Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன் என்பவன் யார்

Featured Replies

அறிஞர்கள் பெரியோர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

ஒரு கருத்துக் களத்திற்கு வந்த ஒருவன் தெளிவு பெறவேண்டும். ஆனால் நான் தமிழ்க் களத்தை சுற்றிப் பார்த்து பலரது கருத்துக்களையும் வாசித்த பின் குழம்பிப் போய் நிற்கிறேன். என்னடா அடிமடியிலேயே கை வைக்கிறானே என்று யோசிக்காதிங்கோ. தெளிவு பெறத்தான் கேட்கிறேன்.

தமிழன் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்களை பட்டியலிடுங்கள்.

தமிழ் மொழி பேசும் தாய் தந்தையருக்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன்

தமிழ் மொழி பேசும் தாய்க்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன்

தமிழ் மொழி பேசும் தந்தைக்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன்

தமிழ் ஈழ எல்லைக்குள், தமிழ் நாட்டில் பிறந்தால் அவன் - தமிழன்

பார்ப்பனியர் அல்லாதோர் - தமிழர்

தமிழ்மொழி பேசுபவன் - தமிழன்

மேலே உள்ளவைகள் தவிர்ந்து வேறு ஏதும் வரையறைகள் தெரிந்தால் சொல்லுங்கள். மேலே உள்ளவை பிழை என்றாலும் சொல்லுங்கள்.

குட்டையைக் குழப்பி விட்டிருக்கிறன். ஏதாவது மீன் மாட்டுதா என்று பார்ப்போம்

Edited by அவதாரம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்று பெயர்வைத்தவனும் தமிழன்தான் அதுசரி இதுகளை தெரிஞ்சு என்ன செய்யபோறீங்கள்

"எவன் தன்னைத் தானே தமிழனாக உணர்குறானோ அவன்தான் தமிழன்:"

நானும் கொஞ்சம் பட்டியல் இடுவோ பிறகு பிழையா இருந்தா பேபியை மன்னித்து போட வேண்டும் சொல்லிட்டேன்!! :(

1)தமிழ்,தமிழ் கதைக்க வேண்டும் என்று ஊரிற்கு சொல்லி கொண்டு தன்ட வீட்டில இங்கிலிசில கதைக்கிறவன்!!

2)தமிழ் படத்தை புறகணித்து போட்டு இங்கிலிஸ் படம் பார்கிறவன்!!

3)தீபாவளியை புறகணித்து போட்டு புட்டபத்திக்கு போறவன்!!

4)தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தாமே ஒரு பெயரை வைத்து அது தமிழ் பெயர் என்று சொல்லுறவன்!!

5)தன் பெயரை வளர்த்து கொள்ள தமிழ்தேசியத்தின் மீது அக்கறை உள்ளவனாக காட்டி கொள்ளுறவன்!!

இப்படி அடுக்கி கொண்டே போகலாம் அவதாரம் அண்ணே பிழையா இருந்தா மன்னித்து அருளுங்கோ!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"தமிழன் என்று பேச்சளவில் இல்லாம மனதில் எவன் நினைக்கிறானோ அவன் தான் தமிழன்" :unsure:

  • தொடங்கியவர்

நல்லது. 200 பேர்கள் பார்த்த இடத்தில் 3 பேருக்காவது பதில் எழுத துணிச்சல் வந்ததே.

முதலில் சாத்திரியாரின் பதிலுக்கு வருவோம். அவர் சொல்கிறார் எவன் ஒருவன் ஒரு கேள்விக்கு இன்னுமொரு கேள்வியை பதிலாக அளிக்கிறானோ அவனே தமிழனென்று. இது சரியா இல்லையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

மற்றது வாசகனின் பதிலான எவன் தன்னைத்தானே தமிழனென்று உணர்கின்றானோ அவன் தமிழனென்ற வாசகத்தையும் யமுனாவின் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த பதில்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்தேன். வந்த பதில் இதுதான். இதுவும் சரியா இல்லையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

"மற்றவர்களை தமிழ் மட்டும் கதையுங்கோ, தமிழ் பெயர் வையுங்கோ, தீபாவளி கொண்டாதேயுங்கோ என்று சொல்லிக்கொண்டு தான் மட்டும் வேற்றுமொழியில் பேசினாலும், தீபாவளி கொண்டாடினாலும், தேசியத்துக்கு உதவி செய்யாவிட்டாலும் மனதுக்குள் தமிழனென்று உணர்ந்தாலே போதும் - அவனே தமிழன்"

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தெரியாத தமிழரின் வழித்தோன்றல்கள் தமிழர்களாக இருக்கமுடியாதா? அப்படிப் பார்த்தால் இன்னும் 50 வருடங்களில் புலம் பெயர்ந்த பலர் அமெரிக்கன், கனடியன், பிரித்தானியன், பிரஞ்சுக்காரன், ஜேர்மானியன், இத்தாலியன், ஒல்லாந்தன், சுவிஸ்காரன், ஸ்கண்டிநேவியன், அவுஸ்த்திரேலியன் என்றாகிவிடுவார்களே (தாயகத்தில் இருப்பவர்கள் அநேகர் சிங்களவர்களாகவும் மாறி விடுவார்களே!)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1) சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.

2) பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர் , அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.

3) பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick , tshick என்று சத்தம் வர எடுப்பார்கள்.

4) விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.

5) Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.

6) தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்.

7) குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.

8) தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட( rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)

9) பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.

10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.

11) வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

12) காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.

13) புதிதாக வாங்கிய பொருட்களை ( remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.

14) தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள்.

15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.

16) நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.

17) தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.

18) தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours) எடுப்பார்கள்.

19) பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.

20) இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.

21) வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.

22) சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல ( sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.

23) திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.

24) திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்

25) எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.

இதில இருக்கிற பல விசயங்கள் பொருந்துதா?????????????? அவை கட்டாயம் தமிழாக்கள் :unsure::unsure::(

மேல இருக்கிறது மெயிலில வந்தது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மொழி பேசும் தாய் தந்தையருக்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன்

அது எந்த நாட்டில் பிறந்தாலும் சரி எந்த நாட்டு பிரஜாவுரிமை எடுத்தாலும் சரி அல்லது எந்த மொழி பேசினாலும் இனம் என்ற அடிப்படையில் தாய்,தந்தை எந்த இனமோ அதுவே பிள்ளைகளைச்சேரும் உதாரணத்திற்கு உலகம் முழுவதும் வாழும் யூத இனம்.

  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்குட்டி பூனைக்குட்டிதான்..! :lol: :lol: :lol:

மருண்டவன் கண்ணிற்கு இருண்டவன் எல்லாம் தமிழன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிஞர்கள் பெரியோர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

ஒரு கருத்துக் களத்திற்கு வந்த ஒருவன் தெளிவு பெறவேண்டும். ஆனால் நான் தமிழ்க் களத்தை சுற்றிப் பார்த்து பலரது கருத்துக்களையும் வாசித்த பின் குழம்பிப் போய் நிற்கிறேன். என்னடா அடிமடியிலேயே கை வைக்கிறானே என்று யோசிக்காதிங்கோ. தெளிவு பெறத்தான் கேட்கிறேன்.

தமிழன் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்களை பட்டியலிடுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக தங்களின் யாழ்கள பழைய தமிழ் பேர் எது என்று சொல்ல முடியுமா? தமிழன் என்ற துணிவுடன் :lol::lol:

நீங்கள் யாழ் களத்தில் புதிதாக மறுபிரவேசம் செய்தது மார்கழி 2007 என்று காட்டுகினறது? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரலின் துணைவியாரும் அவுஸ்திரெலியா மண்ணில் பிறந்த மதிப்புக்குரிய அடல் பாலசிங்கம் அவர்களும் தமிழர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நல்லா தமிழ் எழுதுறேனே....... ஏனுங்க நானும் தழிழனாங்க???????

"தன்னிலை தாழதவனும் அந்நிலை தழுமிடத்து........

உயிர் வாழதவனும் தமிழன் எனப்படுவான்"

  • தொடங்கியவர்

தமிழ் தெரியாத தமிழரின் வழித்தோன்றல்கள் தமிழர்களாக இருக்கமுடியாதா? அப்படிப் பார்த்தால் இன்னும் 50 வருடங்களில் புலம் பெயர்ந்த பலர் அமெரிக்கன், கனடியன், பிரித்தானியன், பிரஞ்சுக்காரன், ஜேர்மானியன், இத்தாலியன், ஒல்லாந்தன், சுவிஸ்காரன், ஸ்கண்டிநேவியன், அவுஸ்த்திரேலியன் என்றாகிவிடுவார்களே (தாயகத்தில் இருப்பவர்கள் அநேகர் சிங்களவர்களாகவும் மாறி விடுவார்களே!)

நீங்கள் பயப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் அதுதான் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பயங்கரம். தமிழ் பேசத் தெரியாதது மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரமே தெரியாத சந்ததி (பிள்ளை, பிள்ளைக்கு பிள்ளை)வேறுவேறு நாடுகளில் வேறுவேறு பிரஜாவுரிமையுடன் உருவாகும். இவர்களும் தமிழர்களா?? தமிழன் என்ற என்ன அடையாளம் இவர்களிடம் இருக்கும். இந்நிலையைத் தடுக்க என்ன செய்யலாம்.????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினவுதலில் இருவகையுண்டு.

1. அறிதலை நோக்கிய வினா?

2. அறிதலை மறுதலுத்தவாறாக ஏதாயினும் கேட்கவேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் வினா?

தங்களது நிலை எவ்வகையானது?

தலைவரது இவ்வாண்டு மாவீரர் உரை உலகத்தின் மண்டையில் ஓங்கிக் குட்டியிருக்கிறது.

"பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம்."

தங்களுக்கெழும் கேள்விக்கான பதிலாகவும் மேற்கண்ட கூற்று அமைகிறது.

தலைவரது உரை தமிழரை இவ்வாறு அடையாளப்படுத்தியிருக்கிறது.

"நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம்; மிகவும் தொன்மை வாய்ந்த இனம்; தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம்."

:D

  • தொடங்கியவர்

மேல இருக்கிறது மெயிலில வந்தது.....

நன்றி பூனைக்குட்டி. அருமையான பதில்கள். தமிழ் பண்பாடு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஒருவர் ஆங்கிலத்திலே பேசினால்கூட அவரின் நடத்தைகள் காட்டிக் கொடுத்து விடும் அவர் தமிழர் என்று.

  • தொடங்கியவர்

தமிழ் மொழி பேசும் தாய் தந்தையருக்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன்

அது எந்த நாட்டில் பிறந்தாலும் சரி எந்த நாட்டு பிரஜாவுரிமை எடுத்தாலும் சரி அல்லது எந்த மொழி பேசினாலும் இனம் என்ற அடிப்படையில் தாய்,தந்தை எந்த இனமோ அதுவே பிள்ளைகளைச்சேரும் உதாரணத்திற்கு உலகம் முழுவதும் வாழும் யூத இனம்.

நன்றி குமாரசாமி அண்ணா.

உங்கள் பதிலை நான் இப்படி விளங்கிக் கொள்கிறேன். ஒருவர் என்ன மொழி பேசுகிறார் என்பது முக்கியமல்ல. அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் முக்கியம். சரியா??

இது சரியாயின் எனக்கு மேலும் இரண்டு சந்தேகங்கள் எழுகின்றனவே.

1. ஒரு தனியான இனம் என்ற வரையறைக்குள் அவர்களின் பேசும் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்றவைதானே அவர்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி நிற்கின்றன.???

2. யூத இனம் வேறு இனத்தவர்களுடன் கலக்க விரும்பாத இனம். ஆனால் நாம் அப்படி இல்லையே??? தமிழ் பெண்கள் கூட சாதாரணமாக வேற்று மொழிக்காரரை திருமணம் செய்யும் காலமிது. அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தமிழரா??????

  • தொடங்கியவர்

எல்லாவற்றுக்கும் மேலாக தங்களின் யாழ்கள பழைய தமிழ் பேர் எது என்று சொல்ல முடியுமா? தமிழன் என்ற துணிவுடன் :D:D

நீங்கள் யாழ் களத்தில் புதிதாக மறுபிரவேசம் செய்தது மார்கழி 2007 என்று காட்டுகினறது? :D

தமிழன் என்ற துணிவுடன்?????

அது இருந்திருந்தா நாமெல்லாம் நாட்டில இருந்திருப்போம். போராடி இருந்திருப்போம். மாவீரராகி இருப்போம்.

வெளிநாட்டில வந்து ஒளிச்சிருந்து கொண்டு துணிவைப் பற்றி எழுதத்தான் நாங்க லாயக்கு. இல்லையா தமிழினக்ஸ். சரியா உங்கள் பெயர்.???

ஆமாம். அவதாரம் அம்மா அப்பா வைச்ச பெயர் இல்லை. நானாக வைத்த பெயர்தான். எனக்கு இன்னுமொரு பெயரும் இருக்கு.. ஆனா அதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் சம்பந்தம் இல்லாதபடியா அதை விடுவம்.

  • தொடங்கியவர்

தேசத்தின் குரலின் துணைவியாரும் அவுஸ்திரெலியா மண்ணில் பிறந்த மதிப்புக்குரிய அடல் பாலசிங்கம் அவர்களும் தமிழர்தான்.

நன்றி கந்தப்பு

உங்கள் கருத்து ஒரு தமிழ் மகனையோ அல்லது தமிழ் மகளையோ திருமணம் செய்தவர்களும் தமிழர்கள் என்பதா??

அல்லது தமிழ் மண்ணிற்காக தமிழ் மண்ணிலே பாடுபட்ட அடேல் அன்ரிக்கு மட்டும் அப்படி ஒரு கெளரவம் கொடுக்கின்றீர்களா???

"தன்னிலை தாழதவனும் அந்நிலை தழுமிடத்து........

உயிர் வாழதவனும் தமிழன் எனப்படுவான்"

தமிழன் எல்லோரும் மானமுள்ளவர்கள் என்கிறீர்கள். மானமிழந்த தமிழன் உயிர் வாழமாட்டான் என்கிறீர்கள். இக்கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது.

  • தொடங்கியவர்

வினவுதலில் இருவகையுண்டு.

1. அறிதலை நோக்கிய வினா?

2. அறிதலை மறுதலுத்தவாறாக ஏதாயினும் கேட்கவேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் வினா?

தங்களது நிலை எவ்வகையானது?

தலைவரது இவ்வாண்டு மாவீரர் உரை உலகத்தின் மண்டையில் ஓங்கிக் குட்டியிருக்கிறது.

"பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம்."

தங்களுக்கெழும் கேள்விக்கான பதிலாகவும் மேற்கண்ட கூற்று அமைகிறது.

தலைவரது உரை தமிழரை இவ்வாறு அடையாளப்படுத்தியிருக்கிறது.

"நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம்; மிகவும் தொன்மை வாய்ந்த இனம்; தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம்."

:D

நன்றி சுழியன்.

ஆசிரியர் மாணாக்கனைப் பார்த்து கேள்வி கேட்பார். அக் கேள்வி எவ்வகையானது??? ஆசிரியருக்கு விடை தெரியாதென்பதல்ல. மாணவன் சரியாக விளங்கிக் கொண்டுள்ளானா என்று தெரிந்து கொள்வதே அது. பிழையாக விளங்கியிருந்தால் மறுதலிப்பது தப்புமில்லை. ஒரு கருத்துக்களத்தின் பயன்பாடும் அதுதானே.

நான் உங்கள் கருத்தைத்தான் கேட்டிருந்தேன். தேசியத் தலைவரின் கருத்தையல்ல. அது நானும் அறிந்ததுதான்.

தமிழர் பற்றி கீழுள்ள இணைப்பில் சில குறிப்புகள் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ளது .

http://www.multiculturalcanada.ca/ecp/content/tamils.html

Edited by sukan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் என்ற துணிவுடன்?????

அது இருந்திருந்தா நாமெல்லாம் நாட்டில இருந்திருப்போம். போராடி இருந்திருப்போம். மாவீரராகி இருப்போம்.

வெளிநாட்டில வந்து ஒளிச்சிருந்து கொண்டு துணிவைப் பற்றி எழுதத்தான் நாங்க லாயக்கு. இல்லையா தமிழினக்ஸ். சரியா உங்கள் பெயர்.???

ஆமாம். அவதாரம் அம்மா அப்பா வைச்ச பெயர் இல்லை. நானாக வைத்த பெயர்தான். எனக்கு இன்னுமொரு பெயரும் இருக்கு.. ஆனா அதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் சம்பந்தம் இல்லாதபடியா அதை விடுவம்.

தமிழன் என்ற துணிவுடன்?????

அது இருந்திருந்தா நாமெல்லாம் நாட்டில இருந்திருப்போம். போராடி இருந்திருப்போம். மாவீரராகி இருப்போம்.

ஓம் அண்ணோய் இந்த டயலாக்க சுப்பரா பேசுரவங்க எல்லாம் தமிழீழ தேசியத்துக்கு எதிரானவங்க தான்.

ஏன் என்றால் புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழரின் ஆதரவால் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் ்விமானப் படையே வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்திருகின்றார்கள்.

புலம் பெயர் தமிழர்கள் இல்லாவிட்டால் இப்பவும் ஆறு குண்டு போட்ட பிஸ்டலுடன் வில்லும் அம்பும் சேர்த்து தான் போராடவேண்டி இருக்கும் :D

வெளிநாட்டில வந்து ஒளிச்சிருந்து கொண்டு துணிவைப் பற்றி எழுதத்தான் நாங்க லாயக்கு. இல்லையா தமிழினக்ஸ். சரியா உங்கள் பெயர்.???

தமிழ்லினேக்ஸ் இதற்கு தமிழ் அகராதியில் சொல் இல்லை

ஆமாம். அவதாரம் அம்மா அப்பா வைச்ச பெயர் இல்லை. நானாக வைத்த பெயர்தான். எனக்கு இன்னுமொரு பெயரும் இருக்கு.. ஆனா அதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் சம்பந்தம் இல்லாதபடியா அதை விடுவம்.

எதற்காக வேறு வேறு பெயர்களில் எழுதவேண்டும்?? இது மோகனின் தப்பு.

Edited by tamillinux

1) சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.

2) பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர் , அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.

............

:lol::o:):(:lol::lol:

சத்தியமா நான்தாங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.