Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கடிதம் எழுதலாமா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கடிதத்திலை என்ன இருந்ததென்று அறிய அவ்வளவு ஆசையா??? முதல் காதலியின் கடைசிக் கடிதம் எண்டால் எப்பிடி இருக்கும்..உருப்படாதவனே உன்னை நம்பி பிரயோசனம் இல்லை ஏழு வருசமாய் காத்திருந்தாச்சு இனி எத்தினை வருசம் காத்திருந்தாலும் நீ திருந்தப் போறதும் இல்லை ஊருக்கு திரும்பவந்து என்னை கலியாணம் கட்டப்போறதும் இல்லை நீ ஒரு வீணாய் போன வெறும்பயல்..என்பதை கொஞ்சம் நாகரீகமாய் எழுதியிருந்தாள்.. இப்ப சந்தேசமா?? :lol: :lol:

அட இப்பமான் நிம்மதி. :lol:

நானும் ஏதோ உயிரே நீயில்லாட்டி கிணறோ குளமோ இல்லது இன்னும் கவிதையில ஏதாவது பு(அ)லம்பல் எண்டெல்லோ நினைச்சேன்: :lol:

அதுவும் முக்கியமாக காதலி(களிற்)க்கான கடிதம். அதென்ன காதலிகள் என்று பன்மையில் எழுதியிருக்கிறேன் என யோசிக்க வேண்டாம். என்வாழ்வில் பலகாலகட்டங்களில் பலரை காதலித்திருக்கிறேன் பலராலும் காதலிக்கப்பட்டும் இருக்கிறேன்.

ம்ம்ம்... நான் தான் என்று பார்த்தால் ...??? ... என்னோடு இங்கு படித்த ஒருவன், என்னை சந்தித்து சில நாட்களிலேயே கேட்டான் "மச்சான் நீ நம்பர் பைபோ(5), அவ்வளவு அற்புதமான நம்பராம்! கண்டதும் ....!!!!" ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் ... பலவற்றுக்கு எழுதி இருக்கிறம் ... ஒன்றாவது பதில் போடவில்லை!!! <_<

ம்ம்ம்... நான் தான் என்று பார்த்தால் ...??? ... என்னோடு இங்கு படித்த ஒருவன், என்னை சந்தித்து சில நாட்களிலேயே கேட்டான் "மச்சான் நீ நம்பர் பைபோ(5), அவ்வளவு அற்புதமான நம்பராம்! கண்டதும் ....!!!!" ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் ... பலவற்றுக்கு எழுதி இருக்கிறம் ... ஒன்றாவது பதில் போடவில்லை!!! <_<

சில வேளை நாங்கள் எழுதியது அவங்களுக்கு விளங்காம இருந்திருக்கலாம். :(

  • கருத்துக்கள உறவுகள்

1965 , 70 பதுகளில் காதல் கடிதங்களின் உயிர் நாடியான, பிரபலமான ஒரு தொடக்க வரியொன்று : " அலைகடல் வற்றினாலும், அன்புக்கடல் வற்றாத" .

அப்போதெல்லாம் சத்தியம் பண்ணினாலோ, எழுதினாலோ மீற மிகவும் பயப்படுவினம். இதனால் எனது அறிவுக் கொழுந்து நண்பேன் கடைசியில் பண்ணைக் கடல் சாட்சியாய் கைவிட மாட்டேன் என்று சொல்லுவார்.

பி.கு: சில காலங்களில் பண்ணைக் கடல் காலையில் வலமிருந்து இடமும், மாலையில் இடமிருந்து வலமும் பாலத்தின் கீழால் ஓடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1965 , 70 பதுகளில் காதல் கடிதங்களின் உயிர் நாடியான, பிரபலமான ஒரு தொடக்க வரியொன்று : " அலைகடல் வற்றினாலும், அன்புக்கடல் வற்றாத" .

அப்போதெல்லாம் சத்தியம் பண்ணினாலோ, எழுதினாலோ மீற மிகவும் பயப்படுவினம். இதனால் எனது அறிவுக் கொழுந்து நண்பேன் கடைசியில் பண்ணைக் கடல் சாட்சியாய் கைவிட மாட்டேன் என்று சொல்லுவார்.

பி.கு: சில காலங்களில் பண்ணைக் கடல் காலையில் வலமிருந்து இடமும், மாலையில் இடமிருந்து வலமும் பாலத்தின் கீழால் ஓடும்.

சுவியண்ணா எழுபதுகளில் அலைகடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாது என்பதை போல எண்பதுகளில் விதி படத்தில் வந்த ஒரு வசனம் "கண்ணே நீ மாட்டேனென்று சொல்லிவிட்டால் வண்ணப் பூங்காவில் வாலிபனின் சடலம்." என்பது காதல் கடிதங்களில் பிரபலமாக இருந்தது. எனது நண்பனொருவன் தன் காதலிக்கு கடிதம் எழுதிதரச்சொல்லி கேட்டபொழுது அதனையே நான் உல்டா பண்ணி பத்து நாளைக்குள் பதில் சொல்லிவிடு இல்லையேல் பிப்பிலி சுடலையில் பிணமாய் இருப்பேன் என்று எழுதி கொடுத்தேன். காதல் ஓகே.

பி.கு...பிப்பிலி சுடலை என்பது மானிப்பாயில் உள்ள சுடலையின் பெயர்.

சுவியண்ணா எழுபதுகளில் அலைகடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாது என்பதை போல எண்பதுகளில் விதி படத்தில் வந்த ஒரு வசனம் "கண்ணே நீ மாட்டேனென்று சொல்லிவிட்டால் வண்ணப் பூங்காவில் வாலிபனின் சடலம்." என்பது காதல் கடிதங்களில் பிரபலமாக இருந்தது. எனது நண்பனொருவன் தன் காதலிக்கு கடிதம் எழுதிதரச்சொல்லி கேட்டபொழுது அதனையே நான் உல்டா பண்ணி பத்து நாளைக்குள் பதில் சொல்லிவிடு இல்லையேல் பிப்பிலி சுடலையில் பிணமாய் இருப்பேன் என்று எழுதி கொடுத்தேன். காதல் ஓகே.

பி.கு...பிப்பிலி சுடலை என்பது மானிப்பாயில் உள்ள சுடலையின் பெயர்.

சாத்திரியண்ணை எக்கச்சக்கமா எழுதித் தள்ளி இருப்பியள் போல... :rolleyes:^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவியண்ணா எழுபதுகளில் அலைகடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாது என்பதை போல எண்பதுகளில் விதி படத்தில் வந்த ஒரு வசனம் "கண்ணே நீ மாட்டேனென்று சொல்லிவிட்டால் வண்ணப் பூங்காவில் வாலிபனின் சடலம்." என்பது காதல் கடிதங்களில் பிரபலமாக இருந்தது. எனது நண்பனொருவன் தன் காதலிக்கு கடிதம் எழுதிதரச்சொல்லி கேட்டபொழுது அதனையே நான் உல்டா பண்ணி பத்து நாளைக்குள் பதில் சொல்லிவிடு இல்லையேல் பிப்பிலி சுடலையில் பிணமாய் இருப்பேன் என்று எழுதி கொடுத்தேன். காதல் ஓகே.

பி.கு...பிப்பிலி சுடலை என்பது மானிப்பாயில் உள்ள சுடலையின் பெயர்.

ச்..சா..... ...சிங்கன் உதுக்கு குதிரை ஓடியிருக்கிறான் எண்டால் ஆள் பெரிய காய் போலை கிடக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்ச்சத்திரப் பூத்தொடுத்தேன்.நங்கை வந்து சேரவில்லை.நட்ச்சத்திரம் வாடுதம்மா. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியண்ணை எக்கச்சக்கமா எழுதித் தள்ளி இருப்பியள் போல... :rolleyes:^_^

படிக்கிற காலத்திலை உதுதான் பகுதி நேரத்தொழில் :lol:

1965 , 70 பதுகளில் காதல் கடிதங்களின் உயிர் நாடியான, பிரபலமான ஒரு தொடக்க வரியொன்று : " அலைகடல் வற்றினாலும், அன்புக்கடல் வற்றாத" .

மறக்க முடியாத வரிகள் சுவி.

நான் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது பக்கத்து வீட்டு அக்கா (கைநாட்டு) தனது காதலனுக்கு என்னை கொண்டு ஒரு கடிதம் எழுதினார்.

அக்காதல் கடிதத்தின் ஆரம்ப வரிகள் 'ஆறு குளம் வற்றினாலும் அன்புக் கடல் வற்றாத எனது ............... அத்தானுக்கு.

இதுதான் நான் முதன் முதலில் எழுதிய காதல் கடிதம்.

மற்றவர்களுக்காக (ஆண் / பெண்) நான் நிறைய காதல் கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பன் (புலிகளில் சேர்ந்து காணாமல் போய்விட்டான்) எழுதிய காதல் கடிதத்தில் இந்த வசனம் இருந்தது (எப்படி எனக்குத் தெரியும் என்றெல்லாம் கேட்கக்கூடாது).

"கண்கள் தீண்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது, பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலையவைப்பது"

படிக்கிற காலத்திலை உதுதான் பகுதி நேரத்தொழில் :lol:

சும்மா உல்டா பண்ணாதேங்யுங்கோ அண்ணை, படிப்புத் தான் பகுதி நேரமா இருந்திருக்கும்... :D:lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா உல்டா பண்ணாதேங்யுங்கோ அண்ணை, படிப்புத் தான் பகுதி நேரமா இருந்திருக்கும்... :D:lol: :lol:

படிக்கிறது பகுதிநேர தொழிலாய்கூட செய்யவில்லை சும்மா வெறும் பொழுது போக்குத்தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பர் காலத்து வரிகள்

உனக்காக

எல்லாம் உனக்காக

இது உயிரும் உடலும்

ஒட்டியிருப்பது உனக்காக....

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே....

காதலில் சோகம் வரும்போது....

சிங்கத்தின் கால்கள் பழுதடைந்தாலும்

சீற்றம் குறைவதுண்டோ

உங்கள் அங்கத்தில் ஏதும் பழுதிருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ

காதலித்த பெண்ணை கழட்டி விடுவதற்கு...

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் நிலையில் நானில்லை :wub::lol:

Edited by விசுகு

ஒரு சோடி காதலர்கள் அடிக்கடி காதல் கடிதம் எழுதி தபால் மூலம் பரிமாறும் காலத்தில், என்னடா அடிக்கடி அந்த வீடுக்கு (ஊருக்கு எல்லையில் இருக்கும் வீடு) கடிதம் வருகுதே என்று கடுப்பாகி போஸ்ட்மன் கடிதத்தை உடைத்து வாசித்துப்பார்த்தால் லவ் மாட்டர். போஸ்ட்மனுக்கு அண்டையில் இருந்து தான் செய்யும் தொழில் மேல அவ்வளவு ஈடுபாடாம். சில நேரங்களில் போஸ்ட்மேன் தானே அந்தப் பிள்ளைக்கு பதிலும் எழுதும் அளவுக்கு போய்விட்டதாம்.

பொடியன், தான் போடும் கடிதத்திற்கு பதில் வருவதில்லையே என்று மனமுடைஞ்சு நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார், அதில் எனது மாமனும் ஒருவர். இளவட்டத்தினருக்குக் கதை போனதும் உசாராகி போஸ்ட்மனை மோப்பம் பிடித்தார்களாம். பிறகென்ன ஒரு வாரத்திற்குள் போஸ்ட்மனை நடு வெய்யிலில் பணங்காணிக்குள்ள ஒரு மொட்டைப் பனையோட கட்டி விட்டார்களாம். :lol:

(போஸ்ட்மன் எழுதின லெட்டர்ல ஒரு சினிமா பாட்டு.. அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்....என்று முழுப்பாட்டும் இருந்து எழுதி அனுப்பியிருக்கு... :D:lol: ) அதுக்குப் பிறகு ஊர் முழுக்க கதை பரவி போற வார இளம் பொடியள் எல்லாம் இந்தப் பாட்டைத் தான் அவரின்ர வீட்டைத்தாண்டி போகும் போது பாடுவார்களாம். பாவம் அந்தாளுக்கு அப்பவே 40-45 வயசு இருக்கும் என்று மாமா சொன்னவர்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணை நீங்கள் பிரான்சில் ஆரம்பித்து அப்பிடியே எங்களை சிலோனுக்கு கூட்டிக்கொண்டு போயிட்டியல்.உங்கட கடிதத்தின்ற புண்ணியத்தில சிலவில்லாமல் ஊர் போய் வந்திட்டன்.நானும் ஊரிலை தபால்காரனுக்காக ஒரு காலத்திலை காத்திருந்தவன் தான்..அப்பொழுது அப்பா வெளிநாட்டில் இருந்தார் நான் உள்ளூரிலதான் இருந்தன்..காற்சட்டை போட்டிருக்கும் வயசு..ஒரு பதினொரு பன்னிரண்டு மணியளவிலதான் எங்க ஊரு தபால்காறன் வருவார்.மூன்று வீடுதள்ளி அவர் கடிதம் கொடுக்கும்போது எழும் அவரின் சைக்கில் பெல் ஒலி கேட்டதும் நான் கேற்றுக்கை போயிடுவன்.பள்ளிக்கூடம் விடுமுறை என்றால் எங்கட வீட்டுக்கு தபால் கொடுக்க அந்தாள் பெல் அடிக்கத்தேவையில்லை..அதுக்கு அநாவசியம் இல்லாமல் நான் பத்து மணிக்கே கேற்றில போய் நிப்பன்.நல்ல மனுசன்..கடிதம் வந்துதோ வரேல்லையோ இறங்கிக் கதைத்து விட்டுத்தான் போகும். ஒரு 48/50 வயசிருக்கும். கடைசி வரைக்கும் அந்தாளின்ரை பெயரைக்கேக்க மறந்து போனன். அந்த வயசில அது எனக்கு முக்கியமாய்த்தெரியவில்லை.இப்பிடி இடம்பெயர்ந்து வந்து அந்தக்காலத்தை நினைச்சு மாய்வன் எண்டு ஆர் நினைச்சது..தபால்காற மாமா தபால்காற மாமா என்றுதான் கூப்பிடுறனான்.சாத்திரி அண்ணை சொன்னமாதிரி வெள்ளை என்வலப்பில கரையில சிவப்புக்கோடு போட்டு வந்தா உடைக்காமலே அப்பாவின் கடிதம் ஒண்டு வந்திருக்கு என்று அம்மாவிடம் சொல்லிவிடுவன்..மண்ணிற என்வலப்பு என்றால் உள்ளூர்கடிதம்.90க்கும் 95க்கும் இடைப்பட்ட காலம்,யாழ்ப்பாணம் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம். தொலைபேசி எல்லாம் எப்படி இருக்கும் என்றே தெரியாது..கடிதமும் கப்பலிலதான் வரும்..கப்பலும் மாசத்தில ஒருக்காத்தான் வரும்..மாசமும் முப்பது நாளைக்கு ஒருக்காத்தான் வரும்..அந்த முப்பது நாளும் அப்பாவின் கடிதம் பார்க்காமல் ஒரே விசராக இருக்கும்...கப்பல் வந்திட்டுது என்றால் உதயனில் தடித்த எழுத்தில் செய்தி வரும் கொழும்பில் இருந்து ஜயாயிரம் தபால் பொதிகளுடன் கப்பல் காங்கேசன் துறைக்கு வந்திருக்கு என்று..அந்தச்செய்தியைப்படித்து விட்டு ஒவ்வொரு விரலா எண்ணிக்கொண்டிருப்பம் எப்ப தபால்காற மாமா வருவார் என்று..இப்பிடியே காலம்போக அப்பாவின் குரலைக்கேக்கவேணுமெண்ட ஆசையில் ஊரில் உள்ள வெளிநாட்டுக்காரர் எல்லாம் போய் ரெலிபோன் கதைச்சிட்டு வரேக்கை கொழும்பு ஒரேஞ்சும் அப்பிளும் கொண்டு வாறதைப்பாத்திட்டு உசிரைக்கையில புடிச்சுக்கொண்டு கிளாளியால வவுனியாவுக்கு நானும் அம்மாவும் ரெலிபோன் கதைக்கப்போனது ஒரு தனி அனுபவம்..அதை எழுத வெளிக்கிட்டால் தனி ஒரு திரி தொடங்க வேணும்..இப்படி இரத்தமும் சதையுமாக இக்கடிதங்கள் எங்களின் வாழ்க்கையோட ஒருகாலத்தில் இரண்டரக்கலந்திருந்தன.. அவை வெறும் கடிதங்கள் அல்ல பேசும் உணர்வுகள்..கடிதங்களினதும் தபால்காரனதும் வாழ்க்கையை பேசும் ஒரு படம்தான் the postman சந்தர்ப்பம் இருந்தால் ஒருமுறை பாருங்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணை நீங்கள் பிரான்சில் ஆரம்பித்து அப்பிடியே எங்களை சிலோனுக்கு கூட்டிக்கொண்டு போயிட்டியல்.உங்கட கடிதத்தின்ற புண்ணியத்தில சிலவில்லாமல் ஊர் போய் வந்திட்டன்.நானும் ஊரிலை தபால்காரனுக்காக ஒரு காலத்திலை காத்திருந்தவன் தான்..அப்பொழுது அப்பா வெளிநாட்டில் இருந்தார் நான் உள்ளூரிலதான் இருந்தன்..காற்சட்டை போட்டிருக்கும் வயசு..ஒரு பதினொரு பன்னிரண்டு மணியளவிலதான் எங்க ஊரு தபால்காறன் வருவார்.மூன்று வீடுதள்ளி அவர் கடிதம் கொடுக்கும்போது எழும் அவரின் சைக்கில் பெல் ஒலி கேட்டதும் நான் கேற்றுக்கை போயிடுவன்.பள்ளிக்கூடம் விடுமுறை என்றால் எங்கட வீட்டுக்கு தபால் கொடுக்க அந்தாள் பெல் அடிக்கத்தேவையில்லை..அதுக்கு அநாவசியம் இல்லாமல் நான் பத்து மணிக்கே கேற்றில போய் நிப்பன்.நல்ல மனுசன்..கடிதம் வந்துதோ வரேல்லையோ இறங்கிக் கதைத்து விட்டுத்தான் போகும். ஒரு 48/50 வயசிருக்கும். கடைசி வரைக்கும் அந்தாளின்ரை பெயரைக்கேக்க மறந்து போனன். அந்த வயசில அது எனக்கு முக்கியமாய்த்தெரியவில்லை.இப்பிடி இடம்பெயர்ந்து வந்து அந்தக்காலத்தை நினைச்சு மாய்வன் எண்டு ஆர் நினைச்சது..தபால்காற மாமா தபால்காற மாமா என்றுதான் கூப்பிடுறனான்.சாத்திரி அண்ணை சொன்னமாதிரி வெள்ளை என்வலப்பில கரையில சிவப்புக்கோடு போட்டு வந்தா உடைக்காமலே அப்பாவின் கடிதம் ஒண்டு வந்திருக்கு என்று அம்மாவிடம் சொல்லிவிடுவன்..மண்ணிற என்வலப்பு என்றால் உள்ளூர்கடிதம்.90க்கும் 95க்கும் இடைப்பட்ட காலம்,யாழ்ப்பாணம் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலம். தொலைபேசி எல்லாம் எப்படி இருக்கும் என்றே தெரியாது..கடிதமும் கப்பலிலதான் வரும்..கப்பலும் மாசத்தில ஒருக்காத்தான் வரும்..மாசமும் முப்பது நாளைக்கு ஒருக்காத்தான் வரும்..அந்த முப்பது நாளும் அப்பாவின் கடிதம் பார்க்காமல் ஒரே விசராக இருக்கும்...கப்பல் வந்திட்டுது என்றால் உதயனில் தடித்த எழுத்தில் செய்தி வரும் கொழும்பில் இருந்து ஜயாயிரம் தபால் பொதிகளுடன் கப்பல் காங்கேசன் துறைக்கு வந்திருக்கு என்று..அந்தச்செய்தியைப்படித்து விட்டு ஒவ்வொரு விரலா எண்ணிக்கொண்டிருப்பம் எப்ப தபால்காற மாமா வருவார் என்று..இப்பிடியே காலம்போக அப்பாவின் குரலைக்கேக்கவேணுமெண்ட ஆசையில் ஊரில் உள்ள வெளிநாட்டுக்காரர் எல்லாம் போய் ரெலிபோன் கதைச்சிட்டு வரேக்கை கொழும்பு ஒரேஞ்சும் அப்பிளும் கொண்டு வாறதைப்பாத்திட்டு உசிரைக்கையில புடிச்சுக்கொண்டு கிளாளியால வவுனியாவுக்கு நானும் அம்மாவும் ரெலிபோன் கதைக்கப்போனது ஒரு தனி அனுபவம்..அதை எழுத வெளிக்கிட்டால் தனி ஒரு திரி தொடங்க வேணும்..இப்படி இரத்தமும் சதையுமாக இக்கடிதங்கள் எங்களின் வாழ்க்கையோட ஒருகாலத்தில் இரண்டரக்கலந்திருந்தன.. அவை வெறும் கடிதங்கள் அல்ல பேசும் உணர்வுகள்..கடிதங்களினதும் தபால்காரனதும் வாழ்க்கையை பேசும் ஒரு படம்தான் the postman சந்தர்ப்பம் இருந்தால் ஒருமுறை பாருங்கள்....

வணக்கம் சுபேஸ் உங்கள் கவிதைகளை மூஞ்சிப்புத்தகத்திலும்( facebook) யாழிலும் படித்திருக்கிறேன். நீங்கள் சொன்ன postman படத்தையும் பார்த்திருக்கிறேன். அதே நேரம் இரண்டாம் உலக யுத்தத்தின் போது தபால் பற்றிய விவரணம் ஒன்றும் பிரெஞ்சு மொழியில் பார்த்தேன். தபால்களில் உள்ள பெயர்களை வைத்து யூதர்களை நாசிப்படைகள் அடையாளம் கண்டு அவர்களை தேடி கொலைசெய்வார்கள்.அதே நேரத்தில் தங்கள் உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று தபாலை எதிர்பார்த்திருக்கும் யூதக்குடும்பங்கள். இப்படியாக தபால் என்பது உயிரும் உணர்வும் கலந்ததாக அந்த விவரணப்படம் போகும். அதே கொஞ்சமும் குறைவில்லாத உயிரும் உணர்வும் கலந்த கடிதக் கதைகள் பலநூறு எம்மிடமும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.