Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா இந்தியாவுக்கு அவசர விஜயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா இந்தியாவுக்கு அவசர விஜயம்.

01.03.2008 / நிருபர் சங்கிலியன்

சிறிலங்காப் படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அவசர விஜயமாக நாளை இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.

ஒருவார காலம் அங்கு தங்கியிருக்கும் அவர் சிறிலங்கா இந்திய இராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி மிக உயர்மட்ட இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் சந்தித்துப் பேசுவார் என்றும் அதனைத் தொடர்ந்து முக்கிய விடயங்கள் குறித்து பல தரப்பினருடனும் கலந்துரையாடி இந்தியாவின் இராணுவ உதவியையும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், வழிமுறைகளை ஆராய்வார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்தது.

சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவரின் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படவில்லை.

புதுடில்லியிலுள்ள ""இன்டியா கேற்'' வளாகத்தில் படைவீரர் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்துவார். அதன் பின்னர் அவருக்கு இந்திய இராணுவத்தின் கேந்திர மையங்களில் ஒன்றான, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான ""சவுத் புளொக்'' இல் இராணுவ அணிவகுப்பு மரி யாதை வழங்கப்படும் என்றும் அவ் இணையத்தள செய்தி தெரிவிக்கிறது.

http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

தற்போதைய காங்கிரஸ் ஆட்சி தமிழர்களுக்கு ஒரு சாபக்கேடாக மாறிவருகிறது.

இந்த காங்கிரஸ் ஆட்சியே உருவாக்கிய 13ம் திருத்தத்தில் உள்ள வடக்கு கிழக்கு இணைப்பை அமுல்படுத்தக் கூட சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க கையாலாகாத காங்கிரஸ் ஆட்சிக்கு ஜனநாயக விரோத சிறீலங்கா அரசுக்கு இராணுவ உதவிகள் செய்வதென்றால் தேனாய் இனிக்கிறது!!!

Edited by vettri-vel

புதிதாக வந்த பல தொகுதி ஆயுதங்களின் அகோரம் தாங்க முடியாமல் ஓடிப் போகிறார் போல கிடக்கு எங்களைக் காப்பாற்றுங்கோ எண்டு காலில விழ.

அடுத்து யாழ்பாணத்துக்கு தான் அடி எண்டு மனுசனுக்கு விளங்கீட்டுது போல :)

தப்பி ஓடுறதுக்கு கப்பல் தாருங்கோ எண்டு கேக்கப் போறாரோ? <_<

இந்த முறை உவங்கள் ஒருவரையும் விடக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நகத்தால உரிக்கிற பனங்கிழங்கை ஆப்படிச்சுப் பிளந்தானாம் எண்டு ஒரு பழமொழி இருக்குது. இந்திய மத்திய அரசு அறிஞர்களும் இலங்கை ஆட்களும் தலையப் பிச்சுக் கொண்டு அங்கையும் இங்கையுமா ஓடித்திரியினம். ராணுவத்தளபதிக்கு ஒண்டும் ஓடுதில்ல. காலக்கெடுவும் முடியுது. ஏதோ பண்ணலாமெண்டு பார்க்கிறார். அங்கபோய் ராணுவ மரியாதையப் பெற்றுக்கொண்டு வரப்போறார். பேசாமல் உது சரிவராது போல கிடக்குது பேச்சு வார்த்தையத் தொடங்கிற வழியப் பாருங்கோ எண்டு சொல்லுறத விட்டுப்போட்டு தான் ஒரு சிறந்த தளபதியா பென்சனில போகோணும் எண்டு ஒத்தைக்காலில நிக்கிறார். அவர் பென்சனில போகப்போறாரா அல்லது பென்சன் எடுக்காமலே போகப்போறாரா எண்டிறது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

30 ஆயிரம் எறிகணைகள் வாங்கியாச்சு 20 கன்டேனர் ஆர்ப்பீஜி வாங்கியாச்சு பழைய பாவிக்காத சாமான்கள் வேறு ஏதும் இருந்தா தாங்கோ என்று கேட்கப்போறாரோ

25 மீனவருக்கு பதிலா 21 மீனவரை மாறி மாறி கைது செய்து இருக்கினமே, இது முறுகல் நிலை அடையாமல் இருக்க சமாதானத்துக்காக இருக்கலாம்..

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் புதுடில்லிக்கு ஆறு நாள் பயணமாக செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ராணுவத்தளபதியையும் இந்தியா இப்ப அரசியல்வாதியா, மக்கள் தலைவராத்தான் பார்க்குது. அவருடைய கையிலதான் முழுப் பவறும் இருக்குதெண்டு நினைச்சி இந்த நேரத்தில அவரைத் தாஜா பண்ண முயற்சிக்குது. இது எங்கபோய் முடியப்போகுதோ தெரியாது. பாகிஸ்தானப் போல நிலைமை இலங்கையிலயும் வந்திற்றுது எண்டதுக்கான துர்ச்சகுனம் இது.

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக வந்த பல தொகுதி ஆயுதங்களின் அகோரம் தாங்க முடியாமல் ஓடிப் போகிறார் போல கிடக்கு எங்களைக் காப்பாற்றுங்கோ எண்டு காலில விழ.

அடுத்து யாழ்பாணத்துக்கு தான் அடி எண்டு மனுசனுக்கு விளங்கீட்டுது போல :)

தப்பி ஓடுறதுக்கு கப்பல் தாருங்கோ எண்டு கேக்கப் போறாரோ? <_<

இந்த முறை உவங்கள் ஒருவரையும் விடக் கூடாது.

இல்லாட்டி சாத்திரி யாரையும் பார்த்து எப்ப கிளி நொச்சியில் கொடியேற்றலாம் எண்டு கேட்க போட்டாராம்._roflcopter__by_darkmoon3636.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டளைப்பீடம் அங்குதான் இருக்கிறதோ?

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் பதவிக்காலம் முடியமுன்னர் 9 பாதையால் யாழ்ப்பாணம் போக ஆசைப்படுது.. இந்தியா பின்வளமாக செய்கிற உதவியை இன்னும் கூட்டினால்தான் ஆசை நிறைவேறும். இல்லாட்டி முந்தின தளபதிகள் மாதிரி தூதரகங்களில் வேலை செய்யவெல்லே வேண்டி வந்திடும்!

எஸ்கீயூஸ் மீ நேக்கு ஒரு டவுட் <_< சரத்பொன்சேகா மாமாவிற்கு அவசரமா வந்தா.. :D (ஏன் இந்தியாவிற்கு போக வேண்டும் :) )..சிறிலங்காவில போக ஏலாதா... :wub: (இல்லை சரத் பென்சேகா மாமாவிற்கு போக பயமோ :wub: )...என்ன கொடுமை இது..இதற்காக எல்லாம் இந்தியாவிற்கு போவாங்களா... :wub:

அப்ப நான் வரட்டா!!

உள்ளுக்கை இருந்தாலும் வெடிக்குது வெளியில போனாலும் வெடிக்குது. புலி கணை எண்டு வெடிக்குது புண்ணாக்கு கணை எண்டு வெடிக்குது வெடி கணை எண்டு வெடிக்குது வெங்காய கணை எண்டு வெடிக்குது பல்குழல் ஏவுகணை எண்டு வெடிக்குது. 600 கிலோவில வெடிக்குது 1200 கிலோ மீற்றரிற்கு அங்காலை போயும் வெடிக்குது. இவளவு அமளிதுமளிக்குள்ளை அவர் என்னெண்டு வந்தா போறது. :)

அது தான் கஸ்மீர் பக்கமாக தூரத்தில போய் இருக்க போயிட்டாராம் நிம்மதியா. உந்த விதம் விதமான வெடிகளை கேட்டா...

எக்ஸ்கியூஸ்மி நோக்கும் வருகுது அப்ப நான் வரட்டா <_<

இந்தியாவில் இந்த வருட மார்கழி மாத அளவில் ஒரு பொதுத்தேர்தல் வரும் சாத்தியம் இருப்பதால் , அடுத்த சில மாதங்களுக்குள் செய்யக்கூடிய இராணுவ உதவிகள் எல்லாம் செய்தாகவேண்டும்.

அப்படி மார்கழியில் பொதுத்தேர்தல் வரும் பட்சத்தில், ஜூன், ஜூலை மாதங்களுக்குப் பின், தமிழகத்தின் வாக்கு வங்கியை பாதிக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் காங்கிரஸ் ஆட்சி எடுக்கப் போவதில்லை. ஆகவே அடுத்த சில மாதங்களில் அவசர அவசரமாக சில இரகசிய இராணுவ உதவிகள் அளிக்கப்படலாம். அது பற்றி பேச சரத் பொன்சேகா அழைக்கப்பட்டு இருக்கலாம்

வடமாநிலங்களில் காங்கிரஸ் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள் சமீபத்திய சரிவுகள் தமிழக வாக்கு வங்கியின் முக்கியத்துவத்தை மேலும் கூட்டியுள்ளது.

திரு.சிதம்பரத்தின் நேற்றைய வரவுசெலவுத் திட்ட அறிக்கையும் தேர்தல் வரவுசெலவு திட்ட அறிக்கை போலவே உள்ளது

உள்ளுக்கை இருந்தாலும் வெடிக்குது வெளியில போனாலும் வெடிக்குது. புலி கணை எண்டு வெடிக்குது புண்ணாக்கு கணை எண்டு வெடிக்குது வெடி கணை எண்டு வெடிக்குது வெங்காய கணை எண்டு வெடிக்குது பல்குழல் ஏவுகணை எண்டு வெடிக்குது. 600 கிலோவில வெடிக்குது 1200 கிலோ மீற்றரிற்கு அங்காலை போயும் வெடிக்குது. இவளவு அமளிதுமளிக்குள்ளை அவர் என்னெண்டு வந்தா போறது. :wub:

அது தான் கஸ்மீர் பக்கமாக தூரத்தில போய் இருக்க போயிட்டாராம் நிம்மதியா. உந்த விதம் விதமான வெடிகளை கேட்டா...

எக்ஸ்கியூஸ்மி நோக்கும் வருகுது அப்ப நான் வரட்டா :)

ம்ம்ம்....பாவம் மனிசன்..இத்தனை பிரச்சினையா அவருக்கு... :o (இதுக்கு கூட சுகந்திரமா போக ஏலாட்டி ஒரு மனிசன் இருந்து தான் என்ன :D )...கஷ்மீரையிலாவது மனிசன் நிம்மதியா போயிட்டு வரட்டும் :wub: ...அது சரி உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை தானே குறுக்ஸ் அண்ணே :( ...(அது தான் யாரும் வெடி வைக்க மாட்டீனம் தானே <_< )...அப்ப நிம்மதியா போயிட்டு வாங்கோ... :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சி‌றில‌ங்கா ராணுவ‌த் தளப‌தி இ‌ந்‌தியா வருகை!

சனி, 1 மார்ச் 2008( 20:08 IST )

‌சி‌றில‌ங்கா ராணுவ‌த் தள‌ப‌தி சர‌த் பொ‌ன்சேகா ஆறு நா‌ள் பயணமாக நாளை இ‌ந்‌தியா வரு‌கிறா‌ர்.

இ‌ந்த‌‌ப் பயண‌த்‌தி‌ன் போது இ‌ந்‌‌திய ராணுவ‌த்‌தி‌ன் உய‌ர் அ‌திகா‌ரிகளை‌ச் ச‌‌ந்‌தி‌க்கவு‌ள்ள சர‌த் பொ‌ன்சேகா, இல‌ங்கை ‌நிலவர‌ம் குற‌ி‌த்து ‌விள‌க்குவதுட‌ன், இ‌ந்‌தியா‌விட‌ம் இரு‌ந்து ராணுவ‌த் தளவாட‌ங்களை ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ற்கு‌க் கொ‌ள்முத‌ல் செ‌ய்வது ப‌ற்‌றி பே‌ச்சு‌க்களையு‌ம் நட‌த்துவா‌ர்.

தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் நாளை சரத் பொன்சேகாவிற்கு இந்திய ராணுவத்தின் "செளத் ‌பிளா‌க்" ராணுவத் தளத்தில் அணிவகுப்பு மரியாதை வழ‌ங்க‌ப்படு‌கிறது. அதன் பின்னர் இந்தியா கே‌ட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராணுவத்தினரின் சமாதிக்கு சரத் பொன்சேகா ம‌ரியாதை செலுத்தவுள்ளார்.

சரத் பொன்சேகாவின் இந்தியப் பயணம் குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகை‌யி‌ல், தற்போது இந்திய-சிறிலங்கா கடல் எல்லைகளில் இருநாட்டுக் கடற்படையினரும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் நடவடி‌க்கைக‌ள் குறித்த புலனாய்வுத் தகவல்களும் பரிமாறப்படுகின்றன என்றார் எ‌ன்று பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

மேலு‌ம், "விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் சிறிலங்க ராணுவத்தினர் ‌பி‌ன்த‌ங்குவதை இ‌ந்‌தியா விரும்பவில்லை. இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அதனா‌ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக‌‌ளி‌ல் ம‌ந்த‌ம் ஏ‌ற்ப‌ட‌க் கூடாது" எ‌ன்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webulagam.com

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி 2005 என்று பெயர்வைத்துப்பார்த்தாலும்

அது விழும்போது அமைதியாயிருக்கமுடியல

அது அமைதித்தொகுதி அம்மாவை பார்க்க போயிருப்பார்

அதுதான்அது அமைதித்தொகுதி அம்மாவை பார்க்க போயிருப்பார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எஸ்கீயூஸ் மீ நேக்கு ஒரு டவுட் <_< சரத்பொன்சேகா மாமாவிற்கு அவசரமா வந்தா.. :D (ஏன் இந்தியாவிற்கு போக வேண்டும் :) )..சிறிலங்காவில போக ஏலாதா... :o (இல்லை சரத் பென்சேகா மாமாவிற்கு போக பயமோ :wub: )...என்ன கொடுமை இது..இதற்காக எல்லாம் இந்தியாவிற்கு போவாங்களா... :wub:

அப்ப நான் வரட்டா!!

யமுனாவுக்கு அடிக்கடி டவுட்தான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

காட்டாறு:

கட்டளைப்பீடம் அங்குதான் இருக்கிறதோ?

சந்தேகம் வேண்டாம்.

இங்கே போவதற்கு முடியாவிட்டால் அங்கேதான் போக வேண்டும். அது சரி அவர் போவதற்கான நிகழ்ச்சி நிரலை வெளியிடவில்லையாமே. <_<

1 இக்கு போறது 2 போறது காலில விழுந்து கெஞ்சிறது மண்டாடுறதுகளை என்னெண்டு நிகழ்ச்சி நிரலில போடுறது எண்டு தான் விட்டுட்டாங்கள் போல கிடக்கு. ஆனா உந்த மோட்டுச் சிங்களவங்களிற்கு நாங்கள் இரை மீட்க அந்தமாதிரி நிகழ்ச்சி நிரல் தயாரிப்பம் எண்ட விசையம் தெரியாது.

ஓமோம் இரை மீட்க்கிறதுக்காகததான் கிளிநொச்சி வெற்றி, முல்லைதீவு வெற்றி , ஆனையிறவு வெற்றிஎண்டு வருசம் வருசம் வன்னியிலை விழா நடாத்துறவை....!

அந்த கோதாரிகளை புலம் பெயந்த செம்மறியள் பாத்து தேவை இல்லாமல் அங்கலாய்க்குதுகள்...

Edited by தயா

எங்களுக்கென்று கொண்டாடுவதற்கு ஒரு இடம் இருக்கிறது. அதைப்பார்த்து மகிழத்தான் வேண்டும். அதை இல்லாமல் செய்வதற்குத்தான் இவர்கள் ஓடுப்பட்டுத் திரிகிறார்கள். அங்கலாய்ப்பது அந்தச் செம்மறிகள்தான்

முடிவுகள் அனைத்தையும் வெளிப்படுத்தும்.

யமுனாவுக்கு அடிக்கடி டவுட்தான் :D

கறுப்பி அக்கா அப்ப தான் நானும் பெரிய ஆள் :unsure: ஆகி நெடுக்ஸ் தாத்தா மாதிரி "நோபல்" பரிசு எல்லாம் வாங்க ஏலும்... :D (இப்படி கேட்டு போட்டியள் நேக்கு அழுகை அழுகையா வருது :D )..நான் நோபல் பரிசு வாங்கக்க கண்டிப்பா கறுப்பி அக்கா வர வேண்டும் சொல்லிட்டேன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

இங்கே போவதற்கு முடியாவிட்டால் அங்கேதான் போக வேண்டும். அது சரி அவர் போவதற்கான நிகழ்ச்சி நிரலை வெளியிடவில்லையாமே.

ம்ம்ம்...இறைவன் மாமா இங்கே போக ஏலாட்டி அங்கே தான் போக வேண்டும் அது சரி... :D (இதற்கு எல்லாமா நிகழ்ச்சி நிரல் வெளியிடுவார்கள் இது என்னடா கொடுமை :D )...என்னால முடியல..என்னென்னதிற்கு நிகழ்ச்சி நிரல் வெளியிடுறது என்று விவஸ்தையே இல்லையா.. :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.