Jump to content

ஈழம்..இனி ஆயுதப்போர் சாத்தியமா??


sathiri

Recommended Posts

sathyaseelan.jpg

ஈழத்தில் இலங்கையரசின் அடக்குமுறைகளிற்கெதிரான அறவழிப்போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு திருப்புமுனையானயாக 1970 ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்கிற மாணவர் அமைப்பினை அமைத்து ஈழத்தமிழரிற்கு இனி ஆயுதப் போராட்டம்மூலமாகவே தீர்வு ஏற்படுமென்று தீர்மானமெடுத்தவர்களின் முக்கியமானவர்களில் சத்தியசீலனும் ஒருவர்..இவரது மாணவர் பேரவையிலிருந்தே பிற்காலங்களில் பிரபாகரன்உட்பட பலஇயக்கங்களையும் தொடங்கிய தலைவர்கள் அனைவரும் தோன்றியிருந்தனர்.இன்று ஈழத்தில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஆயுதப்போர் மூலமே தீர்வு எனமுடிவெடுத்த சத்தியசீலனுடனான ஒரு நேர்காணல்..

Get Flash to see this player.

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிறைய,நிறைந்த விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.

புரிந்தவனுக்கு சொல்லத்தேவையுமில்லை.

புரியாதவனுக்கு சொல்லி பிரயோசனமுமில்லை.

பேட்டி கண்ட சயந்தனுக்கும் பாராட்டுக்கள்.

சாத்திரிக்கு பாராட்டு கீராட்டு ஒண்டுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் டப்பிங்தான் :lol: கதை வசனம் எல்லாம் சாத்திரிதான்... அப்புறம் சொல்லாமல் கொள்ளாமல் நான்தான் என கண்டுபிடிக்கிறீங்க :lol: பெரிய SPB தான் நான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியசீலன்...நீங்களுமா,,???ஆயுதப்போராட்டம் தேவையா இல்லையா என்பது இப்போதைய கேள்வி இல்லை.இந்த ஆக்கம் பற்றிய என்னுடைய சில பார்வைகளுக்கு சத்தியசீலனிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.சத்தியசீல

Link to comment
Share on other sites

ஆயுத போராட்டம் தான் ஒரே வழி என முதன் முதலில் சொன்னவர் இவராக இருக்கலாம். அதற்கு பலர் செயல்வடிவம் கொடுத்தார்கள். தான் தாக்குதல் நடாத்தியதாக எங்கேயும் அவர் குறிப்பிடவில்லை.

அரசியல் ரீதியாக மட்டும் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்கும் என்றால் கனவிலும் நடக்காது. ஒரு கெரில்லா போராட்டத்தினூடான அரசியல் போராட்டம் ஒரு வேளை தமிழர்களின் உரிமைகளை பெற்று கொடுக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதன் முடிவு தமிழீழத்தில் வாழும் மக்கள் சார்ந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலப்பகுதி என்பது சிறுகியதாகவும் இருக்கலாம். ஆனால் சத்தியசீலன் சொல்வது போல போராட்டம் என்பது முடிவடையவில்லை. ஏனென்றால் நாங்களும் சிங்களவர்களும் 1000 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்....

Link to comment
Share on other sites

ஒரு ஆயுதப்போராட்டத்தையோ அல்லது அரசியல் போராட்டத்தையோ செய்யக் கூடிய தகுதியில் இந்த இனம் இல்லை என்பதையே இந்தக் காலம் உணர்த்தி நிற்கின்றது. ஒரு காலத்தில் இலங்கை அரசை எதிர்க்க வேண்டிய தேவை சில நாடுகளுக்கு வரும் போது தமிழர்களை பயன்படுத்துவார்கள் என்பது சாத்தியம் ஆனால் அதற்க்கு தகுதியுடையவனாக தமிழன் இல்லை என்பதே யதார்த்தம். தமிழினத்தை நம்பி எந்த நாடும் எந்தக் காரியத்தையும் இலங்கை அரசுக்கு எதிராக செய்யத் துணியாது. இந்த நிலையானது எப்போது சிங்களவனை அனுசரித்துப்போகும் போக்கை உலகநாடுகளுக்கு ஏற்படுத்தும். இந்தவகையில் சிங்கள இனம் அதிர்ஸ்டமானது என்றும் சொல்ல முடியும்.

இன விடுதலைக்கான போராட்டம் ஆரம்பித்த போது இருந்த தமிழனின் பலம் என்பது படிப்படியாக செந்த தேசத்தை விட்டு பெருவாரியான வெளியேற்றம் மதவாரியான நிரந்தரப்பிளவு இறுதியில் பிரதேசவாரியான பிளவு நிலை அதிகரித்தமை என சிதைந்த இனம் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மேலும் சிதைந்து விட்டது. தற்போதைய இனம் குறித்த மாயையும் சிந்தனையும் ஒரு மிகக் குறுகிய தரப்பின் கருத்து நிலை மட்டுமே. நாம் ஒரு அரசியல் அல்லது ஆயுதப்போராட்டத்தை செய்து வெற்றி பெறுவதற்கு முதலில் நாம் ஒரு இனமக பலம் பெறவேண்டும். எமக்கென்று ஒரு வடிவம் வேண்டும். இதன் சாத்தியம் குறித்து யோசித்துப்பாருங்கள். தமிழன் தமிழன் என்று தமிழ் மொழியை பேசிக்கொண்டு துள்ளிக் குதிப்பதால் நாம் ஒரு இனமாகிவிட முடியாது. அவ்வாறு இருந்திருந்தால் இந்தப்போராட்டங்கள் தோல்வியை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. தமிழன் என்பது ஒரு கருத்து நிலை மட்டுமே. இந்த தமிழன் என்ற கருத்து நிலை உணர்ச்சியானது மதத்தையோ சாதியையோ வர்க்கத்தையோ பிரதேசவாதத்தையோ மீறி வெளியில் வர முடியாது. அவ்வாறு என்று வெளியில் வருகின்றதோ அன்றே இனமானது ஒரு வடிவத்தை பெறும். அதன் பிறகே எந்த ஒரு நாடும் தமிழனை நம்பி சிங்களத்துக்கு எதிராக தமிழர்களை பயன்படுத்தும். இது புத்திசாலிச் சிங்களவர்களுக்கு மிக மிக நன்றாக விளங்கியே தற்போது ஒவ்வொரு காரியத்தையும் செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் சாத்தியம் அங்கு உள்ள மக்கள் விரும்பினால் மாத்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொக்கற் டோக். நீங்கள் பழம்பெரும் ஆளாக இருக்கிறீர்கள். தமிழரின் போராட்ட ஆரம்பங்கள் தெரிந்தவராகவும் இருக்கிறீர்கள். தயவு செய்து இவற்றை ஆவணப்படுத்துங்கள். தனியே யாழில் துண்டுதுண்டாக எழுதுவதை விட ஒருமித்து எழுதினால் பிரியோசனப்படும்.

நாங்கள் இப்படி வாளாவிருக்கு இந்தியர்கள் இங்கே அங்கே எனப்பார்த்து கலந்து கட்டி எழுதி புத்தகமாக்கி பிசினஸ் பார்க்கிறார்கள். அது பரவாயில்லை. தமது விருப்புகளையும் வரலாற்றில் சேர்த்துத் தெளிக்கிறார்கள். அது நல்லதல்ல.

Link to comment
Share on other sites

பொக்கற் டோக். நீங்கள் பழம்பெரும் ஆளாக இருக்கிறீர்கள். தமிழரின் போராட்ட ஆரம்பங்கள் தெரிந்தவராகவும் இருக்கிறீர்கள். தயவு செய்து இவற்றை ஆவணப்படுத்துங்கள். தனியே யாழில் துண்டுதுண்டாக எழுதுவதை விட ஒருமித்து எழுதினால் பிரியோசனப்படும்.

நாங்கள் இப்படி வாளாவிருக்கு இந்தியர்கள் இங்கே அங்கே எனப்பார்த்து கலந்து கட்டி எழுதி புத்தகமாக்கி பிசினஸ் பார்க்கிறார்கள். அது பரவாயில்லை. தமது விருப்புகளையும் வரலாற்றில் சேர்த்துத் தெளிக்கிறார்கள். அது நல்லதல்ல.

சயந்தன் பொக்கற் டோக் எழுதி பாடமாக்கி புலநாய்வு பகுதியிலை வகுப்பெடுத்ததை இங்கை அப்பிடியே ஒப்புவிக்கிறார்.. இவருக்கு அய்யரையும் தெரியாது சின:னச்சோதியையும் தெரியாது..எம்.எஸ் ஆரையும் தெரியாது தனக்கும் பழைய ஆக்ளைதெரியும் எண்ட பில்டப்தான் அதை தேசத்திலை போய் காட்டட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவையள் எல்லாம் போராட வெளிக்கிட்டிட்டு.. இடையில விட்டிட்டு ஓடிவந்து வெளி நாட்டில வாழுற முன்னாள்.. வீரர்கள்.. இன்னாள் கோழைகள். உவையின்ர வரலாறை வேணும் என்றால் புத்தகத்தில எழுதி வைச்சுப் படிக்கலாம்..!

உந்த வயசு போன.. முன்னாள் வீரர்களை.. வேணும் என்றால் புலம்பெயர்ந்த தமிழீழ ஆர்வலர் அமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி அதில் சேர்த்து வைச்சு கெளரவியுங்கோ.

இப்போ எமக்குத் தேவை சம கால உலக போக்கோடு எமது விடுதலைப் போராட்டத்தை அதன் இலக்கு நோக்கி நகர்த்திச் செல்லக் கூடிய துடிப்பான தலைமையும்.. தொடர்சியான செயற்பாடுகளும். அது இக்கால இளைஞர்களாலேயே உருப்படியாக வழங்கப்பட முடியும். இன்றைய இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு.. உந்த பழைய பல்லவிகளை பல்லக்கில் காவித்திரியின் போராட ஆக்கள் வரமாட்டார்கள். வேணும் என்றால் டக்கிளஸ் தேவானந்தாவோடு நரைத்த தாடிக்கு போட்டிபோட ஆக்கள் வருவார்கள்.

எமது 35 வருட போராட்ட காலத்தில் சிறீலங்கா குறைந்தது 5 அரசியற் தலைமைகளையும் பல இராணுவத் தலைமைகளையும் கண்டுவிட்டது. ஆனால் நாம்.. எந்த எதிர்கால திட்டமும் இன்றி... ஒரே குட்டையில் ஊறிக் கிடப்பதையே இப்போதும் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம்.

தேசிய தலைவர் 55 வயசாகிட்டார். அவருக்கு ஓய்வு அளித்துவிட்டதாக எண்ணிக் கொண்டு.. அவருடைய பணியை அவரைப் போன்ற உறுதியோடு எடுத்துச் செய்யக் கூடிய இளைய தலைமுறையை உருவாக்க வேண்டியதே இன்றைய பணி.

ஆயுதப் போராட்டத்திற்கான காரணி அப்படியே 1972 இல் இருந்ததை விட மோசமாக இருக்கிறது. அதை அடுத்தவர் சொல்லித்தான் தெரியனும் என்ற நிலையில் தமிழர்கள் இந்த நிகழ்காலத்திலும் இருக்கிறார்கள் என்றால் அப்படியான முட்டாள்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்வதை தமிழினம் கைவிட வேண்டும்..! :) :)

கடந்த கால போராட்டத்தில் பங்கெடுத்து 50 வயதைக் கடந்த அனைவரையும் போராளிகள் அல்லது போராடத் தகுதியுடையோர் பட்டியலில் இருந்து நகர்த்தி சர்வதேச தமிழீழ ஆர்வலர்கள் அமைப்பில் இணைத்துக் கொண்டு.. அவர்களின் அனுபவங்களை ஆலோசனைகளை உள்வாங்கிக் கொண்டு இளைஞர்கள் எனி எமது போராட்டத்தை நகர்த்திச் செல்வதே சாலச் சிறந்தது..! எமது போராட்டம் நவீன மயப்படுத்தப்படவும்.. நவீன உலகில் எதிர்கொள்ளப்படும் சவால்களை வெல்லவும் வீரத்துடன் தொடரவும் இலக்குகளை எட்டவும் அதுவே உந்து சக்தியாக இருக்கும்..! :)

Link to comment
Share on other sites

சயந்தன் பொக்கற் டோக் எழுதி பாடமாக்கி புலநாய்வு பகுதியிலை வகுப்பெடுத்ததை இங்கை அப்பிடியே ஒப்புவிக்கிறார்.. இவருக்கு அய்யரையும் தெரியாது சின:னச்சோதியையும் தெரியாது..எம்.எஸ் ஆரையும் தெரியாது தனக்கும் பழைய ஆக்ளைதெரியும் எண்ட பில்டப்தான் அதை தேசத்திலை போய் காட்டட்டும்.

நான் நினைக்கின்றேன் தேசியத்தலைவரின் விடுதலைத்தீப்பொறி இறுவட்டுகளை பார்த்தவர் தான் இந்த பாக்கட் டாக் சார். தலைவர் சொன்னதுகளை சார் இங்கு அப்படியே ஒப்புவிக்கின்றார்.

Link to comment
Share on other sites

என்னது 200 வருடங்களுக்கு சுதந்திரம் பற்றி பேசக் கூடாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருட போர் சுயநலவாதிகளையும் பொதுநலவாதிகளையும் தனியாக பிரித்தது. பொதுநல... நாட்டுநலவாதிகள் 95வீதமானவர்கள் வெடித்து சிதறிவிட்டார்கள். 5வீதமானவர்கள் செய்வதறியாது சிக்குண்டு நிற்கின்றார்கள். சுயநலவாதிகளில் ஒரு 5வீதம் விமான ஆட்லறி குண்டுவீச்சுகளில் இறந்துபோக. மீதம் 95வீதமும் அப்படியே இருக்கின்றது...... இவர்களுக்கு எது நடப்பினும் தமது சொந்த நலன் சாhந்தே நடக்கவேண்டும் என்ற அவா மட்டுமே உள்ளது. இதில் ஆயுத போர் என்ன? அரசியல் போர் என்ன? எதுவுமே நடப்பதற்கு சாத்தியமில்லை.

ஆரம்பகாலம் பற்றி யாருக்கு கூட தெரியும் என்ற அடிபிடியை மேலே உதாரணத்திற்கு நீங்கள் வாசித்திருப்பீர்கள். முதல் குண்டெறிந்தவர் பெயரை அறிந்து தமிழினத்திற்கு என்ன விமோசனம் கிடைக்கபோகின்றது? அடுத்த குண்டை எறிய யாராவது தயாராக இருக்கின்றார்களா என்பதே இப்போது முக்கியமானது. ஆனாலும் எனக்கு கூட தெரியும் இல்லது அவருக்கு அது எப்படி தெரியும் என்பது போன்ற அற்ப விடயங்களை பெரிதுபடுத்தி தாம் ஒரு சுய விளம்பரம் செய்வதிலேயே இவர்களுக்கு குறி.

தமிழுழ நினைவோடு வெடியோடு உறவாடி வீரமரணமான மாவீரர்களுக்காக நாம் வாழும்போது கண்ணீர்சிந்திவிட்டு கிழம்எய்தி சாவதுதான் ஒரே வழி. இந்த பாழாய்போன தமிழனுக்கு மூளையெல்லாம் அழுக்கு. அதை கழுவி சுத்தம் செய்ய ஒரு காலம் வாராதா என்பது வெறும் ஏக்கம் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்பது வருடமாக ஒரு தனி மனிதன் மறைமுக வழ்க்கை வாழ்ந்து உலகெங்கும் திரிந்து ஓய்வின்றி உளைத்தலும் எவராலும் தனிப்பட்ட ரீதியில் சாதிக்க முடியாத பல சாதனைகளைச் செய்து ஒரு இனத்தின் அவலத்தை உலகின்முன் கொண்டுவந்தது மட்டுமன்றி, அவ்வினம் தனியான வரலாற்று விழுமியங்களுடன் கூடிய இனம், அவ்வினத்திற்கு பிரிந்துபோகும் உரிமையுள்ளது என்பதை பல்வேறு தரப்புக்களை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ள வைத்து. தான் சார்ந்த இனத்துக்கு மிகப்பெரிய பலத்துடன் கூடிய பேரியக்கம்கண்டு, பகலிரவு தூங்காது பசி பாராது தமிழ் இனமே தனது குடும்பம் என நினைத்து தனது குடும்பத்தையே தான் நேசித்த மண்ணிற்கு விதையாக்கி எங்கேயடா சென்றாய் என் மேதகுவே! இங்கு பல ஈனர்கள் கோட்டான்களாக குரல்கொடுப்பதும் ஓநாய்களாக ஊழையிடுவதுமாக என்னைக் கொல்கின்றனர். வருவாய் பெருநெருப்பே இங்கு பலர் உனுனதருகிலிருந்ததாகக் கூறி குளிர்காய முனைகிறார்கள்.

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்கள் ஐரோப்பிய,அமெரிக்க , ஆஸ்திரேலிய கண்டங்களில் மொத்தமாக ஒரு 5 லட்சம் பேர் இருக்க மாட்டார்களா???

அதில் வீரமுள்ள, மற்றும் விவேகமுள்ள இளைஞர்கள் 10000 பேர் இருக்க மாட்டார்களா?

இவர்கள் நினைத்தால் நேரடி ஆயுதப்போராட்டம் என்றில்லை , சிங்களனை கலங்க வைக்க பல்வேறு வழிகளை ஆராய்ந்து செய்யலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்கள் ஐரோப்பிய,அமெரிக்க , ஆஸ்திரேலிய கண்டங்களில் மொத்தமாக ஒரு 5 லட்சம் பேர் இருக்க மாட்டார்களா???

அதில் வீரமுள்ள, மற்றும் விவேகமுள்ள இளைஞர்கள் 10000 பேர் இருக்க மாட்டார்களா?

இவர்கள் நினைத்தால் நேரடி ஆயுதப்போராட்டம் என்றில்லை , சிங்களனை கலங்க வைக்க பல்வேறு வழிகளை ஆராய்ந்து செய்யலாமே!

என்னண்ணா காமெடி பண்றீங்க

எங்கட பெற்றவங்கள்ளாம் எங்களை இஞ்சினீயர் டோக்ரருக்கு படிச்சு நல்ல சீதனத்தோட எங்கள விற்கத்திரியிறாங்க.

தமிழே கதைக்கக்கூடாதுன்றாங்க.

போராாட்டம் பற்றி கதைக்கக்கூடாதுதுன்னாட்்டுங

Link to comment
Share on other sites

சயந்தன் பொக்கற் டோக் எழுதி பாடமாக்கி புலநாய்வு பகுதியிலை வகுப்பெடுத்ததை இங்கை அப்பிடியே ஒப்புவிக்கிறார்.. இவருக்கு அய்யரையும் தெரியாது சின:னச்சோதியையும் தெரியாது..எம்.எஸ் ஆரையும் தெரியாது தனக்கும் பழைய ஆக்ளைதெரியும் எண்ட பில்டப்தான் அதை தேசத்திலை போய் காட்டட்டும்.

சாத்திரிக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். மற்றவைக்கு ஒரு மண்ணும் தெரியாது.

ஆரம்ப காலத்தில் சாத்திரி தான் தங்கதுரை குட்டிமணி சோதி (பெரிசு சின்னன்) ஆட்களை எல்லாம் வழிநடாத்தியவர்.

சாத்திரி தான் தேசிய தலைவருக்கு பயிற்சி கொடுத்தவர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னண்ணா காமெடி பண்றீங்க

எங்கட பெற்றவங்கள்ளாம் எங்களை இஞ்சினீயர் டோக்ரருக்கு படிச்சு நல்ல சீதனத்தோட எங்கள விற்கத்திரியிறாங்க.

தமிழே கதைக்கக்கூடாதுன்றாங்க.

போராாட்டம் பற்றி கதைக்கக்கூடாதுதுன்னாட்்டுங

Link to comment
Share on other sites

சாத்திரிக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். மற்றவைக்கு ஒரு மண்ணும் தெரியாது.

ஆரம்ப காலத்தில் சாத்திரி தான் தங்கதுரை குட்டிமணி சோதி (பெரிசு சின்னன்) ஆட்களை எல்லாம் வழிநடாத்தியவர்.

சாத்திரி தான் தேசிய தலைவருக்கு பயிற்சி கொடுத்தவர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

ம்ம்ம்...கழுதைக்கு தெரியிது.. :lol: :lol:

Link to comment
Share on other sites

கீழே உள்ள கருத்து சத்திய சீலன் அவர்களின் செவ்வி சம்பந்தமாக எனது நண்பரும் ஒரு பேப்பர் பொறுப்பாசிரியருமான கோபி அவர்களால் என்னுடைய மின்னஞ்சலிற்கு அனுப்பியிருந்த கருத்தினை இங்கு இணைக்கிறேன்..நன்றி.

இலங்கை தீவில் உள்ள அரசியல் பிரச்சனைக்கு (வர்க்க, சமூக, மற்றும் பொருளாதார பிரச்சனைகள்) ஆயுதவழியில்தான் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற கருத்தினை அறுபதுகளில் வெளியிடடவர் சீன சார்பு கம்யூனிசக் கட்சியின் தலைவராகவிருந்த நா.சண்முகதாசன். ஆனால் அவர் என்றுமே ஆயுதம் தூக்கியதுமில்லை, தூக்கியவர்களை ஆதரித்ததுமில்லை். யாழ்ப்பாணத்தில் சாதிச் சண்டைகளை ஊக்குவித்ததைத் தவிர, வெறும் சித்தாந்தங்களில் அவர' புதையுண்டு கிடந்தார். இக்கட்சியில் அங்கம் வகித்த ரோகண விஜேவீர (அப்போது டொன் நந்தசிறி என்ற இயற்பெயருடன் .இருந்தவர்) போன்றவர்களே, காலனித்துவத்துக்கு பிந்திய, இலங்கைத்தீவில் , ஆயுதப்போராட்டடத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) அமைப்பினை உருவாக்கியதன் மூலம் முன்னெடுத்தார்கள். அவர்களது போராட்டம் இந்திய உதவியுடன் அடக்கப்பட்டது.

1970 ஆண்டு ஆட்சிக்குவந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிசக்கட்சி ஆகிய உள்ளடங்கிய மக்கள் ஐக்கிய முன்னணி அரசு கொணடு வந்த புதிய அரசியல் அமைப்பு திட்டம் (குடியரசு யாப்பு) தமிழ் மக்களின் உரிமைகளை நிராகரித்ததைத் தொடர்ந்தே வடக்கு -கிழக்கில் தமிழ் மாணவர்கள் - இளைஞர்கள் கிளரந்தெழுந்தனர். பல்கலைக்கழக அனுமதியில் இனரீதியான தரப்படுத்தல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டமை இந்த கிளர்ச்சியை மேலும் தூண்டிவிட்டது.

பேராதனைப் பல்கலைக் கழக பட்டதாரியான சத்தியசீலன், தமிழ் மாணவர் பேரவையை உருவாக்குவதில் முக்கியமானவர் என்பதை மறுப்பதற்கில்லை. அவருடன் இணைந்து மாணவர் பேரவையில் செயலாற்றியவர்கள் சிறிது காலத்தில் விலகி , தனிப்பட்ட வாழ்க்கைக்கு சென்றுவிட்டார்கள். சத்திய சீலன் சில ஆயுத ரீதியான தாக்குதல்களில் (ஜோசப் வில்வராசா தயாரித்துக் கொடுத்த குண்டை எறிந்தது) ஈடுபட்டது என்னவோ உண்மைதான், ஆனால் தொலைநோக்குடனான ஆயுப்போராட்டம் பற்றி அவர் அப்போது சிந்தித்தாகத் தெரியவில்லை.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆய்வுகூட உதவியாளராகவிருந்த பெண் ஒருவரை திருமணம் புரிந்த சத்தியசீலன் 1977ம் ஆண்டு முற்பகுதியில், மாரச் மாதம் என நினைக்கிறேன், மே மாதம் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கு (தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்பட்ட தேர்தல்) முன்பதாக அவர் தனிப்பட்ட அலுவலாக, வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். அன்றிலிருந்து மிக அண்மைக்காலத்தில் வெண்புறா அமைப்பில் பணியாற்றும் வரை, தமிழீழ விடுதலைப் போராட்த்திற்கு அவர் எவ்வித பங்களிப்பையும் வழங்கவில்லை.

இருபத்தி ஐந்து வருடத்திற்கு மேலாக, விடுதலைப் போராட்டத்தின், பல்வேறு கால கட்டங்களில் எவ்வித பங்களிப்பு வழங்காத ஒருவரை, முக்கியஸ்தராகக் கருதி நீங்கள் பேட்டி எடுக்க, அவரும் சித்தாந்தம் பேசுகிறார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக இனி என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆக்கபூர்வமான சிந்தனை கொண்டவர்களைத் தவிர்த்துவிட்டு, இடுப்பு எழும்பாத, வெறுமனே சித்தாந்தம் (அதுவும் ஒழுங்காக அல்ல) பேசுவர்களுடன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்.

நன்றி

கோபி

Link to comment
Share on other sites

கீழே உள்ள கருத்து சத்திய சீலன் அவர்களின் செவ்வி சம்பந்தமாக எனது நண்பரும் ஒரு பேப்பர் பொறுப்பாசிரியருமான கோபி அவர்களால் என்னுடைய மின்னஞ்சலிற்கு அனுப்பியிருந்த கருத்தினை இங்கு இணைக்கிறேன்..நன்றி.

இலங்கை தீவில் உள்ள அரசியல் பிரச்சனைக்கு (வர்க்க, சமூக, மற்றும் பொருளாதார பிரச்சனைகள்) ஆயுதவழியில்தான் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற கருத்தினை அறுபதுகளில் வெளியிடடவர் சீன சார்பு கம்யூனிசக் கட்சியின் தலைவராகவிருந்த நா.சண்முகதாசன். ஆனால் அவர் என்றுமே ஆயுதம் தூக்கியதுமில்லை, தூக்கியவர்களை ஆதரித்ததுமில்லை். யாழ்ப்பாணத்தில் சாதிச் சண்டைகளை ஊக்குவித்ததைத் தவிர, வெறும் சித்தாந்தங்களில் அவர' புதையுண்டு கிடந்தார். இக்கட்சியில் அங்கம் வகித்த ரோகண விஜேவீர (அப்போது டொன் நந்தசிறி என்ற இயற்பெயருடன் .இருந்தவர்) போன்றவர்களே, காலனித்துவத்துக்கு பிந்திய, இலங்கைத்தீவில் , ஆயுதப்போராட்டடத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) அமைப்பினை உருவாக்கியதன் மூலம் முன்னெடுத்தார்கள். அவர்களது போராட்டம் இந்திய உதவியுடன் அடக்கப்பட்டது.

1970 ஆண்டு ஆட்சிக்குவந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிசக்கட்சி ஆகிய உள்ளடங்கிய மக்கள் ஐக்கிய முன்னணி அரசு கொணடு வந்த புதிய அரசியல் அமைப்பு திட்டம் (குடியரசு யாப்பு) தமிழ் மக்களின் உரிமைகளை நிராகரித்ததைத் தொடர்ந்தே வடக்கு -கிழக்கில் தமிழ் மாணவர்கள் - இளைஞர்கள் கிளரந்தெழுந்தனர். பல்கலைக்கழக அனுமதியில் இனரீதியான தரப்படுத்தல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டமை இந்த கிளர்ச்சியை மேலும் தூண்டிவிட்டது.

பேராதனைப் பல்கலைக் கழக பட்டதாரியான சத்தியசீலன், தமிழ் மாணவர் பேரவையை உருவாக்குவதில் முக்கியமானவர் என்பதை மறுப்பதற்கில்லை. அவருடன் இணைந்து மாணவர் பேரவையில் செயலாற்றியவர்கள் சிறிது காலத்தில் விலகி , தனிப்பட்ட வாழ்க்கைக்கு சென்றுவிட்டார்கள். சத்திய சீலன் சில ஆயுத ரீதியான தாக்குதல்களில் (ஜோசப் வில்வராசா தயாரித்துக் கொடுத்த குண்டை எறிந்தது) ஈடுபட்டது என்னவோ உண்மைதான், ஆனால் தொலைநோக்குடனான ஆயுப்போராட்டம் பற்றி அவர் அப்போது சிந்தித்தாகத் தெரியவில்லை.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆய்வுகூட உதவியாளராகவிருந்த பெண் ஒருவரை திருமணம் புரிந்த சத்தியசீலன் 1977ம் ஆண்டு முற்பகுதியில், மாரச் மாதம் என நினைக்கிறேன், மே மாதம் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கு (தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்பட்ட தேர்தல்) முன்பதாக அவர் தனிப்பட்ட அலுவலாக, வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். அன்றிலிருந்து மிக அண்மைக்காலத்தில் வெண்புறா அமைப்பில் பணியாற்றும் வரை, தமிழீழ விடுதலைப் போராட்த்திற்கு அவர் எவ்வித பங்களிப்பையும் வழங்கவில்லை.

இருபத்தி ஐந்து வருடத்திற்கு மேலாக, விடுதலைப் போராட்டத்தின், பல்வேறு கால கட்டங்களில் எவ்வித பங்களிப்பு வழங்காத ஒருவரை, முக்கியஸ்தராகக் கருதி நீங்கள் பேட்டி எடுக்க, அவரும் சித்தாந்தம் பேசுகிறார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக இனி என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆக்கபூர்வமான சிந்தனை கொண்டவர்களைத் தவிர்த்துவிட்டு, இடுப்பு எழும்பாத, வெறுமனே சித்தாந்தம் (அதுவும் ஒழுங்காக அல்ல) பேசுவர்களுடன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்.

நன்றி

கோபி

மாண்புமிகு ஒரு பேப்பரின் பொறுப்பாசிரியர் திரு.கோபி அவர்களுக்கு,

நீங்கள் சத்தியசீலன் அவர்களின் கருத்துக்கு விமர்சனமா எழுதினீர்கள் இல்லது உங்களாலும் இப்படி எழுத இயலும் என்று எழுதினீர்களா ?

பொறுப்பாசிரியர் பொறுப்புடன் பொறுமையுடன் விமர்சனத்தை வைப்பதே உங்கள் பொறுப்புக்குத் தகும்.

(நீங்கள் இனி பொறுப்பாசிரியர் என்ற பதத்தைவிட பொறுக்கியாசிரியர் என போட்டுக் கொள்ளலாம்போலுள்ளது.)

நீங்கள் எழுதிய கருத்தின் இரத்தினச் சுருக்கம் இது - தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக இனி என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆக்கபூர்வமான சிந்தனை கொண்டவர்களைத் தவிர்த்துவிட்டு, இடுப்பு எழும்பாத, வெறுமனே சித்தாந்தம் (அதுவும் ஒழுங்காக அல்ல) பேசுவர்களுடன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்.

ஒருவரின் கருத்துக்கும் இடுப்பு எழும்பாத பதத்தை நீங்கள் உபயோகித்தமைக்கும் என்ன சம்பந்தம் ?

சரி சத்தியசீலன் வெறும் சித்தாந்தம் பேசுகிறார். நீங்கள் இப்படிக் கீழ்மையாக எழுதுவதில் என்ன சாத்தியம் இருக்கிறது ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.