Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலகுரல்

Featured Replies

கெந்தி

விழையாடிக்கொண்டிருந்த

அந்திமாலைப்

பொழுதொன்றில்

அடிவயிற்றில்

வலி

கோடு கீறப்பட்டு

குந்தவைக்கப்பட்டேன்

ஆளாயிட்டாள்

அம்மம்மாவின்

குரல்

அக்கம் பக்கத்து

பெடியளோடை

அடிச்சுப் பிடிச்சு

விழையாடுறதையும்

விளக்கு வைச்சா

பிறகு

வெளியாலை போறதையும்

நிப்பாட்டு

அம்மாவின்

குரல்

இருக்கிற

பிரச்சனைக்குள்ளை

இவளும் குந்திட்டாளா

ஒருத்தனிட்டை

ஒப்படைக்கிறவரை

ஒரே செலவுதான்

அப்பாவின்

குரல்

என் தனிமையை

போக்க எவராவது

வருவாரா என

வாசற்படிவரை

வந்தேன்

வயசுக்கு வந்த

பெட்டைக்கு

வாசல்லை

என்னடிவேவை

அண்ணனின்

குரல்

அன்று

அடிவயிற்றில்

தொடங்கிய வலி

இதயத்திலேறி

இன்று

மூளையில்

பைத்தியமாக்கிட்டுது

பத்திரமாய்

பாத்துக்கொள்ளுங்கோ

வைத்தியரின்

குரல்

கவிதை எழுத ஆசைதான் இது யாழில் எனது முதல் கவிதை உங்கள் கருத்துகளை வைத்துத்தான் கவிதை எழுதி உங்களை ஒரு வழிபண்ணிறதா இல்லையா என்பதை முடிவுசெய்வேன் நன்றிகள்..இப்படிக்கு சுமங்களா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமங்களா

இது உங்கள் முதல் கவிதையாய் இருந்தாலும் ஒரு குறையுமில்லாத ஓர் முழுமையான கவிதையைப் படித்த ஓர் திருப்தி...

உங்களின் அனுபவம் பெண்களுக்கே உரித்தான அனுபவம்... ! கவிதை உண்மையிலேயே மிக நன்று தொடரவேன்டும் உங்கள் ஆக்கங்களை.... வாழ்த்துக்கள்....

  • தொடங்கியவர்

சுமங்களா

இது உங்கள் முதல் கவிதையாய் இருந்தாலும் ஒரு குறையுமில்லாத ஓர் முழுமையான கவிதையைப் படித்த ஓர் திருப்தி...

உங்களின் அனுபவம் பெண்களுக்கே உரித்தான அனுபவம்... ! கவிதை உண்மையிலேயே மிக நன்று தொடரவேன்டும் உங்கள் ஆக்கங்களை.... வாழ்த்துக்கள்....

இளங்கவியே பராட்டியதற்கு நன்றிகள் ..தொடர்ந்து எழுதலாம் என்கிற நம்பிக்கை வந்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களாக்கா,

உங்களின் முதல் கவிதைக்கு மிகவும் நன்றி.தொடருங்கள் உங்கள் பணியை.காலம்....காலமாக நம்மவர்கள் செய்யும் பணி இது தான்....

அக்கம் பக்கத்து

பெடியளோடை

அடிச்சுப் பிடிச்சு

விழையாடுறதையும்

விளக்கு வைச்சா

பிறகு

வெளியாலை போறதையும்

நிப்பாட்டு

அம்மாவின்

குரல்

இவை எல்லாம் எப்போ முடிவுக்கு வருகிறதோ அன்று தான் பெண்களுக்கு விடுதலை.நன்றி.

  • தொடங்கியவர்

சுமங்களாக்கா,

உங்களின் முதல் கவிதைக்கு மிகவும் நன்றி.தொடருங்கள் உங்கள் பணியை.காலம்....காலமாக நம்மவர்கள் செய்யும் பணி இது தான்....

அக்கம் பக்கத்து

பெடியளோடை

அடிச்சுப் பிடிச்சு

விழையாடுறதையும்

விளக்கு வைச்சா

பிறகு

வெளியாலை போறதையும்

நிப்பாட்டு

அம்மாவின்

குரல்

இவை எல்லாம் எப்போ முடிவுக்கு வருகிறதோ அன்று தான் பெண்களுக்கு விடுதலை.நன்றி.

நன்றிகள் யாயினி ஏதோ என்னால் முடிந்தது

சுமங்களா உங்கள் கவி அற்புதம்...............

பெண்ணுக்கு தான் பெண்ணின் வலி தெரியும் எண்டாலும்

அந்த பெண்ணால் தான் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை

சீரழிக்கப்படுகிறது என்பது தான் உண்மையிலும் உண்மை!!!!!!!

பெண்ணை அடிமை செய்பவள் பெண்தான்..............

ஆண் இல்லை என்பதை உங்களின் கவிதையும் காட்டி நிற்கிறது!!!!!!

தொடர்ந்து எழுதுங்கள்!!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

  • தொடங்கியவர்

சுமங்களா உங்கள் கவி அற்புதம்...............

பெண்ணுக்கு தான் பெண்ணின் வலி தெரியும் எண்டாலும்

அந்த பெண்ணால் தான் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை

சீரழிக்கப்படுகிறது என்பது தான் உண்மையிலும் உண்மை!!!!!!!

பெண்ணை அடிமை செய்பவள் பெண்தான்..............

ஆண் இல்லை என்பதை உங்களின் கவிதையும் காட்டி நிற்கிறது!!!!!!

தொடர்ந்து எழுதுங்கள்!!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

நன்றிகள் தமிழ் மாறன் பெண்தான் பெண்ணிற்கு முதல் எதிரியே எமது சமூகத்தில்

இந்தக் கவிதையை (உடைத்துப் போட்ட வரிகளை நேராக்கினால் வெறும் வாக்கியங்கள்) எழுதிப் போட்டு கிறிஸ்துவுக்கு முன் என்று போட்டிருக்கலாம்...இல்லாட்டி அம்மம்மாவின் பாட்டி காலம் என்று போட்டிருக்கலாம்

என் சகோதரியும், என் மனைவியும், என் அம்மாவும் அவர்கள் பெரிசான பின் தான் தம் உயர் கல்வியை முடித்தனர். கடல் கடந்து வந்து என் சக பெண் தோழி என்னுடன் ஒரே Project இல் வேலை செய்தாள். திடீரென கணவன் இராணுவத்தால் கொல்லப்பட்ட பின்பு இன்னுமொருவனை கட்டி இன்னும் இரண்டு பிள்ளைகள் பெற்றாள் என் சித்தி. நடு இரவில் 500 கி.மீ இற்கு அப்பால், கொட்டும் குளிரில் என்னுடன் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு தன் மனைவியை துணையாக அனுப்பி வைத்தான் என் மச்சான். இன்னும் தனக்கு பெண் பிள்ளை பிறக்கவில்லையே என தவிக்கின்றான் என் சகோதரியின் கணவன்.....

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், கொஞ்சம் யதார்த்த உலகிற்கும் வாருங்கள் சுமங்களா

அக்கம் பக்கத்து

பெடியளோடை

அடிச்சுப் பிடிச்சு

விழையாடுறதையும்

விளக்கு வைச்சா

பிறகு

வெளியாலை போறதையும்

நிப்பாட்டு

அம்மாவின்

குரல்

உங்களுடைய பெண் குந்தும் பொழுது

நீங்கள் இதைச் சொல்லாமல் இருந்தால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டைக்கு

வாசல்லை

என்னடிவேவை

அண்ணனின்

குரல்...................................என்னடி வேலை என்றுவரவேண்டும்.....

இப்போது பெண்கள் மிக முன்னேறி விட்டனர். உங்கள் முதல் கவிதை என்பதால் ஏற்று கொள்கிறேன்.

வேறு தலைப்பில் எழுதி அசத்தவும். இது கணணி யுகம் ,புதுமை பெண்ணாக புதுமை படைக்க் வாழ்த்துக்கள். .

  • தொடங்கியவர்

இந்தக் கவிதையை (உடைத்துப் போட்ட வரிகளை நேராக்கினால் வெறும் வாக்கியங்கள்) எழுதிப் போட்டு கிறிஸ்துவுக்கு முன் என்று போட்டிருக்கலாம்...இல்லாட்டி அம்மம்மாவின் பாட்டி காலம் என்று போட்டிருக்கலாம்

என் சகோதரியும், என் மனைவியும், என் அம்மாவும் அவர்கள் பெரிசான பின் தான் தம் உயர் கல்வியை முடித்தனர். கடல் கடந்து வந்து என் சக பெண் தோழி என்னுடன் ஒரே Project இல் வேலை செய்தாள். திடீரென கணவன் இராணுவத்தால் கொல்லப்பட்ட பின்பு இன்னுமொருவனை கட்டி இன்னும் இரண்டு பிள்ளைகள் பெற்றாள் என் சித்தி. நடு இரவில் 500 கி.மீ இற்கு அப்பால், கொட்டும் குளிரில் என்னுடன் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு தன் மனைவியை துணையாக அனுப்பி வைத்தான் என் மச்சான். இன்னும் தனக்கு பெண் பிள்ளை பிறக்கவில்லையே என தவிக்கின்றான் என் சகோதரியின் கணவன்.....

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், கொஞ்சம் யதார்த்த உலகிற்கும் வாருங்கள் சுமங்களா

நீங்கள் சொன்னவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன்..அதே நேரம் ஈழத்து பெண்கள் நிகழ்த்திய சாதனைகளையும் பார்த்தே வளர்ந்தவள்..ஆனால் குண்டுச்சட்டி குடும்பங்கள் ஊரில் இன்னமும் ஏன் வெளிநாடுகளில்கூட இன்னமும் இருக்கத்தான் செய்கிறது..என்பதை உங்களால் முழுதாக மறுக்கமுடியுமா??

உங்களுடைய பெண் குந்தும் பொழுது

நீங்கள் இதைச் சொல்லாமல் இருந்தால் சரி

நிச்சயமாக சொல்லமாட்டேன்..எனக்கும்ஒரு மகள் இருக்கிறாள் அவள் பருவம் அடைந்ததும் அதை ஒரு சடங்காக கொண்டாடவும் மாட்டேன்..

பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று எவர் சொன்னார்!!!!!!

இன்றைக்கும் எங்களின் சழூக பெண்கள் ஆகட்டும் அல்லது ஏனைய சழூகத்தவர் பெண்கள் ஆகட்டும் அடக்கு முறைக்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...........

நிழலி உங்கள் கருத்து பிரத்தியேகங்களில் ஒன்றாக எடுக்கும் போது ஏற்றுக் கொள்ளலாம்

ஆனால் விகிதாசாரம் எண்டு வரும் போது..............புலத்திலும் சரி தாய் மண்ணிலும் சரி

பெண்கள் அடக்கி ஆளப்படுகிறார்கள்............என்பதை யாரும் மறுத்து விட முடியாது!!!!!!

எப்போதும் விகிதாசார அடிப்படையில் தான் கணிக்க வேண்டும்!!!!!

என் மனைவியும் எல்லா சுதந்திரத்துடனும் தான் வாழுகிறாள்

அதற்காக எல்லா பெண்களும் அப்படித்தான் வாழுகிறார்கள் என்று

நான் முடிவு எடுத்துக் கொள்ளலாமா??????? சொல்லுங்கள்!!!!!!!

சுமங்களா, நல்ல ஆக்கம். முதல் கவிதை யாழுக்குத்தான் என் நினைக்கிறேன். உங்களுக்கல்ல தானே?

நிலாமதியக்கா - பெண்களை எங்கள் சமூகம் எங்கே முன்னேறவிடப்போகிறது? சாமத்தியவீடு கொண்டாடும் விமரிசைகளை புலத்தில் பார்க்கவேண்டுமே? தாங்க முடியாது. இப்பசிலர் காலையில் கொண்டாட்டம் மண்டபத்தில் முடிய, மாலையில் வீட்டில் கேக் வெட்டிக்கொண்டாடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நம்புகிறேன்,

சொல்லவந்ததை சொன்ன கவி..

கருத்து கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்குது,-ஆகக் குறைந்தது எனக்கும்- நான் சந்திக்கும் சமூக வட்டத்திற்கும்..

விமர்சனங்கள் விலகிச் செல்வது- இயல்பு

இருந்தாலும்,

ஏமாற்றமாய் இருக்கிறது..

பழைய பல்லவியான..

"பெண்ணுக்கு பெண்தான் எதிரி"....

அந்த சமூக கட்டமைப்பில்..

நான் அவவை (அம்மம்மவை) அந்த (ஒரு ) சமூக ஒழுங்கின் ஒரு பிரதிநிதியாய் பார்கிறேனே தவிர

பொண்ணாயோ, ஆண்ணாயோ அல்ல..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும்,

அம்மாவை ..அம்மம்மா ஆக்கி விட்டேன்,

  • தொடங்கியவர்

பெட்டைக்கு

வாசல்லை

என்னடிவேவை

அண்ணனின்

குரல்...................................என்னடி வேலை என்றுவரவேண்டும்.....

இப்போது பெண்கள் மிக முன்னேறி விட்டனர். உங்கள் முதல் கவிதை என்பதால் ஏற்று கொள்கிறேன்.

வேறு தலைப்பில் எழுதி அசத்தவும். இது கணணி யுகம் ,புதுமை பெண்ணாக புதுமை படைக்க் வாழ்த்துக்கள். .

நன்றிகள் அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதையை (உடைத்துப் போட்ட வரிகளை நேராக்கினால் வெறும் வாக்கியங்கள்) எழுதிப் போட்டு கிறிஸ்துவுக்கு முன் என்று போட்டிருக்கலாம்...இல்லாட்டி அம்மம்மாவின் பாட்டி காலம் என்று போட்டிருக்கலாம்

என் சகோதரியும், என் மனைவியும், என் அம்மாவும் அவர்கள் பெரிசான பின் தான் தம் உயர் கல்வியை முடித்தனர். கடல் கடந்து வந்து என் சக பெண் தோழி என்னுடன் ஒரே Project இல் வேலை செய்தாள். திடீரென கணவன் இராணுவத்தால் கொல்லப்பட்ட பின்பு இன்னுமொருவனை கட்டி இன்னும் இரண்டு பிள்ளைகள் பெற்றாள் என் சித்தி. நடு இரவில் 500 கி.மீ இற்கு அப்பால், கொட்டும் குளிரில் என்னுடன் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு தன் மனைவியை துணையாக அனுப்பி வைத்தான் என் மச்சான். இன்னும் தனக்கு பெண் பிள்ளை பிறக்கவில்லையே என தவிக்கின்றான் என் சகோதரியின் கணவன்.....

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், கொஞ்சம் யதார்த்த உலகிற்கும் வாருங்கள் சுமங்களா

இந்தக் கவிதையை (உடைத்துப் போட்ட வரிகளை நேராக்கினால் வெறும் வாக்கியங்கள்) எழுதிப் போட்டு கிறிஸ்துவுக்கு முன் என்று போட்டிருக்கலாம்...இல்லாட்டி அம்மம்மாவின் பாட்டி காலம் என்று போட்டிருக்கலாம்

என் சகோதரியும், என் மனைவியும், என் அம்மாவும் அவர்கள் பெரிசான பின் தான் தம் உயர் கல்வியை முடித்தனர். கடல் கடந்து வந்து என் சக பெண் தோழி என்னுடன் ஒரே Project இல் வேலை செய்தாள். திடீரென கணவன் இராணுவத்தால் கொல்லப்பட்ட பின்பு இன்னுமொருவனை கட்டி இன்னும் இரண்டு பிள்ளைகள் பெற்றாள் என் சித்தி. நடு இரவில் 500 கி.மீ இற்கு அப்பால், கொட்டும் குளிரில் என்னுடன் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு தன் மனைவியை துணையாக அனுப்பி வைத்தான் என் மச்சான். இன்னும் தனக்கு பெண் பிள்ளை பிறக்கவில்லையே என தவிக்கின்றான் என் சகோதரியின் கணவன்.....

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், கொஞ்சம் யதார்த்த உலகிற்கும் வாருங்கள் சுமங்களா

சரியாகச் சொன்னீர்கள் நிழலி.

பசுமதி, முத்துச் சம்பா அரிசிச் சோத்தையும் மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு வருசத்துக்கு ஒரு பிள்ளையையும் பெத்து சந்தோசமாய் இருகிறவையலும் இருக்கினம்...

அதே நேரம், புலத்தில் மொழிப் பிரச்சனை இருந்ததும், தங்களுக்குத் தெரிந்த திறமையை வைத்துக் கொண்டு எதோ ஒரு வேலையை செய்து குடும்பப் பாரத்தைக் குறைக்கும் பெண்களையே அதிகம் காண்கிறோம். புலத்தில் மட்டும் இல்லை ஊரிலும் கூட வீட்டில் இருக்கும் பெண்களை விட வேலைக்குப் போய் குடும்பத்தைப் பார்க்கும் பெண்கள் அதிகரித்து விட்டார்கள்...

ஈழத்திலும் ஆண் போராளிகளுக்கு நிகராகப் பெண் போராளிகளும் இருந்தார்கள் என்பதை எப்படி உங்களால் மறக்க முடிந்தது?

பெண்களுக்கு சம உரிமை எப்போது கிடைத்தது என்று தெரியாது, ஆனால் பெண்கள் தங்களுக்கு சமஉரிமை தேவைப்படும் போது எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழிற்க்கு புதியவனாக இருந்தாலும், மற்றவர்கள் என்னை பிழையாக விளங்கிக் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் சொல்லுகிறேன்,

நான் நினைக்கிறேன் நாங்கள் தேவையில்லாமல் இந்த கருத்தை விவாதித்துக்கொண்டிருக்கின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சுமங்களா

உங்களது கவிதை கண்ணதாசனின் படைப்புக்களைப்போல் மிகவும் யதார்த்தமாகவும் எளிமையாகவும் உள்ளது.வேறு ஒரு கலாச்சாரச் சூழலில் இருந்து கொண்டு இப்படியான ஒரு படைப்பை தாங்கள் கொடுத்தது மிகவும் ஆச்சரியமான விடயம். உங்களது கவிதைக்கு உயிர் உள்ளது.அதை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். :unsure:

  • 8 months later...

கவிதை இயல்பாய் அருமையாய் ஈர்ப்பு மிக்கதாய் இருக்கிது. முதலாவது கவிதை என்று சொன்னதை தவிர்த்து இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுபமங்களா, உங்கள் கவிதை மிகவும் அருமை. இங்கு சிலர் உங்கள் கவிதை எழுதும் முயற்சிக்கு மங்களம் பாடலாம் என உங்களுக்குத்தேன்றும்வண்ணம் விமர்சனம் செய்கிறார்கள். சோர்ந்துவிடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கவிஞர் வட்டத்துக்குள் இழுக்கப்பட்டு விட்டீர்கள். ஆதாரம் இங்கு நடக்கும் இரு வகையான விமர்சனங்கள்! தொடருங்கள் வாழ்த்துக்கள்!! :lol::lol:

  • 3 weeks later...

சுபமங்களா, உங்கள் கவிதை மிகவும் அருமை. இங்கு சிலர் உங்கள் கவிதை எழுதும் முயற்சிக்கு மங்களம் பாடலாம் என உங்களுக்குத்தேன்றும்வண்ணம் விமர்சனம் செய்கிறார்கள். சோர்ந்துவிடாதீர்கள்.

மங்களம் பாடிக்கொண்டுதான் இருக்கறீனம் போல கிடக்கிது. :lol:

  • தொடங்கியவர்

சகோதரி! நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கவிஞர் வட்டத்துக்குள் இழுக்கப்பட்டு விட்டீர்கள். ஆதாரம் இங்கு நடக்கும் இரு வகையான விமர்சனங்கள்! தொடருங்கள் வாழ்த்துக்கள்!! :o:D

ஒரு வழி செய்யாமல் விடமாட்டிங்கள் போலை இருக்கு :lol:

மங்களம் பாடிக்கொண்டுதான் இருக்கறீனம் போல கிடக்கிது. :lol:

என்னுடைய எல்லா கருத்துக்களிற்கும் பதில் எழுதும் மச்சானிற்கு எனது நன்றிகள் சாதாரணமான ஒருத்தியை பார்த்து பலர் மிரள்கிறார்கள் எனவே நான் எழுதுவதை தற்போதைக்கு தவிர்க்கவே விரும்புகிறேன்.ஆனால் நான் சொந்தப் பெயரில் இத்தாலி மிலான் நகரில் இருந்து எழுதுகிறேன். அதனை உறுதி செய்கிறேன் ஒளித்திருந்து இணையத்தளம் நடத்தவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.