Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரை மிகவும் பிடிக்கும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களது வாழ்க்கையானது உறவு முறைகளால் பின்னி பினைந்தது.அவர்கள் எப்போதுமே உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்...என்ன நல்லது, கெட்டது என்டாலும் உறவுகளோடு கலந்தாலோசித்து தான் செய்வார்கள்...இனி விச‌யத்திற்கு வருகிறேன்...உங்கள் உற‌வுகளிலே உங்களுக்கு மிகவும் பிடித்த உறவு யார்..அது அம்மாவா,அப்பாவா,தாத்தாவா,பாட்டியா உங்கள் சகோதர‌ சகோதரியா,மாமா மாமியா, மிக முக்கியமாக கணவன் மனைவியா,காதலன் காதலியா? அல்லது நண்பர்களா இல்லாவிடின் ஒருத்தரையும் பிடிக்காதா... ஏன் எதற்காக அவர்களை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? அவர்களில் யார் உங்கள் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்...அந்தப் பாசம் உண்மையானதா...இதில் நான் காதலன்,காதலியையும் நண்பர்களையும் சேர்த்து உள்ளேன் அவர்களை இந்த உறவு முறைக்குள் சேர்க்கலாமா தெரியவில்லை.

நவீன இளைஞர்,யுவதிகள் தங்கள் உறவுகளில் பாசமாக இருப்பார்களா..தற்போது அந்த உறவு முறை மீதான அந்தப் பாசம் மாறுகிறது என நினைக்கிறேன் தற்போதைய இளைஞர்கள் யுவதிகள் தங்கள் விருப்பப்படி தான் எல்லாம் செய்கிறார்கள் யாராவது அவர்கள் விசயத்தில் தலையிட்டால் அது அவர்களது பெற்றோராயிருந்தாலும் கூட உங்கள் வேலையை பார்த்துப் போங்கள் தங்கள் விசயத்தில் தலையிட வேண்டாம் தங்களுக்கு தெரியும் தங்கட வேலையை எப்படி செய்வது என சொல்கிறார்கள்...இந்த நிலை ஆரோக்கியமானாதா...இதனால் உறவுகளுக்குள் பாதிப்பு ஏற்படாதா...புலம் பெயர் நாட்டில் உறவுகள் தொடர்ந்து இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரதி.............நல்ல தலைப்பு .....யாரை மிகவும் பிடிக்கும் என ஒவ்வொருவரும் தங்களை தாங்களே ஆத்ம பரிசோதனை செய்ய உதவும் ..........எல்லோரையும் பிடிக்கும்... ஆனால் இதில் எழுத போக அவர்களது தனித்துவம் வெளியே தெரிய வாய்ப்பு இருக்கு. தமிழர்களுக்கு எல்லா உறவும் வாழ்வில் ஒரு நாள் வரும். சில உறவுகளை அவர்களது இள வயதில் இழந்து விட்டிருப்பார்கள். பலர் வீடில் ஆண்களுக்கு அம்மா பாசமும் பெண்களுக்கு அப்பா பாசமும் பெரிதாக் இருக்கும். சக உறவுகள் இளமையில் சண்டை பிடித்து ....பின் தனிக்குடும்பதுக்கு போன பின் உணருவார்கள். மொத்தத்தில் இருக்கும் போது தெரிவதில்லை இல்லாதபோது ஏக்கம் வரும்.

இரண்டாவது பந்தியில் சொல்ல பட்ட வைகள் எல்லா வீடுகளிலும் விசேடமாக் புலம் பெயர்ந்து வாழும் குடும்பங்களில் இருக்கும், அதிக துணிச்சல் ..தன்னம்பிக்கை . நிறைய விடய விளக்கம். என்பவற்றால் வருவது.............இவர்கள் பட்டதும் தெளிவார்கள். பட்ட பின்பு நான் நினைத்தேன் இப்படி இருக்கும் என்று .........ஆனால் இப்படியாகி விட்டது.....என்பார்கள் கடைசியில். அவர்களது போக்கில்விட்டு பிடித்து ...பின்பு தான் திருத்தவேண்டும்.

எனக்கு திருமணத்திற்க்கு முன்பு அம்மாவை ரொம்ப பிடிக்கும்(அதற்க்காக இப்ப பிடிக்கவில்லையென்று இல்லை இப்பவும் பிடிக்கும்) , அவரிடம் எல்லாமே சொல்லுவன், அம்மா எனக்கொரு நல்ல நண்பியாகவே இருந்திருக்கிறா, அப்புறம் எனது நண்பியை ரொம்ப பிடிக்கும் அவளிடம் நான் எதையும் மறைக்க மாட்டன். ஆனா இப்ப எனக்கு மிக மிக பிடித்தவர் எனது கணவர்(காதலன்) . அம்மா நண்பி எல்லோரையும் பிரிந்து வருடக்கணக்கில் இருக்க முடியுது, அவர்களுடன் கிழமைக்கு ஒருக்காத்தான் தொலைபேசியில் கதைப்பன்.ஆனா கணவர் வேலைக்கு போனா எப்ப முடியும் எப்ப முடியும் என்று 10 தரம் போன் பண்ணுவன் . அவர் எனக்கு ஒரு நல்ல நண்பனாகவும் இருக்கிறார் அதனால் அவரை எனக்கு பிடிக்கும். :lol:

நிச்சயம் எதிர்கால சந்ததியினர் பெற்றோரின் ஆலோசனையைக்கேட்பார்கள் அவர்களுடன் நல்ல நண்பர்களாக பெற்றோர்கள் இருக்கும் பட்சத்தில்.பிள்ளைகள் பெற்றோரிடம் எதையும் பகிர்ந்திக்கும் மனப்பக்குவத்தை சிறுவயதில் இருந்தே வளர்த்துக்கொண்டு வரவேண்டும். பிள்ளைகளுக்கும் பெற்றோரிற்க்கும் இடைவெளி கனக்க இருந்தா பிள்ளைகள் பெற்றோரை மதிக்க சந்தர்ப்பம் குறைவு

வாழ்த்துகள் செவ்வந்தி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

யாரை மிகவும் பிடிக்கும்!

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சேர் ஐசக் நியூட்டனை ரெம்பப் பிடிக்கும்.

அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல சிரமப்பட்டு அந்த நிலைக்கு வந்தவர். அதுமட்டுமன்றி அவர் இறுதி வரை திருமணமே செய்தாத கட்டைப் பிரம்மச்சாரியா வாழ்ந்து சாதனைகளால் உலகப் புகழ்பெற்றிருக்கிறார். சாதாரண மனிதர்களைப் போல குட்டி போடுதலை தொழிலாச் செய்யாமல்.. மனிதருக்குரிய சிறப்போடு வாழ்ந்த ஒரு மேதை என்பதால் அவரை ரெம்பப் பிடிக்கும். அதுவும் பிற்போக்குத்தனங்கள் நிறைந்த ஒரு காலத்தில் இப்படி வாழ்ந்து முடிப்பது என்பது முயலாத விடயம். இன்றைய காலத்தில் கூட எத்தனையோ மூடநம்பிக்கைகளை வழக்கமாகக் கொண்டு அவற்றை எடுகோளாக்கி வாழும் மனிதர்கள் மத்தியில்.. அன்றைய உலகில் மூடநம்பிக்கை தகர்த்து எழுந்த நியூட்டன் ஒரு நல்ல சாதனையாளன் என்பதால் பிடிக்கும். :lol:

Edited by nedukkalapoovan

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொருவரைப் பிடிக்கும். குழந்தையில் இருந்து பதின்ம வயது வரை எனக்கு அம்மாவையும் அப்பாவையும, பின் பதின்ம வயதில் மச்சாளை (காதலியை), அவள் ஆப்பு வைத்துவிட்டு போக இருபதுகளில் இன்னொருத்தியை, பின் திருமணம் முடித்த பின் மனைவியை, இப்போது பிள்ளைகளை. ஏற்கனவே பிடித்த அம்மாவையும், மனைவியையும் இன்றும் பிடிக்கும் என்றாலும், கூப்பிட்டவுடன் வந்து நெஞ்சில் தவளும் குழந்தைகளையே இப்போது மிகவும் பிடிக்கின்றது. நாளை சில வேளை இதுவும் மாறி பேரப்பிள்ளைகள் என்று வரலாம்

(இடைக்கிடை அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களையும் பிடிக்கின்றது... அது இதுக்குள் சேர்த்தியா இல்லையா என்று தெரியவில்லை)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சேர் ஐசக் நியூட்டனை ரெம்பப் பிடிக்கும்.

அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல சிரமப்பட்டு அந்த நிலைக்கு வந்தவர். அதுமட்டுமன்றி அவர் இறுதி வரை திருமணமே செய்தாத கட்டைப் பிரம்மச்சாரியா வாழ்ந்து சாதனைகளால் உலகப் புகழ்பெற்றிருக்கிறார். சாதாரண மனிதர்களைப் போல குட்டி போடுதலை தொழிலாச் செய்யாமல்.. மனிதருக்குரிய சிறப்போடு வாழ்ந்த ஒரு மேதை என்பதால் அவரை ரெம்பப் பிடிக்கும். அதுவும் பிற்போக்குத்தனங்கள் நிறைந்த ஒரு காலத்தில் இப்படி வாழ்ந்து முடிப்பது என்பது முயலாத விடயம். இன்றைய காலத்தில் கூட எத்தனையோ மூடநம்பிக்கைகளை வழக்கமாகக் கொண்டு அவற்றை எடுகோளாக்கி வாழும் மனிதர்கள் மத்தியில்.. அன்றைய உலகில் மூடநம்பிக்கை தகர்த்து எழுந்த நியூட்டன் ஒரு நல்ல சாதனையாளன் என்பதால் பிடிக்கும். :lol:

குட்டி போடாமல் வாழ்வது ஒரு வாழ்கையா? அப்ப அதையே உதாரணமாக எடுத்து குட்டி போடாமல் வாழ வாழ்த்துகள். :lol::lol:

ஒவ்வொரு உயிரின் பிறப்பின் முதன்மையான கொள்கையே தனது இனத்தை விருத்தி செய்வதே, சாதனை ,சோதனை, வேதனை, போதனை எல்லாம் அடுத பட்சமே. :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டி போடாமல் வாழ்வது ஒரு வாழ்கையா? அப்ப அதையே உதாரணமாக எடுத்து குட்டி போடாமல் வாழ வாழ்த்துகள். :lol::lol:

ஒவ்வொரு உயிரின் பிறப்பின் முதன்மையான கொள்கையே தனது இனத்தை விருத்தி செய்வதே, சாதனை ,சோதனை, வேதனை, போதனை எல்லாம் அடுத பட்சமே. :D

அப்படி போடு..போடு... :D

நீங்கவேறை அந்தாள் நோகாமல் நொங்கு தின்ன பார்க்குது

ஒரு மாட்டை வங்கி அது கன்று போட்டு அதுக்கு பிறகு பாலைக் குடிக்கிறதை விட ஒரு போத்தல் பாலை வாங்கி குடிக்க நினைக்கிறார் போல நம்ம நெடுக்ஸ்...நெடுக்கின்னா...கொக்கா :lol:

(இடைக்கிடை அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களையும் பிடிக்கின்றது... அது இதுக்குள் சேர்த்தியா இல்லையா என்று தெரியவில்லை)

இது பொயின்ட் :)

எனக்கு சேர் ஐசக் நியூட்டனை ரெம்பப் பிடிக்கும்.

அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல சிரமப்பட்டு அந்த நிலைக்கு வந்தவர். அதுமட்டுமன்றி அவர் இறுதி வரை திருமணமே செய்தாத கட்டைப் பிரம்மச்சாரியா வாழ்ந்து சாதனைகளால் உலகப் புகழ்பெற்றிருக்கிறார். சாதாரண மனிதர்களைப் போல குட்டி போடுதலை தொழிலாச் செய்யாமல்.. மனிதருக்குரிய சிறப்போடு வாழ்ந்த ஒரு மேதை என்பதால் அவரை ரெம்பப் பிடிக்கும். அதுவும் பிற்போக்குத்தனங்கள் நிறைந்த ஒரு காலத்தில் இப்படி வாழ்ந்து முடிப்பது என்பது முயலாத விடயம். இன்றைய காலத்தில் கூட எத்தனையோ மூடநம்பிக்கைகளை வழக்கமாகக் கொண்டு அவற்றை எடுகோளாக்கி வாழும் மனிதர்கள் மத்தியில்.. அன்றைய உலகில் மூடநம்பிக்கை தகர்த்து எழுந்த நியூட்டன் ஒரு நல்ல சாதனையாளன் என்பதால் பிடிக்கும். :)

என்ரையப்பா....தாங்க முடியலைங்க இந்த கொடுமையை(குசும்பை) :wub::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உறவுகளின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.நிலாக்கா நீங்கள் சொன்னது சரி உறவுகளின் பாசம் அவர்கள் அருகில் இல்லாத போது தான் அதிகமாக இருக்கிறது...செவ்வந்தி நீங்கள் கொடுத்து வைத்தனீங்கள் காதலிக்கும் ஆண்கள் கல்யாணத்திற்கு பிறகும் அதே அன்போடு இருப்பார்களா சொல்ல முடியாது ஆனால் அந்த வகையில் நீங்கள் அதிஸ்டசாலி...நெடுக்ஸ் ஒரு விஞ்ஞானி மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பானது விஞ்ஞானத்தில் மேல் உங்களுக்கு இருக்கும் விருப்பத்தை காட்டுகிறது.நிழலி நீங்கள் சொன்னது மாதிரி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவர் மீது விருப்பம் வருவது உண்மை தான்.

எனக்கு சின்ன வயதில் இருந்து என் அப்பாவை மிகவும் பிடிக்கும் ஆனால் தற்போது அப்பா உயிரோடு இல்லை...எனக்கு என் உறவுகளை தவிர மிகவும் பிடித்த ஒருவர் சொன்னால் சிரிப்பீர்கள் எனக்கு எங்கள் போராட்டம் பற்றி தெரிகிற வயதில் நாங்கள் மட்டக்களப்பில் இருந்தோம் அதனால் எனக்கு கருணாவை ‍பிடிக்கும் :wub:

இன்னும் இர‌ண்டு மூன்று வருட‌ங்களுக்கு இந்த பதிவு இருந்தால் அதில் வந்து எனக்கு என் கணவரையும் என் குழந்தைகளையும் பிடிக்கும் என எழுதுவேன் :lol:

இன்னும் இர‌ண்டு மூன்று வருட‌ங்களுக்கு இந்த பதிவு இருந்தால் அதில் வந்து எனக்கு என் கணவரையும் என் குழந்தைகளையும் பிடிக்கும் என எழுதுவேன் :lol:

அட கடவுளே... நீங்கள் இன்னும் கல்யாணம் முடிகாதவரா...? நான் நினைச்சன் உங்களுக்கு பேரப்பிள்ளகளாவது இருக்கும் என்று :wub:

  • கருத்துக்கள உறவுகள்

என்னை என் விருப்பு வெறுப்புகளை யார் புரிந்து கொள்கிறார்களோ

அவர்ர்கள் தான் எனது விருப்பத்துக்கு உரியவர்கள். :wub:

அட கடவுளே... நீங்கள் இன்னும் கல்யாணம் முடிகாதவரா...? நான் நினைச்சன் உங்களுக்கு பேரப்பிள்ளகளாவது இருக்கும் என்று

நானும் ரதி ரொம்ப பெரிய ஆளாய் இருக்கலாம் எண்டு நினைச்சன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு விளங்குது, உங்களுக்கு இருகிறதை விட வச்சிருக்கிறது பிடிக்குது என்று. :lol::lol::lol:

அது சரி இந்த விசயம் ஆச்சிக்கு தெரியுமா? :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு விளங்குது, உங்களுக்கு இருகிறதை விட வச்சிருக்கிறது பிடிக்குது என்று. :lol::lol::lol:

அது சரி இந்த விசயம் ஆச்சிக்கு தெரியுமா? :lol:

இதிலென்ன புதுமை இருக்கிறது. அண்மையில் பிரித்தானியவில் நடத்திய ஆய்வில் 10% ஆண்கள் சனத்தொகை விபச்சாரிகளை நம்பி வாழ்கிறதாம். அதில் அநேகம் பேர் திருமணமானவர்களாகவோ அல்லது நிரந்தர துணை ஒன்றைக் கொண்டவர்களாகவோ இருப்பதுதான் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

அதன் பின்னர் உலகளாவிய ரீதியில் செய்யப்பட்ட பிறிதொரு ஆய்வில் விபச்சாரிகளை நாடும் ஆண்கள் ஏன் தாங்கள் அப்படிச் செய்கின்றனர் என்று விளக்கச் சொன்ன போது இது பாஸ்ட் பூட் காலம்.. செக்ஸும் அப்படி அமைந்துவிட்டால் கமிட்மன்ற் தேவை இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் பெண்கள் விபச்சாரிகளாகி பல ஆண்களை தேட வெளிக்கிட்டுவிட்ட நிலையில் ஆண்களும் அதற்கு பதிலடியாக இப்படி இறங்கி இருக்கிறார்கள் போல.

ஆனால் ஒன்றைக் கவனியுங்கள் மொத்த ஆண்கள் சனத்தொகையில் 10% பேர் மட்டுமே விபச்சாரிகளை நாடுகின்றனர். மிகுதி 90% ஆண்கள் இன்னும் நல்ல பிள்ளைகளாகவே இருக்கின்றனர். இது ஆண்கள் இன்னும் முழுமையாக சோரம் போகத் தயார் இல்லை என்று காட்டி நிற்கிறது. அதுமட்டுமன்றி இன்னொரு ஆய்வில் அநேகம் ஆண்கள் தனி ஆட்களாக வாழ்வதையே விரும்புகின்றனராம். பெண்களோடு உறவுகள் வைத்துக் கொண்டாலும் அதை நிரந்தரமாக்குவதில் ஆண்கள் இப்போ எல்லாம் பின்நிற்கின்றனர் என்பதையே இது காட்டி நிற்கிறது..! :)

(இவை அனைத்தும் எனது கருத்து அல்ல. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அமைந்த கருத்துக்கள். நான் எப்போதும் 90% ஆண்களுக்குள் நல்ல பிள்ளையாவே இருக்க விரும்புறன். எனக்கு நல்ல பிள்ளையா இருந்து பழகிட்டுது. கெட்டுப் போக மனசு வருகுதில்ல..! ) :D

Edited by nedukkalapoovan

பொதுவாக எல்லா பெண்களையுமே பிடிக்கும்?

குடும்பம் முதல்தான்,பின்னர் நண்பர்களே எனது உலகம்.

வீக்கென்ட் என்றால் ஒன்றை உடைத்து வைத்து விட்டு அரசியல்,சினிமா,விளையாட்டு,சங்கீதம்,தனிப்பட்ட வாழ்க்கை என்று கச்சேரி களைகட்டும்.ஆளை ஆள் புழுகுவதில் உள்ள சந்தோசம் வேறெதில் இருக்கு.

நெடுக்ஸ், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். நானும் இளமையில் நல்ல பிள்ளைக்கு நடிக்க வெளிக்கிட்டு என்னுடன் இருந்தவெனெல்லாம் பிகாடிலிக்கு போய் மேய்ந்துவர நான் ஏகபத்தினிவிரதன் ஆக்கும் என்று பீத்தியடிச்சு இப்ப அவங்கள் கதைக்கிறதை கேட்கதான் விளங்குது என்னத்தை எல்லாம் மிஸ் பண்ணி விட்டேன் என்று.டூ லேட் fஒர் மீ. சும்மா சித்தாந்தம்,வேதாந்தம் கதைக்கின்றதைவிட்டு ஆன அலுவலை பாரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். நானும் இளமையில் நல்ல பிள்ளைக்கு நடிக்க வெளிக்கிட்டு என்னுடன் இருந்தவெனெல்லாம் பிகாடிலிக்கு போய் மேய்ந்துவர நான் ஏகபத்தினிவிரதன் ஆக்கும் என்று பீத்தியடிச்சு இப்ப அவங்கள் கதைக்கிறதை கேட்கதான் விளங்குது என்னத்தை எல்லாம் மிஸ் பண்ணி விட்டேன் என்று.டூ லேட் fஒர் மீ. சும்மா சித்தாந்தம்,வேதாந்தம் கதைக்கின்றதைவிட்டு ஆன அலுவலை பாரும்.

எனக்கு என் நிலைப்பாட்டில் தெளிவு இருக்குது. மேச்சலுக்கு போறது பெரிய வேலையில்ல.. போய் சேதாரம் இன்றி திரும்பிறது தான் கஸ்டம். ரைகர் வூட்டை பார்த்தீர்கள் தானே எவ்வளவு பணம் செல்வாக்கு விளையாட்டில் திறமை இருந்தும்.. பெண்கள் விடயத்தில் பலவீனமாக இருந்ததால் இன்று அல்லல் படுகிறார். ஒரு ஆணின் மன மகிழ்வு என்பது பெண்களைச் சார்ந்து மட்டும் இருக்கக் கூடாது. அது பெண்கள் அவர்களை ஆளவும் அடிமைப்படுத்தவும் செய்யும். அத்தோடு நிம்மதியையும் இழக்க நேரிடும். இதற்கு இன்றைய உதாரணம் ரைகர் வூட்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என் தங்கச்சிமார் ரெண்டுபேரையும் தான் பிடிக்கும். என்னுடைய ஆறாவது வயதில், கடைசித் தங்கை பிறப்பில் தாயார் விண்ணுலகம் சென்றுவிட, தந்தை தன்வழியே போய்விட்டார். என் தாயாரையும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். இன்னும் பசுமையாய் அந்த நினைவுகளுடன் நெற்றியிலே திலகத்துடன் முழு நிலவு போல தாயார் தந்தை அருகில் அமர்ந்திருக்க தங்கை செல்ல நடைபயில குறும்புக்காரனாய் ஐந்துவயதில் நான்.... இன்னும் பசுமையாய் அந்த நினைவுகள் இன்றுபோல்..... மீண்டும் அந்த நாள்கள் வராதா என்று எண்ணி நெஞ்சம் விக்கி வரண்டு போகும். இறைவன் எவ்வ்வளவு நல்லவன்........

இப்பவெல்லாம் இன்னும் ஒரு பெண்ணையும் பிடித்துப் போகின்றது. நினைக்கும் போது நெஞ்சுக்குள் பூவாசம் கலந்த குளிர்காற்று அடிக்கின்றது. மீண்டும் மீண்டும் பார்ர்க்க வேண்டும் போல இல்லை சுவாசிக்கவேண்டும் போல இருக்கு.

கலியாணம் கட்டிய டைகர் வூட்சுக்கு ஏனிந்த வேலை.நான் கட்டாத ஆட்களுக்கு தான் சொன்னான்.பின் கட்டிப்போட்டு பிழைவிடவேண்டாம் என்று.

"பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா,கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா"

இதுக்கை என்ன ஆளுற,அடிமைபடுத்துற கதை. ஆட்டுக்க மாட்ட விட்டமாதிரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே... நீங்கள் இன்னும் கல்யாணம் முடிகாதவரா...? நான் நினைச்சன் உங்களுக்கு பேரப்பிள்ளகளாவது இருக்கும் என்று :rolleyes:

எதை வைத்து நீங்கள் அப்படி நினைத்தீர்களோ தெரியாது ஆனால் நீங்கள் என் எழுத்துக்கு தரும் கவுரவமாக நான் இதைக் கருதுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.