Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் விஜேய் அன்டனி-விடியோ

Featured Replies

சிறிலங்கா அரசால்,மகிந்தவின் புதல்வரால் யாழ்ப்பாணத்தில் நாடாத்தப்பட்ட நிகழ்ச்சியில் இராச்சுடன் ,விஜேய் அன்டனி.

வடக்கின் வசந்தம்.......

வேறென்ன

நண்பன் சந்தோசுக்கு வாழ்த்துக்கள் .

பிழைக்க.. வாழ... எத்தனையோ வழி உள்ளது அதுவேற... ஆனால் உங்களுக்கும் தெரியும் நாம் சாகவில்லை... என (ஈழத்தமிழன்) இதெல்லாம் எத்தனை காலத்துக்கு... நாம் அழியவில்லை... எல்லாவற்றையும்;.... உலகையும்.... பொறுமையுன் இன்று பார்கின்றோம். பார்த்துக்கொண்டுள்ளோம்... வாழ்கையே போராட்டம்தான் இன்றைய உலகில். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஒம் நானும் கேள்விப்பட்டனான் இந்த இசை நிகழ்சியில்தான் பொடியள் கரண்ட் கம்பிக்க சைக்கிள் செயின் எறிஞ்சு லைற்றை நூத்துப்போட்டு பொண்டுகளுக்கு ...சி எல்லாம் பிடித்து சட்டைகளை எல்லாம் கிழித்தெறிந்து வேறவேற வேலைகளையெல்லாம் செய்தவையாம். பிறகு கண்ணீர்ப்புகை அடித்துத்தான் இவைகளை அடக்கினார்களாம். எனது கலியானம் முடிக்காத நண்பர் ஒருவர் இந்த கற்பு மண்ணாங்கட்டி இதிலையெல்லாம் மிகவும் நம்பிக்கையுடையவர். இப்போ வெளிநாட்டில் வாழ்கிறார். தனது தாயாருக்கு ஒரு விடையம் கூறியிருக்கிறார். அதாவது தனக்கு வருகிற பொம்பிளைக்கு வேர்ஜினிட்டி பரிசோதனை செய்ய வேணும் எண்டு. ஆனால் வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளையெண்டால் தெவையில்லையாம், ஊரிலிருந்து பொம்பிளை எடுத்தால்தான் இப்படிச்செய்ய வேண்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத ரீதியில் எதிரியை விட நாம் பலமில்லாது இருந்தால் இதுதான் நடக்கும். ஆக்கிரமிப்பு தேசத்தில் சிங்களவன் என்ன எலியும் கும்மியடிச்சு விளையாடத்தான் செய்யும்.

எமது தேசத்தை மீட்க வேண்டின்.. நாம் அதிநவீன ஆயுதங்களை உருவாக்க வேண்டும். அது அரசியல் ரீதியாகவும் இருக்கலாம்.. இராணுவ ரீதியாகவும் இருக்கலாம்.. இரண்டும் சார்ந்தும் இருக்கலாம்..! :):D

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஒம் நானும் கேள்விப்பட்டனான் இந்த இசை நிகழ்சியில்தான் பொடியள் கரண்ட் கம்பிக்க சைக்கிள் செயின் எறிஞ்சு லைற்றை நூத்துப்போட்டு பொண்டுகளுக்கு ...சி எல்லாம் பிடித்து சட்டைகளை எல்லாம் கிழித்தெறிந்து வேறவேற வேலைகளையெல்லாம் செய்தவையாம். பிறகு கண்ணீர்ப்புகை அடித்துத்தான் இவைகளை அடக்கினார்களாம். எனது கலியானம் முடிக்காத நண்பர் ஒருவர் இந்த கற்பு மண்ணாங்கட்டி இதிலையெல்லாம் மிகவும் நம்பிக்கையுடையவர். இப்போ வெளிநாட்டில் வாழ்கிறார். தனது தாயாருக்கு ஒரு விடையம் கூறியிருக்கிறார். அதாவது தனக்கு வருகிற பொம்பிளைக்கு வேர்ஜினிட்டி பரிசோதனை செய்ய வேணும் எண்டு. ஆனால் வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளையெண்டால் தெவையில்லையாம், ஊரிலிருந்து பொம்பிளை எடுத்தால்தான் இப்படிச்செய்ய வேண்டுமாம்.

பொடியள் சூரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் நன்றாகச் செய்து புலம்பெயர் நாடுகளில் இருப்போரின் வயத்தெரிச்சலை வளர்த்துக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இன்னும் காவலித்தனம் யாழ்ப்பாணத்தில கொடிகட்டிப் பறக்குது எண்டு நினைக்கேக்கை உடம்பெல்லாம் புல்லரிக்குது..............!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இன்னும் காவலித்தனம் யாழ்ப்பாணத்தில கொடிகட்டிப் பறக்குது எண்டு நினைக்கேக்கை உடம்பெல்லாம் புல்லரிக்குது..............!

காவாலியாகிறதிற்கு பள்ளிக்கூடம் போய் படிக்கனும் என்றாப் போல எல்லோ இருக்கு உங்க கதை. உலகத்திலேயே மிக இலகுவாகக் கிடைக்கக் கூடிய பட்டங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக பொம்பிளைப் பிள்ளைகளைப் பெற்ற தாய் தகப்பன்.. ஊர் பொடியளுக்கு வழங்கும் பட்டம் இதுதான்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

காவாலியாகிறதிற்கு பள்ளிக்கூடம் போய் படிக்கனும் என்றாப் போல எல்லோ இருக்கு உங்க கதை. உலகத்திலேயே மிக இலகுவாகக் கிடைக்கக் கூடிய பட்டங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக பொம்பிளைப் பிள்ளைகளைப் பெற்ற தாய் தகப்பன்.. ஊர் பொடியளுக்கு வழங்கும் பட்டம் இதுதான்..! :)

நீங்க வேற நெடுக்...

இப்பவெல்லாம் இப்படியான ஆட்கள் இப்படி ஏதாவது செய்தாத்தான் பெண்களுக்கே பிடிக்கறது

இங்கையே பார்த்தீர்களா

பெயரே வை;திருக்கிறார் காவாலி என்று...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க வேற நெடுக்...

இப்பவெல்லாம் இப்படியான ஆட்கள் இப்படி ஏதாவது செய்தாத்தான் பெண்களுக்கே பிடிக்கறது

இங்கையே பார்த்தீர்களா

பெயரே வை;திருக்கிறார் காவாலி என்று...

:):D

கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.. இந்தப்பழமொழி இங்கு பொருத்தமானதா? :)

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.. இந்தப்பழமொழி இங்கு பொருத்தமானதா? :)

இதை சொன்னால் நாங்கள் துரோகிகள்...லண்டனில் இருந்து புலிக்கு பின்னால் திரிந்த பலரே இப்ப மகிந்தாவுக்கு பிரச்சாரம் செய்யப் போயிட்டார்கள்

இலங்கைத்தீவில் தமிழ் இனத்தின் இருப்பு, அத்தீவில் தனிநாடு அமைப்பதன் ஊடாகத்தான் சாத்தியப்படும் என்ற நம்பிக்கையுடையவர்கள். தமிழின எதிரிகளின் பின்னால் அணிவகுத்து நிற்கமாட்டார்கள்.

உலகத்தமிழரிடையேயும் தமிழ் இனத்தின் இருப்பிற்கு, உலகில் ஒரு நாடு அமைய வேண்டும் என்ற நம்பிக்கை உடையோரும் தமிழின எதிரிகளின் பின்னால் செல்லமாட்டார்கள்.

இன்று துரோகிகள், பச்சோந்திகள், தொலைநோக்கற்றவர்கள் அரசியல் வணிகர்கள், சுயநலவாதிகளின் காலமாக இருக்கின்றது. இந்நிலை நீண்டநாட்கள் தொடராது.

;

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்னவெண்டால் சம்பந்தர் வேலியிலை போன ஓணானை மடியிலை பிடித்துப் போட்டுவிடடார். இவருக்குத் தெரியாது கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளது மக்கள் முன்ணணி எனும் பெயரில் தேர்த்தல் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி ஒன்று இருக்கின்றது எனவும். அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் தற்போதுள்ள விடுதலைப் புலிகளது அரசியற் துறையினைச் சேர்ந்தவர்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைப்பது எனும் பெயரில் தேசிய அரசியலில் களமிறக்கும் வாயப்புக்கள் அதிபர் தேர்த்தலில் சரத் வெல்வாராக இருந்தால் அதிகரிக்கும், அதன் பின்பு பாரளுமன்றத் தேர்தலில் இவர்களது அப்புக்காத்து அரசியல் வடக்குக் கிழக்கில் எடுபடாது என்பதும். வீட்டுக்கு வீடு விடுதலைக்காகக் கொடுத்த உயிர்களது விருப்பத்தை நேர்மையுடன் நிறைவு செய்பவர்க்கே அவர்களது உறவுகள் வாக்களிப்பார்கள் என்பதையம் இந்த அப்புக்காத்துமார் மறந்து போயிட்டினம் போலகிடக்கு. இவர்களது அறிக்கைகள் மூலம் இவர்கள் யார் என்பதையும் எதற்காக இவ்வளவு நாட்களும் காத்திருந்தார்கள் என்பதையும் தமிழ்மக்கள் இப்போது அறிந்திருப்பார்கள். எனினும் இவர்கள் கூறினாலும் கூறாது விட்டாலும் சரத்துக்குத்தான் வடக்குக்கிழக்கில் ஆளும்கட்சியின் கூலியாட்களிடமிருந்து தப்பிய வாக்குகள் போய்ச்சேரும். என்றாலும் இவர்கள் சரத்திடம் பிரச்சனையைத் தீர்த்து வைப்போன் எனச்சத்தியம் வாங்கி அதன் பின்பு அவர் வனது பேரினவாத முகத்ததைக் காட்டி சத்தியத்தில் இருந்து பின்வாங்கினால் அதுவும் வடக்குக் கிழக்கில் ஒரு பதிய அரசியல் தலைமை உருவாவதை எளிதாக்கும் இதுக்குத்தானே நாங்கள் காத்திருக்கிறோம், மிஸ்டர் சம்பந்தர் அப்புக்காத்து, இன்னமும் நன்றாகவே அறிக்கைகளை அள்ளிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்து உண்மையா என்று எனக்கு தெரியாது

ஆனால் நல்ல பார்வை

நடக்கவேண்டும்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுத ரீதியில் எதிரியை விட நாம் பலமில்லாது இருந்தால் இதுதான் நடக்கும். ஆக்கிரமிப்பு தேசத்தில் சிங்களவன் என்ன எலியும் கும்மியடிச்சு விளையாடத்தான் செய்யும்.

எமது தேசத்தை மீட்க வேண்டின்.. நாம் அதிநவீன ஆயுதங்களை உருவாக்க வேண்டும். அது அரசியல் ரீதியாகவும் இருக்கலாம்.. இராணுவ ரீதியாகவும் இருக்கலாம்.. இரண்டும் சார்ந்தும் இருக்கலாம்..! :):D

உண்மை.

ஆனால் இந்த இலக்கை அடைவதற்கான சரியான கருத்தாடல்களை தமிழனம் செய்ய முற்படவில்லையென்பதையே ஊடகங்களை அவதானிக்கும் போது தோன்றுகிறது.தமிழர்கள், யாரில் யார் சேறுபூசலாம் என்று சிந்திக்கிறார்களேயன்றித் தெளிவான அரசியல் விவாதங்களை நடத்தகிறார்களா எனில் இல்லையென்பதே பதிலாக உள்ளது. எனவே இப்போதும் சிந்திக்காத தமிழினம் இனியெப்போது சிந்திக்கப் போகிறது என்று தமிழினத்தைப் பார்த்து சிங்களவரே கேட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

Edited by Valukkiyaru

  • கருத்துக்கள உறவுகள்

யாரில் யார் சேறுபூசலாம் என்று சிந்திக்கிறார்களேயன்றித் தெளிவான அரசியல் விவாதங்களை நடத்தகிறார்களா எனில் இல்லையென்பதே பதிலாக உள்ளது.

ஒவ்வொரு தமிழனனும் தன் பொறுப்பை உணர்ந்து

தன்னால் முடிந்ததை செய்வதோடு

மற்றவர் செய்வதை விவாதிக்காமல் இருப்பதே இன்றைய தேவை

இதையே நான் செய்கின்றேன்

புலிகள் யாழில ஆதிக்கம் செளுத்தமுன்னம் யாழ் இப்பிடித்தானாம். இது எனது தாயார் சொன்னது. அப்போது இந்தமாதிரி எல்லாம் நவீனமான சில்லறைத்தன்கள் இல்லை சற்று வித்தியாசமானது.

இப்ப அவங்கள் அதையே திரும்ப செய்கிறார்கள்... இதில் புதுசா வியக்க என்ன இருக்கு.

இன்னொன்றை சொல்லவேண்டும். இந்திய இராணுவத்தின் வருகைக்குபின்னர்.... அதிகளவான தமிழர்கள் தாயக பிரதேசங்களில் இருந்து கொழும்பு நோக்கி பெயர்ந்தார்கள். இது பல்வேறு காரணங்களுக்காக. இருந்தாலும் இளம் வயதினர் கொழும்புக்கு வந்தபின்னர் பலர் இவ்வாறுதான் நடந்து கொண்டனர்.

ஒருசிலரே கல்வி ஒழுக்கம் என்று அடக்கமாக இருந்தார்கள்... அப்போது யாய் கட்டுப்பாட்டுக்கு ஒரு முன்னுதாரணம். இப்ப நிலைமை அப்படி இல்லை.....

ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நாங்கள் தேடிப்போனால் சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லைகுள்ளதான் இருப்பம்.

இப்பிடித்தான் எதிர்க்காலம் இருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று எனது மைத்துணருடன் தொலைபேசியில் கதைத்தேன்

அவர் சொன்னது

கைத்தொலைபேசி பாவனைபற்றியது

எல்லாப்பிள்ளைகளிடமும் கைத்தொலைபேசிப்பாவனை வந்துவிட்டது

விளம்பரமும் தாராளமாக நடக்கிறது

அதேநேரம் சைக்கிள்களிலும் நடந்துபோகும்போதும் கைத்தொலைபேசியில் கதைத்தபடியேதான் போகிறார்கள்

யாருடன் கதைக்கின்றார்கள் என்று போறவருக்கு மட்டுமல்ல

பெற்றோருக்கும் தெரியாது

தட்டியும் கேட்கமுடியாது பாதுகாப்பு அவர்களுக்கு தரப்பட்டுள்ளது என்றார்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் அன்டனி இசையமைத்த தமிழ் படங்கள்.

சுக்கிரன்,டிஸ்யூம் ,பை2 , நினைத்தாலே, நான் அவனில்லை, பந்தயம்( இதில் சின்னமாமியே, சுராங்கனி போன்ற இலங்கை பொப்பிசைப்பாடல்கள் வருகின்றன),காதலில் விழுந்தேன்,அ ஆ இ ஈ,த. ந. டாக்ஸி 4777, மரியாதை, நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன்

இனி வரும் படங்கள் (யாரவது புறக்கணிக்க விரும்பினால்)

ரசிக்கும் சீமானே, கனகவேள் காக்க, அங்காடித்தெரு,அவள் பெயர் தமிழரசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.