Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சைச் சுடுகுது அண்ணா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20080521005.jpg

நெஞ்சைத் தொடுகுது அண்ணா

உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது

நெஞ்சைச் சுடுகுது அண்ணா

உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

ஆனையிறவின் நாயகனே

வன்னிவிக்கிரமவில் புயலவனே..!

தீரத்தின் விளைநிலமே

வன்னியின் செல்வ மைந்தனே..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா

உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது

நெஞ்சைச் சுடுகுது அண்ணா

உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

தமிழர் சேனைத் தலைவனின்

வீரத் தளபதியே

தலைவன் செய்திகள் சேருமுன்

சாதிக்கத் துடித்தவனே..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா

உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது

நெஞ்சைச் சுடுகுது அண்ணா

உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

கூவி வந்த யாழ்தேவி

புரட்டி விட்டவனே

திமிரெடுத்து வந்த சிங்களத்தின்

கதை முடித்தவனே..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா

உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது

நெஞ்சைச் சுடுகுது அண்ணா

உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

சாதனைகள் உன்

சட்டைப் பை ரகசியங்கள்.

சோதனைகள் உன்முன்

பட்டன வேதனைகள்.

நெஞ்சைத் தொடுகுது அண்ணா

உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது

நெஞ்சைச் சுடுகுது அண்ணா

உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

ஈழக்கனவில் நாம்

நித்தம் அழுகிறோம்..

நீயும் ஏன் அண்ணா

மரணத்தை அணைத்தெம்மை

அழ வைத்தாய்..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா

உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது

நெஞ்சைச் சுடுகுது அண்ணா

உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

விடிவதற்குள் ஏனிந்த அவசரம்

விடிந்த பின்னும்

நிச்சயம்

தமிழரெம் இதயமெங்கும்

உன் பெயர் ஒலிக்கும்..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா

உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது

நெஞ்சைச் சுடுகுது அண்ணா

உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

எப்படி மனம்வந்தது இப்படி

அண்ணனை தனியே விட்டுப்போவதற்கு

எப்படியெல்லாம் கனவுகண்டவன் நீ

எம் ஈழத்தைவெல்வதற்கு

பால்ராஜ் பக்கம்இருக்கிறான் என்று

அண்ணன் பாசத்துடன் சொல்வாரே

அண்ணனுக்கு என்னசொன்னாய்?

அவர் நம்பிக்கையை ஏன் தகர்த்தாய்?

என்னும்கொஞ்சக்காலம் தான்

ஈழம் கிடைத்துவிடும் என்றிருந்தோம்

எம் கனவுகளை கலைத்துவிட்டு

அதற்குள் எங்குசென்றாய்?

:(:( எதை சொல்ல
  • கருத்துக்கள உறவுகள்

விடிவதற்குள் ஏனிந்த அவசரம்

விடிந்த பின்னும்

நிச்சயம்

தமிழரெம் இதயமெங்கும்

உன் பெயர் ஒலிக்கும்..!

ஆமாம் நெடுக்ஸ். தமிழர் இதயங்களில் நிச்சயமாக பால்ராஜ் அண்ணாவுக்கு ஒரு தனி இடமுண்டு.

பால்ராஜ் அண்ணா மீளாதுயில் கொண்ட செய்தி கேட்டதிலிருந்து நெஞ்சம் கனக்கிறது...இந்த கவி வரிகளை வாசிக்கும் போது சுடுகிறது நெஞ்சம்.. :(

நம் நெஞ்சம் நிமிர

விழி மூடவில்லை

விடியும் வரை

நீங்கள்..!!

விடை தெரிவதற்குள்

எம்மை விட்டு விடை பெற்றது

தான் ஏனோ?? :wub:

நாளைய விடியலின் விழியில்

உங்கள் விழியும் தெரியும்

எம்மவர் விழியிலும் விழும்

உங்கள் விம்பம்..

விழியை மூடி விட்டீர்கள்

ஆனால் நீங்கள் உறங்கபோவதில்லை

என்பது தான் நிஜம்..

களம் பல கண்டு விழிகளை மட்டும் மூடியிருக்கும் எங்கள் தளபதி பால்ராஜ் அண்ணாவிற்கு என்னுடைய கண்ணீரஞ்சலிகள்.. :wub:

funeralwreathgreenwhitern9.jpg

பால்ராஜ் அண்ணாவிற்கு இதய அஞ்சலிகள்..

கூவி வந்த யாழ்தேவி

புரட்டி விட்டவனே

நெடுக்காலபோவான்.. எனக்கு இது விளங்கவில்லை. இப்படி எழுதியதன் அர்த்தம் என்ன எண்டு சொல்லமுடியுமா? நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பால்ராஜ் அண்ணாவிற்கு இதய அஞ்சலிகள்..

நெடுக்காலபோவான்.. எனக்கு இது விளங்கவில்லை. இப்படி எழுதியதன் அர்த்தம் என்ன எண்டு சொல்லமுடியுமா? நன்றி!

யாழ் குடாநாட்டைக் கைப்பற்ற என்றும் ஆகாயக் கடல் வெளிச்சமரின் பின் ஆனையிறவின் பாதுகாப்பை அதிகரிக்க என்றும் யாழ் தேவி என்ற படை நடவடிக்கையை 90களின் ஆரம்பத்தில் ஐ தே க அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதற்கு கிளாலியில் வைத்து பால்ராஜ் அண்ணன் உட்பட்ட தளபதிகளின் நெறிப்படுத்தலின் கீழ் எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டு அந்தப் படை நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

அதில் பல ராங்கிகள் நாசப்படுத்தப்பட்டன. அதில் ஒன்றுதான் நல்லூர் முத்திரைச்சந்தியில் இருந்த கிட்டு நினைவுப் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறி விளையாடி இருக்கிறேன்..!

யாழ் தேவியை தடம் புரட்டிவிட்ட அந்த சாதனைச் சமரில் பால்ராஜ் அண்ணாவின் பங்களிப்பு முக்கியமானதுடன்.. அச்சமரில் அவர் காலில் காயமடைந்தும் இருந்தார்..!

அன்றைய சூழலில் யாழ் தேவி முறியடிப்பு என்பது முக்கிய அரசியல் - இராணுவ பரிமானத்தைக் கொண்டிருந்தது..!

அதில் 80க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

யாழ் தேவி என்பது கொழுப்பு கோட்டையையும் காங்கேசந்துறையையும் இணைக்கும் சிங்கள அரசின் விரைவு தொடரூந்துக்குரிய நாமமாகும்..! :(

Edited by nedukkalapoovan

நன்றி நெடுக்காலபோவான் விளக்கத்துக்கு. பால்ராஜ் அண்ணாவுக்கு இதில காயம் ஏற்றப்பட்டதாய் சொல்லி இருக்கிறீங்கள். அவருக்கு ஒரு கால் இல்லையோ? இதில அவர் தனது ஒரு காலின் பகுதியை இழந்தாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்காலபோவான் விளக்கத்துக்கு. பால்ராஜ் அண்ணாவுக்கு இதில காயம் ஏற்றப்பட்டதாய் சொல்லி இருக்கிறீங்கள். அவருக்கு ஒரு கால் இல்லையோ? இதில அவர் தனது ஒரு காலின் பகுதியை இழந்தாரோ?

நான் அப்போதும் செவி வழி அறிந்திருந்தேன். தற்போது செய்திகளில் அவர் காயப்பட்டதை தெரிவித்திருக்கிறார்கள். அதனடிப்படையில் தெரிவித்திருந்தேன். காயங்களின் தன்மை பற்றி நான் கேள்விப்பட்டதையெல்லாம் வெளியிடுவது சரியான நடவடிக்கையல்ல. நாம் ஆயிரம் கதைகளைக் கேள்விப்படலாம். உண்மை அந்தப் போராளிகளுக்கே தெரியும். அவர்களின் வலியிலும் வேதனையிலும் கொஞ்சம் கூட பங்கெடுத்திராத நமக்கேன் அவற்றை..!

நான் எனது பாடசாலை சார்ந்து போராளிகளை வைத்தியசாலையில் பராமரிக்கும் பணியை செய்திருக்கிறேன். அப்போ பல கதைகள் செவி வழி வரும். அதில் உண்மை பொய் தெரிந்து கொள்வது சிரமமானது. கேட்கும் கதைகளில் மறைக்க வேண்டியவற்றை நான் என் பெற்றோருக்கே சொல்வதில்லை..! எனது தேசத்தினை நேசித்தவர்கள் எவ்வளவு மன உறுதியோடு தேசத்துக்காய் போராடியவர்கள் பற்றி ரகசியம் காத்தார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாதனைகள் உன்

சட்டைப் பை ரகசியங்கள்.

சோதனைகள் உன்முன்

பட்டன வேதனைகள்.

உண்மை வரிகள் தமிழீழத் தளபதிகளில் கிட்டு ராதா விற்கு பிறகு நான் உண்மையில் உடைந்து போனது பால்ராஜ்சின் இழப்புத்தான்.அதற்காக மற்வர்களின் இழப்புக்கள் சாதாரமானவை என்று சொல்லவரவில்லை இவர்களின் தாக்குதல் கட்டளைகளே ஒரு கோழையையும் வீரனாக்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலைபோவான் உங்கள் கவிதைமூலம் தமிழினத்தின் சோகத்தையே வெளிப்படுத்தியுள்ளிர்கள்.

அதுமட்டுமன்றி முரளியின் சந்தேகத்திற்கு நிதானமாகவும் விளக்கமளித்துள்ளீர்கள்.

விடுதலை போராட்டத்தின்போது சாதனையும், வேதனையும் கலந்து தான் வரச்செய்யும், இது தான் நிஜம்.

இருப்பினும் நாம் அனுபவரீதியாக சந்திக்கும்போது வேதனையை மனம் ஏற்றுக்கொள்ள தயங்குகின்றது.

அதுவும் நிஜம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சைத் தொடுகுது அண்ணா

உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது

நெஞ்சைச் சுடுகுது அண்ணா

உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

சாதனைகள் உன்

சட்டைப் பை ரகசியங்கள்.

சோதனைகள் உன்முன்

பட்டன வேதனைகள்.

நெஞ்சைத் தொடுகுது அண்ணா

உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது

நெஞ்சைச் சுடுகுது அண்ணா

உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

பால்ராஜ் அண்ணாவின் சாதனைகளை ஈழத்தமிழினம் என்றுமே மறக்க முடியாதது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் அஞ்சலிகள்

உண்மைதான் நெடுக்காலபோவான், நான் கேட்டதன் அர்த்தம் என்ன எண்டால்... இவ்வளவு உடல் உபாதைகளுடனும் இவ்வளவு வேலைகள் செய்து இருக்கிறாரே.. அதைத்தான்.. கால் ஒருபக்கம், இதயம் இன்னொருபக்கம் எண்டு வேதனைகளைக் கொடுக்க எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு ஒரு கட்டளைத் தளபதியாக இருந்தது வெற்றிகரமாக போராளிகளை வழிநடாத்தியது பெரிய ஒரு விசயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பால்ராஜ் அண்ணா நினைவுப் பாடல்...

http://votsong.com/balraj/

  • கருத்துக்கள உறவுகள்

திரு நெடுக்காலபோவருக்கு, சோகம் சந்த அமைதியுள்ள உங்கள் அஞ்சலியைப் பாடுவது தொடர்பாக உங்களுடன் தொடர்புகொள்ள வன்னி மைந்தன் விரும்புகிறார். ***

Edited by இணையவன்
*** உறுப்பினரின் தனிப்பட்ட விபரம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரு நெடுக்காலபோவருக்கு, சோகம் சந்த அமைதியுள்ள உங்கள் அஞ்சலியைப் பாடுவது தொடர்பாக உங்களுடன் தொடர்புகொள்ள வன்னி மைந்தன் விரும்புகிறார். ***

வரிகள் எனக்குச் சொந்தமானவை அல்ல. பால்ராஜ் அண்ணாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. எனவே அதைப் பாடவிரும்புகிறவர்கள்.. தராளமா பாடிக்கொல்லலாம். என் வாய்மொழி அனுமதி தேவையில்லை என்று நினைக்கிறேன்.

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

20080521005.jpg

ஈழக்கனவில் நாம்

நித்தம் அழுகிறோம்..

நீயும் ஏன் அண்ணா

மரணத்தை அணைத்தெம்மை

அழ வைத்தாய்..!

எங்கள் அழுகைகள் துயரங்களுக்கு நிச்சயம் ஒரு விடிவு உண்டு. அதற்காய் பெரும் அணி உங்கள் கொள்கை வழி...

  • கருத்துக்கள உறவுகள்

என் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.