Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சத்தீவில் ராணுவ முகாம் அமைக்கும் இலங்கை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம்: சர்ச்சைக்குரிய கச்சத்தீவில் நிரந்தர ராணுவம் மற்றும் கடற்படை முகாமை அமைக்க இலங்கை முயன்று வருவதாக அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்று, இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.

அப்படி ராணுவ முகாம் கச்சத்தீவில் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய் விடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவால் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது கச்சத்தீவு. இருப்பினும் இந்திய மீனவர்கள் இங்கு தங்களது மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், ஓய்வு எடுத்துச் செல்லலாம் என இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஷரத்து உள்ளது.

ஆனால் இதை இலங்கை அமல்படுத்தியதே இல்லை. கச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, அடித்துத் துன்புறுத்துவது, மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து மிரட்டி அனுப்புவது என ரவுடித்தனம் செய்து வருகிறது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கச்சத்தீவில் நிரந்தர கடற்படை மற்றும் ராணுவ முகாமை அமைக்க இலங்கை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 30ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிக்கச் சென்றபோது கடற்படையினரால் தாக்கி விரட்டப்பட்டனர்.

அவர்கள்தான் கச்சத்தீவில் ராணுவ முகாம் அமைக்கும் வேலைகள் நடந்து வருவதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கச்சத்தீவுப் பகுதியில் தரையை சமப்படுத்தும் வேலை நடக்கிறது. அங்கு நூற்றுக்கணக்கான கடற்படை வீரர்கள் நடமாட்டம் உள்ளது. இலங்கை கடற்படை கப்பல்களும் காணப்படுகின்றன.

கச்சத்தீவில் ராணுவ முகாம் அமைக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. அப்படி அமைந்தால் எங்களுக்கு பெரும் இடையூறாகி விடும். எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய மீனவர்களின் உரிமைகளை முன்பு பறித்த இலங்கை அரசு தற்போது முழுமையாக இந்தியர்களை (தமிழ்நாட்டு மீனவர்களை) அந்தப் பக்கம் கூட வராமல் தடுக்கும் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

மீனவர்களிடம் தொடரும் அட்டகாசம்...

இந் நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் வலைகளைப் பறித்து கிழித்தெறிந்து இலங்கை கடற்படையினர் அட்டகாசம் செய்ததால், மீனவர்கள் பாதியிலேயே கரைக்குத் திரும்பியுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படும் அவதி சொல்லி மாளாது. இலங்கையில் போர் முடிந்த பிறகும் கூட தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வருகிறது இலங்கை கடற்படை. இதை கேட்க நாதியில்லை. இந்திய அரசு வழக்கம் போல மெளனமாக இருந்து வருகிறது.

தற்போது இலங்கையில் போர் நின்று விட்டபோதிலும் இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், அட்டகாசமும் நின்றபாடில்லை.

45 நாள் மீன் பிடித் தடை நீங்கிய பின்னர் கடந்த 30ம் தேதி முதல் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். அன்றைய தினம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கி கடற்படையினர் அட்டகாசம் செய்தனர். 12 பேரை பிடித்து விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்து அனுப்பினர்.

நேற்று ராமேசுவரத்தில் இருந்து 800விசைப்படகு களில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த கென்னடி உள்ளிட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்தபோது அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் அவர்கள் படகிற்குள் ஏறினர்.

மீனவர்களை தாக்கிய வலைகளை அறுத்து கடலில் வீசினர். இனி இந்த பகுதிக்கு வந்தால் உயிருடன் திரும்ப மாட்டீர்கள் என்று எச்சரித்தனர்.

இதையடுத்து மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தொடர்ந்து மீன் பிடிக்காமல் பாதியிலேயே கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையின் இந்த தொடர் அட்டகாசத்திற்கு என்றுதான் முடிவோ என்று மீனவர்கள் பெரும் குமுறலுடன் உள்ளனர்.

நன்றி தற்ஸ் தமிழ்

கலைஞர் போண்ற அப்பழுக்கில்லாத சுத்தமான கயமையால் செய்ய பட்ட சுயநலவாதியை ஆட்சியில் அமர்த்தியவர்களுக்கு வேறு என்ன நன்மை கிடைக்கும்...

சிங்களவன் நண்றாக அடி போட்டு கலைஞரின் பெருமையை காக்க வேண்டும் எண்று வேண்டிக்கொள்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

அழித்து அவமதிப்பிற்குள்ளாகும் தமிழகத்திற்குப் புதிய தலைமைத்துவம் தொடர்பான சிந்தனை பெரிய அளவிலே உள்வாங்கப்படாமையின் விளைவே தமிழக மீனவர் சமுதாயம் மீதான அழிவினைக் கண்டும் காணதது போன்ற கேட்பாரற்ற நிலையாகும். கடலிலே மீனவர்களும் கரையிலே விவசாயிகளும் துன்பங்களை அனுபவிக்கும் போதும் மாநில அரசு என்னதான் செய்கிறது. மாநில அரசு என்ற போர்வையில் தமது சந்ததிகளுக்குச் சொத்துக்குவிப்பதில் குறியாகவல்லவா இருக்கிறனர். ஒரு மாற்றமொன்றை தமிழக மக்கள் நினைத்தால் கொண்டுவர முடியும். தமிழகத்தின் மக்களிடம் அந்த ஆளுமை இருக்கிறது. ஆனால் ஏனின்னும் மௌனமாக இருக்கிறார்கள் என்று புரியவில்லை. வண்ணத் தொலைக்காட்சியினுள் இன்னும் எத்தனை காலம்தான் தம் வாழ்வைத் தொலைத்திடுவார்.

கலைஞரிடம் கேளுங்கள், நண்பரான மகிந்தவிடம் தமிழக மக்களைத் தாக்க வேண்டாமென்று. இவர் சொன்னால் அவர் கேட்பார். ஏனென்றால் அவளவு புரிந்துணர்வு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை இராணுவத்தின் பேரால் சீனாவின் இராணுவ கடற்படைத்தளம் ஆக இருக்கும்.

விரைவில் தமிழ் நாட்டுத்தமிழர்களை விரட்டி முகாம்களில் வைத்தாலும் ஆச்சரியமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இதே கலைஞர் வர வேண்டும் என்று தானே தமிழ் நாட்டு மக்கள் வாக்களித்தார்கள்.அதாவது கலைஞரில் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளார்கள். அரிசி மலிவாகவும் , இலவச தொலைக்காட்சியும் வழங்கினாலே தேர்த்தலில் வெல்லாம் என்ற அரசியல் தீர்க்க தரிசனம் கலைஞரை தவிர யாருக்கு வரும்?. இதில் கச்சதீவில் இராணுவமுகாம் வந்தால் என்ன அணு உலை வந்தால் என்ன தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் கவலை படவே மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா ஆப்பு உங்களுக்குத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

இது கலைஞரின் அரசியல் சாணக்கியத்துக்கு கிடைத்த பரிசு

எம்மை காணிக்கையாக கொடுத்து பெற்ற பரிசு

நல்ல செய்தி...அப்படியே நாலு ஐஞ்சு டோராக்களை அந்த பக்கம் நிப்பாட்டி வைச்சா என்னும் நல்லது......கேவலம் பணத்துக்காக தமிழரின் நலனையும் புறக்கணித்துவிட்டு காங்கிரஸ்ஸுக்கு வாக்குப்போட்டதற்கு நல்லா அனுபவிக்கட்டும்

கட்டியிருக்கிற கோவணம் களவு போனாலே கவலைப்படாதவர்கள். கதிரைக்காக கட்டினவளையே கூட்டிக்கொடுக்கும் கொலைஞர் குடும்பம்

கச்சதீவில் தமிழ் நாட்டு மீனவர்களைக் கொண்டே துப்புரவுப் பணிகளை செய்கின்றது இலங்கை ராணுவம். வழமை போலவே தமிழ் நாட்டரசு பேன் பார்த்துக்கொண்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தவனுக்கு வேணும்.

தமிழகத்தவனுக்கு வேணும்.

அப்பாவி தமிழக மீனவன் என்ன குற்றம் செய்தான்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி தமிழக மீனவன் என்ன குற்றம் செய்தான்?

ஏனையா

இராமேசுவரத்தில் யார் வென்றார்...???

அப்பாவி என்கின்றீர்?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவத்தின் பேரால் சீனாவின் இராணுவ கடற்படைத்தளம் ஆக இருக்கும்.

விரைவில் தமிழ் நாட்டுத்தமிழர்களை விரட்டி முகாம்களில் வைத்தாலும் ஆச்சரியமில்லை

முத்துமாலையில் இதுவும் உண்டோ?

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவில் நிரந்த கடற்படை மற்றும் இராணுவ தளத்தை சிறிலங்கா அமைக்கிறது - தமிழக மீனவர்கள் தகவல்

திகதி: 05.06.2009 // தமிழீழம்

கச்சத்தீவில் நிரந்தர ,ராணுவம் மற்றும் கடற்படை முகாமை அமைக்க சிறிலங்கா முயன்று வருவதாக அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்று, அந்நாட்டு கடற்படையினரால் துரத்தப்பட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.

அப்படி இராணுவ முகாம் கச்சத்தீவில் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய் விடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவால் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது கச்சத்தீவு. இருப்பினும் இந்திய மீனவர்கள் இங்கு தங்களது மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், ஓய்வு எடுத்துச் செல்லலாம் என இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஷரத்து உள்ளது.

ஆனால் இதை சிறிலங்கா நடைமுறை ரீதியாக என்றுமே கடைப்பிடித்ததில்லை. கச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, அடித்துத் துன்புறுத்துவது, மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து மிரட்டி அனுப்புவது என ரவுடித்தனம் செய்து வருகிறது.

இந்த நிலையில் கச்சத்தீவில் நிரந்தர கடற்படை மற்றும் இராணுவ முகாமை அமைக்க சிறிலங்கா நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 30ம் திகதி ராமேஸ்வரம் மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிக்கச் சென்றபோது கடற்படையினரால் தாக்கி விரட்டப்பட்டனர்.

அவர்கள்தான் கச்சத்தீவில் இராணுவ முகாம் அமைக்கும் வேலைகள் நடந்து வருவதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கச்சத்தீவுப் பகுதியில் தரையை சமப்படுத்தும் வேலை நடக்கிறது. அங்கு நூற்றுக்கணக்கான கடற்படையினரின் நடமாட்டம் உள்ளது.

சிறிலங்கா கடற்படை கப்பல்களும் காணப்படுகின்றன. கச்சத்தீவில் இராணுவ முகாம் அமைக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. அப்படி அமைந்தால் எங்களுக்கு பெரும் இடையூறாகி விடும். எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் அடுத்த இராணுவ முகாம் தமிழ்நாட்டிலை தான் அமையப் போகுது. புலிகளை அழித்த பின் உண்மையில் சிறிலங்காதான் உலக வல்லரசு இந்தியா கையாலாகாத சிற்றரசு சிறிலங்காவை அடக்கி வைத்த புலிகளை அழித்ததற்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். சீனாக்காரன் கொல்லைக்குள்ளேயே வந்துட்டான்.

ஏனையா

இராமேசுவரத்தில் யார் வென்றார்...???

அப்பாவி என்கின்றீர்?

நீங்கள் தமிழகம் வந்து பாருங்கள் அப்போது தெரியும் உண்மை நிலவரம்!

ராமேஸ்வரத்தில் தமிழக மீனவவர்கள் எல்லோரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததாக எண்ணமோ???

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கச்ச தீவில் குகை வசதிகளுடன் ஒரு "ஹொலிடே இன்ன்" கட்டினால் தோரா போரா மச்சான்மார் வந்து போக வசதியா இருக்குமே..... :lol:

கச்சதீவில் சீனக்கப்பல் வந்து போகலாம்... இது இறைமை உள்ள இலங்கையின் நடவடிக்கையில் இந்தியா தலையிட முடியாது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.