Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தை இன்று காலை மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் கண்ணீர் அஞ்சலிகள்

  • Replies 78
  • Views 11.9k
  • Created
  • Last Reply

தேர்தல் வெற்றிக்காக படுகொலை செய்யப்பட்ட அய்யாவிற்கு கண்ணீர் அஞ்சலிகள்.

தனது 86வது வயதில் இயற்கை எய்தி இருக்கிறார். தந்தையும், மகனும் வெவ்வேறு துருவங்களில் வாழ்ந்து - வாழ்க்கைப்பயணத்தை அமைத்து இருக்கிறார்கள். அப்பனைப்போல் பிள்ளை என்று சொல்வார்கள். அது இங்கு பொருந்தாது. ஐயாவுக்கு அஞ்சலிகள்!

தேர்தல் வெற்றிக்காக படுகொலை செய்யப்பட்ட அய்யாவிற்கு கண்ணீர் அஞ்சலிகள்.

இருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரின் தந்தைக்கு என் கண்ணீர் காணிக்கைகள்!

உலகமே போற்றும் தமிழ்த்தலைவனை தந்த அய்யா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்ஞலி.

Edited by thanga

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் அன்னாருக்கு.


அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய, எனது கண்ணீர் அஞ்சலி.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள் ஐயா.....

உங்கள் சாவு சிறையில் அடைபட்டிருக்கும் ஏனையோரையும் பற்றிய விளிப்புனர்வுகளையும் அவர்களை விடுவிப்பதர்ற்குரிய நடவடிக்கைகளையும் துணிந்து எடுக்க எங்களுக்கு உந்துசந்தியாக அமைய பிராத்திக்கிறேன்.

கண்ணீர் அஞ்சலிகள். யாருமற்றவராய் தனிமைப்படுத்தப்பட்ட அவரது துணைவிக்கு எப்படி ஆறுதல் கிடைக்கும்.

ஐயாவுக்குக் கண்ணீர் அஞ்சலிகள். அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

பிரித்தானியாவில் வீரத்தந்தையின் வீர வணக்க நிகழ்வு

திகதி: 08.01.2010 // தமிழீழம்

சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது சாவடைந்த தமிழீழத் தேசியத் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 10ம் நாள் பிரித்தானியாவில் நினைவுகூரப்படுகின்றது.

080110%20003.jpg

http://www.sankathi.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

சொல்ல வார்த்தை இல்லை

வடிக்க கண்ணிர் இல்லை

கதைக்க கதை இல்லை..

தந்தையே உன்னை இழந்ததால்

எம்மினமே இன்று

இருளில் இருக்கின்றது

இறைவா...............

தமிழீழ தேசீயத் தலைவர் அவர்களின் தந்தையார் மரணத்திற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!

Edited by shanu thinesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னிகரற்ற ஓர் தமிழ் தலைவனின் தந்தையென்ற காரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லாமல் அடக்குமுறை ஆட்சியின்கீழ் தம்பதியராகவே சிறைவாசம் அனுபவித்து சிறையிலேயே மாண்டுபோன, தமிழினம் என்றென்றும் பெருமை கொள்ளும் ஓர் தன்னிகரற்ற தலைவனைத் தந்த திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயா அவர்களின் மறைவுக்கு எனது அஞ்சலியைச் செலுத்திக்கொண்டு தலைவரின் குடும்பத்தாருக்கும் பிரத்தியேகமாக கணவரைப் பிரிந்த கவலையுடன் இன்னமும் சிறையிலேயே வாடும் தலைவரின் அம்மாவுக்கும் எனது அனுதாபஙளையும் தெரிவித்துக்கொள்கிறேன்....

Pழளவநன ஐஅயபந

தலைவர் அவர்களின் தந்தையாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களது தேசியத்தலைவனின் தந்தையிற்கு கண்ணீர் அஞ்சலிகள்!!! .அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

நம் இனத்திற்கான அடையாளத்தை, வீரனை, ஒரு ஒப்பில்லா தலைவனை, தமிழனை நமக்கு பெற்றுத் தந்த தந்தை என்றும் நம் மனதில் வாழ்வார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலி எமது வீரத் தந்தைக்கு.. அவர் என்றென்றும் எமது நெஞ்சங்களில் குடிஇருப்பார்.. அவர் சிங்களத்தின் சித்திரவதையில் இருந்து விடுதலை அடைந்திருப்பதை இட்டு ஆறுதலடைவோம் ,,... அவரின் பாரியாரை நினைத்து தான் கவலை..

எனக்கொரு சந்தேகம், கொஞ்ச நாட்களுக்கு முன் மகிந்த சொன்னான் வேலுக்கள் எனக்கு வேண்டாம் என்று( தலைவரின் பெற்றோர்கள் என்னை ஆதரித்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன் என்று சரத் சொன்னான்.. அதுக்கு மகிந்த வேலுக்கள் எனக்கு வேண்டாம் என்று... இங்கே எங்கயோ படித்ததாக நாபகம்.. ), நான் நினைக்கிறன் அவரை(எங்கள் தந்தையை) சித்திரவதை பண்ணி மகிந்தவுக்கு ஆதரவாக மற்றைய குழுக்களை போல நக்க சொல்லி இருப்பான், அதுக்கு எங்கள் தந்தை மறுத்து இருப்பார், அதனால அவரை இவ்வுலகை விட்டே அனுப்பிஇருப்பானுக பாவி பயலுக..

இதை சீரியஸ் ஆக உரியவர்கள் விசாரிப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சீறும் புலியை ஈன்ற பெரும்புலிக்கு நம் வீர வணக்கங்கள்.. ஈழத்தவர் இன்னும் செயல்படாது இருப்பின் இழப்புகள் மேலும் மேலும் அதிகமாகவே செய்யும்..இங்கு இணையத்தில் அஞ்சலி செலுத்துவது.. கூடி கும்மியடிப்பதை விடுத்து முன்பு போல அனைவரும் தெருக்களில் இறங்க வேண்டும்.. தெருக்களில் இறங்க தமிழ்நாட்டில் குவாட்டரும் கோழி பிரியாணியையும் கேட்கும் மாக்களை விட மனிதம் சிறிதாவது இருக்கும் மேற்குலகில் அந்த மக்கள் சிறிதாவது செவிமெடுப்பார்கள்.

நன்றி புரட்சிகரதமிழ்தேசியன் திருவண்ணாமலை

சீறும் புலியை ஈன்ற பெரும்புலிக்கு நம் வீர வணக்கங்கள்.. ஈழத்தவர் இன்னும் செயல்படாது இருப்பின் இழப்புகள் மேலும் மேலும் அதிகமாகவே செய்யும்..இங்கு இணையத்தில் அஞ்சலி செலுத்துவது.. கூடி கும்மியடிப்பதை விடுத்து முன்பு போல அனைவரும் தெருக்களில் இறங்க வேண்டும்.. தெருக்களில் இறங்க தமிழ்நாட்டில் குவாட்டரும் கோழி பிரியாணியையும் கேட்கும் மாக்களை விட மனிதம் சிறிதாவது இருக்கும் மேற்குலகில் அந்த மக்கள் சிறிதாவது செவிமெடுப்பார்கள்.

நன்றி புரட்சிகரதமிழ்தேசியன் திருவண்ணாமலை

நான் ஈழத்தமிழர்கள் பற்றி பல கற்பனைக்கோட்டைகள் கட்டியிருந்தேன்... அவர்களும் சராசரி தமிழகத்தமிழனும் ??!! ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என நிரூபித்து வருகின்றனர்! கோட்டைகள் தரைமட்டமானது தான் மிச்சம்!

இன்னுமா இவர்களை நம்புகிறீர்கள்!

தன்னிகரற்ற ஒரு தலைவனை எம் இனத்துக்கு கொடுத்த நம் மதிப்புக்குரிய தந்தை திரு.திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீர வணக்கங்கள்.

தமிழினத்தின் "வீரத் தந்தை"

ஐயாவுக்குக் கண்ணீர் அஞ்சலிகள். அவரது இழப்பால் துயருறும் அனைத்து உள்ளங்களுக்கும்

எனது அனுதாபங்கள்

இதை பெரிதாக்கி தலவரின் அம்மாவை வெளியே கொண்டுவர முயற்சிகள் செய்யப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஈழத்தமிழர்கள் பற்றி பல கற்பனைக்கோட்டைகள் கட்டியிருந்தேன்... அவர்களும் சராசரி தமிழகத்தமிழனும் ??!! ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என நிரூபித்து வருகின்றனர்! கோட்டைகள் தரைமட்டமானது தான் மிச்சம்!

இன்னுமா இவர்களை நம்புகிறீர்கள்!

புலத்தமிழனின் ஒவ்வொரு நகர்விற்கும் அடிக்குமேல் அடித்து அமுக்கிய அரைக்குருடு கருணாநிதியை அடிமடியில் வைத்திருப்பபவர்கள் நீங்கள்.

நீங்களும் நீங்கள் பெற்ற பிள்ளையும் அவர் பெற்ற பிள்ளைகளும் சிங்கள இனவதத்திற்கு இரையாகினீர்கள். எங்கள் வாழ்க்கைப் பயணத்தில் உங்களுக்கு அஞ்சலிகள் என்று கூறிக்கொண்டு போய்க்கொண்டிருக்கின்றோம் ஆனால் எங்கே என்று தெரியாது. உங்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.