Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:


 

 

புலம் பெயர்ந்து வாழும் புலிப் போராளிகள் சேர்ந்து சீமானின் வன்னி வருகை குறித்து கொடுத்த பேட்டி. இது சீமான் மீதான அவர்களின் நம்பிக்கையினை தெரியப்படுத்துவது மட்டுமல்ல இங்கே, ஆச்சோ, போச்சோ என்று வானத்துக்கும், பூமிக்கும் குதித்தவர்கள் முகத்திலும் கரியை பூசி விட்டனர்.

பஞ்சாயத்தை கலைச்சுப்போட்டு கிளம்புக்கப்பா.... எல்லாம் வேஸ்டு.....

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

இல்லை, நான் தமிழ்நாட்டு அரசியலை ஈழத்துக்கு முற்றிலும் தொடர்பில்லாமலேயே பார்க்கின்றேன். என்னுடைய நிலைப்பாடுகள் இங்குள்ள பொதுவான போக்கிற்கு ஒத்ததாக இல்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம். உதாரணமாக, தமிழ்நாட்டு மக்களை அரசியல், தேர்தல்கள் என்ற வகையில் தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், பட்டியலின மக்கள் என்ற ஒரு பார்வையிலேயே நான் பார்க்கின்றேன். சமீபத்தில் வந்து போன விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட இப்படித்தான் நான் எந்தப்பகுதி எங்கு சாயும் என்று எழுதியிருந்தேன். எந்தப் பகுதிக்குள் எவர் போகமாட்டார்கள் என்றும் சொல்லியிருந்தேன். பாமகவும், திமுகவும் எப்படி வன்னிய சமூகத்தை இரண்டாகப் பிளந்து வைத்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கின்றேன்.

மதுரையும் தேனியும் எப்படி அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்றும், அதே போலவே சேலமும் ஈரோடும் என்று எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சொல்லியிருக்கின்றேன். என்னுடைய பார்வையில் அங்கே தமிழ்த்தேசியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது. இருப்பது எல்லாம் 'பெல்ட்' என்று சொல்லப்படும் - தேவர் பெல்ட், கவுண்டர் பெல்ட், வன்னியர் பெல்ட்,........ - என்ற ஒரு குழு அரசியல் மட்டுமே. இந்த குழு அமைப்பு அரசியலும் தாண்டியது, அவர்களின் சமூகத்தில் இதன் வேர்கள் எங்கும் போய்க் கொண்டிருக்கின்றன.

சீமான் ஒரு ஒற்றுமையான தமிழ்த்தேசியம் தானே பேசுகின்றார் என்று எம்மவர்கள், ஈழத்தவர்கள், சொல்லுகின்றனர். போனவாரம் வெளிவந்த வேங்கைவயல் விசாரணை அறிக்கை சம்பந்தமாக யாழில் வந்த திரியில் நான் எழுதியிருந்தது - சீமானும், ராமதாசும், அன்புமணியும் இதைக் கண்டும் காணாமல் போய்விடுவார்கள் என்று. ராமதாசும் அன்புமணியும் வெளிப்படையாக தமிழ் மக்களில் ஒரு பிரிவினருக்காகவும், தமிழ் மக்களில் இன்னொரு பிரிவினரை எதிர்த்தும் அரசியல் செய்கின்றனர். அவர்கள் பட்டியலின மக்களை சக தமிழ்மக்களாக கருதுவதேயில்லை. ஆனால், தமிழ்த்தேசியம் பேசும் சீமானும் ஏன் இப்படிச் செய்கின்றார். திருமாவும், ரஞ்சித்தும், சீமானும் ஒரே மேடையில் ஒரே நோக்கிற்காக ஏறவே மாட்டார்கள் என்று நான் முன்னர் இங்கு எழுதியிருக்கின்றேன்.

ஆனால் சீமானும், சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஒரே மேடையில் ஏறுவார்கள். இவர்கள் இடையே இருக்கும் பொதுவான ஒன்று எது என்று நான் சொல்லியிருக்கின்றேன். தமிழ்த்தேசியம் என்னும் அகண்ட பார்வையே இவர்களிடம் கிடையாது என்று இதனால் தான் சொல்லுகின்றேன். ஒரு சிறு வட்டத்துக்குள் தான் சீமானும் நிற்கின்றார், பெயர் மட்டும் வேறு அத்துடன் சில பாவனைகள்.

நான் யாழ் களத்திற்கு புதியவன். நான் இங்கு வந்த பின் என்னளவிற்கு இந்தப் பாகுபாடுகளை எவரும் இங்கு எழுதியதை நான் பார்க்கவில்லை. என்னுடன் இருக்கும் ஈழ நண்பர்கள் வட்டம் பொதுவாகவே இதில் எந்த அடிப்படையும் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் என்னை பகிடியாக ஒரு 'தமிழ்நாட்டுக்காரரன்' என்றே சொல்வார்கள். 

சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டு அரசியலையும், ஈழ அரசியலையும் நான் தொடர்பு படுத்துவதேயில்லை. அதனால் தான் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு உள்ள, உணர்ச்சிகளை தூண்டும் ஒருவராகவே மட்டுமே சீமானை நான் பார்க்கின்றேன். இவர் முன்னெடுப்பது எந்த வகையிலும் எங்களின் தலைவர் எண்ணியிருந்த தமிழ்த்தேசியமே கிடையாது. 

இன்றைய திராவிடக் கட்சிகளுக்கு பெரியார் ஒரு கவர்ச்சியான பிரச்சார ஆயுதம் போலவே, அங்கு தமிழ்த்தேசியம் பேசும் சீமான் போன்றோர்களுக்கு எங்களின் தலைவர் ஒரு கவர்ச்சியான ஆயுதம் மட்டுமே.

தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்ந்தால், ஈழமும் பொங்கும் என்பது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் இன்று தமிழ்த்தேசியமே கிடையாது. அப்படியான ஒரு ஒருங்கிணைந்த பார்வை அங்கு எவரிடமும் கிடையாது. ஒரு அரசியல் கட்சியாக, எம்ஜிஆர் - ஜெயலலிதா கால அதிமுகவும், என்றுமே திமுகவும், இடதுசாரிகளும் இந்த அடையாளம் பேணும் குழு அரசியலில் இருந்து ஓரளவு வெளியே வந்தவர்கள். ஆனால், இவர்களில் கூட, இடதுசாரிகள் தவிர்த்து, எந்த தொகுதியில் யார் வேட்பாளாரக நிற்கப் போகின்றார் என்பதை தீர்மானிப்பது 'தமிழன்' என்னும் அடையாளம் அல்ல, இன்னொரு வேறு அடையாளமே அதை தீர்மானிக்கின்றது. ஈரோடு கிழக்கும் அதே தான். இவர்கள் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடம் பேசுபவர்கள் என்று எம்மவர்கள் ஏமாறுகின்றனர். ஆனால் ஒரு தமிழ்நாட்டவர் அவரின் ஊரையும், பெயரையும் சொன்னவுடனேயே புரிந்து விடுகின்றது அவர் யாரென்று. இனத்தலைவர், குலத்தலைவர் என்று தங்களை நியாயப்படுத்தும் தமிழ்நாட்டு நண்பர்களும் எனக்கு உண்டு.  அங்கு விதிவிலக்கானவர்கள் மிகச்சிலரே.

பாளையக்காரர்களும் விஜயநகரப் பேரரசின் பின் வந்தவர்கள் தான். கட்டபொம்மனை எங்களின் ஒரு வீரனாக நாங்கள் ஏற்று பெருமைப்படவில்லையா. சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷும் அந்த வழியில் வந்த ஒருவர் தான். நான் மிகவும் பெருமப்பட்டேன். விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக போட்டியிடும் போது எவ்வளவு பெருமைப்பட்டேனோ, அவ்வளவு பெருமை குகேஷ் வென்ற போதும் வந்தது. எம்ஜிஆரை ஒரு மலையாளியாகவும், கருணாநிதியை ஒரு தெலுங்கராகவும், ஜெயலலிதாவை மைசூர் ராணியாகவும் பார்க்கும் நிலையை நான் கடந்து வந்துவிட்டேன். இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாட்களில், இதை பலரும் கடந்து போவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

சீமானை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். சமூக அக்கறை கொண்ட, ஆனால் மிகச் சாதாரண மனிதர்கள் என்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன். 

               

மிகச் சிறப்பான பதிவு. முடிந்தளவு பதிலலிக்கிறேன்.

உங்கள் முன்னைய பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். மிகச் சிறப்பு. தொடர்ந்து இணைந்திருங்கள்.

@நிழலி

இப்படி ஆரோக்கியமான விவாதங்களை நிர்வாகம் ஊக்கிவிக்க வேண்டும்.

அடுத்தவர்கள் ஆரோக்கியமாக விவாதிக்க விடாமல், புகுந்து அடாவடி பண்ணுவது மிகவும் தவறு.

வெறித்தனமாக அவமதிப்பான சொற்களை, எந்த அரசியல்வாதி மீதும் பாவிப்பதை கட்டாயமாக தடுக்க வேண்டும்.

விடயம் இல்லா, அரைக் குடங்கள் தளும்பும் என இங்கே நீருபணமாகியுள்ளது.

எம்மை அழித்த மகிந்தவை கூட இப்படி யாருமே திட்டவில்லை.

தேவையற்ற வசைபாடல்கள், தளத்தின் நன்மதிப்பை கெடுக்கும. நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பொய் பித்தலாட்டக்காரன் செந்தமிழன் சீமான் அண்ணா ஒரு புழுகு விட்டால் மூடிமறைக்கலாம். அண்ணா விட்டது அண்டப் புழுகு ஆகாசப் புழுகு. அண்ணா அம்மணமா நிக்கிறார். அது தெரியாமல் சிலருக்கு மெய்சிலிர்க்குது!😂

ரீல் அந்து போச்சி! 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

என்னது பெரியார் பிராமணர்களை மாத்திரம்தான் திட்டினாரா? பார்ப்பனர்கள், துலுக்கர்கள், கிறீஸ்தவர்கள், எம்மைவிட கீழ்மட்டத்தில் இருப்பவர்களால் தமிழ்நாட்டிற்கு எப்போதுமே ஆபத்து. இவர்கள் இந்நாட்டவர்கள் இல்லை. இவர்களை துரத்தவேண்டும் என்று பேசிய ஈவேராவிற்கு இப்படி முட்டுக்கொடுக்கிறீர்கள்.

ஈவேராவின் பகுத்தறிவு, பெண்ணிய மேம்பாடு, பெண்ணடிமைத்தனத்திற்கெதிரான குரல், தமிழ் மொழியின் தந்தை என்று திராவிட கட்சிகள் கட்டியமைத்த பிம்பமெல்லாம் இப்போ கிழிந்து தொங்கத்தொடங்கியுள்ளது. ஈவேராவின் எல்லா சொத்துக்களையும் தனதாக்கிக்கொண்ட வீரமணி ஐயா மனம்வைத்தால் இன்னும் வரும்..

பகுத்தறிவை முன்னிறுத்துபவர் கிறிஸ்தவ, இஸ்லாம், உட்பட்ட மதங்களைத் திட்டுவது புதிசா? அப்படித் திட்டாமல் இந்துக்களை மட்டும் திட்டினால் தான் நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டும். ஆனால், "நம்மிலும் கீழானோரை" என்று யாரை பெரியார் குறிப்பிட்டார்? சாதியை ஒழிக்கிறேன் என்பவர், இப்படி விளித்திருப்பாரானால், அது "பகுத்தறிவு" இல்லாத தரப்பைத் தான் குறித்திருக்கும். உங்களிடம் தான் ஆதாரம் இருக்கிறதே? யாரென்று சொல்லுங்கள், மேற்கொண்டு பேசலாம்!

 "பெரியார் பெண்களை இழிவு செய்தார்" என்பது உட்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் வீரமணியிடம் மட்டும் தான் இருக்கிறது என்கிறீர்கள். அப்ப ஏன் ஆதாரங்களைப் பார்க்காமல், கையில் எடுத்துக் கொள்ளாமல் குதிரைக்கு முன்னால் வண்டிலைப் போட்டுகிறீர்கள்😂?

சும்மா சீமான் உளறி வைத்தார் தன் தேவைக்காக என்றால் நீங்களும் ஒத்து ஊதி விட்டு "வீரமணி மனது வைத்தால்" என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மிகச் சிறப்பான பதிவு. முடிந்தளவு பதிலலிக்கிறேன்.

உங்கள் முன்னைய பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். மிகச் சிறப்பு. தொடர்ந்து இணைந்திருங்கள்.

@நிழலி

இப்படி ஆரோக்கியமான விவாதங்களை நிர்வாகம் ஊக்கிவிக்க வேண்டும்.

அடுத்தவர்கள் ஆரோக்கியமாக விவாதிக்க விடாமல், புகுந்து அடாவடி பண்ணுவது மிகவும் தவறு.

வெறித்தனமாக அவமதிப்பான சொற்களை, எந்த அரசியல்வாதி மீதும் பாவிப்பதை கட்டாயமாக தடுக்க வேண்டும்.

விடயம் இல்லா, அரைக் குடங்கள் தளும்பும் என இங்கே நீருபணமாகியுள்ளது.

எம்மை அழித்த மகிந்தவை கூட இப்படி யாருமே திட்டவில்லை.

தேவையற்ற வசைபாடல்கள், தளத்தின் நன்மதிப்பை கெடுக்கும. நன்றி.

டீச்சர், டீச்சர் அந்த பையன் ஊண்டி நுள்ளிப்போட்டான் 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மிகச் சிறப்பான பதிவு. முடிந்தளவு பதிலலிக்கிறேன்.

உங்கள் முன்னைய பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். மிகச் சிறப்பு. தொடர்ந்து இணைந்திருங்கள்.

@நிழலி

இப்படி ஆரோக்கியமான விவாதங்களை நிர்வாகம் ஊக்கிவிக்க வேண்டும்.

அடுத்தவர்கள் ஆரோக்கியமாக விவாதிக்க விடாமல், புகுந்து அடாவடி பண்ணுவது மிகவும் தவறு.

வெறித்தனமாக அவமதிப்பான சொற்களை, எந்த அரசியல்வாதி மீதும் பாவிப்பதை கட்டாயமாக தடுக்க வேண்டும்.

விடயம் இல்லா, அரைக் குடங்கள் தளும்பும் என இங்கே நீருபணமாகியுள்ளது.

எம்மை அழித்த மகிந்தவை கூட இப்படி யாருமே திட்டவில்லை.

தேவையற்ற வசைபாடல்கள், தளத்தின் நன்மதிப்பை கெடுக்கும. நன்றி.

உறவே, சொல்கிறேன் என்று குறை நினைக்காதீர்கள்.

ஒவ்வொரு முறையும் சீமான், நா.த.க விவாதத்தில் ஒவ்வொரு நுட்பத்தை அறிமுகம் செய்து கவர் கொடுப்பீர்கள். இந்த முறை பதிலுக்கு சளைக்காமல் பதில் எழுதுவோரை "இம்சையாளர்கள்" என்று குற்றஞ்சாட்டும் ஒரு புது நுட்பத்தோடு வந்திருக்கிறீர்கள். அதிலும்  preaching to the choir போல உங்கள் "நாகரீக அட்வைஸ்" இருக்கிறதே? இதை உண்மையில் சீமான் தரப்பில் இருக்கும் தம்பிகளுக்குத் தான் நீங்கள் கொடுக்க வேண்டும். சீமான் பற்றி தற்போது ஓடும் 3 திரிகளிலும் நடவடிக்கைகள் எடுக்கும் அளவுக்கு "நாகரீகமாக" சீமான் ஆதரவாளர்கள் எழுதியிருக்கிறார்கள், மகிந்தவை எதிர்த்து அல்ல, சக கருத்தாளர்களை நோக்கி "நாகரீகமாக" எழுதியிருக்கிறார்கள்.

நீங்கள் என்னவெண்டால் ஒரு சராசரிக்கும் கீழான, சாக்கடை தமிழ் நாட்டு அரசியல் வாதிக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்று விண்ணப்பமும் அட்வைசும் குடுத்து எங்களுக்கு சிரிப்பு மூட்டுறீங்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்களே,

உங்களுக்கு தெரியாது - மிசேல் ஒபாமா ஒரு ஆண், பராக் ஒபாமா ஒரு தன்னினசேர்க்கையாளர், என பெரியார் கூறி உள்ளார்.

உலக மீட்பர் டிரம்ப் என்றும் பெரியார்  கூறி உள்ளார்.

2025 இல் பிட் காயின் 125K தொடும் என்றும் கூட பெரியார்  கூறி உள்ளார்.

ஆதாரம் கவுண்ட மணியிடம் உள்ளது. மறைக்கிறார் வந்ததும் காட்டுகிறேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்

வேறை ஒண்டும் இல்லை,

1. ஆள் உள்ள வந்ததே - பழையபடி யாழில் குழு மோதலை தூண்டி விடலாம் என்ற நப்பாசையில்.

அவரின் கெட்டகாலம் பலருக்கு இப்போ அதில் நாட்டமில்லை.

அது மட்டும் அல்லாமல், பல விடயங்களில் (உக்ரேன், பலஸ்தீன், போலிக்கா) குழு எல்லாம் மாறி மாறி உடைஞ்சு இப்போ எல்லாரும் எல்லா குழுவிலும் மெம்பேர்ஸ்🤣. இது தற்செயலாக நடந்த நல்லவிடயம்.

ஆகவே ஆளின் பப்பு வேகவில்லை.

2. வரும் போது நிர்வாகம் நடுநிலை இல்லை என கூறி கொண்டு வந்தவர், இப்ப நிர்வாகத்கிடம் வினயமாக கோரிக்கை வைக்கிறாராம்🤣.

நடுநிலை இல்லாத களத்தில் மானஸ்தர்கள் மினக்கெடமாட்டார்கள் 🤣.

3. பிறகு நான் போலி ஐடியில் வாறேன் என ஒரு லுச்சா கதை. அதுவும் பிசு பிசுத்து போச்சு. பிறகு என்னை பற்றி ஒரே ஒப்பாரி🤣.

4. இடைக்கிடை திரிக்கு சம்பந்தமே இல்லாமல் ஆட்டு ஸ்டோரி, லூட்டன் இமி கிரேசன் ஸ்டோரி என இணைத்து, திரியை அரட்டை திரியாக்கி தளத்தை மலினப்படுத்தும் முயற்சி. 

அதையும் எவரும் கண்டுக்கவில்லை.

எல்லோரும் திரியில் விடயத்தில் பிசி.

5.நான் தமிழக அரசியலில் கருத்து சொல்வதை 2003 டிசம்பரில் விட்டு விட்டேன் என சொல்லி விட்டு, வந்த பின் கருத்து எழுதிய ஒரே திரி இந்த திரிதான். அதிலும் பல அரசியல் கருத்துகள் 🤣.

6. இப்போ ஆத்தா கொடுமையில நிர்வாகத்துகே அட்வைஸ் - செவ்வாழை காமெடிதான். 

39 minutes ago, goshan_che said:

டீச்சர், டீச்சர் அந்த பையன் ஊண்டி நுள்ளிப்போட்டான் 🤣🤣🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

 

மக்களே,

உங்களுக்கு தெரியாது - மிசேல் ஒபாமா ஒரு ஆண், பராக் ஒபாமா ஒரு தன்னினசேர்க்கையாளர், என பெரியார் கூறி உள்ளார்.

உலக மீட்பர் டிரம்ப் என்றும் பெரியார்  கூறி உள்ளார்.

2025 இல் பிட் காயின் 125K தொடும் என்றும் கூட பெரியார்  கூறி உள்ளார்.

ஆதாரம் கவுண்ட மணியிடம் உள்ளது. மறைக்கிறார் வந்ததும் காட்டுகிறேன்🤣

Are you alright?

நல்லா இருந்த மனிசன், இப்படி ஆகீட்டாரு! 🥹😢

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமான் அண்ணா தலைவரைச் சந்தித்தது உண்மைதான்

👇

காணொளி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

வேறை ஒண்டும் இல்லை,

1. ஆள் உள்ள வந்ததே - பழையபடி யாழில் குழு மோதலை தூண்டி விடலாம் என்ற நப்பாசையில்.

அவரின் கெட்டகாலம் பலருக்கு இப்போ அதில் நாட்டமில்லை.

அது மட்டும் அல்லாமல், பல விடயங்களில் (உக்ரேன், பலஸ்தீன், போலிக்கா) குழு எல்லாம் மாறி மாறி உடைஞ்சு இப்போ எல்லாரும் எல்லா குழுவிலும் மெம்பேர்ஸ்🤣. இது தற்செயலாக நடந்த நல்லவிடயம்.

ஆகவே ஆளின் பப்பு வேகவில்லை.

2. வரும் போது நிர்வாகம் நடுநிலை இல்லை என கூறி கொண்டு வந்தவர், இப்ப நிர்வாகத்கிடம் வினயமாக கோரிக்கை வைக்கிறாராம்🤣.

நடுநிலை இல்லாத களத்தில் மானஸ்தர்கள் மினக்கெடமாட்டார்கள் 🤣.

3. பிறகு நான் போலி ஐடியில் வாறேன் என ஒரு லுச்சா கதை. அதுவும் பிசு பிசுத்து போச்சு. பிறகு என்னை பற்றி ஒரே ஒப்பாரி🤣.

4. இடைக்கிடை திரிக்கு சம்பந்தமே இல்லாமல் ஆட்டு ஸ்டோரி, லூட்டன் இமி கிரேசன் ஸ்டோரி என இணைத்து, திரியை அரட்டை திரியாக்கி தளத்தை மலினப்படுத்தும் முயற்சி. 

அதையும் எவரும் கண்டுக்கவில்லை.

எல்லோரும் திரியில் விடயத்தில் பிசி.

5.நான் தமிழக அரசியலில் கருத்து சொல்வதை 2003 டிசம்பரில் விட்டு விட்டேன் என சொல்லி விட்டு, வந்த பின் கருத்து எழுதிய ஒரே திரி இந்த திரிதான். அதிலும் பல அரசியல் கருத்துகள் 🤣.

6. இப்போ ஆத்தா கொடுமையில நிர்வாகத்துகே அட்வைஸ் - செவ்வாழை காமெடிதான். 

 

Please stop this nonsense!

உண்மையாகவே சொல்கிறேன்.

நான் உங்களுடன் அதீதமாக நேவிரயம் செய்கிறேன் என்பதை சுட்டிக்காட்டிய ஒரு கள உறவு, அதனால் என்ன பயன் என்று கேட்டார்.

அதனாலே விலகியிருந்தேன்.

மீண்டும் உங்களிடம் நேரத்தை விரயம் செய்யும் எண்ணம் அறவே இல்லை. ஆகவே என்னை நீங்கள் கண்டு கொள்ள வேண்டியதில்லை.

அதேவேளை, தரமான கருத்தாடல் செய்யும் போது, குறுக்கிடாதீர்கள். 

நன்றி!

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

Please stop this nonsense!

உண்மையாகவே சொல்கிறேன்.

நான் உங்களுடன் அதீதமாக நேவிரயம் செய்கிறேன் என்பதை சுட்டிக்காட்டிய ஒரு கள உறவு, அதனால் என்ன பயன் என்று கேட்டார்.

அதனாலே விலகியிருந்தேன்.

மீண்டும் உங்களிடம் நேரத்தை விரயம் செய்யும் எண்ணம் அறவே இல்லை. ஆகவே என்னை நீங்கள் கண்டு கொள்ள வேண்டியதில்லை.

அதேவேளை, தரமான கருத்தாடல் செய்யும் போது, குறுக்கிடாதீர்கள். 

நன்றி!

 

நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்….

கண்ட கண்ட…

எங்கண்ணை கேக்குறானுங்க🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணா தலைவரைச் சந்தித்தது உண்மைதான்

உண்மைகளை சொல்கின்றார் பேட்டியில்
வெளிநாட்டு ஈழதமிழர்கள் சீமானை பற்றி மாய கற்பனையில் இருக்கின்றார்கள்  
ஈழதமிழர் ஒருவர் தனது பேட்டியில் சீமான் பணம் வசூல் செய்யவில்லை நாங்களாக விரும்பி  கொடுக்கின்றோம் 🙆‍♂️

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒரு வருட காலமாக சீமானை இரகசியமாகக் கண்காணித்த பொட்டம்மான்

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

 

 

ஒரு வருட காலமாக சீமானை இரகசியமாகக் கண்காணித்த பொட்டம்மான்

 

நிராஜ் டேவிட் இன்னொரு சீமான்! மற்ற ஆட்களின் கதையைக் கேட்டிட்டு தான் அந்த இடத்தில் இருந்தது போல ரீல் விடுவார்.

நுணா இது உங்களுக்கே நல்லா இருக்கா! சீமான் போன்ற சில்லறைப் பயலைக் கண்காணிக்க அம்மானுக்கு மூன்று நாள்கள் அதிகம். சத்தியமா இந்தக் காணொளியைப் பார்க்கவில்லை. தலையங்கத்தை வைத்துச் சொல்லுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணா தலைவரைச் சந்தித்தது உண்மைதான்

👇

காணொளி

காணொளி

நேரடியாக காணொளியினை இணைக்காமல் அதன் முகவரியினை எவ்வாறு தொடரியில் இணைக்கிறீர்கள்? 

நன்றி, அதனை நானாகவே புரிந்து கொண்டுவிட்டேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நிராஜ் டேவிட் இன்னொரு சீமான்!

புளுகு மூட்டையர்  சீமான் போன்று இவரும் நல்லாக கதைவிடுவார் என்கிறீர்கள்
நானும் பார்ப்பதில்லை
சந்தோஷ் சொல்கிறர் சீமான் பொய்களை உண்மை மாதிரி சொல்வதில் அசாத்திய திறமை கொண்டவராம்.வெளிநாட்டு ஈழதமிழர்களை மயங்க வைத்த அவரது திறமை 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, செவ்வியன் said:

விடுதலையில் ஈவேரா தமிழர்களை பற்றி கேவலமாக எழுதியிருக்கிறார் என்பது புரிகிறது, அப்படியிருக்கையில் அதை எதிர்த்து புலிகள் கண்டிப்பாக எழுதியிருக்கக்கூடும், அந்த கட்டுரைகளை பற்றி கேட்டேன்.

புலிகள் தமிழக அரசியலில் தலையிடுவதில்லை. இலங்கையில் தமிழர்களின் வருங்கால அரசியல் மாற்றங்களுக்கு தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தின் எழுச்சி அவசியம் என்று உணர்ந்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது! திராவிடம் இனி ஒன்றும் செய்யாது என்று அவர்களுக்கு நன்கே தெரிந்திருந்தது!! 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

பகுத்தறிவை முன்னிறுத்துபவர் கிறிஸ்தவ, இஸ்லாம், உட்பட்ட மதங்களைத் திட்டுவது புதிசா? அப்படித் திட்டாமல் இந்துக்களை மட்டும் திட்டினால் தான் நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டும். ஆனால், "நம்மிலும் கீழானோரை" என்று யாரை பெரியார் குறிப்பிட்டார்? சாதியை ஒழிக்கிறேன் என்பவர், இப்படி விளித்திருப்பாரானால், அது "பகுத்தறிவு" இல்லாத தரப்பைத் தான் குறித்திருக்கும். உங்களிடம் தான் ஆதாரம் இருக்கிறதே? யாரென்று சொல்லுங்கள், மேற்கொண்டு பேசலாம்!

 "பெரியார் பெண்களை இழிவு செய்தார்" என்பது உட்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் வீரமணியிடம் மட்டும் தான் இருக்கிறது என்கிறீர்கள். அப்ப ஏன் ஆதாரங்களைப் பார்க்காமல், கையில் எடுத்துக் கொள்ளாமல் குதிரைக்கு முன்னால் வண்டிலைப் போட்டுகிறீர்கள்😂?

சும்மா சீமான் உளறி வைத்தார் தன் தேவைக்காக என்றால் நீங்களும் ஒத்து ஊதி விட்டு "வீரமணி மனது வைத்தால்" என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள்.

நல்லா முட்டு கொடுக்கிறீர்கள். நம்மிலும் கீழோர் என்பது பகுத்தறிவு பற்றியதா? விளங்கீடும்! 

எது பகுத்தறிவு? கள்ளுக்கடைகளை மூடும் போராட்டத்திற்காக தனது தோப்பில் 500  தென்னை மரங்களை வெட்டிச்சாய்த்தவராம் பெரியார். பெண்விடுதலைக்கு தலைமயிரை ஆண்கள் போலவெட்டிக்கொள்ளுங்கள், ஆண்கள் போல உடையணியுங்கள், திருமண பந்தத்திற்குள் செல்லாதீர்கள், கர்ப்பப்பையை அகற்றுங்கள் என்பதெல்லாம் முற்போக்கு சிந்தனை.

நான் வீரமணி மனதுவைத்தால் என்று சொன்னது பெரியாரின் பத்திரிகைகள், புத்தகங்களை அரசுடமையாக்குவது பற்றியது.

11 hours ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணா தலைவரைச் சந்தித்தது உண்மைதான்

👇

காணொளி

அதைத்தான் சந்தோசே சொல்லிவிட்டாரே. சீமான் வந்தது உண்மை, தலைவரை சந்தித்தது உண்மை, அவர் படம் எடுப்பதற்காக அங்கு அழைக்கப்படவில்லை, பாலாமைக்கறி பரிமாறப்பட்டது உண்மை என்றெல்லாம் தனது காணாளியிலேயே சொல்லிவிட்டார். பிறகு இவர் ஏன் அதற்கு விளக்கம் கொடுக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

புலிகள் தமிழக அரசியலில் தலையிடுவதில்லை. இலங்கையில் தமிழர்களின் வருங்கால அரசியல் மாற்றங்களுக்கு தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தின் எழுச்சி அவசியம் என்று உணர்ந்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது! திராவிடம் இனி ஒன்றும் செய்யாது என்று அவர்களுக்கு நன்கே தெரிந்திருந்தது!! 

ஏன் தலையிடுவதில்லை என யோசித்தால் நாம் செல்லும் பாதை சரியா என்பது விளங்கும்.

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும்போது அங்கே தமிழ்தேசியம் எப்படி சாத்தியமாகும். அங்கு யாரும் தமிழ் தேசியம் அமைக்க தனிநாடு கேட்டுப் போராடவில்லை, இந்திய தேசியத்திற்கு உட்பட்டு கட்டுப்பட்டு மாநில அதிகாரத்திற்கே தேர்தலில் போட்டி போடுகிறார்கள். அப்புறம் எப்படி அவர்கள் இங்கே ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும்? அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? அவர்களின் மாநில தேவைகளுக்கான உரிமையை நிறைவேற்றி கொள்ள அதிகாரமில்லாதவர்களால் ஈழத்தில் என்ன சாதித்துவிட முடியும்?

அரசியல் அதிகாரங்களை தாண்டி குறைந்தபட்சம் ஈழத்தின் நடக்கும் அன்றாட அவலங்களையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகளை பற்றியும் தமிழக மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் தமிழர் நடத்திய கருத்தரங்குகளோ, கூட்டங்களோ எதுவும் உண்டா? 

தமிழ்நாட்டின் நடக்கும் நிகழ்வுகளை கண்டா வடகிழக்கில் தமிழ்தேசியத்திற்கான ஆதரவு குறைந்தது? இங்குள்ள மக்களின் தேவைகளை பேசாவிட்டால், இன்றை இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டாவிட்டால் வரும் காலங்கில் ஆதரவு தளம் மிகவும் குறையும்.

கடந்த கால போராட்டங்களை மறந்து வருங்காலத்தினர் 'நாங்களா உங்களை போராடச் சொன்னோம்' என எளிதாக கேட்டுவிட்டு எளிதாக கடந்து சென்றுவிடுவர். இதை இப்போதே பார்க்க முடிகிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செவ்வியன் said:

ஏன் தலையிடுவதில்லை என யோசித்தால் நாம் செல்லும் பாதை சரியா என்பது விளங்கும்.

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும்போது அங்கே தமிழ்தேசியம் எப்படி சாத்தியமாகும். அங்கு யாரும் தமிழ் தேசியம் அமைக்க தனிநாடு கேட்டுப் போராடவில்லை, இந்திய தேசியத்திற்கு உட்பட்டு கட்டுப்பட்டு மாநில அதிகாரத்திற்கே தேர்தலில் போட்டி போடுகிறார்கள். அப்புறம் எப்படி அவர்கள் இங்கே ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும்? அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? அவர்களின் மாநில தேவைகளுக்கான உரிமையை நிறைவேற்றி கொள்ள அதிகாரமில்லாதவர்களால் ஈழத்தில் என்ன சாதித்துவிட முடியும்?

திராவிடதேசம் மொழிவாரியாக பிரிந்து கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என்று மாறியபோது தமிழ் பேசியவர்கள் மட்டும் எப்படி திராவிடர் ஆனார்கள். அங்கே தொடங்கியதுதான் தமிழ் தேசியத்திற்கான எதிர்ப்பு. திராவிட கழகம் என்று அதை தொடக்கிவைத்தது ஈவேரா. 

தமிழ்நாட்டு மாநில அரசால் உணர்வுபூர்வமான ஆதரவுகளை மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு கொடுக்கமுடியும் என்று முதலே ஏழுதியுள்ளேன். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரை மீறியே எதுவும் செய்யமுடியாதுள்ளபோது எமக்கு என்னதான் அவர்களால் செய்யமுடியும் !

என்ன, தமிழ் நாட்டிலுள்ள ஈழ அகதிகளுக்காவது கொஞ்சம் முன்னேற்றமான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்ற நப்பாசைதான்.

 

1 hour ago, செவ்வியன் said:

 

 

 

அரசியல் அதிகாரங்களை தாண்டி குறைந்தபட்சம் ஈழத்தின் நடக்கும் அன்றாட அவலங்களையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகளை பற்றியும் தமிழக மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் தமிழர் நடத்திய கருத்தரங்குகளோ, கூட்டங்களோ எதுவும் உண்டா? 

ஆரம்ப காலங்களில் பலமேடைகளில் சீமான் பேசியதை கேட்டிருக்கிறேன். காணாளி கிடைத்தால் இணைக்கிறேன்.

தமிழ்நாட்டின் நடக்கும் நிகழ்வுகளை கண்டா வடகிழக்கில் தமிழ்தேசியத்திற்கான ஆதரவு குறைந்தது? இங்குள்ள மக்களின் தேவைகளை பேசாவிட்டால், இன்றை இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டாவிட்டால் வரும் காலங்கில் ஆதரவு தளம் மிகவும் குறையும்.

கடந்த கால போராட்டங்களை மறந்து வருங்காலத்தினர் 'நாங்களா உங்களை போராடச் சொன்னோம்' என எளிதாக கேட்டுவிட்டு எளிதாக கடந்து சென்றுவிடுவர். இதை இப்போதே பார்க்க முடிகிறது.

நிதர்சனமான உண்மை. வெளிநாட்டுப்பணத்தில் சொகுசாக வாழக்கூடியதாக இருக்கும்போது, எதற்காக கஷ்டப்பட்டு உழைக்கவேண்டும் என்ற நிலையில் ஊரில் பல இளைஞர்கள் இருப்பதை இம்முறை போனபோது காணக்கூடியதாக இருந்தது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

திராவிடதேசம் மொழிவாரியாக பிரிந்து கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என்று மாறியபோது தமிழ் பேசியவர்கள் மட்டும் எப்படி திராவிடர் ஆனார்கள். அங்கே தொடங்கியதுதான் தமிழ் தேசியத்திற்கான எதிர்ப்பு. திராவிட கழகம் என்று அதை தொடக்கிவைத்தது ஈவேரா. 

தமிழ்நாட்டு மாநில அரசால் உணர்வுபூர்வமான ஆதரவுகளை மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு கொடுக்கமுடியும் என்று முதலே ஏழுதியுள்ளேன். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரை மீறியே எதுவும் செய்யமுடியாதுள்ளபோது எமக்கு என்னதான் அவர்களால் செய்யமுடியும் !

என்ன, தமிழ் நாட்டிலுள்ள ஈழ அகதிகளுக்காவது கொஞ்சம் முன்னேற்றமான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்ற நப்பாசைதான்.

 

 

புரிதல், பட்டறிவு இல்லாமல், செவ்வியன் கருத்து வைப்பதாக தோன்றுகிறது!

பங்களாதேச விடுதலைக்கு காரணம், அதே வங்க மொழி பேசிய இந்திய மேற்கு வங்க மாநில முதல்வர், சங்கரரே. மத்திய அரசின் மீது பெரும் அழுத்தம் கொடுத்தார்.

இறுதிப் போரின் போது, சோனீயா குடும்பத்திடம் நல்ல பெயர் வாங்க, தமிழரை அழிய விட்டார், திராவிடர் கலைஞர்.

இந்த முடிவு தான் வரும் என்று தான், தமிழ் தேசியம் அங்கே வளர வேண்டும் என, தலைவர் விரும்பினார். தேடலில் ஒருவரை கண்டார்.

இன்று, அங்காங்கே இருக்கும்  போராளிகள் அந்த, தலைவரின் தெரிவுக்கு ஆதரவுக் கருத்து திருப்தியுடன் தரும் போது, இங்கே எதிர்பவர்கள் கருத்துகள், அவர்களது தனிப்பட்ட கருத்துகளாக எடுக்க வேண்டிய நிலைக்குள்ளாகிறது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

நிராஜ் டேவிட் இன்னொரு சீமான்! மற்ற ஆட்களின் கதையைக் கேட்டிட்டு தான் அந்த இடத்தில் இருந்தது போல ரீல் விடுவார்.

நுணா இது உங்களுக்கே நல்லா இருக்கா! சீமான் போன்ற சில்லறைப் பயலைக் கண்காணிக்க அம்மானுக்கு மூன்று நாள்கள் அதிகம். சத்தியமா இந்தக் காணொளியைப் பார்க்கவில்லை. தலையங்கத்தை வைத்துச் சொல்லுகின்றேன்!

நீங்கள் பார்க்காததால் உங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

 

என்ன, தமிழ் நாட்டிலுள்ள ஈழ அகதிகளுக்காவது கொஞ்சம் முன்னேற்றமான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்ற நப்பாசைதான்.

 

 

தமிழ்நாட்டிலுள்ள ஈழமக்களுக்கு நன்மை பயக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் புரிகிறது, அம்மக்களுக்கான கோரிக்கை குறித்தான முன்னேடுப்புகளோ, போராட்டங்களோ இல்லை ஏதாவது ஒரு ஆக்கப்பூர்வமான விடயங்கள் நாம் தமிழர் சார்ப்பில் நடாத்தப்பட்டவை என்னென்ன?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.