Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராணுவத்தின் குழந்தை வீரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17_12_08_kili_01.jpg

Sri Lanka Army child soldier victim [Photo: TamilNet]

அட , இது பால்குடி மறவாத குழந்தை .

பிள்ளையான் கருணா பிடிச்ச எங்கட பொடியலையும் இப்பிடித்தான் கொணந்து விடுறாங்களோவுந்தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காப் படையில் சிறுவர் இராணுவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. நேற்றை தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரில் 32 உடலங்கள் விடுதலைப் புலிகளால் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒருவர் சிறுவராக இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிள் சிறுவர்களை படையில் இணைத்து வருவதாக சிறிலங்கா சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில் சிறுவர் படையணி சிறிலங்கா இராணுவத்தில் இருப்பது அம்பலமாகியுள்ளது.

www.sankathi.com

Edited by kuddipaiyan26

இதையெல்லாம் பார்த்தபின்னும், சர்வதேசம் இன்னும் மௌனித்து நிற்கப் போகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் பார்த்தபின்னும், சர்வதேசம் இன்னும் மௌனித்து நிற்கப் போகிறதா?

நித்திரை கொள்பவனை வேண்டுமென்றால் எழுப்பலாம்

நித்திரையாய் நடிப்பவர்களை...........???

குண்டுபோட்டு அதிர்ச்சி கொடுத்தால் சிலவேளை எழும்பலாம்

அதுதான் இப்ப புரியும் பாசை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்திரை கொள்பவனை வேண்டுமென்றால் எழுப்பலாம்

நித்திரையாய் நடிப்பவர்களை...........???

குண்டுபோட்டு அதிர்ச்சி கொடுத்தால் சிலவேளை எழும்பலாம்

அதுதான் இப்ப புரியும் பாசை

தமிழன் எது செய்தாலும் தான் 'சர்வதேசம் தப்பு என்று சொல்லும்! கண்டிக்கும்! பயங்கரவாதம் என்னும்!! மற்றவர்கள் என்ன பண்ணினாலும் அது கண்டு கொள்வதேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாவது படையணி உருவக்கி இருக்கிறாங்கள் எட்டு வயது சிறுவர்களை வைத்து போல :lol:

இப்போது தெரிகின்றது இலங்கை அரசாங்கத்தின் படை வீழ்ச்சி என்பது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் எது செய்தாலும் தான் 'சர்வதேசம் தப்பு என்று சொல்லும்! கண்டிக்கும்! பயங்கரவாதம் என்னும்!! மற்றவர்கள் என்ன பண்ணினாலும் அது கண்டு கொள்வதேயில்லை.

குகா சரியாப்புரிஞ்சிருக்கிறீர்

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் பார்த்தபின்னும், சர்வதேசம் இன்னும் மௌனித்து நிற்கப் போகிறதா?

ஏன் ததமிழீழத்தைத் தங்கத் தட்டில் வைத்துத் தருவதாக அவர்கள் சொன்னார்களா?

சர்வதேசம் எமக்கான ஒரு அமைப்போ, குழுமமோ இல்லை. ஆனால் நாங்கள் செய்கின்ற பிரச்சாரங்கள் மூலமும், அழுத்தங்கள் மூலமும் தான் அதை எமக்கான அல்லது, வேண்டவெறுப்பாகக் கூட எமக்காக மாற்ற முடியுமே தவிர, எதுவுமே செய்யாமல் சர்வதேசத்தைத் குறை கூறி என்ன பயன்??

சொல்லுங்கள், தமிழர் படுகொலை பற்றி சர்வதேசம் அறிய என்ன உருப்பாடியாகச் செய்தீர்கள் நண்பரே! இப்படிச் சலித்துக் கொள்வதற்கு??...

இச் சிறுவர் படையணி பற்றி ஒவ்வொரு அமைப்புக்கும் கடிதம் எழுதுங்கள். தினமும் மக்கள் துன்பங்கள் பற்றி சர்வதேசத்துக்கு அறிவியுங்கள்... அவர்களின் பதில் பற்றி எல்லாம் கவலை வேண்டாம். தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். நாளை பதில் கிடைக்கும்....

உங்களை நோகடிக்கச் சொல்லவில்லை. அப்படிச் செய்தால் பலன் கிடைக்கும்... பல அமைப்புக்கள், புலத்தில் பிறந்தவர்கள் தொடர்ந்து செய்கின்றார்கள். அவர்களுக்குள்ள நம்பிக்கை உங்களுக்கு ஏன் இல்லாது போனது??

நானும் நேற்று தமிழ்நெட்டில இந்தப்படம் பார்த்தன். அதிர்ச்சியாய் இருந்திச்சிது. படத்தில இருக்கிற பால்குடியை பார்த்தால் பதினாலு வயசும் இருக்காது போல இருக்கிது. சிலது நாங்கள் முந்தி அப்பா வேலைக்கு போகேக்க நாங்களும் அவரோட சேர்ந்து விடுப்பு பார்க்க போறது மாதிரி இவரும் சண்டை பார்க்க போய் இருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா வேலைக்கு போகேக்க நாங்களும் அவரோட சேர்ந்து விடுப்பு பார்க்க போறது மாதிரி இவரும் சண்டை பார்க்க போய் இருப்பாரோ?

ஆமாம். விடுப்புப் பார்க்கப் போய்த் தான் செத்தவரே தவிர, சிறிலங்கா அரசு குழந்தை இராணுவத்தை வைத்திருக்கவில்லை. பயிற்சி கொடுக்கவில்லை.... சும்மா சிறிலங்கா இராணுவம் மேலே தமிழ் நெற் பழி போடுது.... அப்படித் தானே??

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசம் நாங்கள் தான் சர்வதேசம் மெளனமா இருக்கென்று இருக்கிறம்.

அவை வன்னில நின்று பிளான் கொடுத்துத்தான் இதெல்லாம் நடக்குது..

பிராந்தியப் பகைவர்களே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க ஒற்றுமையா முன்னிற்கினம்...

Six%20countries%20advice%20for%20sla%20(3).jpg

சிறிலங்கா வன்னி மீது பாரிய போரைத் தொடுத்திருக்கும் நிலையில் வன்னிக் களமுனைக்கு சென்று ஆறு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆலோசனைக்கான சந்திப்பில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் ஆலோசகர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த திங்களன்று இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதமும் கொடுத்து பாதுகாப்பு ஆலோசனைகளும் குடுக்கினமே!.. ஈழத்தின் மீதும் எதற்கும் வளைந்து கொடுக்காத தலைவன் மீதும் போராளிகள் மீதும் எத்தனை கடுப்பும் வயித்தெரிச்சலும் இந்த நாடுகளுக்கு?!!!!!!....தமிழன் எந்த எந்த தேசத்துக்குப்புலம் பெயர்ந்தானோ அங்கெல்லாம் உந்த நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தானே இருக்கின்றான்?!

இவர்களுக்கு கடிதம் கடிதமாய் எழுதிப்போட்டும்!!!!!!!!!!!! ?!!! என்னத்தைச்சொல்லுறது!! வேதனைதான் மிஞ்சுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ததமிழீழத்தைத் தங்கத் தட்டில் வைத்துத் தருவதாக அவர்கள் சொன்னார்களா?

சர்வதேசம் எமக்கான ஒரு அமைப்போ, குழுமமோ இல்லை. ஆனால் நாங்கள் செய்கின்ற பிரச்சாரங்கள் மூலமும், அழுத்தங்கள் மூலமும் தான் அதை எமக்கான அல்லது, வேண்டவெறுப்பாகக் கூட எமக்காக மாற்ற முடியுமே தவிர, எதுவுமே செய்யாமல் சர்வதேசத்தைத் குறை கூறி என்ன பயன்??

சொல்லுங்கள், தமிழர் படுகொலை பற்றி சர்வதேசம் அறிய என்ன உருப்பாடியாகச் செய்தீர்கள் நண்பரே! இப்படிச் சலித்துக் கொள்வதற்கு??...

இச் சிறுவர் படையணி பற்றி ஒவ்வொரு அமைப்புக்கும் கடிதம் எழுதுங்கள். தினமும் மக்கள் துன்பங்கள் பற்றி சர்வதேசத்துக்கு அறிவியுங்கள்... அவர்களின் பதில் பற்றி எல்லாம் கவலை வேண்டாம். தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். நாளை பதில் கிடைக்கும்....

உங்களை நோகடிக்கச் சொல்லவில்லை. அப்படிச் செய்தால் பலன் கிடைக்கும்... பல அமைப்புக்கள், புலத்தில் பிறந்தவர்கள் தொடர்ந்து செய்கின்றார்கள். அவர்களுக்குள்ள நம்பிக்கை உங்களுக்கு ஏன் இல்லாது போனது??

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதமும் கொடுத்து பாதுகாப்பு ஆலோசனைகளும் குடுக்கினமே!.. ஈழத்தின் மீதும் எதற்கும் வளைந்து கொடுக்காத தலைவன் மீதும் போராளிகள் மீதும் எத்தனை கடுப்பும் வயித்தெரிச்சலும் இந்த நாடுகளுக்கு?!!!!!!....தமிழன் எந்த எந்த தேசத்துக்குப்புலம் பெயர்ந்தானோ அங்கெல்லாம் உந்த நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தானே இருக்கின்றான்?!

இவர்களுக்கு கடிதம் கடிதமாய் எழுதிப்போட்டும்!!!!!!!!!!!! ?!!! என்னத்தைச்சொல்லுறது!! வேதனைதான் மிஞ்சுகின்றது.

எத்தனை கடிதம் எழுதிப் போட்டீர்கள்? அதன் பிரதிகளைத் தந்தீர்கள் என்றால், வேறு அமைப்புக்களுக்கு அனுப்பி வைக்க உதவியாக இருக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

தட்டிக்கழிக்க முடியாது ஸ்ரீலங்காவால்

ஏனெனில் அது ஒரு குழுவோ அல்லது அமைப்போ அல்ல

ஒரு அரசாங்கம்

எனவே குட்டை உடைக்க எம்மால் ஆன அனைத்தையும் செய்வோம்

சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்தி ஸ்ரீலங்காவின் முகத்திரையை கிழிப்போம்

மல்லிகை வாசம் நாங்கள் தான் சர்வதேசம் மெளனமா இருக்கென்று இருக்கிறம்.

அவை வன்னில நின்று பிளான் கொடுத்துத்தான் இதெல்லாம் நடக்குது..

பிராந்தியப் பகைவர்களே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க ஒற்றுமையா முன்னிற்கினம்...

Six%20countries%20advice%20for%20sla%20(3).jpg

சிறிலங்கா வன்னி மீது பாரிய போரைத் தொடுத்திருக்கும் நிலையில் வன்னிக் களமுனைக்கு சென்று ஆறு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆலோசனைக்கான சந்திப்பில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் ஆலோசகர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த திங்களன்று இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

இந்த ஆறு பேரினதும் ஆலோசனைகள் தான் நேற்றைய விளைவுகளை இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தது. இவர்கள் மீண்டும் மீண்டும் வந்து ஆலோசனைகள் கொடுத்தால் எமக்குத்தான் நல்லது

ஆப்கனிலும் ஈராக்கிலும் தோல்வியை எதிர்நோக்கும் அமெரிக்காவும் + பிரித்தானியாவும், எல்லைகளிலும் உள் நாட்டிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடனும் தலிபான்களுடனுமான மோதலில் இழப்புகளை காணும் பாகிஸ்தானும், யுத்ததினையே காணாத பங்களதேசமும், தன் நாட்டின் மீதான அன்னிய போராளி குழுக்களின் உதவியுடனான சிறு இராணுவ கிளர்ச்சியை கூட கட்டுப்படுத்த முடியாது இந்திய படைகளை நாடிய மாலைதீவும், இலங்கை வந்து யுத்த தந்திரத்தில் தோல்வி நிலையை எய்திய இந்திய இராணுவமும், கடந்த முப்பது வருடங்களாக இந்திய பிராந்தியத்தில் தன் செல்வாக்கை அதிகரிக்க முயன்று ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவும் யப்பானும் (அமெரிக்காவின் எடுபிடி) தரும் ஆலோசனைகள் இலங்கையில் எத்தகைய விளைவுகளை கொடுக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

இது பெரியவிடயமாக எனக்கு தெரியவில்லை

ஸ்ரீலங்காவின் அழைப்பின்பேரில் வந்திருப்பார்கள்

இவர்கள் இங்கைதான் கொண்டு போகின்றார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் ஸ்ரீலங்காவுக்கே வந்திருக்கமாட்டார்கள்

இவர்கள் தமது வெற்றியை பறைசாற்ற கொண்டுபோயிருப்பார்கள்???

தூயவன் சொல்வது மிக சரி. எம்மால் முடிந்த அளவுக்கு இதனையும், எம் மீதான அழிவுகளையும் தொடர்ந்து சளைக்காமல் எல்லோருக்கும் அறிய செய்ய வேண்டும். விளைவுகளோ அல்லது பதிலோ உடனடியாக கிடைக்காது... ஆனால் நிச்சயம் அதன் பிரதிபலிப்புகள் மெல்ல மெல்ல எமக்கு சாதகமாக வரும். எம்மை களைப்படைய வைக்கவும், சலிப்புற வைக்கவும் ஏகாதிபத்திய அரசுகளும், இலங்கை அரசும் தம்மாலான அனைத்தினையும் செய்தே ஆகும்... நாம் எக் கணத்திலும் அவ்வாறு களைப்போ சலிப்போ அடைய கூடாது

...

மற்ற அமைப்புகளுக்கு அனுப்பியது போல் நான், எனது அனைத்து சிங்கள நண்பர்களுக்கும் இப் படத்தை அனுப்பியுள்ளேன்.... வயிறு எரியட்டும் அவர்களுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் நேற்று தமிழ்நெட்டில இந்தப்படம் பார்த்தன். அதிர்ச்சியாய் இருந்திச்சிது. படத்தில இருக்கிற பால்குடியை பார்த்தால் பதினாலு வயசும் இருக்காது போல இருக்கிது. சிலது நாங்கள் முந்தி அப்பா வேலைக்கு போகேக்க நாங்களும் அவரோட சேர்ந்து விடுப்பு பார்க்க போறது மாதிரி இவரும் சண்டை பார்க்க போய் இருப்பாரோ?

சரியாய் சொன்னியள்...உது தான் உண்மை பாருங்கோ...பால் குடி பிக்கு ஒருவரும் இப்படி செத்தவர் எல்லே..

  • கருத்துக்கள உறவுகள்

:) இந்தக் குழந்தை ராணுவ வீரன் இலங்கை ராணுவத்திலுள்ள பெரும்பாலான ஓரினச் சேர்க்கையாளர்களின் இச்சையைத் தீர்க்கவென இலங்கை அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டவனாக இருக்கலாம். ஏனென்றால் வடபகுதியில் கடமையாற்றும் ராணுவத்தினர் தங்கிச்செல்லவென அமைக்கப்பட்டிருக்கும் அநுராதபுரம் ராணுவ சாவடிகளை அண்டி பெருமளவில் விபச்சார விடுதிகளை அரசு திறக்க அனுமதித்துள்ளதுடன், அங்கு விபச்சாரத்தை சட்டரீதியாகானதாக மாற்றவும் செய்துள்ளது. சிங்களவர்களால் புன்னிய பவுத்த பூமி என்றழைக்கப்படும் அநுராதபுரம் இன்று இலங்கையின் பாலியல் தலைநகரம். இதேபோல் தெற்கில் கல்கிஸ்ஸைப் பகுதியிலிருந்து மாத்தறை வரை சிறுவர்களை "பாலியல்ப் பைய்யன்கள்" என்ற பெயரில் வெளிநாட்டவர்க்கு ஆண் விபச்சாரிகளாக தாரை வார்த்துக் கொடுப்பதும் நடந்து வருகிறது. இதை அரசில் உள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று பலர் நடத்தி வருகிறார்கள்.

போர்க் களங்களில் போரிடும் ராணுவ வீரர்களுக்கு அவர்களின் பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஆக்கிரமிப்பு அரசுகள் அவ்வப்போது விபச்சாரிகளையும், புகழ் பெற்ற நடிகைகள், பாடகிகள் என்று பெண்களை அனுப்பி வைப்பது நடந்திருக்கிறது. ரெண்டாம் உலகப் போரில் மர்லின் மன்றோ வின் உடலை விதம் விதமாக புகைப்படமெடுத்து வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டது, வியட்னாம் போரில் தென் வியட்னாம் பெண்களையும், அமெரிக்க நடிகைகளையும் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் அமெரிக்க வீரர்களின் காமப்பசிக்கு அனுப்பிவைத்தது, கிளின்ரன் காலத்தில் அமெரிக்கக் கடற்படையில் ஓரினச் சேர்க்கையாளர்களை அனுமதிப்பது சரியானதே என்று வழக்குத் தீர்ந்திருக்கிறது. இப்படி எதுவுமே கிடைக்காததால்த் தான் 1987 இல் இந்திய அசுரப்படை தமிழீழத்தில் ஆயிரக்கணக்கான தாய்மார்களையும், அக்கா தங்கைகளையும் காம வேட்டையாடியது.

தமது ராணுவம் சோர்வடையாமல்ப் போராடுவதற்காக சிங்களம் இப்போது "பைய்யன்களை" அனுப்பி வைத்திருக்கிறது !!!!!

elakiri.com ல இவர் 18 வயசுக்கு மேல எண்டு எல்லாரும் சத்தியம் பண்ணுறாங்கோ.. :)

Edited by Kuddi thampi

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவுக்கு ஆள் பற்றாக்குறையா?

  • கருத்துக்கள உறவுகள்

நித்திரை கொள்பவனை வேண்டுமென்றால் எழுப்பலாம்

நித்திரையாய் நடிப்பவர்களை...........???

குண்டுபோட்டு அதிர்ச்சி கொடுத்தால் சிலவேளை எழும்பலாம்

அதுதான் இப்ப புரியும் பாசை

இல்லையெண்டா செருப்பாலதனிலும் எறியோணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.