Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முருகன் ஆணா பெண்ணா?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

olymheraee5.jpg

கிரேக்க (தற்போதைய Greece) நாகரிகத்தில் ஒலிம்பஸில் சக்தி மிக்க பெண் கடவுளாக வழிபடபாடு செய்யப்பட்ட கீரா (HERA) எனும் பெண் கடவுள்.

murugan16262553stdzu9.jpg

இந்து நாகரிகத்தில் இந்திய உபகண்டத்தில் சக்தி மிக்க தமிழ் கடவுளாக வழிபாடு செய்யப்பட்ட முருகன் (Murugan) எனும் ஆண் கடவுள்.

இந்திய உபகண்டத்தில் இந்துக்கள் வழிபட்டது போல கிரேக்கர்களும் கடவுள் என்பதை மனித வடிவில் பெண்களாக ஆண்களாக சித்தரித்து வழிபட்டுள்ளனர். இதன் பின்னணிகள் என்ன..??!

source: http://www.kundumani.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உபகண்டத்தில் இந்துக்கள் வழிபட்டது போல கிரேக்கர்களும் கடவுள் என்பதை மனித வடிவில் பெண்களாக ஆண்களாக சித்தரித்து வழிபட்டுள்ளனர். இதன் பின்னணிகள் என்ன..??!

எல்லோருக்கும் விரும்பியோ, விரும்பாமலோ கடவுள் தேவைப்பட்டிருக்கிறார். இன்னும் தேவைப்படுகிறார்!!!

இதன் பின்னணி பற்றி இங்கே ஏற்கனவே பலமுறை பேசி விட்டோம். இந்துக்கள் வணங்குகின்ற பெரும்பாலான கடவுள்களுக்கு ஐரோப்பிய பின்னணி உண்டு.

மத்திய ஆசியாவில் இருந்து இரண்டு பக்கமாக நகர்ந்த மக்கள் கூட்டத்தின் கடவுள்கள் இவைகள். இந்தக் கடவுள்கள் இந்தியாவில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்களிடம் பரப்பப்பட்டன. மண்ணின் மைந்தர்களின் "மதம்" அழிக்கப்பட்டு இவர்களின் கடவுள்கள் பரப்பப்பட்டன.

தமிழர்களின் முருகனும் இதற்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டுப் போனான்.

தமிழர்களிடம் இஸ்லாமும் கிறிஸ்தவமும் பரப்பப்படுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே மத்திய ஆசியா மக்களின் மதம் பரப்பப்பட்டு விட்டது. அந்த மதத்திற்கு பின்பு ஐரோப்பியர்கள் "இந்து" என்று பெயர் வைத்தார்கள்.

அவர்களுடைய மதத்திற்கு அவர்கள் பெயர் வைப்பதுதானே முறை!

அவர்களுடைய மதத்திற்கு அவர்கள் பெயர் வைப்பதுதானே முறை!

எப்பவும் போல பெயர் வைப்பதிலும் அடிபாடு வந்திருக்கும், அவர்கள் வைத்துவிட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் வழமை போல ஒரு வழியைத் தான் பார்க்கிறார். ஆனால் அங்கு இருவழிகள் இருக்கின்றன.

ஒன்று.. பழைய ஆதியான இந்திய உபகண்ட நாகரிகத்தில் இருந்து இவை ஐரோப்பாவுக்குள் கொண்டு போகப்பட்டனவா..

அல்லது ஐரோப்பாவுக்குள் இருந்து இந்திய உபகண்டத்துள் ஊடுருவினவையா..??!

ஐரோப்பாவுக்குள் மயில்கள் பறந்து திரிந்த காலம்..???!

மயில்கள் பொதுவாக இந்திய உபகண்டம் போன்ற அயனமண்டலத்துக்குரிய பறவை இனமாகும்..! :rolleyes::huh:

Edited by nedukkalapoovan

யாழ் கள அறிஞர் பெருமக்களிண்ட முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றோம். யாழ்கள முருகப்பெருமான் வெற்றிவேலை இன்னும் காண இல்லை. அவர் வந்தால்தான் ரெண்டு யூரியூப் காணொளி போட்டு, விக்கிபீடியாவிலயும் ஒரு தகவல் எடுத்து எல்லாருக்கும் விளங்கிறமாதிரி சொல்லுவார். அப்ப அவரும் என்ன சொல்லபோறார் எண்டு பொறுத்து இருந்து பார்ப்பம். கடைசியா இந்துக்கடவுள்களை கிண்டல் பண்ணக்கூடிய நாரதர் அண்ணை மாதிரி யாராச்சும் வந்து இவர் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல எண்டு புதிய ஒரு குண்டை தூக்கி போடக்கூடும். என்ன நடக்கப்போவது எண்டு ரசிகப்பெருமக்கள் நாங்கள் ஆவலோட காத்து இருக்கிறம். இந்த ஆராய்ச்சி முடியும்வரைக்கும் முருகப்பெருமான் பக்தர்கள் நாலைஞ்சு நாளைக்கு இஞ்சாலப்பக்கம் வராமல் எட்டிப்பார்க்காமல் இருக்கிறது உங்களுக்குத்தான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆராய்ச்சி பண்ணி முடிவை சொல்லுங்கோ

இதன் பின்னணி பற்றி இங்கே ஏற்கனவே பலமுறை பேசி விட்டோம். இந்துக்கள் வணங்குகின்ற பெரும்பாலான கடவுள்களுக்கு ஐரோப்பிய பின்னணி உண்டு.

மத்திய ஆசியாவில் இருந்து இரண்டு பக்கமாக நகர்ந்த மக்கள் கூட்டத்தின் கடவுள்கள் இவைகள். இந்தக் கடவுள்கள் இந்தியாவில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்களிடம் பரப்பப்பட்டன. மண்ணின் மைந்தர்களின் "மதம்" அழிக்கப்பட்டு இவர்களின் கடவுள்கள் பரப்பப்பட்டன.

தமிழர்களின் முருகனும் இதற்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டுப் போனான்.

தமிழர்களிடம் இஸ்லாமும் கிறிஸ்தவமும் பரப்பப்படுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே மத்திய ஆசியா மக்களின் மதம் பரப்பப்பட்டு விட்டது. அந்த மதத்திற்கு பின்பு ஐரோப்பியர்கள் "இந்து" என்று பெயர் வைத்தார்கள்.

அவர்களுடைய மதத்திற்கு அவர்கள் பெயர் வைப்பதுதானே முறை!

இந்து மதம் என்று ஒரு செல் எங்காவது வந்தால் சபேசன் அண்ணை ஓடி வந்திடுவீங்கள்............... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அவுணர்கள் என்றொரு சாதியார் இருந்தார்கள். ஐரோப்பாவிலும் ஹ{ணாஸ் என்ற சாதியாரால் பல படையெடுப்புகள் நடந்ததாகக் கூறப்படுகின்றது

அருணகிரிநாதர் தனது திருப்புகழில் முருகனை “…….அவுணரை வெட்டிப் பலியிட்டுக்……குத்துப்பட வொற்றிய…..” பெருமாளேயென்று போற்றுகிறார்.

இதனால் அவுணர் என்ற சாதியாரோடு மூர்க்கமாக மோதித் தனது இனத்தைக் காப்பாற்றியேவார் தலைவனே முருகனென்பது புலனாகின்றது.

காலத்துக்குக் காலம் இத்தகைய தலைவர்கள் தோன்றித் தங்கள் மண்ணையும் மக்களையும் காத்திருக்கிறார்கள். அதில் பிரபலமானவன் முருகன். அவனுக்கு நடுகல் வழிபாடு செய்யப்பட்டுப் பின்னர் அவன் கடவுளாக வழிபடப்பட்டான். இந்தப் போர் எங்கு நடந்தது என்பது தெளிவில்லை.

ஐரோப்பாவிலும் ஹ{ணரென்ற சாதியாரால் ஆக்கிரமிப்பு நடைபெற்றதால் எங்காவது மத்திய ஆசியாவிலோ அல்லது ஐரோப்பிய ஆசிய எல்லைகளிலோ நடைபெற்றிருக்கலாம்.

முருகனுக்குச் செவ்வேள் என்ற பெயருமுண்டு. அதனால் முருகன் சிவந்த மேனியனாகவே இருந்திருக்கவேண்டும். திராவிடர்கள் கறுப்பர்கள். ஆகவே அவன் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவனாயிருக்கலாமென்று ஊகிப்பதிலும் தவறில்லை.

ஆனால் வடஇந்தியாவில் வணங்கப்படும் ஆறுதலைகொண்ட கார்த்திகேயனுக்கும் (கார்த்திக்) அல்லது சுப்பிரமணியனுக்கும் முருகனுக்கும் தொடர்பில்லை.

பலரும் பல விடயங்களையும் ஆய்வுசெய்து செய்திகளாக இந்தக் களத்தில் தருவது ஆரோக்கியமானது. தெரியாத பலவிடயங்களை அறிந்து கொள்ள அல்லது தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பேற்படுகிறது.

ஆனால் சிலர் இந்தக் களத்தில் ஒரு விடயத்தின் தலைப்பை ஒட்டாது ஏதாவது தனிப்பட்ட சினேக மனப்பான்மையில் எதையாவது எழுதி களத்தின் போக்கை மாற்ற முயற்சிப்பது கவலையளிக்கிறது. நல்ல ஆய்வுகளைத் திசை திருப்பாது கொண்டு செல்ல உதவினால் பெரிதும் உதவியாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எப்படியும் இருந்திட்டு போகட்டும்.ஆனால் எனகொரு சந்தேகம் இந்த முருகனை ஏன் சிங்கள பெளத்தர்கள் தங்களது பூஜை வழிபாட்டில் வைத்திருக்கின்றார்கள் முக்கியமாக கண்டி பெரகராவின் போது முருகனுக்கும் முக்கிய பூசை செய்த பின்பு தான் அதை ஊர்வலமாக எடுத்து செல்வார்கள் யானையில்.

ஜரோப்பாவில் இருந்து வந்தார் வட இந்தியாவில் வந்தார் என்ற கருத்தை பகிர்வதை விட இந்த முருகன் சிங்களதிற்குள் எப்படி புகுந்து கொண்டார் என்பதிற்கு சில தர்க ரீதியான விளக்கங்களை யாரும் தந்தார்கள் என்றால் நல்லம். :D

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் வழமை போல ஒரு வழியைத் தான் பார்க்கிறார். ஆனால் அங்கு இருவழிகள் இருக்கின்றன.

ஒன்று.. பழைய ஆதியான இந்திய உபகண்ட நாகரிகத்தில் இருந்து இவை ஐரோப்பாவுக்குள் கொண்டு போகப்பட்டனவா..

அல்லது ஐரோப்பாவுக்குள் இருந்து இந்திய உபகண்டத்துள் ஊடுருவினவையா..??!

ஐரோப்பாவுக்குள் மயில்கள் பறந்து திரிந்த காலம்..???!

மயில்கள் பொதுவாக இந்திய உபகண்டம் போன்ற அயனமண்டலத்துக்குரிய பறவை இனமாகும்..! :D:D

இந்த தலைப்பை பார்த்த பின் , எனக்கு ஏற்பட்ட ஆச்சரியம் கலந்த சந்தோசத்தில் என்னுடன் வேலை செய்ய்யும் கிரேக்க நண்பரிடம் கேட்ட போது .....

அலெக்சாண்டர் நாடு பிடிக்கும் நோக்குடன் ஆப்கானிஸ்தான் தாண்டி இந்தியா வரை சென்றதாகவும் ,

அங்கிருந்து முருகனை தமது ஒரு கடவுளாக ஐரோப்பாவிற்கு ஏற்ற மாதிரி வடிவமைத்திருக்கலாம் என்றும் ,

பழைய கிரேக்கர்கள் இந்த உலகுக்கு கொடுத்ததும் கூட , இந்து மதத்திலுருந்து நல்லவற்றை எடுத்ததும் கூட என்றும் ,

உதாரணத்துக்கு பெண்கடவுள்கள் இந்து மதத்தை போலவே , தங்களிடமும் உண்டு என்றார் .

அத்துடன் கிரேக்கத்தில் 50% பெண் கடவுள் , 50% ஆண் கடவுள் .

அதாவது 5000 வருடங்களுக்கு முன் சம உரிமை . எங்கள் அர்த்தநாரீஸ்வரரை போல் . ( சிவபெருமான் )

ஐரோப்பாவில் பெண்களுக்கு எந்த ஆண்டில் வாக்குரிமை அளிக்கப்பட்டது ?

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வை என்பது நேர்மையான(நேர்த்தியான)என்றும

் வேள் என்பது அரசன் (சிற்றரசன்)என்றும் பொருள்படும்.இரண்டையும் புணர்த்தினால் செவ்வேள் vன்று வரும்;. பழைய காலத்தில் கிரேக்கத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே வாணிபம் நடந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.அப்படிப் பரிமாற்றம் நடந்திருக்கிலாம். இலத்தினும் தமிழும் மிகப்பழைய மொழிகளாகும்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தலைப்பை பார்த்த பின் , எனக்கு ஏற்பட்ட ஆச்சரியம் கலந்த சந்தோசத்தில் என்னுடன் வேலை செய்ய்யும் கிரேக்க நண்பரிடம் கேட்ட போது .....

அலெக்சாண்டர் நாடு பிடிக்கும் நோக்குடன் ஆப்கானிஸ்தான் தாண்டி இந்தியா வரை சென்றதாகவும் ,

அங்கிருந்து முருகனை தமது ஒரு கடவுளாக ஐரோப்பாவிற்கு ஏற்ற மாதிரி வடிவமைத்திருக்கலாம் என்றும் ,

பழைய கிரேக்கர்கள் இந்த உலகுக்கு கொடுத்ததும் கூட , இந்து மதத்திலுருந்து நல்லவற்றை எடுத்ததும் கூட என்றும் ,

உதாரணத்துக்கு பெண்கடவுள்கள் இந்து மதத்தை போலவே , தங்களிடமும் உண்டு என்றார் .

அத்துடன் கிரேக்கத்தில் 50% பெண் கடவுள் , 50% ஆண் கடவுள் .

அதாவது 5000 வருடங்களுக்கு முன் சம உரிமை . எங்கள் அர்த்தநாரீஸ்வரரை போல் . ( சிவபெருமான் )

ஐரோப்பாவில் பெண்களுக்கு எந்த ஆண்டில் வாக்குரிமை அளிக்கப்பட்டது ?

அம்மன்களுக்கு கோயில் கட்டுறததும் ஆண் சிங்கங்கள் தான்.

அம்மனுக்கு குளிர்ச்சி பொங்கல் பொங்குறதும் ஆண் சிங்கங்கள் தான்.

காளி அம்மனுக்கு ஆடு கோழியை பலி குடுக்கிறதும் ஆண்சிங்கங்கள் தான்.

இது எல்லாத்தையும் செய்து போட்டு தான் தொட்டு தாலி கட்டின அம்மன் சமைச்ச ஆட்டிறைச்சி ருசியில்லை எண்டு சொல்லிப்போட்டு அவள் பாவியின்ரை குடும்பியை புடிச்சு இழுத்து அடிக்கிறதும் ஆண்சிங்கங்கள் தான்.

சர்வம் சக்தி மயம்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன்களுக்கு கோயில் கட்டுறததும் ஆண் சிங்கங்கள் தான்.

அம்மனுக்கு குளிர்ச்சி பொங்கல் பொங்குறதும் ஆண் சிங்கங்கள் தான்.

காளி அம்மனுக்கு ஆடு கோழியை பலி குடுக்கிறதும் ஆண்சிங்கங்கள் தான்.

இது எல்லாத்தையும் செய்து போட்டு தான் தொட்டு தாலி கட்டின அம்மன் சமைச்ச ஆட்டிறைச்சி ருசியில்லை எண்டு சொல்லிப்போட்டு அவள் பாவியின்ரை குடும்பியை புடிச்சு இழுத்து அடிக்கிறதும் ஆண்சிங்கங்கள் தான்.

சர்வம் சக்தி மயம்

அதாரப்பா ரொம்ப தைரியசாலியாக இருக்கிறாங்களே :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.