Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் விமர்சனம் சுயவிமர்சனம் செய்து திருத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நோக்கி இன்னமும் வலிமையுடன் பயணிக்க தயாராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி. கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன், கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஏனைய மவட்டங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதி நிதிகளும் கலந்துகொண்ட நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மன வலிமையோடு எமக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்க நினைத்திருந்த மக்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலுக்கு முன்னர் ஈ.பி.டி.பி. க்கு எதிராக முனனெடுக்கப்பட்ட பிரச்சாரங்களுக்கு அப்பால், தேர்தலுக்கு பின்னரும் வெளியாகின்ற காழ்ப்புணர்வு மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்த உண்மைகளை, நாடளாவிய ரீதியில் தெளிபடுத்த வேண்டிய கட்டாய கடமை கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ஈ பி டி பி யின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானாந்தா அலைகள் அடித்தாலும், கார்முகில்கள் சூழ்ந்தாலும் எமது கடும் பயணம் ஒருபோதும் நிற்பதில்லை என்றும் எந்தப் பின்னடைவுகளும் ஓரடி பின்னால் ஈரடி முன்னால் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/199017

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

டந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

மண் அள்ள வேறு இடம் பார்த்தாச்சோ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

மண் அள்ள வேறு இடம் பார்த்தாச்சோ?

இந்த முறை சரிவராது என நினைக்கிறேன். வேறு வழிகளில் பணம் சேர்க்க முயல்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nunavilan said:

இந்த முறை சரிவராது என நினைக்கிறேன். வேறு வழிகளில் பணம் சேர்க்க முயல்வார்.

சேர்த்ததை பராமரிக்கவே முடியலை இன்னுமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இந்த முறை சரிவராது என நினைக்கிறேன். வேறு வழிகளில் பணம் சேர்க்க முயல்வார்.

அனுர அரசில்…  டக்ளஸ், அங்கஜன், கருணா, பிள்ளையான் எல்லோரும் சேர்த்த பணத்தையும், வைத்திருக்கும் ஆயுதத்தையும்  பாதுகாக்க போராட வேண்டி இருக்கும்.

எப்பவும்… தேடுதல் வேட்டை தொடங்கலாம்.
பிள்ளையான்… தலைமறைவு என்று பேசிக் கொள்கிறார்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியில் கூட்டாட்சி மாகாணத்தில் சுயாட்சி ...மறந்திடாதே மச்சி ...மாகாணசபை தேர்தலில் நின்று முதலமைச்சராக  வர முயற்சி செய்யலாமே...🤔

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி டக்கி, உங்கள் கட்சி அலுவலம் ( சிறீதர் theatre ) சம்பந்தமான வழக்கு எப்படிப்போகுது… 100 மில்லியன் ரூபாய் தயாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

மத்தியில் கூட்டாட்சி மாகாணத்தில் சுயாட்சி ...மறந்திடாதே மச்சி ...மாகாணசபை தேர்தலில் நின்று முதலமைச்சராக  வர முயற்சி செய்யலாமே...🤔

அப்ப அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லையோ. மாகாணசபைத் தேர்தலுக்கு தான் அடிபோடுறார்

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, வாதவூரான் said:

அப்ப அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லையோ. மாகாணசபைத் தேர்தலுக்கு தான் அடிபோடுறார்

இளைப்பாறினால் உத்தமம் ஆனால் சம்பந்தர் மாதிரி இறுதி வரை அரசியல் ,அரசியல் அரசியல்.அது தான் இலட்சியம்

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இல்லை என்றால் நான் ஒட்டுக்குழு ஆயுத அரசியலில் இருக்கமாட்டன் என்றார்.

அப்புறம் தமிழ் மக்கள் என்னை நிராகரித்தால் ஒட்டுக்குழு ஆயுத அரசியலில் இருக்கமாட்டன் என்றார்.

இறுதியாக இந்த தேர்தலோடு ஒட்டுக்குழு ஆயுத அரசியலில் இருந்து ஓய்வு என்றார்.

இப்படி காலத்துக்கு காலம் இவரும் பேசிக்கிட்டுதான் இருக்கார். பேசிறது என்னவோ சன நாயம் செய்யுறது பாசிச அரசியல். தானே தான் இத்தனை ஆண்டுகளும் செயலாளர் நாயகம். அடுத்தவைக்கு அதை கொடுக்க மனசில்லை. 

காரணம் வருமானம்.. வசதி வாய்ப்பு... அந்தஸ்து. 

  • கருத்துக்கள உறவுகள்

வீனையினை தூக்கி ஒரே அடி உடைந்த வீணையில் இருந்து சத்தம் வருமா ? அநேகமா இந்த அறிக்கையெல்லாம் சேர்த்த செய்த அநியாங்கள் போன்றவற்றில் இருந்து தப்பிக்கவே .

  • கருத்துக்கள உறவுகள்

My mind Voice

தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
புயல் வரும் வேளையில் தீவுக்குள் சுயம்வரமோ?

தோழரின் பாதையில் சோகங்களோ?
 திசைகாட்டி  போடும் கோலங்களோ?

டக்கியே டக்கியே பாழ் கனா தேயுதே
தேகமே தேயினும் பேராசை தான் வீசுதே 

Edited by Sasi_varnam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.