Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடைந்த மூங்கிலானேன்: நிழலி

Featured Replies

உடைந்த மூங்கிலானேன்:

ஒரு உடைந்த மூங்கில் பற்றி

யாரும் கவலைப் பட வேண்டாம்

உடைந்த மூங்கிலால்

புல்லாங்குழல்

ஆக முடியவில்லை

அது முகாரி பாடியதா

இல்லை

புரட்சி பாடியதா

இல்லை

தன்னையே உடைத்து

அழுகுரலை

இசைத்ததா

யாரும் கவலைப்

படவேண்டாம்

மூங்கிலின் மேலிருந்த

குருவி

தன் காதலனின்

வீரச் சாவு கேட்டு

அழுது குளறியது

மூங்கிலை

கடந்த காற்று

தன் தலைவனின்

வீர மரணம் பற்றி

ஓங்கி அறைந்து

ஒப்பாரி வைத்தது

மூங்கில் அழவில்லை

மூங்கில் ஒப்பாரி வைக்கவில்லை

தன்னை கடக்கும்

காற்றனைத்தும் அழுகை அல்ல

இசை என்றது

அதன்

உடைவு ஆரம்பித்து

இருந்ததை

அது அறியவில்லை

இன்னும்

புல்லாங்குழல் ஆகலாம்

எனும் கனவில்

அது மிதந்தது

மூங்கிலால்

தன் உடைவை

நம்ப முடியவில்லை

தன் காதலியுடன்

சல்லாபித்தது

தன் ஆசை நாயகியுடன்

காமுற்றது

இன்னும்

போதை ஏறிய கண்களுடன்

காமம் தேடி அலைந்தது

பெண் வாசம் தேடி

அண்டம் வரை சென்றது

மூங்கில் உடைந்து விட்டது

என அயலவர்

சொன்னர்

இது அதன் அந்திம காலம்

என உறவினர்

சொன்னர்

அதன் இறுதி நாள்

இதுவென

எல்லோரும்

உரைத்தனர்

மூங்கிலின் வீட்டு

வாசலில்

பாடை கட்டப் பட்டுகொண்டிருக்கு

தெருவில் பறை அடிப்பவன்

சென்றான்

ஒற்றை மாடு

அசை போட்டு

சென்றது

யாருமற்ற வெளியில்

தலைவன் நடந்து

போனான்

அவனின் பின்னால்

அவனது நிழல் கூட

இல்லை

மூங்கில்

தன் உடைவு பற்றி

இன்னும் அறியவில்லை

அதன்

ஒவ்வொரு கணுவிலும்

கண்ணீர் இருக்கு

எனவும் அறியவில்லை

அது பாட்டுக்கு

கவிதை எழுதிச் சென்றது

இரவின் நடு நிசியில்

மாண்ட தோழர் பற்றி

கனவு கண்டது

தான் அவர்களுக்காய்

புல்லாங்குழல் ஆனது

பற்றியும் கனவு கொண்டது

உடைந்து

கண்ணீர் ஒழுகும்

மூங்கில் பற்றி யாரும்

அழ வேண்டாம்

அது புல்லாங்குழல்

கனவில் இன்றும்

கவிதை எழுதுகின்றது

*************

நிழலி

05 aug 2009 10`28 PM

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி அண்ணா அருமையான கவிதை காலங்களை கடந்து நிகழ்காலத்தை நன்றே சொல்லி செல்கிறது.

உடைந்த மூங்கிலினூடு சொல்ல வந்த இன்றைய நிலையையும் சொல்லி சென்றுள்ளீர்கள்.

உடைந்தது மூங்கில் மட்டும் தானா? எல்லோருடைய மனங்களும் தான்... அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு கற்பனையில்

கவி எழுதிக்கொண்டே இருக்கும்.

பாராட்டுக்கள் அண்ணா தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா உங்களின் கவிதை மிக....மிக நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள் காத்திருந்து படிப்போம்.

யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

மூங்கிலை

கடந்த காற்று

தன் தலைவனின்

வீர மரணம் பற்றி

ஓங்கி அறைந்து

ஒப்பாரி வைத்தது

மூங்கில் அழவில்லை

மூங்கில் ஒப்பாரி வைக்கவில்லை

தன்னை கடக்கும்

காற்றனைத்தும் அழுகை அல்ல

இசை என்றது

அதன்

உடைவு ஆரம்பித்து

இருந்ததை

அது அறியவில்லை

இன்னும்

புல்லாங்குழல் ஆகலாம்

எனும் கனவில்

அது மிதந்தது

உடைந்த மூங்கிலின் நிலைமையை உருவகப்படுத்தி கவிதை எழுதிய விதம் அழகு.

கவிதையின் ஆரம்பப்பகுதியைவிட மற்றைய பகுதியில் மூங்கிலோடு காற்றை ஒப்புவித்தமை அழகு.

மேலும் எழுதுங்கள்.

வாழ்த்துகள்.

யாருமற்ற வெளியில்

தலைவன் நடந்து

போனான்

அவனின் பின்னால்

அவனது நிழல் கூட

இல்லை

இனமும் நாளை தலைவன் போலவே

  • கருத்துக்கள உறவுகள்

மூங்கில் உடையவில்லை. புல்லாங்குழல் கனவை விட்டு ஊசியிலை மரமாகவும் கள்ளிச் செடியாகவும் மாற்றம் பெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கவி வரிகள் நிஜத்தை சொல்கின்றன .பதிவுக்கு நன்றி . கனவுகள் ஒரு நாள் கலையும் காத்திருப்போம்.

  • தொடங்கியவர்

கருத்து சொன்ன, பதில் எழுதிய அனைத்து அன்பான நெஞ்சங்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

என் கவிதைகளின் முதல் வாசகி என் மனைவி கூட இந்த கவிதையின் பொழிப்பு என்ன என்று கேட்டார்., புரியாத கவிதை எழுதி பெரிய பருப்பாக எண்ணமா என email மூலம் கேட்ட முகமறியா இரு நண்பர்கள் நக்கல் பண்ணி இருந்தனர்

என்னைப் பொறுத்தவரைக்கும், வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியாது என கருதும் இடங்களில் படிமங்களை இட்டு நிரப்புகின்றேன்.

ஒற்றை மாடு

அசை போட்டு

சென்றது

எனும் போது, மாடுகள் பொதுவாக கூட்டமாக செல்லும். ஒற்றை மாடு தனிமையின் அடையாளம். அதைக் கண்டுள்ளேன் நான். ஒரு வீதியில் யாருமற்ற தனிமையில் ஒற்றை மாடு மட்டும் போகும் காட்சி மனசில் வரும் போது வெறுப்பு நிறைந்த தனிமை தான் எனக்கு உணர்வாகின்றது

யாருமற்ற வெளியில்

தலைவன் நடந்து

போனான்

அவனின் பின்னால்

அவனது நிழல் கூட

இல்லை

எனும் போது, தன் குடும்பத்தை கூட தான் கொண்ட இலட்சியத்திற்காய் பறிகொடுத்து போராடிய ஒப்பற்ற வரலாற்று தலைவனே தனக்கு பின்னால் ஆள் இல்லாமல் தனிமையில் சென்றான் என சொல்ல முடிகின்றது

நான் கவிதைகளை ஒருபோதும் எழுதி, அதை திருத்தி, மாற்றி மீண்டும் எழுதுவது கிடையாது. என்ன உணர்வில் எழுத ஆரம்பித்தேனோ அதே உணர்வில் ஒரே மூச்சில் எழுதி முடித்து விடுகின்றேன். அடுத்த வரி கூட என்னவென்று முதல் வரி எழுதும் போது கிடையாது. எந்த இலக்கும் இன்றி அந்த நேர உணர்வின் பாற்பட்டு கவிதை எழுதுகின்றேன். சொற்களின் கோர்வை அந்த நேரத்தில் உணர்வில் எழுபவை, மற்றவருக்கு புரியாது போயின் அது என் தவறே.....

மற்றப் படி உடைந்த மூங்கிலாக என்னையும் கருதலாம்..... கே.பி யையும் கருதலாம்.....கொஞ்சம் தமிழ் தேசியத்திற்காய் உதவி புரிந்து விட்டு "நான் தான் தமிழ் ஈழ விடுதலைக்கு என்னால் ஆன எல்லாம் செய்துட்டன்... இனி பேசாமல் இருப்பம்" என கருதும் எல்லாரையும் கருதலாம்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பிற்க்குப் பாராட்டுகள்.

காலங்களை பதிவு செய்து செல்லும் வரலாற்றாவணமாகிவிடுகிறது சில கவிதைகள்.

உடைந்த மூங்கில்கள் புல்லாங்குழல் ஆக முடியாது விடினும் உரமாகவாவது பயன்படலாம். உலகத் தமிழினமே உறுதியோடு உரமாவோம்.

கவிதையென்பது உணர்வின் ஊற்றே அதனால்தான் அது ஏதோ ஒரு விதத்தில் எல்லோருணர்வையும் தழுவிச் செல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சொன்ன, பதில் எழுதிய அனைத்து அன்பான நெஞ்சங்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

என் கவிதைகளின் முதல் வாசகி என் மனைவி கூட இந்த கவிதையின் பொழிப்பு என்ன என்று கேட்டார்., புரியாத கவிதை எழுதி பெரிய பருப்பாக எண்ணமா என email மூலம் கேட்ட முகமறியா இரு நண்பர்கள் நக்கல் பண்ணி இருந்தனர்

என்னைப் பொறுத்தவரைக்கும், வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியாது என கருதும் இடங்களில் படிமங்களை இட்டு நிரப்புகின்றேன்.

ஒற்றை மாடு

அசை போட்டு

சென்றது

எனும் போது, மாடுகள் பொதுவாக கூட்டமாக செல்லும். ஒற்றை மாடு தனிமையின் அடையாளம். அதைக் கண்டுள்ளேன் நான். ஒரு வீதியில் யாருமற்ற தனிமையில் ஒற்றை மாடு மட்டும் போகும் காட்சி மனசில் வரும் போது வெறுப்பு நிறைந்த தனிமை தான் எனக்கு உணர்வாகின்றது

யாருமற்ற வெளியில்

தலைவன் நடந்து

போனான்

அவனின் பின்னால்

அவனது நிழல் கூட

இல்லை

எனும் போது, தன் குடும்பத்தை கூட தான் கொண்ட இலட்சியத்திற்காய் பறிகொடுத்து போராடிய ஒப்பற்ற வரலாற்று தலைவனே தனக்கு பின்னால் ஆள் இல்லாமல் தனிமையில் சென்றான் என சொல்ல முடிகின்றது

நான் கவிதைகளை ஒருபோதும் எழுதி, அதை திருத்தி, மாற்றி மீண்டும் எழுதுவது கிடையாது. என்ன உணர்வில் எழுத ஆரம்பித்தேனோ அதே உணர்வில் ஒரே மூச்சில் எழுதி முடித்து விடுகின்றேன். அடுத்த வரி கூட என்னவென்று முதல் வரி எழுதும் போது கிடையாது. எந்த இலக்கும் இன்றி அந்த நேர உணர்வின் பாற்பட்டு கவிதை எழுதுகின்றேன். சொற்களின் கோர்வை அந்த நேரத்தில் உணர்வில் எழுபவை, மற்றவருக்கு புரியாது போயின் அது என் தவறே.....

மற்றப் படி உடைந்த மூங்கிலாக என்னையும் கருதலாம்..... கே.பி யையும் கருதலாம்.....கொஞ்சம் தமிழ் தேசியத்திற்காய் உதவி புரிந்து விட்டு "நான் தான் தமிழ் ஈழ விடுதலைக்கு என்னால் ஆன எல்லாம் செய்துட்டன்... இனி பேசாமல் இருப்பம்" என கருதும் எல்லாரையும் கருதலாம்

உடைந்த மூங்கிலின் விளக்கம் அழகு

ச்சே... கொஞ்சம் பிந்திப் போட்டன்.

உடைஞ்ச மூங்கிலால நிழலிக்கு நாலு சாத்துச் சாத்தி இருக்கலாம் மிஸ் பண்ணிட்டன். அடுத்த முறை பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

ச்சே... கொஞ்சம் பிந்திப் போட்டன்.

உடைஞ்ச மூங்கிலால நிழலிக்கு நாலு சாத்துச் சாத்தி இருக்கலாம் மிஸ் பண்ணிட்டன். அடுத்த முறை பாப்பம்.

எல்லோருக்கும் நாலு சாத்து சாத்தப் போறிங்கள் போலிருக்கே

என்ன இன்னைக்கு freeயாக இருக்கிறிங்கள் போலிருக்கே

கறுப்பி அடிக்கடி இங்கால வர முடியல..... வந்தபோது ஆதி வந்திட்டுப் போயிருக்கேன் எண்டு முத்திரை பதிக்கோணும். கண்ணுக்காதீங்க கறுப்பி எல்லாம் ஒரு பிரபலந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

யாருமற்ற வெளியில்

தலைவன் நடந்து

போனான்

அவனின் பின்னால்

அவனது நிழல் கூட

இல்லை

:icon_idea::D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்கள் பார்வை எல்லோரிலும் இருந்து மாறுபட்டதாய் இயலாமையை எப்படிச் சொல்வது என்று பலரும் தவிக்கும் கணத்தில் உடைந்த மூங்கிலானேன் என்று ஒப்பாரியும் அல்லாது, ஓர்மமும் இல்லாது ஆதங்கத்தை, இயலாமையின் செறிவை இப்படியும் படைக்கலாம் மற்றவர்களுக்கு உணர்த்தலாம் என்ற நம்பிக்கையின் வெற்றியைக் இக்கவிதை வரிகளுக்குள் காண்கிறேன். இருப்பினும் இயலாமையின் ஆதங்கத்தை மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்துவது என்பது இனிவரும் காலங்களில் முயலாமை என்ற நிலைகளைத் தோற்றுவிக்கக்கூடும். எழுதுகோல்கள் எதிர்கால வழிகாட்டிகளாகவும் முயலாமைகளைப் பொசுக்கும் முன்னுதாரணங்களாகவும் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையானவையாக இருக்கின்றன. புல்லாங்குழல் எதற்கு? உடைந்த மூங்கிலைச் செதுக்கிப்பாருங்கள்.

  • தொடங்கியவர்

நிழலி உங்கள் பார்வை எல்லோரிலும் இருந்து மாறுபட்டதாய் இயலாமையை எப்படிச் சொல்வது என்று பலரும் தவிக்கும் கணத்தில் உடைந்த மூங்கிலானேன் என்று ஒப்பாரியும் அல்லாது, ஓர்மமும் இல்லாது ஆதங்கத்தை, இயலாமையின் செறிவை இப்படியும் படைக்கலாம் மற்றவர்களுக்கு உணர்த்தலாம் என்ற நம்பிக்கையின் வெற்றியைக் இக்கவிதை வரிகளுக்குள் காண்கிறேன். இருப்பினும் இயலாமையின் ஆதங்கத்தை மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்துவது என்பது இனிவரும் காலங்களில் முயலாமை என்ற நிலைகளைத் தோற்றுவிக்கக்கூடும். எழுதுகோல்கள் எதிர்கால வழிகாட்டிகளாகவும் முயலாமைகளைப் பொசுக்கும் முன்னுதாரணங்களாகவும் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையானவையாக இருக்கின்றன. புல்லாங்குழல் எதற்கு? உடைந்த மூங்கிலைச் செதுக்கிப்பாருங்கள்.

சாகரா,

நீங்கள் கனவு காண்கின்றீர்கள்: என்னால் முடியவில்லை

என்னில் இருந்து, என் உணர்வுகளில் இருந்துதான் என் கவிதைகள் வருகின்றன

என்னால் மிக நேசிக்கப்படும் தமிழ் தேசியத்திற்காய், தமிழீலத்திற்காய் என் பிள்ளைகளை போருக்கு என்னால் அனுப்ப முடியாது: ஈழத்தில் எந்த வாய்ப்பும் அற்ற குழந்தைகள் எம் கனவை சுமந்து போரிட வேண்டும் என நான் விரும்பவில்லை. உங்களால் முடிந்தால் போரிற்கு அனுப்புங்கள். என்னால் நிச்சயம் முடியாது

ஒரு பெரும் கனவு எம் ஒட்டு மொத்த ஒற்றுமையின்மையால் சிதைந்துவிட்டது

தோல்வியை விட நம்பிக்கையீனத்தை விதைத்தது எம் ஒற்றுமையின்மை: இராணுவ ரீதியான தோல்வி அல்ல

உங்களால் ஒற்றுமையான தமிழ் சமூகத்தை கனவு காண முடியுது: என்னால் முடியாது: ஏனெனில் நானும் தமிழன்

என் பேரனின் பேரன் என் கனவை சுமக்கட்டும்

நான் என் கவிதைகளை சுமக்கின்றேன்

உடைந்த மூங்கில் உக்கிப் போகாமல் பாதுகாப்பதே பெரும் வேதனையாக இருக்கும் போது, செதுக்குவது பற்றி கனவு காண முடியாது

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.