Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் இரசித்த பாடல் வரிகள்

Featured Replies

நீங்கள் இரசித்த பாடலை முழுமையாக எழுதி அந்த பாடலில்

உங்களுக்கு பிடித்த வரிகளை அடையாளப்படுத்தி விடுங்கள்

உங்களது இரசனைகள் எவ்வாறு இருக்கின்றன பார்க்கலாம்

குறிப்பு :உங்கள் அபிப்பிராயங்களைத் தவிர்த்து பாடல் வரிகளை மட்டும் எழுதிவிடுங்கள்

முடிந்தால் பாடல் விபரத்தையும் குறிப்பிடவும் இந்த முயற்சிக்கு தயவு செய்து இடையூறாக செயற்பட வேண்டாம்

இது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைக்குறேன் .

படம்:பூவே உனக்காக

பாடியவர்:உன்னிகிருஷ்ணன்

நடிகர்:விஜய்

இசை: எஸ் எ ராஜ்குமார்

வருடம் :1996

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

காதலை பாடி பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும் போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்

ஒன்றாக சேர்ந்திட வேண்டும்

பூவே உன் புன்னகை என்றும்

சந்தோசம் தந்திட வேண்டும்

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

இன்னும் நூறு ஜென்மங்கள்

சேர வேண்டும் சொந்தங்கள்

காதலோடு வேதங்கள்

ஐந்து என்று சொல்லுங்கள்

தென்பொதிகை சந்தனக் காற்று

உன் வாசல் வந்திட வேண்டும்

ஆகாய கங்கைகள் வந்து

உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்

நிஜமாய் இன்று ஆனதே

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்

நிஜமாய் இன்று ஆனதே

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

காதலை பாடி பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும் .

http://www.youtube.com/watch?v=K4vvq7vRjC4

Edited by சூர்யா

  • Replies 63
  • Views 111.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

படம்:இதயக்கமலம்

பாடியவர்: பி சுசீலா

இசை: கே வி மகாதேவன்

கவிஞர் :கண்ணதாசன்

உன்னைக்காணாத

கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத

நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத

சொல்லும் சொல்லல்ல....

நீ இல்லாமல்

நானும்நானல்ல

நீ இல்லாமல்

நானும்நானல (உன்னைக்காணாத...2)

இதில்நீ ஒரு பாதி

நான் ஒரு பாதி

இதில் யார் பிரிந்தாலும்

வேதனை பாதி............(2)

காலங்கள் மாறும்

காட்சிகள் மாறும்

காதலின்முன்னே

நீயும்நானும்வேறல்ல...

உன்னைக்காணாத

கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத

நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத

சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல்

நானும்நானல்ல

நீ இல்லாமல்

நானும்நானல்ல

ஒரு தெய்வம் இல்லாமல்

கோவிலும் இல்லை

ஒரு கோவில் இல்லாமல்

தீபமும் இல்லை ...(2 )

நீ எந்தன் கோவில்

நான் அங்கு தீபம்

தெய்வத்தின் முன்னே

நீயும் நானும் வேறல்ல.....

உன்னைக்காணாத.........

Edited by சூர்யா

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சூரியகாந்தி

இசை : MS விஸ்வநாதன்

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

பாடல் வரிகள் : கண்ணதாசன்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும் கூட மிதிக்கும்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று

மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது

அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்

அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்

எந்த வண்டி ஓடும்

உனை போலே அளவோடு உறவாட வேண்டும்

உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது

அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது

இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது

இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

பி.கு.: பாடல் முழுவதுமே அர்த்தம் நிறைந்தது. ஒன்றை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்..! :(

நீங்கள் இரசித்த கவிதை வரிகள் என்றால் இதைக் கூறலாம். இந்தக் கவிதையை ஓர் மிகவும் பழைய சஞ்சிகையில் யாழ்ப்பாணத்தில் வாசித்தேன். இதை வடித்தவர் யார் என்று தெரியவில்லை. கவிதையின் முழுப்பகுதியும் நினைவில் இல்லை. கீழ்வரும் பகுதி பசுமையாக நினைவில் உள்ளது:

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

கன்னி மகளொருத்தி காதலினால் அன்னவளை

முன்னி அரவணைத்து முலைத்தடத்தில் முகம்புதைத்து,

கன்னிச் சிறையுடைத்து கருப்பாதைக் காரிருட்டில்

என்னையே யானிழந்து ஏதுமிலா தாகிவிட..

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்...

குய்யத்துக் கும்மிருட்டில் குருமணலாய் சிறுதுளியாய்

பையக் குடிபுகுந்து பருத்துத் திரண்டுருண்டு,

கையாகிக் காலாகி கண்மூக்குத் தானாகி

வையத்தில் ஒருநாளில் வந்தே விழுந்தேனை,

கையெடுத்து மெய்யணைத்து கனகமகிழ் அமுதூட்டி,

நெய்யலைந்த சிறுசோற்றை நிலாக்காட்டி வாயூட்டி,

என்னை வளர்த்தாளின் இடைநீங்கி மடிநீங்கி,

தன்னை மெல அறிந்து, தாய்ப்பாலின் சுவை மறந்து

என்னையே யானறியும் இளைஞனென மாறியபின்,

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: பயணங்கள் முடிவதில்லை

பாடல்: இளைய நிலா பொழிகிறது.

வரி: வைரமுத்து

பிடித்த வரிகள்:

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

http://www.youtube.com/watch?v=owiXDr1xQ8Y

  • கருத்துக்கள உறவுகள்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே

கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே

போகும்போது வேறுபாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ..)

மொத்தத்தில் பாடலின் முழுவரிகளும் என்னை கவர்ந்தவை. :rolleyes::wub:

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Atho antha Paravai - Ayirathil Oruvan - Ayirathil Oruvan.mp3

  • தொடங்கியவர்

படம்: திருடாதே

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

பாடல் வரிகள் : -நாமக்கல் கவிஞர்-

திருடாதே பாப்பா திருடாதே

திருடாதே பாப்பா திருடாதே

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே....

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே பாப்பா திருடாதே.....

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ -தவறு

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ...(2 )

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா

அது திரும்பவும் வராம பார்த்துக்கோ ...(2 )

திருடாதே பாப்பா திருடாதே.......

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது -அதை

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்

தடுத்துக்கொண்டே இருக்குது

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்

தடுத்துக்கொண்டே இருக்குது

திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது .....(2)

திருடாதே பாப்பா திருடாதே......

கொடுக்கிற காலம் நெருங்குவதால்

இனி எடுக்கிற அவசியம் இருக்காது

கொடுக்கிற காலம் நெருங்குவதால்

இனி எடுக்கிற அவசியம் இருக்காது

இனி எடுக்கிற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்....

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்

பதுக்கிற வேலையும் இருக்காது

பொறுக்கிற வேலையும் இருக்காது....

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்...ஆ ஆ ..ஆ

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்

கெடுக்கிற நோக்கம் வளராது .....

மனம் கீழும் மேலும் புரளாது

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்...ஆ ஆ ..ஆ

உழைக்கிற நோக்கம் உருதியாயிட்டால்

கெடுக்கிற நோக்கம் வளராது .....

திருடாதே பாப்பா திருடாதே

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே பாப்பா திருடாதே.....

பாப்பா திருடாதே.....

Edited by சூர்யா

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ............................நல்ல அர்த்தமுள்ள பாடல் .

பாப்பா ........( சிறு குழந்தை) என் திருத்துங்க.

உங்கள் பதிவுக்கு நன்றி .

  • தொடங்கியவர்

படம்: பெற்றால்தான் பிள்ளையா

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

இசை : MS விஸ்வநாதன்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ் சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

சின்னஞ் சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி ....

தவறு என்பது தவறிச் செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு என்பது தவறிச் செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்

தப்பு செய்தவன் வருந்தியாகணும்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி ......

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

இரண்டும் இருந்தால் பெயரை வாங்கலாம்

பெயரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ் சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி ......

கருணை இருந்தால் வள்ளலாகலாம்

கடமை இருந்தால் வீரனாகலாம்

கருணை இருந்தால் வள்ளலாகலாம்

கடமை இருந்தால் வீரனாகலாம்

பொறுமை இருந்தால் மனிதனாகலாம்

மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.....இந்த

மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்

அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப் போல் ......ஒ ஒ ..ஒ

அன்புக்கு வணங்கு வள்ளலாரைப் போல்....ஆ.ஆ ..ஆ

கவிதைகள் வழங்கு பாரதியை போல்... ஆ.ஆ ..ஆ

மேடையில் முழங்கு திரு வி கா போல் .......

மேடையில் முழங்கு திரு வி கா போல்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி .....

Edited by சூர்யா

  • கருத்துக்கள உறவுகள்

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

(காலங்களில் அவள் வசந்தம்…)

பால் போல் சிரிப்பதில் பிள்ளை

அவள் பனி போல் அணைப்பதில் கன்னி

கண் போல் வளர்ப்பதில் அன்னை

அவள் கவிஞனாக்கினாள் என்னை

(காலங்களில் அவள் வசந்தம்…)

படம்: பாவ மன்னிப்பு

உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி

உடல்: கவியரசு கண்ணதாசன்

குரல்: P.B. ஸ்ரீனிவாஸ்

பாடலில் கவிஞரின் உவமான உவமேயம் என்னை கவர்ந்தது.

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Kalangalil Aval - Paava Mannippu - Pbs.mp3

  • தொடங்கியவர்

படம்: எந்திரன்

பாடியவர் : Javed Ali, Chinmayi

பாடல் வரிகள் : -பா விஜய்

இசை :ஏ ஆர் ரகுமான்

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ – கன்னக்

குழிமஞ்சரோ

யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …

மொகஞ்சதாரோ – உன்னில்

நோழஞ்சதரோ பைய

கொழஞ்சதரோ யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …(2 )

காட்டுவாசி காட்டுவாசி

பச்சையாக கடிய

முத்தத்தாலே வேக வெச்சு

சிங்கபல்லில் உரைய

ஆஹா … ஆஹா …

மலைபாம்பு போல வந்து

மான்குட்டிய புடிய

சுக்குமிளகு தட்டி என்ன

சூப்பு வச்சு குடிய

ஆஹா … ஆஹா …

ஏவாளுக்கு

தங்கச்சியே என்கூடத்தான்

இருக்கா

ஆளுயர ஒலிவ் பழம்

அப்படியே எனக்கா ?

அக்கக்கோ – அடி

கின்னிகொழி

அப்பப்போ – என்ன

பின்னிகோடி ..

இப்பப்போ – முத்தம்

எண்ணிக்கோடி !

ஏ.. போ .எண்ணிக்கோ நீ..

ஆஹா … ஆஹா …

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ ................

கொடி பச்சையே எலுமிச்சையே

உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கொடி தசை – ஒவ்வொன்றிலும்

உந்தன் பெயரே இசை !

இனிசக்கரே அடிச்சக்கரே

மனச இரண்டா மடிசுகிறேன்

நான் ஊற வைத்த

கனி – என்னை மெல்ல

ஆற வைத்து கடி !

வேர்வரை நுழையும்

வெய்யிலும் நான் – நீ

இலைதிரை ஏன் இட்டாய் ?

உதட்டையும் உதட்டையும்

பூட்டி கொண்டு – ஒரு

யுகம் முடித்து திற அன்பாய் !

அக்கக்கோ – அடி

கின்னிகொழி.............

சுனைவாசியே சுகவசியே

தோல்கருவி எனைவசியே

ஏ .. தோல்குத்தா பலா – றேக்கைகட்டி

கால்கொண்டாடும் நிலா

ஆ ..மரதேகம் நான் மரங்கொத்தி நீ

வனதேசம் நான் அதில்வாசம் நீ …

ஏ .. நூறு கிராமம்தான் இடை – உனக்கு இனி

யாரு நான்தான் உடை !

ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை

மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்

புலி புல் தின்னுமே என்ன குற்றம் ?

அக்கக்கோ நான் கின்னிக் கோழி

அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ

ஏ ...போ எண்ணிக்கோ நீ..

http://www.lankanesan.com/Enthiran/Kilimanjaro%20Malai.mp3

Edited by சூர்யா

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

ஒருநாள் ஏனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே

ஒருநாள் ஏனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்றால்

முகிலின் கண்ணீர் மழையென கொள்வாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்றால்

முகிலின் கண்ணீர் மழையென கொள்வாய்

இயற்கை அழுதால்

மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

அன்னையின் கையில் ஆடுதல் இன்பம்

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

அன்னையின் கையில் ஆடுதல் இன்பம்

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்

தன்னலம் மறந்தால்பெரும்பேரின்பம்

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்

தன்னலம் மறந்தால்பெரும்பேரின்பம்

பெரும்பேரின்பம்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

ஒருநாள் ஏனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே.....

http://fr.kendincos.net/video-pnpnrftdf-pirakkum-pothum-alukinrai.html

படம்: எந்திரன்

பாடியவர் : Javed Ali, Chinmayi

பாடல் வரிகள் : -பா விஜய்

இசை :ஏ ஆர் ரகுமான்

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ – கன்னக்

குழிமஞ்சரோ

யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …

மொகஞ்சதாரோ – உன்னில்

நோழஞ்சதரோ பைய

கொழஞ்சதரோ யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …(2 )

காட்டுவாசி காட்டுவாசி

பச்சையாக கடிய

முத்தத்தாலே வேக வெச்சு

சிங்கபல்லில் உரைய

ஆஹா … ஆஹா …

மலைபாம்பு போல வந்து

மான்குட்டிய புடிய

சுக்குமிளகு தட்டி என்ன

சூப்பு வச்சு குடிய

ஆஹா … ஆஹா …

ஏவாளுக்கு

தங்கச்சியே என்கூடத்தான்

இருக்கா

ஆளுயர ஒலிவ் பழம்

அப்படியே எனக்கா ?

அக்கக்கோ – அடி

கின்னிகொழி

அப்பப்போ – என்ன

பின்னிகோடி ..

இப்பப்போ – முத்தம்

எண்ணிக்கோடி !

ஏ.. போ .எண்ணிக்கோ நீ..

ஆஹா … ஆஹா …

கிளிமாஞ்சரோ – மலை

கனிமாஞ்சரோ ................

கொடி பச்சையே எலுமிச்சையே

உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கொடி தசை – ஒவ்வொன்றிலும்

உந்தன் பெயரே இசை !

இனிசக்கரே அடிச்சக்கரே

மனச இரண்டா மடிசுகிறேன்

நான் ஊற வைத்த

கனி – என்னை மெல்ல

ஆற வைத்து கடி !

வேர்வரை நுழையும்

வெய்யிலும் நான் – நீ

இலைதிரை ஏன் இட்டாய் ?

உதட்டையும் உதட்டையும்

பூட்டி கொண்டு – ஒரு

யுகம் முடித்து திற அன்பாய் !

அக்கக்கோ – அடி

கின்னிகொழி.............

சுனைவாசியே சுகவசியே

தோல்கருவி எனைவசியே

ஏ .. தோல்குத்தா பலா – றேக்கைகட்டி

கால்கொண்டாடும் நிலா

ஆ ..மரதேகம் நான் மரங்கொத்தி நீ

வனதேசம் நான் அதில்வாசம் நீ …

ஏ .. நூறு கிராமம்தான் இடை – உனக்கு இனி

யாரு நான்தான் உடை !

ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை

மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்

புலி புல் தின்னுமே என்ன குற்றம் ?

அக்கக்கோ நான் கின்னிக் கோழி

அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ

இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ

ஏ ...போ எண்ணிக்கோ நீ..

[b]தரம்கெட்ட பாடல் வரிகள்.

இப்படியும் எழுதி ஈனப் பிழைப்பு நடத்தும் கவிஞர்கள் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….

மயில் இறகால் மையிடவா…

மார் உதைக்கும்… கால்களுக்கு…

மணி கொலுசு நான் இடவா…

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

செல்வ மகள் அழுகை போல்

ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை

பொன் மகளின் புன்னகைப்போல்

யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை

என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த

இலக்கண கவிதையும் நடந்ததில்லை

முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு

உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை

தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா

என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

பிள்ளை நிலா பள்ளி செல்ல

அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்

தெய்வ மகள் தூங்கயிலே

சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்

சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை

பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்

மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்

மிசையில்லாத மகள் என்று சொன்னேன்

பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே

ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….

மயில் இறகால் மையிடவா…

மார் உதைக்கும்… கால்களுக்கு…

மணி கொலுசு…. நான் இடவா…

http://www.youtube.com/watch?v=5mhVnsP7qcQ&feature=fvst

திரைப் படம்: சுமைதாங்கி

குரல்: P B ஸ்ரீநிவாஸ்

வரிகள்: கண்ணதாசன்.

http://www.youtube.com/watch?v=OsWdxKw7-YI

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எது வென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

ஏழை மனதை மாளிகையக்கி

இரவும் பகலும் காவியம் பாடி

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

கண்ணதாசனின் தத்துவப் பாடல் வரிகள் பொதுவாக எனக்குப் பிடிக்கும். அதிலும் இந்தப் பாடல் வரிகளை சிறு வயதிலையே எனது தந்தையாரிடம் அர்த்தம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான் பாடல் . தந்தை மகள் பாசம் அருமை.

பதிவுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: காற்று வந்தால் தலை சாயும் பெ: நாணல்!

ஆ: காதல் வந்தால் தலை சாயும் பெ: நாணம்!

ஆ: ஆற்றினிலே கரை புரளும் பெ: வெள்ளம்!

ஆ; ஆசையிலே கரை புரளும் பெ: உள்ளம்!

பெ: ஆடை தொட்டு விளையாடும் ஆ: தென்றல்!

பெ: ஆசை தொட்டு விளையாடும் ஆ: கண்கள்!

பெ: ஒருவர் மட்டும் படிப்பதுதான் ஆ: வேதம்!

பெ: இருவராக படிக்கச் சொல்லும் ஆ: காதல்!

பெ: மழை வருமுன் வானை மூடும் ஆ: மேகம்!

பெ: திரு மனத்துக்கு முன் மனதை மூடும் ஆ: மோகம்!

ஆ : ஓடிவரும் நாடிவரும் உறவு கொண்டு

தேடிவரும் உயிர் கலந்து சேர்ந்து விடும் பெ: மானும்!

பெ: பாடிவரும் பருவமுகம் பக்கம்வந்து நின்றவுடன்

பாசத்தோடு சேர்ந்து கொள்வேன் ஆ: நானும்!

பெ: நானும் ஆ: நானும்!

ஆ: அஞ்சி அஞ்சி நடந்து வரும் பெ: அன்னம்!

ஆ: அச்சத்திலே சிவந்துவிடும் பெ: கன்னம்!

ஆ: கொஞ்சி கொஞ்சி வஞ்சிமுகம் கோபுரத்து கலசமென

அந்திவெயில் நேரத்திலே பெ: மின்னும்!

ஆ: மின்னிவரும் நேரத்திலே மேனிகொண்ட பருவத்திலே

முன்னிருந்தால் தோற்றுவிடும் பெ: பொன்னும்!

ஆ: உள்ளம்! பெ: துள்ளும்!

அத்தனையும் பிடிச்சிருக்கு!! :o:unsure:

  • தொடங்கியவர்

படம்: மதராசபட்டினம்

பாடியவர் :ஹரிணி, Andrea

பாடல் வரிகள் : நா. முத்துக்குமார்

இசை :G V பிரகாஷ்

பூக்கள் பூக்கும் தருணம்- ஆருயிரே

பார்ததாரும் இல்லையே

புலரும் காலை பொழுதை

முழுமதியும் பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போக வில்லையே

உனது அருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே - இன்று

ஏனோ எதுவும் தோன்றவில்லையே …

இது எதுவோ...... ?

இரவும் விடியவில்லையே

அது விடிந்தால் பகலும்

முடியவில்லையே

பூந்தளிரே..... !

வார்த்தை தேவையில்லை

வாழும் காலம் வரை

பாவை பார்வை மொழி பேசுமே !

நேற்று தேவையில்லை

நாளை தேவையில்லை

இன்று இந்த நொடி போதுமே !

வேரின்றி விதையின்றி

விண்தூவும் மழையென்று - இது

என்ன இவன் தோட்டம் பூ பூக்குதுதே ?

வாளின்றி போரின்றி

வலிக்கின்ற யுத்தமின்றி

இது என்ன இவனுக்குள்

என்னை வெல்லுதே ?

இதயம் முழுக்க இருக்கும்

இந்த தயக்கம் , எங்கு கொண்டு நிறுத்தும்

இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்

அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

முந்தளிரே……

எந்த மேகம் இது ?

எந்தன் வாசல் வந்து

எங்கும் ஈர மழை தூவுதே !

எந்த உறவு இது ?

எதுவும் புரியவில்லை

என்றபோதும் இது நீளுதே !

யாரென்று அறியாமல்

பேர்கூட தெரியாமல்

இவனோடு ஒரு சொந்தம் உருவானதே !

ஏனென்று கேட்காமல்

தடுத்தாலும் நிற்காமல்

இவன் போகும் வழியெங்கும்

மனம் போகுதே !

பாதை முடிந்த பிறகும் - இந்த

உலகில் பயணம் முடிவதில்லையே

காற்றில் பறந்தே பறவை

மறைந்து பிறகே - இல்லை

தொடங்கும் நடனம் முடிவதில்லையே !

இது எதுவோ .......!

பூக்கள் பூக்கும் தருணம்

ஆதவனே பார்ததாரும் இல்லையே

உலரும் காலை பொழுதை

முழுமதியும் பிரிந்து போவதில்லையே

நேற்றுவரை நேரம் போக வில்லையே

உனது அருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே - இன்று

ஏனோ எதுவும் தோன்றவில்லையே …

என்ன புதுமை....?

இரவும் விடியவில்லையே

அது விடிந்தால்

பகலும் முடியவில்லையே

இது எதுவோ.... !!

http://www.youtube.com/watch?v=VinvhUE2864&feature=related

Edited by சூர்யா

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பயணங்கள் முடிவதில்லை

இசை : இளையராஜா

வரிகள் : வைரமுத்து

இளைய நிலா பொழிகிறது!

இதயம் வரை நனைகிறது!

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே!

விழாக்காணுமே! வானமே!

(இளைய நிலா.............)

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்.

முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்.

வான வீதியில் மேக ஊர்வலம்!

காணும்போதிலே ஆறுதல் தரும்!

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்!

(இளைய நிலா.............)

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ?

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ!

நீல வானிலே வெள்ளி ஓடைகள்!

ஓடுகின்றதே என்ன ஜாடைகள்!

விண் வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்?

(இளைய நிலா..............)

http://www.tamiljukebox.com/Mp3/Tamil/Old Is Gold/Izhaiya Nila Pozhikirathe.mp3

Edited by nunavilan

படம்: வருஷமெல்லாம் வசந்தம்

இசை: சிற்பி

பாடியவர்: உன்னிமேனன்

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே

வானில் வந்து பார்த்ததே

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்

உன்னால் தானம்மா... உன்னால் தானம்மா

இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்

உன்னால் தானம்மா... உன்னால் தானம்மா

எனக்கென இருந்தது ஒரு மனசு

அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு

எனக்கென இருப்பது ஒரு உசுரு

அது உனக்கென தருவது வரம் எனக்கு

நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன

நீதான் எந்தன் ஒளிவிளக்கு - என்றும்

நீதான் எந்தன் ஒளிவிளக்கு

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்

வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்

தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்

சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்

நதிகளில் மீன்கள் நீத்துதம்மா

அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா

உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா

அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா

நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன

காதல் எனக்குப் போதுமம்மா - என்

காதல் எனக்குப் போதுமம்மா

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா

காதல் வந்த நாளிலே

வானில் வந்து பார்த்ததே

எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்செயலாக கேட்ட ஒரு பழையபாடல், எனக்கு பிடித்த அதிர்ச்சியான பாடல் வரிகள்

இசை மிகவும் என்னை கவர்ந்த்துள்ளது

Film:Thoondil meen (1977)

Song: Ennodu ennennavo ragasiyam

Singers: P.Jeyachandran. swarnalatha

Music: V. Kumar

Director: R. Sankaran

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ

அச்சம் தடுக்கின்றதோ

நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு

அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா

அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு

நான் என்ன அறியாப் பெண்ணா

பாடம் இருட்டில் கூறும்

பாஷை உதட்டின் ஓசை

பாடம் இருட்டில் கூறும்

பாஷை உதட்டின் ஓசை

நான்கு விழி அல்லவோ

பேசும் மொழி அல்லவோ

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ

தாகம் எடுக்கின்றதோ

ஆ...ஆ..ஆ..ஆ..ஆ லல..லல..லலல..லலலா

லலல.ல்லல லல்ல.லலல் லலல

லா லா லா லா ஆ

சங்கமத்தில் நானும் செய்த பிழை யாவும்

மன்னிக்கின்ற மனம் வேண்டுமே

குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று

பாராட்டும் குணம் வேண்டுமே

ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான்

அந்த உள்ளம் எனக்கில்லையே

நானறிந்த சீதை பாவம் ஒரு பேதை

பூப்போன்ற சிறுபிள்ளையே

பாடல் பிறக்கும்போது

ஊடல் நமக்குள் ஏது

பாடல் பிறக்கும்போது

ஊடல் நமக்குள் ஏது

வாழும் உறவல்லவோ

ஒன்று உயிரல்லவோ

என்னோடு என்னென்னவோ ரகசியம்

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்

சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ

அச்சம் தடுக்கின்றதோ

http://www.youtube.com/watch?v=pyXAB-iAwVM

  • தொடங்கியவர்

படம்: தென்றலே என்னை தோடு

பாடியவர் : ஜேசுதாஸ் ; ஜானகி

பாடல் வரிகள் : வாலி

இசை : இளையராஜா

தென்றல் வந்து என்னைத்தொடும் ,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

பகலே போய் விடு ,

இரவே பாய் கொடு

நிலவே...

பன்னீரை தூவி ஓய்வேடு

தென்றல் வந்து எண்ணிடும் ,

ஆஹா சத்தம் வந்து முத்தமிடும்

தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்

சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு

நனைந்த பிறகு நாணம் எதற்கு

மார்பில் சாயும் நேரம்

(தென்றல் வந்து....................)

தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே

மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ , மயங்கி கிடக்கும்

இதழின் ரசங்கள் , எனக்கு பிடிக்கும்

சாரம் ஊரும் நேரம்

(தென்றல் வந்து ..........................)

http://www.youtube.com/watch?v=_qK9VDvf7zM&feature=related

Edited by சூர்யா

  • தொடங்கியவர்

படம்: நான் மகான் அல்ல

பாடியவர் : மது பாலகிருஷ்ணன்

பாடல் வரிகள் :

இசை : யுவன் ஷங்கர் ராஜா

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு

இதுவரையில் எதைக் கேட்டாலும்

தருவாயே மனம் கோணாமல்

துயரம் நான் இதை கேட்காமல்

கொடுத்தே எதற்காக

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு

ஒரு நாள் எனைப் பிரிந்தாலும்

வாடிய முகமே உன்னை இனி எங்கு பார்ப்பது

ஒ ..எனதாசைகள் நிறைவேற ஏங்கிய

மனமே உன்னை எதை தந்து மீட்பது

அழுதிடக் கூடாதென்று அறிவுரை கூறுவாய்

அழுகையை நீயே தந்து போனாயே

உறங்கிட நேரம் இன்றி உழைத்திடும் கண்களே

நிரந்தர தூக்கம் என்ன ஆழ்ந்தாயே

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ

தினம் பேசுவாய் அது என்ன ஆனது

ஒ ,..தலை மேல் சுமை இருந்தாலும்

புன்னகை தருமே இதழ் அது எங்கு போனது

நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய்

நடுவினில் முந்தி சென்றால் என் செய்வேன்

எது எது இல்லை என்று எனக்கென வாங்குவாய்

இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்

தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும் போது வாழ்வே எதற்கு

http://www.lankanesan.com/Naan%20Mahaan%20Alla/Theaivam%20Illai.mp3

  • தொடங்கியவர்

படம்: நான் கடவுள்

பாடியவர் : மது பாலகிருஷ்ணன்

பாடல் வரிகள் : இளையராஜா

இசை : இளையராஜா

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா

இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா

இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா

இம்மையை நான் அறியாததா

இம்மையை நான் அறியாததா

சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

அத்தனை செல்வமும் உன் இடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்

அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா

பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்

புது வினையா பழ வினையா,

கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

போருளுக்கு அலைந்திடும் போருளற்ற வாழ்கையும் துரத்துதே

உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்

மலர் பத்தால் தாங்குவாய்

உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு

உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

ஐயனே என் ஐயனே

எல்லா வரிகளும் அருமை மது பாலகிருஷ்ணனின் குரலின் இனிமை

இளையராஜா இசை சொல்லியா தெரியவேண்டும்

http://www.youtube.com/watch?v=gp0QbpJWFAs&feature=related

Edited by சூர்யா

  • தொடங்கியவர்

படம் - அபூர்வராகங்கள்

பாடியவர் - வாணி ஜெயராம்

வரிகள் - கண்ணதாசன்

இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி

அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி

ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித

இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்

நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை

நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க

அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க

எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)

Edited by சூர்யா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.