Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசு - கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சு வெற்றி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசு - கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சு வெற்றி!

வியாழன், 03 பெப்ரவரி 2011 23:48 .அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றன.

இவை மிகவும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்தன.

முதலாம் கட்டப் பேச்சின்போது கூட்டமைப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பால் இன்று பதில்கள் வழங்கப்பட்டன என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம், இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயம், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியன சம்பந்தமாக முன்பு கூட்டமைப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பினரால் பதில்கள் கூறப்பட்டன.

குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் அனைவரதும் பெயர்கள், விபரங்கள்

ஆகியவற்றை வெளியிட அரசு சம்மதித்து உள்ளது.

அத்துடன் அரசமைப்பு திருத்தம் தொடர்பான பேச்சுக்கள் இன்று ஆரம்பம் ஆயின.

மூன்றாம் கட்டப் பேச்சுக்கள் அடுத்த மாதம் இடம்பெற உள்ளன.

அரசியல் தீர்வு குறித்து அடுத்த சந்திப்பில் பேச இணக்கம் காணப்பட்டது.

கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி, செயலாளர் நாயகம் மாவை. சேனாதிராஜா எம்.பி, எம்.ஏ. சுமந்திரன் எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, சுரேஸ் பிறேமச்சந்திரன் எம்,.பி ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி க.கனகீஸ்வரனும் கலந்து கொண்டார்.

அரசின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் முன்னாள் பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க, அமைச்சர்களான் நிமால் ஸ்ரீபால டீ சில்வா மற்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17897:2011-02-03-18-20-08&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

அரசியல் தீர்வு குறித்து அடுத்த சந்திப்பில் பேச இணக்கம் காணப்பட்டது
.

அரசியல் தீர்வுக்கு இணக்கம் சொன்னதுதான் வெற்றியோ?நானும் வெற்றி என்று செய்தியை பார்த்துப்போட்டு மகிந்தா ஈழத்தை தவிர மிச்சம் எல்லாம் தமிழர் கூட்டமைப்புக்கு தாரன் என்று சொல்லிப்போட்டனாக்கும் என்று....ஆனால் பேச்சுவார்த்தக்கு இணக்கமாம் அதுக்கு தலைப்பு வெற்றியாம்......

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்து நானும் ஏமாந்து போனேன்.

அட போங்கப்பா ஒண்ணுமில்லலாத உள்ளுராட்சி சபைக்கே அவங்கள் அடிபட்டுக் கொண்டிருககிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசு - கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சு வெற்றி!

இதே....போல மூண்டாம், நாலாம் கட்டைப் பேச்சுவார்த்தையும் வெற்றியளிக்க வேண்டும்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்து நானும் ஏமாந்து போனேன்.

உண்மையில் இதை நான் வாசிக்கவே இல்லை

திரியின் தலைப்பை பார்த்தும் புரிந்து கொண்டேன்.

இது நடக்கமுடியாதது என்று.

நம்மை யார் ஏமாற்றுகிறார்கள் என்பது தெரிந்துவிட்டால்....?

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: குகன், நீங்களுமா?? நீங்கள் தீவிரக் கூட்டணி ஆதரவாளராச்சே?? இது உங்களுக்கு நிச்சயம் இனிப்பான செய்தியாக இருக்குமென்றல்லவா நான் நினைத்தேன்??!! கூட்டணி மகிழ்ச்சி தெரிவிக்கின்றதென்றால், நீங்களும் மகிழ வேண்டாமா?? அதை விட்டு விட்டு நீங்களும் சலிப்புகொட்டினால் என்ன செய்வது ??!!
  • கருத்துக்கள உறவுகள்

:unsure: குகன், நீங்களுமா?? நீங்கள் தீவிரக் கூட்டணி ஆதரவாளராச்சே?? இது உங்களுக்கு நிச்சயம் இனிப்பான செய்தியாக இருக்குமென்றல்லவா நான் நினைத்தேன்??!! கூட்டணி மகிழ்ச்சி தெரிவிக்கின்றதென்றால், நீங்களும் மகிழ வேண்டாமா?? அதை விட்டு விட்டு நீங்களும் சலிப்புகொட்டினால் என்ன செய்வது ??!!

ரகு, இப்போது கூட்டணியை யார் கணக்கில் எடுக்கின்றார்கள்.

அதில், விசுகரும் விதிவிலக்கல்ல. :D

  • கருத்துக்கள உறவுகள்

ரகு

நான் கூட்டமைப்பிடம் எதிர்பார்த்தது எதிர்பார்ப்பது வேறு. வெற்றியைக்கொண்டுவருவார்கள் என்பது வேறு. வெற்றியை அல்ல தமிழன் பிரச்சினை பற்றி பேசக்கூட தயாராக இல்லாத மகிந்தவிடமிருந்து எதை இவர்கள் தற்போது பெறமுடியும் என்பதில் எனக்கு தெளிவுண்டு. நான் அவர்களிடம் எதிர்பார்ப்பது அங்குள்ள மக்களை ஒரு கொடியின் கீழ் வைத்திருப்பதை. அது அவர்களால் முடியுமா? அல்லது அவர்களுக்குள் இருந்து எவராவது அந்த மக்களுக்கான பிரதிநிதியாக வரமுடியுமா? என்பதெல்லாம் அவர்களும் அந்த மக்களுக்கான சேவையினை அவர்கள் துணிவோடு செய்வதையும் பொறுத்தது. ஆனால் வெளிநாடுகளில் எமது கட்டுமானங்கள் செய்யாத பலவற்றை உள்ளிருந்து அவர்கள் செய்யவேண்டும் என்பது இன்றும் எனது எதிர்பார்ப்பு மட்டுமே. நான் கூட ஒரு வேலைத்திட்டமாக அங்கு வேலைத்திட்டங்களை செய்யக்கூடிய ஒரு அமைப்பை தேடிக்கொண்டிருக்கின்றேன். அது இவர்களாக இருந்தால் சந்தோசமே. அவர்கள் செய்யாவிட்டால் செய்ய வைக்கணும்.

இதற்கும் பத்திரிகைகள் வெற்றியாம் என்றவுடன் ஓடிப்போய்ப்பார்ப்பதற்கும் வெகுதூரம்.

தொடர்ந்து ஒவ்வொரு "கட்டம் கட்டமாக" பேசுவது என்பது தமிழர் தரப்பை சிங்களம் பலவீனப்படுத்தும் ஏமாற்றுவித்தை.

சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு மீண்டும் வரலாற்று தவறை இழைக்கின்றதா என எண்ணத்தோன்றுகின்றது.

தொடர்ந்து ஒவ்வொரு "கட்டம் கட்டமாக" பேசுவது என்பது தமிழர் தரப்பை சிங்களம் பலவீனப்படுத்தும் ஏமாற்றுவித்தை.

சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு மீண்டும் வரலாற்று தவறை இழைக்கின்றதா என எண்ணத்தோன்றுகின்றது.

ஒவரு கட்ட பேச்சிலும் ஒவரு எம்பி என்று கழட்டிவிடுவான் சிங்களவன். :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒவரு கட்ட பேச்சிலும் ஒவரு எம்பி என்று கழட்டிவிடுவான் சிங்களவன். :D :D :D

நல்லதுதானே

இப்படியானவர்களை நமக்கெதற்கு... :(

இந்த முறை சந்திப்பின் போது போசனம் வழங்கப்பட்டதாம் - அது தான் வெற்றி என்கிறார்கள்!

சரி,............ இப்ப தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்கிறீர்கள்?

சரி,............ இப்ப தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்கிறீர்கள்?

எதையாவது முடிந்ததை செய்யட்டும்.

சிங்களவனுடன் பேசட்டும், அறிக்கை விடட்டும், உள்ளுக்குள் குத்துப்படட்டும் - இதை செய் என்று குறிப்பிட்டு எதிர்பார்ப்பது மடமை!

ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்காவிட்டால் சரி.

குரல் இழந்து இந்தியாவில் இருக்கும் சம்பந்தனுக்கு குரல் கொடுக்க வித்தியாதரன் புதிதாக களத்தில் இறங்கியுள்ளார்.

சரி,............ இப்ப தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்கிறீர்கள்?

:)

  • கருத்துக்கள உறவுகள்

சரி,............ இப்ப தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்கிறீர்கள்?

இந்த எல்லோருக்குள் நானும் உண்டோ நிழலி?

மேலே நான் என்ன எதிர்பார்க்கின்றேன் என எழுதியுள்ளேன். மேலும்...........???

சரி,............ இப்ப தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்கிறீர்கள்?

  • தாயக மக்களுடன் பல கலந்துரையாடல்களை பகிரங்கமாக மேற்கொள்ளவேண்டும்
  • மக்களின் அபிலாசைகளுக்கு பலம் சேர்க்கும் வழிவகைகளை அமுல்படுத்தவேண்டும்
  • பல விடயங்களுக்கு ஒரு நேர அட்டவணை போடப்படல் வேண்டும்
  • முடிந்தளவுக்கு பேச்சுக்கள் பகிரங்கப்படுத்தல் வேண்டும்
  • மேலே சொன்னவற்றை இந்தியா, மேற்குலகம் மற்றும் சீனாவுக்கு ஊடாக தொடர்ச்சியாக சிங்களத்திற்கு அழுத்தம் பிரயோகிக்க முயற்சிக்க வேண்டும்

Edited by akootha

இந்த எல்லோருக்குள் நானும் உண்டோ நிழலி?

மேலே நான் என்ன எதிர்பார்க்கின்றேன் என எழுதியுள்ளேன். மேலும்...........???

நான் கேட்டது பொதுப்படையாக, குறிப்பிட்டு உங்களுக்கோ அல்லது வேறு தனிப்பட்டு உறுப்பினர்களுக்கோ இல்லை

இன்றைய கால கட்டத்தில், மகிந்த அரசு ஆட்சியில் இருக்கும் காலத்தில், தமிழ் மக்களின் அனைத்து கட்டமைப்புகளும் இராணுவ ஆட்சிக்குள் சூழப் பட்டு இருக்கும் நேரத்தில், ஆயிரக் கணக்கா போராளிகள் சிறையில் தவிக்கும் சூழலில், சிங்களவரோ தமிழரோ எவர் எந்தப் பதவியில் இருந்தாலும் காணாமல் போக்கடிக்கப் படக் கூடிய அச்ச நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன என்னவற்றை செய்ய வேண்டும் என்று நினைகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டது பொதுப்படையாக, குறிப்பிட்டு உங்களுக்கோ அல்லது வேறு தனிப்பட்டு உறுப்பினர்களுக்கோ இல்லை

இன்றைய கால கட்டத்தில், மகிந்த அரசு ஆட்சியில் இருக்கும் காலத்தில், தமிழ் மக்களின் அனைத்து கட்டமைப்புகளும் இராணுவ ஆட்சிக்குள் சூழப் பட்டு இருக்கும் நேரத்தில், ஆயிரக் கணக்கா போராளிகள் சிறையில் தவிக்கும் சூழலில், சிங்களவரோ தமிழரோ எவர் எந்தப் பதவியில் இருந்தாலும் காணாமல் போக்கடிக்கப் படக் கூடிய அச்ச நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன என்னவற்றை செய்ய வேண்டும் என்று நினைகின்றீர்கள்?

அப்படி யாரும் இங்கு எழுதப்போவதில்லை

ஏனெனில் அவர்களை நோக்கி மீதி 4 விரல்கள் நீளும்.

அப்படியாயின் நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள் கூட்டமைப்பிடமிருந்து நிழலி...?

  • கருத்துக்கள உறவுகள்

சரி,............ இப்ப தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்கிறீர்கள்?

இப்போதைக்கு யாழில் பெண்கள் தாலிக்கொடி போட்டுக்கொன்டு சுதந்திரமாக நடமாட வழி செய்ய வேண்டும்.

இப்போதைக்கு யாழில் பெண்கள் தாலிக்கொடி போட்டுக்கொன்டு சுதந்திரமாக நடமாட வழி செய்ய வேண்டும்.

:)

இப்போதைக்கு யாழில் பெண்கள் தாலிக்கொடி போட்டுக்கொன்டு சுதந்திரமாக நடமாட வழி செய்ய வேண்டும்.

:)

முதலில் தங்களுக்குள் அடிபடாமலும், ஆளுக்காள் மாறிமாறி வித்தியாசமாக அறிக்கை விடாமல் இருக்கவேண்டும்.

எமக்குள் இருக்கும் பெரும் பிரச்சனையே குழுவாதம்.எல்லோரும் மனமொத்து தீர்வுகள் எடுப்பதில்லை,

முதலில் கூட்டமைப்பை உடைந்தாலும் பரவாயில்லை இறுக்கமான ஒரே முடிவை எடுக்கக்கூடிவர்களாக புனரமைத்து மக்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரப்பண்ணுங்கள்.

அதன் பின் நீங்கள் செல்லும் பாதை சரியென நீங்களே நம்பினால் யாரின் விமர்சனதிற்கும் அஞ்சாமல் முடிவுகளை எடுத்து அதனை நோக்கி நடைபோடுங்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணியினர் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும்.

இளையவர்கள் கூட்டமைப்புக்கள் இணைக்கப்பட வேண்டும்

ஆயுட்கால தலைமை வேண்டாம். சுழற்சி முறை தலைமை நல்லது.

ஏனைய தமிழ் கட்சிகளையும் வேலைத்திட்ட அடிப்படையிலாவது இணைக்க வேண்டும்.

புலம் பெயர்ந்தவர்களும் தமிழர்கள் என்பதை குறிப்பாக சம்பந்தர் ஐயா புரிந்து கொள்ள வேண்டும்.உணர்ச்சி வசப்படுபவர்கள் தலைமை வகிக்க போகக்கூடாது. தலைமை வகிப்பவர்கள் உணர்ச்சி வசப்பட கூடாது.

கொழும்பில் சுக போகங்களை அனுபவிப்பதை விட்டு மக்களை அடிக்கடி சந்திக்க வேண்டும்.அதற்காக தான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதை ஒவ்வொரு தேர்த்தலின் போது மட்டும் உணராமல ஒவ்வொரு நாளும் உணரவேண்டும்.

வெளி நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை வைத்துக்கொள்ள வேண்டும்.

யாருக்கும் அடிபணியாமல் நேர்மையாக மக்களுக்காக செயற்படுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தங்களுக்குள் அடிபடாமலும், ஆளுக்காள் மாறிமாறி வித்தியாசமாக அறிக்கை விடாமல் இருக்கவேண்டும்.

எமக்குள் இருக்கும் பெரும் பிரச்சனையே குழுவாதம்.எல்லோரும் மனமொத்து தீர்வுகள் எடுப்பதில்லை,

முதலில் கூட்டமைப்பை உடைந்தாலும் பரவாயில்லை இறுக்கமான ஒரே முடிவை எடுக்கக்கூடிவர்களாக புனரமைத்து மக்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரப்பண்ணுங்கள்.

அதன் பின் நீங்கள் செல்லும் பாதை சரியென நீங்களே நம்பினால் யாரின் விமர்சனதிற்கும் அஞ்சாமல் முடிவுகளை எடுத்து அதனை நோக்கி நடைபோடுங்கள்..

ஆனால் இதை புலிகள் செய்தால் அது மகா தப்பு!

கூட்டமைப்பு வேண்டுமானால் ஒரு ஒரமாக இருந்துகொண்டு இவற்றை செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.