Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

LTTE Leader Apologizes to India for Rajiv's Killing

Featured Replies

கே.பீ யும் புலியில்லை.அப்ப யார் புலிகள் அதையாவது சொல்லுங்கோவன்? இப்ப ஏன் இந்த மன்னிப்பு என்றுதான் விளங்கவில்லை.

சிலவிடயங்கள் விவாதிப்பதில் பலனில்லை

ராஜீவை கொன்றது யாரென்றும் எல்லோருக்கும் தெரியும்?

தலைவர் உயிரோடு இருக்கின்றாரா என்பது பற்றியும் எல்லோருக்கும் தெரியும்.

மிகுதி அவரவர் விருப்பம்.

  • Replies 50
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் சொல்கிறேன். இங்கு இருந்து எந்தக் கருத்தையும் சுதந்திரமாகச் சொல்லலாம். ஆனால் சிறிலங்காவில் இருந்து குறிப்பாக சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவர் சிறிலங்காவின் கருத்தைத் தான் சொல்லமுடியும்.

கந்தப்பண்ணை இதையாவது வாசிப்பவர்கள் விளங்கிகொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்!

கே.பீ யும் புலியில்லை.அப்ப யார் புலிகள் அதையாவது சொல்லுங்கோவன்? இப்ப ஏன் இந்த மன்னிப்பு என்றுதான் விளங்கவில்லை.

சிலவிடயங்கள் விவாதிப்பதில் பலனில்லை

ராஜீவை கொன்றது யாரென்றும் எல்லோருக்கும் தெரியும்?

தலைவர் உயிரோடு இருக்கின்றாரா என்பது பற்றியும் எல்லோருக்கும் தெரியும்.

மிகுதி அவரவர் விருப்பம்.

தற்போது கே.பி ஒரு தமிழ்இன துரோகி அல்லது ஸ்ரீலங்க அரசபடைகளின் கைதி.

எல்லாம் தெரியுது இதுமட்டும் தெரியவில்லை?????

உங்களுக்கும் விளங்கவில்லையா................... சர்வதேச அரசியல்வாதிகளுக்கே விளங்காதது இனி யாருக்கு விளங்கபோகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியை பொட்டம்மானும் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் நன்றாகத் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளதை கேபி அவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார். ஆகவே கேபி இக்கொலை தொடர்பான தகவல்கள் அனைத்தையும் முன்கூட்டியே தெரிந்து வைத்துள்ளார். இந்திய அரசு கேபியை தம்வசப்படுத்தி இக்கொலையின் பின்ணணியில் என்ன நடந்தது என்பதை முதலில் அறிதல்வேண்டும். இது தொடர்பான விடையங்களை எமது தமிழக உறவுகள் இந்திய அரசின் கவனத்திற்க்குக் கொண்டுவர முயற்சிக்கவும்.

  • தொடங்கியவர்

ராஜீவ் காந்தி கொலையானது, தமிழ்த்தேசியம் செய்த வரலாற்றுத்தவறு!! .. இதனை தேசியத்தலைமை பின் நன்றாக உணர்ந்தது! ...

... ஆனால் இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட கேபி, இன்று கொழும்பில் இருந்து கொண்டு ... கடந்த சில தினங்களுக்கு முன் சிங்கள அமைப்பொன்று, இந்தியா புலிகள் செய்தவைகளை மறந்து விட்டதுவா?(இந்தியா சில அழுத்தங்களை சிறிலங்காவிற்கு கொடுக்கிறது என்ற செய்தி வந்தவுடன்) என்ற கேள்வியை எழுப்பியது ... பழைய ரணங்களை கிளற சிங்களத்தால் பாவிக்கப்படுகிறார்.

இவர் மன்னிப்பு கேட்கிறாராம் .. புலித்தலைமை என்று .. அதுவும் சிங்களத்தின் கைகளில் இருந்து கொண்டு ... உதன் சூட்சுமம் தெரியாமலா இங்கு சிலதுகள் கருத்தெழுதுதுகள்????

... புலித்தலைமை தாங்கள் தான் என்று கருணா, பிள்ளையானும் வெளிக்கிடுங்கள்?????

  • தொடங்கியவர்

டெயிலி மிரரில் KP கூறியதாக ...

UN, West offered LTTE help to flee Sri Lanka Daily Mirror 04:30 .
.. இச்செய்தியை போட்டிருந்தார்கள், சில வினாடிகளில் தூக்கி விட்டார்கள், ... எவ்வளவு அங்கிருந்து கொண்டு கஷ்டப்படுகிறார் பாருங்க???
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலையானது, தமிழ்த்தேசியம் செய்த வரலாற்றுத்தவறு!! .. இதனை தேசியத்தலைமை பின் நன்றாக உணர்ந்தது! ...

... ஆனால் இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட கேபி, இன்று கொழும்பில் இருந்து கொண்டு ... கடந்த சில தினங்களுக்கு முன் சிங்கள அமைப்பொன்று, இந்தியா புலிகள் செய்தவைகளை மறந்து விட்டதுவா?(இந்தியா சில அழுத்தங்களை சிறிலங்காவிற்கு கொடுக்கிறது என்ற செய்தி வந்தவுடன்) என்ற கேள்வியை எழுப்பியது ... பழைய ரணங்களை கிளற சிங்களத்தால் பாவிக்கப்படுகிறார்.

இவர் மன்னிப்பு கேட்கிறாராம் .. புலித்தலைமை என்று .. அதுவும் சிங்களத்தின் கைகளில் இருந்து கொண்டு ... உதன் சூட்சுமம் தெரியாமலா இங்கு சிலதுகள் கருத்தெழுதுதுகள்????

... புலித்தலைமை தாங்கள் தான் என்று கருணா, பிள்ளையானும் வெளிக்கிடுங்கள்?????

ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னர் என்ன தேனும் பாலுமா ஓடிக் கொண்டிருந்தது இல்லையே..???! ஈழத் தமிழ் அமைப்புக்களுக்கு எம் ஜி ஆர் போன்றவர்கள் அளித்த பெரும் ஆதரவை இட்டு இந்திரா காந்தி அம்மையார் ஒரு அனுசரணைப் போக்கை கடைப்பிடித்தார். அன்றைய உலக ஒழுங்கில் அது அவருக்கு ஜே ஆர் ஜெயவர்த்தனவை கட்டுப்படுத்த தேவைப்பட்டது செய்தார்.

ஆனால் ராஜீவ் காந்தி தமிழர்களின் விருப்பறியாமல் தனது மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனை மையப்படுத்தியே செயற்பட்டார்.

இந்திரா காந்தியை கொல்ல சீக்கிய பொற்கோவில் மீதான தாக்குதலும் அதில் சில நூறு பேரின் பலியும் காரணமாகி அந்த தாக்குதலுக்கு பின்னர் இந்திரா காந்தி குடும்பம் மன்னிப்புக் கோரியது. ஆனால் 1987 - 90 வரையான ஈழத்தமிழர்கள் மீதான ராஜீவ் காந்தியின் செயற்பாடுகளில் சுமார் 15,000 தமிழர்கள் அழிக்கப்பட்டும் பலர் நாட்டை விட்டு துரத்தப்பட்டும் இன்று வரை எவரும் அதற்கு பகிரங்க மன்னிப்புக் கோரவில்லை.

போர் படுகொலைகளுக்காக ராஜபக்ச மீது வைக்கப்படும் போர்குற்ற குற்றச்சாட்டுப் போல.. ராஜீவ் காந்தி மேற்கொண்ட படுகொலைகளில் இருந்து அவர் திட்டமிட்டு தப்ப வைக்கப்பட்டுள்ளார். அதையும் தமிழ் தேசியம் தான் செய்திருக்கிறது. அதற்கு கிடைத்த நன்றி.. 40,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் கூடிய ஈழத்தமிழர்களின் அரசியல் கனவை.. அவர்களின் இருப்பை இலங்கைத் தீவில்.. சோனியா அழித்தது..!

ராஜீவ் காந்தியின் கொலை அவரின் அரசியல் வெளிநாட்டு கொள்கை சார்ந்த ஒன்று. அவரின் தவறான அணுகுமுறைகளால் நிகழ்ந்த ஒன்று. ராஜீவ் காந்தி இருந்திருந்தாலும்.. இல்லா விட்டாலும்.. விடுதலைப்புலிகளையும் எமது போராட்டத்தையும் இந்தியா அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டே நின்றிருக்கும். அந்த வகையில் தான் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் அன்றும் இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தியின் கொலையை யார் செய்தார்களோ.. அவரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் குற்றவாளிக்கு குறைந்த ஒரு தண்டனையாவது கிடைத்ததே என்று ஆறுதல் அடையவும் செய்கின்றனர்..! அதாவது கிடைக்கப் பெற்றுதே என்று ஆறுதல் அடைய வேண்டி உள்ளதே அன்றி இந்தியாவால்.. ராஜீவ் காந்தியால்.. அவரின் குடும்பத்தால்.. காங்கிரஸ் கட்சியால்.. எமக்கு எப்போதும் நன்மை கிடைக்கப் போறதில்லை..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ் காந்தியின் படுகொலைக்கு இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்கிறார் கே.பி.

செவ்வாய், 24 மே 2011 03:15

தமிழீழ விடுதலைப்புலிகள், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியை படுகொலை செய்ததற்காக அரச தடுப்பில் உள்ள விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான முன்னாள் செயலாளர் குமரன் பத்மநாதன் இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சிக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியின் படுகொலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த படுகொலை பிரபாகரனும் பொட்டுஅம்மானும் மிகவும் நன்றாகத் திட்டமிட்டு நடத்தியதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.

இந்திய மக்களுக்கு குறிப்பாக ராஜிவ்காந்தி குடும்பத்தினருக்கு நான் சொல்ல விரும்புவது, பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.

தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். உங்களை நாம் வேண்டிக் கொள்கிறோம். இதற்காக எல்லோரும் மன்னியுங்கள். ராஜிவ்காந்தியின் மகன் மற்றும் மகளின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்கிறோம்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏற்கனவே அதிக விலை கொடுத்து விட்டார்கள். இனிமேல் எதையும் இழக்கக் கூடாது. தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்றும் குமரன் பத்மநாதன் அந்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.

source:tamilenn.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலையானது, தமிழ்த்தேசியம் செய்த வரலாற்றுத்தவறு!! .. இதனை தேசியத்தலைமை பின் நன்றாக உணர்ந்தது! ...

... ஆனால் இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட கேபி, இன்று கொழும்பில் இருந்து கொண்டு ... கடந்த சில தினங்களுக்கு முன் சிங்கள அமைப்பொன்று, இந்தியா புலிகள் செய்தவைகளை மறந்து விட்டதுவா?(இந்தியா சில அழுத்தங்களை சிறிலங்காவிற்கு கொடுக்கிறது என்ற செய்தி வந்தவுடன்) என்ற கேள்வியை எழுப்பியது ... பழைய ரணங்களை கிளற சிங்களத்தால் பாவிக்கப்படுகிறார்.

இவர் மன்னிப்பு கேட்கிறாராம் .. புலித்தலைமை என்று .. அதுவும் சிங்களத்தின் கைகளில் இருந்து கொண்டு ... உதன் சூட்சுமம் தெரியாமலா இங்கு சிலதுகள் கருத்தெழுதுதுகள்????

... புலித்தலைமை தாங்கள் தான் என்று கருணா, பிள்ளையானும் வெளிக்கிடுங்கள்?????

ராஜீவ் என்பன் மீண்டும் பிரதமாராகி முள்ளிவாய்க்கால் என்பது 20 வருடத்திற்கு முன்பே நடந்திருந்தால்..............??

தற்போதைய சர்வதேசத்திற்கு அப்படியொரு பிரச்சனை இருந்ததே தெரியவாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

ஜோர்ஜ்புஸ் அமெரிக்க ஜனதிபதி தேர்லுக்கு பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேளை சதாம் உசைனால் திட்டமிட்டு அவர் கொல்லபட்டிருந்தால் தற்போதைய ஈராக்கின் நிலமை வேறுமாதிரியானதாக இருக்கும் என்பதை உங்களால் மறுக்க முடிகிறதா??

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னர் என்ன தேனும் பாலுமா ஓடிக் கொண்டிருந்தது இல்லையே..???! ஈழத் தமிழ் அமைப்புக்களுக்கு எம் ஜி ஆர் போன்றவர்கள் அளித்த பெரும் ஆதரவை இட்டு இந்திரா காந்தி அம்மையார் ஒரு அனுசரணைப் போக்கை கடைப்பிடித்தார். அன்றைய உலக ஒழுங்கில் அது அவருக்கு ஜே ஆர் ஜெயவர்த்தனவை கட்டுப்படுத்த தேவைப்பட்டது செய்தார்.

ஆனால் ராஜீவ் காந்தி தமிழர்களின் விருப்பறியாமல் தனது மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனை மையப்படுத்தியே செயற்பட்டார்.

இந்திரா காந்தியை கொல்ல சீக்கிய பொற்கோவில் மீதான தாக்குதலும் அதில் சில நூறு பேரின் பலியும் காரணமாகி அந்த தாக்குதலுக்கு பின்னர் இந்திரா காந்தி குடும்பம் மன்னிப்புக் கோரியது. ஆனால் 1987 - 90 வரையான ஈழத்தமிழர்கள் மீதான ராஜீவ் காந்தியின் செயற்பாடுகளில் சுமார் 15,000 தமிழர்கள் அழிக்கப்பட்டும் பலர் நாட்டை விட்டு துரத்தப்பட்டும் இன்று வரை எவரும் அதற்கு பகிரங்க மன்னிப்புக் கோரவில்லை.

போர் படுகொலைகளுக்காக ராஜபக்ச மீது வைக்கப்படும் போர்குற்ற குற்றச்சாட்டுப் போல.. ராஜீவ் காந்தி மேற்கொண்ட படுகொலைகளில் இருந்து அவர் திட்டமிட்டு தப்ப வைக்கப்பட்டுள்ளார். அதையும் தமிழ் தேசியம் தான் செய்திருக்கிறது. அதற்கு கிடைத்த நன்றி.. 40,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் கூடிய ஈழத்தமிழர்களின் அரசியல் கனவை.. அவர்களின் இருப்பை இலங்கைத் தீவில்.. சோனியா அழித்தது..!

ராஜீவ் காந்தியின் கொலை அவரின் அரசியல் வெளிநாட்டு கொள்கை சார்ந்த ஒன்று. அவரின் தவறான அணுகுமுறைகளால் நிகழ்ந்த ஒன்று. ராஜீவ் காந்தி இருந்திருந்தாலும்.. இல்லா விட்டாலும்.. விடுதலைப்புலிகளையும் எமது போராட்டத்தையும் இந்தியா அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டே நின்றிருக்கும். அந்த வகையில் தான் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் அன்றும் இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தியின் கொலையை யார் செய்தார்களோ.. அவரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் குற்றவாளிக்கு குறைந்த ஒரு தண்டனையாவது கிடைத்ததே என்று ஆறுதல் அடையவும் செய்கின்றனர்..! அதாவது கிடைக்கப் பெற்றுதே என்று ஆறுதல் அடைய வேண்டி உள்ளதே அன்றி இந்தியாவால்.. ராஜீவ் காந்தியால்.. அவரின் குடும்பத்தால்.. காங்கிரஸ் கட்சியால்.. எமக்கு எப்போதும் நன்மை கிடைக்கப் போறதில்லை..!

இந்தியப் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாயகத்தில் போராடிய அதேவேளையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்தியப் படையினருடன் போராடி காயமடைந்த (உங்கள் தமிழில் விழுப்புண்) போராளிகள் எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்றனரே? அப்போது இந்திய அரசுக்கோ அதன் உளவுத்துறையினருக்கோ தெரியாதா என்றா நினைக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் வைத்து ராஜீவ் மீதான படுகொலைத் தாக்குதல்தான் யாவற்றையும் திருப்பிப் போட்டது. அதனைவிடுத்து இந்திய வல்லாதிக்க-மேலாதிக்-ஏகாதித்திய அரசு எமது போராட்டத்தினை சீர்குலைத்துவிட்டது என்று இதில் எழுதுவதில் எந்தப் பயனும் இல்லை.

பழையனவற்றை நினைத்து அதற்குப் பழிவாங்கும் எண்ணம் இருக்கும் வரை தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கு ஒருகாலமும் விடிவு வராது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாயகத்தில் போராடிய அதேவேளையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்தியப் படையினருடன் போராடி காயமடைந்த (உங்கள் தமிழில் விழுப்புண்) போராளிகள் எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்றனரே? அப்போது இந்திய அரசுக்கோ அதன் உளவுத்துறையினருக்கோ தெரியாதா என்றா நினைக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் வைத்து ராஜீவ் மீதான படுகொலைத் தாக்குதல்தான் யாவற்றையும் திருப்பிப் போட்டது. அதனைவிடுத்து இந்திய வல்லாதிக்க-மேலாதிக்-ஏகாதித்திய அரசு எமது போராட்டத்தினை சீர்குலைத்துவிட்டது என்று இதில் எழுதுவதில் எந்தப் பயனும் இல்லை.

பழையனவற்றை நினைத்து அதற்குப் பழிவாங்கும் எண்ணம் இருக்கும் வரை தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கு ஒருகாலமும் விடிவு வராது.

பழையவற்றை மறப்பதால் மன்னிப்பதால் மட்டும் தமிழர்களுக்கு எந்த வகையில் விடிவு வரும்...??! சீக்கியர்களைப் பார்த்து பழையதை மற மன்னி என்று சொல்லப்பட்டும் பார்க்கலாம். யூதர்களைப் பார்த்து சொல்லட்டும் பார்க்கலாம்..! தமிழர்கள் பழையதை மறப்பதால் மன்னிப்பதால்.. மைசூர் பருப்பும்.. பம்பாய் வெங்காயமும் தான் வரும்..! உரிமை கிடைக்காது. இழக்கப்பட்ட உயிர்களுக்கு அர்த்தம் வராது.

சோவியத் கால இந்தியாவின் நிலைப்பாடு இன்றைய நிலைக்கு முற்றிலும் மாறுபட்டது. அதுமட்டுமன்றி.. தமிழ்நாட்டு அரசியல் தலைமைகள் ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் மீது போட்டி போட்டு காட்டி வந்த ஆதரவு நிலைப்பாடே இந்திய மத்திய அரசு ஒரு அனுசரணைக் கொள்கையை அதில் கடைப்பிடிக்க வழிவகுத்தது. இந்திரா காந்தி அம்மையார் விடுதலைப் புலிகளுக்கு உதவவில்லை. எம் ஜி ஆர் தான் உதவினார். அதன் பின்னர் எம் ஜி ஆரின் வேண்டுகோளின் அடிப்படையில் தான் இந்திரா காந்தி அம்மையாரின் நிர்வாகமும் சில பாரா முகங்களை செய்தது.

அதே இந்திரா காந்தி அம்மையார்.. புளொட் அமைப்பினர் இந்தியா அறியாமல் கொண்டு வந்த ஆயுதக் கப்பலை.. கைப்பற்றி ஆயுதங்களையும் பறிமுதல் செய்து.. தமிழீழக் கனவை அப்போதே அழித்தெறிந்தும் விட்டார். அன்றைய நிலையில் அந்த ஆயுதங்களோடு இந்தியா ஒரு புரட்சி நிகழ்த்தி இருப்பின்.. நிச்சயம் தமிழீழம் மலர்ந்திருக்கும். அன்றைய நிலையிலும் இன்று வரையும் அது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியா செய்த மாபெரும் துரோகம். அதன் தொடர்சி முள்ளிவாய்க்கால் வரை நீண்டது ஒன்றும் புதிதல்ல..!

ராஜீவ் காந்தியின் படுகொலை.. பகிரங்கமாக சூது விளையாடிக் கொண்டிருந்த இந்தியாவை தலைமறைவாக அதைச் செய்யத் தூண்டியது. மற்றும்படி ராஜீவ் காந்தியின் படுகொலையால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை பெரிசா மாறி.. எமக்கு எதிராக திரும்பியது என்பது சிலரின் கற்பனை. இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது ஈழப்பிரச்சனையை வைத்து தங்கள் நலனை தக்க வைக்க சிறீலங்காவை கட்டுப்படுத்துவது.

ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பின்னர் தான் எங்களால் ஒரு நிழல் தமிழீழ அரசையே அமைத்து உலகிற்கு அடையாள தமிழீழத்தை இனங்காட்ட முடிந்தது. இன்றேல்.. இன்றும் அந்த மாகாண சபைகளுக்குள் சிங்களவனிடம் அடிவாங்கும் அரசிலையே செய்து கொண்டிருந்திருப்போம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாயகத்தில் போராடிய அதேவேளையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்தியப் படையினருடன் போராடி காயமடைந்த (உங்கள் தமிழில் விழுப்புண்) போராளிகள் எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்றனரே? அப்போது இந்திய அரசுக்கோ அதன் உளவுத்துறையினருக்கோ தெரியாதா என்றா நினைக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் வைத்து ராஜீவ் மீதான படுகொலைத் தாக்குதல்தான் யாவற்றையும் திருப்பிப் போட்டது. அதனைவிடுத்து இந்திய வல்லாதிக்க-மேலாதிக்-ஏகாதித்திய அரசு எமது போராட்டத்தினை சீர்குலைத்துவிட்டது என்று இதில் எழுதுவதில் எந்தப் பயனும் இல்லை.

பழையனவற்றை நினைத்து அதற்குப் பழிவாங்கும் எண்ணம் இருக்கும் வரை தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கு ஒருகாலமும் விடிவு வராது.

இல்லை அவர்களுக்கு தெரிந்திருந்தது.............. பாவம் காயம் அடைந்துவிட்டார்கள் என்று அன்பாக விட்டார்கள் இந்திய..............

அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கும்................ ஒரு காரணத்தை நீங்கள் கண்டுபிடித்து தந்ததால் புலிகளை போட்டு பிரட்டியெடுக்கும் வேலையை இங்கே நான் பார்த்துகொள்கிறேன் நீங்கள் கொஞ்சநாளைக்கு ஒய்வெடுங்கள் பின்பு நீங்கள் வர நான் ஒய்வெடுக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கே பி லூசு.. அண்ணன் சீமான் தமிழகத்தில் நின்று கொண்டு தமிழ் மக்களோடு நின்று கொண்டு ராஜீவ் காந்தி பற்றி சொல்லுறத கேளுங்க சார்..

துணிவிருந்தா அண்ணன் சீமான் விடும் சவாலை ஏற்றுக் கொண்டு.... நீங்க அவர் கேட்கிறதைச் செய்யுங்க பார்ப்பம்...

http://www.nakkheeran.in/WebTv.aspx?WTV=885

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே பி லூசு.. அண்ணன் சீமான் தமிழகத்தில் நின்று கொண்டு தமிழ் மக்களோடு நின்று கொண்டு ராஜீவ் காந்தி பற்றி சொல்லுறத கேளுங்க சார்..

துணிவிருந்தா அண்ணன் சீமான் விடும் சவாலை ஏற்றுக் கொண்டு.... நீங்க அவர் கேட்கிறதைச் செய்யுங்க பார்ப்பம்...

http://www.nakkheeran.in/WebTv.aspx?WTV=885

அவர் மானம் உள்ள தமிழன்..

இவன் சிங்களத்தின் கை கூ.........

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியின் மரணம்இந்தியப் படை ஈழத்துக்கு செய்த கொடுமைகளுக்குக் கிடைத்த தண்டனை.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி அவர்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்கலாம். அது அவரது இன்றைய நிலை. அவர் மன்னிப்பு கேட்பது பற்றி எனக்கு எதுவித ஆட்சேபனையுமில்லை.

அவர் புலிகளின் தலைவர் என்று மன்னிப்புக்கேட்பதே பிரச்சினை.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியின் மரணம்இந்தியப் படை ஈழத்துக்கு செய்த கொடுமைகளுக்குக் கிடைத்த தண்டனை.

இதனையும் போர்க்குற்ற விசாரணைக்குள் எடுக்க ஐநாவை கோர வேண்டும். இந்தியப் படைகள் வல்வெட்டித்துறையில் மேற்கொண்ட படுகொலைகள் பற்றிய ஆதாரங்களை ஜேர்மனி படம் பிடித்து வெளியிட்டது.!

அதுமட்டுமன்றி சந்திரிக்கா அம்மையார் செய்த செம்மணிப் படுகொலைகள்.. பற்றியும் உலகம் நன்கறியும்.

ஜே ஆர் அரசு தூண்டி விட்ட 1983 யூலைக்கலவரம்.. பற்றியும் உலகம் அறியும்.

சிரியாவில்.. ஏமனில்.. லிபியாவில்.. ஐவிரிக்கோஸ்டில்.. கொசவாவில் சில நூறு அல்லது சில ஆயிரம் பேரின் இழப்புக்காக ஆட்சியாளர்களுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கைகள்.. பொருளாதார தடைகள்.. இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்பவர்கள்.. எங்கள் அழிவுகளை இட்டு ஆண்டாண்டு காலமா அமைதி காப்பதன் மர்மம் தான் என்னவோ..??????!

இது குறித்து ஐநா மன்றத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் கோர வேண்டும்...!

எமது விடுதலையை எங்கோ கொண்டுபோய் தள்ளிவைத்தது இந்த ராஜீவ் கொலை.இனியும் எமது விடுதலை சாத்தியமோ என்று தெரியாமல் இருப்பதுதும் அதே கொலை தான் மூல காரணி.

ராஜீவ் திரும்ப பதவிக்கு வந்தால் அப்பொதே முள்ளிவாய்க்கால் என்பதெல்லாம் குழந்தைத்தனம்.ராஜீவ் இயக்கதலைமைகளை ஏதோ சிறுவர்கள் போல் பார்க்ததும், எமது பிரச்சனையின் ஆழம் தெரியாமல் ஒரு சின்னப்பிரச்சனை என்றுபார்க்ததும் தான் பிழை.ஆனால் காலம் போக அவரும் அதை உணரும் காலம் வந்திருக்கும்.அதை உணர்த்தியிருக்கவேண்டியதுதான் எமது கடமை.

இந்தியாவின் கனபரிமாணம் தெரியாமல் இங்கு பலர் எழுதுகின்றார்கள்.வடக்கில் உள்ள ஆளும்வர்க்கம் ஒரு "கலோ" சொல்லுமா என்பதே தமிழ்நாட்டில் இருந்து போறவர்களின் நிலை.சீமானை யாரென்றே அரைவாசி இந்தியனுக்கு தெரிந்திருக்காது.

நெடுக்ஸ் -புளொட் ஆயுதம் இறக்கும் போது இந்திரா காந்தி கொலைசெய்யபட்டுவிட்டா.முடிந்தால் இறக்குங்கள் என்று மறைமுகமாக சொன்னதை வைத்து வாங்கினார்கள்.முட்டாள் பயல்களால்(புளொட்டின் புலனாய்வு) எல்லாம் நடுவீதிக்கு வந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது விடுதலையை எங்கோ கொண்டுபோய் தள்ளிவைத்தது இந்த ராஜீவ் கொலை.இனியும் எமது விடுதலை சாத்தியமோ என்று தெரியாமல் இருப்பதுதும் அதே கொலை தான் மூல காரணி.

ராஜீவ் திரும்ப பதவிக்கு வந்தால் அப்பொதே முள்ளிவாய்க்கால் என்பதெல்லாம் குழந்தைத்தனம்.ராஜீவ் இயக்கதலைமைகளை ஏதோ சிறுவர்கள் போல் பார்க்ததும், எமது பிரச்சனையின் ஆழம் தெரியாமல் ஒரு சின்னப்பிரச்சனை என்றுபார்க்ததும் தான் பிழை.ஆனால் காலம் போக அவரும் அதை உணரும் காலம் வந்திருக்கும்.அதை உணர்த்தியிருக்கவேண்டியதுதான் எமது கடமை.

இந்தியாவின் கனபரிமாணம் தெரியாமல் இங்கு பலர் எழுதுகின்றார்கள்.வடக்கில் உள்ள ஆளும்வர்க்கம் ஒரு "கலோ" சொல்லுமா என்பதே தமிழ்நாட்டில் இருந்து போறவர்களின் நிலை.சீமானை யாரென்றே அரைவாசி இந்தியனுக்கு தெரிந்திருக்காது.

நெடுக்ஸ் -புளொட் ஆயுதம் இறக்கும் போது இந்திரா காந்தி கொலைசெய்யபட்டுவிட்டா.முடிந்தால் இறக்குங்கள் என்று மறைமுகமாக சொன்னதை வைத்து வாங்கினார்கள்.முட்டாள் பயல்களால்(புளொட்டின் புலனாய்வு) எல்லாம் நடுவீதிக்கு வந்தது.

இந்தியா! வெளிநாடுகளுக்கு தன் மக்களின் நலன்களை விற்றுக் கொண்டிருக்கும் ஊழல் முதலைகளின் நிர்வாகம். தன் சொந்தமக்களின் நலனுக்காவே உழைக்காத இந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கை, ஈழத்திற்காக எப்படி பயன்படுத்தி இருக்க முடியும் என்று எதிர்பார்பதே ஒன்றுக்கும் ஆகாத விடயம்.

  • தொடங்கியவர்

இதனையும் போர்க்குற்ற விசாரணைக்குள் எடுக்க ஐநாவை கோர வேண்டும். இந்தியப் படைகள் வல்வெட்டித்துறையில் மேற்கொண்ட படுகொலைகள் பற்றிய ஆதாரங்களை ஜேர்மனி படம் பிடித்து வெளியிட்டது.!

அதுமட்டுமன்றி சந்திரிக்கா அம்மையார் செய்த செம்மணிப் படுகொலைகள்.. பற்றியும் உலகம் நன்கறியும்.

ஜே ஆர் அரசு தூண்டி விட்ட 1983 யூலைக்கலவரம்.. பற்றியும் உலகம் அறியும்.

சிரியாவில்.. ஏமனில்.. லிபியாவில்.. ஐவிரிக்கோஸ்டில்.. கொசவாவில் சில நூறு அல்லது சில ஆயிரம் பேரின் இழப்புக்காக ஆட்சியாளர்களுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கைகள்.. பொருளாதார தடைகள்.. இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்பவர்கள்.. எங்கள் அழிவுகளை இட்டு ஆண்டாண்டு காலமா அமைதி காப்பதன் மர்மம் தான் என்னவோ..??????!

இது குறித்து ஐநா மன்றத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் கோர வேண்டும்...!

... சிங்களம் தற்போது செய்யும் சில விடயங்கள் .. சரியானவற்றை/உண்மையானவற்றை(தலைவரில் இருந்து பலதடவை பாலா அண்ணா வரை சொல்லி இச்சம்பவம் பிழையென கூறி முடித்ததை) எடுத்து , கேபி போன்ற கூலிகளின் கைகளில் கொடுத்து செய்விக்கின்றன! நம் புத்திஜீவிகளோ, எதற்கெடுத்தாலும் மறுத்தான் போட்டுப் பழகி ... இறுதியில் இந்த பச்சோந்தி கேபியை சரியென நிரூபிக்க உதவுகின்றனர்!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.firstpost.com/politics/kp-is-just-a-puppet-of-the-sri-lankan-government-14264.html?utm_source=ibnlive.com&utm_medium=RHS-Widget

Firstpost also spoke to MA Sumanthiran, a member of parliament from the Tamil National Alliance (TNA). A prominent Human Rights lawyer, Sumanthiran was appointed to parliament in 2010 on the TNA National list. He is a part of the TNA delegation that is in talks with the government to find a political solution to Lankan Tamil grievances. Firstpost asked him to respond to some of the points made by KP in his interview with Shashikumar. Summarised excerpts:

“In his interview with FirstPost, KP mentioned that the UN Panel report would “disturb reconciliation” and that no one would benefit from it. He also said that in the war both parties tried their maximum to win, and if a UN report was published for every war, there would never be an end. How would you respond to that?

This is not the official position of the government, I would be very interested if the government said this in so many words. As a responsible government they cannot say that both sides fought without any compunction, so they’re getting him to say it. No government can say “Once it’s over that’s it”. They have made some intimations to this effect in the past, where they have said that victors can never be charged. But the way to reconciliation is not by denying what happened. People know what happened to them. You can’t tell a man who lost his leg or his child that he never lost his leg or child. Reconciliation can only by achieved by acknowledging what happened to the people.

“What is your take on KP? Do you think he has a role to play in the reconciliation of Tamil grievances?”

He has absolutely no role to play. He is obviously a puppet in the hands of the government. The UN Panel report held the LTTE and the government equally culpable for what happened to civilians. KP took over the leadership of the LTTE from Prabhakaran. So now we see that the LTTE is with the Sri Lankan government.

“KP had also made an appeal to India and Tamil Nadu in particular to aid the rehabilitation of the Tamil people in the North. Do you think he can influence this to happen since he is still associated with the LTTE internationally?

No. In fact India has come forward to help with rehabilitation but the Sri Lankan government has been repeatedly blocking it.

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலையை எங்கோ கொண்டுபோய் தள்ளிவைத்தது இந்த ராஜீவ் கொலை.இனியும் எமது விடுதலை சாத்தியமோ என்று தெரியாமல் இருப்பதுதும் அதே கொலை தான் மூல காரணி.

ராஜீவ் திரும்ப பதவிக்கு வந்தால் அப்பொதே முள்ளிவாய்க்கால் என்பதெல்லாம் குழந்தைத்தனம்.ராஜீவ் இயக்கதலைமைகளை ஏதோ சிறுவர்கள் போல் பார்க்ததும், எமது பிரச்சனையின் ஆழம் தெரியாமல் ஒரு சின்னப்பிரச்சனை என்றுபார்க்ததும் தான் பிழை.ஆனால் காலம் போக அவரும் அதை உணரும் காலம் வந்திருக்கும்.அதை உணர்த்தியிருக்கவேண்டியதுதான் எமது கடமை.

இந்தியாவின் கனபரிமாணம் தெரியாமல் இங்கு பலர் எழுதுகின்றார்கள்.வடக்கில் உள்ள ஆளும்வர்க்கம் ஒரு "கலோ" சொல்லுமா என்பதே தமிழ்நாட்டில் இருந்து போறவர்களின் நிலை.சீமானை யாரென்றே அரைவாசி இந்தியனுக்கு தெரிந்திருக்காது.

நெடுக்ஸ் -புளொட் ஆயுதம் இறக்கும் போது இந்திரா காந்தி கொலைசெய்யபட்டுவிட்டா.முடிந்தால் இறக்குங்கள் என்று மறைமுகமாக சொன்னதை வைத்து வாங்கினார்கள்.முட்டாள் பயல்களால்(புளொட்டின் புலனாய்வு) எல்லாம் நடுவீதிக்கு வந்தது.

இந்த கருத்து தவறா சரியா என்பதையும் தாண்டி ஒரு கருத்துகளத்திற்கு தகுந்த கருத்து.

நடக்காத ஒன்றை நடந்திருக்கும் என்று யாராலும் நிரூபிக்க முடியாது. அகவே அதை போட்டு அலட்டுவது வீண் அரட்டையாகத்தான் இருக்கும். ஆனால் அப்போது சூடுபிடித்து விசாரணை முடியாத நிலையில் இருந்த போபஸ் பீரங்கி ஊழலை மூடிமறைக்க புலிகள் மீது போர் என்று ஒரு பிரகடனம் ராஜீவுக்கு தேவையான ஒன்றாகவே இருந்தது.

வி.பி சிங் பிரமராக இருந்தபோதே இந்தியபடைகளை திருப்பி அனுப்பும் முடிவை எடுத்திருந்தார்.............அது பற்றி ராஜீவிடம் கேட்டபோது. அது அதிருப்ப்தியாக உள்ளதாக சொல்லியிருக்கிறார்........... புலிகளை தோற்கடிக்க முன்பு இந்தியபடைகள் வெளியேறுவது கூடாது என்ற கருத்தை கொண்டிருந்தார்.

  • தொடங்கியவர்

இன்னொரு முறை மக்களைக் காட்டிக்கொடுக்கும் கே.பி - inioru

இலங்கை அரசுடன் இணைந்து புலிகளை முள்ளி வாய்க்கால் வரை நகர்த்திச்சென்று பல்லாயிரம் மக்கள் கொலைச் செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கருதப்படும் குமரன் – செல்வராஜா – பத்மநாதன் எனப்படும் கே.பி இப்போது எஞ்சியிருக்கும் மக்களையும் காட்டிக்கொடுப்பேன் எனச் சூழுரைத்துள்ளார். மக்கள் தெருத் தெருவாக அழிக்கப்படுகிறார்கள். வட-கிழக்கில் வாழும் மேல் மத்தியதர வர்க்க மக்கள் பிரிவினரைத் தவிர ஏனையோர் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பின் அழிவுக்களு நாளாந்தம் உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழ் இரண்டாவது மொழியல்ல. அழிக்கப்படும் மொழி. பௌத்தம் மதமல்ல ஆக்கிரமிப்பின் சின்னம். இந்த நிலையில் இவற்றிற்கு எதிராக மக்கள் தங்களால் இயன்ற வழிகளில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இன்னொரு போராட்டம் உருவாக அனுமதிக்க மாட்டேன் என்று சூழுரைத்துள்ளார். ” அவர்கள் அப்படிச் செய்ய முயன்றால், இங்கு பிரச்சினைகளை உருவாக்க முயன்றால் அவர்களை நான் உயிருள்ளவரை விடமாட்டேன். அப்படிச் செய்வதாயின் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

பிரச்சனைகளை உருவாக்குவது இலங்கை அரசே தவிர ஏனையோர் அல்ல என்பதை உணராத சர்வதேசக் குற்றவாளியான கே.பியின் புலம் பெயர் நீட்சிகள் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும் எனபதற்கு இதைத் தவிர வேறு சான்றுகள் தேவையில்லை.

கே.பி உருவாக்கிய நாடு கடந்த தமிழீழம் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறிவருவது தெரிந்ததே.

Edited by Nellaiyan

கே பி யின் மன்னிப்புக் கோரலுக்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டு அரசியல் மாற்றம்தான். ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடுதான் இத்தகைய மாறுதலை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற நோக்கில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மன்னிப்புக் கோரலுக்கான தளம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என நம்புகிறேன். இதன் மூலம் தமிழுணர்வாளர்களைக் கட்டுப்படுத்தி தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்தலாம் என்பது இதனை ஏற்பாடு செய்தவர்களின் எண்ணமாகவிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கே பி யின் மன்னிப்புக் கோரலுக்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டு அரசியல் மாற்றம்தான். ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடுதான் இத்தகைய மாறுதலை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற நோக்கில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மன்னிப்புக் கோரலுக்கான தளம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என நம்புகிறேன். இதன் மூலம் தமிழுணர்வாளர்களைக் கட்டுப்படுத்தி தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்தலாம் என்பது இதனை ஏற்பாடு செய்தவர்களின் எண்ணமாகவிருக்கலாம்.

இது தான் உண்மை, இறைவன்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரோ' முயற்சி?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'ரா' மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய ) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும், அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது.

இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததோடு, தேனீர் விருந்துக்கு டெல்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிரான உணர்வுகளை கொண்டிருந்த ஜெயலலிதா,2009 போரில் சிங்கள் இராணுவத்தினரின் கொடூர செயல்கள் குறித்த தகவல்கள் மற்றும் அது குறித்த செய்திகளை அறிந்த பின்னர்தான் ஓரளவுக்கு தனது நிலையை மாற்றிக் கொண்டார்.

குறிப்பாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் முகாம்களில் படும் அவதிகளை நேரில் கண்டறிந்து வந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இது தொடர்பாக எடுத்துக் கூறிய உண்மைகள்தான் அவரை ஓரளவுக்கு மாற்றியது.

அத்துடன் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்கள் வாயிலாகவும் அவருக்கு இலங்கை நிலவரம் குறித்து எடுத்து சொல்லப்பட்டது.

அதன் பின்னரே இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.

இந்நிலையில் அவரது இந்த மாற்றம் வெறும் ஓட்டுக்களை பெறுவதற்காகத்தானோ அல்லது அவர் மாறவே இல்லையோ என்ற எண்ணம், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் "ஜெயா" தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தோன்றியது.

அதாவது ஈழத் தமிழர் பிரச்சனை ஒரு சர்வேதேச பிரச்சனை என்றும், மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், இதில் மாநில அரசு ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் கூறியதை பார்த்தபோது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்களின் மனதில,"ஐயோ... இவரும் கருணாநிதி கூறியதைப் போன்றே கை கழுவும் பாணியில் பேசுகிறாரே...!" என்ற ஐயம் ஏற்பட்டது.

இந்நிலையில் போர்க் குற்றச்சாற்ற்றுச்சாட்டிலிருந்து இலங்கையையும், அதன் அதிபர் ராஜபக்சவையும் முட்டுக்கொடுத்து காப்பாற்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ள மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, முதல்கட்டமாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், அதிபர் ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் கருத்து கூறிய ஜெயலலிதாவிடமிருந்தும், தமிழகத்திலிருந்தும் குரல் எழும்பாத வகையில் முடக்கி போட திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதன் முதல்கட்டமாக ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'ரா' மூலம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதன் ஒரு அங்கமாக, இலங்கையில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் கே.பி. என்கிற பத்மநாதனை இந்திய தொலைகாட்சி ஒன்றின் மூலம் பேட்டி எடுத்து வெளியிட வைத்துள்ளது.

இந்தியத் தொலைக்காட்சிக்காக அந்த பேட்டி எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்த நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி கூறும் பதில்களும்,கே.பி. யை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப 'ரா' முயற்சிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியைக் கொன்றதாகக் குறிப்பிடும் கே.பி., அதற்காக மன்னிப்புக் கோருகிறார். பின்னர் அவர் குறிப்பிடுகையில் ஜெயலலிதா மீது புலிகள் ஆத்திரம் அடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அதன் காரணமகவே "இசட்" ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டதாகவும், சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் புலிகள் ஜெயலிதாவையும் சுட்டுக்கொண்றிருபார்கள் என்றும் கே.பி. அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வலது கரம் தான் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபாகரன் தன்னை ஒரு அரசன் போலக் கருதியதாகவும், அதற்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளே காரணம் எனவும் கூறியுள்ளார்.

இதுதவிர இனி இலங்கையில் ஈழ போராட்டம் எழாது என்றும் கே.பி. வாயிலாகவே சொல்ல வைத்துள்ளது 'ரா'.

தான் உயிருடன் உள்ளவரை இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியாது என்றும் கூறியுள்ள கே.பி., இலங்கை மீதான போர்க் குற்றச்சாற்றையும் நீர்த்துப் போகும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

"இலங்கைப் படையினர் மீது போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் ஐ.நா. அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என்ற கேள்வியை போட்டு வாங்கி, இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்களை அவரிடமிருந்து பெற்றுள்ளது 'ரா'.

"நாம் புதிய சகாப்தம் ஒன்றின் ஆரம்பத்தில் இருக்கிறோம். நடந்ததெல்லாம் நடந்ததுதான். ஐ.நா. அறிக்கையின்படி இரு தரப்புகளுமே தவறிழைத்துள்ளன. இந்த அறிக்கை எந்தவொரு நல்லிணக்கத்துக்கும் உதவப்போவதில்லை.இது ஒரு இடைஞ்சல்தான். யாருக்கும் இந்த அறிக்கையால் பயனில்லை.அது ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; ஒரு அறிக்கை, அவ்வளவுதான்.

இந்த அறிக்கையுடன் வன்னிக்குப் போனால் ஆயிரம் அல்லது லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்களாக இருந்தால்... அப்போது அது வேறு கதையாக இருக்கும். ஆனால் இந்த அறிக்கையால் எவருமே நன்மையடையப் போவதில்லை என்பதுதான் உண்மை. முழு நாடும் இந்த அறிக்கைக்கு எதிராக இருக்கிறது. கள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். முடிந்தது முடிந்ததுதான்.ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?" என்று கூறியுள்ளார் கே.பி.

ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருப்பதால், அவருக்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசின் தயவு தேவையாக உள்ளது.

இதை பயன்படுத்தி, இலங்கை விடயத்தில் ஈழத் தமிழர்களையும், அதற்காக போராடிய அமைப்புகளையும் தங்களது கைப்பாவையாக ஆட்டுவிக்க நினைத்த காங்கிரஸ் கட்சியும், 'ரா'வும் இன்னும் எத்தகைய "ஈரக் குலையை அறுக்கும்" திட்டத்தை வைத்துள்ளனவோ...?!

http://tamileuro.blogspot.com/2011/05/blog-post_24.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.