Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியா வருகை - ஈழத்தமிழர் நடமாடத் தடை; விமானம் பறக்கத் தடை;மீன் பிடிக்கத்தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா காந்தியின் சென்னை வருகை - ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தடை

ராமேஸ்வரம்: சென்னை [^]யில் நடைபெறும் புதிய சட்டமன்றத் திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்பதால், அவரது பாதுகாப்பை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை புதிய சட்டமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சென்னைக்கு வருகிறார்கள்.

இதற்காக 3 நாட்கள் வெளியில் நடமாட இலங்கைத் தமிழர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதித்து விட்டனர்.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுறு விடாமல் தடுக்கும் வகையில் ஏகப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் செய்து வருகின்றனர்.

ஒரு மணி நேர சோனியாவின் சென்னை வருகையையொட்டி வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சென்னை முதல் ராமேஸ்வரம் [^] வரை பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடற்படை, கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவு போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

விழா நடைபெறும் பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்கக் கூட தடை விதிக்கப்பட்டு விட்டது. இதனால் மீனவர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னையில் நடைபெறும் விழாவுக்கு ராமேஸ்வரத்தில் தடை விதித்தால் எப்படி, ஏற்கனவே இலங்கைக் கடற்படையினரால் தொழில் பாதிக்கப்பட்டு பெரும் வேதனையில் உள்ளோம். இந்த நிலையில் இப்படியெல்லாம் தடை விதித்தால் எப்படி என்று அவர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2010/03/13/rameswaram-fishermen-banned-from.html

------------------------------

அம்மாடியோவ்.. இவ்வளவு பயமா சாவிறதிற்கு. ஆனா நீங்க மட்டும் அடுத்தவன் தலையில குண்டு குண்டா கொட்டலாம் ஆக்கும்..! :rolleyes::D:o

Edited by nedukkalapoovan

தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்ற அம்மையாரின் பாதுக்காப்புக்காய் செலவளிக்கிற பணத்தில இன்னுமொரு புதியசட்டமன்றம் ஒன்றை கட்டி எழுப்பிவிடலாமோ?

சோனிய வருவதற்கும் ராமேஸ்வரம் மீன்பிடிக்கும் என்ன சம்பந்தம்? விமானம் பறக்கத் தடை செய்யுமளவிற்கு அங்கு என்னதான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இத்தாலிய பிஸ்ஸா கடையில் மேசை துடைத்தவளுக்கு வந்த காலத்தை பாத்தீங்களே?

ஸ்ரீ பார்சி குடும்பம் தங்களது புதிய தமிழ் நாட்டு ஆட்டு மந்தைகள் கொட்டிலை திறந்து வைக்க வருகிறார்கள்.

வாறவன் போறவனை வாழவைக்கும் ஆனால் சொந்த இனத்தை கெடுக்கும் தமிழ் நாட்டு காரரை நினைத்தால்.....

  • கருத்துக்கள உறவுகள்

இனி உச்சா போக தடை விதிப்பார்களா?

சட்டி அடுப்பைப் பார்த்து கறுப்பென்று சொல்லிச்சாம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா ஆட்சியில் இவ்வாறு நடந்திருந்தால் கலைஞர் இதனைக் கண்டித்து' உடன்பிறப்பே.........' என்று முரசொலியில் கடிதம் எழுதியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழக சட்டமன்றத்தை சோனியா வந்து திறந்துவைப்பதுதான் சிறப்பு"

பாதுகாப்பு கருதி தமிழில் பேசுபவர்களை பிடித்து தற்காலிகமாக சிறையில் அடைக்காது விட்டதை எண்ணி மகிழ்சிகொள்ள வேண்டியதுதான்.

எல்லாம் இராஜதந்திர நடவடிக்கைகளாவவே இருக்கின்றன............ இதற்குதான் அரசியலில் கருணாநிதிபோல் முதிர்ந்த சாணக்கியர்கள் வேண்டும் என்று சொல்றது. (சொன்ன கேட்க மாட்டேனுங்கிறீங்களே...................)

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திரம்..., இராஜமந்திரம்னு பலரும் இங்கே சில திரிகளில் பேசுகிறீர்கள். இராஜதந்திரம்னா என்ன என்பதை சற்று விளக்கினால் ஏப்பை சாப்பைகளாக இருக்கும் பலருக்கும் சிறிது புரிதல் கிட்டும். செய்வீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராஜதந்திரம்..., இராஜமந்திரம்னு பலரும் இங்கே சில திரிகளில் பேசுகிறீர்கள். இராஜதந்திரம்னா என்ன என்பதை சற்று விளக்கினால் ஏப்பை சாப்பைகளாக இருக்கும் பலருக்கும் சிறிது புரிதல் கிட்டும். செய்வீர்களா?

மக்களை முட்டாளாக்கி மன்னனுக்கு (ராஜ) பணிவிடை செய்தாவது தனது சொந்த காரியங்களை (தந்திரமாக) நிறைவு செய்வதுவும் ராஜதந்திரம் தான்.

(குறிப்பு - தன்னை பிரதிநிதியாக்கிய மக்களின் குறைகளையல்ல)

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திரம்..., இராஜமந்திரம்னு பலரும் இங்கே சில திரிகளில் பேசுகிறீர்கள். இராஜதந்திரம்னா என்ன என்பதை சற்று விளக்கினால் ஏப்பை சாப்பைகளாக இருக்கும் பலருக்கும் சிறிது புரிதல் கிட்டும். செய்வீர்களா?

காலைச்சாப்பாட்டுக்கும், மத்தியான சாப்பாட்டுக்கும் இடைப்பட்ட நேரமான மூன்று மணித்தியாலத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து.....

30 வருட போரை முடிவுக்கு கொண்டு வருவது ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம்.

தொலை பேசி, ஈ மெயில், தொலை நகல் என்று எவ்வளவோ இருக்க புறாவை தூது விடாமல்..... இலங்கை பிரச்சினையை கடிதம் மூலம் மத்திய அரசுக்கு தெரிவிப்பதும் ஒரு வகை ராஜ தந்திரம்.

அப்பாவி மக்களின் சுதந்திரத்தை பறித்து, ஜனநாயக வேடம் போட்டுத்திரியும் இனப்படுகொலையாளர்களுக்கு, பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது உலக நடைமுறையாகி வருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோனியா காந்தியின் சென்னை வருகை - ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தடை

http://www.youtube.com/watch?v=6yX_XyglxTc

விவேக்: அட ஆபீஸர்களா! மேல போற தலைவருக்கு கீழ டிராபிக்கை குளோஸ் பண்ணுறீங்களேய்யா! உங்க கடமை உணர்ச்சி கண்கலங்க வைக்குதையா! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.