Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணமான ஆண்களுக்கு ஓர் நற்செய்தி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_45991857__45684639_spermegg226-1.jpg

நாளும் உடலுறவு கொண்டால் நல்ல வளமான ஆணணுக்கள் உருவாகுமாம்.

ஆண்கள் தினமும் அல்லது இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது உடலுறவு கொண்டால் அவர்களால் வளமான ஆணணுக்களை அதிகம் உருவாக்க முடியும் என்று அவுஸ்திரேலிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்கள் அதிக நாள் இடைவெளியில் உடலுறுவு கொள்வதால் அவர்களின் விந்தணுக்களில் உள்ள டி என் ஏ (DNA) மூலக்கூறுகள் சிதைவடைய அல்லது பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாகவும் அதேவேளை தினமும் உடலுறவு கொள்வதன் மூலம் புதிய விந்தணுக்கள் உருவாக அதிக சந்தர்ப்பம் அமைவதோடு டி என் ஏ யில் ஏற்படும் பாதிப்பும் சுமார் 12% குறைவடைவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இளம் ஆண்களைப் போன்று வயதான ஆண்கள் அதிகம் உடலுறவில் நாட்டம் காட்டுவதில்லை என்றும் இதுவும் பெண்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் பிரச்சனைக்கு காரணமாக அமைகின்றதாகவும் மேற்படி ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தினமும் உடலுறவு கொள்வது என்பது எல்லோராலும் சாத்தியப்படக் கூடிய விடயம் இல்லை என்றும் அதுமட்டுமன்றி தொடர்ச்சியாக (உதாரணத்துக்கு 14 நாட்கள்) உடலுறவு கொண்டால் இயற்கையாகவே ஆணணுக்களின் எண்ணிக்கையில் பெரிய வீழ்ச்சி காண்பிக்கப்படும் என்பதாலும் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தினங்கள் உடலுறவு வைத்துக் கொள்வது வளமான விந்துருவாக்கத்துக்கும் குழந்தைகள் உருவாக்கத்துக்கும் அதிக வாய்ப்பளிக்கும் எங்கின்றனர் ஆய்வாளர்கள்.

தினமும் உடலுறவு வைக்கப் பரிந்துரைப்பதிலும் குறிப்பாக பெண்களில் மாதவிடாயின் பின்னர் 12 தொடக்கம் 14ம் நாளில் முட்டை வெளியேற்றம் நிகழ்வதால் அந்த நாட்களில் தினமும் உடலுறவு வைப்பது வளமான விந்தணு முட்டையோடு சேர அதிக வாய்ப்பை அளிக்கும் என்கின்றார்கள் இவ்வாய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிற ஆய்வாளர்கள்.

பொதுவாக விந்தணுக்கள் விரைவில் பாதிப்படையக் கூடிய இயல்பைக் கொண்ட உயிரணுக்களாக விளங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவை அதிக உடல்வெப்பநிலையைக் கூட தாங்கக் கூடியவை அல்ல. அதுமட்டுமன்றி விந்தணுக்களை உடலுக்கு வெளியில் விந்தணு வங்கிகளில் சேமிக்கும் போது கூட அவை பிற இரசாயனக் கூறுகளால் விரைந்து பழுதடையச் செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

இந்தச் செய்தியை படித்துவிட்டு வீட்டில் ஆத்துக்காரிக்கு தொந்தரவு கொடுப்பது ஏற்புடையதல்ல. ஏனெனில் இந்த ஆய்வு பொதுமக்களுக்கு பரிந்துரைகளை வழங்க முன் இன்னும் பல நிலைகளூடு ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது எங்கின்றனர் ஆய்வாளர்கள். அதுமட்டுமன்றி ஒரு பெண்ணின் இயற்கையான நிலைக்கு மாறாக அவளை உடலுறவுக்கு கட்டாயப்படுத்துவது குற்றச் செயலாகும். அதேபோல் பெண்களும் ஆண்களை கட்டாயப்படுத்துதல் தவறாகும்.

ஆதார இணைப்பு: http://kuruvikal.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உந்த குண்டுமணி ,குருவிகள் ஆட்களுக்கு குண்டு வைக்கணும் போல் இருக்கு :lol::lol:

கல்யாண்ம் ஆகாத பிரம்மச்சாரியான எங்களுக்கு இப்படியான செய்திகளையா இணைப்பது :(:blink::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த குண்டுமணி ,குருவிகள் ஆட்களுக்கு குண்டு வைக்கணும் போல் இருக்கு :lol::(

கல்யாண்ம் ஆகாத பிரம்மச்சாரியான எங்களுக்கு இப்படியான செய்திகளையா இணைப்பது :blink::lol::)

நீங்க இப்படிச் சொல்லுறீங்க. என்ன தான் அறிவியலை எழுதினாலும் ஓரிரண்டு பேர் தான் படிக்கிறாங்க. ஆனா இப்படியான சமாச்சாரம் என்ற உடன சனம் அள்ளுப்பட்டு எல்லோ படிக்குது. ஆக சனம் உதுகளில தான் இப்ப ரெம்ப ஈடுபாடா இருக்குது என்பது புரிய வேணும். :(

ஆனால் இந்த ஆய்வு திருமணம் ஆகியும் குழந்தை கிடைக்காதவங்களுக்கு ஒரு சில வழிமுறைகளை இனங்காட்டுவதாகவே எனக்குப்படுகுது. :lol:

உந்த குண்டுமணி ,குருவிகள் ஆட்களுக்கு குண்டு வைக்கணும் போல் இருக்கு :lol::(

கல்யாண்ம் ஆகாத பிரம்மச்சாரியான எங்களுக்கு இப்படியான செய்திகளையா இணைப்பது :blink::lol::)

என்ன முனிவர்ஜீ இப்படி அலுக்கிறீர்கள்? ஆச்சிரமம் கைக்குள் இருந்த காலத்தில் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டீர்கள்? தினமும் என்ன தினமும். ஒரு நாளைக்கு சினிமா காட்சிபோல காலை, மாட்னி, மாலை, இரவு என்று காலம் ஓடியதல்லோ.

நீங்க இப்படிச் சொல்லுறீங்க. என்ன தான் அறிவியலை எழுதினாலும் ஓரிரண்டு பேர் தான் படிக்கிறாங்க. ஆனா இப்படியான சமாச்சாரம் என்ற உடன சனம் அள்ளுப்பட்டு எல்லோ படிக்குது. ஆக சனம் உதுகளில தான் இப்ப ரெம்ப ஈடுபாடா இருக்குது என்பது புரிய வேணும். :(

ஆனால் இந்த ஆய்வு திருமணம் ஆகியும் குழந்தை கிடைக்காதவங்களுக்கு ஒரு சில வழிமுறைகளை இனங்காட்டுவதாகவே எனக்குப்படுகுது. :lol:

அதுசரி, நீங்க எதுக்கு இதெல்லாம் படிக்கிறீர்கள்?

குமாரசாமி தாத்தாவைக் கேட்டிருந்தால் அவரே சொல்லியிருப்பார். அதை விட்டுப்போட்டு உவங்களும் உவங்கட ஆராய்சியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப நாங்கள் என்னங்க செய்யுறது அதுதான் கலியாணம் கட்டாத ஆக்கள் அதையும் ஒருக்கா சொல்லுமன் நெடுக்ஸ் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நாங்கள் என்னங்க செய்யுறது அதுதான் கலியாணம் கட்டாத ஆக்கள் அதையும் ஒருக்கா சொல்லுமன் நெடுக்ஸ் :lol:

இதை நான் சொல்லித்தானா தெரியனும். உலகத்துக்கே தெரியுமே என்ன செய்யுறாங்க என்று.. கலியாணம் ஆகாத ஆண்கள் பெண்கள். ஆனால் நான் நல்ல பிள்ளை ஆக்கும்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இப்படிச் சொல்லுறீங்க. என்ன தான் அறிவியலை எழுதினாலும் ஓரிரண்டு பேர் தான் படிக்கிறாங்க. icon_idea:

:lol: அறிவியலை மற்றவர்கள் பார்த்து கொள்வார்கள் என்றுதான் அதிகம் வாரதில்லை.,ஆனால் இந்த விடயத்தையும் அப்படி விடஏலாதே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான ஆண்களுக்கு ஓர் நற்செய்தி..!

_45991857__45684639_spermegg226-1.jpg

நாளும் உடலுறவு கொண்டால் நல்ல வளமான ஆணணுக்கள் உருவாகுமாம்.

ஆண்கள் தினமும் அல்லது இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது உடலுறவு கொண்டால் அவர்களால் வளமான ஆணணுக்களை அதிகம் உருவாக்க முடியும் என்று அவுஸ்திரேலிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

------

திருமணமாகாத ஆண்கள் தினமும் வாய்ப்பாடு படித்து விட்டு .........

திருமணம் செய்தால் எதிர்பார்த்த , நல்ல வளமான , நல்ல ஆரோக்கியமான, ஆணணுக்களை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்ய முடியுமே .......

" இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும் ,

மற்றைய கிணறு கிடந்து நாறும் "

என்று சும்மாவா நம்ம முன்னோர்கள் சொன்னார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான ஆண்களுக்கு ஓர் நற்செய்தி..!

நெடுக்ஸ் திருமணம் ஆகாத ஆண்களக்கு நற்செய்தி விபரித்து எழுதுங்க :lol:

" இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும் ,

மற்றைய கிணறு கிடந்து நாறும் "

என்று சும்மாவா நம்ம முன்னோர்கள் சொன்னார்கள் .

:icon_idea::lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான ஆண்களுக்கு ஓர் நற்செய்தி என்றபடியால் நான் நன்றி சொல்லப் போறது இல்லை ஆனால் இது தொடர்பாக எனது சந்தேகம் என்னவென்றால்;

1)திருமணம் முடித்த தம்பதியினர் பொருளாதார நிலைமை காரணமாகவோ அல்லது வேறு காரணங்களால் குழந்தை பெறுவதை தவிர்த்தால் குறிப்பாக அவர்கள் 2,3 வருடங்களுக்கு உடலுறவு கொள்வதை தவிர்த்தால் [சில பேர் கருத்தடை மாத்திரை ஆணுறை பாவிப்பதை விரும்பா விட்டால்] அந்த குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு அவர்கள் உடலுறவு கொள்வதோ குழந்தை பெறுவதோ கஸ்டமா?

2)தம்பதியினருக்கு குறிப்பாக ஆண்களுக்கு நீரழிவு நோய் இருந்தால் அவர்களுக்கு உடலுறவில் நாட்டம் குறையுமா?

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான ஆண்களுக்கு ஓர் நற்செய்தி என்றபடியால் நான் நன்றி சொல்லப் போறது இல்லை ஆனால் இது தொடர்பாக எனது சந்தேகம் என்னவென்றால்;

1)திருமணம் முடித்த தம்பதியினர் பொருளாதார நிலைமை காரணமாகவோ அல்லது வேறு காரணங்களால் குழந்தை பெறுவதை தவிர்த்தால் குறிப்பாக அவர்கள் 2,3 வருடங்களுக்கு உடலுறவு கொள்வதை தவிர்த்தால் [சில பேர் கருத்தடை மாத்திரை ஆணுறை பாவிப்பதை விரும்பா விட்டால்] அந்த குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு அவர்கள் உடலுறவு கொள்வதோ குழந்தை பெறுவதோ கஸ்டமா?

2)தம்பதியினருக்கு குறிப்பாக ஆண்களுக்கு நீரழிவு நோய் இருந்தால் அவர்களுக்கு உடலுறவில் நாட்டம் குறையுமா?

உங்கள் கேள்விகள் இரண்டுக்கும் ஓரளவு விடை தெரியும் என்ற காரணத்தால் (படிச்சதை வைச்சு) சொல்ல முனைகிறேன்.

முதலாவது கேள்விக்கு விடையளிக்க தம்பதியினரின்.. வயது குறிப்பாக பெண்களின் வயது இங்கு முக்கியம். பெண் என்றால் 35 வயதுக்கு உள்ளாகவும் ஆண் என்றால் 45 வயதுக்கு உள்ளாகவும் இருக்கும் பட்சத்தில் பிரச்சனைகள் இருக்க வாய்ப்புக் குறைவு. ஆனால் குறிப்பிட்ட வயதெல்லையைக் கடந்த பெண்களில் ஆண்களில் பொதுவாக கருக்கட்டல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் அவதானிக்கப்படுகிறது. இருந்தாலும்.. நல்ல தேகாரோக்கியம் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் தோன்றாமலும் இருக்கலாம்.

எதுஎப்படியோ இப்போ பரிசோதனைக் குழாய் குழந்தை முறைகள் 25 தொடக்கம் 40 வயது வரையான பெண்களுக்கு மட்டுமே பாவிக்க அனுமதிக்கின்றனர். 25 வயதுக்கு குறைவான பெண்களுக்கு பொதுவாக இது தேவையாக அமைவதில்லை. விசேட காரணங்கள் இன்றேல். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் கருப்பை பலவீனம் அடைவதால் அவர்களுக்கு பொதுவாக பரிசோதனைக் குழாய் குழந்தைகள் உருவாக்க ஊக்குவிப்பதில்லை. தீவிரமாக விரும்பின் மட்டும் பலமான ஆலோசனைகள் வழங்கிய பின் சிகிச்சை அளிக்கப்படுவது உண்டு.

இரண்டாவது கேள்விக்கு விடை ஆம்.

நீரிழிவுள்ள ஆண்களில் உடலுறவில் நாட்டம் குறைவது மட்டுமன்றி ஆணுறுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தோன்றலாம். விந்து எண்ணிக்கையும் குறையலாம். எனவே நீரிழிவுள்ள ஆண்கள் தகுந்த கிரமமான வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்தது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தம்பி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா யாழிலையும் ஒரு மாத்துருபுதம் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாத்துருபுதம்

அப்படின்னா என்ன..??! புரியல்லையே. இதில ஒன்னும் தப்போ அல்லது அசிங்கமோ எழுதல்லையே. இவை அனைத்தும் மனித உயிரியலுக்குள் அடங்கும் விடயங்கள் தான்.

உங்களுக்கு எப்படியோ எனக்கு மனிதனும்.. ஒரு உயிரி தான். உயிரியலுக்கு அதிகப்படியாக அல்லது அதற்கு வெளியில் நான் எதனையும் எழுதவில்லை. எழுதவும் மாட்டேன். ஏன்னா நான் என் கல்வியை எப்போதும் மதிக்கிறேன். மனிசங்கள மதிக்கிறதுக்கு மேலால மனிதனைப் பற்றி சொல்லும் அறிவியலை மதிக்கிறன்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை பழசுகள் அனுபவரீதியாக கண்டறிஞ்சதை இப்ப உள்ளவை கண்டறியாத படிப்பை படிச்சுப்போட்டு அறிக்கை விடீனம். :icon_idea:

எங்கடை இயற்கையான சாப்பாடுகளையும் வாழ்க்கைமுறையளையும் கடைப்புடிச்சாலே நூறுவயதிலையும் ............. :D

இப்ப உள்ள இளசுகள் இரண்டாந்தரத்துக்கே குளிசையை போட்டுட்டு முக்கிக்கொண்டு திரியினம் :lol: (மைக்டோனால்ஸும் மண்ணாங்கட்டியும்)

தம்பி ராசாக்களே?

உங்களுக்கு ஒண்டை மட்டும் சொல்லுறன்.எங்கடை சாப்பாடுகள் எல்லாம் மருத்துவரீதியாக உடம்புக்கு விக்கனம் இல்லாதது. :D

இவங்கள் வெள்ளையளின்ரை நாகரீக சாப்பாடுகளை அமுக்கிப்போட்டு பின்விளைவுகளாலை அவதிப்படாதேங்கோ. :D

வெள்ளையளே இப்ப உடம்புக்கு நல்லதெண்டு எங்கடை சாப்பாடுகளை தேடி அலைஞ்சுதிரிஞ்சு சாப்பிட்டுக்கொண்டு திரியுதுகள். :lol:

நல்லாய் வெண்டிக்காய் சின்னவெங்காயம் மாம்பழம் முருக்கமிலை கெக்கரிக்காய் எண்டு போட்டு சாத்துங்கோ :D

மனரீதியாய் அன்பு ஆரோக்கியம் எல்லாம் தானாய் பெருகும் :(

" இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும் ,

மற்றைய கிணறு கிடந்து நாறும் "

'விந்து விட்டான் நொந்து கெட்டான்' என்றும் எங்கடையளிண்ட பொன்மொழி ஒன்று இருக்கிது. தெரியுமோ தமிழிசிறீ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படின்னா என்ன..??! புரியல்லையே. இதில ஒன்னும் தப்போ அல்லது அசிங்கமோ எழுதல்லையே. இவை அனைத்தும் மனித உயிரியலுக்குள் அடங்கும் விடயங்கள் தான்.

உங்களுக்கு எப்படியோ எனக்கு மனிதனும்.. ஒரு உயிரி தான். உயிரியலுக்கு அதிகப்படியாக அல்லது அதற்கு வெளியில் நான் எதனையும் எழுதவில்லை. எழுதவும் மாட்டேன். ஏன்னா நான் என் கல்வியை எப்போதும் மதிக்கிறேன். மனிசங்கள மதிக்கிறதுக்கு மேலால மனிதனைப் பற்றி சொல்லும் அறிவியலை மதிக்கிறன்..! :icon_idea:

மாத்ருபூதம் என்பது இந்தியாகார வைத்தியர் ஒருவர் என்று எதோ ஞாபகம்....

நீங்கள் சொன்னதில் எந்த பிழையும் இல்லை...சேகுவாரா சிரித்து கொண்டு சொன்னதை பார்த்தால் நகைசுவையாக தான் சொல்லி இருக்கிறார் போல....

take it easy...

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ராசாக்களே?

உங்களுக்கு ஒண்டை மட்டும் சொல்லுறன்.எங்கடை சாப்பாடுகள் எல்லாம் மருத்துவரீதியாக உடம்புக்கு விக்கனம் இல்லாதது. :lol:

நல்லாய் வெண்டிக்காய் சின்னவெங்காயம் மாம்பழம் முருக்கமிலை கெக்கரிக்காய் எண்டு போட்டு சாத்துங்கோ :D

எங்கட சாப்பாடு நல்லது சரி குமாரசாமி அண்ணா, ஆனால் மனசாட்சியை தொட்டு சொல்லுங்க - இதெல்லாம் இங்க எல்லாருக்கும் கிடைக்க கூடிய சாமான்களா?

வெண்டிக்காய் சின்னவெங்காயம் மாம்பழம் முருக்கமிலை கெக்கரிக்காய்

- இதில முதல் மூண்டும் நான் கண்டே மூண்டு நாலு வருஷம் இருக்கும்.... :D

- முருக்கமிலை கண்டு/ தின்று 18 வருஷம் இருக்கும்... :(

- கடைசியா நீங்கள் எழுதினது - அது என்ன என்று கூட தெரியவில்லை! :lol:

என்னை மாதிரி பாவப்பட்ட சீவனுகளும் இருக்கு...நீங்கள் அன்றாடம் சாப்பிடற சாப்பாடுகளை வரிசையா எழுத, எனக்கு வயிறு புகையுது.... :D:icon_idea:

ம்ம்ம்....

இதன் உற்பத்தியினை குறைக்கும் வழி கிழி ஏதேனும் தந்தால் அடியேனுக்கு நன்மை பயக்கும். மனிசர் ஏதாவது தியானம் விரதம் இருந்து இந்த தொல்லையில் இருந்து தப்பிக்க வழி தேடும் போது எப்படி அதிகரிக்க வைக்கின்றது என திரி போட்ட நெடுக்ஸ் இற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

'விந்து விட்டான் நொந்து கெட்டான்' என்றும் எங்கடையளிண்ட பொன்மொழி ஒன்று இருக்கிது. தெரியுமோ தமிழிசிறீ?

மாப்பிளை , எங்கடையள் சொன்னதன் அர்த்தம் ...... " எய்ட்ஸ் உள்ளவருக்கு , விந்து விட்டான் நொந்து கெட்டான் " என்பதை தான் சூட்சுமமாக சொல்லியுள்ளார்கள் .

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்....

இதன் உற்பத்தியினை குறைக்கும் வழி கிழி ஏதேனும் தந்தால் அடியேனுக்கு நன்மை பயக்கும். மனிசர் ஏதாவது தியானம் விரதம் இருந்து இந்த தொல்லையில் இருந்து தப்பிக்க வழி தேடும் போது எப்படி அதிகரிக்க வைக்கின்றது என திரி போட்ட நெடுக்ஸ் இற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கின்றேன்

இருக்கே. உங்களுக்கும் வழிமுறைகள் இருக்கு. நீங்கள் அதை முன்னெரெல்லாம் கடைப்பிடிச்சிருக்கவும் கூடும். அதையே தொடருங்கள். பாதுகாப்பான இயற்கையான வழிமுறை அது. அதிசயமாப் பார்க்காதேங்கோ mastrubation தான் அது. mastrubation இல் நாட்டமில்லாதவர்கள்.. சாதாரணமாக இருக்கலாம்.. இயற்கையாகவே அது நிகழும்... ஊரில சொல்லுவாங்க.. சாரத்தில உலகப் படம் வரைஞ்சிட்டு திரியுறாண்டா என்று. அப்ப புரியல்ல. இப்பதான் புரியுது.. ஏன் நம்மாக்கல் சாரம் கட்டிறவை என்று. எல்லாம் ஒரு வசதிதான்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்....

இதன் உற்பத்தியினை குறைக்கும் வழி கிழி ஏதேனும் தந்தால் அடியேனுக்கு நன்மை பயக்கும்.

இரும்பில காற்சட்டை ஒன்றை அப்படியே வெல்டிங் செய்து விடலாம் நீங்கள் பேசாம..... :icon_idea:

...ஊரில சொல்லுவாங்க.. சாரத்தில உலகப் படம் வரைஞ்சிட்டு திரியுறாண்டா என்று. அப்ப புரியல்ல. இப்பதான் புரியுது.. ஏன் நம்மாக்கல் சாரம் கட்டிறவை என்று. எல்லாம் ஒரு வசதிதான்..! :icon_idea:

:lol: :lol: :D

இரும்பில காற்சட்டை ஒன்றை அப்படியே வெல்டிங் செய்து விடலாம் நீங்கள் பேசாம..... :(
:D :D
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உள்ள இளசுகள் இரண்டாந்தரத்துக்கே குளிசையை போட்டுட்டு முக்கிக்கொண்டு திரியினம் :icon_idea: (மைக்டோனால்ஸும் மண்ணாங்கட்டியும்)

:lol: கருனாநிதி இரண்டு பென்டாட்டியுடன் சமாளிக்கிறார் .......என்கன்ட பெடியள் இரண்டாம் தரம் ...குளிசையோ ...நம்பமுடியவில்லை :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.