக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். சில "தெமழுவோ" க்களின் தேசியத் தலைவரான அநுர குமார திசாநாயக்க, அதே

  • புலவர்
    புலவர்

    திம்புக் கோட்பாட்டில் எந்தவித விட்டுக்கொடுபபையும் செய்யாத ஊழலற்ற தரப்பாக தமிழ்த் தேசிய இளம் வேட்பாளர்களைக் கொண்ட தரப்பாக தமிழ்த்தேசிய முன்ணணியே உள்ளது. அவர்களுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து பலமான த

  • தேர்தலில் பொதுமக்கள் யாருக்கு வாக்களிப்பது| பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட... திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

பலகலைக்கழக மாணவர்களைப் பொறுத்தவரை தமது துடிப்புள்ள இளம் வயதில் இவ்வாறான உணர்ரச்சியூட்டும் தேசிய அறிக்கைகளை வெளியிடுவதும் பின்னர் படிப்பு முடிந்து அரச சேவையில் தத்தமது துறைசார் வேலையில. சேர்ந்து வாழ்ககையில் செற்றிலாகிய பின்னர் தமது வாழ்விற்கோ, வேலைக்கோ, குடும்பத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நோகாமல் மென் தேசியம் பேசுவதும் தேவைப்பட்டால் தென்னிலங்கையில் அல்லது வெளிநாடுகளில் செற்றிலாகி விடுவதுமே வரலாறு.  

ஆகவே,  இவர்களின் இவ்விதமான அறிக்கைகளை முழுமையாக கணக்கெடுக்காமல்,   தாமாக  யோசித்து தமது தேவைகளை கவனிக்க கூடியவர்களை தெரிவு செய்வதே சரியானதாக இருக்கும். ஏனெனில் இன்று இவ்வாறு உணர்சசி அறிக்கை விடும் இவர்கள் படிப்பு முடிந்த பின்னர்  தமது தேவைகளை  மட்டும் தேடி தென்னிலங்கைக்கோ வெளிநாடுகளுக்கோ சென்று செற்றிலாகி தமது குடும்ப தேவைகளை கவனிப்பவர்களாக மாறிவிடுவர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

மக்களின் அன்றாட பிரச்சனைகள் என்ன என்பதை  பாராளுமன்ற உளுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களிடம் பேசி அறிந்து கொள்ள வேண்டும். பின்னர்,  சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடனோ, அமைச்சருடனோ, அமைச்சு அதிகாரிகளினதோ கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தீர்க்க தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.   அவை தீர்க்கப்பட்டதா என்பதை,  அடிக்கடி அம்மக்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். தொடர்சசியான உழைப்பின் மூலம் அவற்றை தீர்க்க முயற்சி செய்யலாம். 

அதை விட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தியும் இதனை செய்யலாம். 

மக்களின் நூறு வீத தேவைகளையும் நிச்சயமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தனது பதவிக்காலத்தில் செய்ய முடியாதெனிலும் பெரும்பாலான விடயங்களில் முன்னேற்றத்தை அடையலாம். 

இப்படி எந்த ஒரு தமிழ்த் தலைமையும் சிந்திக்க மாட்டாது.....

ஒருவர்  முதலில் உரிமை தான் வேண்டும் அபிவிருத்தி அதற்குப் பின்னர் தான் என்று கூறுவார்.

இன்னொருவர் அபிவிருத்தி தான் முதலில் உரிமைகளை பற்றிப் பின்னர் பேசலாம் என்பார்,

இதற்கிடையில்.....

சிங்கள அரசு தமிழர் பகுதியில் மாவட்ட அபிவிருத்தி  ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் தங்கள் பிரதிநிதியை பட்டியல் மூலம் கொண்டு வந்து தலைவராக்கும்.

இப்போது ஏற்படும் இழுபறிகளால் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படாமல் கைவிடப்படும் .

அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு வழிகளால்
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருக்கும்
இழுபறியில் ஈடுபட்ட அதே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்
பகிர்ந்தளிக்கப்படும்
.

இது தான் இறுதிக்காலங்களில்  நடைபெற்றுக் கொண்டு வந்தது ,

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

பலகலைக்கழக மாணவர்களைப் பொறுத்தவரை தமது துடிப்புள்ள இளம் வயதில் இவ்வாறான உணர்ரச்சியூட்டும் தேசிய அறிக்கைகளை வெளியிடுவதும் பின்னர் படிப்பு முடிந்து அரச சேவையில் தத்தமது துறைசார் வேலையில. சேர்ந்து வாழ்ககையில் செற்றிலாகிய பின்னர் தமது வாழ்விற்கோ, வேலைக்கோ, குடும்பத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நோகாமல் மென் தேசியம் பேசுவதும் தேவைப்பட்டால் தென்னிலங்கையில் அல்லது வெளிநாடுகளில் செற்றிலாகி விடுவதுமே வரலாறு.  

ஆகவே,  இவர்களின் இவ்விதமான அறிக்கைகளை முழுமையாக கணக்கெடுக்காமல்,   தாமாக  யோசித்து தமது தேவைகளை கவனிக்க கூடியவர்களை தெரிவு செய்வதே சரியானதாக இருக்கும். ஏனெனில் இன்று இவ்வாறு உணர்சசி அறிக்கை விடும் இவர்கள் படிப்பு முடிந்த பின்னர்  தமது தேவைகளை  மட்டும் தேடி தென்னிலங்கைக்கோ வெளிநாடுகளுக்கோ சென்று செற்றிலாகி தமது குடும்ப தேவைகளை கவனிப்பவர்களாக மாறிவிடுவர். 

அதாவது எல்லோரும் உங்கள் தாளத்திற்கு ஆடவேண்டும். புரியுது புரியுது. அப்படியானால் இளம் தலைமுறையினர் மற்றும் படித்தவர்கள் வரணும் என்பது??? தாயகத்தில் இருந்து வரும் கருத்துக்களே வரவேற்புக்குரியவை என்பதும்??? உங்கள் நாடகங்கள். வாயில வருகுது.....?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அதாவது எல்லோரும் உங்கள் தாளத்திற்கு ஆடவேண்டும். புரியுது புரியுது. அப்படியானால் இளம் தலைமுறையினர் மற்றும் படித்தவர்கள் வரணும் என்பது??? தாயகத்தில் இருந்து வரும் கருத்துக்களே வரவேற்புக்குரியவை என்பதும்??? உங்கள் நாடகங்கள். வாயில வருகுது.....?

தாயகத்தில் வாழும் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் விருப்புள்ள அதற்காக முயற்சி செய்யக்கூடிய அறிவும் ஆற்றலும் உள்ளவர்களை  தெரிவு செய்யவேண்டும் என்றே இப்போதும் கூறுகிறேன். 

12 minutes ago, வாத்தியார் said:

இப்படி எந்த ஒரு தமிழ்த் தலைமையும் சிந்திக்க மாட்டாது.....

ஒருவர்  முதலில் உரிமை தான் வேண்டும் அபிவிருத்தி அதற்குப் பின்னர் தான் என்று கூறுவார்.

இன்னொருவர் அபிவிருத்தி தான் முதலில் உரிமைகளை பற்றிப் பின்னர் பேசலாம் என்பார்

அதற்கு காரணம் அபிவிருத்திகளை மேற்கொள்ளுவதானால் தாம் அதற்காக நேர்மையுடன் உழைக்க வேண்டும், மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.  உரிமை அரசியல் என்றால் நாலு உணர்சசிவசப்பும் அறிக்கைகள், நன்கு தயாரிக்கப்பட்ட உசுப்பேற்றும் பேச்சுகள், ஆவேசமான பேட்டிகள் போதும். பிகுதி வாழ்வை மகிழ்சசியாக கழிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

தாயகத்தில் வாழும் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் விருப்புள்ள அதற்காக முயற்சி செய்யக்கூடிய அறிவும் ஆற்றலும் உள்ளவர்களை  தெரிவு செய்யவேண்டும் என்றே இப்போதும் கூறுகிறேன். 

நீங்கள் சொல்வது இருக்கட்டும். முதலில் அங்குள்ளவர்கள் அதிலும் படித்த அடுத்த தலைமுறை சொல்வதற்கு காது கொடேங்களேன். அதை உணர்ச்சி கொஞ்ச நாள் விளையாட்டு மண்ணாங்கட்டி என்று புலம்பாதிருங்களேன். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

நீங்கள் சொல்வது இருக்கட்டும். முதலில் அங்குள்ளவர்கள் அதிலும் படித்த அடுத்த தலைமுறை சொல்வதற்கு காது கொடேங்களேன். அதை உணர்ச்சி கொஞ்ச நாள் விளையாட்டு மண்ணாங்கட்டி என்று புலம்பாதிருங்களேன். 

இதுவரை நடந்த உண்மையையே கூறினேன். பலகலைக்கழக மாணவர்கள்படித்த,  முழுமை பெற்ற தலைமுறை அல்ல இப்போதும் படித்துக்கொண்டிருக்கும்,  இன்னும் நிறைய படிக்க வேண்டிய தலைமுறை. ஒரு நிறுவனத்தில் உயர் பதவிக்கு வரவே இவர்கள் பெறும் பட்டத்துடன் பயிற்சி,  அனுபவம்  தேவைப்படும் நிலையில் உள்ள  இவர்களின் அறிவுரையை முழுமையாக சுய சித்தனை இன்றி  அப்படியே ஏற்றுகொள்ளவேண்டிய தேவை மக்களுக்கு இல்லை. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வரலாற்றை கற்பனைகளால் அல்லது யூகங்களால்  எழுத முடியாது. 

நீங்கள்  இதை கூறுகின்றீர்கள். வரலாறு என்று கூறி இப்படியான கதாசிரியர்களின் எத்தனையோ கற்பனைகள் இங்கு பரப்பப்பட்டுள்ளன.  சிறந்த கதாசிரியருக்கான விருதை யாழ் இணையம் கொடுக்க விரும்பினால் கஷரப்பட வேண்டிய தேவையே இல்லை. 

வரலாற்றை தமது புனைவுடன் சுவார்சியமாக தனது வாசகர்களை கவரும் விதத்தில் எழுதும் திறமை பாராட்டுக்குரியது.  தமிழ் புனைகதை எழுத்தாளர் கல்கி விருது கொடுக்கலாம். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நீங்கள் நல்ல வைத்தியரை பார்ப்பது எங்கள் நேரத்தை வீணாக்காது. 

உங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள்? ஆச்சரியமாய் இருக்கிறது விசுகர். 

கொழும்பில் உள்ள ஒருவரால் வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் உணர்வுகத் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்கிறீர்கள்.  ஆனால் , புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போருக்கு  புரியும் என்கிறீர்கள். 

😁

 

1 hour ago, island said:

நீங்கள்  இதை கூறுகின்றீர்கள். வரலாறு என்று கூறி இப்படியான கதாசிரியர்களின் எத்தனையோ கற்பனைகள் இங்கு பரப்பப்பட்டுள்ளன.  சிறந்த கதாசிரியருக்கான விருதை யாழ் இணையம் கொடுக்க விரும்பினால் கஷரப்பட வேண்டிய தேவையே இல்லை. 

கற்பனைகளாலும் புனைகதைகளாலும் வெறியூட்டப்படும் ஒரு இனம் ஒருபோதும் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. அவர்களின் செயற்பாடுகள் அவர்களுக்குப் பாதகமாய் முடிவதே வரலாறு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள்? ஆச்சரியமாய் இருக்கிறது விசுகர். 

கொழும்பில் உள்ள ஒருவரால் வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் உணர்வுகத் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்கிறீர்கள்.  ஆனால் , புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போருக்கு  புரியும் என்கிறீர்கள். 

😁

ஒரு மக்களின் பாராளுமன்ற உறுப்பினரையும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரையும் ஒரே தராசில் வைக்கும் உங்கள் புரிதல் நிச்சயமாக முத்திய பைத்தியநிலை தான். எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

ஒரு மக்களின் பாராளுமன்ற உறுப்பினரையும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரையும் ஒரே தராசில் வைக்கும் உங்கள் புரிதல் நிச்சயமாக முத்திய பைத்தியநிலை தான். எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

விசுகர், 

வெளிநாடுகளில் இருந்துகொண்டே நிலத்தில் வாழ்வோருக்கு வகுப்பெடுக்கும் தகுதி புலம்பெயர்ஸ் க்கு இருக்கிறது ஆனால் இலங்கையின் கொழும்பில்  வசிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அங்கே வடக்கு கிழக்கில் வசிக்கும்  மக்களின் தேவைகள் புரியாது என்கிற தங்களின் புரிதலில் தீயை வைக்க,....🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

வடக்கு கிழக்கில் திட்டமிட்டு பல சுயேட்சை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக ஒர் ஆய்வாளர் கூறுகின்றார்...

அவர்கள் பல ஆயிரக்கணக்கான நிதியை செலவிட்டு அரசியல் செய்கின்றனர். இது யாருக்காக? இதில் பல சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

விசுகர், 

வெளிநாடுகளில் இருந்துகொண்டே நிலத்தில் வாழ்வோருக்கு வகுப்பெடுக்கும் தகுதி புலம்பெயர்ஸ் க்கு இருக்கிறது ஆனால் இலங்கையின் கொழும்பில்  வசிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அங்கே வடக்கு கிழக்கில் வசிக்கும்  மக்களின் தேவைகள் புரியாது என்கிற தங்களின் புரிதலில் தீயை வைக்க,....🤣

புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அவற்றை செய்ய மற்றவர்களுக்கும் இருக்கும் உரிமையை மறுக்கும் உங்களை போன்றவர்கள் மக்கள்,ஜனநாயகம், சமஉரிமை, கடமைகள் பற்றி பேசுவதெல்லாம் மற்றவர்களை முட்டாளாக்க மட்டுமே. போய் வேற இடங்களில் விளையாடவும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

இந்தப்படத்தில் வெற்றுடம்பாகக் கொல்லப்படக் காத்திருக்கும் தமிழருக்கு முன்னால், அவரை எட்டி உதைவதற்குத் தயாராக நிற்கும் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் சிங்களவன் இன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரான டில்வின் சில்வாவாக இருக்கலாம் என்று தமிழ் யூடியூப்பர் ஒருவரின் ஒளிப்பதிவில் கேட்டேன். டில்வின் சில்வா பிறந்தது 1962 இல். இப்புகைப்படம் எடுக்கப்பட்டது 1983 இல். அதாவது இங்கிருப்பவன் 21 வயதினனாக இருக்கவேண்டும். என்ன நினைக்கிறீர்கள்? 
 

r/srilanka - 1983, did this man or his family ever got justice?

எனக்கும் அப்படியான உருவம்தான் தென்படுகிறது.. உண்மையாகவும் இருக்கும்

9 hours ago, ரஞ்சித் said:

இந்தப்படத்தில் வெற்றுடம்பாகக் கொல்லப்படக் காத்திருக்கும் தமிழருக்கு முன்னால், அவரை எட்டி உதைவதற்குத் தயாராக நிற்கும் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் சிங்களவன் இன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரான டில்வின் சில்வாவாக இருக்கலாம் என்று தமிழ் யூடியூப்பர் ஒருவரின் ஒளிப்பதிவில் கேட்டேன். டில்வின் சில்வா பிறந்தது 1962 இல். இப்புகைப்படம் எடுக்கப்பட்டது 1983 இல். அதாவது இங்கிருப்பவன் 21 வயதினனாக இருக்கவேண்டும். என்ன நினைக்கிறீர்கள்? 
 

r/srilanka - 1983, did this man or his family ever got justice?

யாழில் ஏற்கனவே இப் படம் இணைக்கப்பட்டு ரில்வின் சில்வா என்று குறிப்பிட்ட பதிவு நீக்கப்பட்டது.

ஜேவிபியின் கடும் இனவாத செயற்பாடுகள் பல ஆதாரங்களாக கண் முன்னே இருக்கும் போது இவ்வாறான போலி செய்திகளை ஊடகவியலின் அடிப்படையே தெரியாத யூடியூப்பர்கள் சொல்வதை நம்பி இணைப்பதும் பரப்புவதும் எதிர்மறையான விளைவுகளை தமிழர்களுக்கு தோற்றுவிப்பதுடன் மேலும் இனவாத சக்திகளைத்தான் பலப்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

மற்றவர்களுக்கும் இருக்கும் உரிமை. 

அதைத்தான் நானும் கேட்கிறேன். 

இலங்கையின் கொழும்பில்  இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் தேவைகளோ உணர்வுகளோ புரியாது என்று தாங்கள் கூறுவது  அங்குள்ள மக்களின், நாடாளுமன்ற உறுப்பினர்களின்  உரிமையில் தலையிடுவதாகாதா? 

😁

37 minutes ago, alvayan said:

எனக்கும் அப்படியான உருவம்தான் தென்படுகிறது.. உண்மையாகவும் இருக்கும்

உண்மையாகவும் இருக்கும்,  உண்மை இல்லாமலும் இருக்கும். 

பக்கா அரசியல்வாதியாகிவிட்டீர்கள்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படம் 1983 காலப்பகுதியில் வெளிவந்திருந்தது. பின்னர் ஜேவிபி இலங்கையில் தடைசெய்யப்பட்டிருந்த காலத்திலோ  1987 ல் அவர்கள் பிரேமதாச காலத்தில் அரசுக்கெதிராக தீவிரமாக போராடிய காலத்திலோ தமிழர் தரப்புக்கும் ஶ்ரீலங்கா அதிகாரபீடத்துக்கும்  நல்ல உறவு நிலவிய பிரேமதாச காலம் போன்றவற்றில் இதை நிரூபித்திருத்திருக்கும்வாய்பபு இருந்தது.  (இந்த படம் உண்மையானால்) அப்போதெல்லாம் வாய்மூடி மைனமாக இருந்துவிட்டு  அதை விடுத்து இப்போது இதை பிரபலப்படுத்துவது வெறும் உசுப்பேற்றல் வெறுப்பு அரசியலை தூண்டும் செயலேயன்றி வேறில்லை.    

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

அதைத்தான் நானும் கேட்கிறேன். 

இலங்கையின் கொழும்பில்  இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் தேவைகளோ உணர்வுகளோ புரியாது என்று தாங்கள் கூறுவது  அங்குள்ள மக்களின், நாடாளுமன்ற உறுப்பினர்களின்  உரிமையில் தலையிடுவதாகாதா? 

😁

உண்மையாகவும் இருக்கும்,  உண்மை இல்லாமலும் இருக்கும். 

பக்கா அரசியல்வாதியாகிவிட்டீர்கள்.  🤣

ஒரு மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்த மக்களுடன் சொந்த ஊரில் இருப்பது நல்லதா? கொழும்பில் இருந்து வருவது நன்றா என்ற இன்னொருவருடன் இடம் பெற்ற கருத்தாடுலுக்குள் புகுந்து கொண்டு பைத்தியக்காரத்தனம் செய்வதை முதலில் நிறுத்துங்கள். டொட். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வடகிழக்கு தமிழர்கள் சிங்கள இனவாத கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் வாக்களித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.அதற்கான காரணங்களை ஏன் என சிந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

மக்கள் விடுதலை முன்னணியின்(JVP ) புதிய பெயர் கொண்டு கட்சியான தேசிய மக்கள் சக்தி(NPP) பல முகவர்கள் சுயேச்சைகளாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகவே இவற்றை ஆழமாக உற்றுநோக்கும் சிலரது கருத்தும் உள்ளது. எனவே தமிழ் மக்கள் இதுவரை இல்லாத பெரும் கவனத்தோடு வாக்களிக்க வேண்டிய தேர்தலாகும். தமிழின அழிப்புக்கான போரும், அதன் தொடர்ச்சியாக ஊதிப்பெருத்து நிற்கும் படைபல, ஆளணிப் பெருக்கத்தாலும் நாடு பெரும் பொருண்மிய வீழ்ச்சியைக் கண்டதை ஊழலால் நாடு பின்னோக்கிப்போனதாகக் காட்டிப் பெரும் எடுப்பிலே பரப்புரைசெய்து ஜ.வி.பெ(JVP) என்ற தே.ம.ச.(NPP) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதோடு தமிழருக்குப் பொருண்மியப் பிரச்சினை மட்டுமே உள்ளது என்று கூறியவாறு தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தவாறு ஆளமுனையும் போலி மாக்ஸிட்களையும் தமிழ் மக்கள் இனங்கண்டு செயற்பட வேண்டும்.  
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

தமிழர்களுக்கு பிரச்சணை இருக்கு என சொல்லவே பயப்படுகிறார்கள்.....இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான விடயமாக இருக்கலாம்...அந்த ஒப்பந்ததை நன்றாக புரிந்து கொண்டவர்கள் ஜெ,வி,பி யினர் ....ஈழத்தமிழரை வைத்து இந்தியா தனக்கு தேவையானதை எழுதி எடுத்து விட்டது....அதனால் தான் தமிழருக்கு பிரச்சனை இல்லை என சொல்லி அந்த ஒப்பந்ததை ரத்து செய்ய முயல்கின்றனர் ....
அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் பண்ண அமெரிக்கா மற்றும் மேற்குலக‌ நாடுகளும் அனுரா அரசை ஊக்கிவிக்கலாம்...சீனா இந்த விடயத்தில் அலட்டிக் கொள்ளாது,,,,

9 hours ago, வாத்தியார் said:

தனியாக விருப்பு வாக்குகளை அளித்து தூய்மையான அரசியல் செய்யும்
முறைமை ( தொகுதி ரீதியான ) ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் சென்றுவிட்டன .

இப்போது விருப்பு வாக்குக்களை களவாடும் அரசியல்வாதிகளுக்கு சார்பான விகிதாசார முறைமை ....ஆகவே நீங்கள் அளிக்கும் விருப்பு வாக்குக்கள் அனைத்தும் ஊழலையும் லஞ்சத்தையும் தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிக்கே கிடைக்கும் அல்லது அவர்கள் அதனைத் தங்களுக்கானதாக அபகரித்துக் கொள்வார்கள்.

அதற்காகவே புதியவர்கள் என்ற பெயரில் அவர்களது பினாமிகளைப் பல கடசிகளும் குழுக்களும் தேர்தலில் வேட்பாளர்களாகத் தெரிவு செய்துள்ளார்கள் .

தொகுதி ரீதியிலான தேர்தல்முறையில் ஊழல்வாதிகளை அடுத்த தேர்தலிலேயே அடித்து விரட்டி விடலாம் .

ஜெ.வி.யினருக்கு இந்த விகிதாசார முறை பெரும்பான்மையை பெற உதவலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அவர்கள் பல ஆயிரக்கணக்கான நிதியை செலவிட்டு அரசியல் செய்கின்றனர். இது யாருக்காக? இதில் பல சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன.

 

 

கடந்த .பொது தேர்தலில் வடமாகாணத்தில் அதிக வாக்குகளை பெற்றார் அங்கஜன்,கிழக்கு மாகாணத்தில் பிள்ளாயான் .....
அதேபோல இந்த தடவை ஜனநாயக முறையில் வாக்குகளை பிரிக்க இவர்கள் முயல்கின்றனர்  
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒரு மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்த மக்களுடன் சொந்த ஊரில் இருப்பது நல்லதா? கொழும்பில் இருந்து வருவது நன்றா என்ற இன்னொருவருடன் இடம் பெற்ற கருத்தாடுலுக்குள் புகுந்து கொண்டு பைத்தியக்காரத்தனம் செய்வதை முதலில் நிறுத்துங்கள். டொட். 

இது எனக்குப் புரியாமலில்லை. 

வெளிநாடுகளில் இருந்துகொண்டே ஊருக்கு உபதேசம் செய்வதை விட  கொழும்பில் இருந்துகொண்டு ஊருக்கு உபதேசம் செய்வது ஒப்பீட்டளவில்  மேல்.

அதுதான்  எனது Point.

தாயகத்தில் இருப்போர்  யாருக்கு வாக்களிக்க வேண்டும், யார் தேர்தலில் நிற்க வேண்டும் என்று  புலம்பெயர்ஸ் தாயகத்தில் இருப்போருக்கு வகுப்பெடுப்பதை நிறுத்துங்கள்.

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

யாழில் ஏற்கனவே இப் படம் இணைக்கப்பட்டு ரில்வின் சில்வா என்று குறிப்பிட்ட பதிவு நீக்கப்பட்டது.

ஜேவிபியின் கடும் இனவாத செயற்பாடுகள் பல ஆதாரங்களாக கண் முன்னே இருக்கும் போது இவ்வாறான போலி செய்திகளை ஊடகவியலின் அடிப்படையே தெரியாத யூடியூப்பர்கள் சொல்வதை நம்பி இணைப்பதும் பரப்புவதும் எதிர்மறையான விளைவுகளை தமிழர்களுக்கு தோற்றுவிப்பதுடன் மேலும் இனவாத சக்திகளைத்தான் பலப்படுத்தும்.

உண்மை, ஊடகவியலின் அடிப்படை தெரியாத  யூடியூப்பர்களை கேள்விக்குள்ளாக்கும் மக்கள் பிரதான ஊடகங்கள் செய்யும் அதே வகையான பிரச்சார நோக்கிலான செய்திகளை கேள்விக்குள்ளாக்குவதில்லை, பெரும்பாலும் அதற்குக்காரணம் அவை மேற்கு ஊடகம் என்பதால் அவற்றினையே ஊடக தர்மத்திற்கு ஒரு பென்ச்  மார்க்காக எடுக்கின்ற நிலை காணப்படுகிறது.

A satellite image provided by the National Intelligence Service shows a Russian naval vessel suspected of transporting North Korean troops from the northeastern port of Chongji in North Korea. Oct. 18. Yonhap

இந்த செய்மதிப்படம் தெ கொரியாவினால் 12000 வட கொரிய துருப்புக்கள் இரஸ்சியாவிற்காக போரிடுவதற்காக உக்கிரேனுக்கு போவதாக கூறி வெளியிட்ட படமாகும்.

Synthetic Aperture Radar (SAR)  வகையான படம் இதில் குறிப்பிட்டுக்காட்டப்பட்ட பகுதி நீரில் ஒரு கலம் (கப்பலாக இருக்கலாம்) உள்ளதை காட்டுகிறது.

இந்த தகவலின் அடிப்படையில் உலக செய்தி நிறுவனங்கள், நாடுகள் (குறிப்பாக மேற்கு நாடுகள்) எந்த பின் புலமுமில்லாமல் பிரச்சார ஒன்றினை ஆரம்பித்துள்ளார்கள், இதன் நோக்கம் ஒரு தேவையற்ற உலக போராக இருக்கலாம்.

முறையான ஊடகத்துறையில் இருந்தவாறே இவ்வாறான ஆதாரங்களை ஆதாரமாக காட்டி செய்தி வெளியிடும் மேற்கு ஊடகங்கள் கூட தற்போதய யூரியூப் ஊடக நிலைக்கு வந்து விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

ஈழத்தமிழரை வைத்து இந்தியா தனக்கு தேவையானதை எழுதி எடுத்து விட்டது....அதனால் தான் தமிழருக்கு பிரச்சனை இல்லை என சொல்லி அந்த ஒப்பந்ததை ரத்து செய்ய முயல்கின்றனர் ....
அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் பண்ண ....................................அமெரிக்கா மற்றும் மேற்குலக‌ நாடுகளும்....................................................................... அனுரா அரசை ஊக்கிவிக்கலாம். 

சரியான திசையில் சிந்திக்கிறீர்கள் என யூகிக்கிறேன். 

கடந்த காலத்தில் 1987 ன் பின்னர் ஈழத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் எல்லாம் புரிந்து கொள்ள முடியும். 

அதிலிருந்து எதிர்காலத்தைக் கணிப்பிட முடியும். எமக்கு இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

ஆனால் ஈழத் தமிழர் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கும் வரைக்கும் மேற்குலகு ஈழத் தமிழருக்கு உதவப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

இது எனக்குப் புரியாமலில்லை. 

வெளிநாடுகளில் இருந்துகொண்டே ஊருக்கு உபதேசம் செய்வதை விட  கொழும்பில் இருந்துகொண்டு ஊருக்கு உபதேசம் செய்வது ஒப்பீட்டளவில்  மேல்.

அதுதான்  எனது Point.

தாயகத்தில் இருப்போர்  யாருக்கு வாக்களிக்க வேண்டும், யார் தேர்தலில் நிற்க வேண்டும் என்று  புலம்பெயர்ஸ் தாயகத்தில் இருப்போருக்கு வகுப்பெடுப்பதை நிறுத்துங்கள்.

இதனையே...நீங்கள் செய்தால் நாமும் சந்தோசப்படுவமல்லே....மைத்திரி காலம் தொடக்கம் இன்றுவரை விதண்டாவாதம் செய்து ...காலத்தை ஓட்டுகின்றீர்களே..அதுவும் கனடாவில் கொம்புயூடெர் முன்னால் குந்தி  இருந்துதானே..அதென்ன் நியாயம் ...அறியலாமா

ஆமா அரசியல்வாதி ஆகிட்டேனென்பது...உங்கள் வரைவிலக்கணப்படியா..

Edited by alvayan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.