Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? 51 members have voted

  1. 1. திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

    • ஆம்
      24
    • இல்லை
      25

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அம்மணமாக நிற்பது சும்.

 

6 hours ago, goshan_che said:

 

அப்படியாயின் சிறிதரன் பாராளுமன்ற பதவியை துறக்க, அடுத்து கூடிய வாக்கு எடுத்த சுமன் அந்த இடத்தை நிரப்பலாம்.

 

கோசான் வாக்கு போட்ட மக்களை முட்டாள்கள் என்கிறீர்களா? 

சிறியர் மீதான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் சாணியில் மொங்கி முகத்தில் குத்தியிருக்கிறார்கள் உங்களின் பொய்கள் எம்மிடம் பலிக்காது என.

 

  • Replies 249
  • Views 14.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commite

  • உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்… உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣

  • Sasi_varnam
    Sasi_varnam

    என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!!  என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

இன்று அம்மணமாக நிற்பது சும்.

 

கோசான் வாக்கு போட்ட மக்களை முட்டாள்கள் என்கிறீர்களா? 

சிறியர் மீதான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் சாணியில் மொங்கி முகத்தில் குத்தியிருக்கிறார்கள் உங்களின் பொய்கள் எம்மிடம் பலிக்காது என.

 

என்ன,.மீரா,..கோவணத்தைத் தேடுகிற மாதிரிக் கிடக்கு,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

என்ன,.மீரா,..கோவணத்தைத் தேடுகிற மாதிரிக் கிடக்கு,..🤣

உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்…

உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

ஐயனுக்கும் "டுமீல்" கொஸ்ரிக்கும் சுடலை ஞானம் பிறக்குதோ,..😏

பீத்தல் கோவணமும் போச்சே என்று கவலையோ,...😏

அனுரவின் உண்மை முகம் ஒரு  பக்கம் இருக்கட்டும். யாழ்ப்பாணீசின் உண்மை முகம் என்ன? புலம்பெயர் ஸ் ஸுக்கு வச்சாங்களே ஆப்பு. அதை எடுக்க வழி பாருங்கோ,....

😏

அட இந்த சுடலை வைரவர் எப்ப இதுக்கிள்ளை வந்தவர்...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

திருத்தம். 

அவரிடம் வழக்குகள் வருவதில்லை🤣.

திருத்தத்துக்கு திருத்தம்: அவர் வழக்கறிஞராக தொழில் பார்க்காததால் அவரிடம் வழக்குகள் வருவதில்லை. இருக்கிற சொத்துக்கு வழக்கறிஞராக தொழில் பார்க்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.
கதியால் வழக்குகளை  தீர்க்க பலர் உள்ளார்கள்.😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

இல்லையென வாக்களித்து உள்ளேன், பலரும் சுட்டிக்காட்டியப்படி சுமந்திரனை விடடால் மூத்த குடி தமிழர் தரப்பில் அரசியல் சாசன சட்ட வல்லுநர்கள் யாருமே இல்லையா? . கடந்த கால அனுபவங்களில் இருந்து சுமந்திரன் அவர்கள் தலைமைத்துவத்துக்கு உகந்தவர் அல்ல. தேவையெனில் பாராளுமன்றத்துக்கு வெளியே அரசியல் சாசன சட்டம் சம்பந்தமாக கட்சிக்கு அறிவுரை கூறும் குழுவில் வைத்து இருக்கலாம்.

ஆமாம் சரியான கருத்துகள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

சட்ட நிபுணர் இவ்வளவு காலமும் எதை சாதித்தார்? அவரது நிபுணத்துவதால் வரைந்த சட்ட வரைபையே நிறைவேற்றுவிக்க முடியாதவர், ரணிலை காப்பாற்ற போய் எதிர்க்கட்சி பதவியை இழந்ததுதான் சாதனை. கால நீட்டிப்பு கொடுத்து இழுபட வழிசமைத்தது, கட்சியை  பிரித்தது தவிர வேறெதை செய்தார் மக்களுக்கு? கடைசி  தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்வித்தாரா? அவரை அவரே சட்ட நிபுணர் என்று சொல்லி புளகாங்கிதம் அடைய வேண்டியதுதான். அனுரா தான் எடுத்த முடிவை தனது குழுவுடன் ஆலோசித்து செய்வார், இதற்குள் சுமந்திரனை புகுத்தி உள்ளதையும் கெடுத்து விடாமல் இருப்பதே நல்லது. அவரின் தோழர்களுக்கு மாறி மாறி தோள் கொடுத்து ஒன்றுமே செய்ய முடியவில்லை, விரும்பவுமில்லை. அனுராவோ, சுமந்திரனை தூரவே வைக்க விரும்புகிறார். ஒரு அரசியலை தூர நோக்கோடு நடத்தி செல்ல திறமையில்லாதவர், அனுராவோட போய் தன் இருப்பை தக்கவே  உழைப்பார் 

கண்டிப்பாக உண்மைகள்.   இவர் பல வருட பாராளுமன்ற வாழ்க்கையில்   இயற்றி நிறைவேற்றிய சட்டமூலம் ஏதாவது உண்டா??  தமிழ் மக்களுக்காக எந்தவொரு சட்ட மூலத்தையும்.  இவர்  பாராளுமன்றம் மூலம் அமுலுக்கு கொண்டு வரவில்லை இனி எப்படி கொண்டு வருவார்??   சிறந்த சட்டத்தரணி தான்   அதனால் எந்தப் பிரயோஜனம் இதுவரை தமிழ் மக்களுக்கு எற்படவில்லை  இனிமேலும் ஏற்படாது   இவர் ஒரு ஐக்கிய தேசியக் கட்சிக்காரர். ரணிலால். தமிழரசுகட்சியை  சுக்குநூறாய் உடைக்க நியமனம் செய்யப்பட்டவர்.  அவர்அந்த வேலையை  மிகச்சிறப்பாக செய்து முடித்து உள்ளார்   

இவர் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இருப்பின்  தமிழரசு கட்சி  மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கும்   

தயவுசெய்து மக்கள் தீர்ப்பை மதியுங்கள்  🙏

இவர் இல்லாமலும்  புதிய அரசியல் அமைப்பை சிறந்த அரசியல் அமைப்பை வரைய முடியும்  ஆனால்  யார் அதை அமுலாக்குவது ?? 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை    

மக்களின் தீர்ப்பு இது தான்     அது மதிக்கப்பட வேண்டும்   தமிழரசு  கட்சி   தும்புதடியை  வைத்தாலும்   வாக்களித்த கலாசாரம்  2024 உடன். ஒழிக்கபடவேண்டும். அதை தமிழ் மக்கள் செய்துள்ளனர் பாராட்டுகள் மகிழ்ச்சியும்   உரியவர்கள் வாழ்த்துக்கள்    

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனிதன்…. சுமந்திரன் ஒருவரை நம்பித்தான் 75 வருட பாரம்பரியம் உள்ள தமிழரசு கட்சியே உள்ள மாதிரி இங்கே கருத்து வைக்கப் படுகின்றவர்களின் நோக்கம்.... மக்களால் தோல்வி அடையச் செய்த ஒருவரை, மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் அனுப்புவதற்கான சதி வேலை என்றே கருத வேண்டி உள்ளது.

சுமந்திரனை மீண்டும் பின்கதவால் பாராளுமன்றம் அனுப்பினால்…. 75 வருட கால தமிழரசு கட்சியே காணாமல் போய் விடும் என்பதை மறவாதீர்கள். மக்கள் தீர்ப்பை மதியுங்கள். அவர்கள் மேல், உங்களின் தனிப்பட்ட  சுயநல ஆசைகளை திணிக்காதீர்கள்.

இனி….  உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்கள் வர இருக்கின்றன.
தமிழரசு கட்சிக்கு… ஒரு புதிய ஊடகப் பேச்சாளாரை நியமித்து, சுமந்திரனை அப்புறப் படுத்துங்கள்.

சுமந்திரனின் மூஞ்சையை பார்த்தாலே மக்கள் வேறு கட்சிகளுக்கு வாக்கு போட்டு விட்டு போய் விடுவார்கள். அந்தளவு கோபத்தை சுமந்திரன், தனது தான் தோன்றித்தனமான செயல்களால் தமிழ் மக்களிடம் சம்பாதித்து வைத்துள்ளார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 வாட்ஸப்பில் இருந்து..

 

சுமந்திரனுக்கு எதிரான மக்களின் ஆணை தெளிவானது. அவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதிநிதித்துவ அரசியலுக்கு அவசியமில்லாதவர் என்ற தீர்ப்பு எழுதப்பட்டிருக்கின்றது. அதனை தலை வணக்கி ஏற்பதுதான் அறமுள்ள அரசியல்வாதியாக அவர் செய்ய வேண்டியது. தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பிலான உரையாடல்களில் தன்னுடைய பெயர் வருவதை அவர் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், தேர்தலொன்றில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்ட ஒருவர், தேசியப் பட்டியலைக் கோருவது ஜனநாயக முரண் என்று தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்ற சுமந்திரன், அந்த வாதம் தனக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசியப் பட்டியலுக்காக இளைஞர்- குறிப்பாக ஆற்றலுள்ள பெண் ஒருவரை நியமித்து, பெண் பிரதிநிதித்துவத்தை காப்பதுதான், தமிழரசுக் கட்சி முன்னுள்ள மிகப்பெரும் கடப்பாடு. அந்தக் கடப்பாட்டினை உறுதி செய்வதில் மத்திய குழு, அரசியல் குழு மற்றும் நியமனக்குழு உறுப்பினராக சுமந்திரன் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும்.

சுமந்திரன் பிரதிநிதித்துவ அரசியலில் ஆளுமை செலுத்தாத தமிழ்த் தேசிய அரசியல் களம், புதிய பரீட்சார்த்தங்கள் பக்கத்துக்கு நகர வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சுமந்திரனை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் களம் இனியாவது, அதனைக் கடந்து பரந்துபட்ட பார்வை - செயற்பாட்டுத் தளத்துக்குள் செல்ல வேண்டும். சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் சுமந்திரன்... நீங்கள் கடந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக ஓடிக் களைத்து விட்டீர்கள். எல்லாமும் உங்களைச் சுற்றியும் இயங்கி விட்டது. அந்த இயக்கத்துக்கும் ஓர் இடைவெளி அவசியம்.

Purujoththaman Thangamayl


Copied from FB

  • கருத்துக்கள உறவுகள்

தேசியப்பட்டியலூடாகப் பாராளுமன்றம் போக  அவர் விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kavi arunasalam said:

தேசியப்பட்டியலூடாகப் பாராளுமன்றம் போக  அவர் விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். 

ஆனால் தமிழரசு பொதுக்குழு கேட்டால், கட்சியின் வேண்டுகோளுக்காக போவார்! சிறீதரன் ஆளுமையைக் காட்டி தமிழரசுக் கட்சியை ஒழுங்காக வழிப்படுத்தாவிட்டால், சுமந்திரன் அணியைச் சார்ந்தவர்கள் அரசியல் அமைப்பு நிபுணத்துவம் உள்ளவர் தேவை என்று தேசியப்பட்டியலில் சுமந்திரனை பாராளுமன்றம் அனுப்புவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

ஆனால் தமிழரசு பொதுக்குழு கேட்டால், கட்சியின் வேண்டுகோளுக்காக போவார்!

பொதுக்குழுவே அவரின் ஆளுமையின் கீழேதானே. ஆகவே நீங்கள் சொல்வதுபோல் பொதுக்குழு அவரைக் கட்டாயம் கேட்கும்.  ஆனால் தேசியப்பட்டியல் ஊடாகப் போவது அவரது இமேஜை பாதிக்கும் என்பதால் வேறு வழிகளை அவர் நாடலாம்.

தான் இந்தமுறை தோற்றுப் போவேன் என்பதை சுமந்திரன் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார். ஏதாவது ஆயத்தங்கள் செய்து வைத்திருப்பார்.

அதுசரி ‘பார் லைசன்ஸ்’ எடுத்தவர்கள் பட்டியலை மூன்று நாட்களுக்குள் வெளியிடுவேன் என்று அனுரா சொன்னாரே? என்ன ஆச்சு?வாத்தியார் அமுக்கிட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்

 

சுமந்திரன் இந்தத் தேர்தலில் தோற்றுப்  போவார் என்று, கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அவரின் நினைப்பு எல்லாம் அனுரா அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்  பதவி பெறுவதிலேயே இருந்தது. 

ஏன்.... பிரதம மந்திரி ஆசை கூட ஆளுக்கு இருந்தது. அதற்கான... முன்னேற்பாடுகளை சமூக வலைத்தளங்களில் சொல்லிக் கொண்டே வந்துள்ளார். 😂 🤣

இப்போ... மக்கள்  அவரின் கனவில், சாணியில் தோய்த்த செருப்பால்... முகத்தில்  அடித்து கலைத்து  விட்டார்கள் என்பதே உண்மை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இனியும்.... இவரின், தேவையில்லாத ஆணி புடுங்கிற வேலை எல்லாம் தமிழரசு கட்சிக்கு தேவை இல்லை.

சாணக்கியனுக்கு... இருக்கும் திறமை கூட இவருக்கு இல்லை. கிழக்கிலே தனி ஒருவனாக நின்று கட்சிக்கு நாலு பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்துக் கொடுத்துள்ளார். 

சுமந்திரன்... இருந்த தொகுதிகளையும்  பறி கொடுத்திட்டு, தானும் வெல்ல முடியாமல் அரசியலில் தோல்வி உற்ற மனிதன். அவர் இனி இருப்பதையும் கெடுக்காமல்... அரசியலில் இருந்து விலகி ஒய்வு எடுப்பதே.. தமிழ் மக்களுக்கு  நல்லது. 

வடக்கு மாகாணத்தையே... சிங்களவனிடம் பறி கொடுத்தவர், தனது வெற்றியையே உறுதிப்படுத்தத் தெரியாதவர்...  தமிழரசு கட்சியில்  இருப்பது அவமானம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் அறிவிப்பின்படி ௨௦௧௫-௨௦௧௯ ம் ஆண்டில் நல்லாட்சி செய்த சட்டவரைபை  பூர்த்தி செய்வேனென அனுரா தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதாக கூறுகிறார். அப்படியானால் சுமந்திரன் ஏற்கெனவே பலதடவை, தான் நல்லாட்சி அரசாங்கத்துடன் தீர்வை வரைந்து விட்டதாகவும் நிறைவேற்றுவதே பாக்கி என்றும் அறிவித்திருந்தார்.  அதை நிறைவேறுவதற்கு இவர் ஏன் பாராளுமன்றம் செல்ல வேண்டும்? அதுதான் வரைந்தாயிற்றே. 
 இவர்சொல்வதுபோல் வரைந்ததை நிறைவேற்றுவது ஜனாதிபதியின், பாராளுமன்றத்தின் வேலை. அதை நிறைவேற்ற ஆரம்பிக்கும்போதுதான் வெளிவரும் இவர் என்ன சட்டம் வரைந்தார் என்கிற உண்மை. "ஏக்கய ராஜ்ய" இவர் சொல்கிறார் ஒன்றுபட்ட அரசு. அதற்கு சரியான சிங்கள  வார்த்தை இல்லை, அதனாலேயே ஏக்கய என குறிப்பிடுவதாக. ஆனால் ஏக்கய என்பது ஒற்றை ஆட்சி என்று சிலர் விளக்குகிறார்கள்.  அது இருக்கட்டும்.... இவர் இன்னும் காலாவதியான பேச்சாளர் பதவியை விடுவதாக இல்லை. இவர் மட்டும் தேர்தலில் வென்றிருந்தால் இங்கு ஒரு  களம் ஆகியிருக்கும்,  மற்றைய கட்சிகளை சீண்டியிருந்திருப்பார் சுமந்திரன். மக்கள் இன்னும் தமிழ் தேசியத்தை நேசிக்கிறார்கள், ஆனால் சுமந்திரனை வெறுக்கிறார்கள். அதை சுமந்திரன் உணரவேண்டும். தோற்ற மாவை பதவி விலகவேண்டும் அன்று கூவியவர் இன்று அதை தான் செய்திருக்க வேண்டும் அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது. ஏதோ தமிழரசுக்கட்சி தன்னிற்  தான் தாங்கி நிற்பதுபோல் கதையளக்கிறார். இவர் தேர்தலுக்கு முன் அறிவித்தது போல் பாராளுமன்றம் செல்லக்கூடாது. எப்படியும் மூச்சுக்கு முன்னூறு தடவை நானே சட்டவரைபை அவர்களோடு சேர்ந்து இயற்றியதாக பிதற்றுகிறாரே, அது என்ன சட்ட வரைபு என்பது தெரிய வரும். மதுபான சாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயரை அறிவிப்பதாக சொன்னார்கள் அறிவிக்கவில்லை என்று கூறுகிறார். அனுரா வெளியிட்டிருக்கக்கூடும், இவர் போய் கேட்டது தேர்தல் காழ்புணற்சியினால் மற்றைய வேடபாளர்களை அவமதிக்கக்கூடுமென நினைத்திருக்கலாம். சுமந்திரனின் வாயை எல்லோருமாறிவர். இவர் வைத்த குற்றச்சாட்டுக்கு மேற்தானே மக்கள் சிறிதரனை தெரிந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் பாருங்கோ மனிதன் கூச்ச நாச்சமில்லாமல் சாதாரணமாக வெற்றி பற்றி கட்சி பற்றி விளக்குகிறார். சொல்வார்கள், "துரோகிக்கு வெட்கம், ரோசம், மானம், எல்லாம் கிடையாதென. அதை நேரடியாக காண்கிறேன்          

2 hours ago, தமிழ் சிறி said:

தனிமனிதன்…. சுமந்திரன் ஒருவரை நம்பித்தான் 75 வருட பாரம்பரியம் உள்ள தமிழரசு கட்சியே உள்ள மாதிரி இங்கே கருத்து வைக்கப் படுகின்றவர்களின் நோக்கம்.

நலன் விரும்பிகள் அவரைச்சுற்றி  எழுப்பிய விம்பம் அது. ஆனால் சுமந்திரன்  தன்னைவிட வேறு  யாரையும் சட்டத்தரணி என்று ஏற்கவும் மாட்டார், செயலாற்றவும் விடமாட்டார். உதாரணம்; விக்கினேஸ்வரன் ஐயாவை விரட்டியது, தவராசாவை பின்தள்ளியது அவரது பயம் தன்னை இவர்கள் விஞ்சி விடுவார்கள் என்பதே. "நிறைகுடம் தளம்பாது, குறைகுடம் எப்போதும் தளம்பிகொட்டிக்கொண்டே இருக்கும்." "ஆலையில்லா ஊருக்கு, இலுப்பம்பூ சக்கரையாம்."

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியின்  பொதுக்குழுவில்,  சுமந்திரனின்  ஆளுமை தான்....
தமிழரசு கட்சியை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. 
"உள்ளதும் போச்சுடா... நொள்ளைக் கண்ணா" நிலைமை.   

  • கருத்துக்கள உறவுகள்

2015 தொடங்கி 2019 ல் வரைந்த அரசியல் தீர்வு. முதல் வரியில் ஏற்பட்ட  தவறுக்கு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கதைகளை பார்த்தால் சுமந்திரன் இல்லை என்றால் தமிழருக்கு எதுவுமே இல்லை என்பது போல இருக்கு. ஏன் தமிழரே இல்லை என்பது போல இருக்கு. என்னே கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடிமக்களுக்கு வந்த சோதனை. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இங்கே கதைகளை பார்த்தால் சுமந்திரன் இல்லை என்றால் தமிழருக்கு எதுவுமே இல்லை என்பது போல இருக்கு. ஏன் தமிழரை இல்லை என்பது போல இருக்கு. என்னே கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடிமக்களுக்கு வந்த சோதனை. 

அது... சுமந்திரனுக்கு "முட்டுக் கொடுத்து" ... 
"குழை அடிப்பவர்கள்" செய்யும்
தில்லாலங்கடி விளையாட்டு. 😂

மற்றவர்களையும், தமிழர்களையும் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டு,
தமக்குத்தாமே... சேறு பூசிக் கொள்கின்றார்கள்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இங்கே கதைகளை பார்த்தால் சுமந்திரன் இல்லை என்றால் தமிழருக்கு எதுவுமே இல்லை என்பது போல இருக்கு. ஏன் தமிழரை இல்லை என்பது போல இருக்கு. என்னே கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடிமக்களுக்கு வந்த சோதனை. 

சுமந்திரன் அப்படி ஒரு செயல் வீரன், சட்டத்தரணி என்றால்; அவர் வந்தவுடனேயே தீர்வு எடுத்து தந்திருக்க வேண்டுமே? இப்பொழுது விரட்டப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லையே, அனுராவை விட்டு சஜித்துக்கு வாக்களிக்கும்படி கேட்டிருக்கவும் வாய்ப்பில்லையே? அதுதானே அனுரா, இவரை வெறுக்க காரணம். நாங்கள் பொது வேட்பாளரை ஆதரித்த போது, எந்த முகத்தோடு சிங்களத்தோடு பேசுவது என்று கேட்டவர்கள், எந்த முகத்தோடு பிரதம மந்திரி பதவி அழைப்பிதழுக்கு காத்திருந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

இங்கே கதைகளை பார்த்தால் சுமந்திரன் இல்லை என்றால் தமிழருக்கு எதுவுமே இல்லை என்பது போல இருக்கு. ஏன் தமிழரை இல்லை என்பது போல இருக்கு. என்னே கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடிமக்களுக்கு வந்த சோதனை. 

சுமந்திரன் 2009 இல் நடந்தது இனப்படுகொலை என்று நிரூபிக்கமுடியாது என்பதில் அவரின் சட்ட அறிவைக்கொண்டு, எதுவித சமரசங்களுமின்றி உறுதியாக இருப்பவர்!

அதுபோல சிங்கள அரச அதிகாரத்தில் உள்ளவர்களுடன் பேசி ஒரு நியாயமான தீர்வை தமிழருக்குப் பெற்றுத்தரலாம் என்பதிலும் நம்பிக்கை தளராதவர்!

ஒன்றுமே இல்லாத தமிழர்களுக்கு நியாயமான நிலைத்து நிற்கக்கூடிய தீர்வை சுமந்திரன் தனது சட்ட நிபுணங்களைப் பாவித்து பெற்றுக்கொடுத்தால் நல்லதுதானே!

குறிப்பு: பல சுத்துமாத்துகளையும், குழிபறிப்புக்களையும், தகிடுதித்தங்களையும் பாவித்தும் சுமந்திரன் மக்களால் தோற்கடிக்கப்பட்டதில் சந்தோஷமே.😃 ஆனால், தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு எப்படி முடிவு எடுக்கவேண்டும் என்பதை சுமந்திரனே முடிவெடுப்பார் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்! எனவே, சுமந்திரனின் முடிவுக்கு இணங்க, பொதுக்குழுவின் தீர்மானத்துடன் அவர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக அதிக வாய்ப்பு இருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

அது... சுமந்திரனுக்கு "முட்டுக் கொடுத்து" ... 
"குழை அடிப்பவர்கள்" செய்யும்
தில்லாலங்கடி விளையாட்டு. 😂

மற்றவர்களையும், தமிழர்களையும் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டு,
தமக்குத்தாமே... சேறு பூசிக் கொள்கின்றார்கள்.  🤣

உண்மையில் இந்த தேர்தலில் மக்களின் கோபமே (இலங்கை முழுவதும்)/இந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகள் மீது தான். இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பை கொண்டாடுவதாக சொல்பவர்கள் முதலில் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 வாட்ஸப்பில் இருந்து..

 

சுமந்திரனுக்கு எதிரான மக்களின் ஆணை தெளிவானது. அவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதிநிதித்துவ அரசியலுக்கு அவசியமில்லாதவர் என்ற தீர்ப்பு எழுதப்பட்டிருக்கின்றது. அதனை தலை வணக்கி ஏற்பதுதான் அறமுள்ள அரசியல்வாதியாக அவர் செய்ய வேண்டியது. தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பிலான உரையாடல்களில் தன்னுடைய பெயர் வருவதை அவர் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், தேர்தலொன்றில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்ட ஒருவர், தேசியப் பட்டியலைக் கோருவது ஜனநாயக முரண் என்று தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்ற சுமந்திரன், அந்த வாதம் தனக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசியப் பட்டியலுக்காக இளைஞர்- குறிப்பாக ஆற்றலுள்ள பெண் ஒருவரை நியமித்து, பெண் பிரதிநிதித்துவத்தை காப்பதுதான், தமிழரசுக் கட்சி முன்னுள்ள மிகப்பெரும் கடப்பாடு. அந்தக் கடப்பாட்டினை உறுதி செய்வதில் மத்திய குழு, அரசியல் குழு மற்றும் நியமனக்குழு உறுப்பினராக சுமந்திரன் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும்.

சுமந்திரன் பிரதிநிதித்துவ அரசியலில் ஆளுமை செலுத்தாத தமிழ்த் தேசிய அரசியல் களம், புதிய பரீட்சார்த்தங்கள் பக்கத்துக்கு நகர வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சுமந்திரனை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் களம் இனியாவது, அதனைக் கடந்து பரந்துபட்ட பார்வை - செயற்பாட்டுத் தளத்துக்குள் செல்ல வேண்டும். சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் சுமந்திரன்... நீங்கள் கடந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக ஓடிக் களைத்து விட்டீர்கள். எல்லாமும் உங்களைச் சுற்றியும் இயங்கி விட்டது. அந்த இயக்கத்துக்கும் ஓர் இடைவெளி அவசியம்.

Purujoththaman Thangamayl


Copied from FB

இவர்தான் சுமந்திரனுக்கு காவடி தூக்கியவர்?

Guest
This topic is now closed to further replies.



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.