Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவர் எத்தகைய திட்டத்தை தீட்டினாலும் அது எமக்கு தெரியவரும்: சிறிலங்காப் பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எத்தகைய திட்டத்தை தீட்டினாலும் அது எமக்கு தெரியவரும் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

புலிகளின் தலைவர் தீட்டும் திட்டங்கள் அனைத்தையும் எமது புலனாய்வுத்துறையினர் எமக்கு தெரிவித்து வருகின்றனர்.

பிரபாகரன் எத்தகைய திட்டத்தை தீட்டினாலும் அது எமக்கு தெரியவரும். அத்திட்டங்கள் அனைத்தையும் இராணுவ புலனாய்வுத்துறையினர் உன்னிப்புடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.

கோவில் நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களில் பங்கேற்கும் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களைக் கொலை செய்வதற்கு புலிகள் திட்டமிட்டுள்ளனர்.

இத்திருவிழாக்களில் சாதாரண பொதுமக்கள் போன்று அனைத்து சோதனைகளுக்கும் முகம்கொடுக்கும் புலிகள், உள்ளே சென்று பிரமுகர்களின் பாதுகாப்புப் பிரிவினரின் ஆயுதங்களைப் பறித்து அதனைப் பயன்படுத்தி பிரமுகர்களைக் கொலை செய்யும் திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

புலிகளின் இத்திட்டம் குறித்து இராணுவப் புலனாய்வுத்துறையினர் எமக்கு அறியத்தந்துள்ளனர். இதன் மூலம் புலிகளின் திட்டம் அம்பலமாகியுள்ளது.

வடக்கில் இடம்பெறும் படை நடவடிக்கையில் படையினர் விவேகத்துடன் செயற்பட்டு வருகின்றனர். இதுவரை நான்கு இடங்களில் படை நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர் இனிமேல் ஆறு இடங்களில் படை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

சில இடங்களில் புலிகளின் கண்ணிவெடிகள் மற்றும் பொறி வெடிகள் அதிகமாக இருப்பதால் படையினரின் நகர்வுகள் கால தாமதமாகின்றன.

புலிகளுடனான போரை தீவிரமாக்குமாறு சிலர் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர். அவர்களின் கருத்துகளை கேட்டுக்கொண்டு முட்டாள்தனமாக படை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாது.

படையினர் இன்று உளவியல் ரீதியான பாதிப்புக்களுடன் படை நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கும் போது பல இடங்களில் குண்டுகள் வெடிக்கின்றன.

குண்டு வெடிப்பதால் படை நடவடிக்கையை நிறுத்திவிட முடியாது. அரசாங்கம் தனது தாக்குதல்களை தொடரும் என்றார் அவர்

http://www.puthinam.com/full.php?2b3aOSZ4b...2g7dU0cc3ti0Dde

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

படையினர் இன்று உளவியல் ரீதியான பாதிப்புக்களுடன் படை நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கும் போது பல இடங்களில் குண்டுகள் வெடிக்கின்றன.

படையினரின் உளவியல் பாதிக்கப்பட்ட நிலையில் படை நடவடிக்கை என்றால்.. படையை விட்டு ஓடிற நேரம் நெருங்கிக் கொண்டிருக்குது என்று சொல்லுறாரோ. எது எப்படி இருப்பினும் தமிழர்கள் வீச்சுக் கொள்ள வேண்டிய நேரம் இதுவே..! :lol:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எத்தகைய திட்டத்தை தீட்டினாலும் அது எமக்கு தெரியவரும் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடனான போரை தீவிரமாக்குமாறு சிலர் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர். அவர்களின் கருத்துகளை கேட்டுக்கொண்டு முட்டாள்தனமாக படை நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாது.

முட்டாள் தனமாக போனால் என்ன, முட்டால் தனமில்லாமல் போனால் என்ன முடிவு ஒன்றுதானே. அது தான் வாங்கி கட்டுவது. :rolleyes::rolleyes:

கிழம் சும்மா இருக்க ஏலாமை வாயை விடுகுது...

எனக்கென்னவோ செய்திகளை பாக்கேக்கை...சண்டை மேலும் உக்கிரமடையப்போகுது போலத்தான் இருக்கு...

எது எப்படி இருந்தாலும்,பெரும்பாலான சந்தர்ப்பங்களிள சிங்களம் புலிகலின் உத்திகளையே பின்பற்றுவதும் உண்டு...

ஆக.. தரை இறக்கம் ஏதுக்கும் முயற்சி செய்வினமோ???? :rolleyes:

பார்ப்போம் எத்தன நாளைக்கு தான் இந்த கொக்கரிப்பு..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எத்தகைய திட்டத்தை தீட்டினாலும் அது எமக்கு தெரியவரும் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான்

Edited by tamillinux

இது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான்

தலைவர் தீட்டுற போர் திட்டமெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தவிடயமா?

அல்லது

அத்திட்டங்கள் எல்லாம் தமக்கு தெரியவருகிறது எண்டு ரத்தினசிறி சொல்லுறது எல்லாருக்கும் தெரிந்த விடயமா?

சிங்களவருக்கு இவர்தான் இப்ப கதாநாயகன

வாய் பேச்சில மட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவருக்கு இவர்தான் இப்ப கதாநாயகன

வாய் பேச்சில மட்டும்

சிங்களவருக்கு இன்ணும் ஒரு கதாநாயகன் இருந்தவர் ஜெயராஜ் பெனான்டொ .. அவர் இப்ப இந்த உலகதில இல்லை :rolleyes:

சிங்களவருக்கு இன்ணும் ஒரு கதாநாயகன் இருந்தவர் ஜெயராஜ் பெனான்டொ .. அவர் இப்ப இந்த உலகதில இல்லை :rolleyes:

போனவர் கூட்டிற்று போயிருக்க்கலாமே

பாவம் மனுசன் தனிய இருந்து கஸ்ரப்படு்குது

Edited by அகதி

  • கருத்துக்கள உறவுகள்

கிழம் சும்மா இருக்க ஏலாமை வாயை விடுகுது...

எனக்கென்னவோ செய்திகளை பாக்கேக்கை...சண்டை மேலும் உக்கிரமடையப்போகுது போலத்தான் இருக்கு...

எது எப்படி இருந்தாலும்,பெரும்பாலான சந்தர்ப்பங்களிள சிங்களம் புலிகலின் உத்திகளையே பின்பற்றுவதும் உண்டு...

ஆக.. தரை இறக்கம் ஏதுக்கும் முயற்சி செய்வினமோ???? :rolleyes:

தரை இறக்கம் ஏதுக்கும் முயற்சி செய்வினமோ????

எனக்கும் இப்படி பலத்த சந்தேகம் கனநாளாக உண்டு

ஆனால் முன்பு செய்த தரையிறக்கமெல்லாம்

பிறகு திருப்பி ஏற்ற முயற்சித்தும் முடியாமல் அழிஞ்சு போன பாடத்தை மறந்திருப்பினம் என்று நினைக்கிறிங்களே????

எனது புலனாய்வு தகவலும் இதையே சொல்கிறது அதாவது....

புலிகள் இதுவரை வன்னியய விட்டு வேறு எங்கும் அகதி அந்தஸ்து கேக்க முயற்சிக்கவில்லை என்றும் பிள்ளையானிடமும் இதை பற்றி கேக்கவில்லை என்றும் அறிவித்துள்ளார்கள் ஆகவே சிங்களத்துக்கு நல்ல ஒரு அதிரடி இருக்கு என்றும் அரிவித்து உள்ளார்கள்

எனக்கென்னமோ முன்னம் இஞ்ச போட்ட செய்தியின்ர ஞாபகம் வருது... அதுதான் சிங்களப்பெட்டையல் வானத்தில இருந்து குதிக்கிறத

தரை இறக்கம் ஏதுக்கும் முயற்சி செய்வினமோ????

எனக்கும் இப்படி பலத்த சந்தேகம் கனநாளாக உண்டு

ஆனால் முன்பு செய்த தரையிறக்கமெல்லாம்

பிறகு திருப்பி ஏற்ற முயற்சித்தும் முடியாமல் அழிஞ்சு போன பாடத்தை மறந்திருப்பினம் என்று நினைக்கிறிங்களே????

சிங்களம் நிறம்ப விஷயங்களை வலு கெதியா மறக்கிறதாலதான்.. மகிந்த ஆட்சிக்கு வந்தவர்...இன்னும் நிலைக்கிறார்...

Edited by uthayam

  • கருத்துக்கள உறவுகள்

புதிய படையனிகளின் உருவாக்கம் புதிய களமுனைகளின் திறப்பு என்று போர் இன்னும் உக்கிரமைடைய போவதையே காட்டுpகின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவரின் திட்டத்தை அறிந்திருந்தும் ஏன் அனுராதபுரம் தாக்குதலில் கோட்டை விட்ட நீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ரட்ணசிறீயின்ரை கதையை நீங்கள் நகைச்சுவையாக தான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரட்ணசிறீயின்ரை கதையை நீங்கள் நகைச்சுவையாக தான் பார்க்க வேண்டும்.

பொதுவாக சிங்கள அரசின் பேச்சாளர்களை எல்லோரையும் நகைச்சுவையாகத்தான் பார்க்க வேண்டும்.

இப்ப ஆர் இவற்ற கதையை சீரியசா எடுத்தது?...

இப்ப ஆர் இவற்ற கதையை சீரியசா எடுத்தது?...
:lol::unsure:

உங்கள் கருத்துக்களை நானும் ஆமொதிக்கிறேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவரின் திட்டத்தை அறிந்திருந்தும் ஏன் அனுராதபுரம் தாக்குதலில் கோட்டை விட்ட நீங்கள்

கந்தப்பு

நீங்கள் சொல்வது 100ருக்கு 100ருவிதம் உன்மை :lol:

இவங்க எல்ளம் சும்மா வாய் பேச்சிள் மட்டும் தான்

இந்த மாசம் தானே சிறு திவில் தாக்கினவ..அது என் இவவைக்கு முதல் தேரியமள் போனது.. :unsure:

Edited by kuddipaiyan26

புலிகளின் தலைவர் தீட்டும் திட்டங்கள் அனைத்தையும் எமது புலனாய்வுத்துறையினர் எமக்கு தெரிவித்து வருகின்றனர்.

அப்ப கொழும்பில் வெடிக்கிற குண்டுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை எண்டதை ஒத்து கொள்கிறார். அல்லது ஆரசாங்கத்தின் ( தெரிந்துதான்) அனுமதியுடந்தான் குண்டு வெடிக்கிறது என்கிறார்.

Edited by பொய்கை

காலம் தான் சிறந்த பதிலை அவருடைய கருத்துக்கு வழங்கும். :lol:

அப்ப கொழிம்பில் வெடிக்கிற குண்டுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை எண்டதை ஒத்து கொள்கிறார். அல்லது ஆரசாங்கத்தின் ( தெரிந்துதான்) அனுமதியுடந்தான் குண்டு வெடிக்கிறது என்கிறார்.
:lol::unsure::lol:

இருந்தாலும் நீங்கள் இப்பிடி எல்லாம் ''குண்டக்க மன்டக்க'' கேள்வி கேக்கப்படாது பாருங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.